Wednesday 31 January 2018

மூடர்கள் செயல்

மூடர்கள் செயல்

பாபங்களை தொலைக்கும் பாப நாசத்தில், அகத்தியர் அருவியின் மேல் அமைந்துள்ள கல்யாண தீர்த்தத்தில் உமையவள் உலோபமுத்திரையுடன் குருமுனி அகத்தியர் கம்பீரமாக வீற்றிருந்தார்.

தற்போது, தாயாரின் சிலையில் அவரது தலை பகுதி சில விஷமிகளால் உடைக்கப்பட்டு உள்ளது.

நெல்லைமாவட்டம் பாபநாசம் அகத்தியர் அருவிக்கு மேல் வீற்றிருக்கும் குருமகரிஷி தம்பதியரின் திருமேனிக்கு நேர்ந்த கொடுமை......

குருநிந்தைக்கு பாபவிமோசனமே கிடையாது..
அவ்வாறிருக்க வார்த்தைகளால் சொல்லவியலாத இப்படுபாதக செயலைசெய்த பாவிகளுக்கு என்னவிமோசனமோ?....
இதேஇந்நேரம் வேறு மதத்தவரின் திருமூர்த்தம் இவ்வாறு சிதைக்கப்பட்டிருந்தால்"""திராவிடதிருட்டுநாய்கள்""கண்டணக்ககுரல்கள் எடுத்து கதறியிருக்கும்...
அன்னையின் சிரம்மீது கரம் வைத்தவன் இந்நேரம் காணாமல் போயிருப்பான்..
மதபேதம்இல்லாமல் இறையுணர்வு பெற்றோார் அனைவரும் இதைப்பகிரவும்...

ஓம்காலசம்ஹாரபைரவாயநமஹ

இன்று 01/02/2018 அன்று அகத்தியர் சீவ நாடியில் அகத்தியரிடமே இந்த சிலை உடைப்பை பற்றி கேட்கப்பட்டது. அகத்தியர் சீவ நாடியில் எழுந்தருளி, இது சில விஷக்கிருமிகளின் நயவஞ்சக செயல் என்று குறிப்பிட்டார். அவர்கள் கடவுள் மறுப்பு இயக்கத்தை சார்ந்தவர்கள் அல்ல, என்றும் உரைத்தார். சிலை கடந்த வெள்ளிக்கிழமை 26Jan18 அன்று அகற்றப்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும், சில பக்தர்கள் ஒன்றினைந்து புதிய சிலை வெகு விரைவில் பிரதிட்டை செய்யப்படும் என்றும் நாடியில் கூறியுள்ளார். ஓம் அகத்தீஸ்வராய நம, நவ கோடி சித்தர்களே போற்றி போற்றி.

