Tuesday 30 March 2021

ரோசாரியோ அய்யாவின் பதிவு, நமது பீடத்தை பற்றி.

 ரோசாரியோ அய்யாவின் பதிவு, நமது பீடத்தை பற்றி.


குறிப்பு, அய்யா ஒரு வாழும் யோகி 🙏🙏


குருவே துணை

🙏🙏🙏🙏🙏🙏


ௐௐௐௐௐௐௐௐௐௐௐ


பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி வாசிப்பு பீடம் ஒரு அற்புதமான ஷேத்திரம். மெயின் வாசல் மேற்கு நோக்கி அமர, உள் சென்று, வலது பக்கம் இருக்கும் தெற்கு வாசல் குடிலில் கிழக்கு நோக்கியவாறு அமர்ந்து இருக்கும் அகத்தியர் ஜீவ நாடி சக்தியை தரிசனம் செய்யலாம். அபூர்வமான விஷயம். அபூர்வமான, தொன்மையானதொரு சக்தி. அகத்தியரை அங்கு பிரசன்னத்திற்கு கொண்டு வருவது அந்த சக்தியே. அதன் மனம் பல யுகங்கள் பக்குவபட்ட ஒரு திராட்சை ரசத்தின் தன்மை கொண்டது. மெய் மறக்க வைக்கும் தெகட்டா சுவை. ஞானம் தரும் அமைதியை, நிர் சலனத்தை அங்கு நிறைவாக உணரலாம். அதுவே இடது பக்கம் திரும்பி, இடது பக்கம் இருக்கும் குடிலுக்கு சென்றால் ஏதோ நீர் நிலைக்கு மேல் ஒரு திடலில் அமர்ந்து இருக்கும் உணர்வு. எப்போதும் ஒரு குளிர்ச்சி. இதில் நேராக சூரியனின் கதிர் ஒளி காலை நமது முகத்தினை வருடுகின்றது. எமது ஆன்மாவிற்கு மிகவும் பிடித்தமான ஒரு அமைப்பு. குளிர்ந்த இடத்தில் சூரியன் நம்மை தட்டி எழுப்புவது. அங்கும் சில தெய்வங்கள். சில போக்கும் வரத்துமாக. அந்த குடிலின் இடது பக்கம் வெளி புறம், வடக்கு நோக்கி, எல்லை சாமியாக ஒரு பரம யோகி, யோகத்தில் வீட்டு இருக்கின்றார். கருப்புராயர் என்று அழைக்கின்றனர். அவர், அவர் தம் குருவிற்கு நந்தி என்பது தெளிவு. அவரின் குரு அவர் மூலம் அவர் வாழும் காலங்களில் பல அற்புதங்கள் செய்து அவரை நல்ல நிலையில் இருத்தி இருக்கின்றார். பல ஆண்டுகளுக்கு பின், இப்பொழுது அவர் தன்னை அவ்வப்போது அங்கு வரும் பக்தர்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றார். ஆசி வழங்குகின்றார். வாக்கு உரைக்கின்றார். இந்த இரு குடிலின் முன் வாசலுக்கு நேர் எதிராக ஒரு வன்னி மரம். அம்மரத்தின் மூலத்தில், மூல வித்தாக சித்தர் ஒருவர் அடக்கம். குப்பை சித்தர் என்று அழைக்கின்றனர். நாக பூஷனங்கள், பிள்ளையார், கொண்டு அவரை வழிபடுகின்றனர். அங்கிருந்து மெயின் ரோடு திரும்பும் இடத்தில் பின்னாக்கீசர் மரப்பொந்தில் தவம் செய்த இடம் ஒன்று வடக்கு நோக்கி அமைந்து இருக்கின்றது. அதன் அருகே புதிதாய் நிறுவப்படும் கோவில் கட்டுமானப்பணியில்… இவை யெல்லாம் அருகே… காலாற நடந்து செல்லும் தூரத்தில்… அதுவே கால் வலிக்க நடந்து சென்றால் பஞ்ச பாண்டவர் அமர்ந்த ஒரு வழிபாட்டு தளம். ஒரு குமரன் கோவில் என இடமே தெய்வ கடாசம் நிறைந்த பூமியாக காட்சி அளிக்கின்றது. அன்று பிண்ணாக்கீசர் காலம் தொட்டு பல சித்தர்கள், யோகிகள், இங்கு விஜயம் செய்து யோகம் ஞான பயின்று இருக்கின்றனர் என்பது திண்ணம். அபூர்வமான் ஒரு அமைப்பு. அற்புதமான ஒரு ஷேத்திரம். நேரம் கிடைத்தால், இல்லை அவ்வழி சென்றால், போய் செத்த நேரம் அதன் இனிமையை அனுபவித்து விட்டு வாருங்கள். அன்னூரில் இருந்து பத்து நிமிடம் பேரூந்தில். அங்கிருந்து பீடத்திற்கு 40/- share ஆட்டோவில். நாடி வாசிப்புக்கு மட்டும் தான் செல்ல வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை.

முற்றும். குருவே துணை.


ௐௐௐௐௐௐௐௐௐௐௐ






ஒரு நண்பரின் இன்றைய அனுபவ பதிவு. 30.03.2021

 ஒரு நண்பரின் இன்றைய அனுபவ பதிவு. 30.03.2021




Monday 29 March 2021

அனுபவ பதிவு: 27.03.2021ராயர் - கருப்பராயர் - வெள்ளை கருப்பர் ஆட்டம் , அதுவே ஒரு தேரோட்டம் -

