Tuesday, 10 June 2025

அகஸ்தியர் ஆலயம் யாசக கோரிக்கை

 நமது அகஸ்தியர் ஆலயத்தை சுற்றிலும் ஒரு அடிக்கு குழி எடுக்கப்பட்டு கான்கிரீட் போடப்பட்டு அதன் மேல் ஒரு வரி செங்கல் வைத்து பார்டர் கட்டப்பட்டுள்ளது


 இந்த இடைப்பகுதியில் பேவர் பிளாக் நடைபாதை கோயிலை சுற்றி வருவதற்காக அமைக்கப்படுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


 இதற்கு ஏற்கனவே ஒரு அன்பர் அந்த பேவர் பிளாக் கற்கள் பதிக்க நிதி அளிப்பதாக உறுதி அளித்துள்ளார் 


இந்த நிலையில் ஏற்கனவே நாம் செய்த வேலைக்கு ஒரு அடி குழி எடுத்து அஸ்திவாரம் போட்டு கான்கிரீட் போட்டு செங்கல் ஒரு வரி வைத்து கூலி கொடுத்து வேலை செய்வதற்கு 19,000 குறைபாடு ஏற்பட்டுள்ளது அந்த கட்டுமான பொருட்களை கொடுக்கும் நபர உடனடியாக பணம் கேட்கிறார் 


வேலைகள் முடிவடைந்த நிலையில் சிறிது ஆலய செலவிற்காக பணம் தேவைப்படுகிறது 19 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது


 பக்தர்கள் உங்களால் முடிந்த உதவியை செய்யக்கோரி வேண்டி அரசியல் பீடத்தின் சார்பிலும் குருஜி சார்பிலும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி

Saturday, 24 May 2025

கருடபுராணம் - . இறந்தவர்களின் ஆத்மாவை அழைத்து செல்ல மூன்று யம கிங்கரர் வருவதாக வழக்காறு உண்டு

 கருடபுராணம் -

.

இறந்தவர்களின் ஆத்மாவை அழைத்து செல்ல 

 மூன்று யம கிங்கரர் வருவதாக வழக்காறு உண்டு 


யார் அந்த முன்று நபர்கள்?


அவர்கள் மரண தேவனான எமதர்மனின் தூதர்களான கிங்கரர்கள்


யார் இந்தக் கிங்கரர்கள்?


இவர்கள் எப்படி இருப்பார்கள்?


இவர்களின் வேலை என்ன?


கருட புராணம் இவர்கள் அஞ்சத்தக்க உருவத்தை உடையவர்கள் என்றும் நெருப்பையே சுட்டுவிடும் அளவிற்கு சினமுடையவர்கள் என்றும் 

பாசம் முசலம் போன்ற ஆயுதங்களைத் தரித்தவர்கள் என்றும் கார்மேகம் போன்ற இருண்ட நிற ஆடைகளை அணிந்தவர்கள் என்றும் வர்ணிக்கிறது.


அவர்கள் வாழ்நாள் முடிந்துபோன உயிர்களை மரண தேவனிடம் கொண்டு சேர்க்கவே படைக்கப்பட்டவர்கள் என்றும் ஆசா பாசங்களுக்கு இடம் கொடுக்காமல் கடமையைச்செய்வதே அவர்களின் பணி

ஆகும்.


இவர்களுக்குப் பூமியில் உயிர்களை அறுவடை செய்து யமதர்மனின் கிட்டங்கியில் சேர்ப்பதோடு வேலை முடிந்து விடுகிறது.


உயிர்கள் புரிந்த

நன்மை தீமைகளை விசாரிப்பதும் 

அதற்கான சன்மானம் அல்லது தண்டனையை வழங்குவது எமதர்மனின் வேலை என்றும் தண்டனைகளை நிறைவேற்றுவது வேறு மாதிரியான கிங்கரர்கள் என்றும் கூறுகின்றன


உடலில் இருந்து உயிர் பிரிக்கப்பட்ட பின்பு அந்தந்த உயிர்களுக்கு என்ன

நிகழ்கிறது என்பதை 

கருடபுராணம் விவரிப்பதைப் பார்ப்போம்.


செடியிலிருந்து மலரைக்கொய்தபின் இறைவனின் பாதத்தில் சமர்பிப்பது போல் உயிர்கள் கிங்கரர்களால் யமன் முன்னால் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.


தன் முன்னால் ஜீவன் கொண்டு வரப்பட்டவுடன் மீண்டும் அந்த ஜீவனை பறித்த

இடத்திலேயே விட்டு வரும் படியும் 

மீண்டும் 12 நாட்கள் சென்றபின் தன் முன்னால் கொண்டு வரும்படியும் கட்டளை பிறப்பிப்பான்.


உடனே யமகிங்கரர்கள் ஒரு நொடி நேரத்திற்குள் 80,000 காத தூரத்தில் உள்ள பூமியில் உயிரைப் பறித்த இடத்தில் அந்த ஜீவனைக்கொண்டு விட்டு விடுவார்கள்.


இப்படி யமலோகம் சென்ற ஜீவன் மீண்டும் தனது உடல் இருக்கின்ற இடத்திற்கே திரும்பி வருவதனால் இறந்தவனின் உடலை சில மணி நேரமாவது ஈமக்கிரியைகள் செய்யாமல் வைத்திருக்க வேண்டும்.


காரணம் ஆயுள் முடியும் முன்பே அந்த ஜீவன் உடலை விட்டுப் போயிருந்தால்

மீண்டும் உயிர் பெற்று எழ வாய்ப்புள்ளது.

செத்துப்பிழைத்தவர்கள் என்று கருதப்படும் நபர்கள் இத்தகையவர்களே ஆவார்கள்.


அப்படியில்லாது நிரந்தரமாக உடலை விட்டுச் சென்றவர்கள்

பூமிக்கு வந்ததும் உயிரற்ற தனது உடலைப் பார்த்து அந்த உடலிற்குள் புகுந்து கொள்ள முயற்சிப்பார்கள்.


அந்த முயற்சி தோல்வி அடைவதனால் தாங்க முடியாத துயர வசப்பட்டு ஆவி வடிவில் இருந்தாலும் அழுது துடிப்பார்கள்.


தங்களது உடல் மயானத்திற்கு எடுத்து வரும்போதும் கூடவே வருவார்கள்.

அவர்களோடு மற்ற ஆவிகளும் கலந்து கொண்டு பாடையில் இருக்கும். 

உடல் மீது விழுந்து அழுத்துவார்கள்.


இதனாலேயே பாடை அளவுக்கு அதிகமான பாரத்தைக் கொடுக்கும். இதை பாடை தூக்கிகளில் அனுபவசாலிகள் நிதர்சனமாகவே அறிவார்கள்.


உடல் மயானத்தைச்சென்றடைந்தவுடன் தனது உடல் எரியூட்டப்படும் சிதைக்கு மேலேயோ அல்லது புதை குழிக்கு 10 அடி உயரத்தில் ஆவி நின்று தனது உடல்

வெந்து சாம்பலாவதையோ மண்ணால் மூடப்படுவதையோ பார்த்து

பதைபதைத்து துடிக்குமாம்


இறந்த மனித உடலானது முற்றிலுமாக எரிந்து சாம்பலாகும் வரை அந்த

உடல் மீது உள்ள ஆசையும் உறவினர்கள் மீதும் நண்பர்கள் மீதும் கொண்ட அன்பும் வாழ்ந்த காலங்களில் உபயோகப்படுத்திய பொருட்களின் மீதுள்ள ஈடுபாடும் பிரிந்த உயிர்க்குக் கொஞ்சம் கூட குறைவது இல்லை.


உடல் எரிந்து சாம்பலான பின்பு உயிருக்குப் பிண்டங்களால் ஆன சரீரம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.


உயிர் பிரிந்து தகனம் முடியும் வரை உயிருக்கு உருவம் என்பது கிடையாது.


வைதீக சாஸ்திரங்கள் உயிர்கள் காற்று போன்ற வடிவில் இருப்பதாக கூறுகிறது.


முறைப்படியான இறுதிச் சடங்குகளும் திதி திவசம் போன்றவைகள் கொடுக்கப்படாமல் இருக்கும் ஆவிகள் தான் உருவமற்று புகைவடிவில் நடமாடும் என்றும்


சாஸ்திரப்படி இறுதிக் கிரியைகள் செய்யப்பட்ட ஆத்மாக்கள்

புகைவடிவில் இருந்தாலும் அந்தப்புகை வடிவம் கூட அவர்கள் பூமியில் வாழ்ந்த போது என்ன உருவத்தல் இருந்தார்களோ அதே உருவமாகத்தான் இருப்பார்கள் காட்சி தருவார்கள் என்கிறது.


