Tuesday 30 August 2022

நமது பீடத்தின் சின்னம் வடிவமைக்கப்பட்டது

 நமது பீடத்தின் சின்னம் வடிவமைக்கப்பட்டது




Sunday 21 August 2022

அகத்தியர் ஆலய பணிகள்

 ஆசிரமத்தில் இருந்து வந்துள்ள தகவல்


 ஏற்கனவே நாம் அகத்தியருக்கு ஆலயம் அமைக்க அஸ்திவாரம் போடப்பட்ட நிலையில் தற்போது அகத்தியர் ஜீவநாடியில் தோன்றி தமது கருவறை அமையும் இடத்தை அவரே முடிவு செய்து சிறிது தள்ளி அமைக்க சொல்லி இருக்கிறார்.


 அதாவது நமது இடம் சுமார் 70 அடி அகலம் கொண்டது தற்போது நாம் கருவறை அமைக்க இருந்த இடம் தென்மேற்கு மூலையில் இருந்தது , அதனை மாற்றி அந்த 70 அடி அகலத்திற்கு மத்தியில் இருக்குமாறு அமைக்க சொல்லி ஐயா ஜீவநாடியில் உத்தரவிட்டுள்ளார்கள்.


 எனவே அஸ்திவாரம் மீண்டும் மாற்றி அமைக்கப்படுகிறது.


 மேலும் அகத்தியர் ஜீவ நாடியில் மேற்கு திசையிலிருந்து மதில் சுவருக்கு உள்ளே 17அடி விட்டு அதற்குப் பிறகு கருவரை அமைக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள்.


 கருவறைக்கு பின்புறம் இடது புறம் வலது புறம் நுழைவுப் பகுதி ஆகிய பகுதிகளில் நட்சத்திர மரங்களை வைத்து அழகான ஒரு சோலை மத்தியில் அகத்தியர் ஆலயம் அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்கள்.


 எனவே இதனை மனதில் கொண்டு தற்போது கட்டுமானப் பணிகள் மீண்டும் புதிதாக இப்போது உள்ள கருவறை , முன் மண்டபம் , ஆகிய இடங்களை அளந்து அஸ்திவாரம் எங்கே தோன்ட வேண்டும் இன்று முடிவு செய்வதற்காக நமது கட்டிட பொறியாளர் அவர்கள் உதவியுடன் மீண்டும் குறியீடு செய்யும் வேலை செய்து கொண்டு உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் 


அதன் புகைப்படங்கள் கூகுள் ஸ்ட்ரீட் வியூ என்ற முறையில் முழுவதும் தரைப்பகுதி வானத்து தொகுதி நான்கு புறம் என்று அனைத்துப் புறமும் ஒரே படத்தில் தெரியுமாறு முழுமையான ஒரு படமாக எடுத்து பதிவு செய்து அதை பார்ப்பதற்கு ஒன்றான இணைப்பை பயன்படுத்தி உள்ளேன் அதனை சொடுக்கி அந்தப் படத்தை எல்லோரும் பார்க்கலாம்


https://www.google.com/maps/@11.2645182,77.0372691,3a,75y,80h,90t/data=!3m4!1e1!3m2!1sAF1QipPZn_CAcz-4Vh5gDhf-Dl1VB-zHrRYB6IjxPaXh!2e10 Check out Pogalur, Tamil Nadu, IND Shared via the #StreetView app

அகத்தியர் ஜீவ அருள் நாடி வாக்கு 21-08-2022, ஞாயிற்று கிழமை

 அகத்தியர் ஜீவ அருள் நாடி வாக்கு 


21-08-2022, ஞாயிற்று கிழமை 


வாக்கு கேட்பவர் - தி. இரா. சந்தானம் , சே . வித்யா 


நாடி வாசிப்பவர் - குருஜி இறைசித்தர் 


இடம் - பொகளூர் அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம் , கோவை 


அருவாய் உருவாய் திருவாய் போற்றி 


திருவாய் மலரடி பணிந்தாய் போற்றி 


வருவாய் குகனே அருள்வாய் போற்றி 


காவாய் கனகத்திரளே போற்றி 


கயிலை மலையானே போற்றி போற்றி போற்றி 




சிரம் தாழ்ந்து வணங்கும் அடியவர்களின் தேவ தேவனே போற்றி 


சிரம் தாழ்ந்து பொதிகை வாழ் அகஸ்தியன் நானே என் மைந்தனுக்கு அருள்தனை உரைக்கின்றேன் கேள் மகனே 


ஆலய பணிதனை நீ செய்வாய் என் மகனே 




பூசையிடும் வேளையிலே கருடனாக வந்து காட்சி தந்தேன் அறிவாய் நீ 




பின்பு சிறு துளி மழையாக வந்து அருள் தந்தோம் 




வாசனை வடிவில் வந்து உமக்கு மட்டும் புலன் உணர்த்தினோம் 




பின்பு ஒரு வயோதிகனாக வந்து உனை உற்று நோக்கி சென்றேன் அறிவாய் நீ 




ஆலய கைங்காரியங்கள் அதனை செய் மகனே 




உமக்கு யாம் அன்றுரைத்தோம் 




கண்டம் விட்டு கண்டம் இருக்கும் மைந்தன் அவன் உன்னுடன் இனைந்து பெரும் ஆலய பணி அதை செய்வான் என்று 




நீ செய்யும் பூசை புனஸ்காரங்களை கண்டு யாம் மனம் மகிழ்ந்தோம் 


நீ செய்யும் தான தர்ம காரியங்களை யாம் உற்று நோக்கி உள்ளோம் 


தானம் செய்யும் வேளையிலே திரை வடிவில் காட்டாதே 


கர்ம நிலை பற்றும் அப்பா 


கவலைகள் கொள்வாய் நீ 




என் கேள்வி - தர்ம சிறகுகள் அரசாங்கத்தில் பதிவு செய்யும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவுகிறதே 




அகத்தியர் வாக்கு - என் ஆலய கைங்காரியங்கள் அதை ,உயரும் பட்சத்தில் , தர்ம காரியங்களும் உயரும் அப்பா . தடைகள் அகலும் , என் மகனே , தயங்காதே , 


ஒருமுறை கோரக்க சித்தனவன் சமாதி நிலை பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் சென்று 


படித்துறையில் வீற்றிருக்கும் கஜமுகனையும் சப்த கன்னியரையும் வணங்கி 


அப்பன் உள் ஆலயம் சென்று , 


கோதுமை தானியத்தால் மூன்று வட்ட கோலம் இட்டு , 


மூன்று அகல் இட்டு , 


கொண்டவளுடன் , வலம் வந்து , 


மல்லிகை மலர் தன்னை ஈசனுக்கும் உமையவளுக்கும்  சாற்றி 


கொண்டவளுடன் கையில் இட்டு ...(மனைவிக்கு மல்லிகை பூ மாலையை கையில் கொடுத்து )


அங்கிருக்கும் கஜமுகனுக்கு இனிப்பு பூசணி அதை தானமிட்டு 


தொழுது வந்தாலே இடர் நீங்கி , அரசாங்க துறையிலே இருக்கும் இன்னல் அகலும் அப்பா 




பின்பு எமது நிலை உயர்ந்து கோபுரம் எழும்பும் போது 


உமது நிலை உயரும் அப்பா 


நீ செய்யும் தர்ம காரியங்களை யாம் உற்று நோக்கி உள்ளோம் 


வாழ்வில் நிலை பெறுவாய் என் மகனே 


மனம் தளராதே தூயவனே 


யாம் இருக்கிறோம் உமை காக்க , அஞ்சுவது ஏன் மகனே 


என் கேள்வி - அகத்தியர் வாக்கு என்னுள் தோன்றி எழுத்து வடிவில் எழுதி வருகின்றேன் அய்யா - அது சரியா 


அகத்தியர் பதில் 




நான் உனக்கு அன்று உரைத்தேன் உனக்கு அறியவில்லையா மூடனே 


நான் உன் அருகில் அல்ல 


உன்னுள் இருந்து உன்னை காற்று இயக்குகிறேன் , என்று 


யாமே இயக்குகிறோம் ,


நீ சித்த நிலையை பின்பு வந்து அடைவாய் 


மனதை மென்மைப்படுத்து 


ஏன் மனக்குழப்பம் ?


ஆலய கைங்காரியங்கள் அதை செய் 




யாமே சித்தன் என்று புறம் பேசி அலைகின்ற மூடர்கள் இருக்கும் கலியுகம் அப்பா இது 


மனதில் ஏதும் கொள்ளாதே 


யாம் உண்மை ஆசீர்வதிப்போம் , ஆட்கொள்வோம் , முற்றே

Thursday 18 August 2022

காயத்ரி சஹஸ்ர நாமம்

 காயத்ரி சஹஸ்ர நாமம்

      


த்யானம்;- சிகப்பு, வெளுப்பு, நீலம், ஸ்வர்ணம், தவளம் ஆகிய நிறத்துடன், கூடிய ஐந்து முகங்களும், முக் கண்களுடன், புதிய சிகப்பு மாலையுடன் நவரத்ன மணிப் பிரகாசத்துடன் குமரியாய், காயத்ரியாய் பத்மாசனத்துடன் கையில் தாமரை,பாத்திரம் கொண்டவளாய் பத்மாட்சியாய் வரமளிப்பவளாய் அன்னவாகனம் உள்ள தேவியைத் தியானிக்கிறேன் என்று தியானம் செய்ய வேண்டும்.

