Tuesday 28 June 2022

அருள்மிகு மகா முத்துமாரியம்மன் ஆலயம், 52 வில்லியநல்லுர், குத்தாலம், சேண்டிருப்பு கிராமம். மயிலாடுதுறை வட்டம்,

 கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்


தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், குத்தாலம் அருகில் உள்ள சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வழங்கும் அருள்மிகு மகா முத்துமாரியம்மன்


தல வரலாற்றில் தனிபுதுமை


1986ம் வருடம் என் வயலில் மிளகாய் வைத்து பயிர் செய்து வந்தேன். தினம் 50 பெண்கள் வேலை செய்வார்கள். அந்த வயலில் அமைந்திருந்த ஒர் வேப்பமரமும் அதனடியில் ஒர் புற்றும் இருந்தது. அவ்விடம் வரும் பெண்களில் யாருக்காவது ஒருவர் மேல் சாமி வந்து ஆடி அந்த இடத்தில் கோயில் கட்ட சொல்வார்கள். இது தினமும் நடக்கும் வாடிக்கையாக இருந்தது.


ஆரம்ப காலத்தில் நான் கடவுளை நம்ப மறுத்தவன். 1976-ம் ஆண்டு தஞ்சையில் உள்ள திரு. பேச்சிமுத்து சுவாமி அவர்களிடம் அருள்வாக்கு கேட்க எனது தம்பி திரு. தட்சிணமுர்த்தி என்னை அழைத்துச் சென்றார். அவர் கூறும் போது ” உன்னுடைய வயலில் ஒர் வேப்பமரமும் அதனடியில் புற்றும் இருக்கிறது. அந்த இடத்தில் ஓர் ஆலயம் கட்ட கேட்டு அம்பாள் வந்திருப்பதாக கூறி அவளுக்கு ஒர் கல் நிறுத்தி வணங்கி வந்தால் வேறு தெய்வம் இல்லை” என்று கூறி இருந்தார்.


ஒர் முறை கைரேகை பார்ப்பவர் ” நீங்கள் எவ்வளவுதான் சாமியை பற்றி மறுத்து பேசினாலும் நீங்களே ஒரு கும்பாபிசேகம் செய்வீர்கள்” என்று அடித்துக் கூறினார். இன்று ஒர் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பால்குடம் அன்று பங்கு பெறுகின்றனர். அம்பாள் இயற்கையாக - சுயம்புவாக தேன்றிய இடம் இது. - ஆடியார் சண்முகனார்


சுசிலா என்கிற ஹரிஐனப் பெண்ணின் ஆவேசம்


ஓர் நாள் படிக்காத அந்த அம்மாள் சாமி ஆடி ”அந்த வருடம் அவனுக்கு மிளகாய் விற்பனையில் அதிக வருமானம் கொடுத்தேன், நான் இப்படி அள்ளியள்ளி கொடுக்கும் போது எனக்கு ஒரு விளக்கேற்ற பயப்படுகிறான் என்று சாமி ஆடினாள்.


இதை கேள்விப்பட்ட நான் அந்த வேப்பமரம் நடு வயலில் இருப்பதால் யாரும் அவ்விடம் வந்து வணங்க மாட்டார்கள் என்று கருதி வேண்டுமானால் சாலையோரம் சின்ன கோயிலாகக் கட்டி விட்டல் போவோராவது சாமி கும்பிடுவார்கள் என்று வெளியல் ஒருவரிடம் கூறினேன். மறுநாள் அந்த அம்மாள் ”என்னை கிழக்கே கொண்டு போகலாமா, மேற்கே கொண்டு போகலாமா என்று வயல்காரன் நினைக்கிறான்.


எனக்கு இந்த இடம்தான் வேண்டும் என்று அந்த இடத்தைச் சுற்றி ஒடி வந்ததாக கூறினார்கள். பிறகு 200 கல்லை கொண்டு விளக்கு ஏற்ற சிறிய மண்டபமாக கட்டயோசித்தேன். மறுநாள் அந்த பெண் சாமியாடி ”நான் அவனுக்கு லட்சம் லட்சமாக வினளவிக்கிறேன், எனக்கு கோயில் கட்டி அபிசேகம் செய்தால் பால் பொங்குவது போல் குடும்பம் சுபிட்சத்தால் பொங்கும்” என்று கூறினார். கோவில் கட்ட வசூலுக்கு செல்ல வெட்கப்பட்டு என் பொருளாதாரத்துக்கேற்ப 5 அடிக்கு, 5 அடி என்ற கணக்கில் ஓர் சிறிய கோயிலாக கட்டினேன்.


மகன் உருவில் மகமாயி ஆடினாள்


கோயில் திருப்பணியில் ஓர் கொத்தனார், ஓர் சித்தாள், நான் ஆக மூன்று பேர் மட்டும் கட்டுவோம். என் மகன் மகாலிங்கம்17 வயதுடையவன்.ஒரு நாள் எனக்கு காசு கொண்டு வந்து கொடுத்துவிட்டு கோயில் கட்டுமிடத்தில் நின்று கொண்டிருந்தவன் திடிரென்று சாமி ஆடினான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை! ”நான் தஞ்சாவூர் மகமாயி 20 வருடமாக இந்த புற்றை ஸ்தாபிதமாக்கிக்கொண்டு இருந்து வருகிறேன்.

நான் வெளிவர வேண்டிய நேரம் வந்து விட்டது. நானே இந்த திருக்கோயிலை உருவாக்கி மக்களுடைய குறைகளை போக்குவேன்.” என்று கூறி பாம்பு போல் நெளிந்து நெளிந்து சுமார் 2 மணி நேரம் ஆடினான். ஆனால், அவனுடைய பழக்கத்திற்கும் அன்று ஆடும் போது பேசும் பேச்சுக்கும் சம்மந்தா சம்மந்தம் இல்லமால்ஓர் ஞான விளக்கமாகவே தேன்றியது. உண்மையில் அங்கு கூடும் கூட்டத்தில் சமபாகம் வேடிக்கை பார்க்க கூடிய கூட்டம்தான்! நான் உள்பட!


அம்பாளின் சக்தி வெளிபடுதல்


ஓரு நாள் பையன் மீது சாமி ஆவாகனம் ஆகி ஆடிக்கொண்டு இருந்த போது சேண்டிருப்பு தெருவைச் சேர்ந்த சிலர் சந்துரு என்பவரை கேள்வி கேட்க சொல்லி அழைத்து வந்திருந்தார்கள். அவர் கிண்டலாக சில கேள்விகளை கேட்டபொழுது என்னிடம் யாரும் விளையாடாதிர்கள், தவறு செய்தால் முறித்துவிடுவேன் என்று எச்சரித்தது.


எல்லோரும் இதை கேட்டு சிரித்து விட்டார்கள். ஆனால் சிரித்து ஓய்வதற்குள் கேள்வி கேட்டவர் அடிப்பட்ட பாம்பு துடிப்பது போல் துடித்து ஒரு முறுக்கு முறுக்கி மேலெழுந்து பக்கத்திலிருந்த பள்ளத்தில் விழுந்து பேச்சுமுச்சற்று கிடந்தார். இதை கண்ட அனைவரும் அந்த இடத்தை விட்டு ஒடி விட் டோம். பிறகு எங்களில் ஓருவரை கூப்பிட்டு அவன் நெற்றியில் விபூதி இடுமாறு விபூதி கொடுத்தது. இட்டவுடன் அவன் தூங்கி எழுந்தவன் போன்று உடம்பை தடவிக் கொண்டு எழுந்து வந்தான்.


அன்று முதல் இன்று வரை யாராவது கோயில் சாமியை கிண்டல் செய்தால் அவர்கள் முறிக்கப்படுவது உலகில் எங்கும் காணாத நிகழ்ச்சி. பேய்பிடித்தவர்கள் இங்கு வந்தவுடன் தானாக ஆடி விபரம் கூறுவதும், விபூதி கொடுத்தவுடன் அவர்கள் அதன் பிடியில் இருந்து விடுபடுவதும் பத்து நிமிடங்களில் முடிந்து விடும். அம்பாள் தன் விபூதியாலேயே எத்தனையே பேர்களை பில்லி சூன்யங்களில் இருந்து விடுபட வைக்கிறாள். இதற்காக எந்த கட்டணமோ, அன்பளிப்போ வாங்கக்கூடாது என்பது அம்பாளின் கண்டிப்பான உத்தரவு!


அம்பாள் அடியாருக்கு காட்சியளித்தல்


ஒரு நாள் இரவு என் மகனுக்கு உடல் நலமில்லாமல் கண்கள் நிலையாக நின்று இறந்து வி்ட்டவன் போல் தோன்றினான். வீட்டிலிருந்த அனைவரும் அழுதுக் கொண்டிருந்தார்கள்.


நான் மிக்க வேதனையுடன் எங்கள் வீட்டில் ஸ்தாபிதம் செய்வதாற்காக வைத்திருந்த அம்மன் சிலையை கட்டிப் பிடித்து கொண்டு வாயில் வந்ததையெல்லாம் சொல்லி வைதேன்! உடனே எனக்கு அம்பாளின் சுய உருவம் தெரிந்தது ” நான் உன் மகனை காப்பாற்றித் தருகிறேன் நீ நிம்மதியாக தூங்கு” என்று கூறியது.

சிறிது நேரத்தில் அவன் உடம்பில் அசைவு தெரிந்தது. ஆடியார் அருள் பெற்ற அற்புதம். மறுநாள் முதல் நான் ஏதோ ஒரு சக்தியால் கட்டுண்டவன் போல் இருந்தேன். சிறிது நாள் சென்றவுடன் அருள்வாக்கு சொல்லும் அனுக்கிரகத்தைப் பெற்றேன்! இப்பொழுதும் தேவைப்பட்டால் யாருக்காவது சொல்வதுண்டு. அம்பாளின் விளக்கப்படி ” தெய்வம் அருபமானது, அது யாரை கருவியாகப் பயன்படுத்த வேண்டுமோ அவனை பயன்படுத்தும். அவன் இறந்துவிட்டால் அவன் உடல் அழிந்துவிடும். ஆத்மா வேறு இடத்தில் ஐக்கியமாகி விடும். அவன் படத்தை மாட்டி வழிப்பட்டால் எந்தப் பலனும் கிடையாது. ” என்று விளக்கியது.


