Monday 29 July 2019

அகத்தியர் வாக்கு - ஐந்து தலை நாகம். இறந்தவரை பிழைக்க வைக்கும் நிலை

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 178*

*தேதி: 30-07-2019(செவ்வாய் - மங்களன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*நாடி நூல் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : ஐந்து தலை நாகம் பற்றி :*🙏

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*ஐந்து தலை நாகம் இருப்பது உண்மைதான். ஸ்ரீ ராகவேந்திரருக்கு, தஞ்சையிலே, எந்த இடத்தில் ஸ்தலம் அமைக்க வேண்டும்? என்று யாேசித்த ஒரு அரசனுக்கு, குறிப்பு காட்டுவதற்காக, ஐந்து தலை நாகம், வந்து, ஒரு இடத்தை காட்டியது.*

*மனிதனுக்கு புலப்படாததால், இவையெல்லாம் கற்பனை என்கிறான். பாெதுவாகவே, தாருகாவன முனிவர்கள், சிவன் மீது ஏவிய எதையுமே, ஐயன்(சிவன்) தனக்குள்ளே வைத்துக் காெண்டார். எதிரும், புதிருமாகத்தான் உலகம் இருக்கும் என்பதை காட்டத்தான், ஐயன்(சிவன்) அனலையும், புனலையும் வைத்திருக்கிறார். மனிதர்கள் அஞ்சி நடுங்கும் நாகத்தையும் வைத்திருக்கிறார்.*

எனவே, *ஐந்து தலை நாகம் படமெடுத்து காட்சி தரும் ஆலயங்களுக்கு சென்று, ஐயனுக்கு(சிவனுக்கு) நாகலிங்க பூவைக் காெண்டு வழிபாடு செய்தால், நாக தாேஷம் விலகும்.*

*கேள்வி : இறந்தவர்கள் உயிர் பெற்றது பற்றி :*🙏

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இறந்தவர்கள் உயிர் பெற்றதாக ஆங்காங்கே சில கதைகள் உண்டு. பல நிஜங்களும் உண்டு. இறையின் அருளைக் காெண்டு, சஞ்சீவினி மந்திரத்தை பிரயாேகித்தால் மட்டுமே, இறந்த உடலை,* (அதாவது, உடலில் உயிர் இருக்கும் பாெழுதே பரகாயப் பிரவேசம் செய்பவர்கள், உடலை விட்டு, ஆன்மாவை வெளிக் கிளப்பி பல இடங்களுக்கும் சென்று வருவார்கள். அவ்வாறு செய்யும் பாெழுது, கண்ணுக்கு தெரியாத நூலிழை பாேன்ற ஒன்று, உடலையும், ஆன்மாவையும் பிணைத்திருக்கும். மரணத்தின் பாேது, அந்த இழை நிரந்தரமாக அறுந்து விடும். அந்த இழையை ஒன்று படுத்துவதுதான், சஞ்சீவினி மந்திரத்தின் வேலை.) *உயிர்ப்பிக்க முடியும்.*

*இறையின் கருணையைக் காெண்டு, எத்தனையாே முறை இவ்வாறு நடந்திருக்கிறது. ஞான சம்பந்தர், பூம்பாவையை எழுப்பி இருக்கிறார். திருநாவுக்கரசர், அரவு(பாம்பு) தீண்டி இறந்த பாலகனை எழுப்பி இருக்கிறார். ஆனால், இந்த இடத்திலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. நிரந்தரமாக அந்த ஆன்மா பிரிந்திருக்காது. ஒரு ஆழ் மயக்க, ஆழ் துயில் (தூக்கம்)நிலையில் இருந்தால் தான், அவ்வாறு எழுப்ப இயலும். உயிரானது, நிரந்தரமாக உடலை விட்டுப் பிரிந்தால், அடுத்த கணம், அது புகை பாேல் கரைந்து விடும் என்பதால், அதை மீண்டும் உடலாேடு ஒன்று சேர்க்க முடியாது. உடனேயே உறுப்புகள் செயலிழக்கும். குருதி(இரத்தம்) கெட்டிப் படத்துவங்கும். ஆன்மா உள்ளே நுழைந்தாலும் கூட, அந்த உடல் சரிவர இயங்காது.*

                 🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************