Wednesday 27 June 2018

1008 லிங்கம்

1008 லிங்கம்

1 அகர லிங்கம்
2 அக லிங்கம்
3 அகண்ட லிங்கம்
4 அகதி லிங்கம்
5 அகத்திய லிங்கம்
6 அகழ் லிங்கம்
7 அகில லிங்கம்
8 அகிம்சை லிங்கம்
9 அக்னி  லிங்கம்
10 அங்கி  லிங்கம்
11 அங்கு  லிங்கம்
12 அசரிய  லிங்கம்
13 அசுர  லிங்கம்
14 அசை லிங்கம்
15 அசோக  லிங்கம்
16 அச்சு  லிங்கம்
17 அஞ்சா  லிங்கம்
18 அட்ட  லிங்கம்
19 அட்ச லிங்கம்
20 அட்சதை  லிங்கம்
21 அட்டோ லிங்கம்
22 அடிமுடி  லிங்கம்
23 அடி  லிங்கம்
24 அணணா லிங்கம்
25 அண்ட  லிங்கம்
26 அணி  லிங்கம்
27 அணு  லிங்கம்
28 அத்தி  லிங்கம்
29 அதழ்  லிங்கம்
30 அதிபதி  லிங்கம்
31 அதிர்ஷ்ட  லிங்கம்
32 அதிய லிங்கம் 
33 அதிசய  லிங்கம்
34 அதீத  லிங்கம்
35 அந்தார  லிங்கம்
36 அந்தி  லிங்கம்
37 அநந்தசாயி  லிங்கம்
38 அநலி லிங்கம்
39 அநேக  லிங்கம்
40 அப்ப  லிங்கம்
41 அப்பு  லிங்கம்
42 அபய லிங்கம்
43 அபி  லிங்கம்
44 அபிநய  லிங்கம்
45 அபிஷேக  லிங்கம்
46 அம்பல  லிங்கம்
47 அம்பி  லிங்கம்
48 அம்புசி  லிங்கம்
49 அம்ம லிங்கம்
50 அமல லிங்கம்
51 அமர லிங்கம்
52 அமராவதி லிங்கம்
53 அமிர்த லிங்கம்
54 அர்ச்சனை லிங்கம்
55 அர்ச்சுண லிங்கம்
56 அர்த்த லிங்கம்
57அரச லிங்கம்
58 அரவ லிங்கம்
59 அரங்க லிங்கம்
60 அரம்பை லிங்கம்
61 அரளி லிங்கம்
62 அரி லிங்கம்
63 அரிணி லிங்கம்
64 அரிமா லிங்கம்
65 அருக லிங்கம்
66 அருணை லிங்கம்
67 அருமணி லிங்கம்
68 அரும்பு லிங்கம்
69 அருளி லிங்கம்
70 அரூப லிங்கம்
71 அல்லி லிங்கம்
72 அலை லிங்கம்
73 அவைய லிங்கம்
74 அழகு லிங்கம்
75 அளத்தி லிங்கம்
76 அற லிங்கம்
77 அறிவு லிங்கம்
78 அன்பு லிங்கம்
79 அன்புரு லிங்கம்
80 அன்ன லிங்கம்
81 அனுதாபி லிங்கம்
82 அனுபூதி லிங்கம்
83 அஷ்ட லிங்கம்
84 ஆக்கை லிங்கம்
85 ஆகம லிங்கம்
86ஆகாய லிங்கம்
87 ஆசான லிங்கம்
88 ஆசிரிய லிங்கம்
89 ஆசி லிங்கம்
90 ஆட லிங்கம்
91 ஆடரி லிங்கம்
92 ஆண் லிங்கம்
93 ஆண்டி லிங்கம்
94 ஆணுரு லிங்கம்
95 ஆத்ம லிங்கம்
96 ஆதார லிங்கம்
97 ஆதி லிங்கம்
98 ஆதிரி லிங்கம்
99 ஆதிசேவி லிங்கம்
100 ஆதிரை லிங்கம்
101 ஆதினா லிங்கம்
102 ஆபேரி லிங்கம்
103 ஆமிர லிங்கம்
104 ஆமை லிங்கம்
105 ஆய லிங்கம்
106 ஆயதி லிங்கம்
107 ஆர்த்தி லிங்கம்
108 ஆரண்ய லிங்கம்
109 ஆரண லிங்கம்
110 ஆராதனை லிங்கம்
111 ஆராபி லிங்கம்
112 ஆரூர லிங்கம்
113 ஆரோக்ய லிங்கம்
114 ஆலகால லிங்கம்
115 ஆலவாய் லிங்கம்
116 ஆலால லிங்கம்
117 ஆலி லிங்கம்
118 ஆவார லிங்கம்
119 ஆவி லிங்கம்
120 ஆவே லிங்கம்
121 ஆவுடை லிங்கம்
122 ஆழி லிங்கம்
123 ஆனந்த லிங்கம்
124 இக்கு லிங்கம்
125 இசை லிங்கம்
126 இடப லிங்கம்
127 இணை லிங்கம்
128 இதய லிங்கம்
129 இந்திர லிங்கம்
130 இமய லிங்கம்
131 இமை லிங்கம்
132 இரட்டை லிங்கம்
133 இராம லிங்கம்
134 இலக்கிய லிங்கம்
135 இலாப லிங்கம்
136 இளைய லிங்கம்
137 இறவா லிங்கம்
138 இறை லிங்கம்
139 இனிமை லிங்கம்
140 ஈகை லிங்கம்
141 ஈசான்ய லிங்கம்
142 ஈட லிங்கம்
143 ஈடண லிங்கம்
144 ஈடித லிங்கம்
145 ஈடிலி லிங்கம்
146 ஈர்ப்பு லிங்கம்
147 ஈழ லிங்கம்
148 ஈஸ்வர லிங்கம்
149 ஈஸ்வரி லிங்கம்
150 உக்ர லிங்கம்
151 உச்சி லிங்கம்
152 உசித லிங்கம்
153 உடம்பி லிங்கம்
154 உடுக்கை லிங்கம்
155 உணர் லிங்கம் 
156 உத்தம லிங்கம்
157 உத்ராட்ச லிங்கம்
158 உதய லிங்கம்
159 உதிர லிங்கம்
160 உப்பிலி லிங்கம்
161 உப்பு லிங்கம்
162 உப லிங்கம்
163 உபதேச லிங்கம்
164 உபய லிங்கம்
165 உமா லிங்கம்
166 உமை லிங்கம்
167 உயிர் லிங்கம்
168 உரி லிங்கம்
169 உரு  லிங்கம்
170 உருணி லிங்கம்
171 உருமணி லிங்கம்
172 உவப்பு லிங்கம்
173 உழவு லிங்கம்
174  உழுவை லிங்கம்
175 உற்சவ லிங்கம்
176 உன்னி லிங்கம்
177 ஊக்க லிங்கம்
178 ஊசி லிங்கம்
179 ஊதா லிங்கம்
180 ஊருணி லிங்கம்
181 ஊழி லிங்கம்
182 ஊற்று லிங்கம்
183 எட்டி லிங்கம்
184 எட்டு லிங்கம்
185 எதனா லிங்கம்
186 எந்தை லிங்கம்
187 எம லிங்கம்
188 எருது லிங்கம்
189 எல்லை லிங்கம்
190 எளிய லிங்கம்
191 எழிலி லிங்கம்
192 எழுத்தறி லிங்கம்
193 என்குரு லிங்கம்
194 ஏக லிங்கம்
195 ஏகம லிங்கம்
196 ஏகா லிங்கம்
197 ஏகாம்பர லிங்கம்
198 ஏகாந்த லிங்கம்
199 ஏடக லிங்கம்
200 ஏந்திழை லிங்கம்
201 ஏம லிங்கம்
202 ஏர் லிங்கம்
203 ஏரி லிங்கம்
204 ஏவச லிங்கம்
205 ஏழிசை லிங்கம்
206 ஏறு லிங்கம்
207 ஏனாதி லிங்கம்
208 ஐங்கர லிங்கம்
209 ஐய லிங்கம்
210 ஐராவத லிங்கம்
211 ஒப்பிலா லிங்கம்
212 ஒப்பிலி லிங்கம்
213 ஒருமை லிங்கம்
214 ஒளி லிங்கம்
215 ஓசை லிங்கம்
216 ஓடேந்தி லிங்கம்
217 ஓம் லிங்கம்
218 ஓம்கார லிங்கம்
219 ஓவிய லிங்கம்
220 ஔடத லிங்கம்
221 ஔவை லிங்கம்
222 கங்கா லிங்கம்
223 கச்ச லிங்கம்
224 கண்ட லிங்கம்
225 கடம்ப லிங்கம்
226 கடார லிங்கம்
227 கடிகை லிங்கம்
228 கடை லிங்கம்
229 கதிர் லிங்கம்
230 கதலி லிங்கம்
231 கந்த லிங்கம்
232 கபால லிங்கம்
233 கபில லிங்கம்
234 கமல லிங்கம்
235 கயா லிங்கம்
236 கயிலை லிங்கம்
237 கர்ண லிங்கம்
238 கர்ப்ப லிங்கம்
239 கரண லிங்கம்
240 கரு லிங்கம்
241 கருட லிங்கம்
242 கருமை லிங்கம்
243 கருணை லிங்கம்
244 கல்ப லிங்கம்
245 கல்வி லிங்கம்
246 கலி லிங்கம்
247கலை லிங்கம்
248 கவி லிங்கம்
249 கற்பக லிங்கம்
250 கற்பூர லிங்கம்
251 கன்னி லிங்கம்
252 கன லிங்கம்
253 கனக லிங்கம்
254 கனி லிங்கம்
255 கஸ்தூரி லிங்கம்
256 கஜ லிங்கம்
257 கருணாகர லிங்கம்
258 காசி லிங்கம்
259 காஞ்சி லிங்கம்
260 காடக லிங்கம்
261 காத்த லிங்கம்
262 காதம்பரி லிங்கம்
263 காந்த லிங்கம்
264 காப்பு லிங்கம்
265 காம லிங்கம்
266 கார் லிங்கம்
267கார்த்திகைலிங்கம்
268 காரண லிங்கம்
269 கால லிங்கம்
270 காவி லிங்கம்
271காவிய லிங்கம்
272 காவேரி லிங்கம்
273 காளி லிங்கம்
274 காளத்தி லிங்கம்
275 காளை லிங்கம்
276 கான லிங்கம்
277கிண்கிணி லிங்கம் 
278 கிரி லிங்கம்
279 கிரியை லிங்கம்
280 கிரீட லிங்கம்
281 கிருப லிங்கம்
282 கிள்ளை லிங்கம்
283 கீத லிங்கம்
284 கீர்த்தி லிங்கம்
285 கீர்த்தன லிங்கம்
286 குக லிங்கம்
287 குங்கும லிங்கம்
288 குஞ்சு லிங்கம்
289 குட லிங்கம்
290 குடுமி லிங்கம்
291 குண லிங்கம்
292 குணக்ரி லிங்கம்
293 குபேர லிங்கம்
294 குருதி லிங்கம்
295 குமர லிங்கம்
296 குமரி லிங்கம்
297 குமுத லிங்கம்
298 குல லிங்கம்
299 குழலி லிங்கம்
300 குழவி லிங்கம்
301 குழை லிங்கம்
302 குற்றால லிங்கம்
303 குன்று லிங்கம்
304 குண்டலி லிங்கம்
305 குந்த லிங்கம்
306 கும்ப லிங்கம்
307 குரவ லிங்கம்
308 குறிஞ்சி லிங்கம்
309 கூததாடி லிங்கம்
310 கூத்து லிங்கம்
311 கூர்ம லிங்கம்
312 கெஜ லிங்கம்
313 கேச லிங்கம்
314 கேசரி லிங்கம்
315 கேசவ லிங்கம்
316 கேடிலி லிங்கம்
317 கேதார் லிங்கம்
318 கேள்வி லிங்கம்
319 கைலாய லிங்கம்
320 கொங்கு லிங்கம்
321 கொடி லிங்கம்
322 கொடு லிங்கம்
323 கொளஞ்சி லிங்கம்
324 கொற்றை  லிங்கம்
325 கொன்றை லிங்கம்
326 கோ லிங்கம்
327 கோகழி லிங்கம்
328 கோகுல லிங்கம்
329 கோட்டை லிங்கம்
330 கோடி லிங்கம்
331 கோண் லிங்கம்
332 கோண லிங்கம்
333 கோதண்ட லிங்கம்
334 கோதை லிங்கம்
335 கோப லிங்கம்
336 கோபி லிங்கம்
337 கோமதி லிங்கம்
338 கோல லிங்கம்
339 கௌசிக லிங்கம்
340 கௌதம லிங்கம்
341 கௌரி லிங்கம்
342 சக்தி லிங்கம்
343 சக்கர லிங்கம்
344 சகஸ்ர லிங்கம்
345 சகல லிங்கம்
346 சங்க லிங்கம்
347 சங்கம லிங்கம்
348 சங்கர லிங்கம்
349 சங்கு லிங்கம்
350 சஞ்சீவி லிங்கம்
351 சடாட்சர லிங்கம்
352 சடைமுடி லிங்கம்
353 சண்முக லிங்கம்
354 சத்திய லிங்கம்
355 சதங்கை லிங்கம்
356சதய லிங்கம்
357 சதா லிங்கம்
358 சதாசிவ லிங்கம்
359 சதுர் லிங்கம்
360 சதுர்த்தி லிங்கம்
361 சதுரங்க லிங்கம்
362 சதுரகிரி லிங்கம்
363 சந்த லிங்கம்
364 சந்திர லிங்கம்
365 சந்தன லிங்கம்
366 சந்தான லிங்கம்
367 சப்த லிங்கம்
368 சபா லிங்கம்
369 சம்பந்த லிங்கம்
370 சம்பு லிங்கம்
371 சமுத்திர லிங்கம்
372 சயன லிங்கம்
373 சர்வேஸ லிங்கம்
374 சரச லிங்கம்
375 சரீர லிங்கம்
376 சவரி லிங்கம்
377 சற்குண லிங்கம்
378 சஹான லிங்கம்
379 சற்குரு லிங்கம்
380 சாட்சி லிங்கம்
381 சாணக்ய லிங்கம்
382 சாதக லிங்கம்
383 சாதனை லிங்கம்
384 சாதி லிங்கம்
385 சாது லிங்கம்
386 சாந்த லிங்கம்
387 சாந்து லிங்கம்
388 சாம்ப லிங்கம்
389 சாமுண்டி லிங்கம்
390 சிகர லிங்கம்
391 சிகா லிங்கம்
392 சிகரி லிங்கம்
393 சிகை லிங்கம்
394 சிங்கார லிங்கம்
395 சிசு லிங்கம்
396 சித்தி லிங்கம்
397 சித்திரை லிங்கம்
398 சிந்தாமணிலிங்கம்
399 சிந்து லிங்கம்
400 சிநேக லிங்கம்
401 சிப்பி லிங்கம்
402 சிபி லிங்கம்
403 சிம்ம லிங்கம்
404 சிர லிங்கம்
405 சிரஞ்சீவி லிங்கம்
406 சிரபதி லிங்கம்
407 சிருஷ்டி லிங்கம்
408 சிலம்பு லிங்கம்
409 சிவ லிங்கம்
410 சிவகதி லிங்கம்
411 சிவாய லிங்கம்
412 சிற்பவ லிங்கம்
413 சினை லிங்கம்
414 சிஷ்ட லிங்கம்
415 சீதன லிங்கம்
416 சீதாரி லிங்கம்
417 சீமை லிங்கம்
418 சீர்மை லிங்கம்
419 சீற்ற லிங்கம்
420 சீனி லிங்கம்
421 சுக்கிர லிங்கம்
422 சுக லிங்கம்
423 சுகந்த லிங்கம்
424 சுகநிதி லிங்கம்
425 சுகுண லிங்கம்
426 சுடர் லிங்கம்
427 சுத்த லிங்கம்
428 சுதர்சண லிங்கம்
429 சுந்தர லிங்கம்
430 சுந்தரி லிங்கம்
431 சுப்பு லிங்கம்
432 சுமித்ர லிங்கம்
433 சுய லிங்கம்
434 சுயம்பு லிங்கம்
435 சுரபி லிங்கம்
436 சுருதி லிங்கம்
437 சுருளி லிங்கம்
438 சுரை லிங்கம்
439 சுவடி லிங்கம்
440 சுவடு லிங்கம்
441 சுவர்ண லிங்கம்
442 சுவாச லிங்கம்
443 சுவாதி லிங்கம்
444 சுனை லிங்கம்
445 சூட்சம லிங்கம்
446 சூர லிங்கம்
447 சூரி லிங்கம்
448 சூரிய லிங்கம்
449 சூல லிங்கம்
450 சூள்முடி லிங்கம்
451 சூளாமணி லிங்கம்
452 செக்கர் லிங்கம்
453 செங்கு லிங்கம்
454 செண்பக லிங்கம்
455 செந்தூர லிங்கம்
456 செம்ம லிங்கம்
457 செம்பாத லிங்கம்
458 செரு லிங்கம்
459 செருக்கு லிங்கம்
460 செல்வ லிங்கம்
461 செழுமை லிங்கம்
462 சேகர லிங்கம்
463 சேலிங்கம்
464 சேது லிங்கம்
465 சேர்ப்பு லிங்கம்
466 சேற்று லிங்கம்
467 சைல லிங்கம்
468 சைவ லிங்கம்
469 சொக்க லிங்கம்
470 சொப்பன லிங்கம்
471 சொர்க்க லிங்கம்
472 சொரூப லிங்கம்
473 சோம லிங்கம்
474 சோண லிங்கம்
475 சோபன லிங்கம்
476 சோலை லிங்கம்
477 சோழ லிங்கம்
478 சோழி லிங்கம்
479 சோற்று லிங்கம்
480 சௌந்தர்ய லிங்கம்
481 சௌந்தர லிங்கம்
482 ஞான லிங்கம்
483 தகழி லிங்கம்
484 தகு லிங்கம்
485 தங்க லிங்கம்
486 தச லிங்கம்
487 தட்சண லிங்கம்
488 தடாக லிங்கம்
489 தத்துவ லிங்கம்
490 தந்த லிங்கம்
491 தந்திர லிங்கம்
492 தமிழ் லிங்கம்
493 தர்பை லிங்கம்
494 தர்ம லிங்கம்
495 தருண லிங்கம்
496 தவ லிங்கம்
497 தளிர்  லிங்கம்
498 தன லிங்கம்
499 தனி லிங்கம்
500 தவசி லிங்கம்
501 தாண்டக லிங்கம்
502 தாண்டவ லிங்கம்
503 தாமு லிங்கம்
504 தாய் லிங்கம்
505 தார லிங்கம்
506 தாழி லிங்கம்
507 தாழை லிங்கம்