அந்த காலத்துல எல்லாம் சாமி கிட்ட நேர்ல பேசி பேசி தான் சாமி கும்பிடறாங்க . ஆனா இப்போ அப்பிடி இல்ல . சாமி யாரு கிட்டயும் பேசறது இல்ல . அந்த காலத்துல நல்லா யோகம் செஞ்சு , நல்ல உடல் வலிமையோட , நல்ல பழக்க வழக்கங்களோட இருக்கறவங்க கடவுளை தன்னோட உடல்ல எழுப்பறதுக்கு தகுதி உண்டாக்கிட்டு கடவுள் முன்னால போய் நின்னாலே அவர் உடல்ல கடவுள் அருளாக இறங்கி மக்களோட பேசி என்ன , ஏது ன்னு விவரங்கள் எல்லாம் சொல்லி , மக்களோட கொறைய தீத்து வெக்கற வழி முறை சொல்வாங்க . இந்த காலத்துல சில இறந்த ஆத்மாக்கள் , சாமி ஆடி உடல்ல இறங்கி , எனக்கு அத கொண்டா , எனக்கு இதை கொண்டா , அப்போ தான் நான் போவேன் ன்னு சொல்லி திரியராங்க , கடவுளோட பேசற பழக்க வழக்கம் எல்லாம் காணாம போச்சு . ஆனா இன்னமும் சில பேர் உண்மையா தனது தேகத்தை கடுவினுள் கிட்ட கொடுத்துட்டு , அவங்கள தன மூலமா மக்கள்\கிட்ட பேச விட்டு , எல்லாருக்கும் நல்லது செய்யணும் னு நெனைக்கறாங்க . நம்ம ஒடம்பு நல்ல விஷயத்துக்காக பயன் படட்டுமே . எங்கேயோ போறோம் , கண்டதை திங்கறோம் , கண்டபடி பேசறோம் , கண்டதை குடிக்கறோம் , மாலா ஜலம் கழிக்கறோம் . அந்த மல ஜலம் கூட சரியா போக முடியாம கஷ்ட படர அளவுக்கு நம்ம ஒடம்ப உலக சுகம் அப்பிடீங்கற பேருல கஷ்டப்படுத்தறோம் . எல்லா சுகங்களையும் அனுபவிக்க கூடிய பணம் வெச்சிருக்கறவன் , உப்பு காரம் , மசாலா எல்லாம் கம்மியா போட்டு , சக்கரை கம்மியா போட்டு , காலையிலே எழுந்து ஓடி உடல் உழைப்பு செஞ்சு வாழறான் . ஆனா நாமளோ இருக்கறது கொஞ்சூண்டு , அதையும் எப்படியாவது சுகம் அனுபவிக்கலாம் னு கார் , நகை உடை, தின்பண்டம் அப்பிடீன்னு ஒடம்புக்கு சேராத விஷயங்களை புகுத்தரோம் , விஷயம் தெரிஞ்சவன் , பணம் உள்ளவன் அமைதியா இருக்கான் . ஒன்னும் இல்லாதவன் தான் ஆடறான். இப்பிடி இருக்கற வாழ்க்கையிலே , நம்ம தேகத்துனால ஆண்டவன் மற்றவர்களுக்கு ஏதாவது பிரயோஜனம் செய்ய முடியுமான அது போதும் ன்னு ஒரு சில பேரு தான் இருக்கறாங்க . அவங்க தேகத்தை ஆண்டவன் ஆள்பவன் அவனே தேர்ந்து எடுத்துக்கறான். ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு வழிமுறை . ஜீவ நாடி , அருள் வாக்கு , ஜீவனை வெளியே இருத்தி சொல்லும் அருள் வாக்கு ன்னு பல வகைகள் . எல்லாமே மக்களோட நண்மைக்காக . இப்போ இருக்கற கோவில்கள்ல கடவுளை உள்ள கொண்டு வந்து அவரை பேச வைக்க ஆளு இல்ல . நாம போய் கடவுள்கிட்ட பேசிட்டு வருவோம் , அவர் கேட்டு நமக்கு நல்லது செய்வார் னு ஒரு நம்பிக்கை . ஆனா , பழங்கால முறைப்படி மனிதர்கள் , சிறப்பு வாய்ந்தவர்கள் . அவர்கள் கடவுளை தன்  உள்ளே எழுப்பி பேச வைக்கறவங்க . இன்னைக்கும் அந்த முறைப்படி அம்பாள் வாக்கு , சாய் பாபா வாக்கு , அகத்தியர் வாக்கு , போன்றவை தன உடம்புல அந்த அந்த கடவுளை ஏத்தி , அவங்கள பேச வைக்கற ஆளுங்க இன்னைக்கும் இருக்காங்க . அவங்க எல்லாம் சுத்தமானவங்க , மனசுல அழுக்கு இல்லாதவங்க , நல்ல யோக நிலையிலே இருப்பவங்க . அதே போல இந்த காலத்திலேயும் , மகாபாரத புகழ் தர்மராஜா யுதிஷ்டிரர் கூட இதே போல ஒருவரை தேர்ந்தெடுத்து மக்களோட குறைகளை ஒரு ராஜா போல கேட்டு , அதுக்கு பரிகாரம் ஆசீர்வாதம் கூறி நடத்தி கொடுக்கறாரு . தர்ம வழியிலே நடத்துறாரு . அதே போல கருப்புராயர் சாமிய நாம தொட்டோம் . பல வருஷமா தியானத்துல ஆழ்ந்து போன யோகி ஒருத்தர் , கருப்புராயராக மாறி நித்திய வாழ்வு வாழ்ந்து கொண்டு , ஊர் உலகத்தை காப்பாத்தி இருக்கற சர்வ வல்லமையை கொண்டவர் , சிவ மைந்தர் , வெள்ளை கருப்பு ரூபத்தில் நமது பீடத்தில் எல்லை ஒட்டியே பல வருடமா  எழுந்தருளி இருக்கறார் . அவரு கண்ணு முழிச்சு பாக்கும் போது , பல நாள் நிஷ்ட்டையில் சுமார் 50-60 வருடத்துக்கு மேல ஆயிருச்சு , கோவிலையும் காணோம் , பக்தர்களையும் காணோம் . எல்லாரும் எங்கடா போனீங்க , னு பாக்குறாரு . பக்கத்துலேயே அகத்தியர் , சரி முனி , உமக்கு சின்னதா ஒரு 'கூரை போட்டு சீரமைக்க சொல்றேன் ன்னு சொல்லி என் கிட்ட சொல்லி . நான் உங்க கிட்ட சொல்லி . நான் சொன்னது உங்களுக்கெல்லாம் என்ன புரிஞ்சிதோ , எனக்கே ஒண்ணுமே புரியல , அதுக்குள்ள 10-20 பேரு சேந்து பணம் போட்டு ஒரே நாள்ல பண உதவி செஞ்சு , அருமையா மேடை போட்டு , படிக்கட்டு வெச்சு , கூரை போட்டு பூஜை போட்டு எல்லாமே நடந்தது . அப்போ நைட்டு 11 மணிக்கு பூஜை செய்யும் போது , கருப்பன் நடராஜ் ஒடம்புல இறங்கி வந்து ஆட்டம் காட்ட நெனைச்சாரு . அப்போ  ஒடனே அவரை மலை ஏத்தி அனுப்பிட்டோம் . பாவம் சின்ன பய்யன் , 5 நிமிஷம் கருப்பு வந்ததுக்கே , கீழே விழுந்து மேல விழுந்து , அடிபட்டு , உடம்பெல்லாம் மண் ஆகி . பயந்து போய் , கண்ணெல்லாம் குத்திட்டு போயீ ஒரு வழி ஆயிட்டான் . ஆனா , அவன் வந்து கும்பிடும் போது நேத்து கருப்பு வந்தாரு , இந்த தடவை கூட சில அனுபவம் வாய்ந்த யோகி ஒருத்தர் இருந்தாரு . கறுப்பர் வந்து ஒடம்ப நாலு புறமும் வளச்சு மூச்சை முழுவதும் அடக்கி பல வகையான சுவாச நிலைகளை மிகப்பெரிய யோகி போல செஞ்சு காட்டுனாரு . செஞ்சுட்டு , தனக்கு சந்தனம் வேனும்னு கேட்டாரு , அப்பரும் பால் கேட்டாரு , அப்பறம் எழுமிச்சை கனி கேட்டாரு , அப்பறம் சுருட்டு கேட்டாரு . அப்பறம் அங்கே இருந்தவங்க கிட்ட , ஒரு சில ஆசீர்வாதம் கொடுத்தாரு . என்னை கூப்பிட்டு , நீ என் கோவிலுக்கு நாலா செஞ்சு இருக்கே , ரொம்ப நல்லது , இன்னும் நெறைய நெறைய செய்யு ன்னு உத்தரவு போட்டாரு . இது தான் நடந்தது . அன்னைக்கு நான் தான் அவருக்கு பூஜை செய்ய சொல்லி சந்தனாதி தைல காப்பு , பன்னீர் அபிஷேகம் , தண்ணீர் அபிஷேகம் பண்ணி மலர் மாலை போட்டு கும்பிட நடராஜனை கூப்பிட்டு செய்ய சொன்னேன் . அது பத்தல , அவருக்கு சந்தன காப்பு , பால் , எழுமிச்சை மாலை , சுருட்டு ஆகியவை தான் வேணும் னு கேட்டு வாங்கிக்கிட்டாரு . அந்த பய்யன் ஒடம்புல இறங்கி அவரு சுருட்டு குடிச்ச விதமும் , அவரு பைரவரை போல பல்ல காட்டிய விதமும் . ஒடம்ப குதிரை போல வளச்சு குதிரை சவாரி செஞ்சதும் , ஒரு சொம்பு பால ஒரே மடக்குல குடிச்சதும் , ஒரு சிரிச்சதும் , உறுமுனதும் , பேசுனதும் , ஏறியதும் எறங்கியதும் எல்லாமே பாக்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது . பல வருஷம் கழிச்சு வெளிப்பட்ட ஒரு மிகப்பெரிய யோகி அன்று 27.03.2021. நாம அவருக்கு மேல் கூரை ஏற்படுத்தும் போது , இவ்வளவு சக்தி வாய்ந்தவரா இருப்பார் ன்னு குருஜி சொன்னாரு . அன்னிக்கு தான் நேர்ல பாக்க வாய்ப்பு கெடச்சுது . என்னோட அனுபவத்தை உங்களோட பகிர்ந்துக்கிட்டேன் . இனிமே அவருக்கு புடிச்ச அந்த பொருள்களை கொண்டு பூஜை செய்வதை வழக்கமாக வெச்சுக்க போறேன் . என்னோட சேந்து எல்லாரும் நம்ம கருப்பரையும் கும்பிட்டுக்கோங்க . கருப்பராயருக்கு அரோகரா  !!!!!!!