         

அகரம் முதல் க்ஷகாரம் வரை உள்ள மாத்ருகாக்ஷர ங்களால் அமைந்தது காயத்ரி ஸஹஸ்ர நாமம்.

          

திருநாமங்களுக்கு முன் ‘’ஓம்’’ என்ற பிரணவத்தைச் சேர்த்துக் கொள்ளவும்.


ஓம் அசிந்த்ய லக்ஷணாயை நம;

      அவ்யக்தாயை நம;

      அர்த்தமாத்ரு மஹேஸ்வர்யை நம;

      அம்ருதார்ணவ மத்யஸ் தாயை நம;

ஓம் அஜிதாயை நம;

       அபராஜிதாயை நம;

       அணிமாதி குண தாரையை நம;

       அர்க்க மண்டில ஸம்ஸ்திதாயை நம;

       அஜராயை நம;

       அஜாயை நம;

       அபராயை நம;

       அதர் மாயை நம;

       அஷ ஸீத்ர தராயை நம;

       அதராயை நம;

       அகாராதிக்ஷகாராந்தாயை நம;

       அரிஷட்வர்க் பேதின்யை நம;

       அஞ்ச நாத்ரி ப்ரதீகாஸாயை நம;

       அஞ்ச நாத்ரி நிவாஸின்யை நம;

      அதித்யை நம;

      அஜபாயை நம;

      அவித்யாயை நம;  

      அரவிந்த நிபேக்ஷணாயை நம;

      அந்தர் பஹிஸ்திதாயை நம;

      அவித்யா த்வம்ஸின்யை நம;

      அந்தராத்மி காயை நம;

ஓம் அஜாயை நம;

      அஜமுகா வாஸாயை நம;

      அரவிந்த நிபாந நாயை நம;

      அர்த்த மாத்ராயை நம;

      அர்த்த தாநக் ஞாயை நம;

      அரிமண்டல மர்தின்யை நம;

      அஸீரக்ன்யை நம;

      அமாவாஸ்யாயை நம;

      அலக்ஷ்மீக்ன்யை நம;

      அந்த்யஜார் சிதாயை நம;

      ஆதிலக்ஷ்மயை நம;

      ஆதி ஸக்தியை நம;


      ஆக்ருத்யை நம;

      ஆயதாநநாயை நம;

      ஆதித்ய பதவீசாராயை நம;

      ஆதித்ய பரிஸேவிதாயை நம;

      ஆசார்யாயை நம;

      அவர் தநாயை நம;

      ஆசாராயை நம;

      ஆதிமூர்த்தி நிவாஸின்யை நம;

      ஆக்நேய்யை நம;

ஓம் ஆமர்யை நம;

      ஆத்யாயை நம;

      ஆராத்யாயை நம;

      ஆஸநஸ்தியாயை நம;

      ஆதார நிலயாயை நம;

      ஆதாராயை நம;

      ஆகாஸாந்த நிவாஸந்யை நம;

      ஆத்யாக்ஷர ஸமாயுக்தாயை நம;

      ஆந்ராகாஸ ரூபிண்யை நம;

      ஆதித்ய மண்டல கதாயை நம;

      அந்தரத்வாந்தநாஸின்யை நம;

      இந்திராயை நம;

      இஷ்ட தாயை நம;

      இஷ்டாயை நம;

      இந்தீவர நிபேக்ஷணாயை நம;

      இராவத்தையை நம;

      இந்த்ர பதாயை நம;

      இந்த்ராண்யை நம;

      இந்ரரூபிண்யை நம;

      இக்ஷீகோதண்ட ஸம்யுக்தாயை நம;

      இக்ஷீ ஸந்தாந காரிண்யை நம;

ஓம் இந்த்ரநீல ஸமாகாராயை நம;

      இடாபிங்கள ரூபிண்யை நம;

      இந்த்ராக்ஷ்யை நம;

      ஈஸ்வரீ தேவ்யை நம;

      ஈஹாத்ரய விவ்ஜிதாயை நம;

      உமாயை நம;

      உஷாயை நம ;

      உடுநிபாயை நம;

      உர்வாருக பலாந நாயை நம;

      உடுப்ராபாயை நம;

      உடுமத்யை நம;

      உடுபாயை நம;

      உடுமத்ய காயை நம;

      ஊர்த் வாயை நம;

      ஊர்த்வ கேஸ்யை நம;

      ஊர்த்வாதோகதி பேதின்யை நம;

      ஊர்த்வாபஹி ப்ரியாயை நம;

      ஊர்மி மாலா வாக், க்ரந்தாயின்யை நம;

      ரிதாயை நம;

      ரிஷயே நம;

      ரிது மத்யை நம;

ஓம் ரிஷிதேவ நமஸ்க்ருதாயை நம;

      ரிக் வேதாயை நம;

      ரிண ஹர்த்ரியை நம;

      ரிஷிமண்டல சாரிண்யை நம;

      ரித்திதாயை நம;

      ரிஜீமார்க்கஸ்தாயை நம;

      ரிஜீதர்மாயை நம;

      ரிதுப்ரதாயை நம;

      ரிக் வேத நிலயாயை நம;

      ரிஜ்வ்யை நம;

      லுப்த தர்ம ப்ரவர்த்தின்யை நம;

      லூதாரிவரஸம் பூதாயை நம;

      லூதாரிவரஸம் பூதாயை நம;

      லூதாதி விஷ ஹாரிண்யை நம;

      ஏகாக்ஷராயை நம;

      ஏகமாத்ராயை நம;

      ஏகாயை நம;

      ஏகைந நிஷ்டிதாயை நம;

      ஐந்திரியை நம;

      ஐராவதாரூடாயை நம;

      ஐஹிகாமுஷ்மிக ப்ரதாயை நம;

      ஓங்காராயை நம;

ஓம் ஓஷத்யை நம;

      ஓதாயை நம;

      ஓதப்ரோத நிவாஸின்யை நம;

      ஓளர் வாயை நம;

      ஓளஷத ஸம்பன்னாயை நம;

      ஓளபாஸந பலப்ரதாயைநம;

      அண்டமத்யஸ்திதா தேவ்யை நம;

      அஃகார மநு ரூபிண்யை நம;

      காத்யாயின்யை நம;

      காளராத்ர்யை நம;

      காமாக்ஷ்யை நம;

      காமஸீந்தர்யை நம;

      கமலாயை நம;

      காமின்யை நம;

      காந்தாயை நம;

      காமதாயை நம;          

      கலகண்டின்யை நம;

      கரிகும்ப ஸ்தநப்ரபாயை நம;

      கரவீர ஸீவாஸின்யை நம;

      கல்யாண்யை நம;

      குண்டல வத்யை நம;

ஓம் குருக்ஷேத்ர நிவாஸின்யை நம;

       குண்டல்யை நம;

       குமுதாலயாயை நம;

       காலஜிஹ்வாயை நம;

       காராலாஸ்யாயை நம;

       காளிகாயை நம;

       காளிரூபின்யை நம;

       கமநீய குணாயை நம;

       காந்த்யை நம;

       குமுத்வத்யை நம;

       கௌஸிக்யை நம;

       கமலாகாராயை நம;

       கமாசரா ப்ரபஞ்ஜின்யை நம

      கௌமார்யை நம;

      கருணா பாங்க்யை நம;

      கரு பந்தாயை நம;

      கரி ப்ரியாயை நம;

      கேஸர்யை நம;

      கேஸவநுதாயை நம;

ஓம் காம்ப குஸீம ப்ரியாயை நம;

      காலிந்த்யை நம;

      காலிகாயை நம;

      காங்ச்யை நம;

      கலஸோத்பவ ஸம்ஸ்துதாயை நம;

      காமமாத்ரே நம;

      க்ரத மத்யை நம;

      காமரூபாயை நம;

      க்ருபாவத்யை நம;

      குமார்யை நம;

      குண்டலநிலயாயை நம;

      கிராத்யை நம;

      கீரவாஹநாயை நம;

      கைகேய்யை நம;

      கோகிலா லாபாயை நம;

      கேதகீ குஸீம ப்ரியாயை நம;

      கமண்டலுதராயை நம;

      காள்யை நம;

      கர்ம நிர்மூல காரிண்யை நம;

      கல ஹம்ஸகத்யை நம;

      க்க்ஷாக்ருத கௌதுக மங்களாய நம;

ஓம் கஸ்தூரீ திலகாயை நம;

      கம்ராயை நம;

      கரீந்த்ர கமநாயை நம;

      குஹ்வை நம;

      கர்பூர லேபநாயை நம;

      க்ருஷ்ணாயை நம;

      கபிலாயை நம;

      குஹராஸ்ரயாயை நம;

      கூடஸ்தாயை நம;

      குதராயை நம;

      கம்ராயை நம;

      குக்ஷிஸ்தாகில் விஷ்டபாயை நம;

      கட்க கேடகதராயை நம;