508 தாள லிங்கம்
509 தான்ய லிங்கம்
510 தாரகை லிங்கம்
511 திக்கு லிங்கம்
512 திகம்பர லிங்கம்
513 திகழ் லிங்கம்
514 தியாக லிங்கம்
515 தியான லிங்கம்
516 திரி லிங்கம்
517 திரிபுர லிங்கம்
518 திரு லிங்கம்
519 திருமேனி லிங்கம்
520 திருவடி லிங்கம்
521 திருவாசக லிங்கம்
522 திருவாத லிங்கம்
523 திலக லிங்கம்
524 திவ்ய லிங்கம்
525 தீ லிங்கம்
526 தீட்சை லிங்கம்
527 தீர்க்க லிங்கம்
528 தீர்த்த லிங்கம்
529 தீப லிங்கம்
530  தீர லிங்கம்
531 தீர்ப்பு லிங்கம்
532 துதி லிங்கம்
533 துர்கை லிங்கம்
534 துருவ லிங்கம்
535 துலா லிங்கம்
536 துளசி லிங்கம்
537 துறவு லிங்கம்
538 தூங்கா லிங்கம்
539 தூண்டா லிங்கம்
540 தூமணி லிங்கம்
541 தூய லிங்கம்
542 தூளி லிங்கம்
543 தெங்கு லிங்கம்
544 தெய்வ லிங்கம்
545 தெரிவை லிங்கம்
546 தெளி லிங்கம்
547 தென்னவ லிங்கம்
548 தேக லிங்கம்
549 தேகனி லிங்கம்
550 தேகி லிங்கம்
551 தேச லிங்கம்
552 தேசு லிங்கம்
553 தேயு லிங்கம்
554 தேர லிங்கம்
555 தேவ லிங்கம்
556 தேவபத லிங்கம்
557 தேவாதி லிங்கம்
558 தேவு லிங்கம்
559 தேன் லிங்கம்
560 தேன்மணி லிங்கம்
561 தேன லிங்கம்
562 தேனுக லிங்கம்
563 தைரிய லிங்கம்
564 தொகை லிங்கம்
565 தொட்டி லிங்கம்
566 தொடி லிங்கம்
567 தொடைய லிங்கம்
568 தொண்டக லிங்கம்
569 தொண்டை லிங்கம்
570 தொல் லிங்கம்
571 தோகச லிங்கம்
572 தோண்டி லிங்கம்
573 தோணி லிங்கம்
574 தோத்திர லிங்கம்
575 தோரண லிங்கம்
576 தோரி லிங்கம்
577 தோழ லிங்கம்
578 தோன்ற லிங்கம்
579 தௌத லிங்கம்
580 தௌல லிங்கம்
581 நகமுக லிங்கம்
582 நகு லிங்கம்
583 நகை லிங்கம்
584 நங்கை லிங்கம்
585 நசை லிங்கம்
586 நஞ்சு லிங்கம்
587 நடன லிங்கம்
588 நடம்புரி லிங்கம்
589 நடு லிங்கம்
590 நதி லிங்கம்
591 நந்தி லிங்கம்
592 நம்பி லிங்கம்
593 நம லிங்கம்
594 நயன லிங்கம்
595 நர்மதை லிங்கம்
596 நலமிகு லிங்கம்
597 நவ லிங்கம்
598 நவமணி லிங்கம்
599 நவிர லிங்கம்
600 நற்குண லிங்கம்
601 நற்றுணை லிங்கம்
602 நறுமண லிங்கம்
603 நன்மணி லிங்கம்
604 நன்மை லிங்கம்
605  நனி லிங்கம்
606 நா லிங்கம்
607 நாக லிங்கம்
608 நாச்சி லிங்கம்
609 நாசி லிங்கம்
610 நாட லிங்கம்
611 நாடி லிங்கம்
612 நாத்திர லிங்கம்
613 நாத லிங்கம்
614 நாரண லிங்கம்
615 நாரணி  லிங்கம்
616 நாரி லிங்கம்
617 நாபிச லிங்கம்
618 நாயன லிங்கம்
619 நாயாடி லிங்கம்
620 நாவ லிங்கம்
621 நாற்கர லிங்கம்
622 நான்மறை லிங்கம்
623 நான்முக லிங்கம்
624 நிகர் லிங்கம்
625 நித்தில லிங்கம்
626 நித்ய லிங்கம்
627 நிதர்சண லிங்கம்
628 நிதி லிங்கம்
629 நிபவ லிங்கம்
630 நிர்மல லிங்கம்
631 நிரஞ்சன லிங்கம்
632 நிரம்ப லிங்கம்
633 நிருதி லிங்கம்
634 நிமல லிங்கம்
635 நில லிங்கம்
636 நிலை லிங்கம்
637 நிவேத  லிங்கம்
638 நிறை லிங்கம்
639 நிஜ லிங்கம்
640 நிசாக லிங்கம்
641 நீடு லிங்கம்
642 நீடுநீர் லிங்கம்
643 நீத்தவ லிங்கம்
644 நீதி லிங்கம்
645 நீர்ம லிங்கம்
646 நீரச லிங்கம்
647 நீரேறு லிங்கம்
648 நீல லிங்கம்
649 நீள்முடி லிங்கம்
650 நீறாடி லிங்கம்
651 நீறு  லிங்கம்
652 நுதற் லிங்கம்
653 நுதி லிங்கம்
654 நூதன லிங்கம்
655 நெகிழ் லிங்கம்
656 நெஞ்சு லிங்கம்
657 நெட்ட லிங்கம்
658 நெடு லிங்கம்
659 நெய் லிங்கம்
660 நெற்றி லிங்கம்
661 நெறி லிங்கம்
662 நேச லிங்கம்
663 நேர் லிங்கம்
664 நைச்சி லிங்கம்
665 நைவேத்ய லிங்கம்
666 நொச்சி லிங்கம்
667 நோக்கு லிங்கம்
668 நோன்பு லிங்கம்
669 பசு லிங்கம்
670 பசுவ லிங்கம்
671 பசுபதி லிங்கம்
672 பஞ்ச லிங்கம்
673 பஞ்சாட்சர லிங்கம்
674 பட்டக லிங்கம்
675 படரி லிங்கம்
676 படிக லிங்கம்
677 பண்டார லிங்கம்
678 பண்டித லிங்கம்
679 பத்ம லிங்கம்
680 பத்ர லிங்கம்
681 பத்திர லிங்கம்
682 பதி லிங்கம்
683 பதிக லிங்கம்
684 பர்வத லிங்கம்
685 பரசு லிங்கம்
686 பரத லிங்கம்
687 பரம லிங்கம்
688 பரமாத்ம லிங்கம்
689 பரமேஸ்வர லிங்கம்
690 பரணி லிங்கம்
691 பரிதி லிங்கம்
692  பவண லிங்கம்
693 பவணி லிங்கம்
694 பவநந்தி லிங்கம்
695 பவழ லிங்கம்
696 பவாணி லிங்கம்
697 பவித்ர லிங்கம்
698 பளிங்கு லிங்கம்
699 பன்னக லிங்கம்
700 பனி லிங்கம் 
701 பரகதி லிங்கம்
702 பராங்க லிங்கம்
703 பராபர லிங்கம்
704 பவநாச லிங்கம்
705 பா லிங்கம்
706 பாக்ய லிங்கம்
707 பாக லிங்கம்
708 பாச லிங்கம்
709 பாசறை லிங்கம்
710 பாசுர லிங்கம்
711 பாத லிங்கம்
712 பாதாள லிங்கம்
713 பாதி லிங்கம்
714 பாதிரி லிங்கம்
715 பார்வதி லிங்கம்
716 பாரதி லிங்கம்
717 பாராயண லிங்கம்
718 பாரி லிங்கம்
719  பாரிஜாத லிங்கம்
720 பாயிர லிங்கம்
721 பாலக லிங்கம்
723 பாலா லிங்கம்
723 பாவை லிங்கம்
724 பானு லிங்கம்
725 பாஷான லிங்கம்
726 பாகோட லிங்கம்
727 பாசுபத லிங்கம்
728 பாணிக  லிங்கம்
729 பார்த்திப லிங்கம்
730 பாநேமி லிங்கம்
731 பாம்பு லிங்கம்
732 பாழி லிங்கம்
733 பிச்சி லிங்கம்
734 பிச்சை லிங்கம்
735 பிட்டு லிங்கம்
736 பிடரி லிங்கம்
737 பிடாரி லிங்கம்
738 பிடி லிங்கம்
739 பிண்ட லிங்கம்
740 பித்த லிங்கம்
741 பிதா லிங்கம்
742 பிம்ப லிங்கம்
743 பிரகதி லிங்கம்
744 பிரகாச லிங்கம்
745 பிரசன்ன லிங்கம்
746 பிரணவ லிங்கம்
747 பிரதர்சன லிங்கம்
748 பிரபாகர லிங்கம்
749 பிரபு லிங்கம்
750 பிரம்ம லிங்கம்
751 பிரம்பு லிங்கம்
752 பிரமிள லிங்கம்
753 பிராண லிங்கம்
754 பிராசித லிங்கம்
755 பிரிய லிங்கம்
756 பிரேம லிங்கம்
757 பிள்ளை லிங்கம்
758 பிழம்பு லிங்கம்
759 பிறவி லிங்கம்
760 பிறை லிங்கம்
761 பீச லிங்கம்
762 பீட லிங்கம்
763 பீடு லிங்கம்
764 பீத லிங்கம்
765 பீதகார லிங்கம்
766 பீதசார லிங்கம்
767 பீதமணி லிங்கம்
768 பீதாம்பர லிங்கம்
769 பீர லிங்கம்
770 பீம லிங்கம்
771 புகழ் லிங்கம்
772 புங்கவ லிங்கம்
773 புங்கவி லிங்கம்
774 புடக லிங்கம்
775 புண்ணிய லிங்கம்
776 புத்தி லிங்கம்
777 புத்ர லிங்கம்
778 புதிர் லிங்கம்
779 புது லிங்கம்
780 புரட்சி லிங்கம்
781 புரவு லிங்கம்
782 பராண லிங்கம்
783 புரி லிங்கம்
784 புருஷ லிங்கம்
785 புருவ லிங்கம்
786 புலரி லிங்கம்
787 புலி லிங்கம்
788 புவன லிங்கம்
789 புற்று லிங்கம்
790 புற லிங்கம்
791 புன்னை லிங்கம்
792 புனித லிங்கம்
793 புனை லிங்கம்
794 புஜங்க லிங்கம்
795 புஷ்கர லிங்கம்
796 புஷ்ப லிங்கம்
797 பூசனை லிங்கம்
798 பூத லிங்கம்
799 பூதர லிங்கம்
800 பூதி லிங்கம்
801 பூபதி லிங்கம்
802 பூபால லிங்கம்
803 பூதவணி லிங்கம்
804 பூர்ண லிங்கம்
805 பூர்த்தி லிங்கம்
806 பூர்வ லிங்கம்
807 பூரணி லிங்கம்
808 பூமித லிங்கம்
809 பூமுக லிங்கம்
810 பூவிழி லிங்கம்
811 பூலோக லிங்கம்
812 பூஜித லிங்கம்
813 பெண் லிங்கம்
814 பெண்பாக லிங்கம்
815 பெரு லிங்கம்
816 பேரின்ப லிங்கம்
817 பேழை லிங்கம்
818 பைரவி லிங்கம்
819பொன்னம்பலலிங்கம்
820 பொன்னி லிங்கம்
821 பொருந லிங்கம்
822 பொருப்பு லிங்கம்
823 பொழி லிங்கம்
824 பொய்கை லிங்கம்
825 போக லிங்கம்
826 போதக லிங்கம்
827 போதன லிங்கம்
828 போதி லிங்கம்
829 போற்றி லிங்கம்
830 போனக லிங்கம்
831 பௌதிக லிங்கம்
832பௌர்ணமி லிங்கம்
833 மகர லிங்கம்
834 மகவு லிங்கம்
835 மகா லிங்கம்
836 மகிழ லிங்கம்
837 மகுட லிங்கம்
838 மகுடி லிங்கம்
839 மகேச லிங்கம்
840 மகேஸ்வர லிங்கம்
841 மங்கள லிங்கம்
842 மஞ்சரி லிங்கம்
843 மஞ்சு லிங்கம்
844 மண லிங்கம்
845 மணி லிங்கம்
846  மதன லிங்கம்
847 மதி லிங்கம்
848 மந்தாரை லிங்கம்
849 மந்திர லிங்கம்
850 மயான லிங்கம்
851 மயூர லிங்கம்
852 மரகத லிங்கம்
853 மருக லிங்கம்
854 மருத லிங்கம்
855 மருது லிங்கம்
856 மலர் லிங்கம்
857 மழலை லிங்கம்
858 மவுலி லிங்கம்
859 மன்னாதி லிங்கம்
860 மனித லிங்கம்
861 மனோ லிங்கம்
862 மலை லிங்கம்
863 மாங்கல்ய லிங்கம்
864 மாசறு லிங்கம்
865 மாசி லிங்கம்
866 மாசிவ லிங்கம்
867 மாட்சி லிங்கம்
868 மாணிக்க லிங்கம்
869 மாதங்கி லிங்கம்
870 மாதவ லிங்கம்
871 மாதவி லிங்கம்
872 மாது லிங்கம்
873 மாதேவி லிங்கம்
874 மாமிச லிங்கம்
875 மாயை லிங்கம்
876 மாலை லிங்கம்
877 மார்க்க லிங்கம்
878 மிசை லிங்கம்
879 மிண்டை லிங்கம்
880 மீளி லிங்கம்
881 மீன லிங்கம்
882 முக்கனீ லிங்கம்
883 முக்தி லிங்கம்
884 முகுந்த லிங்கம்
885 முடி லிங்கம்
886 முத்து லிங்கம்
887 மும்மல லிங்கம்
888 முரசு லிங்கம்
889 முருக லிங்கம்
890 முல்லை லிங்கம்
891 முனி லிங்கம்
892 மூர்த்தி லிங்கம்
893 மூல லிங்கம்
894 மெய் லிங்கம்
895 மேக லிங்கம்
896 மேதினி லிங்கம்
897 மேவி லிங்கம்
898 மேனி லிங்கம்
899 மொழி லிங்கம்
900 மொட்டு லிங்கம்
901 மோட்ச லிங்கம்
902 மோன லிங்கம்
903 மோலி லிங்கம்
904 மௌன லிங்கம்
905 யதி லிங்கம்
906 யாக லிங்கம்
907 யாசக லிங்கம்
908 யாத்திரை லிங்கம்
909 யுக்தி லிங்கம்
910 யுவ லிங்கம்
911 யோக லிங்கம்
912 யோகி லிங்கம்
913 ரகசிய லிங்கம்
914 ரம்ய லிங்கம்
915 ரமண லிங்கம்
916 ரத்தின லிங்கம்
917 ரத லிங்கம்
918 ராக லிங்கம்
919 ராட்சச லிங்கம்
920 ராவண லிங்கம்
921 ராஜ லிங்கம்
922 ரிஷப லிங்கம்
923 ரிஷி லிங்கம்
924 ருத்ர லிங்கம்
925 ரூப லிங்கம்
926 ரௌத்திர லிங்கம்
927 லகரி லிங்கம்
928 லாவண்ய லிங்கம்
929 லீலா லிங்கம்
930 லோக லிங்கம்
931 வசந்த லிங்கம்
932 வஞ்சி லிங்கம்
933 வடுக லிங்கம்
934 வர்ம லிங்கம்
935 வர லிங்கம்
936 வருண லிங்கம்
937 வல்லப லிங்கம்
938 வழக்கு லிங்கம்
939 வள்ளுவ லிங்கம்
940 வளர் லிங்கம்
941 வன லிங்கம்
942 வனப்பு லிங்கம்
943 வஜ்ர லிங்கம்
944 வாகை லிங்கம்
945 வாசி லிங்கம்
946 வாணி லிங்கம்
947 வாயு லிங்கம்
948 வார்ப்பு லிங்கம்
949 வாழ்க லிங்கம்
950 வான லிங்கம்
951 வானாதி லிங்கம்
952 வார்சடை லிங்கம்
953 விக்ர லிங்கம்
954 விக்ரம லிங்கம்
955 விகட லிங்கம்
956 விகார லிங்கம்
957 விகிர்த லிங்கம்
958 வசித்ர லிங்கம்
959 விடங்க லிங்கம்
960 வித்தக லிங்கம்
961 விதி லிங்கம்
962 விது லிங்கம்
963 விந்தை லிங்கம்
964 விநாசக லிங்கம்
965 விபீஷ்ண லிங்கம்
966 விபூதி லிங்கம்
967 விமல லிங்கம்
968 வியூக லிங்கம்
969 விருட்சக லிங்கம்
970 வில்வ லிங்கம்
971 விளம்பி லிங்கம்
972 விழி லிங்கம்
973 வினைதீர் லிங்கம்
974 வினோத லிங்கம்
975 விஜய லிங்கம்
976 விஷ்ணு லிங்கம்
977 விஸ்வ லிங்கம்
978 விஸ்வேஸ்வரலிங்கம்
979 வீர லிங்கம்
980 வீணை லிங்கம்
981 வெற்றி லிங்கம்
982 வெற்பு லிங்கம்
983  வெள்ளி லிங்கம்
984 வேங்கட லிங்கம்
985 வேங்கை லிங்கம்
986 வேட்டுவ லிங்கம்
987 வேத லிங்கம்
988 வேதாந்த லிங்கம்
989 வேம்பு லிங்கம்
990 வேழ லிங்கம்
991 வேள்வி லிங்கம்
992 வைகை லிங்கம்
993 வைர லிங்கம்
994 வைத்திய லிங்கம்
995 வைய லிங்கம்
996 ஜடா லிங்கம்
997 ஜதி லிங்கம்
998 ஜல லிங்கம்
999 ஜீவ லிங்கம்
1000 ஜெக லிங்கம்
1001 ஜெய லிங்கம்
1002 ஜென்ம லிங்கம்
1003 ஜோதி லிங்கம்
1004 ஸ்ரீ லிங்கம்
1005 ஸோபித லிங்கம்
1006 ஹேம லிங்கம்
1007 ஐஸ்வர்ய லிங்கம்
1008 சுப லிங்கம்