சடங்குகள் முறைப்படி நடத்தப்பட்ட ஆவிகளுக்கு அழுத்தம் திருத்தமான பௌதிகத் தோற்றம் போலவே தெரியும்


மற்றவர்களுக்கு அழுத்தமான உருவங்கள் அமையாததால் வெறும் புகை வடிவாக மட்டுமே தோன்றுகிறது.


முறைப்படியான சடங்குகள் செய்யப்பட்ட ஆவிகளுக்குச் சொந்த வடிவம்

எப்படி வந்தமைகிறது என்பதை

கருட புராணம் அழகாகக் கூறுகிறது.


இறந்தவன் மகனால் முதல்நாள் வைக்கும் பிண்டத்தால் ஆவிக்குத் தலை உண்டாகிறது.


இரண்டாம் நாள் போடும் பிண்டத்தால் கழுத்தும் தோளும்


மூன்றாம் நாள் பிண்டத்தால் மார்பும்


நான்காம் நாளில் வயிறும்


ஐந்தாம் நாளில் உந்தியும்


ஆறாம் நாளில் பிருஷ்டமும்


ஏழாம் நாளில் குய்யமும்


எட்டாம் நாளில் தொடைகளும்


ஒன்பதாம் நாளில் கால்களும் உண்டாகி


பத்தாம் நாளில் புத்திரனால் பெறப்படும் பிண்டத்தால் சரீரம் முழுவதும் பூரணமாக உருவாகும்.


பிண்டங்களால் முழுமையான உருவத்தைப் பெற்ற ஆவி பதினோறாவது நாள் தான் சரீரத்தோடு வாழ்ந்த வீட்டிற்கு வந்து தான் உயிரோடு இருக்கின்ற பொழுது வீட்டில் நிகழ்ந்த அனைத்து சம்பவங்களையும் தன்னால் நிகழ்த்தப்பட்ட

எல்லாவிதமான காரியங்களையும் நினைத்துப்பார்த்து அழுது துடிக்குமாம்.


மீண்டும் நம்மால் இப்படி வாழ முடியாமல் போய்விட்டதே என்று எண்ணியெண்ணி அந்த ஆவி துடிப்பதை எரிமலை சீற்றத்திற்குள் அகப்பட்டு கொண்ட சிறு பறவைக் குஞ்சியின் துடிப்பிற்கு இணையாக ஒப்பிடப்படுகிறது.


கடந்தகால வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசைப்படுவதும் சரீரப்பிரவேசத்தில் மோகம் கொள்வதும் சாதாரணமான உலகியல் வாழ்க்கையில் வாழ்ந்து உழன்ற செத்துப்போன ஜீவன்கள் தான் என்பதையும்


பரமார்த்திக வாழ்வை மேற்கொண்ட ஜீவன்கள் சரீரப்பிரிவைப்பற்றியோ மரணமடைந்ததைப்

பற்றியோ துளி கூடக் கவலைப்படுவதில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.


வாழ்ந்த வீட்டில் வீழ்ந்து கிடந்து அழும் ஆவியை பதின்மூன்றாவது நாள் எமகிங்கரர்கள் பாசக்கயிற்றால் கட்டி எமபுரிக்கு இழுத்துச்செல்வார்கள்.


அப்படி இழுத்துச்செல்லும் போது கூரிய பற்களுடைய ரம்பம் போன்ற இலை அமைப்புக்கொண்ட அமானுஷ்ய வனாந்திரம் ஒன்றின் வழியாக அந்த ஜீவன் பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்படும்.


அப்போது வாள் போன்ற மர இலைகள் அந்த ஜீவனின் பிண்ட உடலைக் குத்திக் காயப்படுத்தும்.


அதனால் ஏற்படும் வலியில் சுறுக்கு மாட்டப்பட்ட நாய் ஊளையிடுவதுபோல்

ஆவி கத்தித் துடிக்கும். வைவஸ்வத என்ற நரகம் வழியாகவும் ஜீவன் இழுத்துச்

செல்லப்படுமாம்.


அந்த நகரத்தில் உயரமான மாளிகைகள் மிக நெருக்கமாக அமைந்திருக்குமாம். அச்சத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தும் கோர ரூபமுடைய பிராணிகள் பல ஜீவனைச் சூழ்ந்து கடித்துக் காயப்படுத்துமாம்.


மேலும் அந்நகரத்திற்குள் நுழைந்தவுடன் ஜீவனுக்குத் தாங்க முடியாத தாகம்

ஏற்படுமாம். தாகம் தணிக்க இரத்தமும் சீழும் கலந்த கொடுக்கப்படுமாம்.


அந்த

நகரத்து மேகங்களெல்லாம் இரத்தத்தையும் அழுகிய சதைத்துண்டகளையும் மழையாகப் பொழியுமாம்.


இத்தகைய அருவருக்கத்தக்க கஷ்டமான சூழலிலும் இறந்த ஜீவனுக்கு அதீதமான புத்திரபாசம் ஏற்படுமாம்.


பாவத்தின் தண்டனையும் பாசத்தின்

சோதனையும ஆவியைச்சட்டையில்லாமல் பனிப்பொழிவிற்குள் அகப்பட்டக்

கொண்டவனைப்போல் வருத்தி எடுக்குமாம்.


இப்படி வழி நெடுகலும் காற்று நிறைந்த வழியிலும் துஷ்ட ஜந்துக்கள் நிறைந்க வழியிலும் இழுத்துச் செல்லப்படும் ஜீவன் இருபத்தெட்டாவது நாளில

கொடுக்கப்படும் சிரார்த்த பிண்டத்தை உண்டு சற்று இளைபாறி முப்பதாவது நாள் யாமியம் என்ற நகரத்தை அடையும்.


அந்நகரில் வடவிருஷம் என்ற மரமும் பலவிதமான பிரேதக் கூட்டங்களும் நிறைந்திருக்கும்.


அங்கு இரண்டாவது மாசிக பிண்டத்தைப் பெற்ற பின்பு சற்று இளைப்பாறி மீண்டும் கிங்கரர்களால் இழுத்துச்செல்லப்பட்டு திரைப்பஷிக மாசிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற எட்க்ஷன் தலைமையில் உள்ள சௌரி என்ற பகுதியல் சிறிதுகாலம் தங்கி மூன்றாவது மாசிக பிண்டத்தைப் பெறுவார்கள்.


ஐந்து மற்றும் ஆறாவது பிண்டத்தை உண்டு கடந்த சென்று வைதரணி என்ற

நதிக்கரையை அடைவார்கள்.


சாதாரணமான நதிகளைப்போல் இந்த நதியில் தண்ணீர் இருக்காது.


அதற்குப் பதிலாக ரத்தமும் சீழும் சிறுநீர் மலம் சளி இவைகள் ஒன்றாகக் கலந்து ஆறாக ஓடுமாம். இந்த நதியைப் பாவம் செய்த ஆத்மாக்கள் அவ்வளவு சீக்கிரம் கடக்க முடியாமல் கிங்கரர்கள் ஆழத்தில் தள்ளி அழுத்துவார்கள்.


புண்ணியம் செய்த ஆத்மாக்களை ஒரு நொடிப்பொழுதிற்குள் ஆற்றின் மறுகரையில் கொண்டு விட்டுவிடுவார்கள்.


இப்படி பல இடங்களிலும் பலவிதமான அவஸ்தைகளையும் அனுபவங்களையும் பெற்றாலும் இறந்து ஏழாவது மாதம் ஆனாலும் கூட எமலோகத்திற்குச் செல்லும் பாதி வழியை மட்டும் தான் ஜீவன்கள் இதுவரை கடந்து வந்திருக்குமாம்.


பக்குவப்பதம் என்ற இடத்தில் 

எட்டாம் மாதம் பிண்டத்தையும் 

துக்கதம் என்ற இடத்தில் ஒன்பதாவது பிண்டத்தையும்

நாதாக்தாதம் என்ற இடத்தில்

பத்தாவது பிண்டத்தையும் 

அதப்தம் என்ற இடத்தில் பதினோறாவது பிண்டத்தையும், 

சீதாப்ரம் என்ற இடத்தில் பன்னிரெண்டாவது அதாவது வருஷாப்திய பிண்டத்தையும் பெறுவார்கள்.


மரணமடைந்து ஒரு வருடத்திற்குப்பின்னரே எமபுரிக்குள் ஜீவன்களால் நுழைய முடியும்.


