Wednesday 19 May 2021

எந்தெந்த இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும்

 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉    


🙏வீட்டில் எந்தெந்த இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும்


?


🙏வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்?


🙏தீப வழிபாடு என்பது தொன்றுதொட்டு   நம் கலாச்சாரத்துடன் கலந்தது ஆகும். 

காலம் காலமாக கடைபிடிகும் மரபாகும்.


🙏நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் மகாலக்ஷ்சுமி கடாக்ஷம் பெருகும்.


🙏மேலும் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், உடல் ஆரோக்கியம், நன்மை, தனவரவு அதிகரித்தல், நல்லபுத்தி  ஏற்ப்படுதல் ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது.


🙏தீபலக்ஷ்மி ஸ்தோத்திரம் என்றே தனியாக இருக்கிறது.அதை சொல்லி வரலாம்.


🙏தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும் : 


🙏முக்கியமாக திருகார்திகை தினத்தில்


🙏கோலமிடப்பட்ட வாசலில் : ஐந்து விளக்குகள்


🙏திண்ணைகளில் : நான்கு விளக்குகள்


🙏மாடக்குழிகளில் : இரண்டு விளக்குகள்


🙏நிலைப்படியில் : இரண்டு விளக்குகள்


🙏நடைகளில் : இரண்டு விளக்குகள்


🙏முற்றத்தில் : நான்கு விளக்குகள்


🙏பூஜையறையில் :


🙏இரண்டு கார்த்திகை விளக்குகள்,அல்லது ஒரு குத்து விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.


🙏இந்த பழக்கத்தை நாம் எல்லா தினங்களிலும் செய்தல் நலம்.


🙏முக்கியமாக காலையிலும் மாலையிலும் ஸ்வாமி சன்னதியில் திருவிளக்கு ஏற்றியவுடன் நம்மை 

அறியாமலேயே தீய சக்திகள் நம்மை விட்டு நீங்கி, நம் மனம் தூய்மை அடைவதை நாம் காணலாம்.


🙏வீட்டில் பூஜை அறையில் விளக்கேறியவுடன் பால் ,கற்கண்டு நைவேத்தியம் செய்தல் நலம்.


🙏 சமையலறையில் :


🙏ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.


🙏தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில் :


🙏எமனை வேண்டி தீபம் ஏற்றினால் மரண பயம் நீங்கும். 

ஆயுள்விருத்தி உண்டாகும்.


🙏தீபத்தின் வகைகள் :


🙏தீபத்தில் மகாலக்ஷ்மி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் தீபலக்ஷ்மியே நமோ நம: என்று கூறி வணங்குவது அவசியம்.


🙏அத்தோடு தாங்கள் விரும்பும் இஷ்ட தெய்வத்தையும் மனதில் சொல்லி, தீபம் ஏற்றியவுடன் வணங்கலாம்.


🙏 தீபத்தில் பலவகைகள் உண்டு. 

 அவை என்ன என்று பார்க்கலாம்.


🙏சித்ர தீபம் :


🙏வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.


🙏மாலா தீபம் :


🙏அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.

வைகானஸ ஆகமம் கடைபிடிக்கும் பெருமாள் கோயிலிலும், சிவபெருமான் கோயிலிலும் சாயரட்சை பூஜை சமயம் மாலா தீபம் ஏற்றப்படுவதை நாம் காணலாம்.


🙏ஆகாச தீபம் : 


🙏வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.


🙏ஜல தீபம் :


🙏தீபத்தை தாமரை இலையில் ஏற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர். 


🙏படகு தீபம் :


🙏கங்கை நதியில் மாலைவேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்கு பெயர் படகு தீபம் ஆகும். 


🙏சர்வ தீபம் :


🙏வீட்டின் அனைத்து பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.


🙏மோட்ச தீபம் :


🙏முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.


🙏சர்வாலய தீபம் :


🙏கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவபெருமான் கோவில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.


🙏அகண்ட தீபம் :


🙏மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.


🙏லட்ச தீபம் :


🙏ஒரு லட்சம் விளக்குகளால் திருக்கோயிலை அலங்கரிப்பது லட்ச தீபமாகும். 


🙏மாவிளக்கு தீபம் :


🙏அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்.