 

 

28.03.2021, பௌர்ணமி குரு பூஜை அனுபவங்கள் , உணர்வுகள்

நேற்று 28.03.2021,  நடந்த பௌர்ணமி குரு பூஜையில் , நமது குருஜியுடன் சேர்த்து மற்றொரு யோகி ஒருவரும் பங்கு பெற்றனர் . பொதுவாக , அகத்தியர் ஒவ்வொரு முறையும் வந்திருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து , யாகத்தில் எழுந்தருளி , விக்ரகத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார் . இது அனைவருக்கும் தெரிந்தாலும் , அனைவரும் அதனை உணர்வதில்லை , ஆர்வம் காட்டுவதில்லை . நேற்று நமது குருஜி மற்றும் நமது பீடத்துக்கு வருகை புரிந்த யோகி அவர்களும் யோகா நிலையில் அங்கே அமர்ந்து பூஜைகள் செய்து , சில சூட்சும காட்சிகளை கண்டு நமக்கு உரைத்தனர் . அவர்கள் உரைத்ததாவது , பல சித்தர்கள் அங்கே ஒளி ரூபத்தில் எழுந்தருளி அங்கும் இங்கும்  காட்சிகளையும் , ஹோம குண்டத்தில் அவர்கள் பெயரை சொல்லி அழைக்கும் போது , அந்த ஒளி நகர்ந்து , ஹோம அக்கினியில் சென்று சேர்ந்து நிற்கும் தன்மையும் கண் கூடாக சூக்கும காட்சிகளாக கண்டோம் என்று எடுத்து உரைத்தனர் . நேற்று கோரக்கர் எனது அருகில் வந்து என்னை சுற்றி வந்து ஆசீர்வதித்ததை நமது குருஜி கண்டுள்ளார் . ஆனால் நமது கண்களுக்கு அந்த காட்சிகள் தெரியாமல் , நான் அவரை வணங்காமல் இருந்தது ஏன் என்று கேட்டார் . நாமும் அது போல சில யோக பயிற்சிகளை செய்து வந்தால் இது போன்ற காட்சிகளை காணலாம் . காட்சிகளை காணா விட்டால் என்ன , சித்தர்கள் சூட்சுமமாகி எழுந்தருளி அனைவரையும் ஆசீர்வதிக்கும் நிகழ்வானது எப்போதும் நடந்து கொண்டு இருக்கிறது . மனிதர்களுக்கு தன அது புரிவதில்லை , ஏதோ யாகம் செய்தோம் , ஏதோ அபிடேகம் செய்தோம் என்று புற  செயல்கள் தாம் அவை என்று சாதாரணமாக எண்ணுகிறார்கள் . சித்தர்கள் தரிசனம் அவ்வளவு எளிதல்ல .  ஏறி கடந்து யாத்திரை செய்து , அவர்கள் நள்ளிரவில் நடமாடும் போது விழியுடன் இருந்து சில காட்சிகளை காண முற்படுவார்கள் . ஆனால் நமது பீடத்தில் அவை ஒருவருக்கு எளிமையாக கிடைக்கிறது . அதாவது , காடு மலை ஏறி திரிய வேண்டியதில்லை . அவர்களே நம் பீடம் இருக்கும் இடத்தில எழுந்து அருள்கிறார்கள். பொதிகை மலை சதுரகிரி மலை போன்ற இடங்களுக்கு சென்று தான் பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை . அங்கேயே சென்றாலும் சித்தர்கள் அருளாசி செல்லும் அனைவருக்கும் கிடைக்கும் என்று உறுதி கிடையாது . இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தை தேடி ஓடி வெள்ளயங்கிரி போன்ற மலைகளெல்லாம் ஏறி இறங்கி , ப்ரயத்தனப்படுபவர்கள் , எளிமையாக சித்தர் அருள் பெரும் வழிமுறை நமது பீடத்தில் மட்டுமே உள்ளது . ஏன்
என்றால் , இங்கே அகத்தியர் ஜீவ அருள் நாடியில் எழுந்தருளி உள்ளார் .நான் கூட ஏற்கனவே 2 மாதம் முன்பு ஒரு வீடியோ எடுத்த பொது , பல ஒளி பிழம்புகள் நகர்வதையும் படம் பிடித்து போட்டேன் . பின்னர் சிறிது நேரத்தில் , அவர்கள் சென்ற பிறகு அவை தெரியவில்லை . அது ஒரு வெளிப்புற சான்று . நேற்று மேலும் ஒரு நல்ல சான்றாக வெளியூரில் இருந்து புதிதாக வந்த யோகி அவர்கள் , காட்சிகளை  ஞானக்கண் கொண்டு கண்டு நமக்கு தெரிவித்தது மிக்க மகிழ்வை கொடுத்தது . அதனால் தான் இங்கு நடக்கும் பவுர்ணமி பூஜைகள் கலந்து கொள்வது என்பது எவ்வளவு முக்கியம் என்று எல்லோருக்கும் தெரியப்படுத்தவே இந்த பதிவு . எத்தனையோ முறை , அகத்தியர் என்னிடம் , என்னை ஆலயத்தில் அழைக்கிறார்கள் , நாள் செல்கிறேன் , பிறகு அருள் உரைக்கிறேன் என்று சொல்லி செல்வது உண்டு. அதுவெல்லாம் இது போன்ற வழிபாடுகள் தான் . எனது இல்லத்திலும் அகத்தியரை எழுந்தருள செய்து விக்கிரகம் வைத்து வழிபாடு செய்து எனது அகத்திய பக்தியை நிறைவு செய்து கொள்கிறேன் . அதற்க்கு தான் அகத்தியர் படம் வைக்க சொல்வது . அகத்தியர் நாமம் ஜெபிக்க சொல்வது , எல்லாமே அவர்களை எழுந்தருள செய்து ஆசி வாங்குவதற்காக தான் . நமக்கு எங்கே அதற்கெல்லாம் நேரம் இருக்கிறது . நாம் கோவில் கோவிலாக அவர்களை தேடி ஓடுகிறோம் , எதற்க்காக ஓட வேண்டும் . உள்ளே அவர்களை பார்க்கும் முறை தெரிந்து நம் குருஜியிடம் கற்று கொள்ளலாம் . மேலும் அகத்தியரிடம் ஜீவா அருள் நாடியில் வாக்கு வாங்கி அவரை உள்ளே எழுந்தருளுமாறு வேண்டலாம் . எப்போதும் அவரின் ஞாபகமாக இருப்பதற்காக தான் பாக்கெட்டில் வைக்கும்
படம் , காலை மாலை அவரது விக்கிரக வழிபாடு . நாம ஜெபம் போன்றவை தொடர்ந்து செய்து கொண்டே வர வேண்டும் என்று உரைக்கப்படுகிறது . அகத்தியர் யாரையும் விக்ரக வழிபாடு , படம் போன்றவை வைத்து செய்யுங்கள் என்று சொல்வதில்லை . அவர் , நாம ஜெபம் ஒன்றே போதும் என்று தான் கூறுகிறார் . நாம், நமது பக்திக்கு ஏற்றார் போல வழிபாடுகளை அமைத்து கொள்ளலாம் . அவரை வழிபடுவதால் எனக்கு என்ன லாபம் , எனக்கு என்ன கிடைக்கும் என்று வியாபார புத்தியுடன் வழிபாடு செய்வது ஆகாது . எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும் . எது ஒன்று கிடைத்தால் . எல்லாமே நமது வசம் ஆகுமோ , அந்த ஒன்று கிடைத்தால் போதும் . அதை விடுத்து , எனக்கு அது வேண்டும் எனக்கு இது வேண்டும் என்று கேட்பது முட்டாள்தனம் . நாம் அவரது அருளை மட்டுமே கேட்டால் , அவரே  நமக்கு எது நல்லது எது  கெட்டது , எது உகந்தது என்பதையெல்லாம் அறுந்து எதை எப்போது எப்படி கொடுக்க வேண்டுமோ, அதை அப்போது. அப்படி கொடுப்பார் . உன் அவசரத்துக்கு எல்லாம் எல்லாம் நடந்து விடாது . தொடர்ந்து பௌர்ணமி யாகங்களை வர வேண்டும் ஐயனை தொழ வேண்டும் , கடமைகள் செய்ய வேண்டும் . அவரும் மனம் மகிழ்ந்து நமக்கு வேண்டியதை அருளுவார் . வாருங்கள் . வந்து அருள் பெறுங்கள் , ஐயனை கண்டு நல்ல அருளை பெறுங்கள் . என் மனதில் பட்டதை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.


