Thursday 20 July 2023

அடுத்த கட்ட ஆலய பணிகள்,பொகளூர் அகஸ்தியர் பீடம்

 தற்போது அன்னதான கூடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது அது நிறைவு பெறும் தருவாயில் வாசி யோக குடிலுக்கு கூரை அமைக்கப்படும் அது நிறைவு பெறும் தருவாயில் கோபுரம் அமைக்கும் பணி துவக்கப்படும் தற்போது அன்னதான கூடத்திற்கு 36 அடி நீளம் 16 அடி அகலம் உடைய அளவில் திட்டம் செய்யப்பட்டுள்ளது இந்த அன்னதான கூடமானது சிமெண்ட் கான்கிரீட் தரை அதன் சுற்று சுற்றுப்புறத்தில் ஆறு அடி உயரத்தில் சுவர் அதன் மேற்கூரை முக்கோண வடிவில் மேற்கூரை இருக்கும் இதற்கு தேவையான இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.





நம் வாழ்க்கை இது போல

 


Wednesday 19 July 2023

பழமையான சிவன் கோவில்


 

Saturday 8 July 2023

அஷ்ட திக் பாலகர்

 #அஷ்டதிக்_பாலகர்கள்


🌹அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.


🌹அஷ்டதிக் பாலகர்களில் அஷ்டம் என்றால் எட்டு, திக் என்றால் திசை, பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்பது பொருளாகும்.


🌹கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவை எண்திசைகள் ஆகும்.


🌹இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், யமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் விளங்குகின்றனர்.


🌹அஷ்டதிக் பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர் என்று கருதப்படுகிறது. மேலும் இவர்கள் உயிர்களின் செயல்களுக்கு சாட்சியாகவும் இருப்பதாகவும் இந்துமதத்தில் நம்பப்படுகிறது. இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைப்பதாக கருதப்படுகிறது.


🌹அஷ்டதிக் பாலகர்கள் கோபுரங்கள், வாயில்கள், சுவர்கள், கூரைகள் ஆகியவற்றில் ஓவியங்களாகவும், சிலைவடிவிலும் காணப்படுகின்றனர். இனி ஒவ்வொருவரையும் பற்றிக் காண்போம்.


 


👑இந்திரன்

 


🌹இவர் கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். தேவர்களின் தலைவனாகவும் உள்ளார். இவரின் துணைவியார் இந்திராணி அல்லது சசிதேவி என்று அழைக்கப்படுகிறார்.


🌹இவர் ஐராவதம் என்னும் வெள்ளை யானையினை வாகனமாகக் கொண்டவர். இவரின் ஆயுதம் மின்னலைப் போன்ற வலிமையுள்ள வஜ்ராயுதம் ஆகும். இவரே அஷ்டதிக் பாலகர்களின் தலைவர் ஆவார். இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் அருளுவார்.


 


👑அக்னி தேவன்


🌹இவர் தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். நெருப்பிற்கான அதிகாரம் இவருடையது. வேள்வின்போது இடப்படும் நிவேதானப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இவருடைய துணைவியார் சுவாகா தேவி ஆவார்.


🌹இவருடைய வாகனம் ஆட்டுகிடா ஆகும். இவருடைய ஆயுதம் தீச்சுவாலையுடன் கூடிய வேல் ஆகும். இவரை வழிபட தேக வனப்பு மற்றும் பலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.


 


👑யமன்

 


🌹இவர் தெற்கு திசையின் காவலர் ஆவார். இவர் எமதர்மன், தருமராஜா, தருமதேவன், காலதேவன் என அழைக்கப்படுகிறார். அவர் இறப்பின் கடவுள் ஆவார்.


🌹சூரியதேவனின் மகனாகவும், சனிபகவானின் சகோதரராகவும் இவர் குறிப்பிடப்படுகிறார். யமனின் சகோதரி யமி அல்லது யமுனை என்ற நதியாகவும் கூறப்படுகிறார்.


இவர் தேவர்களில் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருடைய துணைவியார் குபேர ஜாயை ஆவாhர். இவர் எருமைகிடா வாகனத்தினைக் கொண்டவர். இவருடைய ஆயுதம் பாசக்கயிறு ஆகும். இவரை வழிபட நம்மைப் பற்றிய தீவினைகள் நீக்கி நல்வழி கிடைக்கும்.


 


👑நிருதி

 


🌹இவர் தென்மேற்கு திசையின் அதிபதி ஆவார். இவரின் துணைவியார் கட்கி ஆவார். இவருடைய வாகனம் பிரேதம். இவருடைய ஆயுதம் கட்கம் என்னும் வாள் ஆகும். இவரை வழிபட எதிரிகள் பயம் நீங்கி வீரம் உண்டாகும்.


 


👑வருண பகவான்

 


🌹இவர் மேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் மழைக்கான கடவுள் ஆவார். ஆறு,குளம், ஏரி, கடல் நீர்நிலைகள் இவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகின்றன.


🌹ஐவ‌கை நிலங்களில் ஒன்றான நெய்தல் நிலத்திற்கு உரிய தெய்வமாக வருணன் போற்றப்படுகிறார். இவருயைட துணைவியார் வாருணி ஆவார்.


🌹இவருடைய வாகனம் மரகம் என்ற மீன் ஆகும். இவர் வருணாஸ்திரம் என்ற ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட தேவையான மழை கிடைத்து உணவு பஞ்சம் தீரும்.


 


👑வாயு பகவான்

 


🌹இவர் வடமேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் உலக இயக்கத்திற்குக் காரணமான காற்றிற்கான கடவுள் ஆவார். அனுமானும், பீமனும் வாயு புத்திரர்கள் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.


🌹இவரின் துணைவியார் வாயுஜாயை ஆவார். இவருடைய வாகனம் மான் ஆகும். இவர் அங்குசம் என்னும் ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட ஆயுள் விருத்தி கிடைக்கும்.


 


👑குபேரன்

 


🌹இவர் வடக்கு திசையின் அதிபதியாவார். செல்வத்தின் அதிபதியாகவும் இவரைக் கூறுவோர் உண்டு. இவர் சிவனை நோக்கி தவம் இருந்து வடக்கு திசையின் அதிபதியானதாக புராணங்கள் கூறுகின்றன.


🌹இவரின் துணைவியார் யட்சி ஆவார். இவர் மதுஷனை வாகனமாக கொண்டுள்ளார். இவரின் ஆயுதம கதை ஆகும். இவரை வழிபட சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும்.


 


👑ஈசானன்


🌹இவர் வடகிழக்குத் திசையின் அதிபதியாவார். இவர் மங்களத்தின் வடிவம் ஆவார். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஈசானமும் ஒன்று. இவரின் துணைவியார் ஈசானயஜாயை ஆவார்.


🌹இவர் எருதினை வாகனமாகக் கொண்டவர். திரிசூலம் இவரின் ஆயுதமாகும். இவரை வழிபட அறிவும், ஞானமும் கிடைக்கும்.


நாமும் அஷ்டதிக் பாலகர்களை வழிபட்டு எல்லா வளமும் பெறுவோம்.

Thursday 6 July 2023

வாராஹி வழிமுறை, சித்தர்களின் குரல் பதிவில் இருந்து எடுக்கப்பட்டது

 Source 

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02Aad4eJVam9SfZwjWR4CQiebHRDgdi3j5L9TiaWzqgqrxrZ3pm2GDKqbZis6NtnDul&id=1615171208699125&mibextid=Nif5oz


வாராஹியை யார் வழிபடலாம்?


வாராஹியை  வழிபட்டால் அதனால் பிரச்சனைகள் உண்டாகுமா? வீட்டில் வைத்து வழிபடலாமா? திருமணமானவர்கள் (க்ரஹஸ்தர்கள்) இவளை வழிபடுவதால் குடும்பத்தில் பிளவுகள், நோய்கள், குடும்பம் அழிந்து போவது, இது போன்ற பிரச்சனைகள் உண்டாகுமா? இதனைப்பற்றி இன்று பேசலாம்


நான் இங்கு சூட்சுமமாக சில விஷயங்களை கூற ஆசைப்படுகிறேன். ஸ்ரீ வித்தை மற்றும் சாக்த சாஸ்திரங்கள் அனைத்திலும் க்ரஹஸ்தர்கள் என்ற இல்லறத்தில் இருப்பவர்களுக்கே முதல் உரிமை உண்டு. அதற்கடுத்த அதிகாரி மற்றவர்கள் ஆவார்கள். சக்தியோடு இருப்பவர்களே ஸ்ரீ சக்ரம் ஸ்ரீ வித்தையை பூஜிக்க முதல் அதிகாரிகளாக இருக்கிறார்கள். இங்கு நான் குறிப்பிடப்படும் சக்தி என்ன? என்பதை அவரவர் அவருடைய குருநாதரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். உண்மையான ஸ்ரீவித்யா உபாஸகர்கள் இதனை அறிந்து கொள்வர்.


ஸ்ரீ வித்தை உபாசனை செய்பவர்கள் ஸ்ரீசக்கரத்திலேயே மஹாவாராஹியை பூஜை செய்வார்கள்.


சில சம்பிரதாயங்களில் தனியாக மஹாவாராஹிக்குரிய பிரசித்தமான கிரி சக்ரத்தில்  தனியாக பூஜிப்பதும் உண்டு. யந்திர பூஜை செய்ய தீக்ஷிதர்களுகே முழு அதிகாரம் உண்டு. இதை தவிர்த்து ஸ்ரீ வித்தை அல்லாதவர்களும், பல காலமாக வாராஹியை உபாஸித்து வருகிறார்கள். உபாஸகர்கள் இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும் அதாவது வாராஹியை ஸ்ரீ வித்தையை தவிர்த்து, சில தமிழ் சித்தர்கள் மரபை ஒட்டியும், சில ப்ரத்யேக தந்த்ர வழிகளிலும் வாராஹியை ஆராதனை செய்வது உண்டு. தமிழ் சித்தர்கள் மரபில் பூஜிக்கும் இவர்கள், பல தமிழ் யந்திர மந்திர ப்ரயோகங்களை வைத்து வாராஹியை பூஜித்து வருகிறார்கள். அதேபோல் சில தந்த்ர வழியில் உபாஸிப்பவரும், வாராஹியை தனிப்பட்ட தெய்வமாக உபாஸித்து வருகிறார்கள். இவர்களால் உபாஸிக்கப்படும் வழிமுறைகளும் யம, நியமங்களும் மாறுபடும். இது ஸ்ரீ வித்தை அனுஷ்டானங்களிலிருந்து மாறுபடும். இவர்கள் முக்காலமும் (காலை மாலை உச்சி) வாராஹியை உபாஸனை செய்வார்கள். இந்த மூன்று வழிகளில் வாராஹியை உபாஸனை செய்பவர்களுக்கு அவரவர் மார்க்கத்தை ஒட்டிய தீக்ஷை அவசியம். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், தமிழ் சித்த மரபை ஒட்டியவர்களும், சில தந்த்ர விஷயங்களை பின்பற்றப்படும் வழியில், இரவில் மட்டும் பூஜை செய்யவேண்டும் என்ற நியமங்களும் கட்டுபாடும் கிடையாது. ஆனால் ஸ்ரீ வித்தை உபாஸனை மேற்கொள்பவர்களுக்கு இந்த கட்டுப்பாடு உண்டு. இன்றும் பல சித்தர் வழியில் பின்பற்றப்படும் வாராகி உபாசனையில் முக்கால வழிபாடு உண்டு.


உதாரணமாக வாராஹியின் உபாசனையில் முக்கியமாக போற்றப்படுவது வாராஹி மாலை உச்சாடனம். இந்த மாலையில் வாராஹி வழிபாடு, சூட்சுமங்களும், பலபிரயோகங்களும் கூறப்பட்டுள்ளது. இதில் ஒரு பாடலில் வாராஹியின் மூன்று கால உபாசனை வர்ணனை கூறப்பட்டுள்ளது


வாலை புவனை திரிபுரை இம்மூன்றும் இவ்வையகத்தில் காலையும் மாலையும் உச்சியும் ஆக எக்காலத்துமே

ஆலையும் ஆகிய வாராஹிதன் பாதத்தை அன்பில் உண்ணி மால் அயன் தேவன் முதலான பேர்களும் வாழ்த்துவரே!


இப்பாடலின் உபாசனை ஆனது வாராகியை வழிபடும் பொழுது மூன்று காலத்திலும் வாராஹியின் மூன்று வடிவங்களான வாலை வாராஹி, புவனை வாராஹி, திரிபுரை வாராஹி என்று மூன்று ரூபங்களாக மூன்று மந்திரங்களில் உபாஸிக்கப்படுகிறது. இதனுடைய சூட்சுமத்தை குரு மூலம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.


மேலும் ஆதி வாராஹி கவசத்தில்,

படேத் த்ரிஸந்த்யம் ரக்ஷார்த்தம் கோர ஸத்ரு நிவ்ருத்திதம்


இந்த வாராஹி கவச்சத்தை மூன்று சந்தியில் படிப்பவர்களுக்கு, சத்ரு தொல்லையிலிருந்து நிவர்த்தி ஏற்படும்.


இது போன்றே பல க்ரந்தங்தளில், மந்திரம் ஸ்தோத்திரங்களை மூவேளையும் படிக்கவும் உபாஸிக்கவும் வழியுறுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக கிராத வாராஹி ஸ்தோத்திரம், வஸ்ய வாராஹி ஸ்தோத்திரம் இவற்றில் முக்காலத்திலும் படிக்கும் முறையும் கூறப்பட்டுள்ளது. இது அவரவர் மார்க்கத்தை அது அனுசரித்தது. மறுபடியும் கூறுகிறேன்! ஸ்ரீ வித்தை, சில தந்திரங்கள் வாராஹியை இரவில் வழிபட வேண்டும் என்று கூறியிருக்கிறது. பல சித்தர்களும் சில தந்திர மார்க்கத்திலும் பகல் உபாசனை கூறப்பட்டுள்ளது. ஆனால் இவை இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. அவரவர் அவர்கள் மார்க்கத்தையே அனுசரிக்க வேண்டும்.