Sunday 16 May 2021

தாய்லாந்தின் மூத்த புத்த பிக்ஷு ஒருவர், மஹாபரிநிர்வாணம் என்ற முறையில் தாமே முடிவு செய்து, தன் உடலை விடுத்து சென்ற காட்சி


 தாய்லாந்தின் மூத்த புத்த பிக்ஷு ஒருவர், மஹாபரிநிர்வாணம் என்ற முறையில் தாமே முடிவு செய்து, தன் உடலை விடுத்து சென்ற காட்சி

Tuesday 11 May 2021

சித்தர்களின் ஜீவ சமாதி பீடங்கள்

 சித்தர்களின் ஜீவ சமாதி பீடங்கள் தமிழ்நாட்டில் பல கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்துள்ளார்கள். 

சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில் இறையுணர்வும், ஈர்ப்பு சக்தியும் அதிகமிருப்பதை நாம் உணரமுடியும் மிகப் பிரசித்தமான கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்திருக்கின்றார்கள் பதினெட்டுச் சித்தர்கள் அடங்கியிருக்கும் ஜீவ சமாதிப் பீடங்கள்தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜீவசமாதிப் பீடங்கள் உள்ளன. உதாரணமாக சென்னையில் திருபொற்றீஸ்வரர் ஆலயம். அங்கேயே அருகில் பட்டினத்தார் ஆலயம். தண்டையார்பேட்டைதிருவருள் குணங்குடி மஸ்தான் தர்க்கா, மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், முண்டகக் கண்ணியம்மன் ஆலயம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம், கொரட்டூர் ஜம்புகேஸ்வரர் ஆலயம், திருமுல்லைவாசல்மாசிலாமணீஸ்வரர்ஆலயம், பூந்தமல்லி அருகில் திருமழிசையாழ்வார் ஆலயம், அரக்கோணம் அருகில் திருவாலங்காடு திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், மாங்காடு ஆலயம் மற்றும் அருகில் திருத்தணி, காளகத்தி, திருப்பதி இவை யாவும் சித்தர்கள் அடங்கி அருளும் சிறப்புமிகு தலங்கள். இன்னும் சென்னையிலும் அதைச் சுற்றிலும் பல ஜீவ சமாதிகள் உள்ளன.ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமானுஜரும், சீர்காழி, ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் சட்டமுனியும் (சீர்காழி சட்டநாதர்), சிதம்பரம், திருவாவடுதுறை முதலிய இடங்களில் திருமூலத் தேவரும் இருந்து அருள்புரிகின்றனர்.திருவாவடுதுறை நரசிங்கம்பேட்டைக்கு அருகில் (மயிலாடுதுறை – கும்பகோணம் மார்க்கம்) உள்ளது. இங்குதான்சிறப்புமிகு திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது. இங்கே ஸ்ரீசமாதி பீடமும் உள்ளது. இதற்கு அருகிலேயே திருவிடைமருதூர்உள்ளது. இங்கு ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு ரோமரிஷி, நாரதர் ஜீவசமாதியில் இருந்து அருள்கின்றனர். இங்கு தல விருட்சமாக உள்ள மருத மரத்தினருகில் இருந்து வாசி லயம் செய்தால் உணரலாம். இங்கிருந்து 10 கி.மீ. தூரத்தில் கும்பகோணம் உள்ளது. இங்கே கும்பேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு அகத்தியப் பெருமான் அருளுகின்றார். இதற்கு அருகிலேயே சாதார வீதி என்று இருக்கிறது. இங்கே சிவவாக்கியராக இருந்த திருமழிசைஆழ்வாராகிய பெருமான் ஜீவ சமாதி கொண்டுள்ளார்.குடந்தைக்கு அருகில் உள்ள திருப்பனந்தாள் ஆதீன மடாலயத்திலும் சித்தர்கள் ஜீவ சமாதியிலிருந்துஅருள்கிறார்கள்.