காவிரியில் விழுந்த தாலி


குத்தாலம் சர்மான்ய தெருவைச் சேர்ந்த முத்துராமன் என்பவரின் தாயார் காவிரியில் குளிக்கும்போது மாங்கல்யம் தண்ணீரில் விழுந்து விட்டது. அவர்கள் கோயிலில் வந்து அம்பாளிடம் கேட்டப்பொழுது அவள் குளித்த இடத்திலிருந்து நான்கடி கிழக்கே கிடக்கிறது என்றாள். அவர்களும் அதன் படி சென்று பார்க்கும் பொழுது முதல் கை மணலிலேயே மாங்கல்யம் கிடைத்தது.


அம்பாள் வாழ்த்திய அதிசய திருமணம்


கடலூர் வெங்கடகப்பன் என்றவர் வீட்டுகல்யாணம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. அவர்கள் கல்யாணத்துக்கு இரண்டு வாரம் முன்பாக மாங்கல்யம் கொண்டு வந்து அம்மனுக்கு சாத்தி அர்ச்சனை செய்து அம்மாவே வந்து கல்யாணத்தை வாழ்த்தி அருள வேண்டுமென்று வேண்டினார்கள்.


அம்மாவும் வருவதாக வாக்களித்தாள் வருவதனால் எந்த உருவில் வருவாய் என்று கேட்க, நீ ஏற்றுக் கொள்வதனால் எச்சிலை தின்னும் கன்றாக வருவேன் என்றாள். அவர்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்வோம் என்று வாக்களித்ததோடு, எல்லாக்கன்றும் இலையை தின்னும் போது, நீதான் அந்த கன்று என்று எப்படி நாங்கள் தெரிந்துக் கொள்ள முடியும் என்றனர். அதற்கு மணப்பந்தல் வரை வந்து ஆசிர்வதிப்பதாக கூறியனுப்பியது.


சொல்லியபடி அன்று காலை திருமண நேரத்தில் ஓரு கன்று வாசலில் வந்து நின்றது. அவர்கள் வாசல் கதவை திறந்து விட்டு அமைதியாக கவனித்தனர். உட னே அந்த கன்று உள்ளே வந்து நேராக மணவரை வரை சென்று நின்றது. அவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு லட்டு, பழம் கெடுத்து கற்பூறம் செய்தனர், அதன் பிறகு அது தானாக திரும்பிச்சென்று விட்டது.


காளிதாஸின் அருள் மொழிக்கு விளக்கம்.


காளிதாஸ் என்பவர், ஒர் பொண்ணுக்கு கணவனை பிரிந்து வாழும் நீ இன்னும் ஒரு வருடத்தில் கணவனுடன் சேர்ந்து வாழ்வாய் என்று அருள் கூறினார். ஆனால் ஒரு வருடம் ஆகியும் கணவனுடன் சேர்ந்து வாழ முடியவில்லை. அதனால் அவள் நான் சொல்படி நடக்கவில்லை என்று வருத்தப்படுகிறாள்.

அம்மா இதற்கு காரணம் என்ன என்று கேட்க, ராமன் கால்பட்டுத்தான் விமோசனம் கிடைக்குமென்று இருக்க, அந்தக்கல்லைக் கொண்டு ராமன் காலடியில் போட்டு ராமா இதில் ஏறி நில், உட னே விமோசனம் கிடைக்க வேண்டுமென்றால் முடியாது. ஆது போல் நேரம் வரும் போது நடக்கும். இருவர் மனமும் ஓத்துவரும் சூழ்நிலையை உருவாக்கி நானே அனுப்பிவைப்பேனென்றாள்.


திடீரென்று ஒரு நாள், யார் அந்தப் பெண்னை அடித்து துன்புறுத்தி தாயார் வீட்டுக்கு துரத்தி விட்டாளோ, அதே நாத்தனார் உன் குடும்பத்தை நீயே நடத்து, தனியாக குடும்பம் நடத்த ஏற்பாடு செய்துத் தருகிறேன் என்று கடிதம் போட்டு, இப்பொழுது அந்தப் பெண்காயத்திரி என்பவள் கொடுங்கையூரில் தன் கணவனுடன் மனமொன்றி வசித்து வருகிறாள்.


கும்பகோணம் நீலகண்டன்என்பவர் மனைவி, கணவனை விட்டு பிரிந்து சுமார் 14வருடம் வாழ்ந்த பின் அம்பளை வேண்டியதால் உடனே சேர்ந்து வாழும் அற்புதத்தை அம்மா செய்தாள்.


ஊமை பேசிய அதிசியம்


குத்தாலத்திற்கு அருகில் உள்ள ராஜகோபாலபுரத்தில் உள்ள ஒரு அம்மையார் கோவிலுக்கு வந்து தன்னுடைய 8 வயது பெண் பிறவியிலிருந்து ஊமையாய் இருக்கிறாள். அவளுக்கு பேசும் சக்தி வரவேண்டும் என்று கண்ணீர் விட்டு அழுது வேண்டினார். அந்த குழந்தை நிலைக்கண்டு அம்மா அருள் பாவித்து 15 நாட்களுக்கு அங்க பிரதட்சணம் செய்தால் பேச்சு வரும் என்று கூறியருளினாள்.

அந்த அம்மாவும் அங்ஙனமே தினம் காலையில் அம்பளை வேண்டி அங்க பிரதட்சணம் செய்தார்கள். அதன் முடிவில் திரு. மகாலிங்கத்தின் மீது அருள் வந்து ஊமை பெண்ணின் நாவில் விபூதியை தடவி அம்மா என்று கூறச் சொல்லவும் அந்த பெண்ணும் அம்மா! அம்மா! என்று பேசியது.


அதன் பிறகு படிப்படியாக பேசும் திறமை கூடி தற்சமயம் பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறாள். இதுபோல் பலர் பேசும் திறமை பெற்றுள்ள அதிசயம் நடந்துள்ளது.


அம்பாள் கொடுத்த கால்கள்


முள்ளுக்குடி கிராமத்தில் உள்ள பழனிசாமி என்பவரின் 10 வயது பெண் தனக்கு ஏற்பட்ட நோய் காரணமாய் இரண்டு காலும் பாதிக்கப்பட்டு நடக்கமுடியவில்லை.எழுந்து நின்றாள் கீழே விழந்து விடுவாள்.

அவளை மருத்துவரிடம் காட்டி இரண்டு முறை அறுவை சிகிக்சை செய்தும் கால் நடக்கமுடியவில்லை. அவளுடைய தந்தை அந்தப் பெண்னை கோவிலுக்கு தூக்கி வந்து குறை நீங்க வேண்டினார். அவர் குரலுக்கு அம்மா மனமிரங்கி 10 நாட்கள் கோவிலை வலம் வந்தால் காலை சுகமாக்கித் தருவதாய் அம்மா அருளியது.


தினமும் அந்தப் பெண் தத்தித்தத்தி கோவிலை வலம் வந்தாள். அப்படி வரும் பொழுது 3 நாளிலே அவள் நடக்கும் சக்தியைப் பெற்று தன்னுடைய வீட்டிலிருந்து கோவிலுக்கு (2 கி.மி) நடந்தே வந்தாள். இந்த அதிசயத்தைக் கண்ணுற்ற பலர் அம்பாளின் அருளை போற்றி வணங்கினார்கள்

.

தடைப்பட்ட திருமணம் நடந்தது!


மயிலாடுதுறையை சேர்ந்த அன்பர் ஒருவர் தன்னுடைய மகள் திருமணத்திற்கு வரன் தேடி வந்தார்.

ஆனால் எந்த வரனும் கைகூடவில்லை. மிகவும் பிரபலமான உள்ள அருள் மேடையி்ல் கூறிய படியும் நடக்கவில்லை. சோதிடரைக் கேட்டால் இன்னும் முன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் திருமணம் நடை பெறும் என்று கூறி விட்டார்.


மிகவும் மனம் சோர்வடைந்த அவர் இங்கு வந்து அம்பாளை வேண்டி திருமணத்தை முடித்துத் தரும்படி பிராத்தித்தார். அம்பாளும் அவர் கோரிக்கைக்கு மனமிரங்கி கோயிலுக்கு 7 வாரம் வந்து விளக்கு போட்டு வந்தால் கல்யாணம் முடியும் என்று அருளியது.


முகவரி:

அருள்மிகு மகா முத்துமாரியம்மன் ஆலயம்,

52 வில்லியநல்லுர்,

குத்தாலம்,

சேண்டிருப்பு கிராமம்.

மயிலாடுதுறை வட்டம்,

நாகை மாவட்டம்,

தமிழ் நாடு,

இந்தியா.

பின் கேடு - 609801.

கோயில் போன் நம்பர் : 91 – 04364 – 234351

Mr. Mahalingam. Cell : 919443980608


சேண்டிருப்பு முத்து மாரியம்மன் கோவில்

மயிலாடுதுறையில் இருந்து 7 கி,மி, தொலைவில் உள்ளது, இதன் அருகில் திருமணஞ்சேரி, குத்தலாம், சூரியனார் கோவில் உள்ளது.

Monday 27 June 2022

சாயா தரிசனம்

 இந்த உலகத்தில் பல்வேறு தரப்பட்ட மக்களால்  பின்பற்றப்பட்டு, செய்யப்பட்டு வரும் சாயா தரிசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்று இப்பொழுது காண்போம் .


சாயா தரிசனம் இரண்டு நிலைகளில் செய்யப்படுகிறது,

       1.  ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய நிலை .

       2.   வளர்ச்சி அடைந்தவர்கள் செய்ய வேண்டிய நிலை .


1.  ஆரம்ப கட்டத்தில்  உள்ளவர்கள் செய்ய வேண்டிய நிலை :


ஆரம்ப நிலையில் - கடைப்பிடிக்க வேண்டியவை :

1.   கண்டிப்பாக காலை இரண்டு சாமத்திற்குள் அதாவது 10-48 மணிக்குள் தான் செய்ய வேண்டும் .

2.   காலை சூரிய ஒளியில் தான் செய்ய வேண்டும் .