 










Friday 26 March 2021

ஆலய பணிகள் 27 மார்ச் 2021

 ஆலய பணிகள்


1.  ஷெட் அமைப்பது நிறைவு


2. நுழைவு வாயில் கேட் ஆரடர் செய்யப்பட்டு கொண்டு இருக்கிறத


3. மின் கம்பங்கள் நட்டு மின் இணைப்பு கொடுக்கும் பணி 12 நாட்களில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


4. சிமெண்ட் மூட்டை இன்னமும் வாங்கவில்லை வேலை ஆரம்பிக்கும் போது வாங்கப்படும் 


4. எஸ்டிமேட் - -  கட்டிட காண்ட்ராக்டர் அவர்களிடம் இன்னமும் எவ்வளவு கல் மணல் சிமெண்ட் ஆகியவை தேவைப்படும் என்று ஒரு எஸ்டிமேட் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது ஆலயப் பணியில் இப்போது நமது கரங்களில் ரூபாய் 2 லட்சத்து 6 ஆயிரம் உள்ளது இதில் ஆள் கூலிக்கு ஒரு பகுதியும் சிமெண்ட் மணல் வாங்குவதற்கும் செலவு செய்ய வேண்டும் எனவே எஸ்டிமேட் கணக்கு என்ன என்பதை தெரிந்து கொண்டு மேற்கொண்டு திட்டமிடுதல் நடைபெறும்


5. மின்சார இணைப்புக்காக காத்து இருக்கிறோம் மின்சார இணைப்பு வந்தால் தான் மோட்டார் போட்டு தண்ணீர் எடுக்க முடியும் தண்ணீர் எடுத்தால் தான் கட்டிடம் கட்டுவதற்கு எளிதாக இருக்கும் மேலும் காம்பவுண்டு சுவர் கட்டிய பிறகு சின்டெக்ஸ் டேங்க் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது வெறுமனே வைத்தாள் இரவில் யாராவது சின்டெக்ஸ் தங்கை தூக்கி சென்று விட்டால் கூட தெரியாது எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக முதலில் சுற்றுப்புற சுவர் அமைக்கப்பட்டு பின்னர் சின்டெக்ஸ் டேங்க் உள்ளே வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது மேலும் மேலும் கீழ்நிலையில் ஒரு 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தொட்டி ஒன்று நிலத்திற்கு அடியில் அமைக்க வேண்டும் தண்ணீர் எப்போதும் அதில் இறப்பில் வைத்து மோட்டார் மூலம் மற்றொரு மேல்நிலை சின்டெக்ஸ் தொட்டியில் நிரப்பி அதில் இருந்து உபயோகப்படுத்தும் வகையில் செய்யப்பட வேண்டும் மேலும் வாஸ்து முறைகளை அயன் ஜீவநாடியில் என்ன உரைத்துள்ளார் என்று குருஜி யுடன் கேட்டு உங்களுக்கு தெரிவிக்கிறேன்

நண்பர்களே நமது பீடத்திலிருந்து வந்துள்ள ஒரு முக்கிய அறிவிப்பு

 ஓம் அகத்தீசாய நம

 குருவே துணை குருவே போற்றி 


நண்பர்களே நமது பீடத்திலிருந்து வந்துள்ள ஒரு முக்கிய அறிவிப்பு


 நாளை ஞாயிற்றுக்கிழமை பங்குனி மாதம் பௌர்ணமி திதி அன்று நடைபெற இருக்கும் குருபூஜை விழாவிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் 


நாளை வழக்கம்போல சிறப்பு அபிஷேகம் சிறப்பு யாகம் சிறப்பு அலங்காரம் அன்னதானம் ஆகியவை நமது குரு பகவான் அகத்திய மாமுனிவர் மிகுந்த உரிய மரியாதைகளுடன் நிகழ்த்தப்படும் 


இதில் நாளை விழாவில் ஒரு சிறப்பு உள்ளது


 நமது பீடத்தில் சென்ற மாதம் காராம் பசு அதனை தானமாக கொடுத்திருந்தோம் . அந்த காராம் பசு சாணத்தை சேகரித்து வைத்து அதை பஸ்மம் செய்து அதில் நமது குருநாதர் உரைத்துள்ள விசேஷ மந்திரங்களை உருவேற்றி உபயோகிப்பவர்களுக்கு அனைத்து காரியங்களும் சித்தி பெரும் வகையில் மிக சிறந்த பிரசாதமாக உருவாக்கப்பட்டுள்ளது.


 நாளை பவுர்ணமி மிகவும் நல்ல ஒரு நாள் குருபூஜை சிறப்பாக செய்து அன்று நேரில் வருபவர்களுக்கு அந்த சக்திவாய்ந்த திருநீற்றை பிரசாதமாக வழங்க குருநாதரின் உத்தரவு கிடைத்துள்ளது 


இந்த அறிய பிரசாதத்தை அனைவரும் வந்து பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்


 குருநாதரை பணிந்து என்றும் இறைபணியில்


-  சந்தானம்.

ஓம் அகத்தீசாய நம

Wednesday 17 March 2021

இதுகமெல்லாம் எந்த சயின்சு ம் விளக்கம் கொடுக்க முடியாது

 பேசும் தெய்வம்


அம்மாவும்  பிள்ளையும்  -  

சக்தி விகடனில் பல வருஷங்களுக்கு முன்பு ஒரு  விஷயம் படித்தது ஞாபகம் வருகிறது. திருவானைக் காவல்  அகிலாண்டேஸ்வரி ஆலய அர்ச்சகர்  சொன்னதாக ஒரு சம்பவம் அது.  அரை நூற்றாண்டுக்கு முன்  மகா பெரியவா திருச்சி அருகே ஒரு கிராமத்தில்  முகாம் இட்டிருந்த சமயம்.  ஒருநாள்  வழக்கம்போல  சந்திரமௌளீஸ்வரர்  பூஜை செய்து கொண்டிருந்தார். திடீரென்று மடத்து  மானேஜரை பெயர் சொல்லி கூப்பிட்டார்.

''இன்னும் சித்தே  நேரத்தில் இங்கே  அம்பாள் அகிலாண்டேஸ்வரி கோவில்  அர்ச்சகர்கள்   சில பேர்  வருவா.  அவாளுக்கு  போஜனம் ஏற்பாடு பண்ணி வை.  மத்தியானம் ரெண்டு மணி போல  என்கிட்டே அவர்களை அழைச்சிண்டு வா''.

சிறிது நேரம் மௌனம்.  அருகே இருந்த  ஒரு  அணுக்க தொண்டனை கூப்பிட்டார்.  

''ஸ்தபதிகளில்  ஒருத்தரை  உடனே  போய்ப்பார் .  ரெண்டடி உசரத்திலே  ஒரு  விநாயகர்  சிலை பண்ணிண்டு எடுத்துண்டு வரச்சொல்லு.மத்தியானம் அர்ச்சகர்கள் வந்துவிட்டார்கள்.    மடத்து மேனேஜர் அவர்களை வரவேற்று உபசரித்து  போஜனாதிகள் அளித்து  ரெண்டு மணி வாக்கில்  பெரியவாளிடம்   அழைத்துச் சென்றார் . பெரியவா அவர்களது க்ஷேமலாபங்களை விசாரித்தார்.  

''பெரியவாளைப்  பார்த்து ஒரு முக்கியமான விஷயம் கேட்க தான் வந்தோம்.'' 

''என்ன சொல்லுங்கோ''.

காலம்பற ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் சந்நிதி   கதவைத் திறந்து  பக்தர்கள் தரிசனத்துக்கு  ஏற்பாடு பண்ணும்போது ஒவ்வொரு நாளும்  எதனாலோ தெரியவில்லை,  அர்ச்சகர் மயங்கி தொப்புனு விழுந்திடறார்.  ஒருத்தர்னா  பரவாயில்லே.  தினமும் யார் கதவைத் திறக்கிறாளோ அவர்கள் மயக்கமாகி  கீழே விழறா. ஏன்? எதனாலே?ன்னு  சங்கடமாக இருக்கு. பத்து நிமிஷம் கழிச்சு எழுந்து வழக்கம் போல நடமாடறா.  கொஞ்சநாளா  யாரும்  காலம்பற  சந்நிதி திறக்க  வர மாட்டேங்கிறா பெரியவா''

''ஓஹோ''   ....   பெரியவா  சிறிது நேரம் கண்ணை மூடி மௌனமா இருந்தார். பிறகு  அர்ச்சகர்களிடம் 

''சரி,  நாளைக்கு நான்  காலம்பற வரேன். நான் வந்தாவிட்டு  அம்பாள் சந்நிதி கதவை திறங்கோ''அர்ச்சகர்கள் மன நிறைவோடு பிரசாதம்  வாங்கிக்கொண்டு  புறப்பட்டார்கள்.  பெரியவா ஆசிர்வதித்து அனுப்பினார்.

 மறுநாள் காலை  ஐந்தரை மணிக்கே  மஹா பெரியவா  திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி சந்நிதி சென்றுவிட்டார்.  கதவைத் திறந்த  அர்ச்சகர் வழக்கம்போல்  தடுமாறி, மயக்கமடைந்து விழுந்துவிட்டார்.பத்து நிமிஷம் கழித்து சுதாரித்துக் கொண்டு  வழக்கமாக  செயல்பட்டார்.  

