Friday 30 March 2018

சாய் சித்தர் ஓவியம்


அம்மன் அலங்காரம்


சிவ லிங்கத்தில் சூரிய ஒளி


மஹா காளி தீபாராதனை


கபாலீஸ்வரர் தேர்

கபாலீஸ்வரர் தேர். தெளிவான பதிவு. எனது நண்பர் அனுப்பி உள்ளார். நேரில் பார்க்க முடியாதவர்கள் இந்த வீடியோவை பார்த்து, கபாலீஸவரம் தேர், மயிலை மாடவீதியில் அசைந்து அசைந்து வரும் அழகை பாருங்கள். ஓம் நமசிவாய நமஹ. திருச்சிற்றம்பலம்.🙏🙏🙏




Sunday 25 March 2018

பொகளூர் ஜீவ நாடி: ஒரு அன்பரின் அனுபவம்


பொகளூர் ஜீவ நாடி: ஒரு அன்பரின் அனுபவம்
ஊர், பெயர், குறிப்படப்பட மாட்டாது

ஒரு நாள் ஒருவர் நாடி பார்க்க வந்தார். அப்போது அவருக்கு இருதயத்தில் அடைப்பு ஏற்ப்பட்டு உள்ளதாகவும், டாக்டர்கள் அவருக்கு இருதயத்தை அறுத்து திறந்து, சில நிமிடங்கள் நிறுத்தி, பிறகு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறார்கள். அதற்கு ஆங்கிலத்தில் OPEN HEART SURGERY என்று பெயர். ஆனால் அந்த கடினமான அறுவை சிகிச்சை மிகவும் ஆபத்தானதாகும். நோயாளியின் உயிருக்கு நூறு சதவிகதம் உத்தரவு தர இயலாது. ஐம்பது சதவிகிதம் மரணிப்பதற்கும் ஐம்பது சதவிகிதம் பிழைப்பதற்கும் வாய்ப்பு சமமமாக இருக்கும். பிழைத்த பிறகும் கூட பல வகையான கட்டுப்பாடுகள் இருக்கும்.

இந்த நபரை சோதித்த மருத்துவர், இந்த அறுவை சிகிச்சையை இந்த நபருக்கு செய்தால் மரணிப்பதற்கு தான் நிறைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை கண்டு உயிர் பயத்தில் அகத்தியரை நோக்கி வந்து நாடி கேட்கும் போது, யாருக்குமே உரைக்காத ஒரு வித்தியாசமான பரிகார முறையை அகத்தியர் உரைத்தார். இது வரை பல ஆயிரம் நபர்கள் நாடி வழியே அருளுரை கேட்டு சென்றுள்ளனர். ஆனால் ஒருவருக்குக்கூட இந்த மாதிரி பரிகாரம் கூறியதில்லை.

எல்லோருக்கும் குல தெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய சொல்லி, அதில் ஒரு வழிபடும் முறையும் கூறப்படும். இவருக்கும் குல தெய்வ வழிபாடு கூறப்பட்டது. மற்றவர்களுக்கு குல தெய்வ வழிபாடு செய்து, பிறகு மேலும் நான்கு அல்லது ஐந்து கோவில்களுக்கும் சென்று பரிகாரம் செய்யும் முறை கூறப்படும். ஆனால் இவருக்கோ, வெறும் குல தெய்வ வழிபாடு மட்டுமே கூறப்பட்டுள்ளது.

இதில் வித்தியாசம் என்னவென்றால், குல தெய்வ கோவிலில் இரவு ஒன்பது மணிக்கு மேல் சென்று முப்பத்தி இரண்டு அகல் விளக்குகளை ஏற்றவேண்டும் என்பதே அது. யாருக்குமே இரவு ஒன்பது மணிக்கு சென்று வழிபட இதுவரை நாடியில் கூறப்பட்டதில்லை. அகத்தியர் இவ்வாறு கூறியதும் இறைசித்தன் செந்தில் அவர்கள் " தீர்க்க சுமங்கலி பவ" என்று ஆசீர்வதித்து பரிகாரம் செய்ய கூறினார்.

அவர்களது குல தெய்வம் இருப்பதோ ஒரு அடர்ந்த காட்டில். அவரோ உடல் நலம் குன்றிய நிலையில் உள்ளார். செல்ல சொன்னதோ ஒரு அகால நேரத்தில். ஆனால் அகத்தியரின் மேல் முழு நம்பிக்கை கொண்ட அவர், தன் குடும்பத்துடன் மாலையே அங்கு சென்று, அந்த இடத்தை சுத்தப்படுத்தி, ஒன்பது மணி வரை காத்திருந்து, பின்னர் முப்பத்து இரண்டு அகல்களையும் பொறுமையாக ஏற்றினார். அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்ட நிலையில், கோவிலில் இருந்து திரும்புவதற்காக கிளம்பி உள்ளனர். அப்போது கோவில் படியில் இறங்கும் போது, ஒரு படியில் மிக நீண்ட ஒரு நாகம் படுத்து இருந்துள்ளது.

அந்த இதய நோய் கொண்ட அகத்திய பக்தர். கிழே படியில் இறங்கும் போது, வேறு யாரையும் குறி வைக்காமல் கடிக்காமல், இவரை மட்டும் காலில் அழுத்தமாக கொத்தி உள்ளது. அந்த பாம்பு கொத்தியவுடன் ரத்த ஓட்டம் மிகவும் அதிகரித்து, ஆள் கிழே விழுந்துள்ளார். உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அங்கே அவர்கள் பாம்பு கடித்த இடத்தை அறுத்து தைத்து, பிறகு, விஷ முறிவு மருந்துகளை கொடுத்துள்ளனர்.

அப்போது, அவரின் மனைவி இறைசித்தன் செந்திலுக்கு தொலைபேசியில் அழைத்து தகவல் கூறி உள்ளார். "தீர்க்க சுமங்கலி பவ" என்று ஆசீர்வதித்து கூறினீர்களே, ஆனால் இப்போது, நான் சுமங்கலியாகவே இருக்க முடியாது போல தோன்றுகிறதே என்று கூறி உள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இறை சித்தன் அய்யா அவர்கள், அகத்தியரை நம்பினோர் எந்நாளும் கைவிடப்படார், அதனால் கவலை அடைய வேண்டாம். அவர் நிச்சயம் பிழைத்து விடுவார் என்று கூறியுள்ளார்.

பிறகு பத்து தினங்கள் கழித்து வந்த அந்த நபர், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கியுள்ளார். தனக்கு அகத்தியர் ஒரு பெரும் SHOCK TREATMENT கொடுத்து விட்டதாகவும், தற்போது இருதய நோய் முற்றிலும் குணமாகிவிட்டதாகவும், இப்போது தாம் நலமுடன் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். எந்த அறுவை சிகிச்சையும் செய்யாமலே, எந்த மருந்தும் உட்கொள்ளாமலே, சரி ஆகி விட்டதாக கூறி ஆச்சரியப்பட்டுள்ளார். பாம்பு கடித்தவுடன் தந்து உடலில் உள்ள ரத்த ஓட்டத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு, மிக விரைவாக ரத்தம் ஓடியதாக உணர்ந்துள்ளார். ரத்தம் விரைவாக ஓடியதால், ரத்த குழாய்களில் ஏற்பட்ட அடைப்பு, ரத்த ஓட்டத்தின் வேகத்தில் சரி செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இப்போது தான் அனைவருக்கும் அகத்தியர் ஏன் அகால நேரத்தில் காட்டினுள் இருக்கும் குல தெய்வ கோவிலுக்கு சென்று விளக்கு போட சொன்னார் என்று நன்றாக புரிந்தது. பெரும்பாலும் நாகம் தீண்டியவுடன் சில நிமிடங்களில் விஷம் தலைக்கு ஏறி ஆளை கொளல்லும். ஆனால் இந்த நபருக்கோ, அவ்வாறு எதுவும் நிகழவில்லை. இதிலிருந்தே அகத்தியரின் திருவிளையாடலை புரிந்து கொள்ளலாம்.

பிறகு நாடியில் அகத்தியரிடம் மீண்டும் கேட்டு, அவரது ஆயுள் நீடிக்க, திருவிடை மருதூர், மற்றும் பல தலங்கள் சென்று பரிகார முறைப்படி வழிபாடு செய்ய அகத்தியர் அருளுரைத்தார்.

நன்றி. வணக்கம்.

ஓம் அகத்தீசாய நம
குருவே போற்றி. திருச்சிற்றம்பலம்.