3.   மேலே சொல்லப்பட்ட இரண்டு விதி முறைகளை பின் பற்றாவிட்டால் தீயவைகளை விளைவிக்கக் கூடிய கெட்ட ஆவிகளின்  தொற்றுதல் ஏற்பட்டு கெடுதல்களை விளைவிக்க  வாய்ப்புகள் உண்டு .

4.   சாயா தரிசனம் செய்வதற்கு முனபு காப்பு மந்திரம் போட்டுக் கொள்ள வேண்டும் .

5.   காப்பு மந்திரம் தெரியாதவர்கள் திக்கு கட்டு , உடல் கட்டு போன்ற மந்திரங்களைப் போட்டுக் கொள்ள வேண்டும் .


ஆரம்ப நிலையில் - செய்ய வேண்டியவை :

 1. காலை இரண்டு சாமத்திற்குள் அதாவது காலை 10.48 மணிக்குள் ஒரு நேரத்தை தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும் .

2.   கிழக்கு திசையில் முதுகைக் காட்டிக் கொண்டும் , மேற்கு திசையில் முகத்தைக் காட்டிக் கொண்டும் நின்று கொள்ள வேண்டும் .

3.    நமது நிழலை தொடர்ந்து 15 நிமிடம் ( அல்லது ) 20 நிமிடம் தொடர்ந்து பார்க்க வேண்டும் .

4.   முதலில் தலை முதல் பாதம் வரை படிப்படியாக பார்க்க வேண்டும் .

5.    பிறகு முழு உருவத்தையும் கண் இமை கொட்டாமல் தொடர்ந்து பார்க்க வேண்டும் .

6.   சாயா தரிசனம் செய்பவர் நிழல் முழுவதும் முழுமையாக வெண்மையாக அதாவது   வெண்மை நிறமாக மாற்றம் அடைவதைக் காணலாம் .

7.   கண் இமைக்காமல் பார்த்து விட்டு அப்படியே மேலே தலையை நிமிர்த்தி சுத்த நீல ஆகாயத்தைப் பார்த்தால் அங்கே தனது உருவப் பிம்பம் தோன்றும் அல்லது சாயை தோன்றும் .

8.   நம்முடைய உயரத்தை விட ஒரு உயர்ந்த உருவம் நம் எதிரே தோன்றும் .

9.  அந்த உருவத்தின் தோற்றம் முழுவதும் வெண்மை நிறமாக இருப்பதைக் காணலாம் .

10.   சாயா தரிசனத்தை செய்யும் காலம் அதிகரிக்க , அதிகரிக்க அதாவது 4 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகள் கழித்து நாம் என்ன உடை உடுத்தி இருக்கிறோமோ அந்த உடையுடன் உருவம் தெளிவாகவும் தெரியும் .


2. வளர்ச்சி அடைந்தவர்கள் செய்ய

வேண்டிய நிலை :


வளர்ச்சி நிலையில் - கடைப்பிடிக்க வேண்டியவை:

1. வளர்ச்சி நிலை எதைக் குறிக்கும் என்றால் சாயா தரிசனம் 5 ஆண்டுகள் ( அல்லது ) 6 ஆண்டுகள் செய்தவர்களைக் குறிக்கும் .


2. ஒரு நாளில் எந்த சாமத்திலும் சாயா தரிசனம் செய்யலாம் அதாவது எந்த நேரத்திலும் பகல் , மதியம், இரவு என்று எந்த நேரத்திலும் செய்யலாம்.

3. சூரிய ஒளியில்  மட்டுமின்றி மின் விளக்கிலும் செய்யலாம் .

4. சாயா தரிசனத்தை செய்வதற்கு முன்பு உடல் கட்டு , திக்கு கட்டு மந்திரங்களைப் போட்டுக் கொள்ள வேணடும் .


வளர்ச்சி நிலையில் - செய்ய வேண்டியவை :

1.   இரவு நேரத்தில் செய்ய வேண்டும் .

2.    வீட்டிற்குள் செய்யக் கூடாது .

3.    வீட்டின் மாடியில் நின்று கொண்டு செய்ய வேண்டும் .   

4.     மின் விளக்கை பொருத்தி எரிய வைத்து சாயா தரிசனத்தைச் செய்ய வேண்டும் .

5.    பௌர்ணமி நிலவு ஒளியிலும் சாயா தரிசனத்தைச் செய்யலாம் .

6.    வீட்டின் மாடியில் நின்று கொண்டு பார்ர்க்கும் பொழுது நம்மைச் சுற்றி, அந்த இடத்தைச் சுற்றி , இருள் நிறைந்த நிலையில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் .

7.    மாடியின் ஒரு சுவரில் ஒரு மின் விளக்கை மட்டும் பொருத்தி அதை எரியவைக்க வேண்டும் .

8.     மின் விளக்கை நோக்கி நம் முதுகை காட்டும் படி நின்று கொள்ள வேண்டும் .

9.    தரையில் தெரியும் நிழலை நன்கு உற்று நோக்கி பார்க்க வேண்டும் .

10.   நிழல் முழுவதும் வெண்மை நிறமாக மாற்றம் அடையும் .

11.   கண் இமைக்காமல் பார்த்து விட்டு அப்படியே மேலே தலையை நிமிர்த்தி சுத்த நீல ஆகாயத்தைப் பார்த்தால் அங்கே தனது உருவப் பிம்பம் தோன்றும் அல்லது சாயை தோன்றும் .

12.  ஆண்டுகள் பல கடந்து சாயா தரிசனத்தைத் தொடர்ந்து செய்து வர வெண்மை நிறமாக தெரிந்த உருவம் ஒவ்வொரு நிறமாக மாற்றம் அடைவதைக் காணலாம் .


13.  பிறகு நம்முடைய உருவமே பனையளவு நிற்பதை நாம் காணலாம் .


சாயா தரிசனத்தைத் தொடர்ந்து செய்து வர நடக்கும் நிகழ்வுகளும், கிடைக்கும் சக்திகளும், பலன்களும் போகர்  - 7000 என்ற புத்தகத்தில் போகர் சொன்னவாறே நடக்கும் .


சாயா தரிசனத்தைச் செய்து அத்தகைய பலன்களை அடைந்தவர்கள் தமிழ்நாட்டிலேயே உள்ளனர் .

கண்ணாடிப் பயிற்சி

 கண்ணாடிப் பயிற்சி !!!


ஆன்மீக உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த தவ முறைகளில் ஒன்று கண்ணாடிப் பயிற்சி முறை


இத்தகைய கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில், பல்வேறு தரப்பட்ட மக்களால், பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது, வருகிறது.


கண்ணாடிப் பயிற்சி முறை ஒரு மிகச் சிறந்த தவமுறை. கண்ணாடிப் பயிற்சியை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் 


அவருக்கு கீழ்க்கண்ட நிலைகள் ஏற்படுகிறது.,............


1.ஆன்மா விழித்துக் கொள்கிறது


2.ஆன்மா உடலிலிருந்து தனியாகப் பிரிந்து தனித்து இயங்கும் தன்மையைப் பெறுகிறது


3.ஜீவாத்மா , பரமாத்மாவுடன் இணைவதற்கான திறவுகோலைப் பெறுகிறது


மேலும் ஜீவாத்மா பரமாத்வுடன் இணைவதற்கான ஒரு பாலமாக கண்ணாடிப் பயிற்சி முறை இருக்கிறது. 


கண்ணாடிப் பயிற்சி முறையை சுருக்கமாக ஞானத்திற்கான திறவுகோல் என்று சொல்லலாம்.


சூட்சுமமாக சொல்ல வேண்டுமென்றால் ஆன்மா ஒளி சூட்சும சரிரத்தில் ஏற்றி வைக்கப் படுகிறது. 


இதனை இன்னும் சூட்சுமமாக கீழ்க்கண்டவாறு சொல்லலாம். சூக்கும உடல் விழிப்புற்று, கரண உடல் ஜோதி மயமாகிறது


கடவுளை உண்மையாக அடைவதற்கான வாயில்களின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் , அதனை திறக்கும் திறவுகோலாக கண்ணாடிப் பயிற்சி முறை பயன்படுத்தப் பட்டு வருகிறது என்ற என்ற உண்மை பல பேருக்கு தெரிவதில்லை 


கண்ணாடிப் பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அதற்கான வழிமுறைகளையும் பார்ப்போம்


கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்


1.கண்ணாடிப் பயிற்சி செய்ய எடுத்துக் கொள்ளும் கண்ணாடி ஒன்றே கால் அடி அகலம் இரண்டே கால் அடி உயரம் இருக்க வேண்டும்


2.கண்ணாடியிலிருந்து ஒரு அடி அல்லது ஒன்றரை அடி தள்ளி அமர வேண்டும்


3.முழு உருவமும் தெரியும் படி அமர வேண்டும்


4.கண்ணாடிப் பயிற்சிக்கு பயன்படுத்தும் கண்ணாடியை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது மறைவாக ஒரு துணியால் மூடி மறைத்து வைத்து விட வேண்டும்


5.காப்பு மந்திரம் தெரிந்தவர்கள் காப்பு போடலாம் அல்லது உடல் கட்டு திக்கு கட்டு போன்ற கட்டு மந்திரங்களைச் சொல்லி விட்டு கண்ணாடிப் பயிற்சி செய்யலாம்


6.இதை அதிகாலை 03. 00 மணிமுதல் 08.00 மணி வரை செய்யலாம் அதிகாலை 03.00 முதல் 05.00 வரை செய்வது உத்தமம்


கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில் பலவித நிலைகளில் செய்யப்பட்டு வருகிறது அதில் ஒரு சில கண்ணாடிப் பயிற்சி முறைகளைப் பார்ப்போம்


கண்ணாடிப் பயிற்சி முறை 1


1.முதலில் நமது உடலில் வலது கண்ணைப் பார்த்துச் 

செய்ய வேண்டும்


2.பிறகு இரண்டு கண்களையும் பார்க்க வேண்டும்


3.பிறகு நம் முழு உருவத்தையும் பார்க்க வேண்டும்


4.பிறகு கண்களை மூடி உள்ளே பார்க்க வேண்டும்


5.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்


கண்ணாடிப் பயிற்சி முறை 2


1.முதலில் இரண்டு கண்களையும் பார்க்க வேண்டும்


2.பிறகு நெற்றிக் கண்ணைப் பார்க்க வேண்டும்


3.பிறகு கண்ணை மூடி உள்ளே பார்க்க வேண்டும்


4.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்


கண்ணாடிப் பயிற்சி முறை 3


1.முதலில் நமது உடலில் வலது கண்ணைப் பார்த்துச் செய்ய வேண்டும்


2.பிறகு தொண்டையைப் பார்க்க வேண்டும்


3.பிறகு முழு உருவத்தையும் பார்க்க வேண்டும்


4.பிறகு கண்ணை மூடி உள்ளே பார்க்க வேண்டும்


5.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்


இவற்றில் எந்த முறை சரி என்று உணர்ந்து அதை பயன்படுத்தி வந்தால் ஞானத்தின் திறவுகோல் நமக்கு கிடைக்கும்.