Friday 22 June 2018

மணி ஓசை ஒலிக்கும் பாறை - வேலூர் ராணிப்பேட்டை






சப்தகிரி மலை - சுயம்பு நரசிம்மர்

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில், 
போளூர்.
திருவண்ணாமலை.

மூலவர்:
இலட்சுமிநரசிம்மர்
தாயார்:
கனகவள்ளி

சுயம்பு ஆன நரசிம்மர் தெற்கே திருவண்ணாமலையை
பார்த்து அமர்ந்துள்ளார்
 
லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில்   போளூரில் உள்ள சப்தகிரி மலையில் அமைந்துள்ளது. 

இந்த சப்தகிரி மலை சமஸ்கிருதத்தில்  "மலை செல்வம்" என பொருள். 

சப்தகிரி என்றால் ஏழு மலை எனவும்
பொருள்.

சுயம்பு  நரசிம்மர் : 

புராண காலத்தில் மலை உடைக்கும் தொழிலாளர் 
குழு சப்தகிரி மலையை உடைத்துக்கொண்டு இருந்தபோது ஒரு தொழிலாளி  உடைத்த  
கல்லில் இருந்து ரத்தம் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
அனனவரும் அதிர்ச்சி அடைந்து பயந்து மலையை விட்டு இறங்கி  விடுகின்றனர்.  

அதே இரவு, 
இறைவன் நரசிம்மர்  பக்தர்  ஒருவரின் கனவில் வந்து இறைவன் நரசிம்மர்
நான் சப்தகிரி மலையில்   சாந்த மூர்த்தியாக எழுந்தறியுள்ளேன் என கூற

அடுத்த நாள், பக்தர் கனவு தகவலை  இந்த கிராமமக்களிடம் தெரிவிக்க அனைத்து கிராம மக்களும் மலை ஏறி  வந்து பார்க்க இறைவனின் சிலை இருந்தது. 
இரத்த வெள்ளத்தில் இருந்த நரசிம்ம மூர்த்தியை பார்த்து ஆனந்தப்பட்டனர்.

அனைத்து கிராம மக்களும் ஒன்றாக கூடி  ஒரு  மகா மண்டபம் கட்ட முடிவு செய்து கட்டியும் முடிக்கின்றனர்.

பின்னர் பெருமாளுக்கு ஒரு கோவிலையும் கட்டினர்.
பின்னர் மகாலெட்சுமிக்கும் ஒரு சிறிய கோவிலை கட்டிய மக்கள் பக்தி பரவசத்துடன் இறைவனை வழிபட்டனர்.

குலஸ்தியர் & புலஸ்திய மகரிஷி.

 இறைவன் நரசிம்மர் அழைத்ததின் பேரில்  சகோதரர்கள்  
குலஸ்தியமகரிஷி  புலஸ்திய மகரிஷி.
இந்த கோயிலுக்கு வருகின்றனர்.

இந்த இரண்டு ரிஷிகளும்  தீவிர பெருமாள் பக்தர்கள் ஆவார்.
 