"நாங்கள் எந்த சம்பிரதாயங்களையும் சார்ந்தவர்கள் இல்லை! தீட்சை வாங்கவில்லை! எங்களுக்கு வாராஹியை வழிபட ஆசை உண்டு! அவளின் அருளுக்கு பாத்திரமாக ஆசை உண்டு!" என்று நினைப்பவர்கள், வாராஹி உபாசனையை உலகறிய பறைசாற்றியவர் ,வாராஹியின் மந்திர உபாஸனையில் கைதேர்ந்தவர், உபாசனா குலபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ துர்க்கை சித்தர். அவர்கள் சொல்லிய ஸ்வயம்ஸித்த வாராஹி மந்திரத்தை உபாசனை செய்யலாம். மேலும் சித்தி அர்ச்சனை, ஸ்தோத்திரங்கள், அஸ்வாரூடா மாலை, வாலை கும்மி, வாராஹி மாலை, அஷ்டோத்திர நாமாவளி  கொண்டு அர்ச்சிக்கலாம். யந்திரம், பிரயோக விஷயங்களில் ஈடுபடாமல் செய்ய வேண்டும். இம்மகான் ( துர்க்கை சித்தர்) வாராஹி உபாஸனையை பாமரரும், அதீக்ஷிதர்களும் பயமின்றி லகுவாக உபாஸித்து பலன் அடையும் வழிகளை வகுத்து கொடுத்தவர். பல கள்ளம் கபடமற்ற பாமரர்களுக்கும் வாராஹியை உபாஸனை செய்ய வழிவகை செய்தார். வாராஹியை பூஜை செய்பவர்கள் புண்ணியசாலிகள் என்று போற்றினார். அனைவரும் பக்தி ரீதியாக வாராஹியை வழிபடும் வண்ணம் பத்ர, புஷ்ப , நைவேத்திய விதானங்களையும், தமிழ் ஸ்தோத்திரங்கள் பற்றிய தகவல்களை வகுத்தருளினார். வாராஹி பற்றிய ரகசியங்களையும், பெருமைகளையும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், இலகுவாக வெளியிட்டு அருளினார். வாராஹி மாலை என்ற மந்த்ர ஸ்துதியை உலகெங்கும் ப்ரசித்தி செய்த பெருமை இவரையே சேரும். வாராஹி மாலை, சுவடிகளில் இருந்து 1800 களின் கடைசியில் முதன்முதலில் புத்தகத்தில் அச்சிடப்பட்டது. அதன் பிறகு ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்குப்பிறகு, அதில் இருந்த  பலவிதமான இலக்கணப் பிழைகளும் யாப்பு பிழைகளும், சுவடி துணைகொண்டும், அன்னை அருள் கொண்டும் திருத்தி, அனைத்தையும் தொகுப்பாக்கி, வாராஹி மாலைக்கு முழு உருவம் கொடுத்து, மறுபடியும் அச்சில் ஏற்றினார். அதுமட்டுமில்லாமல் வாராஹி மாலை பெருமைகளை அனைவரும் அறியும்படி செய்தும், படிக்கவும் வைத்தார்‌. இதையெல்லாம் எதற்கு செய்தார்? சாமானியர் முதல் தீக்ஷிதர் வரை அனைவரும் அன்னையை அவரவர்களுக்குரிய சக்திக்கேற்றவாறு பூஜித்து பயன் அடையவே!அவரால்தான் இன்று நம்மால் வாராஹி மாலை படிக்க முடிகிறது, அது நமக்கு கிடைத்ததற்கு அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்!


அவளுக்கு செய்யப்படும் நைவேத்தியங்கள் புஷ்பங்கள் பூஜை புனஸ்காரங்கள் அனைத்தையும் அவள் ஏற்றுக் கொள்வாள். சுத்தமான உள்ளமும், பக்தியும் அவளிடம் இருந்தாலே கஷ்டங்களை நீக்கி செல்வங்களைத் தந்து, இறுதியில் மோக்ஷ சாயுஜ்யத்தையும் தருவாள்.


சிலர் வாராஹியை மது மாமிசம் ஏற்கும் அவைதிக தேவதை, துர்தேவதை, க்ஷூத்ர தேவதை என்றும் கூறுகிறார்களே?


சில சம்பிரதாயங்களில் வாராஹிக்கு மது மாமிசம் வைத்து பூஜிக்கும் வழக்கம் உண்டு. மது மாமிசம் வைத்து பூஜிக்கும் அதிகாரம் பெற்ற சம்பிரதாயங்கள் மட்டும் அதை வைத்து பூஜிக்கலாம். மற்றவர்கள் வாராஹியை ஸாத்வீக நைவேத்தியங்களை ஸமர்ப்பிப்பதே சரியானது.


ஒரு சில தந்திரங்களின் கோட்பாடுகளினால் மது மாமிசத்தை ஸமர்பித்து உபாஸனை செய்கிறார்கள். இதை எல்லோராலும் செய்யும் விஷயம் கிடையாது. தந்த்ர சாஸ்திரத்தில் வாமாசார மார்க்கத்தை சேர்ந்தவருக்கே இந்த அதிகாரம் உண்டு. அதாவது முறையாக அந்த மார்க்த்தில் தீக்ஷை பெற்றவருக்கு மட்டுமே.


மது மாமிச போஷிதர்கள் இக்காலத்தில் தன்னுடைய நா சுவைக்காக பஸு பலியில் ஈடுபடுகின்றனர். இது மிகவும் தவறு.


மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்

அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்

கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து

விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த் தெய்வமே.

             - வாராஹி மாலை


இதன் பொருள் வாராஹி தேனில் தோய்த்த வடை, பாயாசம், பொங்கல் முதலானவற்றையும் உண்ணும் வாராஹி, சில சம்பிரதாயத்தில் மது, மாமிசம் வைத்து பூஜிக்கும் அதிகாரமும், பரம்பரை வழியிலும் வந்த முறைகளையும் அவைதீகம், துராசாரம்,  க்ஷூத்ர தேவதை என்றெல்லாம் விமர்சிப்பது அவரவர்கள் அவர்களுக்கே தேடிக்கொள்ளும் பாவம், வினை வழிபயன் என்று இந்த சூத்திரம் கூறுகிறது.


இந்த பாடலை இடையில் சேர்த்தது என்று சொல்ல முடியாது. இலங்கையில் இருக்கும் பழம்பெரும் சுவடியிலும், நம் அரசின் அங்கீகரிக்கப்பட்ட மிகக் பழமையான சுவடியிலும் இந்த பாடல் உள்ளது. 


மது மாமிசமும் வாராஹி ஏற்கின்ற காரணத்தினால் இவளை  க்ஷூத்ர தெய்வம் என்றும் துர் தேவதை என்பதும், அவைதிக தேவதை என்றும் சொல்லுவது அபத்தம்.


வாராஹியை இல்லங்களில் பூஜிக்க தக்க தெய்வம் இல்லை என்கிறார்களே? அவளை வீட்டில் உபாஸிக்கலாமா?


ஆண்டியாக நிற்கும் பழனி ஆண்டவரின் புகைப்படத்தை வீட்டில் வைத்தால், அவனும் ஆண்டியாவான், கோமனமே மிஞ்சும். துர்க்கையை வீட்டில் வைத்தால் வீட்டில் சண்டை வரும், குடும்பத்தில் பிரிவு உண்டாகும். நடராஜரை வீட்டில் வைத்தால் வீடே கதி கலங்கி விடும், இப்படி பல்வேறு போலியை,  உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று!


திக்கற்றவர்க்கு தெய்வமே துணை. அது எந்த தெய்வமாக இருந்தாலும் தன்னை அண்டி வந்தவனைக் காத்து அருள்செய்யும்.


சிலர் சொல்கிறார்கள் பகலில் வாராஹி நினைக்கவே கூடாது. அதனால் பாவம் விளையும் என்று கூறுகிறார்களே?


 பலவிதமான தேவியின் நாமாவளிகள், ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரங்கள், கவசங்கள், இந்திராக்ஷி சிவ கவசம் முதலிய பல்வேறு இடங்களில் வாராஹி, வார்த்தாலீ, தண்டினி போன்ற நாமாவளிகள் வருகிறது. தேவி மஹாத்மியத்தில் பல இடங்களில்  வாராஹி சார்ந்த ஸ்லோகங்களும், அவளுடைய பராக்கிரமங்களை போற்றி வருகிறது, அதனை பகல் சமயத்தில் பாராயணம் செய்யும் பொழுது, அம்பிகையின்  ஸ்மரணம் செய்யாமல் இருக்க முடியுமோ?


 "ந திவா ஸ்மரேத் வார்த்தாலீ" என்ற பரசுராம கல்ப சூத்திரம் வரியில் உள்ள "ஸ்மரணம்" (ஸ்மரேத்) என்ற உண்மையான பதத்தின் அர்த்தம் குருமுகமாக அறிந்தவர்களுக்கு கண்டிப்பாக தெரியும்! சாதாரணமாக சொல்லப்படும் ஸ்மரணம் கிடையாது. சூத்திரம் என்பது ஒரு சாவி போல, அது சூட்சுமத்தை மட்டுமே சொல்லும் மீதமுள்ளவற்றை தக்க குருவிடமே அறிந்து தெரிந்து கொள்ள முடியும். அதுபோல்தான் பரசுராம கல்ப சூத்திரம்.


பொதுவாக கௌலர்கள் இரவில் விசேஷமாக நவாவரணம் செய்வர், பகலிலும் நவாவரணம் செய்யும் உபாஸகர்கள் உண்டு. இப்படி பகலில் நவாவரணத்தில்  ஈடுபடும் உபாசகர் பூஜையின் அங்கத்தில் வாராஹி பிரிக்க முடியாதவளாக இருக்கிறாள். பஞ்சபஞ்சிகா, அங்கோபாங்கப்ரத்யங்க தேவதைகளை பூஜிக்காமல் நவாவரணம் நிறைவு பெறுவதில்லை. இதை பீட அதிகாரம் பெற்ற ஸ்ரீ வித்யா உபாஸகர்கள் நன்கறிவார்கள். இந்த சமயத்தில் அவளை ஸ்மரித்து தானே ஆகவேண்டும்? நினைத்து தானே ஆக வேண்டும்? நான் சொன்ன இந்த விஷயம் தீட்சை பெற்றவர்களுக்கு புரியும்.


முழுமையாக தண்டினி க்ரமத்தை பூஜை செய்ய வேண்டுமென்றால் இரவில் தான் செய்ய வேண்டும். இந்த இடத்தில் நான் அதிகம் பேச முடியாது. உண்மையான ஸ்ரீவித்யா தீக்ஷிதர்களுக்கு புரியும். தெரியாதவர்கள் குருவிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்


வாராஹியை எந்த வடிவில் உபாஸிக்கலாம்?


எல்லோருக்கும் தியான, ஆவாஹன, மந்திர, யந்திர, தந்திர வழிபாடுகளில் பரிச்சயம் இல்லாதவர்கள் , 90 சதவீத மக்கள் பக்தி அடிப்படையில் தூப, தீப ,நைவேத்திய, உபசாரம் இவற்றினால் பூஜை செய்கிறார்கள். பக்தியோடு செய்யப்படுகின்ற ஒவ்வொரு பூஜைக்கும் தெய்வம் கண்டிப்பாக செவிசாய்க்கும்!


 கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்கள் அதாவது த்யான ஆவாஹனாதி முறைகளை அறிந்தவர்கள் தேவியை சித்திரத்திலோ ப்ரதிமயிலோ தீபத்திலோ நிறை குடத்திலோ பூஜிக்கலாம்.


இதனால் கூறப்படுவது ஒன்றே ஒன்றுதான். கும்பிடும் தேவதை எதுவாகினும் நேர்மை, பக்தி, சிரத்தை இப்படி இருந்தால் அவனை தெய்வமே வழிநடத்தும்!


"கடவுளே எனக்கு நல்ல குரு கிடைக்கவில்லையே" என்று தெய்வத்திடம் முறையிட்டு பூஜைகளை செவ்வனே செய்து வந்தால், அதே தெய்வம் அவனுக்கு நல்ல குருவை அனுப்பி அவனுக்கு வழி காட்டும்.


வாராஹி ஒரு கருணை தெய்வம். அவள் பேய் இல்லை! பிசாசும் இல்லை! அவளை தஞ்சம் அடைந்தவர்கள் நன்றாகவே இருப்பார்கள்.


வாராஹியை கும்பிட்டு என் குடும்பம் நாசமாக போய்விட்டது, கவலை வந்துவிட்டது, தீங்கு நடந்துவிட்டது, அடித்துவிட்டால், இடித்துவிட்டாள் என்று பேசுவது! அப்பப்பா அபத்தம்.


வாராஹீ யாருடைய குடும்பத்தையும் அழிக்கவோ, எரிக்கவோ வேண்டிய அவசியம் இல்லை! மனிதர்கள் தங்களுடைய துர்கர்மத்தினால் பாவங்களினால் அழிவைத் தேடிக்கொள்கிறார்கள். அவளுக்கு வேறு வேலை இல்லையா? என்ன?


தெய்வங்கள் ஒன்றும் சீரியல்களின் வரும் வில்லிகள் கிடையாது. ப்ளான் போட்டு குடும்பத்தையே நாசம் செய்வது, குலத்தை அழிப்பது போன்ற இழிசெயல்களை செய்வதற்கு!


உன் வினை உன்னைச் சு(ட்)டும்!

தீதும் நன்றும் பிறர் தர வாரா!


வாராஹியை கும்பிட்டவர்கள் வாழையடி வாழையாக செல்வங்களைப் பெற்று, வளங்களை பெற்று நலன்களைப் பெற்று தேவதைகளின் அருள் பெற்று இறுதியில் மோட்ச சாம்ராஜ்யம் அடைகின்றார்கள்.


ஹே தேவி உலகத்திலேயே மிகவும் கொடிய பொறுக்கமுடியாத பாவங்களை, பாதகத்தை நான் செய்தவனாக இருந்திருந்தாலும், உன்னுடைய கருணை கடாக்ஷமும், தாய்மை என்ற உணர்வும், என்னை தூயவன் ஆக்கி உன்னிடம் வந்து என்னை சேர்ந்து விடுகிறதே அம்மா!


வார்த்தாலீ அர்ப்பணம்.