எமதர்மன் முன்னால் நியாய விசாரணைக்கு ஜீவன் நிறுத்தப்படும் முன்னால் 12 சிரவணர்கள் இறந்த ஆத்மா செய்த பாவ புண்ணியக் கணக்குகளைப்பார்ப்பார்கள்.


அதன் பின்னரே எமதர்மனால் விசாரிக்கப்பட்டு தண்டனை பெறுவார்கள்.


இங்கு நாம் எமலோகத்திற்குப்போகும் வழியில் ஆத்மாவிற்கு ஏற்படும் பலவிதமான கஷ்ட நஷ்டங்களைப்பார்த்தோம்.


தீமை மட்டுமே வாழும் காலத்தில் செய்த ஆத்மாக்கள் துன்பங்களை அனுபவிப்பது நியாயமானதுதான்.


நன்மையைச்செய்த ஆத்மாக்கள் கூட 

இதே வழியில்தான்

அழைத்து செல்லப்படுவார்களா? 

இதே துன்பங்களைதான் அனுபவிப்பார்களா என்று வினா எழும்புவது இயற்கையானதுதான்.


நமது சாஸ்திரங்களும் தர்மங்களும் சத்திய வழியில் வாழ்க்கை நடத்துபவர்களை மரணதேவனின் தூதுவர்கள் வந்து அழைக்க மாட்டார்கள்.


இறைதூதர்கள் தான் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று கூறுகிறது.


நாம் கிங்கரர்களால் அழைத்து செல்லப்படும் பெருவாரியான ஆத்மாக்களைப்

பற்றி மட்டும் பேசியதனால் அவர்கள் அனுபவிக்கும் துயரங்களை விவரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.


ஆனால் முக்த ஆத்மாக்களுக்கு இந்த 

கஷ்டங்கள் ஏதும் கிடையாது.


ஸ்ரீமன் நாராயணனின் சரணங்களில் 

சரணாகதி அடைந்தவர்களுக்கு 

வைகுண்டபதவியை கொடுக்கிறார்


நம் உயிர் பிரிந்தவுடன் விஷ்ணு தூதுவர்கள்

வருவார்கள் மிகுந்த தேஜஷ்வுடனும் மிக அழகானவர்களாகவும் இருப்பார்கள்

அவர்கள் அந்த ஆத்மாவை வைகுண்டம்

அழைத்து செல்வார்கள்.சிவா பக்தர்கட்கு சிவ தூதர்கள் சிவ லோகம் அழைத்து செல்வார்கள்

Sunday, 4 May 2025

ஸ்வீட்கள் மேலேயுள்ள ஜரிகைதாள் மாட்டின் குடலில் இருந்து தயாரிக்கப்படுது

 ஸ்வீட்கள் மேலேயுள்ள ஜரிகைதாள் மாட்டின் குடலில் இருந்து தயாரிக்கப்படுதுன்னு தெரியுமா?


பொதுவாக ஸ்வீட் கடைகள்ல வாங்கற ஸ்வீட்டுகள் மேல ஒரு சில்வர் பேப்பர் ஒட்டிவைத்திருப்பார்கள். அந்த சில்வர் பேப்பர் அழகிற்காகவும் ஒட்டப்பட்டிருக்கும். அது ஒட்டிய பின்னர் அந்த ஸ்வீட்லேந்து அதை எடுக்கிறது ரொம்ப கஷ்டம். அதனால பெரும்பாலானவங்க அந்த சில்வர் பேப்பரோடவே ஸ்வீட்டை சாப்பிடுவார்கள்.. ஸ்வீட் மேல ஒட்டியிருக்காங்கன்னா அது என்ன பண்ணிடப் போகுதுங்கிற நம்பிக்கை தான். இது சில்வர் ஃபாயில், சில்வர் ரேக் என சொல்லப்படுகின்றது. ஆனால் இதன் ஒரிஜினல் பெயர் வராக்.. இந்த வராக் எனப்படுவது எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றது என்று சொன்னால் அதிர்ச்சியின் எல்லைக்கே போக நேரிடும். இருந்தாலும் எல்லாரும் தெரிந்து கொண்டு இனி அந்த வராக் பயன்படுத்தப்பட்ட இனிப்புகளை வாங்கி உண்பதை விட்டுவிடலாமே என்ற எண்ணத்தில் தான் அதைப்பற்றியான செய்தி இங்கே தரப்படுகின்றது..


வராக்’ எனப்படும் இந்த ஜரிகைதாள் மாட்டின் குடல் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது என்பது முதல் ஷாக்..


வராக் எப்படி தாயாரிக்கின்றார்கள்?


இறைச்சிக்காக மாட்டை கொன்றவுடன் அதன் குடல் பகுதியை மட்டும் தனியாக எடுத்து, அதிலுள்ள ரத்தம் மற்றும் மலம் போன்ற கழிவுகளை சுத்தம் செய்து, இந்த ‘வராக்’ தயாரிப்பாளர்களிடம் விற்பனை செய்வார்கள். மாடு இறந்த உடனேயே இந்த குடல் எடுக்கப்பட்டுவிடும். இல்லையென்றால் அது விறைத்து விடும். ஒரு மாட்டோட குடல் 540 இன்ச் நீளமும் 3 இன்ச் அகலமும் கொண்டது. இதை சுத்தம் செய்து நீளாக வெட்டினால் 540 இன்ச் 10இன்ச் என விரியும். ‘வராக்’ தயாரிப்பாளர்கள் 9க்கு 10இன்ச் என்ற வீதத்தில் 60 துண்டுகளாக வெட்டி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைப்பார்கள். இது ஒரு நோட்புக் போல இருக்கும். அதன்பின்னர் மெலிசான வெள்ளி தகட்டை, வெட்டப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடலுக்கு இடையில் வைத்து மொத்தத்தையும் ஒரு தோல் பையில் வைத்து இறுக்கிக் கட்டுவார்கள். இந்த தோல் மூட்டையை 1 அல்லது 2 நாள் வரை விடாது அடிப்பார்கள். இப்படி அடித்து, அடித்து அந்த வெள்ளி தகட்டை மெல்லிய தாள்களாக மாற்றுவார்கள்.பிறகு அதை தோல் பையிலிருந்து எடுத்து, குடல்களை நீக்கி, வெள்ளி தாள்களை அடுக்கி வைப்பார்கள். இப்படி தொடர்ந்து அடிப்பதினால் அது மிக மெல்லிய வெள்ளி தாளாக மாறுகின்றது..


இப்படி தயாரிக்கப்பட்ட வெள்ளி சரிகை தாள்கள் மொத்தமாக ஸ்வீட் தயாரிப்பாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 160 வெள்ளி சரிகை தாள்கள் (10 கிராம் எடை) கொண்ட ஒரு ரோலின் விலை 200 ரூபாய். இந்த வெள்ளி சரிகை தாள்களைதான் ஸ்வீட்டுகளின் மேல் அழகுக்காக பரப்பிவிடுகிறார்கள். முட்டை கூட தொடாத சைவ பிரியர்கள் இந்த வெள்ளிதாள்கள் எதிலிருந்து செய்யப்படுகின்றது என்ற விவரம் தெரியாமலேயே இந்த ‘சரிகை தாள்’ கொண்ட இனிப்பை அந்த தாள்களை நீக்காமலேயே சாப்பிடுகிறார்கள்.


தோல் பெட்டியில் வைத்து அடிக்கப்படும் வெள்ளி தகடுகள், மெல்லிய தாள்களாக மாறும் போதும், குடலில் உள்ள திசுக்கள் சூடாக உள்ள இனிப்புகள் மீது இந்த தாள்கள் ஒட்டப்படும்போடு இந்த இனிப்பில் அந்த திசுக்கள் கலந்துவிடுகின்றது. அதனால் இனிப்பில் மாட்டின் குடலில் உள்ள திசுக்கள் கலந்துவிடுகின்றது. சைவ இனிப்பு அசைவ இனிப்பாக மாறுகிறது.


இதுல என்ன கொடுமைன்னா அந்த சில்வர் ரேக் சுற்றப்பட்ட ஸ்வீட்டை வாங்கிச் சாப்பிடும் போது நமக்கு தெரியாமலேயே, மாட்டு குடல்களில் உள்ள கிருமிகள் மற்றும் குடல் புழுக்களின் முட்டைகள் ஆகியவற்றை வயிற்றுக்குள் செல்ல நேரிடலாம். மாட்டுக்கறி உண்பர்கள் கூட மாட்டின் குடலை உணவில் பயன்படுத்துவதில்லை. காரணம் அந்த குடல்களில் உள்ள திசுக்கள், கிருமிகள், குடல்புழுக்கள் ஆபத்தானவை என்பதால்.


