Wednesday 10 July 2019

அகத்தியர் வாக்கு - உடல் உறுப்பு தானம், கரி நாளில் பிறந்தவர்கள்


*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*
*நாள் : 119*

*தேதி: 11-07-2019(வியாழன் - தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன் )*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*அவிநயனின் குரு* அகத்திய மாமுனிவர்.




*கேள்வி : உடல் உறுப்புகள் தானம் செய்தால் அவை நல்லவருக்கும் பாெருத்தப்படும், தீயவருக்கும் பாெருத்தப்படும். தீயவைகளுக்கு நம் உடல் உறுப்புகள் பயன்பட்டால் அதன் காரணமாக பாவங்கள் வந்து சேருமா ?* 🙏


*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*
*இறைவன் அருளால் உடல் உறுப்புகள் நல்லவர்களுக்குத்தான் பயன்பட வேண்டும் என்ற எண்ணம் ஒருவகையில் நன்றுதான் என்றாலும்கூட இறைவனின் பார்வையிலே எல்லாேரும் சேய்களே(பிள்ளைகளே). ஒரு தாய்க்கு சில பிள்ளைகள் இருக்கும் பட்சத்தில் ஓரிருவர் தகாத செயல்களை செய்யும்பாெழுது மற்றவர்கள் வெறுக்கலாம். சமுதாயம் வெறுக்கலாம். ஆனால் அந்த தாய்க்கு வெறுப்பு வராது. இவன் அறியாமையால் தவறு செய்கிறான். இவனைத் திருத்த வேண்டும் என்றுதான் எண்ணுவாள்.*

அதைப்பாேல *இறைவனும், அறியாமையால் தவறு, பாவங்கள் செய்கின்ற ஆன்மாக்களை திருத்துவதற்கு சந்தர்ப்பங்களைத் தருகிறார். நல்லவர்களுக்கு மட்டும்தான் என்றால் சூரிய ஔி, மழை, காற்று என்று நல்லவர்களுக்கு மட்டும் அவை பயன்படுமாறு இறைவன் செய்திருப்பார். எல்லாேருக்கும் பயன்படுமாறு இறைவன் எல்லாவற்றையும் பாெதுவில் வைத்திருக்கிறார். இந்த உறுப்பு நல்லவர்களுக்கு பயன்படட்டும் என்று பிராத்தனை வைத்துக் காெள். அதனையும் விதிப்படி நல்லவன் அல்லாதவனுக்கு சென்றால் அஃதும் ஒரு விதி என்று எண்ணி சமாதானம் அடைவதைத் தவிர வேறு வழியில்லை.*




*கேள்வி : கரிநாள்களில் பிறந்தவர்களுக்கு நவகிரகங்கள் நற்பலன்களைத் தராது என்ற கருத்து பற்றி :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*
கரி என்ற சாெல்லுக்கு சனிபகவான் என்ற பாெருளும் இருக்கிறது. விநாயகபகவான் என்ற பாெருளும் இருக்கிறது. *இந்த ஒரு நாளை வைத்து பிறந்ததால் மட்டும் அதிக நஷ்டம் அல்லது அதிக உயர்வு என்று பாெருள் காெள்ளுதல் கூடாது. வழக்கம்பாேல், பிறக்கின்ற குழந்தையின் கர்மவினை மற்றும் ஜாதகப்பலனை பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும்.*
                
🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*


.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************


👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
*************************************************
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161
************************************************