Art credits: Mathi the sculptor.p

Tuesday 4 July 2023

வழக்கமான பவுர்ணமி விழா நிகழ்ச்சி நிரல்

வழக்கமான பவுர்ணமி விழா நிகழ்ச்சி நிரல் 


கலச பிரதிட்டை 

குத்து விளக்கேற்றுதல் 

ஹோம குண்ட விளக்கேற்றுதல் 

சங்கு நாதம் முழக்கம் 

தீப ஆராதனை 

கணபதி ஹோமம் 

சிவ ஹோமம் ஆகுதி  அளித்தல் 

நந்தியெம்பெருமானுக்கு ஆகுதி அளித்தல்

சிவபெருமானை போற்றி அர்ச்சனை , ஆகுதி 

முருகப்பெருமானை போற்றி அழைத்தல் 

திருநாவுக்கரசர் திருக்கயிலாய போற்றி திருத்தாண்டகம் வாசித்து ஆகுதியிடல் 

பைரவர் சஷ்டி கவசம் ஓதி பைரவருக்கு ஆகுதியளித்தல் 

பைரவரை போற்றி அழைத்து எழுந்தருளுவித்தல் 

அகத்தியரை போற்றி அழைத்து எழுந்தருளுவித்தல் 

சித்தர்கள் திருவடியை போற்றி அழைத்து எழுந்தருளுவித்தல் 

சனிபகவான் கவசம் ஓதி ஆகுதியளித்தல் 


அகத்தியரை போற்றி அர்ச்சனை செய்தல் 


அகத்தியரை யாக அக்கினியில் அழைத்து ஆகுதியளித்தல் 


பூரண ஆகுதி அளித்தல் 


ஹோம குண்டத்தை வணங்குதல் 


கோமாதா உணவளித்தல் 


மச்சிகளுக்கு உணவளித்தல் 


பக்தர்களுக்கு அன்னதானம் அருளுதல் 


அகத்தியருக்கு மற்றும் , அணைத்து உடனுறை இறை வடிவங்களுக்கும் 16 வகை அபிஷேகமளித்தல் 


மஞ்சள் , திருமஞ்சள் , வில்வம் நெல்லி துளசி அருகம்பில் திருநீறு அரிசிமாவு தேன் நெய் பால் தயிர் இளநீர் பன்னீர் சந்தனம் பழங்கள் பஞ்சாமிர்தம் சந்தனாதி தைலம் வாசனை திரவியம் போன்றவை 


சாயீ நாத சித்தர் அபிஷேக அலங்கார பூஜை பாடல் ஆரத்தி 


பக்தர்களுக்கு அபிஷேக தீர்த்தமருளுதல் 


சந்தன காப்பு அலங்காரம் 


மலர் அலங்காரம் 


அர்ச்சனை , தீபாராதனை , ஆரத்தி 


சங்கு முழக்கம் 


அகத்தியர் பாடல் ஆரத்தி 


மலர் சொரிதல் , நமஸ்கார சமர்ப்பணம் 


சிவன் குடில் அர்ச்சனை தீப விசேட மந்திர தந்திர ஆராதனை 


உச்சிஷ்ட மஹாகணபதி விசேட மந்திர தந்திர ஆராதனை 


மஹாலட்சுமி விசேட மந்திர தந்திர ஆராதனை 


அகத்தியர் போற்றி அர்ச்சனை தீபாராதனை 


சாம்பிராணி சேவை 


மலர்சொரிந்து வரம் கேட்டு வணங்குதல் 


அகத்தியர் நெய்வேத்திய பிரசாதம்  அருளுதல் 


அகத்தியர் ஹோம ரக்ஷை மை திலகமிடல் 


அகத்தியர் அட்சதை பிரசாதம் சிரசில் ஏற்றுதல் 


அகத்தியர் அபிஷேக பிரசாதங்கள் விநியோகம் 


அகத்தியரை வணங்கி மந்திர எழுமிச்சை பிரசாதம் வழங்குதல் 


விழா நிறைவு 

03.07.2023, பௌர்ணம் ஹோம காட்சிகள்

 


கணபதி ஹோமம்



சிவ ஆகுதி ஹோமம்




நந்தியெம்பெருமான் ஆகுதி ஹோமம்




சிவபெருமான் 108 போற்றி அர்ச்சனை




ஓம் முருக பெருமான் போற்றி அழைப்பு




திருநாவுவக்கரசர் திருக்கயிலாய போற்றி திருத்தாண்டகம்




பைரவ சஷ்டி கவசம் ஹோமம்




பைரவரை போற்றி அழைத்து எழுந்தருளுவித்தல்





அகத்தியர் போற்றி எழுந்தருளுவித்தல்





சித்தர்கள் திருவடி போற்றி அழைத்து எழுந்தருளவித்தல்







சனி பகவான் கவசம் ஹோமம், சனி தோஷம் நீக்கம்










Tuesday 27 June 2023

ஒளவை பிராட்டியார் ஞான குறள்

 Source சித்தர்களின் குரல், சிவசங்கர்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid036FDPJUsvJzSNuYgFA5DZmvUQy4nh7NKWtUC88stFb8k4AhVN6eHfX2uHtH42eDTql&id=1615171208699125&mibextid=Nif5oz


ஔவையின் ஞானக்குறள் - 06

------------------------------------------------------

அமுத தாரணை


இந்த அதிகாரத்தில் என்தாயார் ஒளவை பிராட்டியார் நமது உடலில் அமிர்தம் ஊறும் இடங்களைக் குறித்துத் தான் ஔவை பாடியுள்ளார். அமிர்தமானது உடலில் நாக்குப் பகுதியில் ஐந்து இடங்களில் சுரந்து கொண்டிருக்கிறது. இது இனிப்புச் சுவையுடையதாக இருப்பதால் அமிர்தம் என்று அழைக்கப்படுகிறது.

(01) அமிர்தம் நாவின் நுனியில் சுரக்கிறது. இனிப்புள்ள ஊற்றுநீர் போன்ற சுவை உடையது.

(02) புவனாமிர்தம் நாவின் நடுவில் சுரக்கிறது. இளகின இனிப்பான சர்க்கரைப் பாகுவைப்போல் சுவையுடையதாக இருக்கும். ஞானக் கிரியைகள் செய்யும்போதும், ஞானநிலையில் வரும். நினைவுகளின் உணர்வுகளாலும் இவ் அமிர்தம் சுரக்கிறது. 

(03) மண்டலாமிர்தம் - நாவின் அடியில் சுரக்கிறது. குழம்பிய சர்க்கரைப் பாகுவைப் போல் சுரக்கிறது.

(04) ரகசியாமிர்தம் - உள்நாக்கின் அடியில் சுரக்கிறது. முதிர்ந்த சர்க்கரைப் பாகுவைப் போன்று சுரக்கிறது.

(05) மௌனாமிர்தம் - உள்நாக்கிற்கு மேல்புறம் சுரக்கிறது. வெகு இனிப்புள்ள குளிர்ந்த மணிக்கட்டியைப் போல் சுரக்கிறது. அனுக்கிரகத்தினாலும் துரியநிலை அனுபவத்தாலும் இவ் அமிர்தம் சுரக்கும்.


பாடல்:- 01

-----------------


"அண்ணாக்குத் தன்னையடைத்து அங்கு அமிர்து உண்ணில்

விண்ணோர்க்கு வேந்தனு மாம்"


பொருள்:-

           "சாதகன் பார்வையையும் மனத்தையும் ஒருமுகப்படுத்தி ஞான தவம் செய்யும்போது, பிரணவ உச்சியில் உள்ள நாக்கின் மத்தியிலே சுரக்கும் அமிர்தத்தை உண்டாக்கால், விண்ணோர்களாகிய தேவர்களுக்கு அரசனாகுவான்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

                  திருவடி ஞான தவம் செய்யும்போது பார்வைக்கும் மனதிற்கும் முக்கியப் பங்கு ஒன்றுள்ளது. அது பார்வையையும் மனத்தையும் அகாரத்தில் (வலது திருவடி) ஒருமுகப்படுத்தி உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதுதான். அப்போது பிரணவ உச்சியில் உள்ள அண்ணாக்குப் பகுதியின் மத்தியில் இனிப்புச் சுவையுடைய நீர் ஊறி கரக்கும். இது அமிர்த நீராகும். இதை அப்படியே உண்டுவிடவேண்டும். அப்படி உண்டுவிட்டால், சாதகன் தேவர்களுக்கெல்லாம் அரசனாகிவிடுவான்.


பாடல்:- 02

-----------------


"ஈரெண் கலையினில் நிறைந்தஅமிர்து உண்ணில்

பூரண மாகும் பொலிந்து" 


பொருள்:-

           "ஈரெண் - ஈரெட்டு, இரு எட்டு - பதினாறு கலைகளையுடைய சத்திர கலையாகும். அப்படி சந்திர கலையில் நிறைத்துள்ள அமிர்தத்தை உண்ணும் தேகம், சந்திரனைப் போல் பொலிவுற்று ஒளிவீசிக் கொண்டிருக்கும்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

                சந்திர கலைகள் பதினாறு கொண்டு ஒளிவீசிக் எண்ணிக்கையிலான கலைகளைக் கொண்டு ஒளிவீசிக் கொண்டிருக்கும். பௌர்ணமி நாட்களில் இந்த பதினாறு கலைகளின் ஒளிவீசும் வெண்ணிறப் பொலிவுகளை நாம் காண முடியும். சந்திரனின் பதினாறு கலைகள் பௌர்ணமி தினத்தன்றே பூரணமாக வெளிப்படும். அதுபோல சந்திர கலையில் பார்வையையும் மனத்தையும் ஒருங்குவித்து ஞான தவம் செய்தால், அமிர்தம் ஊறி ஊற்றாய் சுரக்கும். அந்த சந்திர அமிர்தத்தை உண்டுவிட்டால். சந்திரப் பிரகாசத்தைபோல நமது தேகம் அடைய வேண்டியதைப் பூரணமாய்ப் பெற்று ஒளிவீசித் திகழும்.


பாடல்:- 03

-----------------


"ஓங்கார மான கலசத்து அமிர்து

உண்ணில் போங்காலம் இல்லை புரிந்து" 


பொருள்:-

             "போங்காலமில்லை - சாகும் நிலையில்லை. மரணமற்ற நிலை இது. சாதகன் ஞான தவம் செய்யும்போது பிரணவத்தின் உச்சியில் சுரக்கும் அமிர்தத்தை உண்டுவிட்டால், அவனுக்கு மரணமற்ற பெருநிலையை அடைந்திடுவான்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

                 ஓங்காரம் இருக்கும் இடமே கலசம் என்று உவமையாக ஒளவை கூறியுள்ளார். அமிர்தம் கலசத்தில் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு, கலசம் என்பது நமது தேகம். தேகம் அமிர்தமாக மாற வேண்டுமென்றால், தேகம் அமிர்தத்தை சாப்பிட வேண்டும். ஞான கர்மத்தின்போது பருதி, மதி, சுடர் ஆகிய முக்கலைகளையும் ஒருங்கே அக்கினிக் கலையில் கூட்டுவித்து தவம் செய்யும் போது ஓங்காரமாகிய பிரணவத்தில் சுரக்கும் அமிர்தத்தை உண்டுவிட்டால், மரணமற்ற பெருவாழ்வினை அடைந்துவிடலாம். இறப்பை வெல்லும் உபாயம் இது.


பாடல்:- 04

-----------------


"ஆனகலசத்து அமிர்தை அறிந்து உண்ணில்

போனகம் வேண்டாமல் போம் 


பொருள்:-

              "போனகம் என்பது உணவு, ஆகாரம் என்று பொருள். சாதகன் அவனுடைய ஞான சாதனையில் அமிர்தம் இருக்கும் இடத்தை அறிந்து, அவ் அமிர்தத்தை உண்டால், அவனுக்கு வேறு ஆகாரம் எதுவும் தேவைப்படாது" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

                 ஞான சாதனை செய்யும்போது பல்வேறு, பலதரப்பட்ட அனுபவங்கள் தோன்றித் தோன்றி வந்து கொண்டே இருக்கும். அவற்றை எல்லாம் சாதகன் கடந்து, கடந்து முன்னேறிப் போய்க்கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அவனுக்கு அமிர்த நீர் ஊறி உடலில் அண்ணாக்கில் சொட்ட ஆரம்பிக்கும். அவ்வாறு சாதகன் ஞான சாதனையின் வாயிலாக தலையைச் சுற்றிலும் தாமரை மலரைப் போல் எட்டு இதழ்கள் இருப்பதைக் காண்பான். அந்த எட்டு இதழ்த் தாமரையின் நடுப்பகுதியில் அமிர்தம் சுரப்பதை அறிவால் அறிந்து உணர்ந்து உண்பான். அவ்வாறு உண்ணுவிட்டால் சாதகனுக்கு உணவின் தேவையானது இல்லாமலே போய்விடும்.


                ஸ்ரீவித்தை தந்திரத்தில் சாதகனின் தலையைச் சுற்றிலும் எட்டு இதழ்களில் எட்டு தேவதைகள் சர்வ சம்க்ஷோபண சக்கரத்தில் வீற்றிருப்பதாகவும், அவர்கள் ஒளியுடலில் இருந்துகொண்டு, சாதகர்களுக்கு வேண்டியதைத் தருவதாகவும் ஒரு யோக முறை ஒன்று உண்டு. ஸ்ரீவித்யா உபாசகர்கள் இதை அறிவார்கள். அத் தேவதைகளை "அனங்க தேவதைகள்" என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த எட்டிதழ் பற்றி திருமூலர் அவர்களும் பின்வருமாறு கூறுவதை ஒப்பு நோக்கவும்.


"ஊறும் அருவி உயர்வரை உச்சிமேல்

ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு

சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்

பூவின்றிப் சூடான் புரிசடை யோனே"

                - திருமந்திரம்:2535


உடலின் உச்சியாகிய தலைப் பகுதியில் சுரந்து பாய்கின்ற அருவியை உடைய, உயர்ந்த மலை உச்சிக்கு மேலே, நதி எதுவும் இல்லாமல் தானே நிறைந்து, தனது நீரைக் கீழ்நிலங்களுக்கு பாயவிடுகின்ற ஓர் அதிசயக் குளம் உண்டு. அக்குளத்தில் சேரும், கிழங்கும் இல்லாமலே செழிப்பான ஒரு செழுங்கொடியிற் பூத்த அதிசயத் தாமரையும் ஒன்று உண்டு. அந்தத் தாமரைப் பூவைத் தவிர வேறு பூக்களை புரிசடையோனாகிய சிவன் சூடிக் கொள்வதில்லை. சேறில்லாத குளம் என்பது நமது இரு கண்களே. கண்கள் மட்டும்தான். புலவர்கள் மலருக்கு ஒப்பிட்டுள்ளார்கள். மலரினைப் போல கண்களும் சுருங்கி விரியும் தன்மை கொண்டது. கண்களில் வரும் நீரே ஊறி வரும் அருவியாகும்; பின் அதுவே ஓடிவரும் ஆறாக மாறிவிடும்.