      கர்வாயை நம;

      கேசர்யை நம;

      ககவாஹநாயை நம;

      கட்வாங்க தாரிண்யை நம;

      க்யாதாயை நம;

      சுகராஜோ பரிஸ்திதாயை நம;

      கலக்ன்யை நம;

      கண்டித ஜராயை நம;

ஓம் கண்டாக்யாந ப்ரதாயின்யை நம;

      கண்டேந்து திலகாயை நம;

      காயத்ர்யை நம;

      கோமத்யை நம;

      கீதாயை நம;

      காந்தார்யை நம;

      காந்தார்யை நம;

      காந லோலுபாயை நம;

      கௌதம்யை நம;

      காமின்யை நம;

      காதாயை நம;

      சுந்தர்வாப் ஸரஸே விதாயை நம;

      கோவிந்த சரணாக்ராந்தாயை நம;

      குணத்ரய விபாவிதாயை நம;

      சுந்தர்வ்யை நம;

      கஹ்வர்யை நம;

      கோதராயை நம;

      கிரிஸாயை நம;

      கஹநாயை நம;

      கம்யை நம;

      குஹாவாஸாயை நம;

      குணவத்யை நம;

ஓம் குருபாப் ப்ரணாஸின்யை நம;

      குர்வ்யை நம;

      குணவத்யை நம;

      குஹ்யாயை நம:

      கோப்த்யாயை நம;

      குண தாயின்யை நம;

      கிரிஜாயை நம;

      குஹ்ய மாதங்க்யை நம;

      கருட த்வஜ வல்லபாயை நம;

      கர்வபஹாரிண்யை நம;

      கோதாயை நம;

      கோகுலஸ் தாயை நம;

      கதாதாராயை நம;

      கோகர்ண நிலயா ஸக்தாயை நம;

      குஹ்ய மண்டல வர்த்தின்யை நம;

      கர்ம தாயை நம;

      கநதாயை நம;

      கண்டாயை நம;

      கோரதாநவ மர்தின்யை நம;

      க்ருணி மந்த்ரமய்யை நம;

      கோஷாயை நம;

ஓம் கநஸம்பத்தி தாயின்யை நம;

      கண்டா ரவ ப்ரியாயை நம;

      க்ருணாயை நம;

      க்ருணி ஸந்துஷ்டி காரிண்யை நம;

      கநாரி மண்டலாயை நம;

      கூர்ணாயை நம;

      க்ருதாச்சை நம;

      சநவேகின்யை நம;

      ஜ்ஞானதாது மய்யை நம;

      சர் சாயை நம;

      சர்சிதாயை நம;

      சாருஹாஸின்யை நம;

      சடுலாயை நம;

      சண்டிகாயை நம;

      சித்ராயை நம;

      சதுர்ஜாயை நம;

      சாருதந்தாயை நம;

      சாதுர்யை நம;

      சரிதப்ரதாயை நம;

      சூளிகாயை நம;

ஓம் சித்ர வஸ்த்ராந்தாயை நம;

      சந்த்ரம; கர்ண குண்டலாயை நம;

      சந்த்ரஹாஸாயை நம;

      சாருதாத்ர்யை நம;

      சகோர்யை நம;

      சந்த்ரஹாஸிந்யை நம;

      சந்த்ரதாத்ர்யை நம;

      சௌர்யை நம;

      சௌராயை நம;

      சண்டிகாயை நம;

      சஞ்சத் வாக்வாதின்யை நம;

      சூடாயை நம;

      சோரவிநாஸின்யை நம;

      சாருசந்த நலிப்தாங்க்யை நம;

      சஞ்சக் சாமரவீஜிதாயை நம;

      சாரு மத்யாயை நம;

      சாருகத்யை நம;

      சந்திலாயை நம;

      சந்த்ர ரூபிண்யை நம;

      சாருஹோமப்ரியாயை நம;

ஓம் சர்வா சரிதாயை நம;

      சக்ரபாஹீகாயை நம;

      சந்த்ரமண்டல மத்யஸ்தாயை நம;

      சந்த்ர மண்டல தர்பணாயை நம;

      சக்ரவாக ஸ்தன்யை நம;

      சேஷ்டாயை நம;

      சித்ராயை நம;

      சாருவிலாஸின்யை நம;

      சித்தஸ்வரூபாயை நம;

      சந்த்ரமஸே நம;

      சந்தந ப்ரியாயை நம;

      சோதயித்ர்யை நம;

      சிர ப்ரஞ்ஞாயை நம;

      சாதகாயை நம;

      சாருஹேதுக்ஞாயை நம;

      சத்ரயாதாயை நம;

      சத்ர தராயை நம;

      சந்த: பரிச்சதாயை நம;

      சாயா தேவ்யை நம;

      சித்ர நகாயை நம;

ஓம் சந்நேந்த்ரிய விஸர்பிண்யை நம;

      சந்தோநுஷ்டுப் ப்ரதிஷ்டாந்த்தாயை நம;

      சித்ரோபத்ரவ பேதின்யை நம;

      சேதாயை நம;

      சத்ரேஸ்வர்யை நம;

      சின்னாயை நம;

      சூரிகாயை நம;

      சேதநப்ரியாயை நம;

      ஜநன்யை நம;

      ஜன்மரஹிதாயை நம;

      ஜாதவேதஸே நம;

      ஜகன்மய்யை நம;

      ஜான்னவ்யை நம;

      ஜடிலாயை நம;

      ஜேத்ர்யை நம;

      ஜராமரண வர்ஜிதாயை நம;

      ஜம்பூ த்வீப வத்யை நம;

      ஜ்வாலாயை நம;

      ஜயந்த்யை நம;

      ஜலஸாலின்யை நம;

      ஜிதேந்த்ரியாயை நம;

ஓம் ஜிதக் ரோதாயை நம;

      ஜிதா மித்ராயை நம;

      ஜிகத்பிரியாயை நம;

      ஜாதரூபமய்யை நம;

      ஜிஹ்வாயை நம;

      ஜாநக்யை நம;

      ஜகத்யை நம;

      ஜராயை நம;

      ஜநித்ர்யை நம;

      ஜன்னு நதயாயை நம;

      ஜகத்ரயஹிதை ஷிண்யை நம;

      ஜ்வாலாமுக்யை நம;

      ஜபவத்யை நம;

      ஜ்வரக்ந்யை நம;

      ஜிதவிஷ்டபாயை நம;

      ஜிதாக்ராந்த மய்யை நம;

      ஜ்வாலாயை நம;

      ஜாக்ரத்யை நம;

      ஜ்வர தேவதாயை நம;

      ஜ்வலந்த்யை நம;

      ஜலதாயை நம;

ஓம் ஜ்யேஷ்டாயை நம;

      ஜ்யா கோஷாஸ் போடித திங்முக்யை நம;

      ஜம்பின்யை நம;

      ஜ்ரும்பணாயை நம;

      ஜ்ரும்பாயை நம;

      ஜ்வலன் மாணிக்ய குண்டலாயை நம;

      ஜிஞ்ஜி காயை நம;

      ஜணநிர் கோஷாயை நம;

      ஜஞ்ஜா மாருத வேகின்யை நம;

      ஜல்லகீ வாத்ய குஸலாயை நம;

      ஞ ரூபாயை நம;

      ஞ புஜாயை நம;

      டங்கபாணஸமாயுக்தாயை நம;

      டங்கின்யை நம;

      டங்கபேதின்யை நம;

      டங்கீ கணக்ருதா கோஷாயை நம;     

      டங்க நீயம ஹோரஸாயை நம;

      டங்கார காரிணீ தேவ்யை நம;

      டட சப்தநி நாதின்யை நம;

      டமாயை நம;

      டாகின்யை நம;

ஓம் டிம்பாயை நம;

      டுண்டுமாரைக நிர்ஜிதாயை நம;

      டமரீ தந்ர மார்க்கஸ் தாயை நம;

      டமட்டமரு நாதின்யை நம;

      டிண்டீரவ ஸஹாயை நம;

      டிம்பல ஸத் க்ரீடாபராயணாயை நம;

      டுண்டி விக்நேஸ ஜநன்யை நம;

      டக்கா ஹஸ்தாயை நம;

      டிலிவ்ர ஜாயை நம;

      நித்யக் ஞாநாயை நம;

      நிருபமாயை நம;

      நிர்குணாயை நம;

      நர்மதா நத்யை நம;

      த்ரி குணாயை நம;

      த்ரி பதாயை நம;

      தந்தர்யை நம;

      துலஸ்யை நம;

      தருணாயை நம;

      தரவே நம;

      த்ரிவிக்ரம பதாக்ராந் தாயை நம;

      துரீயபத காமின்யை நம;

ஓம் தருணாதித்ய ஸங்காஸாயை நம;

      தாமஸ்யை நம;

      துஹிநா துராயை நம;

      த்ரிகாலக் ஞான ஸம்பன்னாயை நம;

      த்ரி வல்யை நம;

      த்ரி லோசநாயை நம;

      த்ரி ஸக்தியை நம;

      தர் புராயை நம;

      துங்காயை நம;

      துரங்க வதநாயை நம;

      தமிங்கில கிலாயை நம;

