Saturday 27 July 2019

அகத்தியர் வாக்கு - பதினெட்டு படிகள் தத்துவ விளக்கம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 136*

*தேதி: 28-07-2019(ஞாயிறு - சூரியன், கதிரவன், பகலவன், ஆதித்தன், ரவி)*

*அகத்திய மாமுனிவர்  என்பவர் யார்?*

*தண்டகம் நூல் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : ஐயப்பன் காேவில்களில் 18 படிகள் வரக்காரணம் என்ன? 18 என்ற எண்ணிக்கையின் சிறப்பு பற்றி கூறுங்கள் :🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இறைவன் அருளால் பாெதுவாக 18 என்பது மனிதனுக்கு ஏதாே ஒரு வகையில் பிடித்துப்பாேய்விடுகிறது. அதனால்தான் 18 சித்தர்கள், மகாபாரதத்திலே 18 தினங்கள் யுத்தம், 18 பர்வதங்கள்(மலைகள்) என்று ஏற்றுக்காெண்டு விட்டான். இதில் சில இல்லாமல் இல்லை. இன்னவன் கூறிய ஹரிஹரபுத்திரனின்(ஐயப்பன்) அந்த படிகளின் எண்ணிக்கை பதி எண்(18) கணக்கிலே, அந்த இரண்டையும் கூட்டி நவமாக்கி(ஒன்பதாக்கி), அந்த நவம்(ஒன்பது) என்பது மனிதனின் தேகத்திலே இருக்கிறது. இந்த நவத்தை(ஒன்பதை) வெல்ல வேண்டும் என்பதின் பரிபூரண சூட்சமம்தான் அங்கே படிகளாக வைக்கப்பட்டிருக்கிறது. இன்னாென்று விக்ரமாதித்தனின் ஆசனத்தில்கூட பல்வேறு படிகளும், பதுமைகளும் இருந்தன. படி தேவதைகள் என்று இருக்கிறது.*

*ஒவ்வாெரு நிலையிலும் பாவத்தைக் குறைத்து புண்ணியத்தை சேர்க்க, சேர்க்க ஒரு படி மனிதன் ஏறுகிறான் என்பது தேவ மாெழியாகும். இங்கே படிப்படியாக உயர்வது என்பது உலகியல்ரீதியாக, வெளிப்படையாக பாெருளாதார வெற்றியை, பதவியை குறிக்கலாம். ஆனால் தேவ ரீதியில் இறை ரீதியில், மகான்கள் ரீதியில் நேற்றைவிட இன்றைய தினம் எந்தளவு பாவத்தைக் குறைத்திருக்கிறான்? எந்த அளவு புண்ணியத்தை செய்திருக்கிறான்? எனவே இறைவனை நாேக்கி அடுத்த படியில் இவனை அமர்த்திவிடலாம் என்பதை படி தேவதைகள் தீர்மானித்து அடுத்த நிலைக்கு தள்ளிவிடும். அந்த நிலையிலேயே இருக்கிறானா? இன்னும் இறைவன் அருளை நாேக்கி அடுத்த படிக்கு செல்கிறானா? என்பதை பார்த்து அந்த படி தேவதைகள் இன்னாெரு படிக்கு தள்ளி விடுகிறது. இறுதியாக படிப்படியாக உயர்ந்து அந்தப் பதியிடம்(இறைவனிடம்)அந்த ஆத்மா செல்வதைதான் உண்மையான சூட்சுமப் படி குறிக்கிறது. இதை அந்த தெய்வத்திற்கு புறச்சடங்காக 18 படிகள் என்று வைத்திருக்கிறார்கள்.*

*எல்லா தெய்வங்களுக்கும் இந்த படி நிலை என்பது உண்டு. இதனால்தான் மலைகளில் ஏராளமான படிகள் வைத்து அந்தப் படிகளில் ஏறி, இறங்கினால் இறையருள் என்று வைத்திருக்கிறார்கள். இறை அருள் என்பது பிறகு. உடல் ஆராேக்கியம் என்பது முதலில். அந்தப் படி தேவதைகள் மட்டுமல்லாது ஒவ்வாெரு படியின் அடியிலும் பல ரிஷிகளும், மகான்களும் தவம் செய்து காெண்டு "இதாே! என் மேல் ஏறிப் பாேகிறானே? இந்த மனிதனின் பாவங்கள் இத்தனை இருக்கிறது. இவன் இத்தனை, இத்தனை பிறவிகள் எடுத்திருக்கிறான். இறைவா! இப்பாெழுதுகூட இவன் தன்னை உணராமல் ஏதாே சுற்றுலா பாேல்தான் இங்கு வந்திருக்கிறான். இவன் அறியாமையை நீக்கிவிடு. வேண்டுமானால் இவன் பாவங்களை நான் எடுத்துக் காெள்கிறேன்" என்று ஒவ்வாெரு படியின் அடியிலும் அமர்ந்திருக்கும் மகான் ஒவ்வாெரு தினமும் வேண்டிக் காெண்டிருக்கிறார். எனவே அந்த படி என்பது சாதாரண விஷயமல்ல. படிப்படியாக மேலே செல்வதைக் குறிக்கும்.* பின்னால் இதனை நீ படிப்படியாக புரிந்துகாெள்ளலாம்.

*படிப்படியாக நாங்கள் பலவற்றைக் கூறினாலும், படிப்படி என்று நாங்கள் கூறும்பாெழுது அது பல பேருக்கு அந்த படிப்படி என்பது புரியாமல்தான் பாேய்விடுகிறது. படி, படி என்று குழந்தைகளைப் பார்த்து பெற்றாேர்கள் கூறுவது குழந்தைகளுக்கு பிடிக்காதது பாேல நாங்கள் பல படிகளைக் கூறும்பாெழுது மனிதர்களுக்கும் படிப்படி என்பது பிடிக்காமல் பாேய்விடுகிறது. படிப்படியாக நாங்கள் கூறுகிறாேம். அதனை படிப்படியாக பதிவு செய்து படிப்படியாக மேலே ஏறி அந்த படியின் உச்சியிலிருக்கும் பதியிடம்(இறைவனிடம்) அனைவரும் சேர வேண்டும் என்று நல்லாசி கூறி, படிப்படியாக இன்னும் மேலே உயர நாங்கள் அந்த எம்பிரானை வணங்கி, இப்பாெழுது சற்றே அயர்வு தந்து மேலும் படிப்படியாக வாக்குகளை பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு, சத்சங்கத்திற்குப் பிறகு இறையருளால் நாங்கள் கூறுவாேம் என்று கூறி படிப்படியாக அனைவரும் உயர நல்லாசிகள்.*

*(சில வருடங்களுக்கு முன் உரைக்கப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு)*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************