Friday 23 March 2018

சிவ பூஜை


Tuesday 13 March 2018

விரதங்களும் அவற்றின் பலன்களும்

விரதங்களும் அவற்றின் பலன்களும்

   
நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.

சோமவார விரதம்:

நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.
பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை
சிறப்பு தகவல் : கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.

பிரதோஷம்:

நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.
தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்
விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.
பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.
சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.

சித்ரா பவுர்ணமி விரதம்:

நாள் : சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்
தெய்வம் : சித்திரகுப்தர்
விரதமுறை : இந்நாளில் இரவில் மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பலன் : மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.

தை அமாவாசை விரதம்:

நாள் : தை அமாவாசை
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
பலன் : முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி
சிறப்பு தகவல் : பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், இன்று அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

கந்தசஷ்டி விரதம்:

நாள் : ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்
தெய்வம் : சுப்பிரமணியர்
விரதமுறை : முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினி, சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.
பலன் : குழந்தைப்பேறு

மங்களவார விரதம்:

நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டித்தல்
தெய்வம் : பைரவர், வீரபத்திரர்
விரதமுறை : பகலில் ஒரு பொழுது சாப்பிடலாம்
பலன் : பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்

உமா மகேஸ்வர விரதம்:

நாள் : கார்த்திகை மாத பவுர்ணமி
தெய்வம் : பார்வதி, பரமசிவன்
விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன் : குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

விநாயக சுக்ரவார விரதம்:

நாள் : வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டித்தல்
தெய்வம் : விநாயகர்
விரதமுறை : பகலில் பட்டினி இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம்.
பலன் : கல்வி அபிவிருத்தி

கல்யாணசுந்தர விரதம்:

நாள் : பங்குனி உத்திரம்
தெய்வம் : கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)
விரதமுறை : இரவில் சாப்பிடலாம்
பலன் : நல்ல வாழ்க்கைத்துணை அமைதல்

சூல விரதம்:

நாள் : தை அமாவாசை
தெய்வம் : சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்
விரதமுறை : இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்
பலன் : விளையாட்டில் திறமை அதிகரிக்கும்

இடப விரதம்:

நாள் : வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி
தெய்வம் : ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்
விரதமுறை : பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.
பலன் : குடும்பத்திற்கு பாதுகாப்பு

சுக்ரவார விரதம்:

நாள் : சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்
தெய்வம் : பார்வதி தேவி
விரதமுறை : பகலில் ஒருபொழுது மட்டும் சாப்பிடலாம்
பலன் : மாங்கல்ய பாக்கியம்

தைப்பூச விரதம்:

நாள் : தை மாத பூச நட்சத்திரம்
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன் : திருமண யோகம்

சிவராத்திரி விரதம்:

நாள் : மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி
தெய்வம் : சிவன்
விரதமுறை : மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம். முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம். இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.
பலன் : நிம்மதியான இறுதிக்காலம்

திருவாதிரை விரதம்:

நாள் : மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்
தெய்வம் : நடராஜர்
விரதமுறை : பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.
பலன் : நடனக்கலையில் சிறக்கலாம்
சிறப்பு தகவல் : காலை 4.30க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை தரிசித்தல்.

கேதார விரதம்:

நாள் : புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும்.
தெய்வம் : கேதாரநாதர்
விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் உடல்நிலை சரியில்லாதவர்கள் உப்பில்லாத உணவு சாப்பிடலாம்.
பலன் : தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர்

விநாயகர் சஷ்டி விரதம்:

நாள் : கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள்
தெய்வம் : விநாயகர்
விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு கடைசிநாள் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும்.
பலன் : சிறந்த வாழ்க்கைதுணை, புத்திசாலியான புத்திரர்கள் பிறத்தல்.

முருகன் சுக்ரவார விரதம்:

நாள் : ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம் : சுப்ரமணியர்
விரதமுறை : பகலில் ஒருபொழுது உணவு, இரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.
பலன் : துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.

கிருத்திகை விரதம்:

நாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம் : சுப்பிரமணியர்
விரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்
பலன் : 16 செல்வமும் கிடைத்தல்

நவராத்திரி விரதம்:

நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை
தெய்வம் : பார்வதிதேவி
விரதமுறை : முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம்.
பலன்  : அனைத்து விதமான சுகங்களும் கிடைக்கும்

Saturday 10 March 2018

தருமம் தலை காக்கும்


இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவுங்களேன்.
தருமம் தலை காக்கும் என்பது உண்மை.

அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தர்மம் தருவதே தருமம். தர்மத்தில் யார் தருகிறார், யார் பெறுகிறார் என்பதே உயிரப்பா. தன்னிலை உணர்ந்து, தானாய் தருவதே தருமம். தருமமோ தர்மம். பிறர் நிலை உணர்ந்து தானாய் தருவதே தருமம். தருமமோ தர்மம். தர்மம் செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாது செய்வதே, தருமம். தர்மத்தால் வரும் பயன் எண்ணா செய்வதே தருமம். பேதங்கள் நோக்காது செய்வதே தருமம். உறவு, நட்பு, பகை நோக்காது செய்வதே தர்மம். அப்பனே தருமம், அன்னைக்கு அன்னையே தருமம். அவர்தம் பாதம் பணிந்து கடமை ஆற்றுதலே தர்மம். அகத்தில் சாந்தம் பொங்க, வதனத்தில் சாந்தம் தவழ செய்வதே தர்மம். அதனை உணர்ந்து, உணர்ந்து உள்ளம் பூரித்து செய்வதே தர்மம். தர்மத்தை தடுக்காதிருப்பதே தர்மம். பற்றில்லா செய்வதே தர்மம். அறப்பண்போடு செய்வதே தர்மம். தன்னலம் விட்டும், பிறர் நலம் பேணும் உயர் தன்மையே தருமம். தன் இனமில்லா, பிற உயிர்களுக்கும் செய்வதே தருமம். தன்னை அறிந்து தனக்குள் இறையை அறிந்து வாழ முயல்வதே தருமம். கர்மம் குறைப்பதே தருமம். சட்டம் உரைப்பதே தருமம். நாட்டம் தவிர்ப்பதே தர்மம். இட்டம் (இஷ்டம்) பலிப்பதே தருமம். இட்டம் (இஷ்டம்) அடைவதே தருமம். இறை சட்டம் மதிப்பதே தருமம். நல்திட்டம் காண்பதே தருமம். மிகு உணர்வினை கட்டுப்படுத்துவதே தர்மம். இலகுவாக வாழ்வை மாற்றித்தருவதே தர்மம். தன் நிலை தாண்டி மேல் உயரவைப்பதே தர்மம். தன் நிலைக்கு மேல் உயர்த்துவதே தர்மம். தன்னையறிய உதவும் தர்மம். தன்னலமில்லா பொதுநலத்தை வளர்ப்பதே, தர்மம். தன்னை, தன்னிலிருந்து வேறாகப் பிரித்துக் காட்டுவது தர்மம். உறவு தாண்டிச் செய்வதே தர்மம். உளைச்சலின்றி செய்வதே தர்மம். உயிர் காக்க உதவுவது தர்மம். உள்ளன்போடு செய்வது தர்மம். தன்னை, தனக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டில் வைப்பதே தர்மம். இதுபோல் தொடர்ந்து இவ்வழியில் வந்து செய்யும் தருமத்தால் குறையும் கருமம். இதனை உணர்ந்தாலும், உணராவிட்டாலும் இவ்வாறு செய்வதே தருமம். தினம் நாளும் செய்வதை வகுத்து, வகுத்து, பிரித்துப் பிரித்து பார்த்து, அதில் உள்ள தன்மையை நுட்பத்தை அறிந்து ஏற்க முயல்வதே தருமம். ஆசிகள்!


ஸ்ரீ ரங்கம் அரங்கநாத பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி, கருடாழ்வார்

ஸ்ரீ ரங்கம் அரங்கநாத பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி, கருடாழ்வார்


ௐ மகா ப்ரத்யங்கிரா தேவி யாகம் 18/03/2018


கோவை மாவட்டம் தோகை மலை, காரமடை அருகில் உள்ள சீளியூர் கிராமத்தில், அமைந்துள்ள பொதிகை முனி அகத்தியர் கோவில் வரும் 18மார்ச்2018 ஞாயிறு அன்று நடைபெறவுள்ள மகா ப்ரத்யங்கிரா யாகம், அகத்தியர் பூசை, சந்தன மகாலிங்கர் தரிசனம், சித்தர் ரிஷிகள் தரிசனம், தெய்வீக காமதேனு தரிசனம் ஆகியவற்றில் கலந்து கொண்டு இறை அருளுக்கு பாத்திரமாகும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
வேண்டுவோருக்கு வேண்டியதை தந்தருள எம் அய்யன் சித்தமாக உள்ளார். வருபவர்கள், மலர்கள், நெய், யாக சமித்துகள் போன்ற எந்த ஒரு பொருளும் கொண்டு வந்தால் பூசைக்கு உபயோகமாக இருக்கும்.