      தீவ்ராயை நம;

      த்ரி ஸ்ரோதஸே நம;

      தாமஸாதின்யை நம;

      தந்த்ர மந்த்ர விஸேஷக்ஞாயை நம;

      தநுமத்யாயை நம;

      த்ரி விஷ்டபாயை நம;

      த்ரிஸந்த்யாயை நம;

      த்ரிஸ் தன்யை நம;

      தோஷஸம்ஸ்தாயை நம;

      தாலப்ராதாபின்யை நம;

ஓம் தாடங்கின்யை நம;

      துஷாராபாயை நம;

      துஹிநாசல வாஹின்யை நம;

      தந்துஜால ஸாமாயுக்தாயை நம;

      தாராஹார வலிப்ரியாயை நம;

      திலஹோமம்ரியாயை நம;

      தீர்த்தாயை நம;

      தாமலகுஸீ மாக்ருத்யை நம;

      தாரகாயை நம;

      த்ரீ யுதாயை நம;

      தந்வ்யை நம;

      த்ரி ஸங்கு பரிவாரிதாயை நம;

      தலோதர்யை நம;

      திலோ பூஷாயை நம;

      தாடங்க ப்ரியவர்த்தின்யை நம;

      த்ரி ஜடாயை நம;

      தித்திர்யை நம;

      த்ருஷ்ணாயை நம;

      த்ரி விதாயை நம;

      த்ருணாக்ருத்யை நம;

      தப்தகாஞ்சநக ஸங்கா ஸாயை நம;


ஓம் தப்த காஞ்சந பூஷணாயை நம;

      த்ரயம் பகாயை நம;

      த்ரிவர்காயை நம;

      த்ரி காலக்ஞாந தாயின்யை நம;

      தர்பணாயை நம;

      த்ரிப்தி தாயை நம;

      தாமஸ்யை நம;

      தும்புரு ஸ்துதாயை நம;

      தார்க்ஷ்யஸ்தாயை நம;

      த்ரி குணாகாராயை நம;

      த்ரி பங்கீதநு வல்யை நம;

      தார்கார்யை நம;

      தாரவாயை நம;

      தாந்தாயை நம;

      தோஹிண்யை நம;

      தீந வத்ஸ லாயை நம;

      தாநவாந்த கர்யை நம;

      துர்க்காயை நம;

      துர்காஸீர நிபர்ஹிண்யை நம;

      தேவரீத்யை நம;

      திவாராத்ர்யை நம;

ஓம் த்ரௌபத்யை நம;

      துந்து பிஸ்வநாயை நம;

      தேவயான்யை நம; 

      துராவாஸாயை நம;

      தாரித்ர்ய பேதின்யை நம;

      திவாயை நம;

      தாமோத ப்ரியாயை நம;

      தீப்தாயை நம;

      திக்வாஸஸே நம;

      திக் விமோஹின்யை நம;

      தண்டகாரண்ய நிலயாயை நம;

      தண்டின்யை நம;

      தேவபூஜிதாயை நம;

      தேவ வந்த்யாயை நம;

      திவிஷதாயை நம;

      த்வேஷிண்யை நம;

      தாநவாக்ருத்யை நம;

      தீநாநா தஸ்து தாயை நம;

      தீக்ஷாயை நம;

      தேவதாதி ஸ்வரூபிண்யை நம;

      தாத்ர்யை நம;

ஓம் தநுர்தராய நம;

      தேநவே நம;

      தாரிண்யை நம;

      தர்ம சாரிண்யை நம;

      துரந்த ராயை நம;

      தாரா தாராயை நம;

      தநதாயை நம;

      தான்ய தேஹிந்யை நம;

      தர்ம ஸீலாயை நம;

      தநாத்ய க்ஷாயை நம;

      தநுர்வேத விஸாரதாயை நம;

      த்ருதயே நம;

      தான்யாயை நம;

      த்ருத பதாயை நம;

      தர்மராஜ ப்ரியாயை நம;

      த்ருவாயை நம;

      தூமா வத்யை நம;

      தூம கேஸ்யை நம

      தர்ம சாஸ்த்ர ப்ரகா ஸின்யை நம;

      நந்தாயை நம;

      நந்தாயை நம;

      நந்தப்ரியாயை நம;

ஓம் நித்ராயை நம;

      ந்ருநு தாயை நம;

      நந்தநாத் மிகாயை நம;

      நர்மதாயை நம;

      நளின்யை நம;

      நீலாயை நம;

      நீலகண்ட ஸமாஸ்ர யாயை நம;

      நாராயண ப்ரியாயை நம;

      நித்யாயை நம;

      நர்மலாயை நம;

      நர்குணாயை நம;

      நிதயே நம;

      நிராதாராயை நம;

      நிருபமாயை நம;

      நித்ய சுத்தாயை நம;

      நிரஞ் ஜநாயை நம;

      நாத பிந்துகலாதீ தாயை நம;

      நாத பிந்து கலாத்மிகாயை நம;

      ந்ருஸிம் ஹின்யை நம;

      நகதராயை நம;

      ந்ருபநாக விபூஷிதாயை நம;

ஓம் நரகக்லேஸ ஸமன்யை நம;

      நாராயண பதோத்ப வாயை நம;

      நிரவத்யாயை நம;

      நிராகாராயை நம;

      நாரதப்ரிய காரிண்யை நம

      நாநா ஜ்யோதிஸ் ஸமாக்யாதாயை நம;

      நிதிதாயை நம;

      நிர்மலாத்மிகாயை நம;

      நவஸீத்ர தராயை நம;

      நீத்யை நம;

      நிருபத்ரவகாரிண்யை நம;

      நந்தஜாயை நம;

      நவரத் நாட்யாயை நம;

      நைமிஸாரண்ய வாஸின்யை நம;

      நவநீதப்ரியாயை நம;

      நார்யை நம;

      நீலஜீமுதநிஸ்வநாயை நம;

      நிமேஷிண்யை நம;

      நதீ ரூபாயை நம;

      நீ க்ரீவாயை நம;

      நிஸீஸ் வர்யை நம;

ஓம் நாமாவன்யை நம;

      நிஸீம்பக்ந்யை நம;

      நாகலோக நிவாஸின்யை நம;

      நவஜாம்பு நதப்ரக்யாயை நம;

      நாகலோகாதி தேவதாயை நம;

      நூபுராக்ராந்த சரணாயை நம;

      நரசித்த ப்ரமோதின்யை நம;

      நிமக் நாரக்த நயநாயை நம;

      நிர்க்காதஸம நிஸ்வநாயை நம;

      நந்த நோத்யான நிலயாயை நம;

      நிர்வ்யூ ஹோபசாரிண்யை நம;

      பார்வத்யை நம;

      பரமோதாராயை நம;

      பரப்ரும் மாத்மிகாயை நம;

      பராயை நம;

      பஞ்சகோஸவிநிர் முக்தாயை நம;

      பஞ்சபாதக நக்ஞாயை நம;

      பரசித்தவிதா நக்ஞாயை நம;

      பஞ்சிகாயை நம;

      பஞ்ச ரூபிண்யை நம;

      பூர்ணிமாயை நம;

ஓம் பரமப்ரீத்யை நம;

      பரதேஜ: ப்ரகாஸிந்யை நம;

      புராண்யை நம;

      பௌருஷ்யை நம;

      புண்யாயை நம;

      புண்டரீக நிபேக்ஷணாயை நம;

      பாதால தல நிர்மக்நாயை நம;

      ப்ரீதாயை நம;

      ப்ரீதி விவர்த்தின்யை நம;

      பாவன்யை நம;

      பாதஸஹிதாயை நம;

      பேசலாயை நம;

      பவநாஸின்யை நம;

      ப்ரஜாபதயே நம;

      பரிஸ்ராந்தாயை நம;

      பர்வத ஸ்தந மண்டலாயை நம;

      பத்மப்ரியாயை நம;

      பத்ம ஸம்ஸ்தாயை நம;

      பத்மாக்ஷ்யை நம;

      பத்மஸம்பவாயை நம;

      பத்ம பத்ராயை நம;

ஓம் பத்ம பதாயை நம;  

      பத்மிநீப்ரிய பாஷிண்யை நம;

      பஸீபாஸவிநிர் முக்தாயை நம;

      புரந்தர்யை நம;

      புரவாஸின்யை நம;

      புஷ்கலாயை நம;

      புருஷாயை நம;

      பர்வாயை நம;

      பாரிஜாத ஸீமப்ரியாயை நம;

      பவித்ராயை நம;

      பவித்ராங்க்யை நம;

      புஷ்பஹாஸபராயணாயை நம;

      ப்ரக்ஞாவதீ ஸீதாயை நம;

      பௌத்ர்யை நம;

      புத்ர பூஜ்யாயை நம;

      பயஸ் வின்யை நம;

      பட்டி பாஸதராயை நம;

      பங்க்த்யை நம;

      ப்த்ருலோக ப்ரதாயின்யை நம;

      புராண்யை நம;

      புண்ய ஸீலாயை நம;

ஓம் ப்ரணதார்த்தி விநாஸின்யை நம;

      ப்ரத்யும்ந ஜனந்யை நம;

      புஷ்டாயை நம;