தைப்பூச காணொளிகள்



கிரியா யோக சாதகரின் நித்திய சுத்தி முறைகள்

☘சிவ சித்தாந்தம்☘



கிரியா யோக சாதகரின் நித்திய சுத்தி முறைகள்

 சாதாரண மனிதனாக வாழ்ந்தாலும் சரி, யோகியாக வாழ்ந்தாலும் சரி உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானதாகும்.  யோகத்திற்கும், போகத்திற்கும் உடல் பிரதானமாகும். எனவே உடலை மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியமானது என்பதை நினைவில் கொள். மனதின் கழிவுகளை யோக சாதனையின் மூலம் நீக்கும் முயற்சியில் ஈடுபடும் யோகிகளுக்கு அந்த சாதனைக்கு ஒத்துழைக்கும்படியான உடலைப் பெறுவதும் அவசியமாகிறது. எனவே உடலின் கழிவுகளை அன்றாடம் நீக்குவதன் மூலமாகத்தான் யோக சாதனையினை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் சிறப்பாகச் செயல்பட முடியும்.
அவ்வாறு தினமும் உடலின் கழிவுகளை நீக்கி தூய்மையான உடலுடன் யோக சாதனையினை செய்யும் பொருட்டு சில செய்முறைப் பயிற்சிகளை நான் உனக்குக் கூறுகிறேன். இவ்வாறு தினமும் உடலின் கழிவுகளை நீக்கும் முறைக்கு நித்திய சுத்தி என்று பெயர்.  இதை 5 விதமாகப் பிரிக்கலாம். அவை 1. தந்த சுத்தி 2. கப சுத்தி 3. நேத்திர சுத்தி 4. குடல் சுத்தி       5. உடல் சுத்தி என்பனவாகும். உடலின் கழிவுகள் வெளியேற்றப் பட்டுக் கொண்டிருந்தாலும் வெளியேற்றப்படாத கழிவுகள் தங்கும் இடங்களாக வாய், தொண்டையின் மேல்பகுதி, கண், குடல் போன்ற இடங்கள் உள்ளன. இங்கு தங்கும் கழிவுகளே மனித உடலின் ஆரோக்கியத்தைக் கெடுத்து பல நோய்களை உருவாக்கக் காரணமாக அமைகின்றன என்பதை நினைவில் கொள்.
எனவே இந்தக் கழிவுகளை முறைப்படி நீக்குவது மிகவும் அவசியமாகும்.  காயம் என்னும் உடலைப் பற்பல அபூர்வ மூலிகைகளாலும், பா~hண மருந்துகளாலும், மிகவும் உயர்வான பல கற்ப ஒள~தங்களாலும் அழியாத தூய உடலாக மாற்றும் இந்த நித்திய சுத்தி முறைகள் மிகவும் அவசியமாகும்.  இவ்வாறு பல ஆண்டுகள் மிகவும் கடுமையான பல கட்டுப்பாடுகளுடன் நித்திய சுத்தி முறைகளையும், ஒள~த முறைகளையும் கடைப்பிடித்து உடலை சித்தி செய்து கொண்ட பின் இந்த முறைகள் தேவையில்லை.  எனவே அந்நிலையை அடைந்த சித்;தபுரு~ர்களின் நடவடிக்கைகளையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் கண்டு இவர்களெல்லாம் தினமும் இந்த முறைகளை கடைப்பிடிப்பதில்லையே என்ற குழப்பம் உன் மனதில் எழக்கூடாது.  ஏனெனில் அவர்கள் முழுவதும் தூய்மை அடைந்தவர்கள்.
எனவே அந்நிலையினை நீ அடையும் வரையில் கண்டிப்பாக இந்த நித்திய சுத்தி முறைகளை நீ கடைப்பிடித்தே ஆக வேண்டும்.  இனி நித்திய சுத்தி முறைகளை நீ கடைப்பிடிக்கும் போது கையாள வேண்டிய பொருள்களைப்  பற்றித் தெளிவாகக் கூறுகின்றேன்.  முதலில் தந்த சுத்தி என்னும் பல்லினைத் தூய்மை செய்யும் முறையையும் அதற்குரிய பொருள்களையும் கூறுகின்றேன்.  இந்த முறையினை யோகிகள் அல்லாதவர்களும் கடைப்பிடிப்பதால் நலமே கிட்டும்.
தந்த சுத்தி :
 வேப்பம்பட்டை, கருவேலம்பட்டை, நாயுருவி வேர் பட்டை, கடுக்காய்த் தோல், கிராம்பு ஆகிய ஐந்து பொருள்களையும் சம அளவாக எடுத்து வந்து நன்கு வெயிலில் உலர்த்தி இடித்துச் சலித்து சூரணமாகச் செய்து கொள்ளவும்.  இந்த சூரணத்திற்கு நான்கில் ஒரு பங்கு இந்துப்பைப் பொடி செய்து கலந்து வைக்கவும்.  இதுவே தந்தாதி சூரணம் எனப்படும்.  தினமும் அதிகாலையில் இந்தச் சூரணத்தைக் கொண்டு பற்களை நன்கு அழுத்தித் தேய்த்துத் துலக்குவதன் மூலமாக பற்களில் உள்ள கறைகள், கிருமிகள் நீங்கும்.  பற்களில் வசீகரம் உண்டாகும்.  முகவசீகரம் ஏற்படும்.  அத்துடன் பற்களின் மேல் உள்ள ஈறுகள் நன்கு இறுகும்.