இந்த இரண்டு முனிவர்கள் செய்த  தவத்திற்கு  இறைவன் நரசிம்மர் ஈர்க்கப்பட்டு  இரண்டு ரிஷிகளுக்கும் 
நரசிம்மர் ஒரு மாம்பலழத்தை கொடுத்தார். பழத்தை ஒருவர் மட்டும் சாப்பிடவேண்டும் என்றார்.
அந்த மாம்பலத்தை யார் சாப்பிடுவது என சகோதரர்கள் இருவருக்கும் சண்டை வந்தது.
தான் மாம்பலத்தை சாப்பிடும் எண்ணம் கொண்டு
புலஸ்திய மகரிஷி அவரின்
இளைய சகோதரர் குலஸ்தியரிஷியின் கைகளை வெட்டிவிடுகிறார்.. 
கைகள் இழந்த நிலையிலும் 
அவர்  செய்யார் சென்று குளித்து (3 கி.மீ. போளூரில் இருந்து) 48 நாட்கள் (அதாவது 3 மண்டலம்)  இந்த சப்தகிரி மலையை வளம் வருகிறார். 
48ம் நாள் முடிவில் குலஸ்திய மகரிஷி கைகள் இரண்டும் திரும்ப பெறுகிறார்.
நரசிம்மரை வேண்டி நிற்க மாயாஜாலம் போல கைகள் இரண்டும் வளர்ந்தது.
இறைவனின் லீலையை நினைத்து புலஸ்திய முன்வரும் ஏனையோரும் மிகுந்தசந்தோஷம் அடைகிறார்கள்.

புலஸ்தியமகரிஷி மூலம் உற்சவ நரசிம்மர் பிரதிஷ்டை செய்ய எண்ணிய நரசிம்மர் அவரின் கனவில் வந்து உற்சவர் சிலை இருக்கும் இடத்தை தெரியப்படுத்தவே 
உற்சவர் கறபூண்டி செய்யாரில் இருப்பதை உணர்த்தவே 
அவ்வாறே புலஸ்தியர் உற்சவ மூர்த்தியை மலையின் கீழே பிரதிஷ்டை செய்கிறார்.

விஜய நகர மன்னர்களின் காலத்தில் இக் கோவில் விரிவாக்கம் கண்டுள்ளது.
ருக்குமணி சத்யபாமா வேணூகோபால் சுவாமிக்கு தனி கோவில் எடுத்தனர்.
 
இக் கோவில் மலை ஏற 840 படிகள் அமைத்தும் கொடுத்தனர்.

மீண்டும் 160  வருடங்களுக்கு முன்
சீனிவாச ராவ் என்பவரின் கனவில் வந்து பெரிய மணி கோவிலுக்கு வாங்கி தர வேண்டும் என சொன்னவுடன் இப்போது கோவிலில் உள்ள மணியை வாங்கி கொடுத்தார்.

இம் மலையில் அன்ன குகை எனும் ஒரு குகை உள்ளது.
இக் குகையில் அச்சுத தாசர்
 ஹரி தாஸ், ஸ்ரீ ஞானாந்த  சுவாமிகள் மற்றும் சித்தர் வினோபா  இங்கே  குகைகளில் தியானம் செய்துள்ளனர்.

இங்கே. இரண்டு நீர் நீரோடைகள்  உள்ளன  ஒன்று மேல் மலையில் உள்ள பிரம்ம தீர்த்தம் மற்றும் கீழே உள்ள  புலஸ்தியர்  தீர்த்தம். 

கீழே ஒரு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. 

இம்மலையில்
இரண்டு கழுகுகள் என்றும் சுற்றி பறந்த வண்ணம் உள்ளது. இவை
குலஸ்தியர் & புலஸ்திய மகரிஷ ஆவர்..

இருவருமே கழுகுகளாய் மாறி இறைவனை சுற்றுகின்றனர்..

இரண்டு சகோதரர்கள் புலஸ்தியர் மற்றும் குலஸ்தியர் மலையாகவும் உள்ளனர்.
இது சப்தகிரிக்கு  எதிரே உள்ளது 
இம் மலை எதிர் சப்தகிரியாக போற்றப்படுகிறது.

இந்த இடம் மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் அனைத்து பிரார்த்தனைகளுக்கும்  செவிசாய்க்கும் இறைவனை இங்கே தரிசிக்கலாம்.

திரு. சேகர் பட்டாசாரியார் இக்கோவிலின் பட்டர்.
மொபைல்: +91 98423 07594/94430 98358 

காலை  4:30  மணி முதல்  இரவு  8.30.
வரை கோவில் திறந்திருக்கும்.

கும்பகோணத்தில் இருந்து 209km
கும்பகோணத்தில் இருந்து விருத்தாசலம் திருக்கோவிலூர் திருவண்ணாமலை சென்று போளூர் சென்றடையலாம்.


பட்டிவிநாயகர்

சிவாயநம

திருச்சிற்றம்பலம்

பட்டிவிநாயகர்

அருள்மிகு பட்டிவிநாயகர் பேரூர் தல விநாயகர் ஆவார். பட்டிப்பெருமான் திருக்கோயிலிலிருந்து நொய்யல் ஆற்றுக்குப் போகும் பாதையில் சிறிது மேற்குப்புறம் தள்ளியுள்ளது. இவரது திருக்கோயில். சுற்றுவட்டார மக்கள் பட்டீசுவரன், பட்டியப்பன் என்று பேரூத்தலத்து இறைவன் பெயரை வைத்துக்கொள்ளுவது போலத் தலவிநாயகரான இவர் பெயயரையும் தங்கள் குழந்தைகளுக்கு வைப்பர்.

பட்டிவிநாயகர் கோயில் மிகப் பழங்காலத்தது. திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரைப் போல இப்பிள்ளையாரும் உளியால் செதுக்கப்படாதவர். ஆவார். தானே தோன்றிய (சுயம்பு) மூர்த்தி ஆவார். இவரது கருவறையின் கீழ் நச்சுப் பொய்கை இருப்பதாகக் கூறப்பெறுகிறது. ஆனால் இதற்கான எழுத்துச் சான்று ஏதும் இல்லை.

பேரூர்ப் பட்டிப் பெருமான் திருக்கோயிலுக்கு வருவோர் முதலில் தல விநாயகரான பட்டிவிநாயகரை வழிபட்டுவிட்டுத்தான் ஏனைய மூர்த்திகளை வழிபட வேண்டும். பேரூர்ப்புராண ஆசிரியரான கச்சியப்ப முனிவர் இவருக்கே முதலில் கடவுள் வணக்கம் பாடியுள்ளார்.

மிகப்பழங்காலத்தில் பேரூர்ப் பகுதி அடர்ந்த காடாக இருந்தது. அரச மரங்களே நிறைந்து இருந்தன. இதனால் பேரூருக்கு அரசவனம் என்னும் பெயரும் உண்டு. இக்காட்டில் மாடுகள் அடைக்கப்படும் ஒரு பெரிய பட்டி ஒன்று இருந்தது. மாடுகளோடு காமதேனு என்ற தெய்வப்பசுவும் அதன் கன்றான பட்டியும் மேய்ந்து கொண்டிருந்தன. கன்றின் கால் பாம்புப் புற்றில் சிக்கிக் கொள்ளக் காமதேனு தன் கொம்பால் புற்றினை இடித்தது. உள்ளிருந்த இறைவன் தன் திருமுடியில் கன்றின் கால் தழும்பையும், காமதேனுவின் கொம்புத் தழும்பையும் ஏற்றார். பட்டியில் இருந்ததால் பட்டிப்பெருமான் ஆனார். காமதேனுவின் மகள் பட்டியால் வெளிப்பட்டதால் பட்டிப் பெருமான் எனவும் அழைக்கப்பெற்றிருக்கலாம். இத்தலத்தில் இருப்பதால் விநாயகப் பெருமானும் பட்டிவிநாயகர் என்றே அழைக்கப்பெறுகிறார்.

*கங்கையும் பனிவெண் திங்களும் விரைத்த கடுக்கையந் தொங்கலும் அரவும்*

*தங்கு பொற்சடையும் முக்கணும் தாதை தாணு என்று உணர்த்த மென்மலர்க்கை*

*அங்குச பாசமணிந்து வெற்பு உயர்த்த ஆரணங்கு அன்னை என்றுணர்த்தி*

*வெங்கலி முழுதும் துமித்தருள் பட்டிவிநாயகன் சேவடி பணிவாம்*

என்று கச்சியப்ப முனிவர் வழி நின்று பணிந்து பட்டிவிநாயகர் அருள் பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்

போற்றி விண்ணப்பம்

*ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய போற்றி விண்ணப்பம்
*

ஐயனே அரசே போற்றி அருமறைப் பொருளே போற்றி
துய்யனே துணையே போற்றி தூமணித் திரளே போற்றி
மெய் அருள் விளைவே போற்றி வெற்றிவேல் ஏந்து பூவன்
கையனே போற்றி எங்கள் கடவுளே போற்றி போற்றி                 

போற்று விண்ணவர்கோன் போற்றி புரிதவத் தொண்டர்க்கு இன்பம்
ஆற்றுநல் அழகன் போற்றி ஆடும் அம்பரியோன் போற்றி
நீற்றினைப் புனைந்தமேனி நிலவு அருட்குன்றம் போற்றி
சீற்றம் எம் மேற்கொளா ஓர் சிவசுப்பிரமணியம் போற்றி     

மணி அணி மால்விரிஞ்சன் மற்று உள கணங்கள் யாவும்
பணிய நின்றவனே போற்றி பரமனே போற்றி அன்பர்
அணி அடி அலரே போற்றி ஆக்கி நன்கு அளித்து மாய்க்கும்
குணம் உடை அத்தா போற்றி குமரவேள் போற்றி போற்றி.         

போற்றி வந்து ஆளும் உன்றன் பொன் அடிக் கமலம் போற்றி
தேற்றுவார் உன்னை அல்லால் திக்கு வேறு இல்லை போற்றி
மாற்று அரும் பிறவிக் காட்டை மடிக்க மெய்ஞ்ஞானத் தீயை
ஏற்றும் எஃகு உடையாய் போற்றி எங்குறை தவிர்ப்பாய் போற்றி.

அகத்தியர் பாடல்

சித்தர் நாயகன் ;  தமிழ் பித்தர் சேவகன்
சக்தி தாயவள் ; ப்ரிய பக்த பாலகன்
அத்தி மா முகன் ; வினை தீர்த்தமானவன்
தீர்த்த மாமலை ; திவ்ய ஆர்த்தி மங்களன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

கர்மத்தின் பலன் என் கனவில் சொன்னவன்
புண்யமாய் நிலம் இங்கு தானம் கொண்டவன்
என்னுடன் இரு என்று சொன்ன மன்னவன்
உன்னை கைவிடேன் என்று என்னில் நின்றவன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

தொலைந்த ஆவினம் தனை மீட்டு வருபவன்
தோஷம் நீங்கவே வழி காட்டி தருபவன்
குழந்தை வேண்டுவோர் மனை மழலை ஆனவன்
குழந்தை வேலவன் உபதேசமானவன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

ஆன மாமலை அடி அடக்கி ஆண்டவன்
வான மாமலை பதி வாழும் வாமனன்
ஊனமானுடம் உணவூட்டும் தாயவன்
தாணுமாலயன் தந்த பொதிகை நாயகன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

உச்சி வேளையில் உரையாடும் அச்சுதன்
சச்சிதானந்தம் ஆனா ஷண்முகன் சிவன்
சித்தர்கள் கணம் புடை சூழ வந்தவன்
பக்தர்கள் மனம் உரை மாய பக்குவன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

பச்சை முண்டுடன் திகழ் பத்ம பூஷணன்
இச்சையின் படி வரம் நல்கும் ஈஸ்வரன்
சப்த மண்டலம் தொழும் ஸ்வஸ்தி வாசகன்
சயன ஈஸ்வரன் தீர்த்த மலையில் வாழ்பவன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

உப்பு தேகத்தை காய கற்பம் செய்பவன்
ஒப்பிலாததோர் தூய வாழ்வு தருபவன்
அற்புதங்களாம் அருள் ஆற்றல் உள்ளவன்
பொற்பதம் தொழும் அடியார்க்கு நல்லவன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

அருணன் சந்திரன் அவன் அக்னி நேத்திரம்
அன்பர் அனைவரும் அகஸ்த்ய கோத்திரம்
வருண பாலகன் கொடை வைத்ய சாஸ்திரம்
வாழ்க வாழ்கவே அகஸ்தியர் வாழும் ஆஸ்ரமம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

அம் அகஸ்தீசா
உம் அகஸ்தீசா
மம் அகஸ்தீசா
நம் அகஸ்தீசா
மம் அகஸ்தீசா
சிம் அகஸ்தீசா
வம் அகஸ்தீசா
யம் அகஸ்தீசா
ஓம் அகத்தீஸ்வராய
ஓம் அகத்தீஸ்வராய
ஓம் அகத்தீஸ்வராய
ஓம் அகத்தீஸ்வராய....   சிவாய நம ஓம்






அகத்தியர் தன்னுடைய நூலில் சொன்ன மரணத்தைப்பற்றிய அபூர்வ ரகசியம்

அகத்தியர் தன்னுடைய நூலில் சொன்ன மரணத்தைப்பற்றிய அபூர்வ ரகசியம்
==============================

ஒரு ஜீவன் உடலைவிட்டு பிரிந்த பிறகு 12 நாட்கள் காரியங்கள் செய்ய வேண்டும் என்ற நியதிஇருக்கிறது.
பொதுவாக இதை பலவிதமாக கூறலாம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு விதமாக வழக்கம் இருக்கிறது.