இதைப் பார்த்த மஹா பெரியவா  அங்கேயே நிஷ்டையில்  ஆழ்ந்துவிட்டார்.  

கோவில் பிரதான சிவாச்சாரியாரை கூப்பிட்டார்.  

''நாளையிலிருந்து  அம்பாள்  சந்நிதி திறக்கும்போது  பக்கத்துலே இருக்கிற  சின்ன வாசல் கதவை திறந்துண்டு உள்ளே போகச்சொல்லுங்கோ. எப்படி திறக்கணும்னு சொல்றேன்.  கதவை திறந்ததும் உடனே உள்ளே போகவேண்டாம்.   ரெண்டு மூணு நிமிஷங்கள் கழிச்சு உள்ளே போகட்டும் ''

சாயந்திரம்  நாலு மணி வாக்கில்,  அன்று   பெரியவாளின்  சிஷ்யன் சொல்லி அனுப்பிய  ஸ்தபதி வந்துவிட்டார். அவர் கையில் ரெண்டடி உயர பிள்ளையார். 

மஹா பெரியவா பிள்ளையார் சிலையைப் பார்த்து சந்தோஷப்பட்டார். 

''ஸ்தபதி,   உடனே   ஆகம  சாஸ்திரப்படி, ஒரு சின்ன  ஸ்தூபி கட்டுங்கோ.  அம்பாள் சந்நிதிக்கு நேரா இருக்கட்டும்  அந்த  பீடத்தில்  பிள்ளையார் பிரதிஷ்டை பண்ணி,  அவர் கண்ணும்  அம்பாள் கண்ணும் நேராக சந்திக்கிற மாதிரி இருக்கணும்.  உடனே ஏற்பாடு ஆகி  பிள்ளையார் ஸ்தூபத்தில் பிரதிஷ்டை ஆகி  அம்பாளை நேராக  பார்த்தார்.   அதற்குப்பிறகு  கதவைத் திறந்த  எந்த அர்ச்சகரும் மயக்கமாகி கீழே விழவில்லை.  இன்றும்  அந்த ஸ்தூபியில் விநாயகர் அம்மாவைப் பார்த்து நிற்கிறார்.  அம்பாளின் தாய்ப்பாச பார்வை முதலில் கதவைத் திறந்ததும்  ஜேஷ்ட குமாரன்  மேல் பாசமாக விழுகிறது.  அந்த அன்பு தொடர்ந்து வரும் பக்தர்கள் மேலும் விழுகிறது என்று சொல்லவேண்டிய அவசியமில்லை.

Wednesday 10 March 2021

குரு விளக்கம்

 அந்த சிறு கன்று தான் நாம். காப்பாற்றும் இருவரும் நமது ஆசான் மற்றும் குருநாதரும் ஆவார்கள். அந்த கயிறு ஆன்மீகம் யோகம். இந்த ஆறு தான் சம்சார கடல். நிலை புரியாமல் இந்த உலக சம்சார கடலில் விழுந்து தத்தளிக்கும் நமக்கு எதுவுமே தெரியாது, குருநாதருக்கு எல்லாம் புரியும். அவர்கள் கடைக்கண் பார்வை நம் மீது விழுந்தால் போதுமே....




Tuesday 9 March 2021

ஆலய பணிகள் - நடப்பு நிகழ்வுகள் , கோரிக்கைகள் 10/03/2021

ஆலய பணிகள்
1. இதுவரை தர்ம சிறகுகள் மூலம் 500 கல், தனி நபர் தானம் அளித்தது 1000 கல் , மொத்தம் 1500 கல் வாங்கப்பட்டுள்ளது , மேலும் இந்த மாதம் சுமார் 700 கல் , தர்ம சிறகுகள் மூலம் 500 கல்லும் , தனி நபர் தானம் மூலம் 200 கல்லும் வாங்கப்பட உள்ளது . ஆகா மொத்தம் 2200 கல் . மேலும் 1000 கற்கள் தேவைப்படும் . ஒரு கல் 28 ரூபாய் , 1000 கற்கள் வாங்க 28000 தேவை உள்ளது

2. ஆலய நிதியில் இருந்து 60000 செலவிடப்பட்டது , 42000 ரூபாய்க்கு போர்வெல் மோட்டார் செட் அமைக்கப்பட்டது , மேலும் ஒரு தரைத்தளம் அமைத்து , கூரைக்கு இரும்பு சீட் வாங்கி நாற்புறமும் தென்னை ஓலையால் அடைக்கப்பட்டு  , ஒரு ஷெட் அமைக்கப்பட்டு உள்ளது , இந்த ஷெட் சிமெண்ட் அடுக்கி வைத்து உபயோகப்படுத்த உள்ளது . மேலும் ஷெட் இந்த முன்புறம் 6 ஆதி அளவில் கூரை வேய்ந்து , வேலை செய்பவர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு நிழலும் அமைக்கப்பட்டுள்ளது .ஒரு சிறிய கதவு அமைக்கப்பட்டுள்ளது .  இந்த ஷெட் அமைக்க சுமார் 19000 உள்ளது , தென்னை ஓலை சுவர், இரும்பு சீட் கூரை , தரை தளம் , ஆள் கூலி , போன்றவை செலவிடப்பட்டுள்ளன.

3. மேலும் , TNEB லைன் எடுக்க இரண்டு இடங்களில் போஸ்ட் அமைக்கப்பட உள்ளது . இதற்கு சுமார் 35000 முதல் 40000 வரை தேவை உள்ளது . இந்த கரண்ட் தூண் போஸ்ட் அமைக்கப்பட்டால் தான் , தற்காலிக மின் இணைப்பு கொடுக்க முடியும்

4. மேலும் , நீர் சேமித்து வைக்க sintex டேங்க் தேவை உள்ளது , பெரிய சைஸ் டேங்க் சுமார் 7500 ரூபாய் வரை விலை வரும் .

5. மேலும் சிமெண்ட் வாங்க வேண்டும் , M sand  வாங்க வேண்டும் , கம்பிகள் வாங்க வேண்டும் , அஸ்திவாரம் அமைக்க வேண்டும் , வேலையாள் மேஸ்திரி கூலி கொடுக்க வேண்டும் . இதற்கும் சில லட்சங்கள் தேவை உள்ளது . மெதுவாக டொனேஷன் தானம் வாங்கி தான் வேலைகளை செய்ய முடியும் .

கையிருப்பு சுமார் 1 லட்சம் உள்ளது , எல்லாவற்றுக்கும் கை  இருப்பை காலி செய்யாமல் டொனேஷன் வாங்க முடிவிபு செய்யப்பட்டுள்ளது . விருப்பம் உள்ளவர்கள் உதவி செய்தால் , வேலைகள் தொய்வில்லாமல் தொடரும் .

நான் எப்போதும் சொல்வது போல , மற்ற இடம் போல கோவில் கட்டி அங்கே இறைவனை எழுந்தருள பண்ணவில்லை . இங்கே இறைவன் ஏற்கனவே தினமும் எழுந்தருளி மக்களிடம் நேரிடையாக பேசிய வண்ணம் உள்ளார் , அப்படி ஏற்கனவே எழுந்தருளி உள்ள இறை சக்திக்கு ஆலயம் இல்லை , எனவே ஆலயம் எழுப்பிகிறோம் . மற்ற இடங்கள் போல இந்த இடம் இல்லை . இறைவன் பேசுவார் , வரம் கொடுப்பார் , அறிவுரை கொடுப்பார் , தானங்கள் அளிக்கப்படும் , தர்மங்கள் போற்றப்படும் , சாதி மத வேற்றுமை கிடையாது


நன்றி

ஆலய பணியில்

தி. இரா . சந்தானம்
கோவை
10/03/2021


Thursday 4 March 2021

சுந்தர காண்டம் படித்தால் சோதனை தீர்க்க வருவான்

 🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐

🤝ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஶ்ரீராம் 🤝

🌹 சுகம் தரும் சுந்தரகான்டத்தை பாரயணம் செய்யும் முறை காரிய சித்தியளிக்கும் வழி

🌹ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஶ்ரீராம் 🌹

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

------------------------------------------------------------------------------

🍊 ஸ்ரீமத் ராமாயண சுந்தர காண்ட ஸப்த ஸர்க்க பாராயணம் :

----------------------------------------------------------------------------

🍏 ஸப்த ஸர்க பாராயணம் (ஏழு நாட்கள்) 🍏                                         


🍊 தினமும் ஏழு சர்க்கம் பாராயணம் செய்ய வேண்டும்.                           