கண்ணாடிப் பயிற்சியுடன் மந்திரம்


கண்ணாடிப் பயிற்சி செய்து வந்தால் வசிய சக்தி உண்டாகும் இது கண்ணாடிப் பயிற்சியின் ஒரு பலன் தானே தவிர அதுவே முழு பலனும் அல்ல என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்


கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் கண்ணாடிப் பயிற்சியுடன் சேர்த்து எதை வசியப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்குரிய வசிய மந்திரத்தை அறிந்து அதை உச்சாடணம் செய்ய வேண்டும்


கண்ணாடிப் பயிற்சியையும் வசிய மந்திரத்தையும் தொடர்ந்து செய்வதின் மூலம் வசியத்தை பெற முடியும் ஜக வசியம் முக வசியம் ராஜ வசியம் போன்ற பல்வேறு வசியங்களையும் பெற வேண்டுமானால் சர்வ சித்தி தனாஉறர்ஸன சங்கல்பம் என்ற ஒரு மந்திரம் இருக்கிறது அந்த மந்திரத்தை உச்சாடணம் செய்து கண்ணாடிப் பயிற்சியையும் தொடர்ந்து செய்து வர சர்வலோகமும் வசியமாகும்


இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் ,


சர்வ சித்தி தனாஉறர்ஸன சங்கல்பம் என்பது மந்திரம் ;


கண்ணாடி என்பது யந்திரம் ;


தந்திரம் என்ன என்பது தெரியவரும்போது தான் கண்ணாடிப் பயிற்சியின் சூட்சும வி‘யம் நமக்குத் தெரிந்து விடும்.


கண்ணாடிப் பயிற்சியுடன் போட்டோ


கண்ணாடிப் பயிற்சியுடன் கீழ்க்கண்ட முறையையும் செய்து வந்தால் பலன் தெரியும்


நம் போட்டோ ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும் அது தெளிவ கவும் முகம் முழுவதும் தெரியும் படியாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும்


கண்ணாடிப் பயிற்சியை முடித்தவுடன் எடுத்துக் கொண்ட நம் போட்டோவின் வலது கண்ணை சிறிது நேரம் பார்த்து விட்டு வைத்து விட வேண்டும்


தொடர்ச்சியாக இதை செய்து வர வேண்டும் இந்த போட்டோவை வேறு யாரும் பார்க்காதவாறு மறைவாக வைத்திருக்க வேண்டும் 


எந்த செயல் முடிய வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த செயலை வலது கண்ணைப் பார்த்து சொல்லி விட்டு போட்டோவை வைத்து விட வேண்டும் 


இதே முறையில் தொடர்ந்து செய்து வர நாம் எண்ணிய காரியம் நிறைவேறும் எண்ணிய காரியம் முடிந்தவுடன் அடுத்து நடக்க வேண்டிய செயலை நினைத்துக் கொண்டு போட்டோவைப் பார்க்க வேண்டும்


கண்ணாடிப் பயிற்சி செய்வதின் மூலம் பெறப்படும் பலன்கள் எல்லாம் குறைவே. கண்ணாடிப் பயிற்சி எளிதில் யாரும் அறிந்து கொள்ள முடியாத கணக்கிலடங்காத அரிய பொக்கி‘ங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது அதன் திறவுகோல் மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது திறவுகோலை கண்டுபிடியுங்கள் அரிய பொக்கிங்கள் உங்களுக்கு கிடைக்கும்

தீபப் பயிற்சி

 தீபப் பயிற்சி-பதிவு - 1


“”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல

ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””


உலகின் பல்வேறு இடங்களில் தீபப் பயிற்சி தவத்தின் ஆரம்ப நிலை பயிற்சியாக இன்றும் செய்யப் பட்டு வருகிறது .தீபப் பயிற்சி விளக்கு பயிற்சி என்றும் அழைக்கப் படுகிறது.

தீபப் பயிற்சி எண்ணெய் ஊற்றப் பட்ட விளக்கு வைத்தோ ,ஏற்றி வைக்கப் பட்ட மெழுகுவர்த்தி வைத்தோ தீபப் பயிற்சி செய்யப் படுகிறது.


தீபப் பயிற்சி உடலிலுள்ள ஜீவகாந்தத்தை பெருக்கும் பயிற்சியாகவே பெரும்பாலானவர்களால் கருதப்பட்டு வருகிறது.

ஆனால் ,தீபப்பயிற்சி மூலம் பல்வேறு சக்திகளைப் பெறமுடியும் என்பதையும், தீபப் பயிற்சி மூலம் பெற்ற சக்திகளை எளிதாக சோதனை செய்தும் பார்க்க முடியும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.


தீபப் பயிற்சி செய்வதால் உண்டாகும் பலன்கள்:

1 ஜீவகாந்த சக்தி பெருகுகிறது.

2 ஆன்மா விரிவடையும் தன்மையைப் பெறுகிறது.

3 ஸ்துhல உடலிலிருந்து சூட்சும உடல் தனியாகப் பிரியும் தன்மையைப் பெறுகிறது.

4 சூட்சும உடல் ஆன்ம ஒளியைப் பெறுகிறது.

5 சூட்சும உடல் தனித்து இயங்கும் தன்மையைப் பெறுகிறது.


தீபப் பயிற்சி செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை:

1 தீபப் பயிற்சி அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 09.00 மணிக்குள் செய்ய வேண்டும்.

2 தீபப் பயிற்சி அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 05.00 மணிக்குள் செய்வது உத்தமம்.

3 தீபப் பயிற்சியை அதிகாலை 09.00 மணிக்கு மேல் கண்டிப்பாக செய்யக் கூடாது.

4 தீபப் பயிற்சியை அதிகாலை 09.00 மணிக்கு மேல் செய்யும் பொழுது தீய ஆவிகளின் தொற்றுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 09.00 மணிக்குள் தீபப் பயிற்சியை செய்ய வேண்டும். அதிகாலை 09.00 மணிக்கு மேல் செய்யக் கூடாது.

5 தீபப் பயிற்சி செய்வதற்கு முன் தன்னைச் சுற்றி காப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.

6 காப்பு மந்திரம் தெரியாதவர்கள் உடல் கட்டு மந்திரம் ,திக்கு கட்டு மந்திரம் கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும் .


தீபப் பயிற்சி செய்வதற்கு தேவைப்படுபவை:

1 அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி பயன்படுத்தலாம்.

2 சாதாரண விளக்கில் எண்ணெய் ஊற்றி பயன்படுத்தலாம்.

3 விளக்கில் எண்ணெய் வகைகளாக நெய், விளக்கு எண்ணெய் ,கடலை எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

4 மண்ணெண்ணெய் நிரப்பப் பட்ட விளக்குகளைப் பயன்படுத்த வேண்டாம்.

5 மெழுகுவர்த்தியை பயன்படுத்த வேண்டாம் .


தீபப் பயிற்சியில் இரண்டு நிலைகள் உள்ளன:

முதல் நிலை -1


a ) தீபப் பயிற்சியில் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் செய்யவேண்டியது

1 நமக்கு தேவையான விளக்கு ஒன்றை எண்ணெய் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.

2 விளக்கின் தீபம் நமது கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

3 நாம் தரையில் அமர்ந்து கொண்டு விளக்கைப் பார்க்கும் பொழுது விளக்கின் தீபம் நம் கண்களுக்குத் தெரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

4 ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் தீபப் பயிற்சியை தொடர்ந்து மூன்று நிமிடம் வரை தொடர்ந்து பார்க்க வேண்டும்.

5 பிறகு கண்களை மூடி உள்ளே பார்க்க வேண்டும்.

6 மேலே கண்ட செயல்முறையைப் போலவே தொடர்ந்து மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்.


b ) தீபப் பயிற்சியில் வளர்ச்சி அடைந்தவர்கள் செய்ய வேண்டியது

1 நமக்கு தேவையான விளக்கு ஒன்றை எண்ணெய் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.

2 விளக்கின் தீபம் நமது கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

3 நாம் தரையில் அமர்ந்து கொண்டு விளக்கைப் பார்க்கும் பொழுது விளக்கின் தீபம் நம் கண்களுக்குத் தெரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

4 தீபத்தை தொடர்ந்து 15 நிமிடங்கள் (அல்லது) 20 நிமிடங்கள் வரை பார்க்க வேண்டும்.

5 தீபத்தில் பல்வேறு நிறங்கள் தெரிவதைப் பார்க்க முடியும்.

6 பச்சை, சிகப்பு என்று பல்வேறு பட்ட நிறங்களை தீபப் பயிற்சியில் நாம் வளர்ச்சி அடையும் பொழுது நாம் காணக் கூடிய நிறங்களாகும்.


தீபப் பயிற்சியின் முதல்நிலையில் பல்வேறு வகையான நிறங்கள் தெரிந்த பிறகு அடுத்து அடுத்து தீபத்தில் தெரியும் விஷயங்கள் தீபப் பயிற்சியில் சூட்சும ரகசியமாக வைக்கப் பட்டுள்ளது.


“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்

போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”


தீபப் பயிற்சி-பதிவு - 2


“”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல

ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””


இரண்டாம் நிலை - 2

தீபப் பயிற்சியில் முதல் நிலை முடித்தவர்கள் ,இரண்டாம் நிலை தீபப் பயிற்சியை செய்யலாம்.