      பிதாமஹ பரிக்ரஹாயை நம;

      புண்டரீக புராவாஸாயை நம;

      புண்டரீக ஸமாந நாயை நம;

      ப்ருது ஜ்ங்காயை நம;

      ப்ருது புஜாயை நம;

      ப்ருது பாதாயை நம;

      ப்ருதூதர்யை நம;

      ப்ரவாள ஸோபாயை நம;

      பிங்காக்ஷ்யை நம;

      பீத வாஸஸே நம;

      ப்ரசாபலாயை நம;

      ப்ரஸ வாயை நம;

      புஷ்டி தாயை நம;

      புண்யாயை நம;

      ப்ரதிஷ்டாயை நம;

      ப்ரணவாகதயே நம;

      பஞ்சவர்ணாயை நம;

      பஞ்ச நம;

ஓம் பஞ்சி நம;

      பஞ்சஜாயை நம;

      பரமாய நம;

      பரஜ்யோ நம;

      பரப்ரீ நம;

      பராக நம;

      பராகா ஷ்டாயை நம;

      பரே ஸா நம;

      பாவி நம;

      பாவக நம;

      புண்ய பயை நம;

      பரிச் சேயை நம;

      புஷ்ப ஹாஸாயை நம;

      ப்ரு நம;

      பீதா நம;

      பீ தவஸநாயை நம;

      பீத நம;

      பிஸாசி நம;

      பீதக்ரி நம;

      பிஸாச நம;

      பாடலாக்ஷ்யை நம;

ஓம் படுக்ரியாயை நம;

      பஞ்சபக்ஷாயை நம;

      ப்ரியா சாராயை நம;

      பூதநாயை நம;

      ப்ராண காதின்யை நம;

      புன்னாகவந மத்யஸ்தாயை நம;

      புண்யதீர்த்த நிஷேவிதாயை நம;

      பஞ்சாங்யை நம;

      பராஸக்தியை நம;

      பரமாஹ்லாத காரிண்யை நம;

      புஷ்பகாண்ட ஸ்திதாயை நம;

      புஷாயை நம;

      போஷிதாகில விஷ்டபாயை நம;

      பாநப் ப்ரியாயை நம;

      பஞ்ச ஸிகாயை நம;

      பன்னகோபரி ஸாயின்யை நம;

      பஞ்சமாத்ராத்மிகாயை நம;

      ப்ருத்வ்யை நம;

      பதிகாயை நம;

      ப்ருது தோஹின்யை நம;

      புராணந்யாய மீமாஸாயை நம;

ஓம் பாடலி புஷ்பகந்தின்யை நம;

      புண்ய ப்ராஜாயை நம;

      பாரதாத்ர்யை நம;

      பரமார்கைக கோசாராயை நம;

      ப்ரவாள ஸோபாயை நம;

      பூர்ணா ஸாயை நம;

      ப்ரணவாயை நம;

      பல்லவோ தர்யை நம;

      பலின்யை நம;

      பலதாயை நம;

      பல்கவே நம;

      பூத்கார்யை நம;


      பலகாக்ருதயே நம;

      பணீந்த்ரே போகஸயநாயை நம;

      பணிமண்டல மண்டிதாயை நம;

      பால பாலாயை நம;

      பஹீமதாயை நம;

      பாலாதப நிபாம் ஸீகாயை நம;

      பலபத்ர ப்ரியாயை நம;

      பந்த்யாயை நம;

      படபாயை நம;

ஓம் புத்தி ஸம்ஸ்து தாயை நம;

      பந்தீ தேவ்யை நம;

      பிலவத்யை நம;

      படி ஸக்ந்யை நம;

      பலிப்ரியாயை நம;

      பாந்தவ்யை நம;

      போதிதாயை நம;

      புத்யை நம;

      பந்தூக குஸீம ப்ரியாயை நம;

      பாலபாநு ப்ரபா காராயை நம;

      ப்ராம்யை நம;

      ப்ராமண தேவதாயை நம;

      ப்ருஹஸ்பதி ஸ்துதாயை நம;

      ப்ருந்தாயை நம;

      ப்ருந்தாவந விஹாரிண்யை நம;

      பாலாகின்யை நம;

      பிலாஹாராயை நம;

      பிலாவாஸாயை நம;

      பஹீத காயை நம;

      பஹீநேத்ராயை நம;

      பஹீ பதாயை நம;

ஓம் பஹீகர்வதம் ஸகாயை நம;

      பஹீ பாஹயுதாயை நம;

      பீஜ ரூபிண்யை நம;

      பஹீ ரூபிண்யை நம;

      பிந்து நாத கலாதீதாயை நம;

      பிந்து நாத ஸ்வரூபிண்யை நம;

      பத்தகோதாங் குலத்ராணாயை நம;

      பதர்யாஸ்ரம வாஸின்யை நம;

      ப்ருந்தார காயை நம;

      ப்ருஹத்ஸ்கந்தாயை நம;

      ப்ருஹத்யை நம;

      பாணபாதின்யை நம;

      ப்ருந்தாத்ய சஷாயை நம;

      பஹீ நுதாயை நம;    

      பநிதாயை நம;

      பஹீவிக்ர மாயை நம;

      பத்தபத்மா ஸநாஸிநாயை நம;

      பில்வபத்ர தல ஸ்திதாயை நம;

      போதித்ரும நிஜாவாஸாயை நம;

      படிஸ்தாயை நம;

      பிந்து தர்ப்பணாயை நம;

ஓம் பாலாயை நம;

       பாணாஸநவத்யை நம;

      படபாநலவேகின்யை நம;

      ப்ருமாண்ட பஹிரந்தஸ்தாயை நம;

      ப்ரும்மகங்கண ஸீத்ரிண்யை நம;

      பாவன்யை நம;

      பீஷணவத்யை நம;

      பாவின்யை நம;

      பவஹாரிண்யை நம;

      பத்ரகால்யை நம;

      புஜங்காக்ஷ்யை நம;

      பாரத்யை நம;

      பாரதாஸயாயை நம;

      பைரவ்யை நம;

      பீஷணாகாராயை நம;

      பூதிதாயை நம;  

      பூத்மாலின்யை நம;

      பாமின்யை நம;

      போகநிரதாயை நம;

      பத்ரதாயை நம;

      பூரிவிக்ரமாயை நம;

ஓம் பூதாவாஸாயை நம;

      ப்ருகுலதாயை நம;

      பார்க்கவ்யை நம;

      பூஸிரார்ச்சிதாயை நம;

      பாகீரத்யை நம;

      போகவத்யை நம;

      பவ நஸ்தாயை நம;

      பிஷக்வராயை நம;

      பாமின்யை நம;

      போகின்யை நம;

      பாஷாயை நம;

      பாவன்யை நம;

      பூரிதக்ஷிணாயை நம;

      பர்காத்மிகாயை நம;

      பீமவத்யை நம;

      பவபந்த விமோசின்யை நம;

      பஜநீயாயை நம;

      பூததாத்ரீ ரஞ்ஜிதயை நம;

      புவநேஸ்வர்யை நம;

      புஜங்கவலயாயை நம;

      பீமாயை நம;

ஓம் பேருண்டாயை நம;

      பாகதேயின்யை நம;

      மாதரே நம;

      மாயாயை நம;

      மதுமத்யை நம;

      மதுஜிஹ்வாயை நம;

      மதுப்பிரியாயை நம;

      மஹாதேவ்யை நம;

      மஹாபாகாயை நம;

      மாலின்யை நம;

      மீனலோச நாயை நம;

      மாயாதீதாயை நம;

      மதுமத்யை நம;

      மதுமாம்ஸாயை நம;

      மதுத்ரவாயை நம;

      மாநவ்யை நம;

      மதுஸம் பூதாயை நம;

      மிதுலாபுர வாஸின்யை நம;

      மதுகைடப ஸம்ஹர்த்ர்யை நம;

      மேதின்யை நம;

      மேகமாலின்யை நம;

ஓம் மந்தோதர்யை நம;

      மஹாமாயாயை நம;

      மைதில்யை நம;

      மஸ்ருண ப்ரியாயை நம்;

      மஹாலக்ஷ்மியை நம;

      மகால்யை நம;

      மஹாகன்யாயை நம;

      மஹேஸ்வரர்யை நம;

      மஹேந்தர்யை நம;            

      மேருதநயாயை நம;

      மந்தார குஸீமார்ச்சிதாயை நம;

      மஞ்ஜீ மஞ்ஜிரசரணாயை நம;

      மோக்ஷ தாயை நம;

      மஞ்ஜீபாஷிண்யை நம;

      மதுரத்ராவிண்யை நம;

      முத்ராயை நம;

      மலயாயை நம;

      மலயான் விதாயை நம;

      மேதாயை நம;

      மரகதஸ்மாயை நம;

      மகாத்யை நம;

ஓம் மேநகாமஜாயை நம;

      மஹா மார்யை நம;

      மஹா வீராயை நம;

      மஹாஸ்யா மாயை நம;

      மநுஸ்துதாயை நம;

      மாத்ருகாயை நம;

      மிஹிராபாஸாயை நம;

      முகுந்தபத விக்ரமாயை நம;