அகத்தியர் ஆசி எல்லாமே ராசி
அகத்தியரை நம்பு, அவர் கொடுப்பார் தெம்பு

நன்றிகள்.
Krishnamurthi hariharan 8056160283










ஓம் முறை விவசாய அதிசயம், வேள்வியின் பெருமை

வெளி நாட்டினர், நமது யாகம், வேள்வி, மந்திரங்கள், பசுஞ்சாணம், ஆகியவற்றை கொண்டு ஒரு அமனுஷ்யமான சக்தியை உருவாக்கி, வறண்ட நிலத்தில் பயிரிட்டு, யாக சாம்பலையே உரமாக்கி, சாம்பல் கலந்த நீர் தெளித்து, பெரும் விவசாயம் செய்துள்ளனர்.

 அவர்கள் அதற்கு மகா ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை ப்ரயோகித்துள்ளார்.

அதற்கு ஓம் விவசாயம் என்று பெயரிட்டுள்ளனர்

நிலத்தடி நீர், அதன் கடினத்தன்மை அகன்று, குடிநீராக மாறும் அதிசயம் வேள்வியின் சாம்பலில் இருந்து கிடைக்கிறது.

சாம்பலை தூய நெய்யில் குழைத்து செடிகளுக்கு காப்பாக இடுகின்றனர். என்னே அதிசயம்.

நாம், இன்னும் நமது நாட்டில், விழிப்புணர்வு இல்லாமல் அதன் மதிப்பு தெரியாமல் உள்ளோம்.

கீழே உள்ள காணொளியை பார்த்தாவது விழிப்புணர்வு பெறுவோமாக.

👇🏼👇🏼Please see the below video without fail; you will find how a family in Australia is running "OM FARMING"  through regular Homa being done both during sunrise & Sunset with the help of of Vedic Mantras including the MAHA MRUTYUNJAYA MANTRA. It is really amazing to see even the borewell water which originally is highly acidic becomes normal water fit for even drinking - the change in the character of water being brought about by sacred Homa Ash. They even treat the diseases of plants, animals as well as Humans with ghee & Sacred Homa Ash. In that farm no manure or pesticide is used; only Homa Ash is used as fertiliser, pesticide etc., What we have left, decrying and disrespecting is not only being respected but applied. This is how our Rishis lived in ancient India.

பொது நாடி 09/03/2018


பொது நாடி 09/03/2018

சில நாட்களாக முகநூலில் சிலர் நமது அகத்தியர் சீவ நாடிக்கு எதிராக பதிவுகளை இட்டுக்கொண்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. நான் யாரிடமும் வாதாடாமால் அவர்களை பொருட்படுத்தாது நமது முகநூலில் இருந்து நீக்கி விட்டேன். பின்னர் இறைசித்தன் அய்யா அவரிடம் அதனை பற்றி எடுத்து உரைத்தேன்., அவரும் இதை எல்லாம் பொருட்படுத்த வேண்டாம், நமது பணி அகத்தியரின் பெருமையை உலகு அறிய செய்வதே. இடையில் வரும் இடையூறுகளை பொருட்படுத்த வேண்டாம் என்று உரைத்தார்.

நேற்று, சிறு மன சஞ்சலத்துடன் அவர் நாடியை பிரித்த போது, அகத்தியரே அவரின் மனதில் உள்ளதை அறிந்து கொண்டு, நாடியில் உரைத்ததாவது கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------
திரை வடிவில் வரும் செய்திகள் எதையுமே செவி கொண்டு கேட்க்காதே

அவனவன் கர்மாவை அவனவன் கையிலேந்தியே தீருவான். கூடிய விரைவிலேயே அவன் அந்த கருமத்தை கையில் ஏந்துவான்.

எண்ணிக்கையில் பதிமூன்று நாட்களுக்குள் அவன் வாழ்வில் ஒரு பெரிய பாதிப்பு வரும்

அவர்களை பற்றிய எண்ணங்களை மனதிலே இருந்து விட்டுவிடு.

ஒருவர் சீவ நாடியை பொய் என்று பதிவிட்டார். அதற்க்கு அகத்தியர் கூறியதாவது,

நீ பூஜை செய்த பொது உனக்கு சிலை வடிவில் வந்துவிழி விழித்து காட்டினேனே, அப்போதும் கூட அறியவில்லையா மூடனே !!

மற்ற எவரும் என்னை அறிய வேண்டும் என்று அவசியமில்லை, நீ என்னை அறிந்தால் அது போதும்.

மனதினை ஒருநிலைப்படுத்து

*************************************************************************

மேலும் சில அமானுஷ்யங்களை அகத்தியர் உரைத்தார், அவை கீழ் வருமாறு :

பொகளூர் அகத்தியர் சீவ நாடி குடிலின் எதிரில் அமைந்துள்ள வன்னி மரத்தின் கீழ் உள்ள விநாயகர் கோவிலைப்பற்றிய தகவல் தான் அது.

வன்னி மரத்தின் கீழே அமைந்துள்ள திட்டுக்குள் சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் "குப்பை சித்தர்" என்ற ஒரு மாபெரும் சித்தர் சீவ சமாதியாகி உள்ளார்" என்ற தகவல் வந்துள்ளது.

இந்த வன்னி மரமே அவர் சீவ சமாதி ஆன பிறகு தானாகவே முளைத்தது. இது யாரும் வந்து நட்டு வைத்த மரம் கிடையாது.

ஒரு யுகம் முன்பாக  (ஒரு யுகம் என்றால் சுமார் ஆயிரம் வருடம்), இந்த இடத்தில் ஒரு பெரிய ஆல் மரம் இருந்தது, அதன் நிழழில் ஒரு பள்ளிகூடம் நடந்தது. இந்த ஆல் மரத்தின் அடியில் தான் குப்பை சித்தன் எப்போதும் அமர்ந்திருப்பான். சுமார் முந்நூறு வருடங்கள் வளர்ந்த அந்த ஆலமரம் ஒரு சமயம் கீழே சாய்ந்தது. பிறகு சில காலம் கழித்து குப்பை சித்தர் அங்கேயே சீவ சமாதி கொண்டார். அவர் சீவ சமாதி கொண்ட அந்த இடத்தில் பூசை இடுவதற்காகவே யாம் உன்னை இந்த ஊருக்கு அழைத்தோம். இந்த சீவ சமாதி உள்ள இடத்தில் காலை, மாலை தீபமிட்டு அர்ச்சித்து வா.

________________________________________________________________

கடவுள் மறுப்பு கொள்கையில் இருப்பவர்கள் பற்றி :

கலியுகத்தில் இதெல்லாம் நடக்குமடா. இதையெல்லாம் நாங்களும் பார்த்துக்கொண்டு தான் உள்ளோம். அவர்களுக்கெல்லாம் வேற்று கிரக வாசிகளால் அழிவு உண்டு.

வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை, சில வருடங்களில் நடக்கும். தற்போது தருமம் சிறிது சாய்ந்துள்ளது, அதர்மம் ஓங்கி உள்ளது. தருமத்தை நிலை நாட்டவே சித்தர்கள் ஆட்சி பூமியில் துவங்கி உள்ளது. அப்போது வேற்று கிரக வாசிகள் வந்து உலகில் உள்ள அனைவரையும் தாக்குவார்கள். அப்போது ஆன்மீகத்தில் உள்ளவர்களும், சித்தர்களை வழிபடுபவர்களையும் நாங்கள் காத்து ரட்சிப்போம். ஏனைய அதர்ம வழியில் செல்பவர்கள் வேற்று கிரக வாசிகளின் தாக்குதலில் பலியாவார்கள்.