இந்த வழக்கத்தை என்னால் மீற முடியவில்லை என்பவரை விட்டுவிடலாம்.
ஒரு குடும்பத்திலே ஒரு ஆத்மா பிரிகிறது என்றால் அதனால் அந்த குடும்ப உறுப்பினர்கள் மனோரீதியாக கடுமையான உளைச்சல் அடைகிறார்கள் என்றால் அந்த மனம் ஆறுதல் பெரும் அளவிற்கு கால அவகாசத்தைக் கொடுப்பது தவறல்ல.

அங்ஙனம் இல்லாமல் அகவை எனப்படும் வயது அதிகமாகி ஒரு ஆத்மா பிரிகிறது என்றால் பெரிய அளவிலே அந்த குடும்பத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லையென்றால் வழக்கம் போல் அவர்கள் இறை சார்ந்த கடமைகள் செய்யலாம்.
ஆலயம் செல்லக்கூடாது. அங்கு செல்லக்கூடாது இங்கு செல்லக்கூடாது என்பதெல்லாம் எதற்காக கூறப்பட்டது என்றால் ஒரு குடும்பம் ஒருவனை மிகவும் பால்ய வயதில் இழந்து விட்டால் அந்தக் குடும்பம் அந்த இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் தடுமாறும்.வேதனைப்படும்.
அதிலிருந்து அந்த குடும்ப உறுப்பினர்கள் மாறுவதற்கு சில காலங்கள் அவகாசம் வேண்டும்.

அதுவரை அந்த குடும்ப உறுப்பினர்கள் இயல்பு வாழ்விற்கு வர இயலாது என்பதற்காகத்தான் இது போன்ற சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன.
இது மனித ரீதியானது.
ஆத்மா என்பது நீ கூறுவது போல படிப்படியாக இத்தனை தினங்கள், அத்தனை தினங்கள் என்பதெல்லாம் முழுக்க, முழுக்க எல்லா ஆத்மாக்களுக்கும் பொருந்தாது.
இவையும் வினைப்பயனுக்கேற்ப மாறும் அஃதாவது உடலை விட்டு பிரிந்த அடுத்த கணமே மறுபிறப்பு எடுக்கக்கூடிய ஆத்மாக்கள் உண்டு.

மனித கணக்கிலே பல வருடங்கள் கழித்து பிறவியெடுக்கூடிய ஆத்மாக்களும் உண்டு.
அடுத்த கணமே இறையோடு இரண்டற கலக்கின்ற ஆத்மாக்களும் உண்டு.

அடுத்த கணமே தேவர்களாக, தேவதைகளாக மாறுகின்ற ஆத்மாக்களும் உண்டு.
பாவங்கள் அதிகமாகவும், புண்ணியங்கள் குறைவாகவும் செய்தவர்கள் பெரும்பாலும் அந்த உடலையும் அந்த இல்லத்தையும் சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.

இன்னும் கூறப்போனால் உடலை விட்டு பிரிவதுதான் மரணம் என்கிற நிகழ்வு.
இந்த நிகழ்வு தனக்கு நிகழ்ந்ததையே அறியாமல் குழப்பத்தோடு அலைவார்கள்.

இந்த குழப்பத்தை நீக்கி அந்த ஆத்மாவை நல்வழிப்படுத்தத்தான் இறை வைத்துள்ள சடங்குகள்..

 ################################

இறந்தவர்களை எரிக்க வேண்டும்,அடக்கம் ஆனவர்களை மண் மறைவு செய்ய வேண்டும்:

வியாச முனிவர்தான் இறப்பவர்களை எரிக்கும் சட்டத்தை கொண்டு வருகின்றார்.ஒரு இறக்கும் சடலம் நீதி படி வாழாததால் அது புதைத்த ஒரு குறிப்பிட்ட அளவுகோளில் உள்ள இடத்தை அது அசுத்த படுத்தும்.ஆதலால் இறந்த உடலை எரிக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வருகின்றார்கள்.

மேலும் இறந்த உடலில் முதல் 2 மதங்களில் தோல்கள் தேயும்,பின்னர் சதை மறையும்,பின்னர் எலும்பு தேய ஆரம்பிக்கும்,கடைசியில் உள்ளது நரம்பு.நம் உடலிலுள்ள நரம்பின் நீளம் 5000 கிலோமீட்டருக்கு மேல் இருக்கும்.அது அத்தனையும் கரைய 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று மெய்ஞானிகளின் கணக்கு.அப்படி அது அழியும் வரை இறந்த அந்த உயிருக்கும் உபாதை என்றே,அதனை எரிக்க சட்டம் எடுத்து வைத்தது.

அப்படி நரம்பு அழிந்த பின் அதற்கு "அலகை"(பிசாசு) தேகம் கொடுக்கபெற்று பின்னர் நரகில் தள்ளப்படும்.

மரணத்தின் வேதனையை குறிப்பிடும் பொழுது ,ஒருவனை ஒரு மரத்தில் கட்டி எல்லா அவயவங்களையும் கட்டி போட்டு வாய்க்கு பூட்டு போட்டு விட்டு,சுற்றி தீ வைத்து எரித்தால் என்ன வேதனை இருக்குமோ அதனை விட 70,000 மடங்கு அதிகம் இருக்கும் என்று வேதம் குறிப்பிடுகின்றது.இதையே
 மரணம்=மாரணம்=மா+ரணம்

மனித உயிர் 6 உயிர்களின் கலப்பு,இதை 7 வது உயிராகிய "ஆவல்" என்னும் உயிரால் கட்டப்பட்டு இந்த மனித தேகம் எடுக்கின்றது.

எரிக்கும் பொழுது இந்த ஆவல் என்னும் உயிர் பிரிந்து அந்த 6 உயிரும் களைந்து விடும்.ஆதலால் அவர்களுக்கு வேதனை கிடையாது.இந்த 6 உயிர் சேருவதற்கு எத்தனனயோ பிறவி எடுத்துதான் அது கிட்டுமாம்.ஆதலால் மனித பிறவி சாதாரண பிறவி அன்று.தேவர்களாக மாறுவதற்கு உரிய வித்தே மனித பிறவி.இந்த பிறவியை வீனாக்கிவிட்டால்,அதை விட தோஷிதனம் படைத்தவன் இந்த உலகில் வேறு ஒருவனும் இல்லை.
எனவேதான் இறந்தவர்கள் எரிக்க வேண்டும்,அடக்கம்(ஜீவசமாதி) ஆனவர்களை மண் மறைவு செய்ய வேண்டும் என்று சட்டம் பிறப்பிக்க பட்டது.

Thursday 21 June 2018

வியாழ பூஜை 21.06.2018 பொகளுர் பீடம்






பகழிக்கூத்தர்

___________________________________
🌸 *என்ன?, முருகன் சொன்னானா?, நீ எழுதினாயா?..போயா!*🌸
_____________________________________
மதுரையில் ஒரு சிற்றூரில், அரசர்களின் போர்த் தொழிலுக்கு வேண்டிய ‘பகழி’ (அம்பு) களைத் தயாரிக்கும் தொழிலில் தலைசிறந்து விளங்கியவர்.

உத்தமப் பிள்ளையொன்று உமை சுதனருளால் உதித்தது. குழந்தைக்கு, *கூத்தன்* எனப் பெயரிட்டார்கள் பெற்றோர்கள்.

அக்குழந்தைதான், *பகழிக்கூத்தர்* எனவானார்.

பகழிக்கூத்தருக்கு முன்வினைத் தொடர்பால், கலைமகளின் திருவருள் எளிமையாகக் கைகூடி வரப்பெற்றது.

ஆனால், கல்வி கேள்விகளில் தலைசிறந்த பகழிக் கூத்தரோ, எந்த தெய்வத்தின் மீதும், யாவர் மீதும் பாடல்கள் இயற்ற மாட்டேன் என்று வைராக்கியம் கொண்டிருந்தார்.

பலரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். பகழிக்கூத்தா!, அருந்தமிழ்ச் செல்வத்தை கலைமகள் உனக்கு அருமையாக கொடுத்திருக்கிறாள்.

நீ சென்று ஆண்டவனையோ, நல்லரசர்களையோ பாடாமல், உனக்கிருக்கும் கலைமகள் செல்வத்தை இப்படி வீணடிக்கிறாயே? என்றார்கள்.

இவ்வாறு சொன்னவர்களகடம் பகழிகூத்தர்,............

எந்தத் தெய்வம் செந்தமிழில் விருப்பம் உடையதாக இருக்கிறதோ, அந்தத் தெய்வம் தன்மீது பாடும்படியாக எனக்கு கட்டளை இடட்டும்.

அவ்வாறு கட்டளையிட்டால் நான் பாடுகிறேன் என்று கூறினார் பகழிக் கூத்தர்.

இதன் பிறகும் முருகப்பெருமான் சும்மா இருப்பாரா? சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில், தானும் ஒரு
சங்கப் புலவனாக இருந்து, தமிழை வளர்த்தவரல்லவா? முருகன்.

மேலும், ‘தமிழ்க் கடவுள்’ எனப் பெயர் பெற்ற ஒரே பெருந்தெய்வம் ஆயிற்றே!, விடுவாரா?

அதனால், பகழிக்கூத்தரின் கனவில் வந்து, செந்தூர் கந்தக்கடவுள் காட்சி கொடுத்தார்.

பகழிக் கூத்தா! யாம் செந்தூர்வாழ் கந்தப்பெருமான், என்று சொல்லி, பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதத்தையும் ஓர் ஓலைத் துணுக்கையும் தந்து வைத்து மறைந்தார்.

செக்கச் செய்வேலென ஜோதி வடிவில் எழுந்தருளிப் பேசி, இரு பொருட்களையும் தந்து விட்டுப்போன, இமவான் பேரனின் அருளை நினைத்துக் கண் விழித்தார் பகழிக்கூத்தர்.

அவரை மேலும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, முருகப்பெருமான் தந்த இரு பொருட்களும் தன்னருகிலேயே இருப்பதைக் கண்ணாரக் கண்டார்.

என்ன அதிசயம்!, என கண்களைக் கசக்கி மீண்டும் பார்த்தார்.

படுக்கையிலிருந்து துள்ளியெழுந்த பகழிக்கூத்தர், இரு பொருட்களையும் முன்பு விழுந்து விழுந்து வணங்கினார்.

பன்னீர் இலைப் பிரசாதமான விபூதியை நெற்றி நிறையப் பூசிக்கொண்டார், அதனுடன் இருந்த ஓலைத் துணுக்கை எடுத்துப் படித்துப் பார்த்தார்.

அதில்...
*பூமாது போற்றும் புகழ்ப் பகழிக்கூத்தா உன் பாமாலை கேட்கயாம் பற்றேமா? ஏமம் கொடுக்க அறியேமா கூற்றுவன் வாராமல் தடுக்க அறியோமா தாம்?*
என முருகப்பெருமான் எழுதி வைத்துப் போயிருந்ததைப் படித்து முடித்தார்.

பகழிக்கூத்தருக்கு மெசிலிர்த்தது. அலைகட லோரம் அடியார்களின் துன்ப அலைகளை இல்லாமல் செய்வதற்காக எழுந்தருளியிருக்கும், இபமுகன் இளையோனே! உன் கட்டளையை யான் மீறேன்? என்று மனமுருகி வழிபட்டுப் பாடத் தொடங்கினார்.

தமிழ்க் கடவுள் தந்த ஓலைச் சுவடியிலிருந்த முதல் சொல்லான, *பூமாது* என்ற சொல்லையே முதலாவதாக வைத்து, *திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்* பாடினார்.

பாடி முடித்ததும் அதை அரங் கேற்றுவதற்காகத் திருச்செந்தூருக்குச் சென்றார்.

ஆனால், திருச்செந்தூரில் பகழிக்கூத்தருக்குச் சரியான வரவேற்பு இல்லை. பாடிய பாடலை அறங்கைற்றம் செய்யாவிடாது தடுத்தனர்.

அவர்களிடம் எவ்வளவோ முறையிட்டும் பார்த்தார். கந்தவேளின் அறிவுறுத்தலினால் கவி பாடியிருக்கிறேன் என்றார் பகழிக்கூத்தர்.

அதற்கு இசையாமலும், நீ
பகட்டையே பின்பற்றும் கூட்டத்தான், உன் கனவுல வந்து, ஆறுமுகன் சொன்னானாம். இவரு எழுதினாராம் என அவமானப்படுத்தி அனுப்பினார்கள்.

பகழிக்கூத்தருக்கு உள்ளம் கலங்கியது. தனக்கு ஆதரிப்பார் யாரும் இன்றி மனம் புழுங்கினார்.

உணவுக்கும் தங்குமிடத்துக்கு மாக மூன்று மாத காலங்கள் வரை, திருச்செந்தூரில் அல்லாடிப் போனார் பகழிக்கூத்தர்.

சில சமயங்களில் முருகப் பெருமான் மீது, அவருக்கு கோபம் கூட வந்தது. ஆனால், கனவில் வந்து கருணை செய்த கந்தப்பெருமானின் கருணையை எண்ணி எண்ணி களிப்புற்றிருந்து விட்டார்.

மீண்டும் ஒரு நாள், பகழிக்கூத்தரின் கனவில் செந்தூர் இறைவன் காட்சியளித்து, பகழிக்கூத்தா! இந்தா! இதைவைத்துக்கொள்! இங்கேயே இரு! நூல் அரங்கேறும் எனச் சொல்லி மறைந்தார்.