      மூலாதார ஸ்திதாயை நம;

      முக்தாயை நம;

      மணிபூரக வாஸின்யை நம;

      ம்ருகாக்ஷ்யை நம;

      மஹிஷா ரூடாயை நம;

      மஹிஷாஸீர மர்தின்யை நம;

      யோகாஸநாயை நம;

      யோக கம்யாயை நம;

      யோகாயை நம;

      யௌவனகாஸ்ரயாயை நம;

      யௌவன்யை நம;

      யுத்த மத்யஸ்தாயை நம;

      யமுநாயை நம;

ஓம் யுகதாரிண்யை நம;

      யக்ஷிண்யை நம;

      யோகயுக்தாயை நம;

      யக்ஷராஜ ப்ரஹீதின்யை நம;

      யாத்ராயை நம;

      யாந விதாநக் ஞாயை நம;

      யதுவம்ஸ ஸமுத்பவாயை நம;

      யாகாரதி ஹகாரந்தாயை நம;

      யாஜீஷ்யை நம;

      யக்ஞ ரூபிண்யை நம;

      யாமின்யை நம;

      யோகநிரதாயை நம;

      யாதுதாந பயங்கர்யை நம;

      ருக்மிண்யை நம;

      ரமண்யை நம;

      ராமாயை நம;

      ரேவத்யை நம;

      ரேணுகாயை நம;

      ரத்யை நம;

      ரௌத்ர்யை நம;     

      ரௌத்ர ப்ரியாகாராயை நம;

ஒம் ராமமாத்ரே நம; 

      ரதிப்ரியாயை நம;

      ரோஹிண்யை நம;

      ராஜ்ய தாயை நம;

      ரேவாயை நம;

      ரமாயை நம;

      ராஜீவலோசநாயை நம;

      ராகேஸ்யை நம;

      ரூபஸம்பன்னாயை நம;

      ரத்நஸீம்ஹாஸநஸ்திதாயை நம;

      ரக்த மால்யாம்பர தராயை நம;

      ரக்த கந்தானு லேபநாயை நம;

      ராஜஹம்ஸ ஸமாரூபாயை நம;

      ரம்பாயை நம;

      ரக்தபலிப்ரியாயை நம;

      ரமணீய யுகாதாராயை நம;

      ராஜிதாகில பூதலாயை நம;

      ருருசர்ம பரீதாநாயை நம;

      ரதின்யை நம;

      ரத்நமாலிகாயை நம;

      ரோகோஸ்யை நம;

ஓம் ரோக ஸமன்யை நம;

      ராவிண்யை நம;

      ரோமஹர்ஷிண்யை நம;

      ராமச்சந்த்ர பதாக்ராந்தாயை நம;

      ராவணசேத காரிண்யை நம;

      ரத்நவஸ்த்ர பரிச்சின்னாயை நம;       

      ரதஸ்தாயை நம;

      ருக்ம பூஷணாயை நம;

      லஜ்ஜாதி தேவதாயை நம;

      லோலாயை நம;

      லலிதாயை நம;

      லிங்கதாரின்யை நம;

      லக்ஷ்ம்யை நம;

      லோலாயை நம;

      லலிதாயை நம;

      லிங்கதாரின்யை நம

      லக்ஷ்ம்யை நம

      லோலாயை நம;

      லுப்த விஷயாயை நம;

      லோகின்யை நம;

      லோக விஸ்ருதாயை நம;

      லஜ்ஜாயை நம;

      லம்போரீ தேவ்யை நம;

      லலநாயை நம;

      லோக தாரின்யை நம;

ஓம் வரதாயை நம;

      வந்திதாயை நம;

      வித்யாயை நம;

      வைஷ்ணவ்யை நம;

      விமலாக்ருத்யை நம;

      வாராஹ்யை நம;

      விரஜாயை நம;

      வர்ஷாயை நம;

      வரலக்ஷ்ம்யை நம;

      விலாஸின்யை நம;

      விநதாயை நம;

      வ்யோம்மத்யஸ் தாயை நம;

      வாரிஜாஸந ஸம்ஸ்திதாயை நம;

      வாருண்யை நம;

      வேணு ஸம்பூதாயை நம;

      விதி ஹோத்ராயை நம;

      விரூபிண்யை நம;

      வாயுமண்டல மத்யஸ்தாயை நம;

      விஷ்ணுரூபாயை நம;

      விதிக்ரியாயை நம;

      விஷ்ணுபத்ன்யை நம; 

ஓம் விஷ்ணு மத்யை நம;

      விசாலாக்ஷ்யை நம;

      வஸீந்தராயை நம;

      வாமதேவ் ப்ரியாயை நம;

      வேலாயை நம;

      வஜ்ரிண்யை நம;

      வஸீதோஹின்யை நம;

      வேதாக்ஷர பரீதாங்க்யை நம;

      வாஜபேய பலப்ரதாயை நம;

      வாஸவ்யை நம;

      வாமஜனன்யை நம;

      வைகுண்ட நிலயாயை நம;

      வநாயை நம;

      வ்யாஸப்ரியாயை நம;

      வர்மதராயை நம;

      வால்மீகி பரிஸேவிதாயை நம;

      ஸாகம்பர்யை நம;

      ஸிவாயை நம;

      ஸாந்தாயை நம;

      ஸாரதாயை நம;

      ஸரணகதயே நம;

ஓம் ஸாதோதர்யை நம;

      ஸீபாசாராயை நம;

      ஸீம்பாஸீர விம்ர்தின்யை நம;

      ஸோபாவத்யை நம;

      ஸிவாகாராயை நம;

      ஸங்கரார்த்த சரீரிண்யை நம;

      ஸோணாயை நம;

      ஸீபாஸயாயை நம;

      ஸீப்ராசிர ஸந்தான காரிண்யை நம;

      ஸராவத்யை நம;

      ஸராநந்தாயை நம;              

      ஸரத் ஜோத்ஸ்னாயை நம;

      ஸீபானனாயை நம;

      ஸரபாயை நம;

      ஸீலின்யை நம;

      ஸீத்தாயை நம;

      ஸபர்யை நம;

      ஸீகவாஹனாயை நம;

      ஸ்ரீ மத்யை நம;

      ஸ்ரீ தர நந்தாயை நம;

      ஸ்ரவணாந்த தாயின்யை நம;

ஓம் ஸர்வாண்யை நம;

      ஸர்வரீவந்த்யாய நம;

      ஷட்பாஷாயை நம;

      ஷட் ருது ப்ரியாயை நம;

      ஷடாதார ஸ்திதாவேத்யை நம;

      ஷண்முக ப்ரியகாரிண்யை நம;

      ஷடங்கரூபாயை நம;

      ஸீமதயே நம;

      ஸீராஸீர நமஸ்க்ருதாயை நம;

      ஸரஸ்வத்யை நம;

      ஸதாதாராயை நம;

      ஸர்வமங்கள காரிண்யை நம;

      ஸாமகானப்ரியாயை நம;

      ஸீக்ஷ்மாயை நம;

      ஸாவித்ரியை நம;

      ஸாமஸம்பவாயை நம;

      ஸர்வவாஸாயை நம;

      ஸதானந்தாயை நம;

      ஸீஸ்தன்யை நம;

      ஸாகராம்பராயை நம;

      ஸர்வைஸ்வர்ய ப்ரியாயை நம;

ஓம் ஸித்யை நம;

      ஸாது பந்து பதக்ரமாயை நம;

      ஸப்தரிஷி மண்டலகதாயை நம;

      ஸோம மண்டல வாஸின்யை நம;

      ஸர்வக்ஞாயை நம;

      ஸாந்த்ர கருணாயை நம;

      ஸாமாநாதிக வர்ஜிதாயை நம;

      ஸர்வோத்துங்காயை நம;

      ஸங்கஹினாயை நம;

      ஸத்குணாயை நம;

      ஸகலேஷ்டதாயை நம;

      ஸரகாயை நம;

    ஓம்  ஸீர்யதனயாயை நம;

    ஓம்  ஸீகேஸ்யை நம;

    ஓம்  ஸோமஸம்ஹதயே நம;

    ஓம்  ஹிரண்யவர்ணாயை நம;

    ஓம்  ஹரிண்யை நம;

    ஓம்  ஹ்ரீம் கார்யை நம;

    ஓம்  ஹம்ஸவாஹின்யை நம;

    ஓம்  க்ஷௌம வஸ்த்ர பரீதாங்யை நம;

    ஓம் க்ஷீராப்தி தனயாயை நம;

    ஓம் க்ஷமாயை நம;

    ஓம்  காயத்ர்யை நம;

    ஓம் ஸாவித்ர்யை நம;

    ஓம் பார்வத்யை நம;

    ஓம்  ஸரஸ்வத்யை நம;

    ஓம்  வோகர்பாயை நம;

    ஓம் வரா ரோஹாயை நம;

    ஓம் ஜ்வாலா முக்யை நம;

    ஓம் டங்கின்யை நம;

    ஓம் நிர்குணாயை நம;     

    ஓம் த்ரிபதாயை நம;

    ஓம் த்ரிவல்யை நம;

    ஓம் தீர்த்தாயை நம;

    ஓம்  தாரகாயை நம;

    ஓம் நாராயண ப்ரியாயை நம;

    ஓம்  ஸ்ரீ காயத்ர்யை நம;

    ஓம் பராம்பிகாயை நம;

         

இதை அஷ்டமியில் பாராயணம் செய்வது விசேடமானது. எந்த வீட்டில் இந்த ஸஹஸ்ரநாமம் இருக்கிறதோ அந்த வீட்டில் லக்ஷ்மி நிலையாக வாசம் செய்வாள்.சகல ரோகங்களையும் அகற்றி மோட்சத்தை வழங்கும்.