தந்த வாய்வு மற்றும் பற்களில் ஏற்படும் இரத்தக்கசிவு முதலியவைகள் நீங்குவதுடன் வாயில் உண்டாகும் வழுவழுப்புத் தன்மையும் மாறும்.  பயிற்சியின் போது அதிக நேரம் அப்பியாசம் செய்வதால் வாயுவானது கபாலத்தை நோக்கி வரும்போது தந்தங்களின் மேலுள்ள ஈறுகளின் உட்புறத்தில் தங்க நேரிடும்.  அவ்வாறு நடக்கும்போது ஈறுகளில் வீக்கமும் உண்டாகும்.  இரத்தக்கசிவு கூட உண்டாகும்.  இதனால் ஈறுகள் விரைவில் கடினத்தன்மையை இழந்து பற்கள் உதிரும்.  எனவே தந்த சுத்தியானது மிகவும் முக்கியமானதாகும். இனி  அடுத்ததாக மிகவும் எளிமையான அதே சமயம் மிகவும் அரிய பலனைக் கொடுக்கும் நேத்திரசுத்தி என்னும் கண்களின் கழிவுகளையும், கண்களின் அழற்சியையும் நீக்கும் அற்புத முறையைக் கூறுகின்றேன். இதை பயிற்சி செய்யும்போது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
நேத்திர சுத்தி:
 முகம் முழுவதும் மூழ்கும் அளவிலான ஒரு மண்பாண்டத்தை  வாய் அகன்றதாக எடுத்துக் கொள்.  இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அந்தப் பாண்டம் முழுவதும் நல்ல சுத்தமான நீரை ஊற்றி மூடி வைத்துவிடு. குhலையில் எழுந்த தந்நத சுத்தி செய்வதற்கு முன்பாக அந்த நீரில் 5 பன்னீர்ப்பூக்கள் அல்லது 5 நந்தியாவட்டம் பூக்களைப் போட்டு வைக்க வேண்டும். தந்த சுத்தி செய்து முடித்தபின்பு அந்த மண்பாண்டத்தில் உள்ள குளிர்ந்த நீhலி முகத்தை நன்கு அமிழ்த்திக் கொண்டு கண்களை நன்கு விரியத் திறந்து கண்விழியினை வலமிருந்து இடமாக 5 முறையும், இடமிருந்து வலமாக 5 முறையும் சுழற்றி பின் 5 முறை இமைகளை மூடி மூடித் திறந்தும் அதன்பின் சற்றுநேரம் கண்களை அசைக்காமல் திறந்தபடியும் வைத்திருக்க வேண்டும். இவ்;வாறு செய்யும்போது சுவாசத்தை நிறுத்த முடியவில்லை என்றால் ஒவ்வொரு முறையும் முகத்தை வெளியில் எடுத்தும் செய்யலாம்.  செய்வதற்கு எளிதாகத் தோன்றினாலும் இதுஈ மிகவும் அரிய பயிற்சியாகும். இவ்வாறு செய்வதால் கண்களில் உண்டாகும் அழுக்குகள், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களின் அழற்சி முதலியவை நீங்கி கண்களின்  உட்புறம் உள்ள மிகவும் நுண்ணிய நரம்புகள் குளிர்ச்சியடைந்து கண்கள் மிகவும் பிரகாசமடைவதுடன் குளிர்ந்து காணப்படும்.
 இதைச் செய்வதால் தீவிரமாக அப்பியாசம் செய்யும் போது கண்களில் ஏற்படும் அதிக எரிச்சல், இமைகள் துடித்தல், கண் இமை ஓரங்களில் ஏற்படும் அதிக வலி ஆகிய உபாதைகள் நீங்கும். மேலும் அன்றாடம் கண்களில் ஏற்படும் கழிவுகள் அகற்றப்படுவதால் கண் மறைவு நீங்கும். இந்த முறையில் பன்னீர் மற்றும் நந்தியாவட்டம் பூக்கள் கிடைக்காவிட்டால் வெறும் தூய்மையான நீரை மட்டும் பயன்படுத்தலாம். இந்த நித்திய சுத்தி முறையில் கூறப்படும்  நேத்திர சுத்தி முறையினை சாதாரணமாக சம்சார வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களும், குழந்தைகள் முதல் முதியோர்கள் வரையில் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் யோக சாதனையை மேற்கொள்பவர்கள் கண்டிப்பான முறையில் இதைச் செய்தாக வேண்டும். கிரியா எனும் யோக விஞ்ஞானத்தின் பயிற்சிகளை மேற்கொள்ளும் நீ இந்த நித்திய சுத்தி முறைகளை தெளிவாக அறிந்து பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே எவ்வித மறைப்பும் இன்றி வெளிப்படையாகக் கூறுகிறேன். கவனமுடன் கேட்டு முறையாகக் கடைப்பிடிப்பாயாக.
 இனி அடுத்ததாக பல பெரிய யோகிகள் கூட அறிந்திராத அதே சமயம் மிகவும் கட்டாயமாகச் செய்ய வேண்டிய கப சுத்தி முறையானது கூறப்படுகிறது. இந்த முறையினை நம்முடைய முன்னோர்களான கிரியா யோக மஹாகுருமார்கள் அனைவரும் பின்பற்றியது மட்டுமின்றி வலியுறுத்தியும் கூறியுள்ளனர்.  ஆதை உனக்குக் கூறுகின்றேன்.