இதற்கு அருகில் திருபுவனம் இருக்கிறது. இங்கு விராலிமலைச் சித்தர்கள் ஜீவசமாதியுள்ளது.திருவிடைமருதூருக்கு அருகிலிருப்பது கோவிந்தபுரம். இங்கு ஸ்ரீ போதேந்திராள் ஜீவ சமாதியுள்ளது. ஆடுதுறை, குத்தாலம் கதிராமங்கலத்தில் வன துர்க்கை ஆலயமுள்ளது. இங்கு அகத்தியர் அருள்கிறார். மயிலாடுதுறையில்மயூரநாதர் ஆலயத்தில் காளங்கி நாதரும் மற்றும் பல சித்தர்களும் ஜீவ சமாதி ஆகியுள்ளார்கள்.திருக்கடையூரிலும் காளங்கிநாதர் அருள்கின்றார்.மாயவரம், சீர்காழி மார்க்கத்தில் வைத்தீஸ்வரன் கோவில் மருந்தீஸ்வரர், முத்துக்குமாரசுவாமி ஆலயம் இருக்கிறது. இங்கே தல விருட்சமாகிய வேப்ப மரத்தினடியில் தன்வந்தரியின் ஜீவ சமாதியும், ஆலயத்தினுள் வசிஷ்டரின் ஜீவ சமாதியும் அமைந்து அருள் ஒளி பாய்ச்சுகின்றது.சீர்காழி, சிதம்பரம் மார்க்கத்தில் கொள்ளிடத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் ஆச்சாள்புரம் உள்ளது. இங்கே சத்குரு ஸ்ரீகாகபுஜண்டர்அருள்கின்றார். திருஞானசம்பந்தர் ஜோதியில் கலந்த ஆலயம் இங்குள்ளது. வடலூரிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் மேட்டுக்குப்பம்உள்ளது. இங்கே அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் ஜோதியில் கலந்த சித்தி வளாகம் தவறாது கண்டுகளித்து அருள்பெற வேண்டிய இடம்.நெய்வேலிக்கு அருகில் விருத்தாசலம் இருக்கிறது. இங்கே பாம்பாட்டிச் சித்தர் ஜீவ சமாதி இருக்கிறது. திருவாரூர், நாகை சாலைக்கு அருகில் எட்டுக்குடி ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தல விருட்சத்தின் அருகில் வால்மீகி ஜீவசமாதியும், இதனருகில் சிக்கல் சிங்கார வேலன் சன்னதியில் ஸ்ரீ போகநாதரும், வசிஷ்டரும் மற்றும் பல சித்தர்களும் அருளாட்சி செய்கிறார்கள்.அகப்பேய் சித்தர் எட்டுக்குடி, தஞ்சைக்கு அருகில் திருவையாற்றில் அருள்புரிகின்றார். திருச்சியை அடுத்த கரூரில் கருவூரார் எனப்படும் கருவூர்த்தேவரும், திருச்சி திருவானைக்காவலில் ஸ்ரீகாகபுஜண்டரும், நாகப்பட்டினத்தில் நாகைநாதர் ஆலயத்தில் அழுகண்ணரும், காசிபரும், வரதரும் அருள்புரிகின்றனர்.நாகைக்கு அருகில் பொய்கை நல்லூரில் ஸ்ரீகோரக்க நாதரும், அருகில் புஜண்டவனத்தில் ஸ்ரீ காகபுஜண்டரும், நவநாதாக்களும் அருள்புரிகின்றனர். நாகப்பட்டினம் அருகில் நாகூர் மீரான் சாகிப், முகைதீன் ஆண்டவர் தர்க்கா இருக்கிறது.மதுரையில் ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தில் சுந்தரானந்தர்அகத்தியரும், அருகிலே அழகர்மலையில் பதஞ்சலியும், இராமதேவர், யாக்கோப்பு என்ற தேரையரும், பழமுதிர்ச்சோலையில் ஸ்ரீபோகநாதர், கமலமுனியும், மதுரைக்கு அருகில் திருப்பரங்குன்றத்தில் ஸ்ரீபோகநாதரும்,மலை உச்சியில் மச்சமுனியும், சிக்கந்தர் பாத்ஷா ஒலியுல்லாவும் அருள் புரிகின்றனர்.திருச்செந்தூரில் புண்ணாக்கீசர், காசிபர் ஆகியோர் திருவருள் புரிகின்றார்கள். இங்கே எம்பெருமான் சுப்ரமண்யர் சன்னதிக்கு அருகில் இடதுபுறத்தில் சிறிய கதவுண்டு. இதன் வழியே உள்ளே சென்றால் குகையினுள் பஞ்சலிங்க வடிவாக ஐந்து சித்தர்கள் இருப்பதையும், அக்குகைக்குள் சூரிய ஒளி உள்ளே புகுவதையும் கண்ணாரக் கண்டு அருள் பெறலாம்.