Saturday 13 August 2022

திருஅண்ணாமலை கொடிக் கம்ப நிழலடிச் சித்தர்

 மாத சிவராத்திரி கிரிவல மஹிமை


திருஅண்ணாமலை கொடிக் கம்ப நிழலடிச் சித்தர்


பல ஆலயங்களிலும் பாலாலயம் செய்து கொடிமரம் மற்றும் கோயில் குடமுழுக்குத் திருப்பணிகள் அரைகுறையாக நின்றிருக்கும். ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியாரின் பிரசித்தி பெற்ற “கொடிக் கவித் துதியை” ஓதியவாறு மாத சிவராத்திரியில் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்திட, துவஜஸ்தம்பம் (கொடிமரம்) இல்லாத ஆலயங்களில் கொடிமரம் அமையவும், குடமுழுக்குப் பணிகள் தொடர்ந்து நிகழ்ந்து நிறைவு பெறவும் இறைச்சித்தம் துரிதமாகக் கைகூடும்.


ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையில் ஒரு இறைலட்சியத்தைப் பெற உதவும் சித்ரபானு ஆண்டின் தை மாத சிவராத்திரி கிரிவலம், நிலையான உத்தியோகம், தொழில் அமைந்திட உதவும் மாத சிவராத்திரி கிரிவலம், திருஅண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் போல் சிறப்புடையதே அமாவாசைக்கு முந்தைய சதுர்த்தசித் திதியிலான மாத சிவராத்திரி கிரிவலம்.


இறைலட்சியம் ஒன்று உங்கள் வாழ்க்கைக்குத் தேவையே!


ளௌகீகமாக, வாழ்வில் பெரு நிலைகளை அடைய எவ்வளவுதான் பேராசைகளை, மனப்போராட்டங்களை ஒரு மனிதன் வளர்த்து வந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு இறைலட்சியம் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். இதுவும் இறைப் பணியைச் சார்வதாக அமைவதே சிறப்புடையதாம். “நான் G.M, MD ஆக வேண்டும்; பல கம்பெனிகளுக்கு அதிபதியாக வேண்டும், அயல்நாடு செல்ல வேண்டும்” – இவையெல்லாம் சாசுவதமான பலன்களைத் தரும் இலட்சியமாகாது, ஏனெனில் இந்த இலட்சியங்கள் எல்லாம் உடல் ஆரோக்யம், செல்வ நிலை, வயது, குடும்பச் சூழ்நிலை, பழக்க வழக்கங்கள், தொழில், உத்தியோகம் இவற்றுக்கேற்ப மாறுபடும். இப்படியாக நிரந்தரம் இல்லாத ஒன்று எப்படி வாழ்க்கையின் இறைலட்சியமாக ஆக முடியும்?


ஆனால் இறை லட்சியத்தை அனைவரும் பெற்றுக் கடைபிடித்தாக வேண்டும் என்பதை உணர்த்திடவே, இறை ஆணையாய்ப் பூவுலகிற்கு வந்த திருஅண்ணாமலைச் சித்தரே கொடிக்கம்ப நிழலடிச் சித்தர் ஆவார். சாதாரணக் குடும்பத்தில் பிறப்பு கொண்டு, தம் யோகத் திறன்களை வெளிக்காட்டாது, மக்களோடு மக்களாய் வாழ்ந்து எண்ணற்றோருக்கு அருள்வழி காட்டிய அருட்பெரும் சித்தர்களில் ஒருவராவார்.


சத்குருவாம் கருடக் கொடிச் சித்தரின் அரவணைப்பு!


கொடிக்கம்ப நிழலடிச் சித்தர் திருஅண்ணாமலையில் ஒரு சாதாரண விவசாயியாகத் தோன்றியவர். அவருடைய காலத்தில் திருஅண்ணாமலைத் திருக்கார்த்திகைத் தீப ஜோதியைத் தரிசிக்க வந்த பல சித்தர்கள், பலரும் அறிந்துணரும் வண்ணம் மானுட வடிவில் வந்த போது, அதில் கருடக் கொடிச் சித்தரானவர் இந்த விவசாயியை அழைத்து,


“ஏனப்பா, உன் வாழ்வின் இறைலட்சியம் என்ன?” எனக் கேட்டார்.


“இதுவரையில் அடியேன் வாழ்க்கையின் லட்சியமாக எதையும் எடுத்துக் கொள்ளாது இருந்து விட்டேன்! இப்பெருங்குறையைச் சுட்டிக் காட்டிய நற்பெரியவரான தங்களுடைய திருவடி நிழலில் அடியேன் சாசுவதமாக நிலைக்க வேண்டும் என்பதே அடியேனுடைய இறை இலட்சியமாகட்டும்!” என அந்த விவசாயி கூறி வேண்டிடவே,


“நான் இந்தக் கொடிக் கம்பத்தின் கீழ் நின்று உனக்கு அளிக்கும் அபூர்வமான இறைலட்சியம் யாதெனில் இக்கொடி மர நிழலில் யாமளிக்கும் சாயாம்ருதுள யோகபாவன சக்தியைப் பெற்று எப்போதும் அருணாசல ஆலயக் கொடிக் கம்ப நிழலிலேயே உறைந்து பிரபஞ்ச ஜீவன்களின் நலன்களுக்காகப் பஞ்சாட்சரம் ஓதுவேன் என இறைலட்சியம் பூண்டு அடிமுடி காணாதோனை அறிவாய்!” என ஞானச் சித்த குருவாய் மலர்ந்து உபதேசித்தார். அன்றைய சூரிய உதயம் முதல் திருஅண்ணாமலை ஆலயக் கொடி மர நிழலிலேயே அமர்ந்து தம் குருநாதராம் கருடக் கொடி சித்தர் உபதேசித்த ருத்ராம்ருத பஞ்சாட்சர மந்திரப் பீஜாட்சரங்களை ஓதி கொடிமர நிழலடிச் சித்தர் எனக் காரணப் பெயர் பூண்டார்.


கொடிமர நிழலே சரணம், சரணம்!


சூரிய அயன கதிக்கேற்ப, வெயிலின் ஓட்டத்திற்கு ஏற்ப, கொடிமர நிழல் எந்தத் திசையில் நகர்கின்றதோ, இவரும் அதன்படி திரும்பி, பத்மாசனத்தில் அமர்ந்து, தியானித்து, நிழலும், நிஜமும் பற்றி ஆத்ம விசாரம் செய்து கொடிமர நிழலிலேயே பல்லாண்டுகள் உறைந்து எப்போதும் பஞ்சாட்சர பீஜாட்சரங்களை ஜபித்தமையால் பலவித யோக நிலைகள் அவருக்குத் தாமாகவே கிட்டின!


ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே தம் சிறு சுரைக் குடுவையில் அவர் உணவு ஏற்பார். அதுவும் எவரேனும் அவருக்குத் தானாக முன் வந்து உணவு அளித்தால்தான் அவ்வுணவையும் ஏற்பார். எவரும் பிட்சை அளிக்காவிடில் அந்நாள் விரத நாளாய் அமைந்து விடும். அவரைச் சோதனை செய்வதற்காகப் பலரும் வறண்ட சோறு, முந்தா நாள் மீந்த சோறு, வடிகஞ்சி நீர், அழுகிய பழங்கள் எனப் பலவற்றை அளித்தாலும் எதையும் இன்முகத்துடன் ஏற்றிடுவார். ஆனால் அவருடைய மிகச் சிறிய சுரைக் குடுவை ஒரு முறை பிட்சையில் நிரம்பி விட்டால் அதற்கு மேல் அவர் பிட்சை கொள்வது கிடையாது. கொடி மர யோக சக்திகள் அவரிடம் பரிபூரணமாக வியாபித்தமையால் அவருடைய தேகத்திற்கு நிழல் ஏற்படுவது கூட மறைந்து அவர் மலம், மூத்ராதிகளையும் கடந்த அருட்பெரும் சித்தராகவும் பிரகாசித்தார்.


அமாவாசை மற்றும் முதற் பகுதித் தேய்பிறை இரவுகளில் கூட, பல சமயங்களில் ஸ்ரீசந்திர பகவான் அவருக்குக் கொடிமர நிழல் தந்து அற்புதங்களைப் புனைந்தார். இவ்வாறு 21 ஆண்டுகளுக்கும் மேலாகத் திருஅண்ணாமலை ஆலயக் கொடிமர நிழலிலேயே வாசம் பூண்ட சித்தர்பிரானே கொடிமர நிழலடிச் சித்தர் எனக் காரணப் பெயரும் பூண்டு மக்களுக்கு அருணாசல கிரிவல மகிமையை உரைத்து, நல்வழிகளைப் போதித்து, மாத சிவராத்திரி கிரிவல மகிமைகளையும் உணர்த்தினார். ஒவ்வொரு மாத சிவராத்திரியிலும் அவர் மேற்கொள்ளும் அருணாசல கிரிவலத்தில் பல கிராமங்கள், நகரங்களில் இருந்து திரளும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கு கொண்டு அபூர்வமான பலாபலன்களைப் பெற்றனர்.