இங்கே நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் .முதல் நிலை முடித்தவர்கள் இரண்டாம் நிலை ஆரம்பித்து விட்டால் ,முதல் நிலை பயிற்சியான எண்ணெய் ஊற்றிய விளக்கைப் பயன் படுத்த வேண்டிய அவசியமில்லை.

இரண்டாம் நிலையில் என்ன பயிற்சியை செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கிறதோ ,அந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் போதும்.


இரண்டாம் நிலை தீபப் பயிற்சியை செய்வதற்கு நமக்கு தேவைப்படுபவை : 

1 ஒரு சிறிய நைட் பல்பு (இரவில் உறங்கும் பொழுது பயன் படுத்தும் பல்பு)

2 அந்த நைட் பல்பு ஜீரோ வாட்ஸ் பல்பாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

3 நைட் பல்பை எரிய வைத்தால் முழுவதும் மஞ்சள் நிறமாக எரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது மஞ்சள் நிற நைட் பல்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

4 நைட் பல்பின் ஒளி நம் கண்களை கூசச் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


இரண்டாம் நிலை தீபப் பயிற்சியை கீழ்க்கண்டவாறு செய்ய வேண்டும் :

1 நாம் உட்காராமல் நேராக நின்று கொள்ள வேண்டும்.

2 நைட் பல்பு கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

3 நைட் பல்பை எரிய வைத்து கண்களால் தொடர்ந்து பார்க்க வேண்டும்.

4 நைட் பல்பை தொடர்ந்து 15 நிமிடம் அல்லது 20 நிமிடம் வரை பார்க்க வேண்டும்.

5 நைட் பல்பில் தெரியும் மஞ்சள் நிற ஒளி படிப்படியாக மாற்றம் அடைந்து பல்வேறு நிறங்கள் தெரிவதை பார்க்கலாம்.

6 முழுவதும் மஞ்சள் நிறமாக தெரியும் ஒளி படிப்படியாக சிகப்பு ,பச்சை என்று நைட் பல்பு முழுவதும் ஒளியின் நிறம் மாற்றம் அடைவதை நாம் பார்க்கலாம்.

7 நிறம் மாற்றம் அடைந்த பிறகு கிடைக்கும் பலன்கள் தான் சூட்சும ரகசியங்கள் என்பதை தீபப் பயிற்சி செய்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் .

8 இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வர அடுத்து, அடுத்து நமக்கு கிடைக்கும் பலன்களை பயிற்சியை செய்பவர்களே தெரிந்து கொள்ளலாம்.

9 பயிற்சி தொடர்ந்து செய்து அதன் பலனை சுவைத்தவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வார்கள்.


சோதனை முறை

தீபப்பயிற்சியின் இரண்டு நிலைகளையும் குறைந்தது ஒரு வருடம் செய்தவர்கள் கீழே சொல்லப்பட்ட சோதனை முறையை செய்து பார்த்தால் தங்களிடம் உள்ள சக்தியை உணர்ந்து கொள்ள முடியும்.


முதல் சோதனை முறை

1 காற்றால் நிரப்பப் பட்ட ஊதிய பலுhன் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும் .

2 பலுhனை தரையில் வைத்து விட்டு நாமும் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும் .

3 காற்றினால் பலுhன் அசையாதவாறு இருக்கும்படி நாம் அமர்ந்திருக்கும் அறையில் உள்ள கதவுகள் அனைத்தையும் மூடிக் கொள்ள வேண்டும்.

4 அறைக்குள் காற்று முழுவதுமாக வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

5 காற்றினால் பலுhன் அசையாதவாறு இருக்கும் படியாக நாம் அமர்ந்து கொள்ள வேண்டும்.

6 பலுhன் நாம் உட்கார்ந்து இருக்கும் இடத்திலிருந்து மூன்று அடி தொலைவில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

7 நாம் பலுhனை சிறிது நேரம் ஊற்று நோக்கியபடி மனதிற்குள் தன்னை நோக்கி பலுhன் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு கீழ்க்கண்ட வார்த்தைகளை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே பலுhனைப் பார்க்க வேண்டும்.


“””””வேண்டும் யாண்டும் உனதாக வேண்டும்

துhண்டும் உருவும் எனதாக வேண்டும்”””


8 அவ்வாறு தொடர்ந்து உச்சரிக்கும் பொழுது பலுhனை சிறிது அசையத் தொடங்கும் சிறிது ,சிறிதாக நகர்ந்து உருண்டு உருண்டு நகரத் தொடங்கும்.

9 உருண்டு ,உருண்டு நகர்ந்து கொண்டே வந்து நம் அருகே வந்து விடும்.


அப்படி வந்து விட்டால் உங்களிடம் சக்தி வளர்ந்து இருக்கிறது என்று பொருள்


இரண்டாவது சோதனை முறை

1 ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் .அதை மேசையின் மேல் வைக்க வேண்டும்.

2 மேசையின் மேல் அகல் விளக்கை வைத்த பிறகு அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி விளக்கை ஏற்ற வேண்டும்.

3 விளக்கில் ஏற்றப்பட்ட தீபம் நம் கண்களுக்கு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

4 நாம் தரையில் அமர்ந்து கொண்டு நம் கண்களுக்கு நேராக விளக்கின் தீபம் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

5 சிறிது நேரம் தீபத்தை தொடர்ந்து பார்க்க வேண்டும்.

6 பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து தீபத்தின் முன் வைக்க வேண்டும்.

7 சிறிது நேரம் தொடர்ந்து எலுமிச்சை பழத்தை தொடர்ந்து பார்த்து மேலே சொன்ன மந்திரத்தை


“””” வேண்டும் யாண்டும் உனதாக வேண்டும்

துhண்டும் உருவும் எனதாக வேண்டும்””””


என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு வரவேண்டும்

8 எலுமிச்சை பழம் மேசையில் மெதுவாக அசைய ஆரம்பிக்கும்.

9 பிறகு உருள ஆரம்பிக்கும்.

10 மேசையிலிருந்து உருண்டு வந்து நம்முடைய மடியில் வந்து விழும்.


மேலே சொல்லப்பட்ட பலன் உங்களுக்கு கிடைத்தால் உங்களுக்கு ஆகர்ஷன சக்தி வந்து விட்டது என்று பொருள்.

அதாவது நீங்கள் விருப்பப் பட்ட பொருள் எந்த இடத்தில் இருந்தாலும் ,எந்த நாட்டில் இருந்தாலும் ,அந்தப் பொருள் உங்களைத் தேடி வரும்.


அந்த பொருள் உயிருள்ள பொருளாக இருந்தாலும் ,உயிரற்ற பொருளாக இருந்தாலும் உங்களைத் தேடி வரும் என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் ,அறிந்து கொள்ள வேண்டும்.


மேலே சொல்லப்பட்ட பலன் மட்டுமில்லை, இதை விட மேலும் பல பலன்களும் சக்திகளும் தீபப் பயிற்சியின் மூலம் கிடைக்கும் .


தீபப்பயிற்சியை செய்பவர்கள் தீபப் பயிற்சியை தொடர்ந்து செய்து அதன் பலன்களை அனுபவித்து அதை நல்ல செயல்களுக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும் எனறு கேட்டுக் கொள்கிறேன்.


“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்

போற்றினேன் தீபப்பயிற்சி யுந்தான்முற்றே “”

Friday 24 June 2022

இல்லற இரகசியம்

 #501

இதுதான் இல்லற இரகசியம்".


*ஒரு சாது* மரத்தடியில் அமர்ந்திருந்தார்.  *ஒரு பறவை* அவரிடம் சென்று பேசியது.  


*‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன்.  முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்',* என்றது.


*‘பறவையே!  உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா?*  முயற்சிப்பதில் தவறில்லை.  *ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்.*   பிரயாணத்தின் போது *முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது  உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு'*, என்றார் சாது.


*தலையசைத்து விட்டு பறந்தது பறவை*.  பக்கத்தில் இருந்த *சீடனிடம் பேசினார்* சாது.


‘சீடனே!  *முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.  அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்',* என்றார் சாது.  

      

ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது.


*‘ஐயா!  கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன்.   நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன்.  இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன்',* என்றது பறவை.


*‘பறவையே!  இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல்.  பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார்* சாது.


பதினைந்து நாட்கள் ஓடிப்போனது.  *மீண்டும் பறவைகள்* திரும்ப வந்தன.


*‘ஐயா!  எங்களால் கடலில்  நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது.   நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம்.    தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம்.  ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம்.  எங்களுக்கு உதவுங்கள்'*, என்றது பறவை.


சாது யோசித்தார்.  *கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பறவையிடம்* கொடுத்தார்.  


*‘பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.  சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள்.  அது மிதக்கும்.  அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள்.  களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள்',* என்றார் சாது.


*பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன.*  இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாதுவிடம் வந்தன.


*‘ஐயா!  உங்களின் ஆசியினால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம்.   குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம்'*, என்றது பறவை.


*‘பறவைகளே அருமை!  நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?'* என்று கேட்டார் சாது. . . . . . . பறவை பேசியது.


*‘ஐயா!  சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம்.  சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம்.  அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது.  பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது.*  ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் *“குச்சியை நாங்கள் சுமக்கவில்லை.  குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது”*, என்ற உண்மை புரிந்தது', என்று *சொல்லி விட்டு பறந்தது பறவை.*


சாதுவைப் பார்த்தான் சீடன்.   சாது பேசினார்.


*‘சீடனே!  பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது.  துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது.*  அதற்குக் காரணம் *‘துணை'.*  ஆனாலும் *இலக்கை அடைய முடியவில்லை*.   இலக்கை அடைய *‘குச்சி'* என்ற கருவி அவசியமாகிறது.  *அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது.*  ஆனால், 

*அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது*.   பறவைகளுக்கு *‘குச்சியை*'ப் போல மனிதர்களுக்கு *‘இல்லறம்'* கருவியாகிறது.  *‘சம்சார சாகரம்', என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை.*  ‘இல்லறம்' என்ற *குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது*.  


குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், *‘குச்சியே பறவைகளை சுமக்கிறது'*.   இதைப் போல, *கணவனும், மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும்*, உண்மையில் *இல்லறமே அவர்களை வழி நடத்துகிறது.*   


 *இதுவே இல்லற ரகசியம்..!!*


(வாட்ஸ் அப்பில் வந்தது)

Wednesday 15 June 2022

சிவ தீட்சை ரகசியம்

 சிவ தீட்சை ரகசியம்



 ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம். இறைவனை காணும் வழி காண நமக்கான குருவிடம் தீட்சை பெற வேண்டும். நமக்கான குருவை தேர்த்தெடுக்க இயலாத பட்சத்தில் சிவ பக்தியும்,  முறையான சிவ வழிபாடும் நாம் கொண்டிருந்தால் அகத்தியரே நமக்கு குருவாயிருந்து நமக்கான குருவை அடையாளம் காட்டி சிவ தரிசனம் பெற வழிகாட்டுகிறார்.


சிவதீட்சை ரகசியம் கற்ற அகத்தியர்


              சித்தர்களின் தலையாய சித்தர்,  அந்த பரம்பொருளின் பிரியத்துக்குரிய - அகத்திய மாமுனி, பாமரனும் தகுதி இருந்தால் இறைவனை அடையலாம் என்பதற்காக , பகிர்ந்துகொண்ட தேவ ரகசியம்.. சித்த ரகசியம் இவை.

இவற்றை உணர்ந்து சித்தியடைந்தவர்களுக்கு ஞானம் பெருகும், பாவம் விலகும் என்கிறார்.மேலும் ஆதி சித்தனான சிவனின் பாத தரிசனம் கிடைக்குமாம்.இந்த தீட்சைகளை நற்குமரனான முருக பெருமான் தனக்கு அருளியதாகவும் கூறுகிறார்.


அகத்தியர் அருளியவை முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகள்.  குருவிடம் இருந்து பெறப்படும் உபதேசங்களில் முதன்மையானது இந்த சிவ தீட்சைகள்தான்.இந்த தீட்சைகளை முறையாக குருவின் மூலமாய் பெற்று செபிக்க தீட்சைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.


அகத்தியர் அருளிய மந்திரங்களை செபிக்கும் போது குறிப்பிட்ட மந்திரங்களுக்கு முன்னர் “ஓம்” என்கிற பிரணவத்தினையும் சேர்த்தே செபிக்க வேண்டுமென தெளிவாக கூறியிருக்கிறார். சில மந்திரங்கள் ஓம் என்று துவங்கினால் கூட அதற்கு முன்னர் இன்னொரு ஓம் சேர்த்து இரு முறை ஓமென செபித்தே மந்திரம் சொல்ல வேண்டும்.எனவே மந்திரம் எப்படி இருந்தாலும் துவக்கத்தில் பிரணவமந்திரத்துடனே அகத்தியர் அருளிய அனைத்து மந்திரங்களையும் செபிக்க வேண்டும்.


     

சிவ தீட்சை பற்றி அகத்தியர் இயற்றிய பாடல்


"தயவான தீட்சைவிதிக் காதிகாப்பு

தான்பாட வாராய்ந்து தெளிந்துபார்த்து

செயலான முப்பதி ரெண்டுதீட்சை

சித்தி செய்த பேர்க்கெல்லாம் ஞானம்சித்தி

சுகமான பாவவினை அற்றுப்போகும்

சோதிசிவ பாதமதைக் காணலாகும்

நயமாக எந்தனுக்கு உபதேசித்த

நற்குமரன் திருவருளே தீட்ட்சைக்காப்பு"


"தீட்சையிலே முதற்தீட்சை சிவதீட்சைதான்

ஸ்ரீம் அம் ஓம் யென் றுலட்சம் ஜெபித்துவோதக்

காட்சிபெறத் தேகமெல்லாம் வியர்வை காணும்

கண்மாய்கை இல்லையடா கண்டுதேறு

ஆச்சுதடா சிவதீட்சை ரெண்டுங்கேளு

ஆம் ஓம் ஹரீம் ரீம் யென்று நீயும்

மூச்சடா உள்ளடங்கும் லட்சமோத

முத்தியுண்டாஞ் சத்தியுண்டாஞ் சித்தியாமே."


"சித்தியாஞ் சிவதீட்சை மூன்றுகேளு

செப்புவேன் குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம் யென்று லட்சம்

பத்தியாய்ச் செய்துவர மோட்சமாகும்

பாணுவைப்போற் தேகமெல்லாம் ஒளியுமாகும்

துத்தியஞ்செய் சிவதீட்சை நாலுகேளு

துடியுடனே ஸ்ரீங் அங் உங் கென்று

முத்திபெற லட்சமுருச் செபித்தாற்சித்தி

மோட்சமய்யா தேவதைகள் பணியுந்தானே."


"பணிந்துதான் சிவதீட்சை அஞ்சுங்கேளு

பண்பாக யங் வங் றீங் றுந்தான்

துணிந்தோது லட்சமுருச் செபித்தாற்சித்தி

தொண்டுசெய்வார் தேவதைகள் சட்டைக்கும்

அணிந்துகொள்வாய் சிவதீட்சை ஆறுங்கேளு

அன்புடனே சங் ரங் உம் ஆம் என்றுலட்சம்

குனிந்துநிமிர் தேகமதில் வாசம் வீசும்

குணமாகுந் தெகசித்தி சுருக்குத்தானே."


தானேசெய் சிவதழுட்சை ஏழுநீயும்

சந்தோஸ மாய்ஓது இங் ரங் அவ்வு மென்றுலட்சம்

மானேந்தும் ஈசுவரனும் அருகில் நிற்பார்

வானவர்கள் மகிழ்வாக வாவென்பார்கள்

நானென்ற தீட்சையெட்டும் உற்றுக்கேளு

நன்றாக மங் றீங் ரா ரா வென் றுலட்சம்

ஆனந்த முண்டாகுந் தேவர்வந்து

அன்பாக உனைச்சேர்ந்து அணைவார்பாரே."


"உனைச் சேர்வார் சித்தர்களுஞ் சிவனார் தீட்சை

உன்பதுதான் வங் கிலியும் சிங் அம் ஐம் என்றுலட்சம்

வினையொழிந்து என்தேகம் கல்போலாகும்

மெய்யான சட்டையொன்று தள்ளிப்போடும்

தினந்துதிக்கும் சிவதீட்சை பத்தைத்தானுஞ்

செப்பார்கள் செப்புகிறென் வம் வும் அம் இம் என்று

எனைப்போலே சொல்வார்கள் தேகம் பொன்னாம்

இனிதான சிவதீட்சை ஓதினேனே."


"ஓதியதோர் சிவதீட்சை பதினொன்றுந்தான்

உரைக்கின்றேன் மங் றீங் றீங் கென்று லட்சம்

பாதிமதி சடைக்கணிந்த சிவனார்பாதம்

பணிந்து தொண்ட னாய் இருப்பாய் செய்துபாரு

நீதிபெறும் பன்னிரெண்டாஞ சத்திதீட்சை

நிலைத்தவர்க்குத் தற்புருசம் வம் ஆம் நம் என் றுலட்சம்

சந்தித்துச் செபித்திடவே சித்தியாகும்

சட்டையொன்று தள்ளுமடா கெவுனமாமே."


"ஆமப்பா சத்திபதி மூன்றாந் தீட்சை

அறிவுடனே ஊம் ஆம் என்றே லட்சம்

நாமப்பா செபித்திடவே வச்சிரதேகம்

நமனும்இவன் கிட்டவந்து அணுகான் பாரு

ஊமப்பா பதினாலாஞ் சத்தி தீட்சை

உண்மையாம் றம் றூம் ஸ்ரீம் அவ்வு மென்று

தாமப்பா லட்சமுரு செபித்தாற்சித்தி

சாயுட்சய பதம்பெறுவார் சார்ந்துகேளே!"


"சார்ந்துகேள் பதினைந்தாஞ் சத்திதீட்சை

தயவாக ஸ்ரீம் றீம் றீம் ஓம் என்று லட்சம்

தேர்நது பார் தேகமுந்தான் கல்போலாகும்

சிவசிவா நாதவிந்து கட்டிப்போகும்

ஆய்ந்தவர்க்குப் பதினாறாந் தீட்சை கேளு

அப்பனே சங் இங் றங் கென்றே லட்சம்

மாந்தளிர்போல் தேகமுள்ள மனோன்மணியாள்

வருவாளே மகனென்று பணிந்து கொள்ளே."


"வாய்ப்பான பதினேழாஞ் சிவதீட்சை

வழுத்துவேன் றீங் றீங் ஸ்ரீம் ஸ்ரீம் என்றே லட்சம்

காய்ப்பான நரைதிரையும் இல்லையில்லை

கற்பமதை உண்டிடவே சுருக்குமெத்த

ஏய்ப்பார்கள் ஏய்ப்புக்குள் அகப்படாதே

ஈஸ்வரியாள் தீட்ரைச பதினெட்டுங்கேளு

தீய்ப்பான சங் சிங் ரா ரா வென்று

செபித்திடுநீ லட்சமுரு சட்டைபோமே."


"சட்டைதள்ளும் பத்தொன்பதாந் தீட்சை தன்னை

தான்கேளு திரிநேத்திராயா வா வா வென்று

இட்டமுடன் லட்சமுரு செபித்தாற்சித்தி

இருபதாஞ் தீட்சையது ஸ்ரீங்கார தேவாயநமா வென்று

தொட்டதுவே லட்சத்திற்கு சித்தியாகும்

சொல்லுவேன் மூவேழு தீட்சை கேளு

அட்டதிசை வெல்லுமடா இங் அங் றங் கென்றுந்தான்

ஐநான்கு தீட்சைரெண்டும் அறையக் கேளே."


"அரையக்கேள் அரிஅரி ஓம் என்றுவோத

அப்பனே லட்சத்திற் சித்தியாகும்

முறையாக இருபத்து மூன்றாந் தீட்ரைச

மொழிந்திடுவாய் ரா ரா றீம் றீம் என்று

குறையாமற் செய்துவிடு சித்தியாகும்

குணமாக மூவெட்டுத் தீட்சை கேளு

மறைவாக லீ லீ லீ அரஹர றீ றி என்று

வாழ்த்துவாய் லட்சமுரு கெவுனிப்பாயே."