கண் விழித்தார் கூத்தர். அவரருகில் முருகப்பெருமானின் திருமார்பை அலங்கரிக்கும் தங்கப்பதக்கம் இருந்தது கண்டு அதிர்ந்து போனார்.

அதேசமயம், குலசேகரன்பட்டினத்தில் இருந்த காத்தபெருமாள் மூப்பனார் எனும் உத்தமரின் கனவிலும் செந்திலாண்டவன் தோன்றி.........

பக்தா! நம் பகழிக்கூத்தன் நம்மைப் பற்றிப் பிள்ளைத்தமிழ் பாடியிருக்கிறான். அந்நூலை அரங்கேற்றம் செய்ய நீ ஆவன செய்! என்று நடந்ததையெல்லாம் விவரித்துக் கூறி மறைந்தார்.

காத்தபெருமாள் உடனே ஒரு பல்லக்கில் புறப்பட்டுத் திருச்செந்தூரை அடைந்தார்.

அதேசமயம், செந்திலாண்டவரின்  தங்கப்பதக்கக் கவசம் காணாமல் போய்விட்டது. யாரோ களவாடி விட்டார்கள் என்று திருச்செந்தூரில் ஒரே களேபரமாக இருந்தது.

அந்த நேரம் பார்த்து, திருச்செந்தூருக்கு வந்த மூப்பனார், கோயில் நிர்வாகிகளைச் சந்தித்து, கந்தப்பெருமான் கனவில் வந்து சொன்னதைக்கூறி விவரித்தார்.

பகழிக்கூத்தரின் நூல் அரங்கேற்றத்துக்கு ஆவன செய்யவே அடியேன் வந்திருக்கிறேன் என்றார்.

பகழிக்கூத்தரை மட்டமாக எண்ணி ஒதுக்கியவர்கள் இதன்பின்பு, திருந்தினார்கள்.

குகப் பெருமானருளால் நூல் பாடிய, பகழிக்கூத்தரை நாம் அவமானப்படுத்தி விட்டோம். நமக்கு புத்தி புகட்டவே, நாரணன் மருகன் தன் தங்கப்பதக்கத்தைத் தானே கொண்டுபோய், கவிஞரிடம் அளித்துவிட்டார். மன்னித்து விடு முருகா என்று புலம்பியபடியே பகழிக்கூத்தரைத் தேடிப்போனார்கள்.

அங்கு போனதும் காத்தபெருமாள் பகழிக் கூத்தரை வணங்கி, வள்ளி மணவாளனின் உத்தரவைக் கூறினார்.

பகழிக்கூத்தருக்கு உள்ளம் உருகியது. பார்வதி மைந்தா! பன்னிருகை பரமா! பாடல் பாடிய வனுக்குப் பதக்கம் அளித்து மரியாதை செய்யத்தான் இவ்வாறு செய்தாயா? என இருந்த இடத்திலிருந்தே கைகளைக் கூப்பித் திருச்செந்தூரான் சன்னிதியிருந்த திசை நோக்கி விழுந்து வணங்கினார்.

அதன் பிறகு, அனைவருமாக அலைகடலோன்
சன்னிதியை அடைய, *திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்* அரங்கேற்றமானது.

அனைவரும் கூடிக்கேட்டு, ஆனந்தித்தார்கள்.

அப்போது ஆறுமுக வள்ளலே, ஒரு புலவராக அங்கு வந்து கேட்டு ஆனந்தித்தார்.

கூடவே,
*செந்தமிழுக்கு வாய்த்த திருச்செந்திற் பதிவாழும் கந்தனுக்குப் பிள்ளைக்கவி செய்தான்-சொந்தத் திருமாது சேர்மார்பன் தேர்ப்பாகன் வண்மை தருமால் பகழிக் கூத்தன்*
எனும் சிறப்புப்பாயிரமும் கூறியருளி மறைந்தார்.

அரங்கேற்றம் முடிந்ததும் காத்தபெருமாள் மூப்பனார் ஏராளமான பொருளைப் பகழிக்கூத்தருக்கு வழங்கி, பகழிக்கூத்தரிடம் இருந்த முருகப்பெருமானின் தங்கப் பதக்கத்தை மீட்டு, அதை மறுபடியும் செந்தூரான் திருமேனியிலேயே சாத்த ஏற்பாடு செய்தார்.

செந்தூர்க் கூத்தனை வணங்கி, அவன் செய்த அருளாடலை நினைத்தபடியே இருப்பிடம் திரும்பினார் பகழிக்கூத்தர்.

(தர்ப்பாதனர் எனும் வைணவ அந்தணரின் மகன், பகழிக்கூத்தர். அவருக்குக் கடுமையான வயிற்றுவலி வந்து, செந்திலாண்டவனைக் குறித்துப் பிள்ளைத்தமிழ் பாடினார் என்றும், பகழிக்கூத்தர் செங்குந்த மரபைச் சேர்ந்தவரென்றும் தகவல்களும் உண்டு.)

Tuesday 19 June 2018

சர்வமும் தரும் சர்ப்ப சித்தர்

சர்வமும் தரும் சர்ப்ப சித்தர்



13] ஞானியர் கோவில்கள்

முன்பொரு காலத்தில் இயற்கை சீற்றத்தினால் மழையும், புயலும் மாங்காடு பகுதி முழுவதையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது. அந்த சமயத்தில் காள ஹச்த்தியிலிருந்து ஒரு சித்தர் இங்கு வந்தார். பூமிக்கு அடியில் 108 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து. தனது தவத்திற்கு இடையூறு வர கூடாது என்று உடலை பாம்பு புற்றால் மூடி கடும் தவம் செய்யலானார். பின்னர் இப்பகுதி அமைதியான இடமாக ஆனது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆன்மிகப் பெரியவர்கள் ஆராய்ந்த போது அங்கே மிகவும் பெரியதாக ஒரு லிங்க வடிவில் ஒரு கல் தென்பட்டுள்ளது. இங்கே தான் ஸ்ரீ சர்ப சித்தர் ஜீவ சமாதி அடைந்து உள்ளார். அந்த கல் பஞ்ச பூதங்களைக் கட்டுப்படுத்தும் பூதக்கல் என்றும் தெரியவந்துள்ளது. அந்த லிங்கத்தின் மீது இடது புறத்தில் பிறை வடிவமும், வலது புறத்தில் சூரியன் வடிவமும், லிங்கத்தின் மத்தியில் யோகச் சக்கரமும், பிரணவ மந்திரம் பொறிக்கப்பட்டு உள்ளது. பஞ்ச பூதங்களை குறிக்கும் விதமாக ஐந்து தலை நாகம் போன்ற அமைப்பு அந்த லிங்கத்தின் மீது உள்ளது. இங்கே சமாதியாகியுள்ள இந்த சித்தர் வடக்கு நோக்கி சமாதி அடைந்து உள்ளார். இவரது காலம் அறுதியிட்டு கூறமுடியாத அளவுக்கு மிகவும் பழமையானதாகும். சர்ப சித்தர் ஜீவசமாதியாகி, பூதக்கல் உருவாகி 1200 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆதிகாலத்தில் இந்த பூதக்கல்லைப் பார்த்து மக்கள் அச்சமுற்று அப்பகுதி வழியே செல்வதை தவிர்த்துள்ளனர். இதனால் அப்பகுதி புதர் மண்டி காடு போல மாறி, பூதக்கல்லைச் சுற்றி புற்று உருவாகியிருந்துள்ளது. அதன் அருகே செல்பவர்களுக்கு சர்ப்பங்கள்(பாம்புகள்) சீறும் ஓசை கேட்கவே பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்வதைத் தவிர்த்துள்ளனர். காலப்போக்கில் அப்பகுதியில் பூதக்கல் இருப்பதையே மக்கள் மறந்து விட்ட நிலையில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் ஒரு ரியல் எஸ்டேட் கம்பனி இந்த பூத கல் அருகே ப்லாட் போட அதை வாங்கியவர்களில் ரவி சந்திரன்னும் ஒருவர். சித்தர் அடிகளார் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் கனவில் வந்த சர்ப சித்தர், அசரரீயாக சில தகவல்களைக் கூறி, தான் ஜீவ சமாதி அடைந்துள்ள இடத்தையும், அடையாளத்தையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சித்தர் அடிகளார் பல்வேறு கடுமையான சோதனைகளுக்கும், துன்பங்களுக்கும் இடையே சித்தரின் அருளால் ஜீவசமாதி அமைந்திருக்கும் பகுதியை சுத்தம் செய்து, பூஜைகள் செய்து வழிபட்டு வரலானார். அப்பொழுது அதற்க்கு எதிராக சில குண்டர்கள் இடையூறு செய்ய முயற்ச்சி செய்ய. இந்த சித்தரின் பேராற்றல் முன் அது எதுவுமே எடுபடாமல் போனது. பின்னர் படிப்படியாக சர்ப சித்தருக்கு கோவிலும் கட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் இவரது லிங்கம் இடப்புறம் மற்றும் வலப்புறமாக சாய்வது சிறப்பு. இங்கு சென்று வந்தால் நல்ல மாற்றங்களும் திருப்பங்களும் வரும் . முக்கியமாக ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்த சித்தர்ரை தரிசிப்பது. மிக, மிக நன்று. இவருக்கு ஒரு வேஷ்டி. அல்லது மாலை, இரண்டும் முடியவில்லையா. பக்தியுடன் இரு கரங்களையும் கூப்பி வணங்கினாலே போதும். பொதுவாக வியாழன் அன்று சித்தர்கள் தரிசனம் மிக நன்று. பௌர்ணமி மிக, மிக நன்று. வியாழன் அன்று வரும் பௌர்ணமியாக இருந்தால் அன்று நாம் செய்யும் சித்தர் தரிசனம். அதுவும் இது போன்றதொரு சித்தரை நாம் தரிசனம் செய்து அதனால் கிடைக்கும் பலன் பற்றி விவரிக்க உலகில் உள்ள எந்த மொழியிலும் வார்த்தை இல்லை. அடியேனுக்கு அத்தகைய பெரும் பேரு இந்த மாதம் நவெம்பர் 6 இல் கிடைத்தது. அதுவும் திட்டமிட்டு அவ்வாறு செல்லாமல் தற்செயலாக எனக்கு இந்த பெரும் பேர் கிட்டியது.

தொடர்ந்து 15 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி தினத்தில் திருவிளக்கு பூஜையும், மகா சிவராத்திரி தினத்தன்று ஆறு கால பூஜையும், பவுர்ணமி, பிரதோஷம், அமாவாசை தினங்களில் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில் பரிகார பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இதில் மகாசிவராத்திரி அன்று நிறைவு பூஜையின் போது, பக்தர்களே நேரடியாக தங்களின் திருக்கரங்களால் சர்ப சித்தர் உறைந்திருக்கும் ஜீவ பீடமான பூதக்கல்லிற்கு அபிஷேகம் செய்து சித்தரின் அருளாசியைப் பெற்றுச் செல்கின்றனர். சித்தர் அடிகளார் திரு. ஜி.டி. ரவிச்சந்திரன் , சகல கிரக பீடை விலகவும், கல்வி, குழந்தைப் பேறு, திருமணம் கைகூட, சர்ப (நாக) தோஷம் விலக, நோய் குணமடைதல், திருஷ்டி, பித்ருக்கள் சாபம், சித்தர்கள், முனிவர்கள் சாபம் நீங்கவும், குடும்ப ஒற்றுமை, கணவன் மனைவி பிணக்கு நீங்கி நல்வாழ்வு வாழவும் இத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொண்டால் நிச்சயம் பலனளிப்பதாக இங்கு வந்து பயனடைந்த பக்தர்கள் கூறுவதை நாம் கேட்கலாம். பல்வேறு அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், முக்கிய அதிகாரிகள், திரை நட்சத்திரங்கள் இ ங்கு வந்து வேண்டி, அவர்களின் பிரார்த்தனை பலித்துள்ளதாகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். நேரில் சென்று தரிசிப்பவர்களுக்கு அது உண்மைதான் என உணரமுடிகிறது. நல்ல ஆன்மிக அதிர்வுகளை உணரலாம். சர்ப சித்தர் குடிகொண்டுள்ள பூதக்கல் பல்வேறு சூட்சும ரகசியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. தொடர்ந்து இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு அந்த ரகசிய சூட்சும அனுபவங்கள் கிடைத்துள்ளன. குரு கடாட்சம் பெற்றவர்களுக்கும், இறை வழிபாட்டில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் சதா தவ நிலையில் இருக்கும் சர்ப சித்தரின் சகல அனுக்கிரகமும், தெய்வீக அனுபவங்களும் கிடைத்துள்ளன. ஸ்ரீசர்ப சித்தர் யாரிடமும் நன்கொடை, யாசகம் பெறாமல் சித்தரின் அருளாசியுடன் சர்ப சித்தர் ஜீவ பீடத்தை பராமரித்து, பூஜைகளும், நிகழ்ச்சிகளும், விழாக்களும், பவுர்ணமி அன்று அன்னதானமும் வழங்கி, இறைப்பணியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார் சித்தர் அடிகளார் திரு. ஜி.டி. ரவிச்சந்திரன். இயந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில், மன அமைதி பெறவும், பிரச்சனைகள் தீரவும், நல்ல அதிர்வுகள் மூலம் நமக்கெல்லாம் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார் சர்ப சித்தர். ஆன்ம பலத்தை அளிக்கவல்ல அதிர்வலைகள் நிரம்பிய சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தை தரிசனம் செய்து சித்தர்களின் அருளாசியை பெறுங்கள். தொடர்புக்கு: சித்தர் அடிகளார் திரு.ஜி.டி.ரவிச்சந்திரன், சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம், கோவிந்தராஜ்

நகர், மாங்காடு. கைப்பேசி எண்.9789826263.