இறைவனை நம்பாதவனை, அதர்ம வழியில் செல்பவனது கர்மாவை நாங்கள் கையிலெடுக்க மாட்டோம். அதை பற்றி பேசுவதோ, அவர்களை பெயரை கூறுவதோ கூட ஒரு பாவச்செயல். கடவுள் மறுப்பு கொள்கை யில் இருப்பவனடமிருந்து விலகி இரு. அவர்களை பார்த்தாலே நமக்கு கருமம் வந்து சேரும். அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம். அவர்களுக்கெல்லாம் துர்மரணமே நேரும். ஆன்மீக நாட்டமில்லாமல், அக்கிரும செயல்களில் ஈடுபடுபவர்கள், மாற்றான் மனைவிக்கு ஆசைப்படுபவர்கள், ஏனைய பல பாதக செயல்களை செய்பவர்கள் அனைவருக்குமே வேற்று கிரக வாசிகளால் துர்மரணம் நேருமடா !!

ஏற்கனவே வேற்று கிரக வாசிகள் பாதிப்பு செயலில் தயாராக உள்ளனர். சித்தர்கள் அவர்களைதடுத்துநிறுத்திய வண்ணம் உள்ளனர். சித்தர் ஆட்சி துவங்கி விட்டது. இனிமேல் அவர்களும் பூமியில் வருவார்கள். பெரும் போர் நடக்கும். மிகப்பெரிய அம்மனுஷ்யங்கள் இந்த பூவுலகில் அரங்கேறும். அப்போது தருமம் சிறிது தலை சாயும், அதர்மம் தழைத்தோங்கும். ஆனால் மீண்டும் தருமம் நிலை பெரும். வரும் காலங்களில் பெரிய மாற்றங்கள் நிகழும். அரசியல் மாற்றங்கள் உடனே நிகழும்.

ஆசிகள், சுபம்.
_______________________________________________




பலம் மட்டும் போதுமா?

பலம்  மட்டும் போதுமா?

அழியும் உடல்களை பெற்றுள்ள சாதாரண மானுட ஜீவன்களாகிய நாம், ஏதேதோ அற்ப விஷயங்களை நினைத்து பெருமை கொண்டு,  அதன் பொருட்டு ஆணவம் கொள்கிறோம். ஆனால், இப்பிரபஞ்சத்தின் முன், நாம் தூசுக்கு சமம். இவ்வுலகில் கடவுள் மட்டுமே  பெரியவன்; அவனே அனைத்திற்கும் ஆதாரம் என்று நினைத்தால், மனமானது ஆணவ சேற்றில் அமிழ்ந்து விடாது. சிவனிடம் பெற்ற வரத்தாலும், தன்னுடைய வீரத்தின் பேரில் தான் கொண்ட ஆணவத்தாலும் தேவர்களையும், முனிவர்களையும்  மதிக்காமல் இருந்ததுடன், அவர்களை துன்புறுத்தியும் வந்தான் ராவணன்.

ஒரு சமயம், தன் அமைச்சர் மகோதரனுடன் உலகின் பல இடங்களை சுற்றி வந்தான் ராவணன். அவர்களுடைய பயணம் பாதாள  லோகத்தை அடைந்தது; அங்கே, மகாபலி சக்கரவர்த்தி இருந்தார். மகாபலியைப் பற்றி அறிந்திருந்தாலும், தன் வீரத்தின் பேரில் இருந்த  ஆணவத்தால், நானே ரொம்பப் பெரியவன்; என்னை மிஞ்சிய வீரன் இவ்வுலகில் இல்லை... என்ற எண்ணத்துடன், ராவணன்,  மகாபலியைப் பார்த்து, நான் ராவணன் வந்திருக்கிறேன்... என்றான். மகாபலியோ, ஓ... இலங்கையில் ராவணன் என்ற பெயரில், ஒரு  சிறுவன் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்; அது நீ தானா... சரி... பக்கத்து அறையில், இரண்டு கடுக்கன்கள் இருக்கின்றன, அவற்றை எடுத்து  வா... என்றார். அந்த அறைக்குச் சென்ற ராவணன், நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. கடைசியில் வெறுங்கையோடு திரும்பி, தன்  இயலாமையை ஒப்புக் கொண்டான்.

மகாபலி சிரித்து, ராவணா... அந்த இரண்டு கடுக்கன்களும், என் கொள்ளுத் தாத்தா இரண்ய கசிபுவினுடையவை; பரந்தாமன், நரசிம்ம  அவதாரம் எடுத்து, இரண்ய கசிபுவை தூக்கிப் பிடித்து சுற்றிய போது, இரண்ய கசிபுவின் காதுகளில் இருந்த கடுக்கன்கள் சிதறி  விழுந்தன. அவற்றை எடுத்துப் பத்திரமாக வைத்திருந்தனர் என் முன்னோர். நானும், அவற்றைப் பாதுகாத்து வருகிறேன்; அவற்றைத்  தான், உன்னால் தூக்க முடியவில்லை என்கிறாய்... என்று விவரித்தார். தலை கவிழ்ந்து திரும்பினான் ராவணன். ஆனால், அதிலிருந்து  அவன் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. என்னால் தூக்க முடியாத அந்த கடுக்கன்களை அணிந்து, இரண்ய கசிபு நடமாடியிருக்கிறான்;  அவ்வளவு பெரிய பலசாலியான அவனும் அழிந்து போய் விட்டானே... என்று ராவணன் நினைத்திருந்தால் ராவணன் தவறு  செய்திருப்பானா, அவனுக்கு அழிவு தான் வந்திருக்குமா? கடவுள் ஒருவனுக்கு, திறமையைக் கொடுக்கிறார்; ஆணவமும், திமிரும்  தானாகவே வந்து ஒட்டிக் கொள்கிறது. அழிவைத் தேடிக் கொள்கிறான்.

தங்கத்தை புடம் போடுவதும், வைரத்தை பட்டை தீட்டுவதும் அப்பொருள் மென்மேலும் ஜொலிப்பதற்காகத் தானே தவிர, அதை அழிப்பதற்காக  அல்ல. நம் வாழ்வில் நாம் அடையும் துன்பங்களும், கஷ்டங்களும் கூட நம் மனதை பக்குவப்படுத்த கடவுள் எனும் கொல்லனால் பட்டை தீட்டப் படும் செயல் தான் என்பதை உணர்ந்து விட்டால், மனமானது சாந்தம் அடையும்.
 இதன் மூலம் வருங்கால சந்ததியினர் நம்மை என்றென்றும் வாழ்த்தி வணங்குவர்.

Wednesday 7 March 2018

அகத்தியருக்கு நாடியில் அருளுரைக்க பணம் தேவையா,



அகத்தியருக்கு நாடியில் அருளுரைக்க பணம் தேவையா, ஏன் கொடுக்க வேண்டும். இது இன்றைய கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது.

பதிலை ஆங்கிலத்தில் எழுத துவங்கி விட்டதால் ஆங்கிலத்திலேயே தொடருகிறேன்

By reading common man personal issues in nadi, the nadi reader also is severely affected by the karma. He has to do pooja, meditation and also medication to remedy this measure. Even his wife is affected due to this as she only writes them in the book.

The fees of rs.501 is literally of no help.
That guy does not go to any work like you or me. He has a family and children3 children. He is the only earning member in family. He does not need any money for nadi reading, but he has to pay rent for his house and food, education fee etc. He can very well opt to go back to own business, which he was doing prior to nadi reading. The nadi will then remain idle and of no use to anyone. I was told that other places charges 3 times higher donation for nadi reading. 4 years ago, i went with friend to read kaanda naadi in saibaba colony, coimbatore.batore , not even jeeva nadi and they charged 2500.  One cannot simply read the nadi just like that. They have to decorate flowers, light lamp, do yaagam, abisegam etc on daily basis. Where does the money come for all these things. Does he has any fixed income. Even people earning in several Lacs per month, should be kind enough to support good cause by donating money. But they don't understand the value and they don't donate. People are dumb enough to even participate in the yaagam and after agathiyar requests them in  nadi and advices them to participate in yaagam, they feel they have obligation to participate for their well being and then they come to yaagam after struggle. Even then they do not stay for abisegam and aarathi. Instead, they leave after the yaagam itself.

Money is not e everything in life. Some time ago, agathiyar savedme from a accident when I climbed sathuragiri, i fell down on mountain , but somebody held me upright and ensured that I did not get hurt . It was very dark in the forest at that time with few animals too moving here and there. I could have lost life or could have had permanent disability if had fallen down on the rocks. One year salary loss means more than 12 Lacs for me. I paid only rs.501 and my life was safeguarded. Like this I have so many experiences, while going to papanasam, @parvtha malai, @ Velliyangiri hills etc. Even some of my friends have been saved from accidents. Suddenly people will feel like talking to me, they will call me and ask suggestions, i usually suggest agathiyar peedam. Once they come, they themselves are surprised as to how they came here to a unknown unrelated place like this. Agathiyar tells them through  nadi that he himself called them in order to ensure that they avoid one major accident which was supposed to have happen otherwise.