கப சுத்தி:
 மூலிகை கைகளில் பல இருந்தாலும் யோக நிலைக்கு உதவும் ஈர்ப்பு சக்தியுள்ள மூலிகைகள் இவ்வுலகில் உண்டு. இந்த விதமான மூலிகைகளில் தாதுக்களின் தன்மை அதிகமாக இருப்பதுடன் ஐம்பூத அணுவின் ஆற்றலும் அதிக அளவில் இருக்கும். அவ்வாறான மூலிகைகளையே காயகற்ப மூலிகைகள் என்று கூறுவர். இவ்வாறான காயகற்ப மூலிகைகளுள் முதன்மையான இடத்தைப் பெறுவது கரிசலாங்கண்ணி என்னும் தெய்வீக மூலிகையாகும். இந்த மூலிகையைப் பயன்படுத்தாத யோகிகளே இல்;லை என்று கூறலாம். அவ்வளவு அரிய மூலிகையான கரிசலாங்கண்ணி மூலிகையே கிரியா யோக அப்பியாசத்தின் போது தைல முறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இங்கு கூறப்படும் கப சுத்தி முறைக்கும் இந்த மூலிகையே பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளைப் பூ பூக்கும் கரிசலாங்கண்ணி மூலிகையை வேண்டிய அளவு பிடுங்கி வந்து நன்கு தண்ணீரில் கழுவி உரலில் போட்டு இடித்து சாறுபிழிந்து வைத்துக்கொள். அந்தச் சாற்றின் அளவிற்கு சமஅளவு சுத்தமான பசு நெய்யினை எடுத்துக் கொண்டு இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஒரு அடி கனத்த சட்டியில் ஊற்றி அடுப்பில் வைத்து அடிப்பிடிக்காமல் பதமாகக் காய்ச்சவும். நன்கு காய்ந்து நெய் சிவந்து புகையும் நிலையில் படிகாரம் என்னும் சீனிக்காரத்தைப் பொடி செய்து சிறிதணவு அதில்போட்டு சற்றுநேரம் கொதிக்கவிட்டு பின்பு இறக்கி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றி அந்தப் பாண்டத்தின் வாய்க்கு துணியால் வேடுகட்டி வைத்துக் கொள்ளவும். இது அமிர்தத்திற்கு ஒப்பானதாகும்.
 தினமும் காலையில் தந்த சுத்தியை முடித்த பின்பு இந்த கரிசாலை நெய்யை வலதுகைப் பெருவிரலில் தொட்டு வாயினுள் உள்நாக்கின் பின்புறமுள்ள மேல்நோக்கி சுவாசமானது செல்லும் துவாரத்தின் வாயில் நன்கு தடவி விடவும். பின்பு யாரிடமும் பேசாமல் எதுவும் உண்ணாமல் (48 நிமிடங்கள்) இரண்டு நாழிகை நேரம் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து இருக்கவும். இவ்வாறு நெய்யினை மூன்று முறை நெய்யினைத் தடவிக் கொண்டு இரண்டு நாழிகை இருக்கும்போது மனிதனின் சுவாசத்தை தடை செய்து மரணத்தை ஏற்படுத்தும் கபம் என்னும் கோழை என்றும் கூறப்படும் ஊர்த்துவ நாடி எனும் மேல் முகமான மிக மெல்லிய, நுண்ணிய ஜீவனாகிய உயிர் எனும் ஜீவ அணுவின் சுழற்சிக்கு சுவாசமானது செல்லும் பாதையில் அடைத்துக் கொண்டிருக்கும் கோழையானது இந்த மூலிகை நெய்யின் ஆற்றலால் மிக மெதுவாகக் கரைந்து கரைந்து வாய்க்குள் வர ஆரம்பிக்கும். இதை வெளியில் துப்பிவிட வேண்டும். இந்தக் கோழையானது நச்சுத் தன்மை உடையது.
 மனிதன் பிறக்கும்போது உருவான இந்தக் கபமானது இறக்கும் வரையில் தானாக வருவதில்லை அதனால் தான் நாசியின் மேல்புறம் வழியாக நெற்றியின் உட்புறத்தில் உள்ள சுவாச நரம்புகளின் வழியாக சுவாசமானது பிரிந்து ஜீவ அணுவிற்கு சுற்றிக் கொண்டு செல்கிறது. இவ்வாறின்றி சுவாசமானது ஒரே நேர்க்கோட்டில் உடம்பின் மையப்பகுதியில் மேல்நோக்கி இயங்க வேண்டும். இதற்காக சுவாசத்தை இயற்கைக்கு மாறாக மேல்நோக்கி செலுத்தக் கூடாது. அவ்வாறு சிலர் செலுத்தும் போது அந்த சுவாசத்தின் அதிய வெப்பத்தால் இந்த ஊர்த்துவ நாடியிலுள்ள கோழையானது சிறிது இளகி வரும்.  அவ்வாறு சிலர் செலுத்தும் போது அந்த சுவாசத்தின் அதிக வெப்பத்தால் இந்த ஊர்த்துவ நாடியிலுள்ள கோழையானது சிறிது இளகி வரும். அவ்வாறு வருவதை சிலர் அமிர்தம் என்று கூறிக்கொண்டு உட்கொண்டு விடுவார்கள்.
 மனித உடலின் கழிவாகிய கபம் என்னும் கோழையானது எங்காவது அமிர்தமாகுமோ? இவ்வாறு வாசியோகம்; என்னும் பயற்சியைச் செய்யும் சில யோகிகள் தெரியாமல் கோழையை உட்கொள்வதால் உடலில் பல நோய்கள் ஏற்படுவதுடன் வாய்நாற்றம், வயிற்றுவலி போன்ற நோய்களும் உண்டாகும். எனவே இந்த உண்மையான கபசுத்தி முறையினை முறையாக தவறின்றி தினமும் பயிற்சி காலத்தில் நீ கடைப்பிடித்து வரும்போது ஊர்த்துவ நாடியானது சிறிது சிறிதாக அடைப்பு நீங்கி சுத்தமாகும். இவ்வாறு சுத்தமாவதால் சுவாசமானது தானாக மேல்நோக்கும். இதனால் ஜீவ அணுவின் சுழற்சி அதிகமாகி வான் அமிர்தம் எனும் அணுமின் காந்த ஜீவ சக்தியை அதிகமாக உள் ஈர்க்கும். இதுவே உண்மையான வாசியோகமாகும். எனவே இந்த கபசுத்தி முறையினைத் தவறாமல் தினமும் செய்வாயாக.
குடல் சுத்தி:
 யோகப் பயிற்சியாயினும் சரி, சாதாரண வாழ்க்கை யாயினும் சரி வயிறு சுத்தமாக இருப்பது அவசியம்.  வயிற்றில் உள்ள சீரண மண்டலங்களான குடல்களை சுத்தம் செய்யும் முறைக்கு குடல்சுத்தி என்றுபெயர், இது மிகவும் அவசியமானதாகும். குடல் சுத்தமாகி அன்றாடம் உள்ள கழிவுகளை நீக்குவதன் மூலமாக யோக சாதனை சித்தியானது மட்டுமல்லாமல் பல நோய்களும் நீங்கும். இவ்வாறான குடல் சுத்தி முறையினைக் கூறுகின்றேன். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக சுத்தமான தண்ணீர் 2 படி எடுத்து ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் இறக்கி வைத்து அதில் சிறிதளவு சீரகத்தைப் போட்டு நன்கு மூடி வைத்துவிட வேண்டும்.