"கெவுனமது ஒடவென்றால் ஐயைந்து தீட்சை

கேளு நீ ஏ ஏ ஏ ஊ ஊ ஊ வென்று லட்சம்

மவனமது சித்தியப்பா இருப்பதாறில்

மாதாவின் தீட்சையது இஷாய இஷாய ஓம்என்று லட்சம்

சிவனாகும் இருபத்தேழ் தீட்சை தன்னில்

செப்புவேன் ஓம்சிவாய சிவா றீங் கென்று லட்சம்

புவனமதில் இருபத்தி யெட்டாந் தீட்சை

பூரிப்பாய் சிவஓம் சிவாயநமவெனப் புகழுண்டாமே."


"புகழுண்டாம் இருபத்தி ஒன்பதாந் தீட்சை

போற்றுவாய் சவ்வும் மவ்வும் என்று லட்சம்

நெகிளாது அய்யாறு தீட்சையப்பா

நிலைத்தவர்க்கு மங் சங் கங் கென்று லட்சம்

அகமகிழ உன்தேகம் ஒருநாளுங் தான்

அழியாது நரைதிரையும் இல்லையில்லை

உகம்வறைக்கும் இருத்துமடா முப்பதொன்று

ஓதுவாய் ஸ்ரீம் றீம் கென்று தானே."


"என்றுதான் லட்சமுரு செபித்தாற் சித்தி

இறவாமல் இருத்துமடா கோடிகாலம்

நன்றுகாண் முப்பத்தி ரெண்டாந் திட்சை

நங் கிலி சிங் கிலி என்றே லட்சம்

மன்றுள்ள காலம்வரை இரு;ததுந்தேகம்

வாழ்;த்திநீ தோத்திரங்கள் செய்துகொள்வாய்

கொன்றாலும் வாள்கொண்டு வெட்டினாலும்

குறையாமல் வாள்வெட்டுப் பொருந்துந்தானே."


சிவதீட்சை மந்திரங்கள் விளக்கம்


சிவதீட்சையில் முப்பத்தி இரண்டு 

மந்திரங்கள் . இவை ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பலன்கள். நமக்கு தேவையான மந்திரத்தை மட்டும் சொல்லி பலன் பெற்றுக் கொள்ளலாமே  என்று நினைக்க வேண்டாம். இந்த முப்பத்தி இரண்டு மந்திரங்களும் ஒவ்வொரு படிநிலையாக கருதப் படுகிறது.ஒவ்வொரு நிலையாக பூரணத்துவம் பெற்று மந்திரம் சித்தியடைந்த பலனை உணர்ந்த பின்னரே அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்லுதல் வேண்டும். அகத்தியர் இயற்றிய பாடலுக்கான விளக்கத்தை விரிவாக பார்க்கலாம்.


சிவதீட்சை - 1


ஸ்ரீம் அம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர்.


சிவதீட்சை - 2


"ஆம் ஓம் ஹரீம் ரீம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார்.


சிவதீட்சை - 3


"குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார்.


சிவதீட்சை - 4


"ஸ்ரீங் அங் உங்" என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார்.


சிவதீட்சை - 5


"யங் வங் றீங்" என்று லட்சம் முறை செபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார்.


சிவதீட்சை - 6


"சங் ரங் உம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார்.


சிவதீட்சை - 7


"இங் ரங் அவ்வு" லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார்.


சிவதீட்சை - 8


"மங் றீங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும். அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார்.


சிவதீட்சை - 9


"வங் கிலியும் சிங் அம் ஐம்" என்று லட்சம் முறை செபிக்க உன் வினைகள் எல்லாம் தீர்ந்து உடல் கல்லைப் போல் உறுதிபெறும்.இவ்வாறு ஒன்பதாவது தீட்சை சித்தியாகும் என்கிறார்.


சிவதீட்சை - 10


"வம் வும் அம் இம்" என்று லட்சம் முறை செபித்தால் தேகம் பொன் போல ஆகும். இவை இனிதான பத்தாவது சிவதீட்சை ஆகும் என்கிறார்.


சிவதீட்சை - 11


"மங் றீங் றீங்" என்று லட்சம் முறை செபிக்க பதினோராவது தீட்சை சித்திக்கும். பாதி மதியை சடையில் அணிந்த சிவபெருமானின் திருவடியைப் பணிந்து என்றென்றும் தொண்டனாய் இருப்பாய் செய்துபார் என்கிறார்.


சிவதீட்சை - 12


கற்பம் உண்டு நிலைத்தவர்க்கு சிவபெருமானின் ஒருமுகமான தற்புருசமே இது. "வம் ஆம் நம்" என்று லட்சம் உரு செபிக்க சித்தியாகும். கெவுன மார்க்கம் செலல ஏதுவாக சட்டை ஒன்றும் கிடைக்கும் அதை அணிந்தால் கெவுன சித்தி கிடைக்கும் என்கிறார்.


சிவதீட்சை - 13


அறிவுத் தெளிவுடன் "ஊம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க தேகம் வச்சிர தேகமாகும். எமன் கூட அருகில் வர மாட்டான்.இவ்வாறு பதின்மூன்றாவது தீட்சை சித்திக்கும் என்கிறார்.


சிவதீட்சை - 14


"றம் றூம் ஸ்ரீம் அவ்வு" என்று லட்சம் முறை செபிக்க பதின்நான்காவது தீட்சை சித்தியாகும். சாயுட்சய பதம் பெறுவார் என்கிறார் .

சிவதீட்சை - 15


"ஸ்ரீம் றீம் றீம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க தேகம் கல்போலாகும். தேர்ந்துபார். என்ன அற்புதம் சிவ சிவா நாதவிந்து கட்டிப்போகும்.இதுவே பதினைந்தாவது தீட்சை ஆகும். இவைகளை ஆய்ந்தறிந்தவர்களுக்குப் பதினாறாம் தீட்சையைச் சொல்கிறேன் கேள் என்று தொடர்கிறார்.


சிவதீட்சை - 16


"சங் இங் றங்" என்று லட்சம் முறை செபிக்க மாந்தளிர் போல் தேகமுள்ள மனோன்மணித் தாய் தன் இருகரம் நீட்டியபடியே மகனே என வருவாள். அவள் வரும் போதே அவளைப் பணிந்துகொள் என்கிறார் அகத்தியர்.இதுவே பதினாறாவது தீட்சையாகும்.

சிவதீட்சை - 17


"றீங் றீங் ஸ்ரீம் ஸ்ரீம்" என்று லட்சம் முறை செபிக்க காய்ப்பான நரையும் இல்லை. திரையும் இல்லை. கற்பத்தை உண்ண சுருக்கான வழி. வழியறியாதவர்கள் உன்னை ஏய்த்து விடுவார்கள். அவர்களின் ஏய்ப்புக்கு நீ ஆளாகிவிடாதே என்கிறார்.மேலும் இது ஒரு நல்வாய்ப்பு என்கிறார் அகத்தியர். இதுவே பதினேழாம் சிவதீட்சையாகும்.


சிவதீட்சை - 18


"சங் சிங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க சட்டை போகும். இது ஈஸ்வரியாளின் தீட்சை என்கிறார். இது பதினெட்டாவது தீட்சையாகும்.


சிவதீட்சை - 19


"திரிநேத்திராயா வா வா" என்று விருப்பமுடன் லட்சம் முறை செபிக்க பத்தொன்பதாவது தீட்சை சித்தியாகும்.இந்த தீட்சை சட்டையை தள்ளும் என்கிறார்.


சிவதீட்சை - 20


"ஸ்ரீங்காரதேவாய நமா" என்று லட்சம் முறை செபிக்க தொட்டதெல்லாம் சித்தியாகும்.இது இருபதாவது சிவதீட்சையாகும்.


சிவதீட்சை - 21


"இங் அங் றங்" என்று லட்சம் முறை செபிக்க எட்டுத் திசையையும் வெல்லலாம்.இதுவே இருபத்தியொன்றாவது சிவதீட்சையாகும்.


சிவதீட்சை - 22


"அரி அரி ஓம்" என்று என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி இரண்டாவது சிவதீட்சை சித்தியாகும்.


சிவதீட்சை - 23


"ரா ரா ரா றீம் றீம்" என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி மூன்றாவது சிவதீட்சை சித்தியாகும்.


சிவதீட்சை - 24


குணமாகவும் மறைவாகவும் "லீ லீ லீ அரஹர றீ றீ றி" என்று லட்சம் முறை செபித்து வாழ்த்துவாய் என்கிறார் அகத்தியர்.


சிவதீட்சை - 25


இருபத்தி ஐந்தாவது தீட்சையைக்கேள். கெவுனம் ஓடவென்றால் இதைக்கேள். "ஏ ஏ ஏ ஊ ஊ ஊ" என்று லட்சம் முறை செபிக்க இந்த தீட்சை சித்தியாகும் என்கிறார்.


சிவதீட்சை - 26


இருபத்து ஆறாவது தீட்சையைக்கேள், இது மாதாவின் தீட்சை இது, "இஷயா இஷயா ஓம்" என்று லட்சம் முறை செபிக்க மௌனம் சித்தியாகும் என்கிறார்.


சிவதீட்சை - 27


இருபத்தி ஏழாவது தீட்சையைக்கேள். இத்தீட்சையில் நீயே சிவனாவாய். அதைச் சொல்கிறேன். "ஓம் சிவாய சிவா றீங்" என்று லட்சம் முறை செபிக்க வேண்டும் என்கிறார்.


சிவதீட்சை - 28


இருபத்தி எட்டாவது தீட்சையைக்கேள். "சிவ ஓம் சிவாய நம" என்று லட்சம் முறை செபிக்க உலகத்தில் பூரிப்பான புகழ் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.


சிவதீட்சை - 29


இருபத்தி ஒன்பதாவது தீட்சையைக்கேள். இது போற்றுதற்குரிய புகழ் கிடைக்கும். அதற்கு "சவ்வும் மவ்வும்" என்று லட்சம் முறை செபிக்க வேண்டும் என்கிறார்.