இப்படி ஏழு தடவை பாராயணம் செய்வதால்                                    

நினைத்த காரியம் நிறைவேறும். 10ம் நாள் 68வது                           

முடிந்தபின் மீண்டும் முதலிலிருந்து தொடங்கவும்.

--------------------------------------------------------------------

சுந்தரகாண்டம் பாராயணம் எளிய வழியில் :

-------------------------------------------------------------------- 

ஸ்ரீ சீதா ராம லக்ஷ்மண பரத சத்ருக்ண 

அனுமத் சமேதா சரணம்

வால்மீகி ராமாயணத்தில் சுந்தரகாண்டம் 

66 சர்க்கங்களை உடையது.  

இதை தினமும் பாராயணம் செய்வது என்பது சிரமம்.  எனவே,  

சுந்தரகாண்ட பாராயணத்தை எளிய வழியில் தினமும் முழுமையாக வாசித்து பலன் பெற, இதோ… 


இந்த எளிய பாடலைப் படித்து மகிழுங்கள்.

 

சுந்தரகாண்ட பாராயணம் மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும். நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும்,  வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் உரிய பலன் கிடைக்கும்.


 🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂


ஸ்ரீ ராம ஜெயம்


🍒 சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார்


🍒இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்


🍒கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன 


🍒 கருணைமிகு  ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது


🍒அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே

ஆயத்தமாகி நின்றான்


🍒இராமபாணம் போல் இராட்சசர் மனைநோக்கி


🍒 இராஜகம்பீரத்தோடு இரமாதூதன் சென்றான்.

 

🍒அங்கதனும், ஜாம்பவானும் அனைத்து வானரங்களும்


🍒அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே!


🍒வானவர்கள் தானவர்கள் இந்திராதி தேவர்கள்


🍒வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!

 

🍒மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க


🍒மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து


🍒சரசையை வெற்றிகண்டு சிம்ஹியை வதம் செய்து


🍒சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சென்றான்.

 

🍒இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை


🍒இடக்கையால் தண்டித்தவன் இதயத்தை கலக்கினான்


🍒அழகான இலங்கையில் அன்னை ஜானகியை


🍒அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டான்.

 

🍒 சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும்


🍒 சீதாபிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்


🍒ராவணன் வெகுண்டிட ராட்சசியர் அரண்டிட


🍒வைதேகி கலங்கிட வந்தான் துயர் துடைக்க !

 

🍒கணையாழி கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி


🍒சூடாமணி பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்


🍒அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு


🍒அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.

 

🍒பிரம்மாஸ்திரத்தினால் பிணைந்திட்ட ஆஞ்சநேயர்


🍒பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க


🍒வெகுண்ட இலங்கைவேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்


🍒வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்.

 

🍒அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும்


🍒அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டான்.


🍒ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயன் தாவி வந்தான்


🍒அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.

 

🍒ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்


🍒 ஆஞ்சநேயர் கைகூப்பி வணங்கி கண்டேன் சீதையை என்றான்.


🍒வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி


🍒 சொல்லின் செல்வன் சுந்தர ஆஞ்சநேயர் சூடாமணியை அளித்தான்.

 

🍒மனம் மகிழ மாருதியை மார்போடணைத்து


🍒ராமர் மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானான்.


🍒ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ


🍒அனுமானும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டான்.

 

🍒அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை


🍒அன்னை சீதாபிராட்டியை சிறை மீட்டு அடைந்திட்டான்.


🍒அயோத்தி சென்று ராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தார்


🍒அவனை சரணடைந்தோர்க்கு அவனருள் என்றென்றும் உண்டு.

 

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒


🍒எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோ அங்கங்கு சிரம்மேல் கரம் குவித்து  மனம் போல நீர் சொரிந்து

ஆனந்தத்தில் மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீ ஆஞ்சநேயனே  உனை பணிகின்றோம் பலமுறை🍒


 ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐


🌺 ஸ்ரீமத் ராமாயணம்/ சுந்தர காண்டம் பாராயணம் செய்யும்போது, அருகில் ஒரு ஆசனத்தை (சிறிய பலகை/ சுத்தமான விரிப்பு) போட்டு வைக்க வேண்டும். ‘ராம’ நாமம் எங்கு ஒலித்தாலும் ஆஞ்சநேயர் அங்கே பிரஸன்ன மாவார் என்பது ஐதிகம். அவர் அமருவதற்காகத்தான் அந்த ஆசனம்.


⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

-------------------------

சுந்தர காண்டம் :

-------------------------

🍂 இராமாயணத்தில் எத்தனையோ காண்டங்கள் இருந்தாலும், சுந்தரகாண்டம் மிகவும் முக்கியமான காண்டமாகும். ராம பக்தியை முக்கிய நோக்கமாகக் கொண்டு, அருந்தமிழ் மொழியால் கம்பர் நமக்குப் பாடித் தந்துள்ளார். துளசிதாசர் என்னும் மஹான் இதனை ஹிந்தியில் இயற்றியுள்ளார். ஸ்ரீமத் ராமாயணத்தின் ஏனைய காண்டங்களுக்கெல்லாம் அவற்றுள் கூறப்பட்டுள்ள கதையின் சந்தர்ப்பத்தையொட்டிப் பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் சுந்தர காண்டத்துக்கு மட்டும் மேற்கண்ட ரீதியில் பெயரமைக்கப்படவில்லை.


⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡


♻ இது ஏனெனில், மற்ற காண்டங்களில் கூறப்படும் கதைகளைக் காட்டிலும் இக்காண்டத்தில் கூறப்பட்டுள்ள கதைகள், மனதிற்கு அதிக மகிழ்ச்சியைத் தருகின்றன. 


🌹ஸ்ரீ ராமபிரானிடத்து மெய்யடிமையும், உண்மை பக்தியும் வாய்க்கப்பெற்று உள்ள ஹனுமனின் வீரச் செயல்கள் இக்காண்டத்துள் மிக விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. 


🍅  இக்காண்டம் நித்ய பாராயணத்திற்குத் தகுதியாயிருக்கிறது. 🍅 


🍊 அவரவர்கள் விரும்பும் பலன்கள் யாவையும் கொடுக்கக் கூடியதாக உள்ளது. 


🌕 ஸாமான்ய தர்மங்கயையும், 


🌕விசேஷ அர்த்தங்களையும் இக்காண்டம் போதிக்கிறது. இன்னும் பலவிதமாக ஆராய்ந்தால் "சுந்தர காண்டம்" என்ற பெயர் மிகவும் பொருத்தமானதே என்று முடிவு ஏற்படும்.


இக்காண்டம் சௌபாக்யத்தை அளிக்கவல்ல காண்டமாகும். உடலுக்கு உயிர் எப்படி முக்கியமோ, அப்படி சுந்தர காண்டம். ஸ்ரீமத் ராமாயணத்திற்கு அமைந்துள்ளது.


🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹


♻ அனுமனின் "வீரவெளிக்காட்டு" என்று கூட இக்காண்டத்தைக் கூறிவிடலாம். வாயு புதல்வனின் வீரம், விவேகம், வலிமை, பக்திப்பெருக்கு, சேவா உணர்ச்சி அனைத்தும் அளாவு கடந்து பரிமளிப்பது இக்காண்டத்தில் தான். 'அனுமரின்றேல் அவ்வளவுமேயில்லை' என்று அறுதியிடும் அளவிற்கு எங்கு அவரைப்பற்றியே இப்பகுதியில் நாம் உணர முடிகிறது.


பிணைக்கப்பட்ட இரு தெய்வீக உள்ளங்கள் பிரிக்கப்பட்டுப் பரிதவிக்கும் நிலையில் இணைப்பு கயிற்றைக் கணையாழி மூலமாக அனுமர் அணிவிக்கிறார். தொலைவிலுள்ள இரு உள்ளங்கள் சின்னங்களின் மூலமாகவோ சந்திக்கும் நிலையில்தான் எவ்வளவு பேரானந்தம் 1 இத்தகைய ஆனந்த நிலையைத் தன்னுள் கொண்டுள்ள தனிப்பெரும் பகுதியே "சுந்தர காண்டம்".


⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡


⭐ எவர் அவநம்பிக்கைகளை விடுத்து ஸ்ரீராமனை வழிபடுகின்றாரோ, பக்தியுடன் அவன் நாமங்களை உச்சரிக்கின்றாரோ, அவர்கள் பிறவிப் பெருங்கடலை நீந்திச் செல்வது திண்ணம், கலியுகத்தில் நாம மகிமை கண்கூடு என்று துளிசிதாசர் புகன்றிருக்கிறார்.


