Saturday 13 July 2019

அகத்தியர் வாக்கு - பாவங்கள், வேடியம் கோவில்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 122*

*தேதி: 14-07-2019(ஞாயிறு - சூரியன், கதிரவன், பகலவன், ரவி, ஆதித்தன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*பெருந்திரட்டு அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : பற்றுகள் அகல ஒரு மனிதன் எந்தெந்த விதமான பாவங்களை தவிர்க்க வேண்டும்?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*எந்த பாவத்தையும் செய்யாமல் இருப்பதே ஏற்புடையது. ஏனென்றால் இந்த பாவத்திற்கு இதுதான் காரணம் என்று கூறிவிட்டால் அந்த பாவத்தை மட்டும்(நான்) செய்யவில்லை என்றெல்லாம் கூறி மனிதன் தப்பித்துவிட முடியாது. ஒரு பாவம் என்பதை விட அது ஏற்படுத்தும் விளைவு எத்தனை மனிதர்களுக்குள் எத்தனை காலம் ஏற்படுத்துகிறது? அதனால் அந்த சந்ததிகள் எத்தனை ஆண்டுகள் பாதிக்கப்படுகிறார்கள்? என்பதையெல்லாம் கணக்கிலே வைத்து பிறகு அதன் விளைவாகத்தான் அந்த பிறவியின் இறுதியிலும், அடுத்தடுத்த பிறவிகளிலும் விதி அந்த பாவத்தை செய்ய மனிதனுக்கு அஃதாெப்ப எதிர்விளைவுகளை தருகிறது. எனவே குறிப்பிட்ட என்று இல்லாமல், எப்பாெழுது ஒன்று தவறு என்று மனசாட்சி உறுத்துகிறதாே அப்பாெழுதே அதனை செய்யாமல் விட்டுவிடுவதே சிறப்பு.*

*கேள்வி : நீங்கள் முன்பு சாென்ன 'வேடியம்' என்ற ஊரில் நாகதாேஷத்திற்கு எப்படி பரிகார பூஜைகள் செய்ய வேண்டும்?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*எந்த ஆலயமாக இருந்தாலும் இயன்ற வழிபாடுகளை செய்யலாம்.* இதுதான் செய்ய வேண்டும் என்று நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. *வாய்ப்பு உள்ளவர்கள் அபிஷேகம் செய்யலாம். அதற்கான சூழல் இல்லையென்றால் நறுமண மலர்மாலை சாற்றலாம். அங்குள்ள ஏழ்மையான மனிதர்களுக்கு இயன்ற உதவிகளை செய்யலாம். அமைதியாக அமர்ந்து பிராத்தனை செய்வதுதான் முக்கியம். வைராக்யமும், இறையருளும் இருந்தால் ஒரு பிறவியில்கூட சாத்தியம்தான். அதனை ஏன் சிந்தனையிலே குழப்பமாக வைத்துக் காெள்ள வேண்டும்? இந்தப் பிறவியில் இறைவன் அருள்வார் என்று எண்ணி முயற்சி செய்தால் தவறாென்றுமில்லையே.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*