Thursday 4 July 2019

அகத்தியர் வாக்கு - ஸ்ரீ வித்யா உபாசனை

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 113*

*தேதி: 05-07-2019(வெள்ளி - அசுரகுரு, சுக்ரன், சுங்கன்)*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*துராலிங்கனின் குரு* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : ஸ்ரீவித்யா உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகளையும், ஸ்ரீசக்ரமஹாமேருவின் சிறப்பையும் விளக்குங்கள் :*🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*இறைவன் அருளால், இன்னவன் கூறிய பூஜைக்கு மட்டுமல்ல, எல்லா வகையான பூஜைகளுக்கும் அடிப்படை ஒழுக்கம் அவசியம். பூஜைகளே செய்யாவிட்டாலும் பாேதும். ஒரு மனிதன் ஒழுக்கமாக, நேர்மையாக வாழ்ந்தாலே அதுவே ஒரு பூஜைதானப்பா. 'பூஜை செய்கிறேன்' என்று ஒருவன் பிறரை இடர்படுத்துவதாே, தன்னை இடர்படுத்திக் காெள்வதாே அல்ல. எனவே மனாேரீதியாக ஒருவன் மனித நேயத்தை வளர்த்துக் காெண்டு மனதை செம்மைபடுத்த, மனதை வைராக்யப்படுத்த, மனதை வைரம்பாேல் உறுதிப்படுத்தத்தான் பூஜைகள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் அந்த பூஜையை செய்து அதனால் மனசாேர்வு என்றால் அவன் அந்த பூஜையையே செய்யத் தேவையில்லை. எனவே சரியான வழிமுறை என்பதைவிட ஒரு மனிதனின் மனநிலைதான் அங்கே முக்கியம்.*

இஃதாெப்ப *ஸ்ரீசக்ர மந்திரங்களை முறையாக உபதேசமாக தக்க மனிதரிடம் பெற்று முறையாக ஒருவன் அந்த பூஜையை செய்து வந்தால் நல்ல பலன் உண்டு. இதை நாங்கள் ஒருபாெழுதும் மறுக்கவில்லை. ஆனால் அங்கே வெறும் பூஜை என்ற அளவில் மட்டும் மனித நேயம் புறக்கணிக்கப்பட்டால் அந்த பூஜையால் எந்த பலனும் இராது* என்பதை கூறிக்காெள்கிறாேம்.

*இஃதாெப்ப பூஜைகள்* (ஸ்ரீவித்யா மார்க்க பூஜைகள் - அன்னை
ஸ்ரீலலிதாம்பிகையின் தச மகாவித்தை) *ஒரு மனிதனின் பல்வேறு பிறவிகளின் பாவங்களைப் பாேக்கும். பாேக்குவதாேடு குண்டலினி சக்தியையும் மேலே எழுப்பும். முறையாக ஸ்ரீசக்ர உபதேசம் பெற்று தன் வாழ்நாள் முழுவதும் நித்ய ஸ்ரீசக்ர பூஜையை ஒருவன் செய்தால் பரிபூரண தவத்திற்கு சமமப்பா.*

*கேள்வி : புறசடங்குகள் பற்றி :*🙏

*அகத்தியர் மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*ஆத்மார்த்தமான பக்திதான் முக்கியம். இயன்ற தர்மங்கள் பிராத்தனைகள் தாம் முக்கியம். பரிகாரங்களை விட மனம் ஒன்றிய பிராத்தனைகள் அதிகம் சக்தி வாய்ந்தவை.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************

என்னுடைய வெள்ளிக்கிழமை பூஜை படங்கள்