 அதிகாலையில் எழுந்து மூடியைத் திறந்து பார்க்க அந்தத் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இந்த நீரை ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். காலையில் தந்த சுத்தி செய்தவுடன் இந்த நீரை சிறிது சிறிதாக உட்கொண்டு வயிற்றை எக்கி மறுபடியும் விட்டு உள்புறம் எக்கி மறுபடியும் விடவும். இவ்வாறு 8 முறை செய், இவ்வாறு செய்வதால் வயிற்றிலுள்ள மலங்கள் அலசப்பட்டு மலம் கழிக்கும் உணர்வு உண்டாகும். மலம் கழித்துவிட்டு வந்து மறுபடியும் தண்ணீர் அருந்திவிட்டு இவ்வாறு செய். மறுபடியும் உள்ளே தங்கியுள்ள மலங்கள் வெளியேறும். இவ்;வாறு 4 அல்லது 5 முறைகள் செய்யவும். ஆரம்பத்தில் சற்றுக் கடினமாகவும் சலிப்பாகவும் இருந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலமாக வியத்தகு மாற்றங்கள் உண்டாகும்.
 இதனால் பசியின்மை, வயிற்றுவலி, மலச்சிக்கல், அதனால் உருவாகும் தலைவலி, தோல் நோய்கள், யோக சாதனையால் வயிற்றில் உண்டாகும் அதி உ~;ணம், எரிச்சல், வயிற்றில் வாயு சுழற்சியால் ஏற்படும் உபாதைகள் நீங்கும். உடல் பளபளப்பும் குளிர்ச்சியும் உண்டாகும். மிகவும் அபூர்வமான இந்த முறையினைப் பின்பற்றும் சாதாரணமாக யோக சாதனைகள் செய்யாத மனிதன் கூட 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வான். இந்த முறையினை முறையாகச் செய்யாமல் சிலர்  காலையில் எழுந்தவுடன் கொதிக்க வைக்காத நீரை அருந்துவார்கள். சிலர் அன்னக்கஞ்சியை மோர் சேர்த்து உட்கொள்வார்கள். இதனால் உடலில் உ~;ணம் குறைந்தாலும் உடலில் கபமானது அதிகரிக்கும்.
 இதனால் தலையில் நீரேற்றம், தலைக்கனம், அதிக வியர்வை, சீதளநோய்கள், மூட்டுவலி, பசிமந்தம் ஆகிய நோய்கள் உண்டாகும். எனவே நான் மேலே கூறியுள்ள முறைப்படி செய்வதுதான் உண்மையான குடல் சுத்தி முறையாகும். தந்த சுத்தி செய்தவுடன் நேத்திர சுத்தி செய்து பின்பு குடல் சுத்தி செய். அதன்பின்பு கப சுத்தி செய்வது நன்று. ஏனெனில் மல உபாதைகள் இல்லாமல் இருக்கலாம். எனவே குடல் சுத்தி முறையினை கிரியா யோக சாதனை செய்பவர்கள் கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு முறையாகச் செய். ஏனெனில் யோக சாதனையை மட்டும் போதித்து விட்டு அதற்கு ஏற்ப உடலின் தன்மைகளை மாற்றியமைத்துக் கொள்ளும் வழியினைக்  கூறாமல், கூறத்தெரியாமல் பலர் விட்டுவிடுவதால் தான் அதை அப்பியாசம் செய்பவர்கள் எவ்வளவுதான் கடினமாகவும், விடாமலும் பயிற்சி செய்தாலும் உயர்நிலையினை அடையாமல் அடைய முடியாமல் ஏமாந்து விடுகிறார்கள்.
 மேலும் பயிற்சியின் விளைவால் உடலில் ஏற்படும் அதிக உ~;ணம், வாயுவின் சுழற்சி ஆகியவைகளைத் தாங்க முடியாமல் அவர்கள் பல உபாதைகளுக்கும் ஆளாகிறார்கள். எனவேதான் நான் உனக்கு நித்திய சுத்தி முறைகளைத் தெளிவாகக் கூறினேன். இனி உடல் சுத்தி முறையைக் கூறுகின்றேன். உடலில் உள்ள கழிவுகள் ஒவ்வொரு உரோமக் கால்கள் வழியாகவும் வெளியேறும். அவ்வாறு வெளியேறும் கழிவுகளை அன்றாடம் தூய்மையாக நீக்குவது மிகவும் அவசியமானதாகும். இவ்விடத்தில் உன் மனதில் ஒரு சந்தேகம் எழலாம். பல பெரும் யோகிகள் பல ஆண்டுகள் குளிக்காமல் இருக்கிறார்களே என்று, உண்மைதான், அவர்கள் தங்கள் உடலை வெகுகாலங்;கள் அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு காயசித்தி செய்து கொண்டவர்களாவார்கள்.
 ஆவ்வாறு காயசித்தி பெறுவதற்காக பல உயர்வான தெய்வீக சக்தியுள்ள மூலிகைகளையும், பா~hணங்களையும், உலோகங்களையும் இன்னும் உயர்வான பல தாதுப் பொருட்களை யெல்லாம் பல வேதியல் மாற்றங்களுக்கு உட்படுத்தி மிகவும் அபூர்வமான கல்ப ஒள~தங்களைச் செய்து அதை மிகவும் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து உட்கொண்டு உடலளவில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து உடலை சித்தி செய்து கொண்டவர்கள் ஆவார்கள்.
 இவ்வாறான காயசித்தி முறையின் அபூர்வமான ஆற்றலால் தான் அவ்வாறான மாபெரும் யோகிகளின் மலம், சிறுநீர், வியர்வை, எச்சில், உடல் அழுக்குகள் போன்றவைகள் கூட அவர்கள் உட்கொண்ட பல அரிய கல்ப ஒள~தங்களின் சக்தியைப் பெற்றுள்ளதால் அவைகள் பட்ட உலோகங்கள் எல்லாம் களிம்புகள் நீங்கி அவர்களின் உடலைப் போலவே தங்கமாகவே மாறுகின்றன. இவ்வாறான நிலையை அடைந்த யோகிகளைத் தவிர ஆரம்ப நிலையில் காயசித்தியினைக் கடைப்பிடிக்கும் முன்பாக அடிப்படையான யோக சாதனைகளைச் செய்துவரும் யோகியானவர் கண்டிப்பான முறையில் கீழ்க்காணும் முறைப்படி யோகியருக்கு உண்டான உடல் சுத்தியினைச் செய்தாக வேண்டும். இனி மிகவும் அருமையான உடல் சுத்தி முறையினைக் கூறுகின்றேன்.
உடல் சுத்தி:
 உடல் சித்தி முறைக்குத் தேவையான பொருள்களைக் கூறுகின்றேன். பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், வங்காளப் பச்சை, வசம்பு ஆகிய 4 பொருள்களையும் சம அளவாக எடுத்துக் கொள்ளவும். இந்த நான்கு பொருள்களின் மொத்த எடைக்கு 10 பங்கு குட்டி விளா இலையையும் அதே அளவு சீயக்காய் காயையும் எடுத்துக் கொள்ளவும். இந்தப் பொருள்கள் அனைத்தையும் வெயிலில் நன்கு உலர்த்தவும். பின்பு நன்கு இடித்துச் சலித்து சூரணமாகச் செய்து கொள்ளவும் (மி~pனிலும் அரைக்கலாம்). காலையில் எழுந்தவுடன் இந்த சூரணத்தில் சிறிதளவு எடு;த்து ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வைக்கவும். தந்த சுத்தி, நேத்திர சுத்தி, குடல் சுத்தி, கப சுத்தி ஆகிய நான்கையும் முடித்தவுடன் இளம் சுடுநீரில் இந்தப் பொடியைத் தேய்த்துக் குளிக்கவும். இதனால் உன் உடலின் மயிர்க்கால்களில் தங்கியுள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றம், கற்றாழை நாற்றம், உடல் இடுக்குகளின் உப்புப் படிதல், தோலின் வறட்சி, தோல் நோய்கள் நீக்குவதுடன் தோல் பளபளப்போடு வாசனையும் இருக்கும்.
 இவ்வாறு முறையாக நித்ய சுத்தியை ஒரு யோகியானவர் அவருடைய யோக சாதனை செய்துவரும் காலங்களில் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் எவ்விதமான உடல் உபாதைகளும் இன்றி அவருடைய யோக சாதனையானது நடைபெறும்.  எனவே நீ இந்த நித்திய சுத்தி முறைகளை முறையாகவும், விடாமலும் கடைப்பிடிப்பாயாக. அப்போது தான் உடலுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படாது. இவ்வாறு நித்திய சுத்தி முறைகளை முறையாகச் செய்து வந்தாலும் உன்னுடைய தீவிரமான பயிற்சியின் விளைவாக உதிரமானது விரைவாக ஓடுவதன் காரணமாகவும், உடலின் நீர்த் தன்மையானது வியர்வையாக அதிகம் வெளியேறுவதன் காhரணமாகவும் உடலில் அதிக உ~;ணம் ஏற்பட்டு உடல் வளர்ச்சியடையவும் ஒவ்வொரு இணைப்புகளிலும் இடுப்புப் பகுதிகளிலும் உள்ள ஜவ்வு மண்டலங்கள் வறட்சியடைந்து வலி ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே இவ்வாறு ஏற்படாமல் இருக்க மாதத்தில் இரண்டு முறை அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை ‘பட்சசுத்தி’ எனும் முறையைக் கண்டிப்பாகக்  கடைப்பிடிக்க வேண்டும். அதையும் தெளிவாகக் கூறுகிறேன்.
பட்ச சுத்தி:
 இந்த பட்ச சுத்தி முறைக்கு உண்டான பொருள்களை முதலில் கூறுகின்றேன். மிளகு, மஞ்சள், நெல்லிவத்தல், கடுக்காய் தோல், வேப்பமுத்து ஆகிய 5 பொருள்களையும் வகைக்கு கால்பலம் எடுத்து சுத்தமான பசும்பால் விட்டு விழுதுபோல் அரைத்து தலையிலும், உடலிலும் நன்கு அழுத்தித் தேய்த்துக் கொண்டு 1 ஜாமம் ஊறிய பின்பு சுடுநீரில் தலை முழுக வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்வதால் உடல் உ~;ணம், தலைச்சூடு, கண் புகைச்சல், கண் எரிச்சல் ஆகிய நோய்கள் வராது, உடல், கண்கள் குளிர்ந்து காணப்படும். இந்த பட்ச சுத்தியால் உடல் உ~;ணமானது சமனப்படுவதுடன் உடலின் மயிர்க்கால்கள் தங்கியிருக்கும் மெழுகு போன்ற கழிவுகள் நீங்கும். இதற்கு பஞ்ச கல்ப ஸ்நானம் என்று பெயர்.
இவ்வாறு முறைப்படி உடலை தூய்மையாக்கிக் கொண்டு தீவிரமாக யோகசாதனையை  செய்யும்போது உன் உடலில் படிப்படியாக பல மாற்றங்களை நீ உணர்வாய், தூக்கம், சோம்பல், உடல்வலி போன்ற உபாதைகள் நீங்கி உடல் வலுவும் ஆண்மை சக்தியும் அதிகரிக்கும். உயிர் தத்துவமாகிய விந்துவின் தன்மை அதிகரிப்பதால் காம உணர்வானது கூடும் அந்த மாய்கையில் சென்றுவிடாமல் கிரியா என்னும் யோக விஞ்ஞானத்தின் அதி அற்புத ஆற்றல்களை நினைவில் கொண்டு பெருவாழ்வு நிலையில் உயர் தத்துவத்தை மனதில் நிறுத்தி செயல்படு. ஏனெனில் எவ்வளவு நூல்களைப் படித்தாலும் நேரடியாக இதுபோன்ற தெளிவான உன் கருவின் வழிமுறைகளை யாரும் கூறமாட்டார்கள். பல தத்துவங்களையும், பல யோக சாதனை முறைகளையும் கூறுவார்களே அன்றி அனுபவ பூர்வமாக படிப்படியாக முன்னேறும் செய்முறைகளை யாரும் கூறமாட்டார்கள்.
கிரியா யோகத்தின் 16 நிலைகள்
1. பார்வையை நிலைப்படுத்தல்
2. மனதை நிலைப்படுத்தல்
3. சுவாசத்தை நிலைப்படுத்தல்
4. உடல் இயக்கங்களை நிலைப்படுத்தல்
5. பிரபஞ்ச ஆற்றலை உணர்தல்
6. உடலில் அணு, மின், காந்த ஆற்றலை அறிதல்
7. உடலில் அணு, மின், காந்த ஆற்றலை அதிகப்படுத்தல்
8. உடலின் ஆற்றலை பிரபஞ்ச ஆற்றலுடன் இணைத்தல்
9. பிரபஞ்ச ஆற்றலை உள்வாங்கி நிறுத்தல்
10. உடல்சித்தி எனும் காயசித்தி செய்தல்
11. உயிராகிய ஜீவ அணுவை உடலில் இருந்து பிரித்து அறிதல்
12. அங்கப் பிரவேச சித்தியடைதல்
13. ஆகாயப் பிரவேச சித்தியடைதல்
14. உடல் அணுக்களில் அணு, மின், காந்த சக்தியை உயர்த்தி உடலின் பெண்மைத் தன்மையை நீக்குதல்
15. உடலை ஒளி உடலாக மாற்றி தூய உடலாக்குதல்
16. பிரபஞ்ச சக்தியுடன் இரண்டறக் கலந்து அனைத்தையும் அறிந்து கொண்டு சமாதி நிலையில் இருத்தல். இதுவே சாயுச்ய நிலையாகும்.