திருச்செந்தூருக்கு அருகில் காயல்பட்டினம் உள்ளது. இங்கு பல சித்தர்களும் அருள் வழங்குகின்றனர்.கன்னியாகுமரிக்கு அருகில் சுசீந்திரத்தில்விஸ்வாமித்திரர், வசிஷ்டர், பிருகு முனிவர் ஆகியோரும் அருள் புரிகின்றனர். பழனியில் உள்ளது போல் இங்கு நவபாஷாணத்தால் உள்ள சிவலிங்கம் உள்ளது. சுசீந்திரத்திற்கு அருகில் மருந்து மலை உள்ளது. இங்கு காகபுஜண்டரும், நவநாதாக்களும் அருள்புரிகின்றனர்.நாகர்கோயிலுக்குஅருகில் 11 கி.மீ. தூரத்தில் திருவனந்தபுரம் செல்லும் சாலையில் தக்கலை உள்ளது. இங்கு கேட்டதை வழங்கும் இறைவள்ளல் பீர் அப்பா எனப்படும் பீர் முகமது தர்க்கா உள்ளது. இரவு – பகல் தங்கித் தொழுது கண்கூடாய் அருள் பெறலாம்.இராமேஸ்வரத்தில்பதஞ்சலி முனிவர் அருள்கிறார். இங்கிருந்து இராமநாதபுரம் செல்லும் சாலையில் 12 கி.மீ. தூரத்தில் கோசமங்கை உள்ளது. இங்குள்ள தலவிருட்சம் இலந்தைமரத்தடியில் காகபுஜண்டர் ஜீவ சமாதியும் மற்றும் திருக்கழுக்குன்ற ஆலயத்தில், உச்சியில் ஸ்ரீ கோரக்கரும், காஞ்சிபுரத்தில்கடுவெளிச்சித்தர், காளங்கிநாதர் மற்றும் பல சித்தர்களும் இருந்து ஞானச் செல்வத்தை வாரி வழங்குகின்றனர்.திருவாரூரில் கமலமுனி, சுந்தரானந்தர், இடைக்காடரும், திருவண்ணாமலையில் தேரையர், இடைக்காடர், கௌத மகரிஷி, நந்தீஸ்வரர், சுப்ரமணியர், அகப்பேய்ச்சித்தர் மச்சமுனி, குகை நமச்சிவாயர் மற்றும் எண்ணிடலங்கா சித்தர்களும் ஜீவ சமாதியில் இருந்து அருள்புரின்றனர்.திருவண்ணாமலைக் கார்த்திகை மாதப் பௌர்ணமியன்று உள்ளன்போடு சென்றால், மானிட வடிவில் வந்து இன்றும் சித்தர்கள் காட்சி கொடுத்துக் காத்து இரட்சிக்கின்றனர்.சத்குருநாதர் ஸ்ரீ காகபுஜண்டரின் ஜீவ சமாதிகள் பல்வேறு இடங்களில் இருக்கின்றன.சேலம், நாமக்கல் (வழி சேந்தமங்கலம்) சாலைக்கு அருகில் கொல்லிமலை என்னும் சதுரகிரி அமைந்துள்ளது. தென்காசிக்கு அருகில் திருக்குற்றாலமலை அமைந்துள்ளது. பாபநாசத்திற்கு அருகில் பொதிகைமலை அமைந்துள்ளது. மதுரை ஸ்ரீவில்லிபுத்தூர் சாலைக்கு அருகில் (தானிப்பாறை வழி) சுந்தரமகாலிங்கம் என்னும் சதுரகிரி அமைந்துள்ளது. பக்தியோடு, உள்ளுணர்வோடு இம்மலைகளுக்குச்சென்று தங்கி வந்தால் சித்தர்களின் அருளையும், சிவனருளையும் முழுமையாகப் பெறலாம்.கொல்லிமலையில் ஸ்ரீ அறைப்பள்ளீஸ்வரர் ஆலயம் (குகையில் குடிகொண்ட ஈசன்), பெரியண்ணசாமி ஆலயம், சோரமடையான் ஆலயம், எட்டுக்கை அம்மன் ஆலயம் முதலிய ஆலயங்களும், காகபுஜண்டர் குகை, அகத்தியர் குகை, பாம்பாட்டிச் சித்தர், புலிப்பாணி குகை, காளங்கிநாதர் குகை, கன்னிமார் குகை, கோரக்கர் குன்றம் முதலிய இடங்கள் சித்தர்கள் வழி செல்லும். நாமும் தரிசித்து தங்கியிருந்து அருள்பெற வேண்டிய இடங்களாகும்.குற்றாலமலையில் அருள்மிகு செண்பகாதேவி ஆலயமும், வாலைக்குகை என்று வழங்கும் தெட்சிணாமூர்த்தி குகை, (பொதிகையில்) அகத்தியர் குகை, ஔவையார் குகை, கோரக்கர் குகை, புஜண்டர் குகை (தேனருவியில் உட்புறத்தில் உள்ளது), பரதேசிப்பாறை முதலியவை தரிசித்துத் தங்கி அருள்பெற வேண்டிய இடங்களாகும்.

