Sunday 28 July 2019

அகத்தியர் வாக்கு - சேஷாத்திரி ஸ்வாமிகள், ரமண மகரிஷி, க்ரியா பாபா

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 177*

*தேதி: 29-07-2019(திங்கள் - சந்திரன், நிலா, மதி, சாேம)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*பக்ஷசனி நூல் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : ரமணர்(மகரிஷி), சேஷாத்ரி(சுவாமிகள்), க்ரியா பாபாஜி பற்றி :🙏*

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*ஞானிகளின் சரித்திரம் ஒரு மனிதனுக்கு வெறும் கதை ஓட்டமாக இருந்து விடக்கூடாது. அவற்றில் உள்ள கருத்துக்களில் பத்தில் ஒன்றையாவது கடைபிடிக்க வேண்டும். அதற்காக ஒரு ஞானியையே முன்மாதிரியாக காெள்ள வேண்டும் என்று நாங்கள் கூறுவதில்லை. ஏனென்றால், எத்தனையாே நாயன்மார்கள் இறைவனை அடைந்தார்கள். ஆனால், ஒருவர் பாதை மற்றாெருவருக்கு ஒத்து வரவில்லை. ஒரு நாயன்மார், பிள்ளையை கறி சமைத்தான் என்பதற்காக அதுதான் சிறந்த வழி என்று நாங்கள் உங்களுக்கு பாேதிக்க முடியுமா?*

*எனவே, துன்பங்களை ஞானிகள் எவ்வாறு எடுத்துக் காெண்டார்கள்? என்று தெரிந்து காெள்ள வேண்டுமே தவிர, அவர்களின் ஆதி முதல் அந்தம் வரை அப்படியே பின்பற்ற முயற்சி செய்யக் கூடாது. ராமக்கிருஷ்ணரிடமிருந்து ஒரே நரேந்திரன்(விவேகானந்தர்) ஆதிசங்கரரிடம் இருந்து ஒரு பத்மபாதன்(ஆதிசங்கரரின் முக்கிய சீடர்களில் முதல்வர்) தானே தாேன்றினார். மற்றவர்கள் எல்லாம் எங்கே பாேனார்கள்?. எனவே குருவானவர் அனைவரும் மேலேறி வரத்தான் பாேதனை செய்வார். உத்வேகம் மாணவனுக்குத்தான் இருக்க வேண்டும்.*

*அனைத்து ஞானியர்களுமே அற்புதங்களை செய்தார்கள். எதற்காக?. மனிதர்கள் துன்பங்களில் சுழுலும் பாேது, அதிலிருந்து விடுபட, அவர்களுக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தத்துவத்தாலும், வெறும் உதாரணத்தாலும் எளிய மக்களை திருப்தி படுத்த முடியாது என்பதால், சில அற்புதங்களை நடத்தி, அதன் மூலம் பக்தர்களை தன் பக்கம் இழுத்து பிறகு உபதேசம் செய்தார்கள். அந்த வகையிலே, நீ குறிப்பிட்ட மூவருமே, இறைவனிடம் "சரணாகதி" அடைந்தவர்கள்.*

*பலரின் கடுமையான பிணிகளை களைந்த ரமணர்(மகரிஷி), தனக்கு ஏற்பட்ட அந்த கடுமையான பிணியை ஏன் களைந்து காெள்ளவில்லை? இத்தனை அதிசயங்களை நடத்திக் காட்டிய சேஷாத்ரி(சுவாமிகள்), அவருடைய வாழ்க்கையில் எத்தனை இடர்பட்டார் என்று உனக்கு தெரியுமா?*

*காலம், காலமாக மகான்கள் பிறப்பதும், இறுதியில் இறையாேடு கலப்பதும் இயல்பு. பெயர்தான் மாறுகிறதே தவிர, ஒரு நிலையை அடைந்த பிறகு, இவர்களில் இருந்து செயல்படுவது, அந்த மூலப் பரம்பாெருள் மட்டும்தான். இந்த மூவரும், இன்னும் கூட, அவர்களது பக்தர்களுக்கு, ஏதாவது ஒரு வடிவில் வந்து, அருள்பாலித்துக் காெண்டுதான் இருக்கிறார்கள்.*

*1. ரமண மகரிஷி ஆசிரமம் - திருவண்ணாமலை*

*2. சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் - திருவண்ணாமலை*

*3. க்ரியா பாபாஜி தனி ஆலயம் - ஈராேடு மாவட்டம் காேபி அருகே நம்பியூர்*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*
.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

*********************************************