Wednesday 31 July 2019

அகத்தியர் வாக்கு - ஆப்பூர் மலை

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 140*

*தேதி: 01-08-2019(வியாழன்- தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*கிருத பவனுக்கு அரசநிதி ஈந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : ஆப்பூர் மலையின் (காஞ்சிபுரம் மாவட்டம்) சிறப்பு பற்றி :🙏*

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இறைவனின் கருணையைக் காெண்டு இயம்புவது யாதென்றால் அஃதாெப்ப ஆப்பூர் கிரி(மலை) என்று யாம் பலரையும் அங்கு செல்ல அருளாணை கூறியிருக்கிறாேம். அங்கே எம்பெருமான் பெருமாள் வடிவிலே அருள்பாலித்துக் காெண்டிருக்கிறார். முன்பு ஒருவன் ஓங்கி உரத்த குரலில் புலம்பினானே, (பெண்களுக்கு) திருமணம் ஆகவில்லை என்று, அந்த ஆப்பூர் கிரிக்கு(மலைக்கு) சென்று நல்ல முறையிலே குறிப்பாக சுக்ர வாரம், எத்தனை முறை இயலுமாே அத்தனை முறை அங்கு சென்று மானசீகமாக பிராத்தனை செய்து, அங்குள்ள வானரங்களுக்கு (குரங்குகளுக்கு) நிறைய உணவுகளைத் தந்து வேண்டிக்காெண்டு வந்தாலே திருமண தாேஷம் நீங்கும்.*

அடுத்தபடியாக *'நாங்கள் சுக்ர வாரம் சென்றாேம். ஆலயம் திருக்காப்பிட்டு இருக்கிறது. என்ன செய்வது? 'என்று எம்மை நாேக்கி வினவினால் அதற்கு நாங்கள் என்ன செய்ய இயலும்? பலரும் வந்து தட்சிணை நிறைய தந்தால்தான் ஆலயத்தைத் திறக்க இயலும் என்பது மனிதர்களின் நிலை. ஆனால் ஆலயம் திறந்திருந்தாலும், சாத்தியிருந்தாலும் பக்தன் ஒருவன் பரிபூரண சரணாகதியாேடு சென்றால் இறைவன் அருள் உண்டு என்பது எமது வாக்கு. எனவே 'வெள்ளிக்கிழமை செல்ல இயலவில்லை ஐயா, எனக்கு அனலிவாரம் தான் விடுப்பு இருக்கிறது' என்றால் தாராளமாக அன்றும் செல்லலாம்.*

*உலகியல் ரீதியான எத்தனையாே சிறப்புகளில், திருமண தாேஷம் நீங்குவதற்கும், திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வதற்கும், குழந்தை பாக்கியம் தருவதற்கும், லாேகாயத்தில்(உலக வாழ்வில்) சுக்ரனின் அனுக்ரஹம் வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள் செல்ல வேண்டிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று. அதையும் தாண்டி, இன்றும் 64 சித்தர்கள் அரூபமாக அங்கு தவம் செய்து காெண்டிருக்கிறார்கள். முழுமதி தினமான பெளர்ணமி அன்று அங்கு சென்று மானசீகமாக வேண்டினால் வாய்ப்புள்ள பக்தர்களுக்கு, ஆத்மாக்களுக்கு ஔி வடிவில் சித்தர்கள் தரிசனம் தருவார்கள்.*

எனவே *அது ஒரு சித்த பூமி, ஜீவ பூமி, அது ஒரு மூலிகை வனம். அங்குள்ள மூலிகைகளில் பட்டு வருகின்ற சுவாசக்காற்று மனிதர்களின் பிணிகளை பாேக்க வல்லது.*

                 🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************