Tuesday 4 May 2021

அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்

 அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில் 



மூலவர் : ஆகாசபுரீஸ்வரர் அம்மன் / தாயார் - மங்களாம்பிகை 

ஊர் - கடுவெளி மாவட்டம் - தஞ்சாவூர் 


திருவிழா : ஐப்பசியில் அன்னாபிஷேகம் , தைப்பூசம் , சிவராத்திரி , நவராத்திரி , பங்குனி உத்திரம்


தல சிறப்பு : பொதுவாக கோபுரத்திற்குள் அமர்ந்திருக்கும் நந்தி , இத்தலத்தில் கோபுரத்திற்கு வெளியே உள்ளது சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது . 


திறக்கும் நேரம் :

காலை 9 மணி முதல் 10 மணி வரை , மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும் . பூராடம் நாட்களில் காலை 8-1 மணி வரை திறந்திருக்கும் . 


முகவரி : அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில் , கடுவெளி , திருவையாறு தாலுக்கா , தஞ்சாவூர் மாவட்டம் . போன் :  +91 9626765472 , 94434 47826 


பிரார்த்தனை : பூராடம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர் . திருமணத்தடை உள்ளவர்கள் தங்கள் நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுகின்றனர் .


நேர்த்திக்கடன் : இத்தல சிவனுக்கு புனுகு , ஜவ்வாது சாத்தி , கேசரி நைவேத்யம் செய்து வணங்கி வரலாம் .


தலபெருமை : 


பூராடம் நட்சத்திர தலம் : சுவாமி ஆகாசபுரீஸ்வரர் பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகிறார் . மங்களகரமான

வாழ்க்கை தருபவள் என்பதால் , அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர் . ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும் , வாஸ்து பகவானும் , பூராட நட்சத்திர நாளில் ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம் . எனவே , இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , தங்களது நட்சத்திர நாளில் இத்தல சிவனுக்கு புனுகு , ஜவ்வாது சாத்தி , கேசரி நைவேத்யம் செய்து வணங்கி வரலாம் . திருமணத்தடை உள்ளவர்கள் , தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுகின்றனர் . 


சித்தர் வழிபாடு : முதலில் இக்கோயிலில் கடுவெளிச்சித்தரின் சிலை வடிவம் இல்லை . சில ஆண்டுகளுக்கு முன் , இக்கோயிலைத் திருப்பணி செய்தபோது , சித்தரின் சிலை கிடைக்கப்பெற்றது . இவர் கோயில் முன் மண்டபத்தில் இருக்கிறார் . சித்தருக்கு சிவன் காட்சி தந்தபோது , அவருக்காக நந்திதேவர் வெளியே நின்று கொண்டார் . இதனடிப்படையில் நந்தி , கோபுரத்திற்கு வெளியே உள்ளது . சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு உள்ளோர் வழிபட வேண்டிய தலம் இது . 


தல வரலாறு : கடுவெளிச்சித்தரின் அவதாரத்தலம் இது . கடுவெளி என்றால் பரந்தவெளி , இந்த சித்தர் , தான் கண்டுணர்ந்த ஞானத்தை மக்களுக்கு உபதேசித்தார் . இவர் சிவதரிசனம் வேண்டி தவமிருந்தார் . அவருக்காக , இத்தலத்தில் எழுந்தருளிய சிவன் , சித்துக்களில் வல்லமை பெறும்படி அருள் செய்தார் . பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சோழமன்னன் ஒருவன் , சித்தருக்கு அருளிய சிவனுக்கு கோயில் எழுப்பினான் . இவர் பஞ்சபூதங்களில் ஆகாயத்திற்கு அதிபதியாக திகழ்வதால் ஆகாசபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார் . இந்த தலத்துக்கு சித்தரின் பெயரையே வைத்தான் . 


சிறப்பம்சம் : பொதுவாக கோபுரத்திற்குள் அமர்ந்திருக்கும் நந்தி , இத்தலத்தில் கோபுரத்திற்கு வெளியே உள்ளது சிறப்பு .