ஸ்வீட் தானே என்று இந்த தாள் சுற்றப்பட்ட இனிப்புகள் உண்பதால் பல கொடிய நோய்கள் நம்மையறியாம லேயே நமக்கு ஏற்படுகின்றது. இப்படி இந்த சில்வர் தாள்கள் எதிலிருந்து தயாரிக்கப் படுகின்றது என்பது இனிப்பு தயாரிப்பாளர்களுக்கு தெரிந்திருந்தும் தொடர்ந்து பயன்படுத்துவதின் நோக்கம் அந்த இனிப்புகள் இந்த காகிதத்தால் அலங்கரிக்கப் படுகின்றது, அதன் காரணமாக பார்ப்பவர்களுக்கு ஒரு கவர்ச்சியும், அந்த இனிப்பினை வாங்கவும் தூண்டுகின்றது என்பதினால் இதனை தொடர்ந்து பயன்படுத்துகின்றார்கள்.


ஒரு சில இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் இந்த விவரம் தெரிந்த பின்னர் அதனை வாங்கி தங்களது இனிப்பின் மேல் சுற்றுவதில்லை.. இவ்வளவு ஏன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த வெள்ளி தாளால் மூடப்பட்ட இனிப்புகளை பல காலமாக பறிமாறி வந்தனர். இந்த வெள்ளி தாள் எந்த வகையில் தயாரிக்கப்படுகின்றது என்ற செய்தி அறிந்ததும் இப்போது அந்த இனிப்புகள் வாங்குவதை நிறுத்திட்டாங்க.


ஒரு சர்வே என்ன சொல்லுதுன்னா ஒரு வருஷத்திற்கு நம் நாட்டில் தயாரிக்கப்படும் இனிப்பின் மேல் சுற்றுவதற்கு தயாரிக்கப்படும் அந்த தாளுக்கு 275 டன் வெள்ளி தேவைப்படுகின்றது. இந்த ப்ராசஸ் நடைபெற்று அதனை மெல்லிய வெள்ளித்தாளாக மாற்ற 5,16,000 மாடுகள் மற்றும் 17,200 கன்றுகளின் தோல்கள் தேவைப்படுகிறது.


இதைபற்றி பல செய்தித்தாள்களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால் அரசாங்கம் இதற்கு தடை ஏற்படுத்தவும் இல்லை. அரசாங்கமே தடை ஏற்படுத்தாமல் போனதால இன்னும் பல பிரபல இனிப்பு நிறுவனங்கள், இதனை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியான வேதனை..


இனி இனிப்புகள் வாங்கும்போது இந்த வெள்ளித்தாள் சுற்றப்பட்ட இனிப்புகளை வாங்கறதை கட்டாயம் தவிர்த்திடுங்க…


(Jain Meditation International Center, New York இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் இருப்பதை இங்கே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது..)

Thursday, 1 May 2025

15 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முஞ்சிகேசர் ஜீவசமாதி

 Copied post from face book, https://www.facebook.com/share/1BDBFZVTZA/


15 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முஞ்சிகேசர் ஜீவசமாதியில் இன்று தரிசனம் 


இன்று உழைப்பாளர் தினத்தில் திருவாலங்காட்டில் அமைந்திருக்கும் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முஞ்சிகேசர் ஜீவசமாதியில் இன்று தரிசனம் கிடைத்தது 


முஞ்சிகேசர் இந்த பெயரை உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருக்கலாம். சென்னை காளிகாம்பாள் கோவில் அருகே இருக்கும் கச்சாலீஸ்வரர் எனும் பழமையான கோவிலில் முஞ்சிகேச முனிவருக்கு சந்நிதி இருக்கிறது. 


அதேபோல் தமிழ்நாட்டில் சுமார் 10க்கும் மேற்பட்ட பழமையான சிவன் கோவில்களில் முஞ்சிகேச முனிவருக்கு சந்நிதி உண்டு. 


பஞ்ச சபைகளில் மூத்த சபையாக விளங்கும் திருவாலங்காடு இரத்தின சபை சிவன் கோவில் அருகே இவரது ஜீவசமாதி தனி கோவிலாக இருக்கிறது.


முஞ்சிகேசமுனிவர்.


சிவனின் கழுத்தில் இருக்கும் கார்கோடகன் எனும் பாம்பு ஒருநாள் சிவனின் கையிலேயே விஷத்தை கக்கி விடுகிறான்.அதனால் சிவனின் சாபத்தை கார்கோடகன் பெற்றான். 


தனது தவறை பின்னர் உணர்ந்து வருந்தி, திருந்திய கார்கோடகன் ஈசனிடம் மன்னிப்பு கேட்க அந்த சாபத்திற்கு பிராயச்சித்தமாக பூமிக்கு சென்று பல சிவ தலங்களை வழிபட சொல்லி கார்கோடகனுக்கு சிவன் கட்டளை இட்டார். 


அவ்வாறு பல தலங்களை வழிபட்ட பின்னர் நிறைவாக திருவாலங்காட்டில் வழிபட்டபோது "என்னை நோக்கி தவமிருக்கும் சுனந்த முனிவர் எனும் மகா முனிவரை நீ பணிந்து வணங்க வேண்டும். அவரின் ஆசியும், கடைக்கண் பார்வையும் உன் மீது பட்ட அந்த நொடியில் உன் சாபம் நீங்கும் அந்த நொடியே நான் அங்கு தோன்றுவேன்" என்று சிவபெருமான் அருளினார் 


அதன் படி கார்கோடகன் வழிபட்ட இடம்  கோடன் பாக்கம் ஆகி அது பின்னர் கோடம்பாக்கமாக மாறியது. கோடம்பாக்கத்தின் ஒரு பகுதி பின்னர் வடபழனி ஆனது. கோடம்பாக்கத்தில் இருக்கும் வேங்கீஸ்வரம் கோவில் கார்கோடக முனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர் முதலான பல முனிவர்களால் வழிபடப்பட்ட ரொம்ப பழமையான கோவில்.


நிறைவாக திருவாலங்காடு வந்த கார்கோடகனுக்கு சுனந்த முனிவரின் ஆசி கிடைத்து அதனால் கார்கோடகனின் சாபம் நீங்கியது. 


சுனந்த முனிவர் கடுந்தவம் செய்து அதனால் அவரின் தலைமீது முஞ்சிபுல் எனப்படும் ஒருவகை தர்ப்பைப் புல் படர்ந்து, வளர்ந்தது. 


இதன் காரணமாக தான் அவர் முஞ்சிகேசர் எனும் பெயர் பெற்றார். 


சிவனுக்கும், காளிக்கும் நடந்த நடன போட்டியை நேரடியாக இருந்து பார்த்தவர் முஞ்சிகேச முனிவர். விஷ்ணு வாமன அவதாரம் எடுத்த பொழுது அவருக்கு நடந்த உபநயன சடங்கில் முஞ்சிகேச முனிவர் கலந்து கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. 


கார்கோடகனுக்கு ஏற்பட்ட சாபத்தையே போக்கிய அந்த முஞ்சிகேச முனிவர் எத்தகைய ஒரு தவ ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டும்.


திருவாலங்காட்டில் கோவிலின் வெளியே வடக்கு பக்கமுள்ள வீதியில் முஞ்சிகேச முனிவர் ஜீவசமாதியின் மீது கம்பீரமாக வீற்றிருக்கிறார்.


இராகு, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முஞ்சிகேச முனிவரின் ஜீவசமாதிக்கு சுத்தமான மரச்செக்கு நல்லெண்ணெய்யை சிறிது காணிக்கையாக கொடுத்து அங்கே சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்யுங்கள். நிச்சயமாக உங்களின் தோஷம் சரியாகும்.


இவரின் ஜீவசமாதி தோராயமாக 15 ஆயிரம் ஆண்டுகள் என்று அறியப்படுகிறது.


Thursday, 17 April 2025

சிதம்பர ரகசியம்

 சிதம்பர சக்கரம் என்றால் என்ன?