🦐 ராமகதையின் ஜீவமையமே சுந்தரகாண்டம். சுந்தரகாண்டத்தைப் படிப்பதால் பற்பல பலன்கள் உண்டு.  


🌹 துயர் துடைக்கும் அருமருந்து அது. 


🌹இருளை அகற்றும் 


 இன்ப விளக்கு அது. 


🌹 அறிவை வளர்க்கும் அன்பு ஒளி அது. 


🌹 இதனை பக்தியுடன் படிப்போர் இன்னல்களை சமாளித்து இன்பம் காண்பர். 


🌹 இழந்த பொருளை எய்திப் புளகாங்கிதம் கொள்வர்.  


🌹 தோல்வியின் சாயலை விடுத்து வெற்றிப் பாதையை அடைவர்.  


🌹 அறிவும் திறனும் அடையப் பெறுவர். 


🌹 கலை கேள்விகளில் வளர்ச்சி காண்பர். 


🌹 மங்களமான நிகழ்ச்சிகளைக் கொள்வர். 


🌹 சௌபாக்யம் சித்திக்கும். 


🌹 துயரம் துடைபட்டுப் போகும். 


🌹 ஆனந்தம் அடையும்  


🌹 இறைவனின் இன்ப அருளையும் சுவைப்பர். 


🌹 நேரிய நல்வாழ்வு அவர்களை அடையும். 


🌹சம்சார சாகரத்தை சுமுகமாகக் கடப்பர். 


🌹அவன் அன்புப் பாதங்களை அடைவர். 


🌹பிறவாப் பெருநிலையும் அவர்களுக்குக் கிட்டும்.


🌹 இவ்வளவு பேற்றையும் அளிக்கவல்ல இப்பெருமைமிக்க நூலை யாவரும் படிக்க வேண்டும். பன்முறை படிக்க வேண்டும். திரும்பத் திரும்ப ஆழ்ந்து படிக்க வேண்டும். அப்போதுதான் பற்பல புதிர்கள் நமக்குப் புலப்படும். உண்மைகளை உணரவும் முடியும். பக்திப் பரவசத்தில் பரமனின் பனுவல்களின் பண்புகளைப் பரமானந்த நிலையில் பார்க்க முடியும். தூய உள்ளத்துடன், உடலை சுத்தமாக்கிக் கொண்ட பின்னர், தினமும் இதனைப் படிப்பது ஒன்றே போதும், பரமனருளைப் பெற்று அவன் திருவடிகளை அடைவதற்கு சீதையைப் போன்ற ஒப்பற்ற தேவி உலகில் தோன்றியதில்லை. அளவற்ற பொறுமைக்கும், சகிப்புத் தன்மைக்கும் இருப்பிடம். கற்புக்கு அணிகலன். எல்லாக் கஷ்டங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டவள். மாதர்கள் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறவள். அப்படிப்பட்ட சீதாப்பிராட்டியாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நாம் வாழ வேண்டும்.


🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡


🌹 இக்காண்டத்தில், ஆஞ்சநேயரின் அற்புதமான சாகசங்களும், அபரிதமான அறிவுத் திறனும், அளவில்லாத ஸ்ரீராம பக்தியும், அவர் சீதாப்பிராட்டி, ஸ்ரீ ராமர் இவர்களை ஒன்று சேர்ப்பதற்கு எடுத்துக் கொண்ட ஒப்பற்ற செயல்களும் ஒருங்கே சிறந்து காணப்படுகின்றன. ஆஞ்சநேயருக்கு சுந்தரன் என்ற ஒரு பெயரும் உண்டு. அதனாலேயே இது சுந்தர காண்டம் (மிக அழகுடைய காண்டம்) என்று சிறப்புற்று விளங்குகிறது என்று கூறலாம்.


🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡


🌹 இதை தினசரி ஒவ்வொரு ஸர்க்கமாகப் பாராயணம் செய்யலாம். பாராயணத்திற்கு முன்பு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, புஷ்பம் அணிவித்து, பாராயணம் முடிந்த பிறகு வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் நிவேதனம் செய்யலாம். ஸ்ரீராம பட்டாபிஷேகம் படித்து முடித்த அன்று பாயசம் நிவேதனம் செய்யலாம். ஆஞ்சநேயரைத் தொழுது வந்தால், அவரருளால், நவக்கிரகங்கள் முக்கியமாக சனீஸ்வரரின் பாதிப்புகளின் கடுமை குறையும்.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


🌺 எளிய முறையில் பக்தியுடன் செய்யும் எதையும் ஸ்ரீ பகவான் ஏற்றுக் கொள்கிறார். ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான், இலை, புஷ்பம், பழம், தண்ணீர் இவை எதையேனும் யார் பக்தியுடன் சமர்ப்பிக்கிறாரோ, அதில் தான் திருப்தி அடைவதாகக் கூறுகிறார்.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


🌹 பிரிந்த தம்பதிகளை ஹனுமன் இணைக்க உதவுவதால், இதைப் படிப்பதால், தம்பதியரிடையே ஒற்றுமை நிலவும், திருமணம் கைகூடும். ஜாதக தோஷங்கள் நீங்கும். அதுவரை சாதாரண வானரமாயிருந்த மாருதி, இலங்கை சென்று வந்தபிறகு, சீதாராம லக்ஷ்மண பரத சத்ருக்னர்களோடு இணைந்து புகழ் பெற்றார். ராமனோடு லட்சுணர், சீதை ஆகியோர் மட்டுமல்லாமல் ஹனுமனையும் சேர்தே பூஜிக்கிறோம்.


🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊


🌹எனவே இக்காண்டத்தைப் படிப்பவர்களுக்கு வேலை கிட்டும். 


🌹  புகழ் தேடிவரும் 


🌹  எடுத்த காரியம் ஜெயமாகும். 


🌹 உத்யோக உயர்வு கிடைக்கும் 


🌹 . விளைச்சல் அதிகரிக்கும்.  


🌹 தொழிலில் லாபம் பெறலாம்.  


🌹 வழக்குகள் வெற்றி பெறும்.  


🌹சீதையின் துக்கமென்னும் வியாதிக்கு ஒளடதமானவர். 


🌹  தீராத நோய்களையும் தீர்த்து வைப்பார். அதோடு 


🌹 நற்குணங்கள் பெருக, பாபங்கள் அழியும். 


🌹எதிரிகள் தலை தூக்க மாட்டார்கள்.  


🌹தீங்கு செய்ய நினைப்பவரே தீங்கை அடைவர்.

🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊


🌿 ஆகவே, இக்காண்டத்தைப் பக்தர்கள் பக்தியோடு பாராயணம் செய்து, ஸ்ரீ சீதா ராமர் அனுக்கிரகத்தால் தங்கள் கோரிக்கைகள் ஈடேறப் பெறுவார்களாக!

🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐


சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது எப்படி?

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡


🌺 தினமும் காலையில் நீராடி, ஸ்ரீ ராமபிரானின் படத்தை வைத்துப் புஷ்பம் சாத்தி, குறைந்தபட்சம் ஒரு ஸர்க்கமாவது (ஓர் அத்தியாயம்) படிக்க வேண்டும். எந்த ஒரு ஸர்க்கத்தையும் பாதியில் நிறுத்திவிட்டு மறுநாள் தொடரக்கூடாது. ஒவ்வொரு ஸர்க்கத்தையும் முழுமையாகப் படித்தல் வேண்டும்.


🌺பாராயணம் செய்த பிறகு, திணமும், சிறிது உலர்ந்த திராட்சை அல்லது ஏதாவது ஒரு பழம், அல்லது கற்கண்டு அல்லது காய்ச்சிய பசும்பால், நைவேத்தியம் செய்துவிட்டு 12 முறை ஸ்ரீ ராமபிரானின் படத்தை வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும்.


🌺அதன் பிறகு கற்பூரம் அல்லது தீபம் ஆகியவற்றினால் ஆரத்தி எடுத்துவிட்டு, மீண்டும் 12 முறை விழுந்து வணங்க வேண்டும். சுந்தர காண்டம் முழுமையும் பாராயணம் செய்து முடித்த கடைசி தினத்தில் பாயஸம், வடையுடன் நைவேத்தியம் செய்து, வயோதிக ஏழை ஒருவருக்கு அன்னமிட்டால் நல்ல பலன் தரும். எனினும், தங்கள் வசதிக்கு உட்பட்டு செய்தால் போதும்.