யோகா வேதம் புத்தகத்திலிருந்து



☘சிவ சித்தாந்தம்☘

பஞ்ச ஆரண்ய தலங்கள்!

ஒரே நாளில் ஐந்து பூஜைகள், ஐந்து தலங்கள்! வாழ்வை வளமாக்கும் பஞ்ச ஆரண்ய தலங்கள்!

ஒரே நாளில் ஐந்து ஆலயங்களைத் தரிசித்தால், மகா புண்ணியம் என்கீறார்கள் பக்தர்கள். தஞ்சாவூரைச் சுற்றியுள்ள இந்தத் தலங்களை ஒருநாள்... ஒரேநாளில்... தரிசிக்கலாம். அப்படித் தரிசித்து எல்லா வளங்களையும் பெறுங்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

உஷத் கால பூஜை எனப்படும் அதிகாலையில் நடைபெறும் பூஜை தொடங்கி அர்த்தஜாம பூஜை வரை தரிசிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன பஞ்ச ஆரண்ய திருத்தலங்கள். இந்தத் தலங்களுக்குச் சென்று தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும் என்பது ஐதீகம்!

திருக்கருகாவூர், திரு அவளிவநல்லூர், அரித்துவார மங்கலம், ஆலங்குடி, திருக்கொள்ளம்புதூர் என ஐந்து தலங்களை, பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று போற்று கிறார்கள். ஆரண்யம் என்றால் வனம். ஒருகாலத்தில் வனமாகத் திகழ்ந்து, இன்றைக்கு கிராமங்களாகவும் ஊர்களாகவும் அமைந்திருக்கின்றன, இந்தத் திருத்தலங்கள்.

தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பஞ்ச ஆரண்யத் தலங்களைப் பார்ப்போமா?

தஞ்சாவூரில் இருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கருகாவூர். இங்கே சிவபெருமானின் திருநாமம் ஸ்ரீமுல்லைவனநாதர். அம்பாளின் பெயர் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை! கர்ப்பத்தைக் காத்தருளும் அம்பிகை குடிகொண்டிருக்கும் அற்புதமான கோயில்.

குழந்தைப் பேறு, சுகப் பிரசவம் வேண்டி வழிபடும் அருமையான திருத்தலம். இங்கே காலை 5.30 முதல் 6 மணிக்குள் உஷத் காலம் எனப்படும் அதிகாலை பூஜையை முதலில் தரிசிக்க வேண்டும்!

இதையடுத்து திருக்கருகாவூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள திரு அவளிவநல்லூரை அடையலாம். அங்கே ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீசாட்சி நாதர் ஆலயம் அமைந்து உள்ளது.

இந்தத் தலத்துக்கு வந்து சிவபார்வதியை வேண்டிக் கொண்டால், குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வார்கள்! அமைதியே உருவான அழகிய கோயில். அம்பாள், கொள்ளை அழகுடன் கருணைத் ததும்பக் காட்சி தருகிறாள்.

காலை 8.30 முதல் 9.30 மணி வரை காலைவேளை பூஜை சிறப்புற நடைபெறும். அந்த நேரத்தில் இங்கு வந்து தரிசிப்பது சிறப்பு!

அதன் பிறகு அப்படியே அருகில் உள்ள அரித்து வார மங்கலம் தலத்தை வந்தடையலாம். இங்கே ஸ்ரீ அலங்காரநாயகி சமேத ஸ்ரீபாதாளேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அற்புதமான ஆலயம்! புராதனப் பெருமைகள் கொண்ட திருக்கோயில் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

அரித்துவாரமங்கலம் தலத்துக்கு வந்து, ஸ்ரீ பாதா ளேஸ்வரரையும் ஸ்ரீஅலங்காரநாயகியையும் கண்ணாரத் தரிசித்து, மனதாரத் வேண்டிக் கொண்டால், நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்!

இங்கே, 11 முதல் 12.30 மணி வரை உச்சிக் கால பூஜை நடைபெறும். அப்போது மூன்றாவதாக இந்தத் தலத்தை தரிசித்து விடலாம்!

இதையடுத்து, திருஇரும்பூளை எனப்படும் ஆலங்குடி திருத்தலத்துக்கு வந்துவிடலாம். பேருந்து வசதிகள் நிறையவே உண்டு. இங்கே ஸ்வாமியின் திருநாமம் & ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர். அம்பாள்  ஸ்ரீ ஏலவார்குழலி.

நீங்கள் நினைத்தது சரிதான். குரு தட்சிணாமூர்த்தி, கோயில் கொண்டிருக்கும் குரு ஸ்தலம்தான் இது. குருவின் ஆதிக்கம் நிறைந்த திருத்தலம். இந்தத் தலத்தின் முக்கியமான சிறப்பு... குரு தட்சிணா மூர்த்தி அழகுற கோயில் கொண்டிருக்கிறார்! இங்கு வந்து வேண்டிக் கொண்டால், குரு பலம் கிடைக்கும். கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கலாம்!

மாலை 5.30 மணிமுதல் 6 மணிவரை சந்தியா கால பூஜையின் போது ஆலங்குடி தலத்தில் வழிபட்டு விடலாம்.

பிறகு ஐந்தாவதாக, அப்படியே அருகில் உள்ள திருக்கொள்ளம்புதூர் தலத்தை அடையலாம். இங்கே சிவபெருமானின் திருநாமம் & ஸ்ரீ வில்வாரண்யே ஸ்வரர். அம்பாளின் பெயர் ஸ்ரீசௌந்தரநாயகி.