{மகா ரகசியம்; மகாரகசியம்}

{சித்த ரகசியம் இதுதான்}


"அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன் 

அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன் 

அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினன் 

அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே"


"ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும் 

ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும் 

ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும் 

ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே"


இந்த அண்ட பிண்டமென அனைத்தும் உருவாக "நமசிவய" என்ற ஐந்தெழுத்தாகிய பஞ்சபூதங்களே காரணமாகும். இந்த ஐந்தின் பெருமையை பற்றி என்குரு திருமூலர், சிவவாக்கியர், காகபுஜண்டர், வள்ளலார் என அனைவருமே எழுதியுள்ளனர். ஆனால் அவர்கள் அவற்றை உணர்ந்த வண்ணம் என்பது அவரவர்கள் சுவாசத்தை கொண்டுதானாகும். அண்டத்தில் உள்ளதெள்ளாம் பிண்டத்தில் என்றும், அண்டமாகிய இப்பிரபஞ்சத்தை விட பிண்டமாகிய இவ்வுடலே விசாலமானது என்றனர் நம் முன்னோர்கள். இப்படிப்பட்ட உடலை ஆராய்ச்சி கூடமாகவும் சுவாசத்தை கருவியாக கொண்டே அனைத்தையும் அறிந்தனர்.


"ஆச்சப்பா இந்தமுறை பதினெண் பேரும் 

அயன்மாலும் அரனோடுத் தேவரெல்லாம் 

மூச்சப்பா தெய்வமென்ற யறியச் சொன்னார் 

முனியோர்கள் இருடியரிப்படியே சொன்னார்கள் 

பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்து 

பேரான பூரணத்தைத் நினைவாய்க் காரு 

வாச்சப்பா பூரணத்தைக் காக்கும் பேர்கள் 

வாசிநடு மையத்துள் வாழ்வார் தானே"


அதாவது சுவாசத்தை பற்றிய சித்தர்கள் பாடல்கள் கணக்கில்லாமல் இருந்தாலும், சித்தர்களுக்கு முதன்மையானவரான அகத்தியர் சுவாசத்தை தெய்வம் என்று கொண்டே பதினெண் சித்தர்கள் முதல் அயன், மால், ஈசன், தேவர்கள் என அனைவரும் பயன்பெற்றனர் என தனது ஞானத்தில் கூறியுள்ளார். நூலாகிய சுவாசத்தை பிடித்தால் சேலையாகிய இறைவனை பிடிக்கலாம். தன்னையறிய தலைவனையறியும் முறையாகும்.


மேலும் இந்த உடலை யந்திரம் எனவும், சுவாசத்தை மந்திரம் எனவும், இவற்றை இயக்கும் விதம் தந்திரம் எனவும் கூறலாம். காரணம் மகா மேரு பீடம் என்று கூறப்படும் ஸ்ரீ சக்கரத்தின் அடுக்கு யந்திரம் என்பது நம் முதுகுத்தண்டையே குறிக்கும். அதேபோல் எண்ணற்ற யந்திரங்கள் நம் உடலின் ஒரு குறிப்பிட்ட பாகங்களையோ அல்லது முக்கிய இடங்களையோ அல்லது தலை மற்றும் மூளையின் சிறு பகுதியோ அல்லது முழுவதுமான வடிவத்தை கொண்டே வடிவமைக்கப்பட்டது. இதில் மந்திரங்களான பீஜங்களை சில குறிப்பிட்ட தந்திரமுறைகளை கொண்டு உட்சரிக்கும் போது சுவாமாகிய காற்று வெட்டப்பட்டு துள்ளியமான ஒலி ஒளி அதிர்வுகள் உள்ளும் வெளியிலும் பரவி யந்திரம் சக்தி பெருகின்றது. எப்பொழுது எல்லாம் ஒருவன் அந்த யந்திரத்திற்கு பக்கத்தில் செல்கிறானோ, அப்போதெல்லாம் அவன் உடலில் உள்ள அந்த யந்திர வடிவ பகுதி சக்திபெறும். 


சரி இதில் சுவாசத்திற்கும் பஞ்சபூதத்திற்கும் என்ன சம்பந்தம்?? 

             நாம் சுவாசிக்கும் காற்று பஞ்சபூத தன்மையை கொண்டே செயல்படுகின்றது. அதாவது நம் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றத்திற்கு இப்பஞ்சபூத சரமே காரணம். பூதசரத்தில் எந்த பூதத்தின் சரம் ஓடுகின்றது என கண்டுபிடிப்பதில் பல வழிகள் உண்டு. அவைகளில் சுவையை கொண்டு அறிவது. கண்ணாடியில் சுவாசத்தை ஊதி, அதில் தெரியும் வடிவத்தை கொண்டு அறிவது, நிறத்தை கொண்டு அறிவது என பலவழிகள் உண்டு.


"பாராப்பா பிருதிவியிற் கவிழ்ந்தேயோடும் 

பரிவான அப்புதனில் வலத்தே யோடும் 

சேரப்பா தேய்வுதனில் இடத்தே யோடும் 

திறமான வாயுதனில் நேரா யோடும் 

ஒரப்பா அந்தரத்தில் மேலே யோடும் 

ஒன்றேனும் குறைவுப்படாது உற்றுநோக்கி 

ஆரப்பா இந்நூலைப் பார்பார் கேட்பார் 

அறிவான மூமின்கட்கருள் செய்தோமே"


இதில் மிக சுலபமாக சரத்தை கண்டுபிடிக்க மேற்கண்ட பாடலே சிறந்தது. அதாவது மூச்சானது கீழ்நோக்கி (பூமியை நோக்கி) கவிழ்ந்து ஓடினால் அச்சரமானது பிருதிவி (நிலம்) சரமாகும். அதுபோல் மூச்சானது இடகலையில் அல்லது பிங்கலையில் என எப்படி நடந்தாலும், மூச்சானது சாய்ந்து இடது பக்கமாக ஓடினால் அப்பு (நீர்) சரமாகும். அதே போல் வலது பக்கமாக சாய்ந்து ஓடினால் தேயு (தீ) சரமாகும். மூச்சானது ஒடிந்து நமக்கு முன்னால் நேராக ஓடினால் வாயு (காற்று) சரமாகும். வெளிவரும் மூச்சானது நாசி வழி வடிந்து நமக்கு முன்பாக மேல்நோக்கி சென்றாலும், உள்ளுக்குள்ளேயே ஓடினாலும் ஆகாய சரமாகும். இப்படி நம் மூச்சானது எந்த பூதத்தை சார்ந்து ஓடுகின்றது என்பதை சுலபமாக கண்டுபிடிக்கலாம்.


நாம் அசையா வேளையில் பிருதிவியும், அசையும் வேளையில் அப்புவும், கஷ்ட வேளையில் தீயும், நம்மில் ஏதேனும் சலிப்பு ஏற்பட்டு அதனால் ஏற்படும் துறவு வேளையில் காற்று சரமோடும். அதிக நேர தியானம், வாசி மற்றும் பூசை வேளையில் ஆகாய சரமோடும்.


மேலும் பூர்வபட்ச வியாழனில் பூமி சரமும், அமரபட்ச வியாழனில் நெருப்பும், வெள்ளி நீரும், புதன் காற்றும், சனிக்கிழமை ஆகாய சரமும் மேற்கண்ட நாட்களில் முதலில் ஓட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் ஞாயிறு நீர் சரமும், திங்கள், செவ்வாய், வியாழன் போன்ற நாட்களில் தீ சரமும், புதன் பூமியும், வெள்ளி காற்றும், சனி ஆகாய சார்ந்த சரம் நடப்பது மிக்க நல்லது.


பொதுவாக ஒருவருக்கு மண் மற்றும் நீருக்குண்டான சரம் நடந்தால், அவர் சத்துவ குணமுடையவராவார். மேலும் ஒருவருக்கு கோபம், அகங்காரம், ஆணவம், காமம் போன்ற எண்ணங்கள் தீ சரம் நடக்கும்போது உண்டாகும். எனவே அதை கவனித்து பக்தியில் மனதை செலுத்தினால் நல்லது. காற்று சரம் நடந்தால் அவன் ஞானியை நெருங்கியவன். ஆகாய சரம் நடந்தால் அவன் கடவுளை நெருங்கியவன். தீ சரம் பக்தியில் தீவிரமாயிருப்பவனுக்கும், நீர் சரம் தான தர்ம செய்பவனுக்கும், மண் சரம் ஓடினால் அவன் உபதேசம் செய்பவனாகவும் இருப்பான்.