வடமொழி தெரியாதவர்கள் அல்லது அதனையே தாய்மொழியில் உச்சரிக்க முடியாதவர்கள் கம்பராமாயணம் அல்லது துளிசதாஸரின் ஸ்ரீராம சரிதமானஸ் (ஹிந்தி) பாராயணம் செய்யலாம். பலன் ஒன்றே பக்தியே இப்பாராயணத்திற்கு அடிப்படை அவசியமாகும்.


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


🌺 குடும்பங்களில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் கொடிய துன்பங்களையும் ஸ்ரீமத் ராமாயணம் - சுந்தர காண்டப் பாராயணத்தினால் சூரியனைக் கண்ட பனிபோல விலகுவதை அனுபவ பூர்வமாகக் காணலாம்.


ஸ்ரீமத் ராமாயணம் எவர் பாராயணம் செய்தாலும் அவ்விடத்தில் ஸ்ரீ அனுமன் எழுந்தருளி, அந்தப் பாராயணம் என்னும் அமுதத்தைப் பருகிப் பேரானந்தம் அடைந்து, உடனடியாக அருள் பாலிக்கிறார் என மகாத்மாவான ஸ்ரீ துளசிதாசர் விவரித்துள்ளார். ஆதலால் ஸ்ரீமத் சுந்தரகாண்டப் பாராயணத்தின் மகிமையும், சக்தியும் அளவற்றவை ஆகும்.


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


   🍒 பாராயண முறைகளும், பலனும் 🍒


🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋


🙏 ஒரே நாளில் பாராயணம் செய்வோர் அதிகாலை ஆரம்பித்து மதியம் 1.00 மணிக்குள் முடிக்க வேண்டும்.


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


🍁 இரண்டு நாள் பாராயணத்திற்கு முதல் நாள் 36வது சர்க்கம் வரையிலும், இரண்டாம் நாள் பட்டாபிஷேகம் முடியவும் பாராயணம் செய்ய வேண்டும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


🍅 மூன்று நாள் பாராயணத்திற்கு முதல் நாள் 27வது ஸர்க்கம் முடியவும், 2ம் நாள் 40வது ஸர்க்கம் வரையுலும், மூன்றாவது நாள் பட்டாபிஷேகம் வரையிலும் முடிக்க வேண்டும்.


🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝


♻ ஐந்து நாட்கள் பாராயணத்திற்கு


1ம் நாள் - 15வது ஸர்க்கம் வரை

2ம் நாள் - 27வது ஸர்க்கம் வரை

3ம் நாள் - 40வது ஸர்க்கம் வரை

4ம் நாள் - 54வது ஸர்க்கம் வரை

5ம் நாள் - பட்டாபிஷேகம் வரை


🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝


🌺 முதல் ஸர்க்கத்தை தினமும் காலையில் 6 மாதங்கள் விடாது பாராயணம் செய்து வந்தால் சம்சார கஷ்டங்கள் நீங்கும்.


🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐


🔥 பேய், பிசாசு, பில்லி, சூன்யம் நீங்க 3வது ஸர்க்கத்தை தினமும் மாலை நெய் தீபம் ஏற்றி பாராயணம் செய்து சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து கற்பூரம் காட்ட வேண்டும்.


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


🌳 ஐஸ்வர்யம் பெருக, கடன் தொல்லை அகல வெள்ளிக்கிழமை தொடங்கி தினமும் 9 ஸர்க்கங்களாகப் பாராயணம் செய்து அடுத்த வெள்ளி மீதி இருக்கும் ஐந்து ஸர்க்கங்களையும், பட்டாபிஷேகத்தையும் முடித்து அப்பம், வடை, பால், சர்க்கரைப் பொங்கல், பழங்கள், பாயஸம், தேன் என்று தினமொன்றாக நிவேதிக்க வேண்டும். 15வது ஸர்க்கத்தை காலையில் படித்து ஐந்து வாழைப்பழங்கள் நைவேத்யம் செய்தாலும் விரைவில் கடன் நீங்கும்.


🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳


🍅குழந்தைகள், கணவன் அல்லது மனைவி,  தகப்பனார் திருந்த, நற்குணம் பெற திணமும் காலை நீராடி 20,21 சர்க்கங்களைப் பாராயணம் செய்து இளஞ் சூடான பசுவின் பாலில் இனிப்பு சேர்த்து நிவேதனம் செய்யவும்.


🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅


🌕 ஸப்த ஸர்க பாராயணம் (ஏழு நாட்கள்)


தினமும் ஏழு சர்க்கம் பாராயணம் செய்ய வேண்டும். இப்படி ஏழு தடவை பாராயணம் செய்வதால் நினைத்த காரியம் நிறைவேறும். 10ம் நாள் 68வது முடிந்தபின் மீண்டும் முதலிலிருந்து தொடங்கவும்.


🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕


🍏 நவாஸ பாராயணம் (9 நாட்கள்)


நவாஹ பாராயணம் (9 நாட்கள்) நிவேதனம்


1ம் நாள் 1-5 சர்க்கம் சர்க்கரைப் பொங்கல்

2ம் நாள் 6-15 சர்க்கம் அப்பம், பாயசம்

3ம் நாள் 16-20 சர்க்கம் எள்ளோதரை (உப்பு (அ) இனிப்பு)

4ம் நாள் 21-26 சர்க்கம் தேன்குழல் (அ) முறுக்கு (அ) சீடை

5ம் நாள் 27-33 சர்க்கம் தயிர் சாதம்

6ம் நாள் 34-40 சர்க்கம் மோதகம்

7ம் நாள் 41-52 சர்க்கம் விதவிதபமான கனிகள்

8ம் நாள் 53-60 சர்க்கம் வெண்பொங்கல்

9ம் நாள் 61-68 பட்டாபிஷேகம் தேன், பசும்பால்


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


🍒 நினைத்த காரியம் நடக்க 41வது சர்க்கத்தை தினமும் அதிகாலை பாராயணம் செய்து பால் நிவேதனம் செய்யவும்.


🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒


🦐 துர் சொப்பனம் பலிக்காதிருக்க 27வது சர்க்கத்தை மூன்று தினங்கள் காலையில் பாராயணம் செய்து வாழைப்பழம் நிவேதிக்க வேண்டும்.


🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐


♻ பிரச்சனை தீர 36வது சர்க்கத்தை தினமும் காலையில் படித்து இனிப்பு போட்ட இளஞ் சூடான பசுவின் பாலை நிவேதிக்கவும்.


♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻


⭐ ஒரு நாளைக்கு ஒரு தடவை வீதம் 68 நாட்களில் 68 முறை சுந்தர காண்டம் பாராயணம் செய்து தினமும் 12 அந்தணர்களுக்கு அன்னமளித்து தாம்பூலம் தக்ஷனை கொடுத்தால் தீராத வியாதிகளும் தீரும். நான்கு அல்லது ஆறு மாதங்களிலும் பாராயணத்தை முடிக்கலாம். அது சற்று நிதானமாகப் பலன்தரும். நிவேதனம் இல்லாத பாராயணத்துக்குப் பலன் இல்லை. ஸ்ரீராம பட்டாபிஷேகம் படம் வைத்து அஷ்டோத்திரமாவது படித்து அர்ச்சனை செய்ய வேண்டும்.


⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐


🍅 பிரிந்தவர் சேர 33,34,35 ஆகிய மூன்று சர்க்கங்களை தினமும் காலையில் படித்து பசும்பால் நிவேதிக்கவும். காரியம் நிறைவேறும் வரை பாராயணத்தை நிறுத்தக்கூடாது.


🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅


🍁 சத்துரு ஐயம் ஏற்பட 42வது சர்க்கத்தை காலையில் பாராயணம் செய்து இனிப்பு போட்ட பசும்பாலை நிவேதிக்கவும்.  


🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊


🎡 வீடு, நிலம் வாங்க 54வது சர்க்கத்தை தினமும் காலையில் படித்து பால் நிவேதனம் செய்யவும்.


🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡


✡ சனிதிசை, சனி புக்திக்கு 48வது சர்க்கத்தை தினமும் காலையில் பாராயணம் செய்து, தினமும் கற்கண்டு, திராட்சை நிவேதிக்கவும். ராகு திசை, சனி திசைக்கு 47வது சர்க்கத்தை தினமும் காலையில் படித்து தேன், கற்கண்டு நிவேதிக்கவும்.


🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋


♻ பின்குறிப்பு : சுந்தர காண்டம் புத்தகம் அனைத்து புத்தகக் கடைகளிலும் சிறியது முதல் பெரியது வரை கிடைக்கும். அதை வாங்கிப் படித்துப் அனைவரும் பயனடையலாம்.


🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

🔥ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஶ்ரீராம்🔥

🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕

நன்றி திரு Nandakumar G அவரகள் 🙏🙏🙏


♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