What I wanted to convey is that, the benefits that comes to us from agathiyar is invaluable in monetary terms. Rs.501 what we they expect from is simply equal to no value at all.

I think, we can simply waive fee for poor people and charge say rs.2000 bugs to people who can afford and earn good money like me. But my gurunathar does not agree to all these things.

Big ailments get cured by taking small medicines prepared by irai siththar. He charges 500 for medicines. People can pay good money for doctor / tests / health issues. People spend several thousands and even then suffer in pain. But they are not willing to pay even Rs.501 for a preventive medicine. Medicine is adviced by agathiyar in the nadi only for few persons who requires preventive medicine. It is not prescribed for all. It is funny that people don't want to take this. People have lost the judging ability to see what is good for them. They dont even have guts to say that, they don't want Medicine. There is no compulsion to buy Medicine. It is an additional  work for the  nadi reader to provide Medicines. He is a qualified siddha medicne diploma holder and certificate is framed in the nadi kudil. Since does not have time, he outsources this small medicine. People come to me and say, why he asks us to take medicine which costs us Rs.500 extra. Is this Medicine worth the money...

All these are unnecessary questions, if you dont believe, don't come, dont take medicines. If everything has to happen by fate, why is god required then.

Thanks

கருட தரிசனம்- பர்வத மலையில்

மூன்றாவது கண் -காணக்கிடைக்காத கருட தரிசனம். அரிய காணொளி




Monday 5 March 2018

பொது நாடி 05March2018

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்புரை, கோவை அன்னூர் வட்டம், பொகளுர் கிராமத்தில் அமைந்துள்ள சித்தர்கள் பீடத்தில், அகத்தியச்சித்தர், மாமுனி, குடமுனி, கும்பமுனி, சித்தர்களின் தலைவராக விளங்கும் எம்பெருமான் அகத்திய மாமுனிவர் பொதுவான  பலன்களை உரைத்து உள்ளார்.

உரைக்கப்பட்டது, 05/03/2018

அவற்றின் சாரம் -

அனைத்து பஞ்ச பூத தலங்களிலும் மிகப்பெரிய அமானுஷ்யம் நடக்கும்

சிறிய அளவில் இயற்க்கை அன்னை சீற்றம் கொண்டு மக்கள் பாதிப்படைவர்.

மேலும் சில பொது நிகழ்வுகளை, பின்னர் மீண்டும் உரைப்பதாக கூறி உள்ளார்.

இறைசித்தன் செந்தில்
நிறுவுனர் - சித்தர்கள் பீடம்
பொகளுர்.




Friday 2 March 2018

சதுரகிரி 2018 இல் திறந்திருக்கும் நாட்கள்

சதுரகிரி செல்லும் அடியார்களின் கனிவான கவனத்திற்கு....
இந்த ஆண்டில் 2018 இல் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படும் நாட்கள் விபரம்....


அகத்தியர் வாக்கு - பஞ்சபூத சாஸ்திர சக்தி தத்துவ முறை

*அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு*
☘☘☘☘☘☘☘☘
*செடி,கொடிகளைக் கொன்றுதான் நாங்கள் இந்த பூமியில் வாழ வேண்டுமா? வேறு மாற்று வழியில்லையா?*

*மனிதனாக பிறந்து விட்டாலே பாவங்கள் செய்துதான் ஆக வேண்டும் என்பதற்கு, இந்த வினாவும் ஒரு உதாரணம். ஆனாலும் ஐம்புலனை சரியாக கட்டுப்படுத்தி. யோக நிஷ்டையில் அமர்ந்து, யோக மார்க்கத்தில் செல்லக்கூடிய ஒரு பாக்கியம் பெற்ற ஆத்மாக்கள் ஐம்பூதங்களில் இருந்து தன் உடலுக்கு தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியும். காட்டிலிருந்தும், தன்னை சுற்றியுள்ள கதிர்வீச்சிலிருந்தும், சூரிய, சந்திர ஒளியிலிருந்தும், மண்ணிலிருந்தும் கூட அந்தந்த பொருளின், புற பாதிப்புகள் ஏதும் இல்லாமல், தன் உடல் சோரா வண்ணம், தேவையான சத்துக்களை கிரஹிக்க முடியும்.  இதற்கு “பஞ்சபூத சாஸ்திர சக்தி தத்துவ முறை"  என்று பெயர்.  இவற்றையெல்லாம் சராசரி மனிதனால் உடனடியாக பின்பற்ற முடியாது.*

*ஓம் அகஸ்திய பகவான் திருவடிகள் போற்றி*

🙏🏽🦉

புரந்தரதாசன் சரித்திரம்

கி.பி. 1480-ல் அவர் ஒன்பது கோடிகளுக்கு அதிபதி.

சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவர் ஒன்பது கோடி சொத்துள்ள மிகப் பெரிய பணக்காரரின் மகன்.

கடைசியில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது கி.பி. 1560-ல் அவர் ஒரு ஓட்டாண்டி.

 நம்ப முடிகிறதா? கணக்குப் போட்டுப் பார்த்தால் இன்று பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாக அவர் குலம் வாழ்ந்திருக்கும்.

ஆனால் இன்று பணமில்லை. மங்காத புகழ் இருக்கி றது. இதெல்லாம் இறைவன் திரு விளையாட்டு.

செல்வம் செல்வம் என்று செருக்குடன் வாழ்ந்த அவரைவிட்டு லட்சுமியானவள் "செல்வோம்... செல்வோம்...' என்று போய்விட்டாள்.

ஆனால் அத்தனை பணமும் போனபின்புதான் அவருக்கு ஞானம் பிறந்தது.

கையில் ஒரு காசுகூட இல்லாத நிலையில்தான் அவர் மகாலட்சுமியை அழைத்தார்.

அதுவும் எப்படி? அற்புத மான ஸ்ரீராகத்தில் அழைத்தார். சிலர் அப்பாடலை மத்யமாவதி ராகத்திலும் பாடுவர்.

அந்தப் பாடலைப் பாடும்போதே கண்களில் நீர் பெருகும்; மனம் மகிழ்ச்சியில் பொங்கிடும்; நெஞ்சில் ஆனந்தம் தாண்டவமாடும்; மெய் சிலிர்க்கும்.

"பாக்யாத லக்ஷ்மி பாரம்மா- நம்மம்ம நீ சௌ
பாக்யாத லக்ஷ்மி பாரம்மா....'

மகாலட்சுமியை அவர் அழைக்கும் அழகே அழகு.

"சலங்கை கட்டிய கால்களினால் மெதுவாக அடியெடுத்து வைத்து, அந்த இனிமையான சலங்கை ஒலியால், உன்னை தஞ்சமடைந்து பூஜை செய்யும் பக்தர்களுக்கு தயிரிலிருந்து வரும் நறுமணமான வெண்ணெயைப்போல் வருவாய் தாயே' என்று கெஞ்சுகிறார் அந்த மகான்.

அவருடைய இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக்.

அவர் வசித்த ஊரின் நாட்டாண்மையாகத் திகழ்ந்தார் அவர். மக்கள் அவரை செல்வத்தின் பொருட்டு நவகோடி நாராயணசெட்டி என்றும் அழைத்தார்கள்.

அவ்வளவு பெரிய தனவந்தரான அவர் ஒரு கருமி. எச்சில் கையால்கூட காக்கையை விரட்ட மாட்டார் என்பது அவருடைய விஷயத்தில் நிஜம்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு பதினெட்டு வயதாகும்போது திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சரஸ்வதி.

அவள் இவருக்கு நேர் எதிரானவள். தான- தர்மம் என்றால் கொள்ளைப் பிரியம். கடவுள் பக்தி மிகுந்தவள்.

அவர் வாழ்ந்த ஊரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டுரங்கனாகக் காட்சியளித்தான்.

 பெரிய கோவில். மக்கள் "பாண்டுரங்கா... பாண்டுரங்கா' என்று பக்திப் பரவசத்தில் நாள்தோறும், வீதி தோறும் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டே போவார்கள்.

ஆனால் ஸ்ரீனிவாச நாயக் கண்டுகொள்ளவே மாட்டார்.

பார்த்தான் பாண்டுரங்கன். ஒரு முதிய ஏழை அந்தணன் உருவில், ஏழு வயதுச் சிறுவனோடு, ஸ்ரீனிவாச நாயக்கின் கடைமுன் வந்து நின்றான் இறைவன்.

""ஐயா... தர்மப் பிரபுவே...''