இது மாங்காடு அம்மன் கோவிலில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிந்த ராஜபுரத்தில் உள்ளது. பஸ் வசதி மாங்காடு கோவிலில் இருந்து இல்லை. ஆட்டோ வசதி உள்ளது.

Thursday 14 June 2018

முத்தைத்தரு பத்தித் திருநகை - பாடல் விளக்கம்

ஓம் முருகா சரணம்!!
இனிய காலை வணக்கம்.
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
முத்தைத்தரு பத்தித் திருநகை
     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
     முற்பட்டது கற்பித் திருவரும்
          முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
          பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
          திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
          சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
     குக்குக்குகு குக்குக் குகுகுகு
          குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
     வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
          குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முத்தைத்தரு பத்தித் திருநகை ... வெண்முத்தை நிகர்த்த, அழகான
பல்வரிசையும் இளநகையும் அமைந்த

அத்திக்கு இறை ... தேவயானை* தேவியின் தலைவனே,

சத்திச் சரவண ... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,

முத்திக்கொரு வித்துக் குருபர ... மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு
விதையாக விளங்கும் ஞான குருவே,

எனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும் முக்கண்ணர்
பரமசிவனார்க்கு

சுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான
ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,

இருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய
இருவரும்,

முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து முக்கோடி
தேவர்களும் அடி பணிய நின்றவனே,

பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத்
தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,

ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக்
கொண்டு பாற்கடலைக் கடைந்து,

ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற்
பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,

பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,
தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான
நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே ... பரிவோடு
என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ? (இப்பாடலின் பிற்பகுதி
முருகன் அசுரர்களுடன் செய்த போரினை விரிவாக வருணிக்கிறது).

தித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து,
சிலம்புகள் அணிந்த

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப் பாதங்களை வைத்து
காளிதேவி

திக்கொட்க நடிக்க ... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம்
செய்யவும்,

கழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,

திக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத்
தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்**

சித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
எனவோத ... 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக'
என்ற தாள ஓசையைக் கூறவும்,

கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை
வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்,

களமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்

குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென
கொட்புற்றெழ ... 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு
'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச்
சுழன்று மேலே எழவும்,

நட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து விரோத
மனப்பான்மையே கொண்ட அசுரர்களை

வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று பலி
கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக,

ஒத்துப் பொரவல பெருமாளே. ... தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த,
போர் செய்யவல்ல பெருமாளே.

குறிப்பு:

முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல் இது.

* தேவயானை கிரியாசக்தி என்பதால், கர்மயோகத்தை முதலில் அனுஷ்டிக்க
அவளைக் குறிப்பிட்டார்.

** அஷ்ட பைரவர்கள்:

அசிதாங்கன், காபாலி, சண்டன், உருரு, குரோதன், சங்காரன்,
பீடணன், உன்மத்தன்.

சேவல் விருத்தம்

அருணகிரியார் அருளிய ஸ்ரீ சேவல் விருத்தம் 

10) மகரசல நிதிசுவற உரகபதி முடிபதற
மலைகள்கிடு கிடுகி டெனவே
மகுடகுட வடசிகரி முகடுபட படபடென
மதகரிகள் உயிர்சிதறவே

ககனமுதல் அண்டங்கள் கண்டதுண் டப்படக்
கர்ச்சித் திரைத் தலறியே
காரைக் பிளந்தசுரர் மாரைப் பிளந்துசிற
கைக் கொட்டி நின்றாடுமாம்

சுகவிமலை அமலை பரை இமயவரை தருகுமரி
துடியிடைஅ நகை அசலையாள்
சுதக் முருகன் மதுரமொழி இபவநிதை குறவநிதை
துணைவன் என திதய நிலையோன்

திகுடதிகு டதிதிகுட தகுடதித குடதிகுட
செககண நகக்கண எனத்
திருநடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்
வேல்திருத் துவசமே.

மகர மீன்கள் மிகுந்து வாழ்கின்ற கடல்வற்றிடவும் ஆதிசேடன்
என்னும் பாம்பின் தலைகள் நடுங்கவும் மலைகள் கிடுகிடுவென
குலுங் கிடவும், சிகரங் களைக் கொண்ட உறுதியான மேரு மலையின்
முகடு படபடவெனக் கலங்கவும் மதயானைகளின் உயிர்
சிதறவும், மேலுலகம் முதலான அண்டங்கள் பல்வேறு
துண்டுகளாய் சிதறவும், காரை நகர் பிளந்து அரக்கர் மாந்தன்
மார்பைப் பிளந்துதன் இறகுகளை அடித்து ஆடிடுவது
எதுவெனின்

சுகவடிவான விமலை, சுடலை, பராசக்தி, இமவரசன் பெற்ற
குமாரி, உடுக்கையன்ன இடையுடைய பாவ மற்றவள்,
மலையரசி ஆகிய அம்பிகையின் திருக்குமாரன் முருகன்
இனிமையான மொழி பேசும் தெய்வயானை, குறமகள், வள்ளி
ஆகிய இருவரின் கேள்வன், என் உள்ளத்தே என்றும்
நிலைத்து நிற்பவன், திகுடதிகு குடதிதிகுடட செககண செககண
என்ற தாள வரிசையுடன் அழகிய நடனம் புரிந்திடும்
மயிலில் வருகின்ற குமார மூர்த்தியும் உயர்வான
குருநாதருமான குமரகுருபரனின் அழகிய கொடியிலுள்ள
சேவலேயாம்.

ஓம் ஹ்ரீம் ஸௌம் சரவணபவ தேவாய நம!!
ஓம் ம்ரீம் மயூராய நம!!

ஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம்

*ஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம்*

தனம் தரும் வயிரவன் தளிரடி பணிந்திடில் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடில் மகிழ்வுகள் வந்துவிடும்
சினம் தவிர்த்தன்னையின் சின்மய புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளம்தர வையகம் நடந்தான் வாரியே வளங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் காணகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

முழு நிலவதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுற செய்திடுவான்
முழு மலர் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தை சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான் மழையெனவே வளங்களை அருள்வான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவையும் தனக்குள்ளே வைப்பான் பூரணனன் நானென்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூஜைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆண்வத்தலையினை கொய்தான் சத்தொடி சித்தானான்
புதரினில் பாம்பை தலியினில் வைத்தான் புண்ணியம் செய் என்றான்
பதரினை குவித்து செம்பினை எரித்தான் பசும்பொண் இடுவென்றான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களை தந்திடுவாய்
ஜெய ஜெய வைரவா ஜெகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பௌர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீப்த்தை ஏற்றிவைத்து பதினெட்டு தடவை பாராயணம் செய்தால், தன விருத்தி கிட்டும். ஒன்பதாவது பௌர்ணமியன்று அவல் பாயாசம் செய்து நிவேதிக்கலாம். அளவற்ற கீர்த்தியையும், தனத்தையும் தரும் இந்த பூஜையை விடாமல் செய்து வளம் பெறுங்கள்.

Wednesday 13 June 2018

ஆதி பழனி ஆண்டவர் திருக்கோவில்

முருகர் சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் தலம்.

அகத்தியர் ஜீவ நாடியில் சுட்டிக்காட்டிய சுயம்பு முருகர் கோவில்.

பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் போது தங்கி தவம் செய்த இடம்.

போக சித்தர் பூசித்த தலம்.

ஓதி மலைக்கு முந்தைய காலத்தில் முருகர் அமர்ந்த தலம்.

அரப்பு மரம் ஸ்தல விருட்சத்தின் அடியில் முருகர் அனைவருக்கும் காட்சி கொடுத்த இடம்.

வற்றாத சுனை அமைந்துள்ள இடம்.

பல ஆயிரம் நோய்களை இலவசமாக தீர்க்கும் சுனை நீர்.

இன்னும் பல அதிசயங்கள் நிறைந்தது.

Aadhi Palaniandavar Thirukkovil
Tiruppur, Tamil Nadu 641697
098422 97056

https://goo.gl/maps/haArZhurA8P2






















































Monday 11 June 2018

சிவார்ப்பனம்




பூமீசுவரர்கோயில், மரக்காணம் (Boomeeswarar Temple, Marakkanam)

சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில், 123ஆவது கிலோமீட்டரில் உள்ள ஊர் மரக்காணம். இது ஏதோ ஒரு காய்ந்துபோன ஊர் என்று பலரும் நினைத்திருக்கிறோம். உண்மையில் இவ்வூர் தமிழனின் தொன்மையையும், நாகரிகத்தையும், வாழ்ந்த உயர் வாழ்வினையும் பறைசாற்றும் மிகமிக முக்கியமான ஊராகும். சங்க இலக்கியங்களில் இவ்வூர் மிகவும் பெருமையாய்க் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வூரிலுள்ள தொன்மையான 'பூமீசுவரர் கோயில்' எனும் இக்கோயில், தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு இராசராசனாரால் கட்டப்பட்டது. உண்மையில் சங்க காலத்திலிருந்தே இங்கு ஒரு கோயில் இருந்திருக்கிறது. பின்னர் ஆழிப்பேரலையில் அழிந்துபோன இக்கோயிலை இராசராசச் சோழன் மீளக் கட்டியுள்ளார் எனவேநாம்கொள்ளவேண்டும். கோயிலின் தற்போதைய நிலை கண்ணில் நீரை வரவழைக்கும் வகையில் உள்ளது.

இக்கோயிலுக்குச் சொந்தமாக ஏராளமான நிலங்களும், உப்பளங்களும் இருந்தும் இந்த நிலையா என எண்ணவைக்கிறது. கோயிலுக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் மூலமாக நல்ல வருவாய் வந்துகொண்டிருந்தும், படிப்படியாகச் சிதிலமடையும் இக்கோயிலைப் நல்லபடியாகப் பராமரிக்க எந்த நடவடிக்கையும் இல்லை. ஏதோ, இப்பொழுதுதான் இக்கோயிலை ஒப்புக்குப் பராமரிப்பு செய்ததைப்போல் சில பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. கோடிக்கணக்கில் சொத்திருந்தும் இந்த பூமீஸ்வரர் நிலை பரிதாபத்திற்குரியதாகவே உள்ளது.

இவ்வளவு பாரம்பரியம் வாய்ந்த கோயிலில் கருவறையின் வெளிச்சுவர் முழுவதும் கல்வெட்டுக்களாய் உள்ளன. இவை படியெடுத்துப் பாதுகாக்கப்பட்டுள்ளனவா எனத் தெரியவில்லை. கோயிலின் தரையிலும் கோயிலுக்கு வெளியே உள்ள தேர்முட்டிக் கோபுரத்திலும் மிக அருமையான படிமக் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோயிலுக்கு வெளியே உள்ள இத் தேர்முட்டிக் கோபுரத்தின் சுவரில் உள்ள இந்த அற்புதமான கற்கள் பெயர்ந்து கீழே விழுந்துள்ளன. இதனை ஒரு மண்டபம் போல் பின்னர் கட்டியதில், இப் படிமக் கற்களும், தூண்களிலுள்ள சிற்பங்களும் முழுக்கப் பூசி மறைக்கப்பட்டுள்ளன. இவை ஆய்வுக்கு உள்பட வேண்டியவை என்பதை யாரும் கருத்தில் கொள்ளவே இல்லை போலும்.

தொன்மையான இக்கோயிலிலுள்ள தூண்கள் ஒவ்வொன்றிலும் பற்பல சிற்பங்கள் உள்ளன. அவையனைத்தையும் மீண்டும் மீண்டும் சுண்ணம் கொண்டு கெட்டியாக, பட்டையாகப் பூசி, அவற்றின் நுணுக்கத்தினைக் கண்டுகளிக்கவியலாமல் செய்துள்ளனர். அதுமட்டுமல்ல. நாற்புறத்தும் சிற்ப வேலைப்பாடு கொண்டுள்ள இத்தூண்களின் இடையே சுவரை எழுப்பி, மூன்று புறங்களிலுமுள்ள அரிய சிற்பங்களை முழுக்கமுழுக்க மறையச் செய்துள்ளனர். ஆங்காங்கே சிமென்ட் கலவை சிற்பங்களின் மேல் அப்பிக்கொண்டு, அப்படியே அடைத்துக் கிடக்கிறது. இங்குள்ள சிலைகளின் பெருமையை அறியாத கோயிற்காப்பாளர்கள், அவற்றைப் பாதுகாக்காமல், தங்கள் நலனிலேயே அக்கறையாய்ச் செயல்படுவதும் அப்பட்டமாய்த் தெரிகிறது. பூசையும் ஏனோ தானோவென்றுதான் நடத்தப்படுகிறது. பூசாரியார் "பதினோரு மணிக்கெல்லாம் பூடனும் (போயிடனும்), இல்லீனா நா பாட்டுக்குப் பூட்டிட்டுப் பூடுவேன்' என்று 'சென்னைக்' கண்டிப்பு காட்டினார்.

