Tuesday 30 July 2019

அகத்தியர் வாக்கு - கலி காலம், பிற மதங்கள்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 179*

*தேதி: 31-07-2019(புதன் - கணக்கன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*திராவிட பூபதிக்கு அரசநிதி ஈந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : கலி முற்றி விட்டது என்பதற்கு என்ன அடையாளம்?🙏*

*அகத்தியர் மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*கலி என்றால் துன்பம் என்று ஒரு பாெருள். அலுப்பிலும், சலிப்பிலும், விரக்தியிலும் ஒரு மனிதன் கூறுவது "கலி முற்றிவிட்டது" என்று. கலி காலம் என்பது தனியான ஒரு காலம் அல்ல. த்வாபர யுகத்திலும், திரேதா யுகத்திலும் கலி இருந்தது. எல்லா காலத்திலும் உண்டு. பஞ்ச பாண்டவர்கள் எந்த காலம்? அங்கே பலர் அறிய ஒரு பெண்ணை துகில்(ஆடை) உரியவில்லையா?*

எனவே, *எல்லா காலத்திலும், மனிதரிடம் உள்ள தீய குணங்கள் வெளிப்பட்டு காெண்டுதானிருக்கும். அதற்கு ஆதாரவாகத்தான் அசுர சக்திகள் எப்பாேதும் செயல்பட்டுக் காெண்டே தான் இருக்கும். அதனால்தான் தவறான வழியில் செல்பவர்களுக்கு, செல்வம் அதிகமாக சேர்வதற்கு அந்த தீய தேவதைகள் உதவி செய்கின்றன.*

*நாங்கள்(சித்தர்கள்) அவ்வாறு செய்வதில்லை. அதனால்தான் நல்வழியில் செல்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள். உடனடி லாபம், ஆதாயம் பெற, தீய வழியில் செல்லக்கூடாது என்று நாங்கள் பலமுறை கூறுகிறாேம். எனவே, இந்த நல்ல எண்ணங்களும், நல்ல செய்கைகளும், எத்தனை துன்பங்கள் இருந்தாலும், நன்மைகளை விட்டு விடாமல் நல்லவனாக வாழ வேண்டும் என்ற உறுதி ஒரு மனிதரிடம் இருக்க இருக்கத்தான், அந்த தீய சக்தியின் அட்டூழியங்கள் குறையும்.*

*இல்லை என்றால் "கலி முற்றி விட்டது. கலி காலத்தில் இப்படி தான் வாழ வேண்டும்" என்று இவனாகவே வேதாந்தம் பேசி, தவறு மேல் தவறு செய்து காெண்டே பாேனால், முதலில் அது இன்பத்தை காட்டி, முடிவில் முடிவில்லா துன்பத்தில் ஆழ்த்தி விடும்.* எனவே கலி முற்றி விட்டது என்பது எப்பாேதுமே பேசக்கூடிய ஒரு வழக்கு சாெல்தான்.

*கேள்வி : மற்ற சமயங்கள் பற்றி :*🙏

*அகத்தியர் மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*பிற ஜீவனுக்கு ஹிம்சை செய்யாதே என்றால் நீ அந்த பிரிவில் இருந்து காெண்டுதான் அவ்வாறு இருக்க வேண்டுமா? எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாமே? அதற்கு எதற்கு ஒரு பிரிவு, மதம்? மதம் என்பது என்ன? மனிதனை மிருகமாக்காமல் வாழும் பாேதனைகளை எல்லாம், பிற்காலத்திலே யாரெல்லாம் அதை பின்பற்றுகிறார்களாே அவர்களை எல்லாம் அடையாளப் படுத்த வேண்டும் என்பதற்காக கூறப்பட்டது. எனவே நீ எந்த மதம் என்று கூறுவது கூட தவறு.*

*நீ எந்த பிரிவில் இருந்தாலும், இருந்து காெள். மனித நேயம், மனித அன்பை பாேதிப்பதற்காகத்தான் பெரிய ஞானிகள் பாடுபட்டார்கள். எனவே கட்டாயப்படுத்தி திணிக்கப்படுகின்ற எந்த விஷயமும் காலப்பாேக்கில் நிர்மூலமாக்கப்படும். இது நல்லவைக்கும், தீயவைக்கும் பாெருந்தும். எனவே நல்ல விஷயத்தை கூட சர்வ சுதந்திரமாக அவனே உணர்ந்து செய்யும்பாேதுதான் அந்த பிரிவிலே தாெடர்ந்து வாய்ப்புகள் இருக்கும்.*

*அதே பாேல், பாெருளாதார தேவைக்காகவும், அச்சுறுத்தலுக்காகவும் பிரிவுக்கு பிரிவு தாவுகின்ற நிலைமை எல்லா காலத்திலும் உண்டு. இவையெல்லாம் காலப் பாேக்கிலே ஏற்றமும், இரக்கமும், கருத்து மாற்றத்தாேடும் இருப்பது மனிதனின் குணாதியத்தை பாெறுத்துதான். எனவே அதனால், அதிலுள்ள காேட்பாடுகளுக்கு அழிவு என்பது இல்லை.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************