நிழலில் சித்தர் கண்ட நிஜங்கள்!


தம் குறைகளைத் தன்னிடம் ஒப்புவிக்க வருவோரை முதலில் திருஅண்ணாமலைக் கிரிவலம் வர வைத்து, அவர்களுடைய நிழலின் தன்மைகளைப் பொறுத்துத் தக்க பிராயச்சித்தப் பரிகாரங்களை அருளினார் சித்தர்பிரான். பகல் பொழுது போக, அமாவாசை ஒட்டிய திதிகளில் வெளிச்சம் இராது கொடிக் கம்ப நிழல் அமையாத போது இரவெல்லாம் தொடர்ந்து மணிக்கணக்கில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து அமாவாசை கிரிவலம், மற்றும் மாத சிவராத்திரி கிரிவலத் தாத்பர்யங்களைப் பற்றி நன்கு எடுத்துரைத்தார்.


விசேஷமாகச் சில நாட்களில், குறிப்பாக அமாவாசையன்று வரும் பல சூரிய கிரண நாட்களிலும், மழை, பனிக்கால மேக மூட்ட நாட்களிலும் அவருக்கென விசேஷமாகக் கொடிக் கம்ப நிழல் அமைவது கண்டு பலரும் அதிசயித்தனர்.


விண்வெளியில் பரந்திருக்கும் எண்ணற்ற வேத மந்திர சக்திகளில் பொலியும் திருவருட் சக்தியைத் தன் தண்டு ரேகா கிரணங்கள் மூலமாகப் பூமிக்கு இறக்கி பக்தர்கட்கு அருள்பாலிக்கும் முறையே கொடிக் கம்ப இறைச் சூத்திர இலக்கணமாகும். எந்த மரத்தால் கொடி மரம் கட்டப்பட வேண்டும். அதில் எத்துணை வளையங்கள், தர்ப்பைச் சுற்றுகள் அமைய வேண்டும் என்பதற்கான கொடிக் கம்பக் கும்பாபிஷேக இறை நியதியில் வல்லவராய் கொடிக் கம்ப நிழலடிச் சித்தர்  திகழ்ந்தார்.


பல ஆலயங்களிலும் கொடி மரமில்லாத போது சாஸ்திரரோக்தமாய்க் கொடிக்கம்பம் நிறுவிடப் பல அரிய இறைப் பணிகளை ஆற்றினார். பழைய கொடி மரங்களை எவ்வாறு விஸ்ர்ஜனம் செய்தல் வேண்டும் என்பதற்கு இறைநியதிகளை வகுத்துத் தந்தவரும் இவரே! இன்றும் பல ஆலயங்களில் கொடிக்கம்பம் இல்லாது சோபையற்று இருப்பது மிகவும் வேதனைக்குரியதே! இவ்வாலயங்களில் தக்க முறையில் கொடிக்கம்பம் அமைய வேண்டுமெனில் அனைவரும் மாத சிவராத்திரி நாளில் “கொடிக்கம்ப நிழலடிச் சித்தர் பிரானே போற்றி!” எனத் துதித்து அவரை எண்ணி ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியார் அருளிய “ஒளிக்கும் இருளுக்கும்” என்று தொடங்கும் மிகவும் சக்தி வாய்ந்த “கொடிக் கவித் துதியை” ஓதியவாறு கிரிவலம் வந்தால் கொடிமரம் அமைவதற்கான நல்வரங்கள் கிட்டும். வாழ்வில் நாட்டம் இல்லாது ஏனோதானோ என்று வாழ்வோருக்கும் ஆன்மீக ரீதியாக சிரத்தை கிட்டும்.


நிழல் காணா நித்தியச் சித்தர்!


அருணாசல ஆலயக் கொடிக் கம்ப நிழலில் உறைந்திருந்த இச்சித்தர் பிரான் நடக்கும் போது இவருக்கு நிழலே ஏற்படாததற்குக் காரணம் இவருள் பூத்த காந்தவட ஜோதியாகும்! நிழலே ஏற்படாத சித்புருஷர்களுக்கும், மஹான்களுக்கும் “ஜோதிவடச் சித்தர்கள்” என்று பெயர். ஜோதிவடச் சித்தர்களில் தலைசிறந்து விளங்கிய கொடிமர நிழலடிச் சித்தர்பிரான் 1623ஆம் ஆண்டு வாக்கில் திருஅண்ணாமலையில் மானுட ரூபத்தில் வாழ்ந்தவராவார்.


அக்காலச் சித்திரபானு ஆண்டின் மாத சிவராத்திரியின் போது கொடிமர நிழலில் தோன்றிய அருணை ஜோதி ஒன்றால் ஈர்க்கப் பெற்று கிரிவலப் பகுதியில் ஸ்ரீகாயத்ரீ தரிசனப் பகுதியில் ஜீவ சமாதி பூண்டு இவர் ஐக்கியமானார். இவர் பூமியில் மறைந்து ஜீவசமாதி அடைந்தபோது அவ்விடத்தில் ஒரு கொடிமரம் தானாகவே தோன்றி நெடுங்காலம் இருந்து வந்தது. இக்கொடிக் கம்பத்தைத் தரிசிக்கும் பாக்யம் பெற்றோர் ஒரு சிலரே!


ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதி


ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்

றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த்

தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே

குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே


பொருளாம் பொருளேது போதேது கண்ணே

திருளாம் வெளியே திரவே – தருளாளா

நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்

கோபுர வாசற் கொடிவாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்

தாக்கா துணர்வரிய தன்மையனை – நோக்கிப்

பிறித்தறிவு தம்மிற் பிரியாமை தானே

குறிக்குமரு ணல்கக் கொடி.


அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெத்து நாலெழுத்தும்

பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப்

பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்

கூசாமற் காட்டக் கொடி


அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற்

கந்த அறிவை அறிவித்தங் – கிந்தறிவை

மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங்

கூறாமல் கூறக் கொடி.


ஆழ்ந்த பக்தியுடன் அண்ணாமலையைக் கிரிவலம் வந்து “கொடிமர நிழலடிச் சித்தரே போற்றி!” எனத் துதித்து சத்சங்கமாக ‘கொடிக்கவித் துதியை’ ஓதி வர, கொடி மரம் இல்லாத கோயில்களில் கொடிமரம் அமையும் வண்ணமும், ஏனைய இறைப் பணிகள் பூர்த்தியாதலும் இறையருளால் வந்தமையும்.


‘கொடிக்கம்ப நிழலடிச் சித்தரே போற்றி’


தொழில், அலுவலகம், வீட்டில் எனப் பலவாறாக தேக சக்திக்கு மீறி ஓவராக உழைத்து வாழ்வில் இயந்திரமாக ஓடியாடி மனசாந்தமின்றி வாழ்தல், சம்பந்திகளுடன் சச்சரவு கொண்டு திருமண வாழ்வில் அமைதி இழத்தல், கணவன் அல்லது மனைவிக்கு உள்ள நெடுங்கால நோயால் மனஅமைதி இல்லாது இருத்தல், வீடு நிலபுலன்கள் பிறர் கையில் அகப்பட்டுத் திண்டாடுதல், பிறர் சொல்வதைக் கேட்டு நல்வாய்ப்புகளை இழத்தல் போன்றவற்றிற்குத் தீர்வுகளைப் பெற, தைமாத கிரிவலத்தில் திருஅண்ணாமலை கொடிமர நிழலடிச் சித்தரே தூல, சூக்கும, காரண வடிவுகளில் கிரிவலம் வரும் நன்னாளில் “கொடிமர நிழலடிச் சித்தா போற்றி” எனச் சித்தர் பிரானின் சிந்தனையுடனும் “கொடிக்கவி” ஓதியும் திருஅருணாசலத்தைக் கிரிவலம் வர வேண்டும்.


இந்நாளில் சிவராத்திரி தூபம், ஸ்ரீம்ருத்யுஞ்சயர் தூபம் ஏற்றி பஞ்சாட்சர நாமம் ஓதி கிரிவலம் வருதலால் நெடுங்காலமாகத் தீர்வடையாதிருக்கும் அபிலாக்ஷைகள், நல் விருப்பங்கள் மலர்ச்சி பெறும்.


Source http://kulaluravuthiagi.org/Feb2003.htm

அகத்தியர் ஆலய பணிகள் துவக்கம்.

அகத்தியர் ஆலய பணிகள் துவக்கம்.

முன் மண்டபம் 16X16 அடி
கருவறை 8X8 அடி

தற்போது ஆழ்நீர் தண்ணீர் தொட்டி அமைக்க சுமார் 2 லட்சம்.

கழிவறை, குளியலறை அமைக்க 1 லட்சம் தேவை