ஸ்ரீனிவாச நாயக் அந்தப் பிராமணனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. விடுவானா இறைவன்?

""ஐயா... தர்மப் பிரபுவே... சுவாமி...''

""டேய்! யாருடா நீ?'' அதட்டினார் ஸ்ரீனிவாசன்.

""ஐயா... நான் ஓர் ஏழைப் பிராமணன். இவன் என்னுடைய ஒரே மகன். ஏழு வயதாகிறது. உபநயனம் செய்ய வேண்டும். நீங்கள் உதவி செய்தால் இவனுக்கு பூணூல் போடலாம்.... பிரபு... ஏதாவது கொஞ்சம் பணம் கொடுங்கள்.... சாமி...''

""போ... போ... வேறு எங்காவது போய் பிச்சை எடு. என்னிடம் பணமே இல்லை...'' விரட்டினார் ஸ்ரீனிவாச நாயக். எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் நாயக்கின் மனம் இளகவில்லை. ஆனால் பகவான் அவரை விடுவதாயில்லை.

தினந்தோறும் வந்து, நமக்கு படியளப் பவனே அவரிடம் பிச்சை கேட்டான். நாயக்கும் அலுக்காமல் விரட்டினார்.

ஒருநாள், ""உங்களிடம் யாசகம் வாங் காமல் போகமாட்டேன் பிரபு...'' என்று சொல்லி, இறைவன் நாயக்கின் கடை வாசலிலேயே உட்கார்ந்து விட்டான்.

"இது ஏதடா வம்பாப் போச்சே...' என்று அலுத்துக்கொண்ட ஸ்ரீனிவாச நாயக், கல்லாப் பெட்டியிலிருந்து ஒரு செல்லாக் காசை எடுத்து அந்தணன் மேல் தூக்கி எறிந்தார். ""இந்தா, இதை எடுத்துப் போ. இனிமேல் கடைப்பக்கம் வராதே...''

அந்தக் காசைப் பார்த்துவிட்டு, ""பிரபு... இது தேய்ந்து போயிருக்கிறதே... எதற்கும் பிரயோஜனமில்லை. வேறு நல்ல காசு கொடுங்களேன்...'' என்றான் இறைவன்.

ஸ்ரீனிவாச நாயக் யோசித்தார்.

""நல்ல காசா? ஏதாவது பொருள் கொண்டு வந்து என் கடையில் அடமானம் வை... நல்ல காசு தருகிறேன்'' என்றார்.

அந்தணன் அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு நேராக ஸ்ரீனிவாச நாயக்கின் வீட்டிற்குச் சென்றான்.

அங்கே- வெள்ளிக் கிழமையாதலால் துளசி பூஜையை முடித்துவிட்டு ஸ்ரீனிவாச நாயக்கின் மனைவி சரஸ்வதி ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள்.

""பவதி... பிக்ஷாம் தேஹி...''

ஓடோடிச் சென்று வாசலில் பார்த்தாள். பார்த்ததும் காலில் விழுந்து கும்பிட்டாள்.

""என்ன வேண்டும் சுவாமி?''

""அம்மா... நான் ஓர் ஏழை. வயதாகி விட்டது. இவன் என் பையன். இவனுக்கு பூணூல் போட வேண்டும். கையில் பணமில்லை.

ஒரு கஞ்சனைக் கேட்டேன். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் சல்லிக்காசுகூட தரமாட்டேன் என்று என்னை அடிக்காத குறையாகத் துரத்திவிட்டான். அம்மா...

உன்னைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய். ஏதாவது உபகாரம் பண்ணம்மா...''

"பணம் நம்மிடம் கிடையாது. அப்படியே இருந்து, தர்மம் செய்தேன் என்று தெரிந்தால் புருஷன் அடித்தே கொன்றுவிடுவான். இவருக்கு நாம் எப்படி உதவுவது?' என்று யோசித்த சரஸ்வதி முடிவில் தன்னுடைய பரிதாபமான நிலையை விளக்கினாள்.

""அட... நீ என்னம்மா... புருஷன் உனக்குக் கொடுத்ததை தர்மம் செய்தால்தானே ஆபத்து? திருமணத்தின்போது உன் பெற்றோர் போட்ட நகைகள் உன்னுடையதுதானே?

அதைக் கொடுத்தால் அவர் என்ன செய்ய முடியும்?'' என்று அவளை உசுப்பேற்றினான் பிராமணன்.

"அட... உண்மைதானே? நம் வீட்டில் ஏராளமான நகைகளைப் போட்டார்களே எனக்கு? அவை அத்தனையும் என்னுடையவை தானே... அதில் ஒன்றை தர்மம் செய்தால் என்ன?'

சட்டென்று தன்னுடைய வைர மூக்குத்தியைக் கழட்டி அந்த பிராமணனிடம் கொடுத்து விட்டாள் சரஸ்வதி.

அவளை மனதார வாழ்த்தி விட்டு, அந்தச் சிறுவனுடன் நேரே ஸ்ரீனிவாச நாயக்கின் அடகுக் கடைக்கே வந்தான் அந்த பிராமணன்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கோ, மறுபடியும் தொந்தரவு ஆரம்பித்து விட்டதோ என்று தோன்றியது.

""இந்தாரும். இந்த மூக்குத்தியை எடுத்துக் கொண்டு ஏதாவது பணம் கொடும்'' என்று மிரட்டினான் பிராமணன்.

கையில் மூக்குத்தியை வாங்கி பரீட்சித்துப் பார்த்து, "இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே..' என்று யோசித்தார் நாயக்.

சிறிது நேரம் கழித்து, ""ஓய் பிராமணரே... இந்த மூக்குத்தி இங்கேயே இருக்கட்டும். இப்போது என்னிடம் காசு இல்லை. நாளை வந்து பணம் வாங்கிக்கொள்...'' என்றார்.

அதை ஒப்புக்கொண்ட அந்தணன் போய்விட்டான்.

உடனே ஸ்ரீனிவாச நாயக் தன் கடையைப் பூட்டிவிட்டு நேரே வீட்டிற்குப் போனார்.

மனைவியைப் பார்த்தபோது அவள் முகத்தில் மூக்குத்தியைக் காணவில்லை.

""சரஸ்வதி... மூக்குத்தி எங்கே? இன்று வெள்ளிக்கிழமை. முகம் மூளியாய் இருக்கலாமா? போய் மூக்குத்தி போட்டுக் கொண்டுவா...''

சரஸ்வதி வெலவெலத்துப் போனாள். "ஐயய்யோ... இப்போது என்ன செய்வது? அந்தப் பிராமணனுக்கு தானம் கொடுத்தேன் என்றால் கொன்று விடுவாரே?'

கடைசியில் சரஸ்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். "இந்தத் துஷ்டனிடம் மூர்க்கத்தனமாக அடிபடு வதைவிட சாவதேமேல்...' என்ற முடிவோடு, ஒரு பாத்திரத்தில் விஷத்தைக் கலந்து கையில் வைத்துக்கொண்டு துளசி மாடத்தை வலம் வந்தாள்.

""தாயே துளசி... நான் உன்னிடம் வந்து விடுகிறேனம்மா'' என்று சொல்லி விஷத்தைக் குடிக்க முற்படுகையில்-

விஷப் பாத்திரத்தில் ஏதோ விழும் ஓசை கேட்டது. சரஸ்வதி உள்ளே கைவிட்டுப் பார்த்த போது அவளின் மூக்குத்தி இருந்தது. அவளை ஆனந்தமும், வியப்பும் அணைத்துக் கொண்டது. "என்னைக் காப்பாற்றிவிட்டாய் தாயே' என்று கண்களில் நீர் பெருக விழுந்து கும்பிட்டாள்... பிறகு, கணவனிடம் ஓடோடிச் சென்று, ""இந்தாருங்கள் மூக்குத்தி...'' என்று கொடுத்தாள்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. மூக்குத்தியை எடுத்துக்கொண்டு பித்துப் பிடித்தவர்போல மீண்டும் தனது அடகுக் கடைக் குச் சென்றார். கல்லாப் பெட்டியைத் திறந்து, உள்ளே பத்திரமாக வைத்திருந்த மூக்குத்தியைத் தேடினார்.

அங்கே அது இல்லை. கடை முழுவதும் தேடினார். மூக்குத்தி கிடைக்கவில்லை. நாளை அந்த பிராமணன் வந்து, "எனக்கு பணம் வேண்டாம்... என்னுடைய நகையைக் கொடுங் கள்...' என்று கேட்டால் என்ன செய்வது?