சிவதீட்சை - 30


முப்பதாவது தீட்சையைக்கேள். "மங் சங் கங்" என்று லட்சம் உரு செபிக்க

உன் தேகம் ஒருநாளும் அழியாது. அகம் மகிழ நரையும் இல்லை திரையும் இல்லை. யுகம் வரைக்கும் உன் தேகத்தை நிலைநிறுத்தும்


சிவதீட்சை - 31


, "ஸ்ரீம் றீம்" என்று ஓதுவாய் லட்சம் உரு இது முப்பத்தியொன்றாம் தீட்சை என்கிறார்.


சிவதீட்சை - 32


முப்பத்து இரண்டாந் தீட்சைகேள். "நங் கிலி சிங் கிலி" என்று லட்சம் உரு செபிக்க கோடி காலம் வரை இறவாமலிருத்தும் மற்றுமுள்ள காலமனைத்தும் வாழ்த்தி தோத்திரங்கள் செய்து கொள்வாய். கொன்றாலும் வாள் கொண்டு வெட்டிப்போட்டாலும் வெட்டுப்பட்ட இடம் சற்றும் குறையாமல் ஒட்டிக்கொள்ளும் என்கிறார்.


நாடியிலிருந்த பாடல் அப்படியே.. சில வார்த்தைகள் புரியவில்லையே என்று கவலைப்படாதீர்கள். உங்கள் வேலை முதல் படியில் கால் வைப்பது மட்டுமே. மீதியை அந்த சிவம் பார்த்துக் கொள்ளும். 

மறைத்து வைக்க  இனி தேவையிலில்லை  ,ஈசன்  அருள்  எல்லோருக்குமே  இனைந்து பயானிப்பீர்  , என்றும் அன்புடன் உங்கள் ஆச்சார்யா பாபாஜி . .அஹம் ப்ரம்மாஸ்மி

அகத்தியர் பால் அபிஷேக காணொளி,


 நமது பீடத்தில் நாம் வழிபடும் இந்த சிறிய அகத்தியர் விக்கிரகம் சூரியகாந்தி வகை கல்லால் ஆனது இதில் அபிஷேகம் செய்யப்பட்டு அதை பிரசாதமாக நாம் உட்கொள்ளும் போது பல வகையான வியாதிகள் தாமாகவே தீர்ந்து போகும்

Tuesday 14 June 2022

பௌர்ணமி 14ஜூன்2022 காணொளிகள்


 










பௌர்ணமி 14ஜூன்2022, யாகம் படங்கள்


















































 

Tuesday 7 June 2022

பாட்டி சித்தர்

 பகவான் பாட்டியின் அற்புதங்கள் 215


பவானி லிங்கமூர்த்தி தொடர்ச்சி...


     நம் பாரதம்  ஞானிகளின் விளையாட்டு பூமி. மகான்கள் செய்யும் இடைவிடாத தவத்தினாலும்  அவர்களின் அருளினாலும்  பிரபஞ்சத்தை காத்து  ரட்சிக்கிறார்கள்..அதே சமயத்தில் நடப்பவை எல்லாம் நல்லதுக்கே என்றாலும்...

நம்மைப் பொறுத்தவரை நல்லவை நல்லவை தான். தீயவை தீயவை தான். அப்படி இருக்க இக்கலியில் தீயவை சார்ந்த அதிக  விஷயங்கள் நடக்கிறது .


    கலியில் இப்புவியில் நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கும். கலியில் அதர்மம் மேலோங்கும் என்பது சற்றே அறிந்ததுதான் என்றாலும்

ஏன் இவை எல்லாம் நடக்கிறது?  எதற்கு ??எப்படி? எதனால்..?

இதனால் கடவுளுக்கு என்ன அனுகூலம்..?


  உலகில் எவ்வளவு பிரச்சினைகள்  எவ்வளவு போராட்டங்கள் இவ்வாறான கேள்விகளுக்கு இடையே ...


  நம் பாட்டியின் அவதாரத்தின் முக்கிய நோக்கமாக ..... செயல்பாடாக எது இருக்கும் என்று சிந்தித்த வேளையில் அதற்கு நம் பாட்டியின் சூசகமான  பதில்:


"ஒரு கேள்வி கேட்ட...

ஒரு பதில நானும் சொல்றேன்...

ஒரே ஒரு வார்த்தையை...சொல்றேன்....

முதல் வார்த்தையை சொல்றேன்... அதுதான் முதல் வார்த்தை...அதுலதான் இருக்குது முதல் வார்த்தை.. அதுலியேதான்...

அதுதான் முதல் வார்த்தை.. அதேதான் முதல் வார்த்தை... "


என்று திரும்பத் திரும்பச் சொல்ல...

நாம் எது என்று யோசிக்க..

மீண்டும் பாட்டி ..


"அதுல இருந்து அத எடுத்தாதான்....

நல்லது..

அது இல்லாம இருந்ததா...

நா வந்த வேலை முடிஞ்சுதுனு

ஆகும்...

ஆனா....

அது இல்லாம போனா...

எல்லாம் நடக்கும் நல்லா...

அது இல்லாம இருக்கும் பாரு அது தான் என் பேரு..."



"இப்போ ... (இப்பொழுது)

தண்ணி குடிக்கிறேன் நான்..

நான் சொல்லி அடிக்கிறேன்..

அடிக்காம உன்ன வெளுக்கிறே

என்னடா வெடவெடத்து போற...

ஆமா நீ...

இத வெள்ளிக்கிழமையா எழுதப் போற..

நல்லா முறம் மாதிரி காத வச்சுகிட்டு இருக்கிற...

என்னடா முழிக்கிற.. அதத்தான்டா  சொன்னேன்....

அதுக்குத்தாண்டா வந்தேன்...


முறத்த முன்னாடி அறுத்து போடு .. அதச் சேரு..

அதுதான்டா பதில்...நான் தான் பதில்....என் பேர் பதில்."


மேலே பாட்டி சொன்ன வார்த்தைகளை கவனமாக படியுங்கள்.

அதற்குப் பின் கீழே வரும் வாசகத்தை அதனோடு பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக அமையும்..


 ஆம் .....


பாட்டியின் அவதார நோக்கம் எதுவோ அதுவே நம் பாட்டி இரண்டும் ஒன்றே.

அதற்கு பெயர் அறம் என்கின்ற  தமிழ்ச்சொல் அல்லது தர்மம் என்கின்ற வடமொழிச்சொல்.


 அதர்மம் என்ற சொல்லிலிருந்து.......

🔥 "அ" ........என்ற சொல்லை நீக்க வேண்டியும்  தவிர்க்கும் படியும் பாட்டி மேலே சூசகமாக கூறியுள்ளதை திரும்பத் திரும்பப் படித்தால் உணரலாம். மேலும் அறம் என்ற தமிழ்ச் சொல்லையும் முறம் என்ற சொல்லை பயன்படுத்தி சூசகமாக கூறியுள்ளதையும் கவனிக்க வேண்டும்.


தர்மம் எப்பொழுதெல்லாம் சீர் குலைகிறதோ அப்போதெல்லாம் தெய்வ அவதாரம் நிகழும் என்பது பகவான் கிருஷ்ணரின் பகவத் கீதையில் வரும் வாக்கு. அதை மெய்ப்பிக்கும் வகையில் பகவான் கிருஷ்ணனின் அம்சமாக நம் பாட்டி தர்மத்தை காக்க அவதரித்துள்ளார்கள். நிச்சயம் அதர்மம் அழிக்கப்படும். தர்மம் காக்கப்படும் ...


உலகம் வெட்டவெளியில் இருக்கிறது என்று மட்டும் சொல்வது விஞ்ஞானம். இந்த உலகத்தை தாங்கி நிற்பது பரப்பிரம்மம் எனப்படும் சச்சிதானந்தின்  அருள்வெளி.

அதுவே,

தர்மம்.... நம் பாட்டி.

இப்படிச் சொல்வது நம் பாட்டியின்  மெய்ஞானம்.....


 தர்மமே எல்லாவற்றையும் சேர்க்கும் இணைக்கும் நீடித்து நிற்கச் செய்யும்.. பாட்டியின் அவதார நோக்கம் மிகவும் தொலைநோக்குப் பார்வையுடன் அமைந்துள்ளதை நாம் இங்கு தீர்க்கமாக முடிவு செய்ய வேண்டும்.


நாம் அப்பொழுதே தர்மத்தைக் காக்க.. நிலைநிறுத்த  தர்மத்தின் மறுஉருவமாக நம் பாட்டி வந்துள்ளார்கள் என்று நினைத்தாலும்..



கொளுத்துது  வெயில்...

இந்த சமயத்தில் பாட்டி சொல்வதை நாம் எவ்வாறு  ஞாபகம் வைத்துக் கொள்வது..

என்று நினைக்க...


அதைக்குறித்து பாட்டி பரிபாசையாக கூறியவை:


"உன் தலைய சுத்தி..

நான் வைப்பேன் காயில்(COIL.)

அதுக்கு வரும்  கரண்டு (மின்சாரம்) என் புகையிலையில்...

கரண்டு தரும் எல்லாம் எழுத்தில் 

அதுவும் வரும் அச்சில்..."

.....


என்று கூறி அதன் பின் பாட்டி தொடர்ந்த 

வெயில்...மழை பற்றி அடுத்த பதிவில் காண்போம். 

சர்வம் பாட்டி மயம்.

பாட்டியின் திருவடி சரணம்..


தொடரும்...


மேலும் தகவல்களுக்கு


பாட்டி சித்தர் ஜீவசமாதி இருப்பிடம்::


கரூர் பேருந்து நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் தான்தோன்றிமலை பேருந்து நிறுத்தம் உள்ளது.. அதன் அருகிலேயே அரசு மயானம் உள்ளது...மயானத்தில் பாட்டி சித்தர் ஜீவசமாதி உள்ளது.. அங்கு கேட்டால் கூறுவார்கள்...

காலையில் 6 மணி முதல் மாலை 5 மணி வரை செல்லலாம்...


பகிர்வு

ஆர்.வீ.சரவணன்

இராமநாதபுரம்