சுற்றிலும்  கல்வெட்டுக்கள் மிகுந்திருந்தாலும், அவையத்தனையும் கிட்டத்தட்ட பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டினைச் சார்ந்த  எழுத்து வகையாகவே இருக்கின்றன.  சிற்சில இடங்களில் நாயக்கர் 'கைவண்ணமும்', சிற்சில இடங்களில் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துக்களும் காணப்படுகின்றன. எனினும், தமிழ் ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் சதீஷ், தமிழ்நாடு தொல்லியல் துறை துணை இயக்குநர் சாந்தமூர்த்தி, கிழக்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குழுத் தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் தலைமையிலான உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனக் குழுவினர் இக்கோயிலிலுள்ள கல்வெட்டுக்களை  நன்கு ஆய்ந்தே இக்கோயில் இராசராசனால் கட்டப்பட்டது, அதுவும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டுவதற்குப் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது என்கிற தகவலையும் அறிவித்துள்ளனர்.

ராஜேந்திர சோழன் காலத்தில் இவ்வூரில் கடல் வணிகம் மீண்டும் மிகவும் பெருகியது. அதே பகுதியில் துறைமுகம் ஒன்றும் உருவானது. விஜயநகர மன்னன் கம்பன்ன உடையார் ஆட்சியின்போதுதான் தற்போது அழைக்கப்படும் பெயரான மரக்காணம் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் இவ்வூர் அக்காலத்தில்  ‘எயிற்பட்டினம்’ என்கிற மிக  அழகிய பெயரைக் கொண்டதாகத்தான் இருந்தது. அடடா! எயிற்பட்டினம் என்கிற பெயர் ஒன்று மட்டுமே போதுமே, இவ்விடத்தின் பெருமை எவ்வாறு இருந்திருக்கும் ஊகிப்பதற்கு! இருந்தாலும், இவ்வூரின் பெருமைகளை இப்பொழுது கூறலாம்.

தமிழ்நாட்டுத்தொல்லியல் துறையினரின் காலாண்டிதழில் (ஜூலை-2004), திருமதி வசந்தி என்கிற அகழாய்வாளர், எயிற்பட்டினம் என்கிற சங்ககால ஊராகக் கருதப்படுகிற இந்நகரம் கி.மு. 300ஆம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒரு சங்ககாலத் துறைமுக நகரமாகத் திகழ்ந்துள்ளது எனக் குறிப்பிடுள்ளார் என்கிறார் நரசய்யா அவர்கள். மேலும் அவர் பெரிப்ளஸ் என்கிற கிரேக்கர் எழுதிய நூலில் இதனை சோபட்மா என அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார் (பக்: 125).

 ‘எயில்’ என்றால் அரண் அல்லது மதில் என்று பொருள். இப்பகுதி தொண்டை நாட்டு அரசனின் துறைமுகமாகவும் இருந்துள்ளது. அதன் பிறகு ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் ஆட்சிக் காலத்தில் முக்கிய துறைமுகமாகவும் இருந்துள்ளது. இந்த மன்னன் திண்டிவனத்தில் உள்ள கிடங்கல் பகுதியை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்துள்ளார். இதனால் இந்த மன்னன் கிடங்கில் கோமான் எனவும் அழைக்கப்பட்டுள்ளார். இந்த அரண் அல்லது மதில் எங்கிருக்கிறதாம்? கேளுங்கள்.

சென்னையைச் சேர்ந்தவர் அரவிந் என்பவர், புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு ‘அரவிந்த் வால்’என்று பெயரிட்டேன்” என்றார்.

இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் செல்ல, அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் கூறுகையில்...

"தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம். தவிர, மீனவர் நலனுக்கும் இன்றைக்கு தமிழக மீனவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கும் இந்த ஆய்வுகள் மிக முக்கியம். ஏனெனில் கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களின் இடிபாடுகளால்தான் பவழப் பாறைகள் பெருமளவு உருவாகின்றன. இடிபாடுகளும் அதிலுள்ள பவழப் பாறைகளுமே மீன், குறிப்பாக சுறாக்கள் மற்றும் கடல் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த இடங்கள். அங்கு மீன் வளம் அபரிதமாக இருக்கும். அதனால், கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களைக் கண்டுபிடித்து அங்கு கழிவுகளைக் கொட்டாமல், செயற்கையாக வெப்பத்தை ஏற்படுத்தாமல், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் அரசு பாதுகாத்தால் மீன் வளம், மீனவர் நலம் காக்கப்படும்"

"மீனவர்கள் எல்லை தாண்டி சென்று ஆபத்துகளை சந்திக்க வேண்டியது இல்லை. எல்லாவற்றையும்விட இதுபோன்ற பகுதிகள்தான் சுனாமி போன்ற பேரழிவுகளின்போது பொங்கி வரும் பேரலைகளை ஆற்றுப்படுத்தி ஊரை காக்கும் அரண்களாக அமைகின்றன.
மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்"

ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.

புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்” என்றார்.

இனி, மரக்காணம் என இவ்வூரை அழைப்பதனை விடுத்து, அழகிய தமிழ்ப்பெயரான ‘எயிற்பட்டினம்’ என்றே நாமிதை அழைக்கலாம். சரி, தற்பொழுது சங்க இலக்கியங்களில் இவ்வூரான எயிற்பட்டினத்தைப் பற்றி என்னவெல்லாம் கூறியிருக்கின்றன தெரியுமா?

எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.

மதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.

நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்றுக் கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எயிற்பட்டினம் – சிறுபாணாற்றுப்படை என்னும் நூல் இந்தத் துறைமுகம் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறது.[5] சிறுபாணாற்றுப்படை நூலைப் பாடியவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். பாடப்பட்ட அரசன் ஓய்மானாட்டு நல்லியக்கோடன். இந்த நூல் இந்த ஊரை ‘மதிலொடு பெயரிய பட்டினம்’ எனக் குறிப்பிடுகிறது. மதில் என்னும் சொல்லுக்கு எயில் என்று மற்றொரு பெயரும் உண்டு. எனவே இது எயிற்பட்டினம் என ஆகிறது. பெருப்ளஸ் இதனைச் சோபட்மா எனக் குறிப்பிடுகிறார்.[6] சோ என்னும் சொல் மதிலரணைக் குறிக்கும்.[7]
இக்காலத்தில் ஆலம்பரக்கோட்டை [8] எனப்படும் ஊர் கோட்டைக் கொத்தள இடிபாடுகளுடன் உள்ளதை முனைவர் இளங்கோவன் [9] குறிப்பிடுகிறார். இது பிற்காலக் கோட்டை என்றாலும் இங்குதான் எயிற்பட்டினம் இருந்தது எனலாம்.

இவ்வூரில் தாழம்பூ அன்னப்பறவை போல் பூத்ததாம். செருந்திப் பூக்கள் பொன் போலப் பூத்தனவாம். முண்டகப் பூக்கதிர்கள் மணிநிறம் கொண்டனவாம். புன்னைப் பூக்கள் முத்துகள் போல் கொட்டினவாம். இப்படிக் கடலோரக் கானல் வெண்மணலால் விம்மிக் கிடந்ததாம். இப்படிப்பட்ட நெய்தல் நெடுவழியில் சென்று புலவர் எயிற்ப்பட்டினத்தை அடைந்தாராம். இந்தப் புலவரால் ஆற்றுப்படுத்தப்படும் சீறியாழ்ப் பாணன் எயிற்பட்டினம் சென்றால் விரைமரங்கள் (விரைந்து செல்லும் மரக்கலங்கள்) ஒட்டகம் தூங்குவது போல் நிற்பதைக் காணலாமாம் என்றும், அங்கே தின்னுவதற்குச் சுட்ட மீனும், பருகுவதற்கு பழம்படு தேறலும் (பழச்சாற்றுக் கள்) விருந்தாகப் பெறலாமாம். என்றும், இந்த விருந்தினை நுளைமகள் என்னும் பரதவப் பெண் படைப்பாள் என்றும், இந்தப் பட்டினம் கிடங்கிற்கோமானாகிய நல்லியக்கோடனுக்கு உரியது என்றும் குறிப்பிடுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

ஆழ்கடல் புதையல்:
மதில் என்றால் 'எயில்’என்று பெயர் ஆகும். அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. சங்ககாலத்தில் துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். இந்த ஊரை கிரேக்கர்கள் ‘சோபட்மா’(சோ பட்டினம்) என்று குறிப்பிட்டுள்ளனர், ‘சோ’என்னும் பொருள் உண்டு.

“Among the market-towns of these countries, and the harbors where the ships put in from Damirica [=Limyrike] and from the north, the most important are, in order as they lie, first Camara, then Poduca, then Sopatma; in which there are ships of the country coasting along the shore as far as Damirica; and other very large vessels made of single logs bound together, called sangara: but those which make the voyage to Chryse and to the Ganges are called colandia, and are very large. There are imported into these places everything made in Damirica, and the greatest part of what is brought at any time from Egypt comes here, together with most kinds of all the things that are brought from Damirica and of those that are carried through Paralia. - The Periplus Maris Erythraei (or ‘Voyage around the Erythraean Sea’) is an anonymous work from around the middle of the first century CE written by a Greek speaking Egyptian merchant”

4.3 பாணனுக்கு வழிகாட்டுதல்
வள்ளல் நல்லியக்கோடனின் தலைநகரம் ஓய்மா நாட்டில் இருந்த கிடங்கில் என்னும் ஊர். வறுமையுற்ற பாணனை அவ்வூருக்கு ஆற்றுப்படுத்துகிறான் (வழி கூறுகிறான்) பரிசு பெற்ற பாணன். தலைநகரான கிடங்கில் என்னும் ஊருக்குச் செல்லும் வழியில் எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் ஆகிய நகரங்கள் உள்ளன. இந்நகரங்களும் இம்மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளே ஆகும்.
இந்நகரங்களில் வாழ்ந்து வரும் மக்கள், அவர்தம் பழக்க வழக்கங்கள், நில அமைப்பு, மக்கள் அன்போடு அளிக்கும் விருந்து (உணவு) முதலானவை மிகத் தெளிவாகவும் சுவையாகவும் கூறப்பட்டுள்ளன. இந்நகரங்களைப் பற்றிய இச்செய்திகள் மிக விரிவாக 143 முதல் 195 வரையிலான அடிகளில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

4.3.1 எயிற்பட்டினம்
எயில் = மதில், பட்டினம் = கடற்கரை நகரம். மதில் நகரம் அல்லது கோட்டை நகரம். அதாவது கோட்டைகள் சூழ்ந்த கடற்கரைப் பட்டினம் என்பது பொருள். இவ்வூரின்கண், நீலவானத்தை ஒத்த அழகிய கடல் உள்ளது. இதன் கடற்கரையில் தாழை மலரானது அன்னம் போன்று மலர்ந்தது; செருந்தி பொன்போல் பூத்தது; புன்னை மரம் முத்துக்கள் போல் அரும்பெடுத்தது; கரையிடத்து உள்ள வெள்ளிய மணல் பரப்பில் கடல் பரந்து ஏறுகின்றது. இத்தகைய நெய்தல் நிலத்தின் வழிநெடுக உப்பங்கழிகள் சூழ்ந்த ஊர்கள் உள்ளன. இக்காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தவாறே சென்றால் மதில்களால் சூழப்பட்டதும் பொய்கைகள் நிறைந்ததுமான எயிற்பட்டினத்தை அடையலாம் என்று பரிசு பெற்ற பாணன் வறிய பாணனிடம் கூறினான்.

 விருந்து:
எயிற்பட்டினத்தில் கடல் அலைகள் கொண்டு வந்து ஒதுக்கிய அகில் மரக் கட்டைகள் உறங்குகின்ற ஒட்டகங்கள் போன்று கிடந்தன. அத்தகைய அகில் மர விறகினால் தீ மூட்டிக் காய்ச்சி அரித்த (வடிகட்டிய) தேறலை (கள்) மீனவப் பெண்கள் மீனவர்களுக்கு உணவாகக் கொடுப்பர். விறலியரோடு செல்லும் நீங்கள் கிடங்கில் கோமானைப் (நல்லியக்கோடனை) பாடியும் குழல் ஓசைக்கு ஏற்ப ஆடியும் செல்லும் பொழுது அப்பரதவரின் வீடுகள் தோறும் அவர்கள் மகிழ்ந்து கொடுக்கும் குழல் மீன் சூட்டைப் (ஒரு வகை சுட்ட மீன்) பெற்று உண்டு மகிழலாம்.

இச்செய்திகள் 146 முதல் 163 வரையில் உள்ள அடிகளில் சுவைபடக் கூறப்பட்டுள்ளன.

பெரும் மரக்கலங்கள் வந்து சென்றதோடு மட்டுமல்லாது, அவை கட்டப்பெற்ற இடமாகவும் இவ்வூர் திகழ்ந்தது என்பதற்குச் சான்றாய், இன்றும் இவ்வூரில் மீனவருக்கான படகுகள் செய்யப்படுவதனை, இவ்வூரையொட்டிய கிழக்குக் கடற்கரைச் சாலையோரத்திலேயே காணலாம். மேற்கூறிய பெருமை வாய்ந்த இவ்வூரினை, கோயிலைக் காணும் பொருட்டேனும் நாம் ஒவ்வொருவரும் சென்று காணவேண்டும் என அன்புடன் அழைக்கிறேன். எத்தகைய பெருமை வாய்ந்த, அறிவு வாய்ந்த இனமாக நம் தமிழினம் இருந்திருக்கிறது என்பதனை இதன் மூலமாகவாவது நாம் அனைவரும் இனியாவது உணர்ந்து விழித்தெழுந்தால், கட்டாயம் நாமிழந்த பெருமைகள் அனைத்தையும் விரைவில் மீட்டெடுக்கலாம்.