"ஒருங்கிய பூவும்ஓர் எட்டித ழாகும்

மருங்கிய மாயா புரி, அதன் உள்ளே

சுருங்கிய தண்டின் சுழினையின் ஊடே

ஒருங்கிய சோதியை ஒர்ந்தெழும் உய்ந்தே"

                  - திருமந்திரம்:2528


நெஞ்சத் தாமரையானது சேர்ந்து காணப்படும் எட்டிதழ்த தாமரையென்று சொல்லப்படும். பெருமைமிக்கதாகிய மாயாபுரி என்னும் இவ்வுடம்பின் உள்ளே காணப்படும் சுழிமுனைத் தண்டின் உள்ளே அடங்கிய அறிவுப் பேரொளியினை ஞான தவத்தால் அருளால் ஆராய்ந்து பெற்றிடுங்கள். அதுவே உகந்த வழியாகும். இனி அப்பேரொளிப் பிழம்பினை நினைந்து நினைத்து உற்றுப் பார்த்துப் பார்த்து உய்ந்து ஆய்ந்து எழுங்கள் என்றவாறு. சிலர் சகஸ்ரதளத்தை எட்டிதழ்த் தாமரை என்றும் அழைப்பதுண்டு.


“ஆறேஅருவி அகங்குளம் ஒன்றுண்டு

தூறே சிவகதி ணுண்ணிது வண்ணமுங்

கூறே குவிமுலைக் கொம்பளையாள் உடன்

வேறேயிருக்கும் விழுப்பொருள்தானே”

              - திருமந்திரம்:2979


சீவனின் சென்னியில் உள்ள சகஸ்ரதளம் என்னும் குளத்தை, ஆறு ஆதாரங்களின் வழியே பாய்ந்து செல்லும் அருவியாகிய உடலின் உயிர்சக்தி வந்து நிரப்பும். கீழே உள்ள உயிர்சக்தியை மேல்நோக்கிச் செலுத்தும் சிவகதி மிகவும் நுண்ணியது. சீவன் பெறும் சிவகதியின் முடிவில், குவிந்த முலைகளை உடைய சக்தி தேவியுடன் அனைத்துக்கும் வேறாக இருக்கும் மேலான சிவமும் விளங்கும். குவிந்த முலைகள் என்பது நமது இரு கண்களே ஆகும். கண்களை தனியே எடுத்துப் பார்த்தால் அது குவிந்த முலைபோல் இருப்பதைக் காணலாம்.


பாடல்:- 05

-----------------


"ஊறும் அமிர்தந்தை உண்டியுறப் பார்க்கில்

கூறும் பிறப்புஅறுக் கலாம்"


பொருள்:-

               "ஊறும் ஞான அமிர்தத்தை ஞான தவத்தில் பிரணவ உச்சியில் பார்த்து வரும்போது வரக்கூடிய அமிர்தத்தை உண்டால் பிறவிப்பிணி எனும் பிறப்பை அறுத்துவிடலாம்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

               சென்னியில் ஊறிவரும் அமிர்தத்தை அண்ணாக்கில் நின்று உண்டுவந்தால், தேகம் வச்சிர தேகமாக மாறிவிடும். சுத்த தேகம் அமைந்துவிடும். சுத்த தேகத்திற்கு ஞான தேகம் அமையும் நிலை அடுத்தடுத்து உருவாகிக் கொண்டே போகும். செய்யும் ஞான தவத்தின் மூலாக்கினியில் அமிர்தமானது உருகி ஊறி அண்ணாக்கின் வழியே கீழே விழும். அதை உண்டு பருக வேண்டும். அமிர்தம் உண்டபின் அவனுக்கு மரணமில்லை. பிறப்பை அறுக்கும் அமிர்த (சாவா நிலை) நிலை இது.


பாடல்:- 06

-----------------


"ஞான ஒளிவிளக்கான் நல்லஅமிர்து உண்ணில்

ஆனசிவ யோகி யாம்"


பொருள்:-

             "யாரொருவன் ஞான தவத்தின் மகிமையால் ஞான ஒளியை உண்டாக்கி அதனால் அமிர்தம் உருகி வருவதை உண்பவனோ, அவனே சிவயோகி என்று அழைக்கப்படுவான்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

               சிவயோகியாகும் தகுதி இங்கு ஒளவையால் கூறப்பட்டுள்ளது. திருவடி ஞான தவத்தின் மூலமாக தேகத்தில் யோகாக்கினியை உண்டாக்கி, பின் அதை அக்கினிக் கலையில் கொண்டு போகும் தந்திரத்தை அறிந்து, அங்கு ஞான ஒளியினைக் கண்டுவிடும்போது, ஒளியின் வெப்பத்தால் அங்குள்ள அமிர்தமானது உருகி அண்ணாக்கின் வழியே தொண்டைப் பகுதியில் கீழிறங்கும். அந்த அமிர்தத்தைப் பருகிவிட்டால் சாதகன் பிறப்பை அறுத்து மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்றிடுவான்.


பாடல்:- 07

-----------------


"மேலைஅமிர்தை விளங்காமல் தான்உண்ணில்

காலனை வஞ்சிக்க லாம்"


பொருள்:-

            "பிரபஞ்சப் பெருவெளி எனப்படும் உச்சிக்கு மேலேயுள்ள துவாத சாந்த வெளியிலிருந்து, சூரியக் கலையின் வழியே கீழே இறங்கும் அமிர்தத்தை உண்டுவிட்டால், காலன் எனும் எமனை ஏமாற்றி இறப்பைக் தடுத்துவிடலாம்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

              ஞான தவத்தில் சாதகன் நன்கு முன்னேறிச் செல்ல வேண்டும், துவாதசாந்தத்தில் அக்கினிக் கலையின் சோதியைக் கொண்டு போய்ச் சேர்க்க தந்திரம் தெரிந்திருக்க வேண்டும். உச்சிக்கு மேலேயுள்ள இத்தளத்தில் இருக்கும் அமிர்தமானது சூரியக் கலையின் வெப்பத்தின் காரணமாக உருகி கீழே வரும். இந்த அமிர்தமானது சூரிய கலையினால் உருகி மூன்று உளுந்தளவு பிரமாணமே கீழே வருவதால் உடனே அது ஆவியாகி விடும். அதனால் அமிர்தம் வரும்போது காலதாமதம் செய்யாமல் உடனே உண்டுவிட வேண்டும் என்பதைத்தான் "விளங்காமல் தான் உண்ணில்" என்றார். அதன்பிறகு எமன் அருகில் வரமாட்டான். எமனை வென்று சாகா நிலையில் இருந்திடலாம்.


பாடல்:- 08

-----------------


கால்அனல் ஊக்கம் கலந்த அமிர்துண்ணில்

ஞானம் அதுவாம் நயந்து


பொருள்:-

             "காலனல் - கால் + அனல் - வாயுக்களோடு கூடிய அக்கினி. ஊக்கம் - பிரணவ உச்சி. பிராண, அபான வாயுக்களைக் கொண்டுபோய் அக்கினியில் சேர்ப்பித்து, பின் இம்மூன்றையும் கொண்டுபோய் பிரணவ உச்சியில் சேர்த்துவிட்டால் உண்டாகும் அமிர்தத்தை உண்டால் ஞானம் உண்டாகிடும்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

               பிராணன், அபான வாயுக்கள் என்பது அகாரத்திலும் உகாரத்திலும் செயல்படும் சிவ, சக்திக் கலைகளின் பெயர்களாகும். சிவத்தை சக்தியோடு கலக்க வேண்டும். சிவசக்தியை அக்கினியோடு கலக்க வேண்டும். பின் சிவசக்தி அக்கினையை பிரணவ உச்சிக்குக் கொண்டுபோய் கலக்க வைக்க வேண்டும். இக்கலப்பில் அங்கு ஒரு வேதியியல் மாற்றம் அதாவது இரசவாதம் நடைபெற ஆரம்பிக்கும், ரசவாதத்தின் போது வெளிப்படும் வெப்பத்தில் அமிர்தமானது. உருகி கொட்ட ஆரம்பிக்கும். இந்த அமிர்தத்தை உடனே பருகி விட்டால், ஞானம் உண்டாகிவிடும். ஞான தவத்தில் பெற்ற அறிவு நமக்கு அமிர்தத்தை உருவாக்கிக் கொடுத்துவிடும்.


பாடல்:- 09

-----------------


எல்லையில் இன்னமிர்தம் உண்டுஆங்கு இனிதுஇருக்கில்

தொல்லை முதல்ஒளியே ஆம்


பொருள்:-

             "தொல்லை முதல் ஒளி - பழமையாகிய ஆன்ம ஒளி.   பிரபஞ்சப் பெருவெளியின் எல்லையில் அமிர்தத்தை உண்டு இனிமையாக ஆனந்தமாக இருப்பதற்கு பழமை வாய்ந்த அந்த ஆன்ம ஒளியே முதல்காரணமாகும்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

            ஆதிகாலம் தொட்டு இருந்துவரக் கூடிய ஞான சாதனைகளில் காணப்படும் ஆன்ம ஒளியினால் மட்டுமே, சாதகன் துவாதசாந்த வெளியில் உள்ள பொற்தளத்தில் இருக்கக் கூடிய அமிழ்தை கொடுக்க முடியும். வேறெந்த தந்திரங்களினாலும் இவ் அமிழ்தை கொடுத்துவிட முடியாது. அதற்கு திருவடி ஞான தவச் சாதனையே பெரும் உறுதுணையாக சாதகனுக்கு இருக்கிறது. இப்படி அரிதிலும் அரிதான அமிழ்தை ஞான சாதனையில் உண்டு பருகி இன்புற்று ஆனந்தக் கூத்தாடலாம். நடராஜத் தத்துவம் இதைத்தான் மறைபொருளாய் சொல்லிக் கொண்டிருக்கிறது, தெருக்கூத்து ஆடுபவனா தில்லைநாதன்? ஞானக்கூத்தை ஆடுபவன் சிவன். அக்கினிக் கலைகளை நான்கு கைகளிலும் ஏந்திக் கொண்டு அவன் ஆடும் கூத்து இருக்கிறதே. அது ஞானக் கூத்து; சென்னிக் கூத்து: ராஜக் கூத்து; நடராஜக் கூத்து. பருதி, மதி, சுடர் கலைகள் ஒன்றுகூடும்போது இந்த ஆனந்தக் கூத்தை நாமும் கண்டு இன்புற்று மகிழலாம்.


திருமூலர் அவர்கள்,


"ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா

ஒளியுளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும்

ஒளியிருள் கண்டகண் போலவேறு ஆயுள்

ஒளியிருள் நீங்க உயிர்சிவ மாமே"

             - திருமந்திரம் :1819


என்று ஒளியே உயிர் என்றும், காணும் கண் என்றும், உணரப்படும் சிவம் என்றும் கூறியுள்ளார்.


பாடல்:- 10

-----------------


"நிலா மண்டபத்தில் நிறைந்த அமிர்துண்ணில் உலாவலாம் அந்தரத்தின் மேல்"


பொருள்:- 

            "நிலா மண்டபம் - சந்திர கலை இருக்கும் இடம். அந்தரம் - ஆகாயம். சந்திர மண்டபத்தில் நிறைந்து காணப்படும் அமிர்தத்தை உண்டால், ஆகாயத்தில் உலாவி (சஞ்சரித்தல்) வரலாம்" என்று என் தாயார் ஒளவை பிராட்டியார் கூறுகிறார்....


விரிவான விளக்கம்:-

                ஞான தவ சாதனையின்மூலம் ஆகாயத்தில் கமனம் செய்யும் யோகநிலை இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரக் கலையின் ஒலியைக் கொண்டு போய் அக்கினிக் கலையில் சேர்க்கும்போது, அக்கினிக் கலையில் உள்ள ஒளி ஆற்றல் ஒலியோடு சேர்ந்து அவ்விடத்தில் பெரு ஒளி வெடிப்பை உண்டாக்கும். அது சந்திர மண்டலத்தை தாக்கும். அப்போது சந்திர மண்டலத்தில் உள்ள அமிர்தம் உருகி வரும். அந்த சந்திர அமிர்தத்தை உண்டால், ஆகாயத்தில் எவ்வித பிடிப்புமில்லாமல் அந்தரத்தில் மிதந்து கொண்டு எங்கும் சென்றுவரும் கமன ஆற்றல் சித்தித்திடும். ஆனால், சாதகன் இவ்வகை சித்திகளில் கவனம் வைத்தால், ஞானத்தை இழந்துவிட நேரிடலாம். கவனம் தேவை என்றும் எச்சரிக்கிறார்....


        - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து

          சித்தர்களின் குரல் shiva shangar

நிலத்துடன் தொடர்பை எடுத்தல் எதற்கு

Source - https://www.facebook.com/reel/765150402023539?s=yWDuG2&fs=e&mibextid=Nif5oz 




Monday 26 June 2023

சென்னை வாழும் சித்தர்


 

திருவண்ணாமலை வாழும் அதிசய புண்ணிய ஆத்மாக்கள்

 சுமார் 20 ஆயிரம் முறை இவர் கிரி வலம் வந்திருப்பார் போல... சிவாய நமஹ ஓம் அருணாச்சல ஈஸ்வ ராய நமஹ, 



Wednesday 21 June 2023

கந்தர் அனுபூதி பாடல் 15


 




உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்

 சோழ அரசர்களில் ஒருவர் பட்டத்து யானை மீது உலா வருகின்றபோது, யானைக்கு மதம் பிடித்தது. அரசனும் பாகனும் திகைத்திருந்தனர். அப்போது இறைவன் அருளால் ஒரு சேவல் ஓன்று வந்து பட்டத்துயானையின் மீது ஏறி யானையின் மத்தகத்தின் மீது மூக்கால் கொத்தியது. அதன் பின்பு யானை மதம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தது. அந்த சேவல் ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. வில்வ மரத்தடியில் தேடிப்பார்த்தபோது சிவலிங்கமொன்ரு இருப்பதைக் கண்டு அவருக்கு கோயில் எழுப்பினான்.




என்கண் - என் கண்ணை திற, நான் உன் கண்ணை திறக்கிறேன், உண்மை கதை


 

Monday 19 June 2023

இது எந்த ஊர், எந்த கோவில் என்று தெரியவில்லை. அபிஷேகம் செய்யும் பால் மயில் கழுத்தில் உள்ள நீல நிறம் போல மாறுகிறது.

 இது எந்த ஊர், எந்த கோவில் என்று தெரியவில்லை. அபிஷேகம் செய்யும் பால் மயில் கழுத்தில் உள்ள நீல நிறம் போல மாறுகிறது.




மதுரை வரிச்சியூர், திருப்பத்தூர் மலை கோவில்


 

https://maps.app.goo.gl/UdJeZTZfUDLjNk6a9

Sunday 18 June 2023

ஆயுள் தோஷம் போக்க

 ஆயுள் தோஷம் போக்க


சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம். சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் அமையாது. அவர்கள் மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுள் தோஷம் போக்கி ஆயுளை விருத்தியாக்கும்.