மேலும் காலையில் படுக்கையிலிருந்து எழும்போது கொட்டாவி விடாமல் மூச்சை உள்ளிழுத்து கொண்டு எழுந்திருந்தல் மிக்க நலமாய் அமையும். சூரியகலையில் மண்சரமோ, நீர்சரமோ ஓடும்போது அந்நிலையில் எக்காரியம் ஆகவேண்டியிருப்பினும் அக்காரியத்தினை செயலில் நோக்க விரைவில் அது எளிதாக முடியும். மண்ணும் நீரும் கலந்தேயிருப்பது போல உடலில் மாமிசமும் உதிரமும் கலந்தேயுள்ளன. ஆகாயமும் காற்றும் கலந்தேயிருப்பது போல சரமாகிய மூச்சு காற்று ஆகாய பந்தத்தில் கலந்தேயுள்ளது. அக்கினி மட்டும் பூமியிலும், பிரபஞ்சத்திலும், உடலிலும் அனைத்திலும் பொது நிலையாய் மத்தியில் உள்ளது.


இதுவரை சர சாஸ்திரம் ஓரளவு நிறைவடைகின்றது. இதில் இன்னும் பழகப் பழகப் இப்பூத சரமானது எப்பூத சரத்தில் போய் முடிகின்றது என்பதை கண்டு இந்த பஞ்சபூத சரத்தையும் இடகலையில் 25 ஆகவும், பிங்கலையில் 25 ஆகவும் பிரிக்கலாம். அதாவது நமது மூச்சு பிருதவியினை பூமிசரமூச்சில் தொடங்கி எப்பூத சரத்தில் முடிகின்றது என காண வேண்டும். காண முடியும். இந்த அளவு துள்ளியமாக பார்க்கும் முறையில் நம்மற்றில் உலகின் ஆதிஅந்த செயலின் முக்காலங்களையும் நன்கு அறிந்துணர முடியும். மேலும் இடது 25யும், வலது 25யும் மற்றும் சுழுமுனையாகிய 1யும் சேர்ந்த கூட்டுதொகையே 51 அட்சரமாகிய சிதம்பர சக்கரமாகும். இதை விளக்க விளங்கி கொள்ள தெரிந்தவன் பரத்தை தெரிந்தவன் ஆவான்.


சிதம்பர சக்கரத்தை தெரிந்து கொள்வதற்குமுன், 


நமசிவய மந்திரத்தில் 

ந- நிலமாகவும், 

ம- நீராகவும், 

சி- நெருப்பாகவும், 

வ- காற்றாகவும், 

ய- ஆகாயமாகவும் உள்ளன. 


இவற்றின் நிறம், சுவை, வடிவம், தூரம் ஆகியன;

ந-நிலம்-பொன்-சதுரம்-தித்திப்பு-12 அங்குலம்,

ம-நீர்-வெண்மை-பிறை வடிவம்-துவர்ப்பு-16 அங்குலம்,

சி-தீ-சிகப்பு-முக்கோணம்-உவர்ப்பு-8 அங்குலம்,

வ-காற்று-கருப்பு-அறுகோணம்-புளிப்பு-4 அங்குலம்,

ஆகாயம்-பச்சை-வட்டம்-கார்ப்பு-1 அங்குலமாகும்.


இவற்றில் நிலத் தத்துவத்தில் நிலத்தில் நிலம், நிலத்தில் நீர், நிலத்தில் தீ, நிலத்தில் காற்று, நிலத்தில் ஆகாயம் என ஐந்து பிரிவுகளாக உள்ளும் வெளியும் இயங்கும். இதேபோல் நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம் என மொத்தம் 25 பிரிவுகளாக இயங்கும் விதத்தை 25 கட்டத்திற்குள் வைத்து ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கத்தை குறிப்பிடுவதே சிதம்பர சக்கரமாகும்.


"சிதம்பர சக்கரம் தான் அறிவார்- இந்த 

சீமையில் உள்ள பெரியோர்கள் சிதம்பர 

சக்கரம் தானும் என்றால்- அதற்குள் 

தெய்வத்தை யல்லோ அறியவேணும்"


சிதம்பர சக்கரத்தின் விளக்கத்தை சமீபத்தில் வந்த வள்ளலார்  தனது அகவலில் தெளிவாக எழுதியுள்ளார். அனைவரும் அகவலை ஒருமுறையாவது படித்து பார்க்கவும். ஆன்மீகத்தின் ரகசியமான முறைகள் மற்றும் சூட்சமங்கள் உங்களுக்குள் கேள்வியாய் உதித்து அதை நோக்கி பயணிக்க வைக்கும். விடை என்பது எப்படி வேண்டுமானாலும் கிடைக்கலாம். சிதம்பர சக்கரத்தை ஸ்தூலம், சூட்சமம், காரணம் என பல பிரிவுகளில் விளக்கிக் கொண்டு செல்லலாம். இப்பதிவில் சுவாசத்தால் ஏற்படும் மாற்றத்தையும் அதில் இப்பூதங்களில் செயல்பாடுகளையும் மட்டும் இங்கு சொல்கிறேன். விரிவாக கற்க திருமந்திர whatsaap வகுப்பில் கற்கவும்.


சரமானது மண்ணை சார்ந்து நடக்கும்போது;

மண்ணில் மண் நடந்தால்- எதிலும் நிறைவு உண்டாகும்.

மண்ணில் நீர்- அடிசேரலாம்.

மண்ணில் காற்று- அலைந்து அலைந்து அவனடி சேர்வர்.

மண்ணில் நெருப்பு- உடல் உஷ்ணம் அதிகமாகும்.

மண்ணின் ஆகாயம்- பிடி கிடைக்காமல் சுற்றிக்கொண்டே இருப்பர். 


சரமானது நீரை சார்ந்து நடக்கும்போது;

நீரில் நிலம்- மூச்சு நீருக்குரிய சரத்திலாரம்பித்து மண்ணிற்குரிய பிருதிவி சரத்தில் முடிந்தால் கலத்தல் எனும் ஐக்கிய பாதையான சமாதி நிலையை அடையலாம்.

நீரில் நீர்- எல்லாவற்றிலும் வளர்ச்சி.

நீரில் நெருப்பு- உடல் குளிர்ச்சியாகும்.

நீரில் காற்று- அமிர்தம் சுரக்கும்.

நீரில் ஆகாயம்- அப்படியே அதிர்ந்து போய் ஒரு சில நிமிடங்கள் இருக்கும் நிலையில் இம்மூச்சு ஓடும். 


சரமானது தீயை சார்ந்து நடக்கும்போது;

தீயில் மண்- ஆயுள் நீட்டிப்பு.

தீயில் நீர்- ஆயுள் குறைவு.

தீயில் தீ- இருநிலை மாற்றம்.

தீயில் காற்று- மயக்கத் தோற்றத்தை உருவாக்கும்.

தீயில் ஆகாயம்- புவிஈர்ப்பு விசையை மீற முடியும்.


சரமானது காற்றை சார்ந்து நடக்கும்போது;

காற்றில் மண்- நோய் அறிகுறி.

காற்றில் நீர்- விந்து மேலேறும்.

காற்றில் தீ- உடம்பில் தீயின் சுழற்சியை காணலாம்.

காற்றில் காற்று- காந்தவியல் அழுத்தம் மேற்பட்டு தலை கணக்கும், நாதம் கேட்கும்.

காற்றில் ஆகாயம்- பாவபுண்ணியம் கலைந்து எரிந்துவிடும் நிலை. 


சரமானது ஆகாயத்தை சார்ந்து நடந்தால்;

ஆகாயத்தில் மண்- உச்சி திறக்கும், தியானத்திற்கு உகந்தது.

ஆகாயத்தில் நீர்- நம் சக்தியானது இடம்விட்டு இடம் நகரும்.

ஆகாயத்தில் காற்று- விசுத்தியில் நிற்கும் 

ஆகாயத்தில் தீ- நந்தியாகிய பரமாத்மாவை தெளிவாக காண முடியும்.

ஆகாயத்தில் ஆகாயம்- இருள் நிலை, மாயை, முழு ஞானம் உற்பத்தியாகும்.


மேலும் சந்திரகலை குளிர்ச்சியாக இருப்பதால் அது உஷ்ணத்தை நாடி செல்லும். இதில்தான் அறிவு உதிக்கின்றது. இதேபோல் சூரியகலை உஷ்ணமானதால் குளிர்ச்சியை நோக்கி செல்லும். இதில் மாயை அல்லது பிரமை உண்டாகின்றது. பிரமை என்பது பிரம்மதோடு இணைந்திருப்பது என்ற பொருளாகும். இந்த வேறுபாடுகளை கொண்டு நீங்களே உங்கள் உள்நிலையும் உங்கள் வெளி உலக நிலையையும் துல்லியமாக ஒப்பிட்டு பார்த்து கொள்ளலாம். 


அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் என்பதற்கு ஏற்றாற் போல் இந்த பிண்டத்தில்(உடலில்) பஞ்சபூத சரத்தால் என்னென்ன மாற்றம் ஏற்படுகின்றதோ அதேபோல் அண்டமாகிய பிரபஞ்சத்திலும் மாற்றம் நிகழும். உங்கள் மனதில் மேலும் தெளிவாக பதிய வேண்டுமெனில் கீழேயுள்ள சாதாரணமாக நடைமுறையில்(Practical changes around us in the nature) ஏற்படும் இயற்கை மாற்றத்தை புரிந்துகொண்டால் போதுமானது. இதுவே நம் உடலுக்கு உள்ளும் வெளியும் நிகழ்பவை. 


பிருதவியில் ஏற்படும் மாற்றம்:

மண்ணை மண்ணில் போட்டால்; நிறையும்.

மண்ணை நீரில் போட்டால்; அடி செல்லும்.

மண்ணை காற்றில்; அலைந்து வேறிடம் பின்பு கீழ் அடிவிழும்.

மண்ணை தீயில்; உஷ்ணமாகும். மண்ணை ஆகாயத்தில்; சுழலும். 


அப்புவில் ஏற்படும் மாற்றம்: 

நீரை மண்ணில் கலந்தால்; பரவும்.

நீரை நீரில்;- பெருகும்.

நீரை தீயில்;- குளிர்ச்சி.

நீரை காற்றில்;- ஆவியாகி மேகமாகி மழை வரும்.

நீரை ஆகாயத்தில்;- உறை நிலை. 


தேயுவால் ஏற்படும் மாற்றம்:

தீயை மண்ணில் போட்டால்; அழியாநிலை(உஷ்ணம்).

தீயை நீரில் போட்டால்; அழிவுநிலை. தீயை தீயில்; இருநிலை மாற்றம்.

தீயை காற்றில்; அனல், கானல்நீர், வெக்கை, உருக்கம்.

தீயை ஆகாயத்தில்; குமிழாகி பறக்கும்.


வாயுவால் ஏற்படும் மாற்றம்:

காற்றை மண்ணில்; விரிசல்.

காற்றை நீரில்; நீர் சுழற்சி.

காற்றை தீயில்; தீ சுழற்சி.

காற்றை காற்றில்; காந்தவியல். அழுத்தம், காற்றை ஆகாயத்தில்; மேகம் கலையும்.


ஆகாயத்தால் ஏற்படும் மாற்றம்: ஆகாயத்தை மண்ணில்; பிரளயம், தியானம்.

ஆகாயத்தை நீரில்; புவி நகரும், இடமாறும்.

ஆகாயத்தை தீயில்;-

 ஒளி பெருகும். 

ஆகாயத்தை காற்றில்;- கடல்நீர் உள்வாங்கும்.

ஆகாயத்தை ஆகாயத்தில்; இருநிலை, மாயை, பிரமை. 


நம் ஸ்தூல சூட்சும சரீரங்களில் ஸ்தூலமாக மற்றும் சூட்சுமமாக நடைபெறும் காரண காரியங்களுக்கு பஞ்சபூதங்களின் பயன்பாடு பற்றி அடுத்து சொல்கிறேன்....


ஸ்தூலத்தில்;

--------------------------

மண்ணில் மண் சேர்ந்தால் உடலில் சக்தி குறைந்து அசதி ஏற்படும்.

மண்ணில் நீர்- உடலில் மாமிசம் உருவாகின்றது,

மண்ணில் தீ- சருமமாகிய தோல் உருவாகின்றது,

மண்ணில் வாயு- நரம்புகளும்,

மண்ணில் ஆகாயம்- ரோமமும்,


நீரில் நீர்- சிறுநீரும்,

நீரில் மண்- உமிழ்நீரும்,

நீரில் வாயு- உதிரமும்,

நீிரில் தீ- வியர்வையும்,

நீரில் ஆகாயம்- சுக்கிலமும்,


தீயில் தீ- நேத்திர கண்ணும்,

தீயில் ஆகாயம்- செவியும்,

தீயில் வாயு- சரீரமும்,

தீயில் நீர்- வாயும் நாக்கும்,

தீயில் மண்- நாசியும்,


காற்றில் மண்- இருதயமும் பிராணக் காற்றும்,

காற்றில் நீர்- குதமும் அபான வாயுவும்,

காற்றில் காற்று- சர்வ நாதங்களும் வியானனும்,

காற்றில் தீ- கழுத்தும் உதானனும்,

காற்றில் ஆகாயம்- தொப்புளும், சமானனும்,


ஆகாயத்தில் மண்- இருதயமும்,

ஆகாயத்தில் நீர்-நாசியில் பித்தமும்,

ஆகாயத்தில் தீ- மார்பும்,

ஆகாயத்தில் காற்று- கண்டமும்,

ஆகாயத்தில் ஆகாயம்- சிவமும் உருவாகின்றன.


சூட்சுமத்தில்;

-------------------------

மண்ணில் மண் கலந்து குதமும், 

மண்ணில் நீர்- குய்யமும், 

மண்ணில் தீ- கைகளும், 

மண்ணில் காற்று- பாதங்களும், 

மண்ணில் ஆகாயம்- வாக்கும், 


நீரில் ஆகாயம்- சத்தமும், 

நீரில் காற்று- தொடு உணர்வும், 

நீரில் தீ- பார்வையும், 

நீரில் நீர்- சுவையும், 

நீரில் மண்- வாசனையும், 


தீயில் தீ- பசியாகிய தீபாக்கினியும், 

தீயில் மண்- தாகமும், 

தீயில் நீர்- தூக்கமும், 

தீயில் காற்று- கொட்டாவியும், 

தீயில் ஆகாயம்- சங்கமமாகிய கலத்தலும், 


வாயுவில் வாயு- ஓட்டமும், 

வாயுவில் நீர்- இருத்தலும், 

வாயுவில் தீ- தத்தித்தத்தலும், 

வாயுவில் மண்- நடத்தலும், 

வாயுவில் ஆகாயம்- படுத்தலும்,

 

ஆகாயத்தில் மண்- ஆசையும் அகங்காரமும், 

ஆகாயத்தில் நீர்- துவேசமும், 

ஆகாயத்தில் தீ- பயமும், 

ஆகாயத்தில் காற்று- வெட்கமும், ஆகாயத்தில் ஆகாயம்- மேகமும் உருவாகின்றன.


ஆக இதன் மூலம் ஒரு பூதமானது மற்றைய பூதங்களில் கலந்து உடலிலும், வெளியிலும், ஸ்தூலமாகவும், சூட்சமமாகவும் ஏற்படும் மாற்றங்களையும், பஞ்சபூதங்களே பிறக்கும் முன் தாயின் கருவிலும், பிறந்தபின் வெளியிலும் உடல் உறுப்புகள் உருவாவதற்கு காரணமாகும். மேலும் நமக்கு ஏற்படும் ஆணவம், கோபம், ஆசை போன்றவற்றிற்கும் இப்பூதங்களே காரண காரியமாகும். இவை அனைத்தையும் அனுபவத்தில் உணர வாழ்த்துக்கள். மேலும் கற்க திருமந்திர சிவயோக வகுப்பில் கற்கவும்...

Monday, 3 February 2025

அகத்தியர் கும்பாபிஷேகம்

 வணக்கம் அகத்திய அடியவர்களே 


நமது பொகலூர் அகஸ்தியர் ஜீவ அருள் நாடி பீடம் , பெரும் ஆலயமாகி நிற்கிறது .  அகத்தியர் எம்பெருமான் ஒரு விளக்கு ஒளி மூலம் அங்கே கும்ப அபிஷேகத்திற்கு முன்னால் 21 நாட்கள் ஒரு விளக்கு ஒளி மூலம் இப்போது உள்ள பீடத்தில் எழுந்தருளி , பிறகு அவ்விளக்கை புதிய ஆலயத்தில் ஏற்றி வழிபட்ட உடன் இங்கே இருந்து குடி பெயர்ந்து புதிய நிலைக்கு அரூபமாக சென்று விடுவார் . 21 நாட்களும் அணையா தீபமாக , இப்போது இருக்கும் குடிலில் தொடர்ந்து ஒளிர வேண்டும் என்பது அகத்தியர் எங்களுக்கு ஜீவ நாடியில் உறைத்துள்ள வாக்கு . 


ஒன்று அறியாத சிறு குழந்தைகள் போல் உள்ள எங்களுக்கு ஆசானாய் குருவாய் உள்ள அகத்தியரின் நேரடி உத்தரவை மட்டுமே நாம் அடிபணிந்து செயலாற்றி கொண்டு உள்ளோம் . எங்களுக்கு பெரிதாக ஆலய விதிகள் எதுவும் தெரியாது . நாங்கள் எப்போதும் அகத்தியர் ஆட்டுவிக்கும் பொம்மையாக உள்ளோம் , ஆட்டுவிப்பவர் அவரே. 