மனைவியினுடைய மூக்குத்தியையா அவனுக்குக் கொடுப்பது? பிரமை பிடித்தது அவனுக்கு. கூடவே பயமும் வந்தது.

மறுநாள் காலை!

கடை திறந்த சில வினாடிகளிலேயே அந்தக் கிழவன் சிறுவனோடு வந்து விட்டான்.

""ஐயா... பிரபுவே.. நான் கொடுத்த நகைக்கு பணம் தருவதாகச் சொன்னீர்களே. இன்றும் பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. என்னுடைய நகையைக் கொடுங்கள். வேறு கடையில் அடமானம் வைத்துக் கொள்கிறேன்...'' என்றான்.

ஸ்ரீனிவாச நாயக்கின் நிலை பரிதாபமானது. செருக்குடன் வாழ்ந்தவர் கிழவனிடம் கெஞ்சி னார்.

 ""ஐயா... மன்னித்து விடுங்கள். வெளியிலிருந்து கொஞ்சம் பணம் வரவேண்டியிருக்கிறது. வந்தவுடன் தருகிறேன். முடிந்தால் மாலை வாருங்களேன். கண்டிப்பாக பணம் தருகிறேன்.''

""சரி... சரி... சாயங்காலமும் என்னை ஏமாற்றி விடாதே. நான் வருவேன்...''

கிழவன் போனபின்பு, தன் கடையில் பணிபுரியும் ஒரு வேலையாளை அனுப்பி, அந்தக் கிழவன் எங்கே போகிறான் என்று கண்காணிக்கச் சொன்னார்.

அந்தக் கிழவனைப் பின்தொடர்ந்து சென்ற வேலையாள் சிறிது நேரம் கழித்து பதை பதைப்புடன் கடைக்கு ஓடி வந்தான்.

""என்னடா... ஏன் இப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி ஓடி வருகிறாய்? கிழவன் உன்னை அடையாளம் தெரிந்துகொண்டு மிரட்டினானா?''

""சுவாமி... என்னை மன்னித்துவிடுங்கள்... கிழவர் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி, பாண்டுரங்கன் கோவிலுக்குச் சென்றார்....

நேரே கர்ப்பக் கிரகத்துக்குள் புகுந்தார்... பின்னர் மறைந்து விட்டார்...''

ஸ்ரீனிவாச நாயக் திடுக்கிட்டார். என்ன இது? கடைக்கு வந்த முதியவர் யார்? என்ன அதிசயம் இது.!

கடையைப் பூட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவளும் மூக்குத்தியை அந்தக் கிழவருக்கு தானம் தந்ததையும், அவர் வாழ்த்தி விட்டுப் போனதையும் சொன்னாள்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு புரிந்துவிட்டது. கடவுளே தன்னை பரீட்சித்து விட்டதை உணர்ந்தார்.

அப்போது ஓர் அசரீரி பூஜை அறையிலிருந்து கேட்டது.

"இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு தான தருமம் செய்யாமல் வாழ்கிறாயே? உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்?

 போ... உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு புண்ணியம் தேடிக் கொள்.

இனி உன் பெயர் ஸ்ரீனிவாச நாயக் இல்லை. இந்த ஊரின் பெயரான புரந்தரகட என்கிற பெயரால் இனி உன் பெயர் புரந்தரதாசன்.

 பகவானைப் பாடு. நீ நாரதருடைய அம்சம். ஸ்ரீ கிருஷ்ண தேவராயருடைய குல குருவான ஸ்ரீ வியாசராயரை தஞ்சமடைவாயாக. அவர் உனக்கு குரு உபதேசம் செய்வார்....'

 புரந்தரதாசன்ஸ்ரீ னிவாச நாயக் தன்னுடைய அனைத்து சொத்துகளையும் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்தார்.

ஒரு நொடியில் ஒன்பது கோடி ரூபாய் போயிற்று. ஓட்டாண்டியானார்.

தன் மனைவி, மக்களோடு இறைவன் நாமங்களைப் பாடியவாறே ஹம்பி சென்று ஸ்ரீ வியாசராயரை சரணடைந்தார்.

அவர் ஸ்ரீநிவாச நாயக்கின் பிறப் பின் ரகசியத்தைச் சொல்லி அவருக்கு குரு உபதேசம் செய்தார்.

கால்நடையாகவே பாரத தேசத்தை மூன்று முறை வலம் வந்தார் புரந்தரதாசர்.

 சுமார் நான்கு லட்சம் பாடல்களை இறைவன்மீது பாடினார்.

 நம்முடைய திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு, சிறுவயதில் அவருடைய அன்னை புரந்தரதாசரின் பதங்களையே சொல்லி க்கொடுத்தார்.

ஸ்வர வரிசை என்று சொல்லப்படுகிற "ஸ, ரி, க, ம, ப, த, நீ..' என்கிற ஆரோகண அவரோகணங்களை சங்கீத உலகிற் குத் தந்த பிதாமகர் புரந்தரதாசரே.

அவருடைய பதங்கள் இன்றும் நம் நாட்டுக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன.

அப்படிப்பட்ட மகான் புரந்தர தாசர் கி.பி. 1584-ல் இறைவனோடு இரண்டறக் கலந்தார்.

அகத்தியர் பொது நாடி வாக்கு - 01/03/2018



உலோபமுத்ரா தேவி சமேத அகத்திய சித்தர் துணை

கோவை மேட்டுப்பாளையத்திற்கும்  - அன்னூருக்கும் இடையில் அமைந்துள்ள பொகளூர் கிராமத்தில் திரு இறைசித்தர் அவர்களால் ஸ்தாபிக்கபிட்ட ஓம் ஸ்ரீ அகத்திய சித்தர் பீடம் அமைந்து உள்ளது. அங்கே, இறை அருளால் அகத்தியரின் சீவ நாடி ஓலை சுவடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கே நிதமும் அகத்தியர் சீவ நாடியில் தோன்றி தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு பல வகையான பரிகார முறைகளை கூறி வாழ்வில் எல்லா வளமும் ஏற்பட வழி காட்டியபடி உள்ளார். அங்கே தினமும் குறிப்பிட்ட நேரத்தில் பொது வாக்கு பலன்களை அகத்தியர் உரைத்தபடியே உள்ளார்.

அவ்வாறு அகத்தியர் உரைத்த பொது வாக்கு கிழே கொடுக்கப்பட்டு உள்ளது. இன்று உலகில் பல மானிடர்கள் கடவுளை பற்றி பலவாறாக பொது இடங்களில் கூட்டம் போட்டு, சத் சங்கம் நடத்தி, சொற்ப்பொழிவு ஆற்றி, பல கருத்துகளை முன் வைக்கின்றனர். மேலும் பலர், பல புத்தகங்களை அச்சிட்டு, பணம் வாங்கி கொண்டு விற்பனை செய்கின்றனர். ஆனால் கண்டவர் விண்டில்லை, விண்டவர் கண்டில்லை என்பதற்கு ஏற்ப, மானிடர்கள் கூறும் பலவும் பிறவி குருடன் யானையை வர்ணித்தது போல ஆகும்.

கிழே உள்ள அருள் வாக்கு நேரிடையாக இறை உலகத்தில் மகா சக்தியின் கட்டளைக்கேற்ப பணியாற்றிக்கொண்டு இருக்கும் மகா முனி, சித்தர்கள் தலைவர் அகத்திய மாமுனிவர் நேரிடையாக சீவ நாடி மூலம் மக்களுக்கு உரைத்தது. அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவே இந்த முன்னுரையை கொடுத்து உள்ளேன்.

அகத்தியர் வாக்கு :


விநாயகரை பற்றி

முழுமுதற்க்கடவுளான மண்ணுலகம் விண்ணுலகம் காக்கும் கருணைக்கடல் அவர் திண்ணமாய் உரைப்பார் மாந்தர்கட்கு ஞானம் பெற நவசக்தி துணை வேண்டும். நாள் பலதாய் தோன்றி மக்கட்கு வினைகளை போக்க கட்டளையிட்டு யாங்களை அனுப்பியவர் என் அப்பன்.

அண்டங்களை காக்கும் ஞான பண்டிதனை பற்றி உரைக்கிறேன் கேள் மகனே.

நவ சக்தி எனும்ஆதாரத்தின் முதல் பொருளாய் தோன்றி நாதமாய் நின்ற இவ்வண்டத்தை காக்கும் பொறுப்பேற்றார்.

அண்டங்களில் உயிர்களை நவசக்தி உருபெற செய்து அதனை காக்கும் பொருட்டு பல வடிவங்களில் வந்து ஞானம் சொன்னார்.