Sunday 4 June 2023

இந்தூர் கஜரானா மஹா கணபதி

 இந்தூர் கஜரானா மஹா கணபதி


இந்தூர் ரெயில் நிலையத்தில்  இருந்து சுமார் இரண்டு அல்லது மூன்று கிலோ தொலைவில் நகரத்துக்கு உள்ளேயே உள்ள கஜரானா கணபதி ஆலயத்திற்கு நேரடியாக சென்று வர டெம்போ ஆட்டோ மற்றும் பஸ்கள் நிறைய கிடைக்கின்றன.


சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பு பெருமை வாய்ந்த அஹில்யா இராணியின் கனவில் ஒரு முறை வினாயகர் தோன்றி தான் இந்தூரில் கஜரானா பகுதியில் உள்ள ஒரு குளத்தில் மூழ்கிக் கிடப்பதாகவும்  தன்னை வெளியில் எடுத்து ஒரு ஆலயம் அமைத்து வழிபடுமாறு கூறினாராம். கஜரானா என்ற பகுதி இந்தூரில் மிகவும் நெரிச்சல் மிக்க பகுதியாக இருக்க என்ன செய்வது என முதலில் குழம்பியவள் தன்னுடைய கனவு பற்றி மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்தப் பின் வினாயகர் கொடுத்தக் கட்டளையை மீறக் கூடாதென முடிவெடுத்து கஜரானாவில் இருந்த ஒரு குளத்தை சுத்தம் செய்து தூர் வாரச் செய்தார். அப்படி செய்கையில் அந்த குளத்தினுள் புதைந்து இருந்த வினாயகர் விக்ரகம் கிடைத்தது. என்ன ஆச்சரியம். அந்த பிள்ளையாரும் அவருடைய கனவிலே தோன்றிய வினாயகரும் ஒரே மாதிரி இருந்தனர். உடனே அந்த விக்ரகத்தை சுத்தம் செய்து அந்த குளத்தின் எதிரிலேயே அகம முறைப்படி ஆலயம் ஒன்றை எழுப்பி விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்து 1735 ஆம் ஆண்டு அந்த ஆலயத்தில் பூஜைகளைத் துவக்கினாராம்.


சுமார் ஆறு அடி உயரமுள்ள வினாயகரின் சிலைக்கு இரு பக்கத்திலும் இரண்டு மனைவிகளை வடிவமைத்து உள்ளனர். அந்த ஆலயத்தில் ஏழு அல்லது எட்டுத் தலைமுறையாக பூஜைகளை செய்து வரும் பண்டிதர் அதன் பெருமையை மனம் மகிழ்ந்து கூறினார். பண்டிகை தினங்களில் முக்கியமாக புதன் கிழமைகளில் நடு இரவுவரை நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருந்து வினாயகரின் அருகில் சென்று அவரை வணங்கி வேண்டுதல்கள் செய்கின்றனர். குடும்பத்தில் அமைதியின்மை, தடை பெற்றுவரும் காரியங்கள் சித்தி பெற குடும்பச் சண்டை போன்றவற்றிக்கு நிவாரணம் பெற என பல்வேறு கோரிக்கைகளை வைத்து வேண்டுதல் செய்கின்றனர். வினாயகரை வேண்டிக் கொண்டு அந்த ஆலத்தில் உள்ள ஒரு மரத்தில் நோம்புக் கயிற்றைக் கட்டி வைத்துவிட்டு ஒரு தேங்காயை பூசாரியிடம் தந்து விட்டு வேண்டுதல்களை அவரிடம் கூறிவிட்டுச் செல்கின்றனர். அதை அவர் ஸ்வாமி பீடத்தில் வைத்து விடுகின்றார். எப்பொழுது தன் வேண்டுதல் பலிக்கின்றதோ அப்பொழுது அவர் அந்த ஆலயத்திற்குச் சென்று பூசாரியிடம் அதைப் பற்றிக் கூற அவர் பீடத்தில் இருந்து ஒரு தேங்காயை பிரசாதமாகத் தருகிறார்.


ஆந்த ஆலயத்திற்கு செல்லும் பல பக்தர்கள் கூறும் கதைகள் மெய்  சிலிர்க்க வைக்கின்றன.  எங்களுக்கே கஜரானா வினாயகரின் மகிமையைக்  குறித்த ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு முறை தேவாஸ் நகரில் எங்கள் வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள பணமும் தங்க, வைர நகைகளும் திருட்டுப் போய் விட்டன. திருடனைக் கண்டு பிடிக்க முடியவில்லை.  எங்களுடைய ஒரு நண்பர் வற்புறுத்தலினால் நாங்கள் மறுநாள் காலையில் காளியை வழிபடும் ஒரு மாந்த்ரீக ஜோதிடரிடம் சென்று திருட்டைக் குறித்து கேட்ட பொழுது அவரும் எங்கள் வீட்டில் திருடியவன் வெளியூரை சேர்ந்தவன் எனவும், அவன் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவன் எனவும், அவன் திருட்டுத் தொழிலில் கைதேர்ந்தவன் எனவும், அடுத்த மூன்று நாட்களுக்குள் அவனைப் பிடிக்காவிடில் அதன் பிறகு அந்த திருடனை பிடிக்கவே முடியாது, அவன் பிடிக்க முடியாத இடத்திற்கு சென்று விடுவான் எனக் கூறி  அவன் அந்த நேரத்தில் தங்கி இருந்த இடத்தைக் குறித்து சில தகவல்களைக் கூறினார். அதாவது தேவாஸில் இருந்து போபால் செல்லும் வழியில் சுமார் முப்பது  கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தில்தான் இருக்கிறான்  என்று கூறினார்.


அவர் குறிப்பிட்ட பகுதியில் இருந்தது சிறு  கிராமம். அது திருட்டிற்கு  பெயர் பெற்ற இடம்.  போபாலுக்கு செல்லும் பஸ்கள் அங்கு நின்று விட்டுச் செல்லும். அந்த கிராமத்தருகில் இரவு ஒன்பது மணிக்கு மேல் தனியே வாகனங்கள்  மற்றும் காரில் செல்பவர்கள் செல்ல மாட்டார்கள். காரணம் தனியே செல்லும் வாகனத்தை மடக்கி அவர்களை கொள்ளையடித்துக் கொண்டு செல்பவர்கள் அங்கு அதிகம். கொள்ளையடிப்பது மட்டும் அல்ல, அவர்களைக் அங்கேயே தள்ளி விட்டு  வாகனத்தையும்  எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். அதன் பின் வாகனங்களின் ஒரு பொருள் கூட கண்டு பிடிக்க முடியாத அளவு அதை அடுத்த சில மணி நேரத்தில் பிரித்து அவற்றை எடுத்துச் சென்று விடுவார்கள்.  ஆகவே தனியாக காரில் செல்பவர்களை எல்லையிலேயே போலிஸ் தடுத்து நிறுத்தி பாதுகாப்பிற்காக அங்கிருந்து ஐந்து அல்லது பத்து வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் வகையில் அனுப்பி வைப்பார்கள். ஆனால் ஒருவித பயத்தினால் அரசாங்க வாகனம் மற்றும் பஸ்ஸை கொள்ளை அடிக்க அந்த திருடர்கள்  வரமாட்டார்கள். 

நாங்கள் காவல் நிலைய அதிகாரியிடம் (அவரும் ஒரு முஸ்லிம் மதத்தவர்) அது குறித்து  கூறியும் அவர்கள் வேண்டும் என்றே அவனைப்  பிடிப்பதில் அசட்டையாக இருந்தார்கள். அதற்கான காரணம் அவர்களுக்கு இடையே இருந்த தொடர்ப்புக்கள்தான்  என்பது பின்னர் தெரிந்தது. ஜோதிடர் கொடுத்திருந்த கெடுவும் முடிந்தது.  திருடனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. மாதங்கள் ஓடி விட்டன. காவல் நிலையத்திலும் அவனைப் பிடிப்பதில் எந்த அக்கறையையும் காட்டவில்லை.  மனம் வெறுத்துப் போய் இருந்த எங்களிடம் எதேற்சையாக ஒருவர் நீங்கள் கஜரானா ஆலயம் சென்று அங்கு வேண்டிக் கொள்ளுங்கள் அவர் நிச்சயமாக வேண்டுதலை நிறைவேற்றுவார் எனக் கூறி எங்களை ஆலயத்திற்கு தாமே அழைத்துச் சென்றனர். நாங்களும்  அங்கு சென்று வேண்டிக் கொண்டு திரும்பினோம்.


என்ன அதிசயம் அதற்கு அடுத்த சில நாட்களிலேயே வெளியூருக்குத் தப்பி ஓடி விட்டிருந்த அதே திருடன் மீண்டும் எங்கள் வீட்டை ஒட்டியபடி பின்னால் இருந்த வீட்டில் திருட வந்தான். சொன்னால் நம்ப மாட்டீர்கள். எதிர்பாராத விதத்தில் அவன் வீதியில் விளையாடிக் கொண்டு இருந்த சிறு பையன்களினால் மாட்டிக் கொண்டான். (பிடிபட்ட திருடன் முஸ்லிம் மதத்தவர்தான் என்பதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தோம். காளி ஜோதிடர் கூறியது எத்தனை உண்மை!  அது மட்டும் அல்ல திருடன் பிடிபட்ட பின்னர் ஜோதிடர் கூறிய அதே இடத்தில் தான் மூன்று நாட்களும் தான் தங்கி இருந்ததை அவன் வழக்கு மன்றத்தில் ஒப்புக் கொண்டான். அதன் பின் அவன் போபாலுக்கு  திரும்பிச் சென்றுள்ளான். திருடுவதை தொடர்ந்து தொழிலாகவே செய்து கொண்டு இருந்தவன் மீது போபாலில் மட்டும் 35 வழக்குகள் பதிவாகி இருந்தன) களவு போன நகைகளில் பத்து சதவிகித தொகை கூட திரும்பக் கிடைக்கவில்லை என்றாலும் நாங்கள் மிகவும் போற்றி வைத்திருந்த முக்கியமான ஒரு பொருள் கிடைத்தது. திருடனை பிடிக்க முடியாதென ஜோதிடர் முதல் காவல்துறையினர்வரை பலர் கூறியும் பல மாதங்களுக்குப் பின் நாங்கள் கஜரானா கணபதியிடம் வேண்டிக் கொண்டப் பின்  அதே திருடன் மீண்டும் கிடைத்தான்.  அந்த மகிமையை என்னவென்று சொல்வது? அதனால்தான் எனக்கு இந்தூருக்குச் சென்றால் கஜரானா  ஆலயம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் எப்போதும் இருக்கும். 


அப்படிப்பட்ட சம்பவங்கள் பலருக்கும் நடந்துள்ளன. பிளவு பட்ட குடும்பம் ஒன்றானது, பிழைப்பது சாத்தியம் இல்லை என கைவிடப்பட்டவர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் அந்த காயம் கூடத் தெரியாமல் நல்ல வாழ்கையை கொண்டு வாழ்ந்து வந்தார். வருடக் கணக்கில் தேங்கிக் கிடந்த வழக்கினால் மன அமைதியை இழந்தவர் ஆலயத்தில் சென்று வேண்டிக் கொண்ட அடுத்த சில நாட்களில் வழக்கு மீண்டும் எடுக்கப்பட்டு அவருக்கு சாதகமாக முடிந்தது. இப்படி பல பல கதைகள் உண்டு.


கஜரானா ஆலய வளாகத்துக்குள்  கால பைரவர், மகாலஷ்மி, சாயி பாபா, ஹனுமான், ராமபிரான், சிவலிங்கம், மற்றும் சனி பகவான் போன்றவர்களுக்கு தனித் தனி சன்னதிகள் உள்ளன.


திரிவேணி சங்க சனீஸ்வரர் ஆலயம்

 திரிவேணி சங்க 

சனீஸ்வரர் ஆலயம் 



உஜ்ஜயினியி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஏழு அல்லது எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உஜ்ஜயினியின் எல்லையில்  இந்தூருக்கு செல்லும் பாதையில் உள்ள இந்த திரிவேணி சங்க சனி ஆலயத்தில் இரண்டு சனி தேவர்கள் உள்ளார்கள். அவர்களில் ஒருவர் ஏழரை நாட்டு சனி தேவர் மற்றும் இரண்டாமவர் இரண்டரை ஆண்டு சனிஸ்வரர். அவர்களோடு வினாயகரும் காட்சி தருகிறார்.   இப்படியாக  ஒரே சன்னதியில் மூவரும் இருப்பது வேறு  எங்கும் கிடையாது. அவர்களது சன்னதியை சுற்றி உள்ள தனித் தனி சன்னதிகளில் மற்ற நவக்கிரக தேவர்கள் அமர்ந்து உள்ளார்கள்.  அவர்கள் ஒவ்வொருவரும் தந்திர சாதனாவின் யந்திர பூஜை செய்யப்பட்டு  ஸ்தாபிக்கப்பட்டு உள்ளார்களாம். இந்த ஆலயத்தின் இருபுறமும் மூன்று நதிகளான சிப்ரா, காந்தாரி மற்றும் கான் நதிகள் ஒன்றிணைந்து ஓடுகின்றன. சிலர் இதை பாணகங்கா எனும் நதி என்றும் கூறுகிறார்கள். இந்த நதியின் அடிப்பகுதியில் கண்களுக்குத் தெரியாமல் சரஸ்வதி நதி பூமிக்கு அடியில் ஓடிக் கலப்பதாகவும் ஐதீகம் உள்ளது (தற்போது சிந்துவெளி  நாகரீகத்தில் இருந்த சரஸ்வதி நதி மறைந்து விட்டது என்பது வரலாற்றுச் செய்தி ஆகும்). அமாவாசை சனிக்கிழமைகளில் இங்கு லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து சனி பகவானை வழிபடுகிறார்கள்.


விக்ரமாதித்தியன் திரிவேணி சங்கம் -மூன்று நதிகள் கலக்கும் இடம்- என்ற இடத்தில் சனீஸ்வரரின் ஆலயத்தை நிறுவி அங்கு வந்து தவறாது வழிபட்டாராம். விக்ரமாதித்தியனுக்கு சனி பகவான் மூலம் வாழ்க்கையில் ஒரு பாடம் கிடைத்ததினால் அவர் சனி பகவானை உதாசீனப்படுத்தியதே இல்லை என்றும், அவர் தவறாது சனி பகவானை வழிபாட்டு வந்துள்ளார் என்பதும் இந்த ஆலயத்தை அவர் நிறுவியதின் மூலம் வெளிப்படுகிறது.