எனவே , இதனை உணர்ந்து , பக்தர்கள் அனைவரும் , தம் தமது வாழ்வில் அகத்தியரின் வழி காட்டுதல் எப்போதும் இருக்க வேண்டும் என்றால் , அதற்கு அவர் தொடர்ந்து மிகவும் ஆழமாக நிலை நிற்க வேண்டும் . அதற்கு தான் இந்த ஆலயம் .நமது சுயநலத்திற்காக , நமது பக்தர்கள் வாழ்வில் சிறப்புகள் பெற்று தடைகள் அகன்று உயர வேண்டும் என்பதற்காக ஒரு உண்மையான வழிகாட்டி அரூபமாக இருந்து ஜீவ நாடி மூலம் நேரிடையாக உரையாடி அருள , அவருக்கு மிகவும் தகுந்த இடமாக இந்த ஆலயம் இருக்கும் .


*எனவே , ஏற்கனவே நமது அகத்தியர் அருள் மூலம் பயன் பெற்ற அடியவர்கள் , ஏதோ ஒரு வகையில் தங்களால் இயன்ற பொருளதவியை செய்து இந்த ஆலயம் எழும்ப தோள் கொடுக்குமாறு தாழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்*


நமது தேவை 50 நபர்கள் , தலா  10000 வீதம் அளித்தால் , நன்கொடை சேகரிப்பு விரைவில் முடிவடையும் 


*ஆலயம் எழும்பினால் நமக்கு தான் நல்லது , நமது வாழ்வு மேலும் சிறக்கும் , ஆலயம் கோபுரம் உயர உயிர் பெற , அதற்கு உறுதுணையாக இருந்த பக்தர்கள் வாழ்வும் படிப்படியாக உயரும் என்பது அகத்தியர் ஜீவ நாடியில் உரைத்த வாக்கு*


நமக்கு இன்னும் சுமார் 35 நாட்கள் மட்டுமே உள்ளன - கும்பாபிஷேகம் மார்ச்சு மாதம் 8 ஆம் தேதி துவங்கி 10 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் கும்பத்திற்கு அபிஷேகம் நடைபெறும் 


*இதற்கு கும்பாபிஷேகம் செய்து வைக்கும் வேத விற்பன்னர்கள் குழுவிற்கும் , பூஜை பொருட்களுக்கும் மொத்தமாக 2 லட்சம் கொடுப்பதாக பேசி இருக்கிறோம் . வசதி படைத்தவர்கள் மனது வைத்தால் , இந்த 2 லட்சம் ரூபாயை யாரேனும் கொடுக்க முன்வரலாம் , பணத்தை கூட நேரிடையாக வந்து இருந்து கும்பாபிஷேகம் செய்து வைக்கும் உயர்திரு கல்கி கண்ணன் ஸ்வாமிஜி  சாஸ்திரிகள் அவரிடமே நேரிடையாக கொடுக்கலாம்* விருப்பம் இருப்பவர்கள் , வசதி உள்ளவர்கள் யாரேனும் இருந்தால் , இந்த கைங்கர்யமான் 2 லட்சம் ரூபாயை ஏற்று கொள்ளவும் . ராஜ பட்டாபிஷேகத்தில் , கிரீடம் எவ்வளவு முக்கியமானதோ , அதை போன்று , கும்பாபிஷேகத்தில் , புரோகிதமும் வேத மந்திரங்களும் , பூஜை திரவியங்களும் தான் பிரதானம் . அதே போல, ஒரு கல்யாணத்தில் , தாலி கயிறு திருமாங்கல்யம் எவ்வளவு முங்கியமோ , அதை போல தான் இந்த வேத கைங்கர்யம் . இந்த கைங்கரிய செலவை ஏற்று கொள்பவர்களுக்கு பிரதானமான கும்பிஷேக புண்ணிய பலன் சென்று சேரும்.


எந்த கட்டாயமும் இல்லை . மேலே உள்ள பதிவு வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் . அவர்கள் மட்டும் மனம் வைத்தால் இது நடக்கும். எல்லாம் இறை செயல் ,; நாங்கள் வெறும் கருவிகளே  !!!


இறை இயக்கம் வெற்றி பெறட்டும் !!!! ஓம் அகத்தீஸ்வராய நமஹ ஓம் லோபாமுத்ராய நமஹ 


இங்கனம் 

தி. இரா. சந்தானம் 

03- 02-2025

GPAY 9176012104

Thursday, 30 January 2025

நமது அகத்தியர் ஆலய கும்பாபிஷேகம் 10.03.2025


 🙏🏻வணக்கம்🙏🏻

🙏🏻நமசிவாயம்🙏🏻



ஏப்ரல் 2016, முதல், 8 வருடங்களாக பொகளூர் கிராமத்தில், சிறிய குடிலில் குடிகொண்டு அருள் பாலித்து  அரும்  நமது தந்தை அருள்மிகு அகத்தீஸ்வரர் எம்பெருமான் அவரகளுக்கு பக்தர்களின் பெரும் பொருளுதவியுடன் பிரமாண்டமான ஆலயம் எழுப்பட்டு இன்று கம்பீரமாக நிற்கிறது.


 நமது குருநாதர் அகத்தியர், தம்பதி சமேதராக ஸ்ரீமதி உலோபமுத்திரை தாயாருடன் அருள் பாலிக்க உள்ளார்.


 அத்துடன் இலிங்க  வடிவில் ஈசனும், மற்றும் தம்பதி சமேதராக நீலா சரஸ்வதி சமேத உஜ்ஜிஷ்ட மகா கணபதி பெருமானும் தனி சந்நிதி கொண்டு எழுந்தருள உள்ளார்கள்.


மேலும் திரு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன்சமேதராக சித்திர வடிவுடன் சித்திர கூடமாக ,  வாசி யோக மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.


அன்னதான .மண்டபம் தனியே எழுப்பப்பட்டுள்ளது. 


 நவீன் தொழில் நுட்பத்துடன் கூடிய சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளது.


கோசாலை அமைக்கப்பட்டுள்ளது.


27 நட்சத்திர மரங்கள் கொண்ட நந்தவனம் அமைய பெரும். மரங்கள் நடப்பட தயார் நிலையில் உள்ளன.


பக்தர்கள் வசதிக்காக ஆண், பெண், தனித்தனியே உபயோகிக்கும்  வகையில் கழிப்பிடம் மற்றும் குளியல் அறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.


மஹா கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்க, நம்மிடம் ஜீவ நாடி மூலம் பேசி உரையாடும் மூலவரான கும்பமுனி அகத்தியரே நாள் குறித்து உள்ளார்.


 மற்ற ஆலயங்கள் போல் அல்லாமல், மூலவரே பேசி, தன்னை எப்படி பிரதிட்டை செய்ய வேண்டும், விழா எப்படி நடத்த வேண்டும், எவ்வளவு கலசம் கொண்டு அபிஷேகம் செய்ய  வேண்டும் என்று ஜீவ நாடி மூலம் உரைத்து நடத்தும் கும்பாபிஷேகம்,மனித சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும் விழா ஆகும்.


கும்ப அபிஷேக விழாவில்,  அகத்தியர் மனித உருவம் கொண்டு அங்கு வந்திருந்து மக்களை ஆசி புரிவார்.


கும்ப அபிஷேகத்திற்கு யாக சாலை, பூஜை பொருட்கள், பந்தல், அன்னதானம், கலசங்கள், புரோகித செலவு, ஆகியவைக்கு, சுமார்,  5 லட்சம் தேவை படுகிறது. 


50 பேர் சேர்ந்து ஆளுக்கு 10,000 வீதம் பொருள் ஈட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அகத்தியர் ஆலய கும்ப அபிஷேக பணியை ஏற்று கொண்டு அந்த 50 பாக்கியவான்களில் ஒருவராக ஆகும்படி பீடத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம்.


ஒரு பீடம், இன்று ஆலயமாக மாற போகிறது. ஆசிரமமாக மாற போகிறது.


50 பேரில் ஒருவராக விருப்பம் உள்ளவர்கள் பெயர் கொடுக்கவும். 10,000 நன்கொடை மார்ச்சு மாத துவக்கத்திற்குள் கொடுக்கலாம்.


மிக்க நன்றி.


தி. இரா. சந்தானம்

அகத்தியர் பீடம்

Gpay 9176012104