ஞானத்தின் வடிவமாக நான்முகனார் தோற்றுவிக்கப்பட்டார்.

ஞானம் புகட்ட ஹரி தோற்றுவிக்கப்பட்டார்.

ஞானத்தின் கரையாக எம்பெருமான் தோற்றுவிக்கப்பட்டார்.

அனைத்தும் முழு முதற்ப்பெருமானே.


பறவைகள் பற்றி :


பரப்ப்ரம்மத்தின் வடிவமே அனைத்தும்.

பறவைகளின் தோற்றம் பெற, ஒரு ஆன்மா, தன் கர்மாவின் நிலையில் பெரும் அதர்ம நிலையில் ஈடுபட்டிருக்கும்.

ஒரு உயிரின் நிலை மற்றும் அதன் உண்மை நிலை அறியாமல் அதனை மரணிக்க செய்து அதில் ஆனந்தம் பெற்று வந்தவர்களாய் இருப்பர்.

அதனால் ஞானம் இல்லாத உயிராய் தோன்றி தன் கர்ம வினை கழிக்கின்றது.


சித்தர்களின் ஞானப்பாடல் பற்றி

சித்தராய் சித்தரெல்லாம் பொதிந்து வைத்தனர், நூல் பலதாய்.
நூலின் உண்மை நிலைஅறியாமல், அதனை கடைப்பிடித்து என்ன பயன்.
பயன் பெறவே கற்று கேட்டு தெளிந்து அறிந்து பயன்படுத்தினால் கிடைக்கும் ஞான மார்க்கம்.



வள்ளலார் பற்றி :

திக்கெட்டு புது மார்கம் படைக்க தோன்றி
மகட்கு ஞான மார்கத்தை காட்டி
ஜீவனின் உண்மை நிலையை உலகிற்கு உணர்த்தினார்
அவர் காட்டிய மார்கம் ஜோதி மார்கம்
ஜோதியின் வடிவமே ஞானத்தின் வடிவம் என உணர்த்தி
இன்று மாந்தர்க்கு அரூபமாய் அருள் தந்து
ஞானம் பெற வழி காட்டி வருகிறார்
************************************************************

ஜோதி மார்கம் பற்றி

வள்ளல் பெருமான் உரைத்தார் ஜோதி
பார் என்று எண்ணி ஜோதியை வெளியில் கண்டு
வீணாய் போனார் பலர்
உண்மையான ஜோதியை உனக்குள் ஏற்றி
அதனை பார்த்து வரவே அவர் அறிவுறுத்தினார்


ஜோதியை ஏற்றுவது எப்படி


உனக்குள் ஜோதியை ஏற்ற மனசஞ்சலங்களை நீக்கி
நிலையான மனதோடு, உன் அறியாமை என்னும் இருட்டின்
நிலை போக்க, உனக்குள் ஜோதி ஏற்ற வேண்டும்


ஜோதியை எவ்வாறு காண்பது, அது எப்படி இருக்கும்


மனம் நிலை பெற்றால் ஜோதி அங்கு நிலை பெரும்
நிலை பெற்ற ஜோதியை கண்டால் அது ஆனந்தமான
அமைதி நிலையை காட்டும்
அச்சோதி இருட்டில் வெளிச்சம் தரும்
சிறு ஒளியாய் காட்சி தரும்
அந்நேரம் நம் மனம் அந்த ஒளியின் புள்ளியில் குவியும்
அந்த இடமே ஆனந்தமான அமைதி தரும் இடம்



அன்னை பற்றி

அருள் அன்னை திருவண்ணாமலையில் தோன்றி
தனது பயணத்தை தொடங்கி
தனது அருபத்தெட்டாம் வயதில் ஞானம் பெற்று நிலை பெற்றார்
நிலையாய் நின்று, காலம் கடந்து தன் கடமையை மாந்தர்க்கு நல்ல மார்கம் காட்ட வெளிப்பட்டார்.
காலம் உருவாகி வருகின்றது. அவர் வெளிப்பட்ட இடத்தில் பெரியதொரு ஆலயம் அமையப்பெற்று, இன்னும் பல சிததர்களுடன் இனைந்து அவ்விடத்தில் பல அதிசியங்களை நிகழ்த்த இருக்கிறார்.
வரும் காலம் தனிலே பெரும் சக்தி பீடமாய் அது திகழும்


சித்தி என்றால் என்ன


சித்தி சித்தி என்று சிதறடித்து, காலம் எல்லாம்
முத்தி முத்தி என்று மூழ்கி போன காலம் எல்லாம்
கண்டவர் கண்டிலர் உண்மை நிலையை
சித்தி பெற சிவமையம் பெற்று சிவத்தின் அருளை பெறுதல்.
சித்தி என்பது சித்தம் ஆதியாகி இறைவனின் அருளை பெற்று
அவன் சக்தியை கொண்டு அவன் ஆசியை கொண்டு
அவன் பணிகளை இவ்வுலகில் ஆற்றுவதே சித்தி.

முக்தி என்றால் என்ன

முக்தியில் மனதை நிறுத்த எண்ணுபவர்கள்
தங்கள் மன ஒரு நிலைப்பாட்டில் நின்று
முழுமையாய் நாம் யார் என்று உணர்ந்து
நம் பணி என்னவென்று உணர்ந்து
இறைவன் பிம்பமாய் விளங்கும்
அனைத்து உயிர்களின் மீது அன்பு செலுத்தி
அந்த அன்பில் இறைவனைக்கண்டு ஆனந்தம் பெற்று
அந்த இறைவனாகவே மாறி விடுவர்.
இறையோடு ஒன்றர கலந்து  விடுவர்.
அதுவே முக்தி.


அகத்தியர் கூறிய அறிவுரை


எண்ணத்தால் எண்ணியது எல்லாம்
எண்ணியவாறே ஈடேறி
எண்ணத்தால் அழிந்து போவதற்கா
கிண்ணத்தில் யாம் உள்ளோம், குடமாய் வந்து பெற்றுக்கொள்ளடா


எண்ணியோருக்கு எண்ணியதை அளிக்க
யாம் சித்தமாய் உள்ளோம்.
எண்ணியது கிட்டினும் கின்னியது எண்ணியது ஆகும்
எண்ணியதை கேட்காதே, எண்ணத்தை குறைக்கக் கேள்


எண்ணியதை குறைத்துக் கொள்ள
இயம்பிடுவோம் கேட்டிரே
கிண்ணத்தில் குருவாய் நின்ற எமை வேண்டி வாசத்தை திருப்பு எமை நோக்கி
வந்தருளுவேன் பைரவராய் உமை காக்க


எடுத்துரைத்தேன் பலவிதமாய் இருப்பினும்
புரியா மாந்தர்காள் செப்பிடுவேன் மறுபடியும்
ஜெகத்திலே மாயை ஒன்று தான்
உன் எண்ணமே உனக்கு மாயை
அறுக்கவே ஒரு நிலைபாட்டில் நில்லு
எமை நோக்கு ஓடோடி வந்திடுவேன் உனை காக்க


காத்திடுவோம் காத்திடுவோம் எமக்கும்
சில வரைமுறைகள் உண்டு
உச்சத்தில் பக்தியில் நில்லு
நிச்சயம் யாம் காத்திடுவோம்


காரணமாய் நடக்கிறது அனைத்தும்
காத்திரு என் மகனே
காலம் கனிந்த பின்'
காரணமாய் யாம் வருவோம்


பாபநாசத்தில் அன்னை சிலை உடைத்தது பற்றி

அன்னையவள் இருக்கும் இடமே
எண்ணியோரின் எண்ணத்தாலே திண்ணமாய் அழிந்து போனார்
அவளே அழித்தாள் அவரின் எண்ணப்படியே
நல்லா காலமது வந்தது
அவளே சீர் பெறுவாள்
நிலைப்பாள், காப்பாள், தருவாள், பெறுவாள் அன்பை
கவலை வேண்டாம், அவளே ஜெனிப்பாள்

மண்ணிற் மறைந்ததெல்லாம்
மதியோடு வெளியுவந்து
கண்ணனோடு ராதை என
செல்வமேவந்து சேர
கவலை எதுவும் வேண்டா வேண்டா
காலமது கரைந்து விட்டது
நற்காலம் தோன்றும்
நேரம் மண்ணாய் மாறும் காலம்
மதியோடு வாழ்ந்து காட்டு
திண்ணமாய் தினமொரு பூசைதனை
நீயும் செய்யு
உன் அன்னை என்னை
தஞ்சம் அடையும் காலம்
மதியோடு செயல்படு
வெற்றி வெற்றி.