விக்கிரமாதித்தியனும் ஒரு தேவகணமே என்றாலும் சில கடமைகளை நிறைவேற்றவே அவர் பூமிக்கு வந்து உஜ்ஜயினியில் ஆட்சி செய்து கொண்டு இருந்தார். ஆரம்ப கால ஆட்சியில் ஒரு கட்டத்தில் விக்கிரமாதித்தியனுக்கு கர்வம் அதிகமாகி இருந்ததாம். அதற்குக் காரணம் அவருக்கு பிடித்த ஏழரை நாட்டு சனி தசை ஆகும். ஆனால் விக்ரமாதித்தியனோ சனி பகவானை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அவருக்கு ஏழரை நாட்டு சனி தசை வந்துள்ளதால் சனி பகவானை வணங்கி துதித்து வந்தால் அதன் தாக்கம் குறையும் என ஒரு பண்டிதர் கூறியும் அதை அவர் ஏற்கவில்லை, மாறாக தன்னை சனி பகவானினால் ஏதும் செய்ய முடியாது என்று இறுமாப்பாகக்  கூறிவிட்டு அந்த பண்டிதரை அவமானப்படுத்தி அனுப்பி விட்டார்.


ஒருமுறை ஒரு குதிரை வியாபாரி அவரது அரண்மனைக்கு வந்து தான் ஒரு அற்புதமான குதிரையைக் கொண்டு வந்துள்ளதாகவும், அதன் மீது ஏறி அமர்ந்து கொண்டு அதை ஒரு தட்டு தட்டினால் வானத்தில் பறக்கும் எனவும், இன்னொருமுறை தட்டினால் கீழே இறங்கும் எனவும் கூறினார். பண்டிதர் உருவில் முன்னர் வந்ததும் இப்போது குதிரை வியாபாரி உருவில் வந்ததும் சனி பகவானே என்பதை விக்கிரமாதித்தியனால் புரிந்து கொள்ள முடியவில்லை. விக்ரமாதித்தியன் அதை வாங்கியவுடன் அதில் ஏறி அமர்ந்து கொண்டு குதிரையை தட்டி விட அது வானத்தில் பார்க்கலாயிற்று. சற்று நேரம் பறந்தப் பின் அதை மீண்டும் தட்டி விட அதுவோ அவரை அரண்மனையில் இறக்கி விடாமல் எங்கோ ஒரு காட்டில் கொண்டு போய் வானத்தில் இருந்தே அவரை கீழே தள்ளி விட்டது. அது எந்த இடம் என்றுகூட விக்ரமாதித்தியனுக்குத் தெரியவில்லை. கீழே விழுந்ததில் உடம்பெல்லாம் நல்ல அடிபட்டு வலித்தது. சற்று நேரத்தில் அந்த வழியே வந்து கொண்டு இருந்த சில திருடர்கள் விழுந்து கிடந்த விக்ரமாதித்தியனை இன்னும் அடித்துப் போட்டு விட்டு அவரிடம் இருந்த அனைத்து நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு போய் விட்டார்கள். எப்படியோ அங்கிருந்து தப்பிப் போய் ஒரு நகரில் ஒருவர் வீட்டில் தங்கியபோது அந்த வீட்டில் இருந்தப் பெண்ணின் நகைகள் திருட்டுப் போய்விட்டன. அவர்களோ விக்ரமாதித்தியன் மீதே சந்தேகப்பட்டு அந்த ஊர் மன்னனிடம் முறையிட அவரும் தண்டனையாக அவரது கைகால்களை வெட்டி விட்டார். விய அனைத்தும் நடந்து கொண்டு இருந்தபோது  விக்ரமாதித்தியனுக்கு தன நினைவே இல்லை.


விக்கிரமாதித்தியனும் இப்படி சந்தித்து வந்த பல கஷ்டங்களுக்கும் இடையே எப்படியோ அங்கிருந்து கிளம்பிச் சென்று இன்னொருவரிடம் அடைக்கலமானார். அவருக்கு தான் வந்துள்ள இடம் உஜ்ஜயினிக்கு அருகில் உள்ள இடம் என்பது தெரியாது . அதே நேரத்தில்தான் அவரைப் பிடித்து இருந்த ஏழரை நாட்டு சனியும் விலகும் நேரம் வந்தது. ஒருநாள் அங்கு நடைபெற்ற ஒரு ஆலய விழாவில் ஏற்றப்பட்ட விளக்குகள் காற்றில் அணைந்து விட்டன. அப்போது விக்கிரமாதித்தன் வாயில் இருந்து சற்றும் தாமதிக்காமல் தீப ராக எனும் பாடல் வெளிவர அந்த விளக்குகள் தாமாகவே மீண்டும் எரியலாயின. முற்றிலும் மாறி இருந்த அவருடைய முகமும் தெளிவாயிற்று, அவருடைய அடையாளமும் புரியலாயிற்று. அப்போதுதான் அங்கிருந்தவர்கள் அவர் விக்கிரமாதித்தியனே என்பதை புரிந்து கொண்டு அந்நாள்வரை குதிரை மீது ஏரி வானத்தில் பறந்தவர் திடீர் எனக் காணாமல் போய் விட அவரைத் தேடி அலைந்து கொண்டு இருந்தவர்கள் அவரை அரண்மனைக்கு தூக்கிச் சென்றார்கள். அங்கு சென்றதும் மீண்டும் அதே பண்டிதர் சனி பகவானின் சக்தியை எடுத்துக் கூறி அவர் முன்னாள் தன சுய உருவில் பிரசன்னமானார். அதைக் கண்ட விக்கிரமாதித்தியனும் உடனடியாக சனி பகவானின் கால்களில் விழுந்து நமஸ்கரிக்க மீண்டும் அதே ராஜ தேஜஸ்ஸை விக்ரமாதித்தியன் அடைந்தார். அது முதல் அவர் சனி பகவானை தொடர்ந்து ஆராதித்து வந்ததும் இல்லாமல் சனி பகவானுக்கும் அங்காங்கே ஆலயங்களை நிறுவி வழிபட்டார். அதில் ஒன்றே திரிவேணி சங்கத்தில் உள்ள சனீஸ்வரர் ஆலயமும் ஆகும்.


சன்னதியில் வினாயகர், ஏழரை நாட்டு சனி தேவர், 

மற்றும் இரண்டரை ஆண்டு சனி தேவர்

Friday 26 May 2023

காமாக்ஷி அம்பாள் போற்றி!

 காமாக்ஷி அம்பாள் போற்றி!


ஓம் ஸ்ரீ காஞ்சி நகர்வாழ் கன்னிகை போற்றி

ஓம் காமகோடி பீடபத்மத் துறைந்தனை போற்றி

ஓம் கைலாஸ வாஸிநீ ஸ்ரீகாமாக்ஷீ போற்றி

ஓம் காருண்ய ரூபிணீ ஸ்ரீகாயத்ரீ போற்றி

ஓம் ஸ்ரீகாமபீடந்தனில் ஒளிர்ந்தனை போற்றி

ஓம் ஸ்ரீகாயத்ரீ மந்திரத் திருந்தனை போற்றி

ஓம் காருண்ய கிருபா கடாக்ஷிணீ போற்றி

ஓம் காயத்ரீ மண்டபத்து அமர்ந்தனை போற்றி

ஓம் ஸ்ரீகாமகோடி காமாக்ஷி காயத்ரீ போற்றி

ஓம் மாவடியின் கீழமர்ந்த மங்கையே போற்றி


ஓம் ஸ்ரீகாமாக்ஷி முக்கண்ணி ஸ்ரீதேவி போற்றி

ஓம் ஸ்ரீகாயத்ரீ ஸாவித்ரீ ஸரஸ்வதீ போற்றி

ஓம் கரும்பு வில் கைக்கொண்ட கன்யகை போற்றி

ஓம் கருணை பொழியும் கண்ணுடையினை போற்றி

ஓம் நவரத்ன சிம்மபீடத் தமர்ந்தனை போற்றி

ஓம் ரக்த பத்மாசனத் திருந்தனை போற்றி

ஓம் கோடி காமமருளும் காமகோடி போற்றி

ஓம் பகழி பாச அங்குசமும் கொண்டனை போற்றி

ஓம் வாணியாய் வந்தருள் வாமாக்ஷி போற்றி

ஓம் ஸ்ரீகாமேசுவர ப்ரிய காமேசுவரீ போற்றி


ஓம் ஓம் கடவூருறையும் கமலை போற்றி

ஓம் அருளது நல்கும் அம்பிகை போற்றி

ஓம் குலமலையரசன் கொடியே போற்றி

ஓம் ஸர்வ ஸங்கீத ரஸிகையே போற்றி

ஓம் பரசிவனிடத் தொளிர் விளக்கே ! போற்றி

ஓம் அவனியின் படைப்பின் ஆதியே ! போற்றி

ஓம் பிந்துஸ்தானத்தொளிர் நன்மணியே! போற்றி

ஓம் ஆதி அந்தமிலாதொரு அன்னையே! போற்றி

ஓம் இன்பம் நல்கிடும் ஈசுவரீ போற்றி

ஓம் சங்க்க சக்ர கதா தாரிணீ போற்றி


ஓம் பரிசு சூல பினாக தாரிணீ போற்றி

ஓம் பூர்ணிமை சந்திர நிவாஸிநீ போற்றி

ஓம் பூரண கிருபா கடாக்ஷிணீ போற்றி

ஓம் பூர்ணிமை வாஸிநீ பூர்ணீ போற்றி

ஓம் புவனம் ஆளும் புவநேசுவரீ போற்றி

ஓம் சதகோடி மன்மத சுந்தரீ போற்றி

ஓம் ஓங்கார ரூபத்துள் விளங்கினை போற்றி

ஓம் கருணையருளும் கண்மணி போற்றி

ஓம் அட்டமூர்த்தங்கள் தொழும் அன்னையே போற்றி

ஓம் ஞானியர் மனக்குகை அடைந்தனை போற்றி


ஓம் திருமால் இதயம் சேர்ந்தனை போற்றி

ஓம் ஸ்ரீசக்கர நடுவண் ஒளிர்ந்தனை போற்றி

ஓம் மல்லிகை மலரொத்த புன்முறுவலோய் போற்றி

ஓம் பஞ்சாக்ஷர பீடத்து விளங்கினை போற்றி

ஓம் இதழாயிர பத்மத்து அமர்ந்தனை போற்றி

ஓம் நவரத்னமணி த்வீபத் தொளிர்ந்தனை போற்றி

ஓம் திருக்கையில் சூலம் கொண்டனை போற்றி

ஓம் பக்த ப்ரிய பரமேசுவரீ போற்றி

ஓம் விந்தியாசல நிவாஸிநீ பார்வதீ போற்றி

ஓம் அருள்புரி அன்னை ஆனந்தீ போற்றி


ஓம் அட்ட சித்தியருள் காமாக்ஷீ போற்றி

ஓம் மனக்குகையினில் உறை மாதங்கீ போற்றி

ஓம் இதயக் கோயிலிலொளிர் விளக்கே போற்றி

ஓம் உவமையிலாத்தாள் உடையினை போற்றி

ஓம் ஸத் சித் ஆனந்த வடிவே போற்றி

ஓம் பஞ்ச பூத காரணீ பஞ்சாக்ஷரீ போற்றி

ஓம் எண்ணிய எண்ணியாங்கு அருள்வோய் போற்றி

ஓம் ஸர்வ மங்கள சக்தி சுமங்கலை போற்றி

ஓம் கௌரீ காமாக்ஷீ காயத்ரீ போற்றி

ஓம் ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸ்ரீஸரஸ்வதீ போற்றி


ஓம் வீரீ அமரீ வேதாளி போற்றி

ஓம் நவமணி கிரீடமும் பூண்டனை போற்றி

ஓம் நலம் நல்கிடும் நாயகீ போற்றி

ஓம் பயம் ஒழிக்கும் பாலையே போற்றி

ஓம் முக்கண்ணுடையோய் முக்கண்ணீ போற்றி

ஓம் நிரந்தரி சுதந்தரீ துரந்தரி போற்றி

ஓம் ரூப ரஸ கந்த ரூபேசுவரீ போற்றி

ஓம் பிரம்ம விஷ்ணு சிவ ஆதீசுவரீ போற்றி

ஓம் பிராஹ்மீ மகேசுவரீ கௌமாரீ போற்றி

ஓம் வைஷ்ணவீ வாராஹீ வாமாக்ஷீ போற்றி


ஓம் இந்த்ராணீ ஸ்ரீ சாமுண்டா சிவதூதீ போற்றி

ஓம் தேவீ பரமேசுவரீ ஸ்ரீலலிதையே போற்றி

ஓம் வரமது அருளிடும் வாராஹீ போற்றி

ஓம் மாசற்ற அன்னையே அம்பிகை போற்றி

ஓம் ஸர்வ பாப விநாசனீ போற்றி

ஓம் ஸர்வ துஷ்ட ஸம்ஹரிணீ போற்றி

ஓம் பத்மாசனத் தமர்ந் தருள் புரிந்தனை போற்றி

ஓம் ஸ்ரீகாமேசுவர வாமாக்ஷீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி

ஓம் ஸர்வேசுவரீ ஸர்வ ரூபிணீ போற்றி

ஓம் ஸர்வா லங்காரப்ரிய ஸ்ரீஸரஸ்வதீ போற்றி


ஓம் மதுகைடப மஹிஷாசுர மர்த்தனீ போற்றி

ஓம் சும்ப நிசும்ப ஸம்ஹார சுந்தரீ போற்றி

ஓம் சண்ட முண்ட ஸம்ஹார சாமுண்டீ போற்றி

ஓம் சரத்காலத் தொளிர் நிலவொளி போற்றி

ஓம் அமரர்கள் போற்றும் அமலை போற்றி

ஓம் விண்ணவர் விரும்பும் விமலை போற்றி

ஓம் மண்ணவர் மகிழும் சுமங்களை போற்றி

ஓம் பார்வதீ உமா மகேசுவரீ போற்றி

ஓம் அன்பர்கள் மனத்தமர் அன்னமே போற்றி

ஓம் அகிலம் ஈன்றதோர் அம்மையே! போற்றி


ஓம் பூவுலக சிருஷ்டிக் காரணீ போற்றி

ஓம் இரத்தின மாலை பூண்டனை போற்றி

ஓம் பக்தர்கள் பற்றும் பற்றே போற்றி

ஓம் இதய வனத்தில்வரு குயில் போற்றி

ஓம் இதயம் குளிர அருள்வோய் போற்றி

ஓம் அறுபத்து நான்காயிரப் பீடரசே!! போற்றி

ஓம் அக்ஷர ரூபிணீ அம்பிகை போற்றி

ஓம் வானவர் வாழ்த்தும் வடிவே போற்றி

ஓம் உலகோர் வாழ்த்தும் உமையே போற்றி

ஓம் சந்திர மண்டல கமலத் தொழுகுதேன் போற்றி


ஓம் சந்திர நிவாஸினீ சாந்தினி போற்றி

ஓம் பஞ்சதசாக்ஷரீ ஸ்ரீபார்வதீ போற்றி

ஓம் தேகதேவாலயத் துறைந்தனை போற்றி

ஓம் தேன் பெருகும் மலரடைந்தனை போற்றி

ஓம் ஸரஸ்வதீ லெக்ஷ்மீ கிங்கரீ போற்றி

ஓம் பஞ்சப்ரேதரசனத் தமர்ந்தனை போற்றி

ஓம் பரமானந்த சிவ பார்வதீ போற்றி

ஓம் பார்வதி சங்கரீ சக்தியே போற்றி

ஓம் சிவை முக்கண்ணி ஸ்ரீதேவீ போற்றி

ஓம் மாணிக்கக் கடகம் பூண்டனை போற்றி


ஓம் சோடசாக்ஷரீ மாமந்திரத் திருந்தனை போற்றி

ஓம் யௌவன மாங்கல்ய சுமங்கலை போற்றி

ஓம் ஸர்வலோக பயங்கரீ சிவையே போற்றி

ஓம் பிரகாச பீடத்து அமர்ந்தனை போற்றி

ஓம் சந்திரசூடாமணி கிரீடம் பூண்டனை போற்றி

ஓம் ஸ்ரீமேருசுக்கரத் துறைந்தனை போற்றி

ஓம் சரண கமலம் கொண்ட கமலை போற்றி

ஓம் கசல கலா ரூபிணீ ஸ்ரீமாத்ருகா போற்றி

ஓம் பிரபஞ்ச ரூபிணீ ஸ்ரீகாயத்ரீ போற்றி

ஓம் பாலை யுவதி விருத்தையே போற்றி


ஓம் பக்தானுக்ரஹ ஸ்ரீபராசக்தியே போற்றி

ஓம் திரிபுரமெரித்த திருபுராந்தகீ போற்றி

ஓம் பரசிவமிடப் பாகம் கொண்டனை போற்றி

ஓம் காலனைக் கொன்ற காளிகை போற்றி

ஓம் திருக்கையில் வெற்றிவேல் கொண்டனை போற்றி

ஓம் சுந்தர வெள்ளச் சுதந்தரீ போற்றி

ஓம் ஸ்ரீகாளீ கராளி துர்க்கை போற்றி

ஓம் நீலோத்பல மலர் தரித்தனை போற்றி

ஓம் நீடூழி ஆளும் நிலமகள் போற்றி

ஓம் திருஆலங்காடு சிவத்தை எதிர்த்தனை போற்றி


ஓம் அமிழ்த மயமான அன்னையே போற்றி

ஓம் சிம்ம வாஹனம் கொண்ட சிவையே போற்றி

ஓம் பிறையினைச் சிரமேற் கொண்டனை போற்றி

ஓம் பிறங்கு மோக்ஷõமிர்தப் பெருக்கே! போற்றி

ஓம் பிரம்மம் போற்றும் பிராஹ்மீ போற்றி

ஓம் சிவமுடனிருக்கும் செல்வியே போற்றி

ஓம் முப்பத்து முக்கோடியின் முதலாதியே போற்றி

ஓம் இதய வானத்து நிலவொளி போற்றி

ஓம் கதம்ப வனத்தமர் கலியாணீ போற்றி

ஓம் பயங்கர உருக்கொண்ட ஸ்ரீதுர்க்கை போற்றி


ஓம் கவிகள் கருத்தினிற் கலந்தனை போற்றி

ஓம் கருணா நிதியே ஸ்ரீ காயத்ரீ போற்றி

ஓம் கஷ்ட நிவாரணக் காரணீ போற்றி

ஓம் வேத விருக்ஷத்தினி லொளிர்ந்தனை போற்றி

ஓம் உபநிடத மலரின் மணமே போற்றி

ஓம் ஞானக் கனியின் சுவையே போற்றி

ஓம் மோக்ஷ ஸாம்ராஜ்யத் தனி அரசியே போற்றி

ஓம் பல்லோர் புகழும் பரிமளை போற்றி

ஓம் பூமத்திய ஸ்தானமும் அடைந்தனை போற்றி

ஓம் ஆகாய பீட ந்தனிலு மமர்ந்தனை போற்றி


ஓம் ஸ்ரீ காமகோடி ஆதி பீடக் காரணி போற்றி

ஓம் காமனையும் வென்ற கடாக்ஷணி போற்றி

ஓம் ஸ்ரீசக்கர நிவாஸநீ ஸ்ரீ காமாக்ஷி போற்றி

ஓம் உலகெலா முணர்ந் தோதுவோய் போற்றி

ஓம் உவமை சொலா உரு வுடையினை போற்றி

ஓம் பிரம்மானந்த வல்லி பிராம்மணீ போற்றி

ஓம் வீணாவாத்ய ப்ரிய பரமேசுவரீ போற்றி

ஓம் ஸ்ரீஅகில அண்டேசுவரீ அம்மையே! போற்றி

ஓம் வெள்ளயங் கிரிதனி லமர்ந்தனை போற்றி

ஓம் பரசிவ மனத்தைக் கவர்ந்தனை போற்றி


ஓம் ஸ்ரீகைலாச நாதனுட னுறைந்தனை போற்றி

ஓம் பக்தர்க் கருள்புரி பகவதீ போற்றி

ஓம் பூர்ண சந்திரமுக முடையினை போற்றி

ஓம் பார்தனி லொளிரும் பார்வதீ போற்றி

ஓம் வடமொழி எழுத்தின் வடிவினை போற்றி

ஓம் முக்கண்ணுடைய மூகாம்பிகை போற்றி

ஓம் இறந்ததோர் சிசுவை எழுப்பினை போற்றி

ஓம் வேதாகம வனத்துறை வேதாந்தி போற்றி

ஓம் அருமைச் செல்வியே ஆனந்தி போற்றி

ஓம் மண்டலம் மகிழும் மகேசுவரீ போற்றி


ஓம் புண்ணிய ரூபிணீ புவநேசுவரீ போற்றி

ஓம் புஷ்ப விமானந்தனி லமர்ந்தனை போற்றி

ஓம் பராசக்தி பீடத் தொளிர்ந்தனை போற்றி

ஓம் மனக்கண் முன் ஒளிர் நன் மதியே போற்றி

ஓம் மாயைத் திரையினை விலக்கினை போற்றி

ஓம் ஆசையை அகற்றிடும் அன்னையே போற்றி

ஓம் அன்பை அருளும் அம்பிகை போற்றி

ஓம் ஸ்ரீசண்டிகே என் இதயத் தமர்வோய் போற்றி

ஓம் விண்மீன் நடுவண் விளங்கினை போற்றி

ஓம் விருத்தையே உமையே விமலையே போற்றி


ஓம் அறியாமை அகற்றும் அன்னை போற்றி

ஓம் ஞானக் கனி நல்கும் நாயகீ போற்றி

ஓம் ஞானவானத் தொளிர் நன்மதியே போற்றி

ஓம் அத்வைத ரூபிணீ அம்பிகை போற்றி

ஓம் ஸ்ரீசந்த்ர சேகரகுரு சங்கரீ போற்றி

ஓம் ஸ்ரீசந்த்ர மௌளீசுவர சக்தியே போற்றி

ஓம் என் இதயத் தமர்ந்த ஈசுவரீ போற்றி

ஓம் ஆனந்தம் அருளும் அம்பிகை போற்றி

ஓம் அருள்மழை பொழியு மகிலேசுவரீ போற்றி

ஓம் தாமரை நடுவண் தங்கினை போற்றி


ஓம் நந்தவன நடுவளர் நாயகீ போற்றி

ஓம் நாற்கரம் கொண்ட நவ துர்க்கை போற்றி

ஓம் பிரம்மசாரிணீ பிராஹ்மீ போற்றி

ஓம் அம்பிகை ரூபிணீ அபிராமீ போற்றி

ஓம் ஆட்கொண் டருளும் ஸ்ரீதேவீ போற்றி

ஓம் வருவோய் அமர்ந்தருள் புரிவோய் போற்றி

ஓம் அறுபத்து நாற் கலைகளினரும்பே போற்றி

ஓம் அறியாமை யகற்றுமுறு வாயினை போற்றி

ஓம் உபநிடத கமலத்தினி லோங்காரி! போற்றி

ஓம் பார்வதீ ஸ்ரீசக்ர லலிதேசுவரி! போற்றி


ஓம் மின்னற் கொடிபோல் விளங்கினை போற்றி

ஓம் அஷ்ட ஐசுவரியப் பிரதானிகை போற்றி

ஓம் வானவர் வாழ்த்தும் வாமாக்ஷீ போற்றி

ஓம் முனிவர்க் கருள்புரி மூகேசுவரீ போற்றி

ஓம் பூவுலகம் புகழ் பூதேசுவரீ போற்றி

ஓம் அகிலம் யாவுமாளும் அகிலேசுவரீ போற்றி

ஓம் குயிலினுமினிய குரலுடையினை போற்றி

ஓம் மலையரசன் மனம் மகிழ் மங்கை போற்றி

ஓம் மகிழ்வுடன் அருள்செயும் மாதா போற்றி

ஓம் நவரத்னபொன் ரதந்தனி லமர்ந்தனை போற்றி


ஓம் பிரகாச பீடத்திருந் தாண்டனை போற்றி

ஓம் துக்கம் துடைத்தருள் துர்க்கை போற்றி

ஓம் கஷ்டம் களைந்தருள் காயத்ரீ போற்றி

ஓம் நன்மை நல்கிடும் நாயகீ போற்றி

ஓம் பயம் போக்கிடும் பவாநீ போற்றி

ஓம் காக்ஷி கொடுத்தருள் காமாக்ஷீ போற்றி

ஓம் திருமகள் வணங்கிடும் தேவியே போற்றி

ஓம் பக்தர் பற்றுமோர் பரமேசீ போற்றி

ஓம் திருக்கயிலைமலை நடுவண் திகழ்ந்தனை போற்றி

ஓம் சிதக்னி குண்டத் தொளிர் தேவேசீ போற்றி


ஓம் புன்னகை புரியும் பூங்கொடி போற்றி

ஓம் மார்பினிற் பதக்கம் பூண்டனை போற்றி

ஓம் வேத ரூபிணீ வேதேசுவரீ போற்றி

ஓம் என் தாமரை இதயத் தமர்ந்தனை போற்றி

ஓம் சிருஷ்டியாதி காரணி பரசிவையே போற்றி

ஓம் கஸ்தூரி திலகக் காமாக்ஷீ போற்றி

ஓம் பரிமள ரூபிணீ பரிமளை போற்றி

ஓம் பில்வ தளந்தனி லடங்கினை போற்றி

ஓம் அறிவுக் கடலின் அருமணி போற்றி

ஓம் சிவே சரண்யே ஸ்ரீசாரதை போற்றி


ஓம் துஷ்ட விநாசக் காரணீ போற்றி

ஓம் மாயை உலகின் நன்மதியே! போற்றி

ஓம் மதியினை யிகழ் முக முடையினை போற்றி

ஓம் கன்னிகை ஸ்ரீசிவபரமேசீ போற்றி

ஓம் கயிலைச் சிவமுடன் கலந்தனை போற்றி

ஓம் மனவானத் தொளிர் நன்மதியே போற்றி

ஓம் அரும்பொன் மாலை யணிந்தனை போற்றி

ஓம் பிலாகாச ரூபிணி ஸ்ரீகாமாக்ஷி போற்றி

ஓம் காஞ்சீ ஆவரணத் தடங்கினை போற்றி

ஓம் காமகோடி சக்கரத் தொளிர்ந்தனை போற்றி


ஓம் காமகோடியாதிபீடக் காம கன்யகை போற்றி

ஓம் பதிரியில் ஜோதிப் பார்வதீ போற்றி

ஓம் துவாரகைக் காளீ துர்க்கை போற்றி

ஓம் ஜகந்நாதத் தொளிர் விமலை போற்றி

ஓம் சிருங்க கிரியினிலமர் சாரதே போற்றி

ஓம் கருத்தினி லடங்காக் காமேசுவரீ போற்றி

ஓம் உலக உண்மையின் உருவே போற்றி

ஓம் வடிவழகமைந்தோர் வாமேசுவரீ போற்றி

ஓம் தேவர்கள் தொழும் தேவேசுவரீ போற்றி

ஓம் இளந்தளிர் விரலுடை இமையே போற்றி


ஓம் சகல சௌபாக்கிய ஆதிகாரணீ போற்றி

ஓம் அகில மா மந்திரத் தடங்கினை போற்றி

ஓம் அன்பர்கள் நாடும் அபிராமி போற்றி

ஓம் சகல கலாவல்லி ஸ்ரீ காமாக்ஷி போற்றி

ஓம் தாமரை மலர்க்கரம் கொண்டனை போற்றி

ஓம் தாரகன் மார்பினைத் தகர்த்தனை போற்றி

ஓம் நான்மறையின் நடு நாயகம் போற்றி

ஓம் அஷ்டலெக்ஷிமியாளும் அரசாயினை போற்றி

ஓம் கோவை நிறமுடைக் கோமதி போற்றி

ஓம் பிறவியகற்றும் பிரம்ம மாயினை போற்றி


ஓம் வெண் தாமரையிலமர் வேதநாயகி போற்றி

ஓம் தென்முகனிடத்தினி லொளிர்ந்தனை போற்றி

ஓம் பீஜாட்சரத் தொளிர் பீஜாக்ஷரீ போற்றி

ஓம் சாவித்ரீ ஸர்வ மங்களை போற்றி

ஓம் சாந்தியி னிருப்பிடச் சங்கரீ போற்றி

ஓம் சண்டிகை ரூபிணீ ஸ்ரீசாமுண்டி போற்றி

ஓம் தாண்டவப்ரிய தாக்ஷõயணீ போற்றி

ஓம் மகேசன் மனம் மகிழ் மங்களை போற்றி

ஓம் சிவபாதியுடம்பினிற் பதிந்தனை போற்றி

ஓம் மல்லிகை முல்லையின் மணமே போற்றி


ஓம் தும்பை மலரின் தூய்மையே போற்றி

ஓம் தேனினுமினிய மொழியினை போற்றி

ஓம் தேவர்கள் தேடும் தேவேசுவரீ போற்றி

ஓம் அன்னத்தின் அருங்குண அம்மையே போற்றி

ஓம் மின்னலை யிகழ் முக முடையினை போற்றி

ஓம் கொண்டையிற் கொன்றை கொண்டனை போற்றி

ஓம் ஒட்டியாண பீடந்தனி லொளிர்ந்தனை போற்றி

ஓம் காமகோடி பீடத் தமர்ந்தரசியே போற்றி

ஓம் ஏகாம்பரனிடத் தொளிர் ஏகேசுவரீ போற்றி

ஓம் காமேசுவரீ கமலே ஸ்ரீகாமாக்ஷீ போற்றி


ஓம் மூலகாமாக்ஷியின் ஆதிமூலமே போற்றி

ஓம் தவம்புரியும் தவக் காமாக்ஷீ போற்றி

ஓம் குகையினிற் குலாவும் குமரியே போற்றி

ஓம் யந்திரத்தினி லமர் யதீசுவரீ போற்றி

ஓம் வெளிதனிலொளிரும் வேதாளி போற்றி

ஓம் காயத்ரீ மண்டபக் காமகோடி போற்றி

ஓம் தீபப்பிரகாசத் தொளிர்ந்தனை போற்றி

ஓம் சிந்தையடக் கருள்புரி சிவகாமீ போற்றி

ஓம் மூவுலகத்தின் தோற்ற முதலாயினை போற்றி

ஓம் தருமத்தினுருவாயு மமர்ந்தனை போற்றி


ஓம் அகில சக்தியினாதி சக்தியே போற்றி

ஓம் தாமரைத் தடாகத்தினிலவொளி போற்றி

ஓம் பாற்கடல் நடுமவர் பார்வதீ போற்றி

ஓம் காமனின் விற்புருவ முடையினை போற்றி

ஓம் வண்டினை யிகழ்விழி யுடையினை போற்றி

ஓம் செந்தாமரை மலரடி யுடையினை போற்றி

ஓம் இருபத்து நான்கக்ஷரத் தடங்கினை போற்றி

ஓம் ஸ்ரீகச்சியின் நடுவமர் ஸ்ரீகாமாக்ஷி போற்றி

ஓம் திருக்கயிலையமர் மனமகிழ் கமலை போற்றி

ஓம் பார்வதீ பகவதீ பைரவ ஓங்காரீ போற்றி


ஓம் காஞ்சீ ரத்ன பீடத் தமர்வோய் போற்றி

ஓம் அறியா வனமெரி அக்னியே! போற்றி

ஓம் ஆதரித் தாண்டருள் அம்பிகை போற்றி

ஓம் தாயென வந்தருள்செய் காமாக்ஷி போற்றி

ஓம் தாமதம் செயாதருள் புரிவாய் போற்றி

ஓம் அடியேனை யாண்டருள் அம்மையே போற்றி

ஓம் மூகனுக்கருள் செய்த மூகாம்பிகை போற்றி

ஓம் செஞ்சுடர் உடலுடைச் செல்வமே போற்றி

ஓம் செங்கனி வாயுடைச் செல்வியே போற்றி

ஓம் குஞ்சிதச் சரணம் கொண்டனை போற்றி


ஓம் ரஞ்சித வடிவம் உடையினை போற்றி

ஓம் பஞ்ச புஷ்ப பாணமும் தரித்தனை போற்றி

ஓம் குங்கும ஆடையும் கொண்டனை போற்றி

ஓம் கருணை வெள்ளக் காமாக்ஷி போற்றி

ஓம் சஞ்சல உலகினில் சாந்தினி போற்றி

ஓம் தங்க நிறத்துடன் நின்றனை போற்றி

ஓம் யோகநிலை கொண்ட காமாக்ஷி போற்றி

ஓம் வினைகளகற்றிட வரும் தாய் போற்றி

ஓம் நினைப்பவர் உளத்துறை காமாக்ஷி போற்றி

ஓம் கலைமகள் வாழ்த்தும் காமாக்ஷி போற்றி


ஓம் சிந்தையடக் கருள்புரி சிவேசுவரீ போற்றி

ஓம் தாஸனுக் கருள்புரி தாக்ஷõயணீ போற்றி

ஓம் ஸெளபாக்கிய சுந்தரீ காமரூபி போற்றி

ஓம் மதுரை மீனாக்ஷியாயொளிர் காமாக்ஷி போற்றி

ஓம் காசி விசாலாக்ஷியாயமர் காமாக்ஷி போற்றி

ஓம் மயிலைக் கற்பக மஹேசுவரீ போற்றி

ஓம் காயத்ரீயாயொளிர் கமலே காமாக்ஷி போற்றி

ஓம் வேகமாய் வந்தருள்பொழி காமாக்ஷி போற்றி

ஓம் மங்களம் நல்கிடும் மங்களை போற்றி

ஓம் அஞ்சேல் கூறிட வருதாய் போற்றி


ஓம் இன்ப வீட்டினை யருள்வோய் போற்றி

ஓம் இதயத் தாமரையிலமர்ந் தருள்வோய் போற்றி

ஓம் இதயத் தடாகத்தினி லன்னமே போற்றி

ஓம் வீணையின் நாதத்தை வென்றனை போற்றி

ஓம் இருளை நீக்கி அருள்வாய் போற்றி

ஓம் சங்கரன் மனதினில் கலந்தனை போற்றி

ஓம் உமேசனுக்குகந்ததோர் உமையே போற்றி

ஓம் கச்சியின் நடுவதி லமர்ந்தனை போற்றி

ஓம் ஊமையை அகற்றிய உத்தமி போற்றி

ஓம் இளம்பிறை சூடிய இமையே போற்றி


ஓம் மேரு பிந்துவினி லமர்ந்தனை போற்றி

ஓம் கயிலைக் கண்மணி காமாக்ஷி போற்றி

ஓம் உளத்தினொளியினி லொளிர்ந்தனை போற்றி

ஓம் அறியா இருளினை யகற்றினை போற்றி

ஓம் சக்தி பீட அரசே ஸ்ரீராஜேசுவரீ போற்றி

ஓம் மணிமண்ட பந்தனி லமர்ந்தனை போற்றி

ஓம் பாபங்கள் அகற்றிடும் பவாநீ போற்றி

ஓம் ஞானப் பாலூட்ட வருதாய் போற்றி

ஓம் உலக அன்னையே உமையே போற்றி

ஓம் அருவா யொளிரும் அன்னை போற்றி


ஓம் எளியேனுக் கருள்புரி காமாக்ஷி போற்றி

ஓம் காமேசுவர வாமாக்ஷீ காமாக்ஷீ போற்றி

ஓம் ஜயதேவீ ஜயேசுவரீ காமாக்ஷீ போற்றி

ஓம் சர்வேசுவரீ ஜகந் மோகினி போற்றி

ஓம் கயிலைச் சபை நடுவண் அமர்ந்தனை போற்றி

ஓம் இந்திரன் புகழும் இந்த்ராக்ஷி போற்றி

ஓம் கன்யா குமாரிக் கன்யகை போற்றி

ஓம் பத்மாசனத் தமர் பார்வதி போற்றி

ஓம் பஞ்சப்ரேத ஆசனத்தமர் பஞ்சாக்ஷரீ போற்றி

ஓம் உலகினில் ஒளிரும் சுடரொளியே போற்றி


ஓம் ஒப்பிலா உருவாயு மொளிர்ந்தனை போற்றி

ஓம் மனதிற் கிசைந்ததோர் மங்களை போற்றி

ஓம் ஸ்ரீ சண்டிகை வுருவா யருள்வோய் போற்றி

ஓம் அன்னத்தின் மேலமர் அம்பிகை போற்றி

ஓம் பக்தர்கள் மனமுள் பனிமதி போற்றி

ஓம் தீப ஜோதியினி லொளிர்ந்தனை போற்றி

ஓம் உருவா யொளிரும் உமையே போற்றி

ஓம் திருவா யொளிர் திரு புரேசுவரீ போற்றி

ஓம் அமுதா யினிபதா யருள்தாய் போற்றி

ஓம் ஞானக் கனியினில் கலந்தனை போற்றி


ஓம் உதய மதியிடத் தொளிர்ந்தனை போற்றி

ஓம் பிறப்பிலா மருந்ததை அருள்தாய் போற்றி

ஓம் விரைவினில் வந்தருள் புரிவோய் போற்றி

ஓம் உமையே விமலை கமலை போற்றி

ஓம் சடை நாதனிடத் தொளிர் சங்கரீ போற்றி

ஓம் வேதார்த்தமாகிய வேதேசுவரீ போற்றி

ஓம் புராணார்த்தமாகிய புராந்தகீ போற்றி

ஓம் நாரணீ காரணீ பரிபூரணீ போற்றி

ஓம் காமேசனிடத் தொளிர் காமாக்ஷீ போற்றி

ஓம் பூரணமாகியதோர் ஜோதியே போற்றி


ஓம் வேத உண்மையின் வடிவாயினை போற்றி

ஓம் காளீ மகேசுவரீ காமாக்ஷீ போற்றி

ஓம் கருணையோ டருள்புரி காயத்ரீ போற்றி

ஓம் பரம்பொருளுருவா யமர்ந்தனை போற்றி

ஓம் சதாசிவனிடத் தமர் சங்கரீ போற்றி

ஓம் சரணமடைந்தேன் சாரதே போற்றி

ஓம் சாகா வரமருள் சாம்பவீ போற்றி

ஓம் அஞ்சேலென் றருள்புரி அபிராமி போற்றி

ஓம் ஸ்ரீசதாசிவ பரப்ரும் மேசுவரீ போற்றி

ஓம் கையினிற் கடகம் பூண்டனை போற்றி


ஓம் தேவாதி தேவ தேவேசுவரீ போற்றி

ஓம் மும்மூர்த்திகள் தொழும் மூகாம்பிகை போற்றி

ஓம் ஆனந்த முக்தியருள் ஆனந்தி போற்றி

ஓம் யோக சமாதியினி லமர்ந்தனை போற்றி

ஓம் அண்ட மருளிய அன்னை போற்றி

ஓம் மண்டலமருளிய மங்களை போற்றி

ஓம் சராசர மருளிய சங்கரி போற்றி

ஓம் மாணிக்கப் பதக்க மணிந்தனை போற்றி

ஓம் உனதடி பணிந்தேன் உமையே போற்றி

ஓம் குருவாயும் வந்தருள் குண்டலினி போற்றி


ஓம் தீனதயாபரீ தீர காமாக்ஷீ போற்றி

ஓம் திரிபுர சுந்தரீ சிவ காமாக்ஷீ போற்றி

ஓம் பூரணீ யோகப் புராதனீ போற்றி

ஓம் சாந்த மகேசுவரீ சியாமளை போற்றி

ஓம் சங்கர நாயகீ சாந்தினி போற்றி

ஓம் சோக நிவாரணக் காரணீ போற்றி

ஓம் பஞ்ச தசாக்ஷர வித்யாப் பார்வதீ போற்றி

ஓம் எந்தன் முன் வந்தருள் புரிதாய் போற்றி

ஓம் பிந்து ஒளிக்குள் ஒளிர்சுடர் போற்றி

ஓம் சிந்தை மகிழ அருள்புரி சிவையே போற்றி


ஓம் சித்தர்கள் பணியும் சிவமணியே போற்றி


 

ஓம் பத்தர்தம் மனத்தமர் பரமேசி போற்றி

ஓம் செம்பவளக் கொடியே! என் செல்வமே போற்றி

ஓம் சங்கடந் தீர்த்தருள் சங்கரீ போற்றி

ஓம் ஆதி பராசக்தி அம்பிகை போற்றி

ஓம் பாசமகற்றிடும் பரம குருவாயினை போற்றி

ஓம் விந்தியாசலத்தமர் வீரேசுவரீ போற்றி

ஓம் பய இருளகற்றிடும் பனிமதி போற்றி

ஓம் மூள் பிறவி தீர்க்கும் மூகாம்பிகை போற்றி

ஓம் கலைகளின் முதலே ஸ்ரீகாமாக்ஷீ போற்றி


ஓம் அன்பர்களுக் கெளியதோர் அன்னை போற்றி

ஓம் இன்ப நிலையருளும் இமையே போற்றி

ஓம் வேதாந்த வீட்டை விளக்கினை போற்றி

ஓம் காமாரி தேடும் காமாக்ஷீ போற்றி

ஓம் உள்ளே உணர அருள்வோய் போற்றி

ஓம் பஞ்சப்ரம்ம ரூபிணீ பார்வதி போற்றி

ஓம் சக்தி பீஜாக்ஷரீ சங்கரீ போற்றி

ஓம் மூகன் புகழ் கடாக்ஷீ காமாக்ஷீ போற்றி

ஓம் பிந்து பீடவாஸிநீ பிராம்மணீ போற்றி

ஓம் சம்பு மாதவன் மகிழ் சாம்பவீ போற்றி


ஓம் அம்பிகை கோமதி அபிராமி போற்றி


ஓம் மதுரஸம்பாக்ஷிணி மங்களை போற்றி

ஓம் மதுகைடப ஸம்ஹார மகேசுவரீ போற்றி

ஓம் வேதத்துத் தியானத் தொளிர்ந்தனை போற்றி

ஓம் செழும் பசும் பொன்னே ! செல்வமே ! போற்றி

ஓம் கற்பக வல்லி ஸ்ரீ காயத்ரீ போற்றி

ஓம் மீனாக்ஷீ காமாக்ஷீ விசாலாக்ஷீ போற்றி

ஓம் மஹிஷாஸுர மர்த்தன மங்கை போற்றி

ஓம் எண்பத்து பீடத் தொளிர் ஏகேசுவரி போற்றி

ஓம் அருள்செய வருதாய் காமாக்ஷீ போற்றி


ஓம் தீர்த்தேசுவரீ தீனதயாபரீ காமாக்ஷீ போற்றி

ஓம் மந்த்ரேசுவரீ மஹேசுவரீ காமாக்ஷீ போற்றி

ஓம் தந்த்ரேசுவரீ தாக்ஷõயணீ காமாக்ஷீ போற்றி

ஓம் யந்த்ரேசுவரீ யதீசுவரி காமாக்ஷி போற்றி

ஓம் சக்த்யேசுவரீ சங்கரீ காமாக்ஷி போற்றி

ஓம் பீடேசுவரீ பீஜாக்ஷரீ காமாக்ஷீ போற்றி

ஓம் தத்வேசுவரீ தர்மேசுவரீ காமாக்ஷி போற்றி

ஓம் ஸப்தேசுவரீ ஸரஸ்வதீ காமாக்ஷி போற்றி

ஓம் ஏகேசுவரீ ஏகாக்ஷரீ காமாக்ஷி போற்றி

ஓம் நாதேசுவரீ நாராயணீ காமாக்ஷி போற்றி