சித்த பிரமை உள்ளவர்கள், மனக்குழப்பத்தில் தவிப்பவர்கள், எப்போதும் பயத்துடன், எதற்கெடுத்தா லும் பயத்துடன் கலங்குபவர்கள் இங்கு வந்து வழி பட்டால் மனதில் தெளிவு பிறக்கும், மனநோய் நீங்கும் என்பது ஐதீகம்! மனோபலத்தைத் தந்தருளும் அற்புத மான திருத்தலம் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

இரவு 7.30 மணி முதல் 8.30 மணிவரை அர்த்தஜாம பூஜை நடைபெறும். பஞ்ச ஆரண்ய தலங்களில் ஐந்தாவதாக இந்தத் தலத்தை தரிசித்து, நிறைவு செய்யலாம்!

இந்த ஐந்து திருத்தலங்களையும் ஒரே நாளில் தரிசித்துப் பிரார்த்தனை செய்து கொண்டால், வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறலாம். சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம் என்பது ஐதீகம்!

கிரகணத்தின்போது நமக்கு என்ன நடக்கிறது?*

கிரகணத்தின்போது நமக்கு என்ன நடக்கிறது?


ஒரு

 பௌர்ணமியிலிருந்து

 அடுத்த பௌர்ணமி வரையுள்ள 28 நாட்களில்,

சந்திரன்,

முழு நிலவிலிருந்து தேய்ந்து, அமாவசையாகி,

 மீண்டும் மெதுமெதுவாய் வளர்ந்து பௌர்ணமி நிலவாகும் வரை,

 ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அளவில், வடிவில் இருக்கும்.

அந்த 28 முகங்களையும் ஒரு முழு சந்திர கிரகணத்தின் போது,

 சுமார் மூன்றே மணி நேரத்தில்,
நாம் பார்த்துவிட முடியும்.

 அதாவது,

ஒரு மாத காலத்தில் நடப்பது
 எல்லாம் சில மணி நேரத்தில் சூட்சுமமாக நடக்கிறது.

 சக்திரீதியாகப் பார்த்தால்,
ஒரு மாத காலத்தை நாம் வெறும் 3 மணி நேரத்தில் கடந்து விடுகிறோம்.

 இந்த அடிப்படையில் தான் பூமி,
சந்திர கிரகணத்தை, நிலவின்
முழு சுற்று என்று தவறாக எடுத்துக் கொள்கிறது.

 கிரகணத்திற்கு
முன் ஊட்டச்சத்து நிறைந்த உணவாய் இருப்பது,

 கிரகணத்திற்குப் பின் விஷம்போல் ஆகிவிடும்.

இதன் தாக்கம் உலகின் அனைத்துப் பொருட்களின் மீதும் இருக்கும்.

அதிலும்,

தன் இயற்கையான இயல்பில் இருந்து மாறியிருக்கும் பொருட்கள்,

 அதிவிரைவாக சிதைய ஆரம்பித்து விடும்.

 கிரகண நேரத்தில் பழங்களிலும்,

 காய்களிலும் அதிக மாற்றம் இல்லாவிட்டாலும், சமைத்த உணவு கிரகணத்திற்கு முன்பும் பின்பும் மிக வித்தியாசமாக இருக்கிறது.

 கிரகணத்திற்கு
முன் ஊட்டச்சத்து நிறைந்த உணவாய் இருப்பது,

 கிரகணத்திற்குப் பின் விஷம்போல் ஆகிவிடும்.

விஷம் என்றால்…

அந்த உணவை உண்டால் இறந்திடுவோமா?

இது அவ்வாறல்ல.

 விஷம் வெவ்வேறு தீவிரத்தில் வேலை செய்யும்.

 அடிப்படையாகப் பார்த்தால், விஷம் என்பது
உங்கள் விழிப்புணர்வைக் குறைப்பது.

அது சிறிதளவே உங்கள் விழிப்புணர்வைக் குறைத்தது என்றால், நீங்கள் மந்தமாக இருப்பீர்கள்.

இன்னும் அதிகமாகக் குறைத்தால்,
 தூக்கத்தில் ஆழ்வீர்கள்.

 அதுவே மொத்தமாய் உங்கள் விழிப்புணர்வை எடுத்துவிட்டது

என்றால்,

நீங்கள் இறந்தே விடுவீர்கள். மந்தம், தூக்கம்,

மரணம்…

இவை அடுத்தடுத்த படிநிலைகள் தானே!

 அதனால்,

 கிரகணத்தின்போது, மற்ற நாட்களைவிட சமைத்த உணவு சக்தி அளவில்,

 அதிவிரைவாக சிதைவுறும்.

 இது உணவிற்கு மட்டுமல்ல,

உங்கள் உடலிற்கும், உலகில் உள்ள ஒவ்வொன்றிற்குமே இது நடக்கிறது.

 அதிலும்,

அந்த உணவு உங்கள் உடலில் இருந்தால், இதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.

 தோராயமாக 2 மணிநேரம் அந்த உணவு உடலில் இருந்தால்,

உங்கள் சக்தி கிட்டத்தட்ட 28 நாட்கள் மூப்படைகிறது.

 அதாவது

சக்தியளவில் உங்கள் வாழ்வில் 27 நாட்கள் சூட்சுமமாகக் குறைகிறது.

 இது வெறும் உணவு பற்றியல்ல. இது உங்களைப் பற்றியும் தான்.

அப்படியென்றால், கிரகணத்தின்போது, பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உண்ணலாமா?

கூடாது.


அவற்றை உண்டவுடனேயே உங்கள் செரிமானம் செயல்படத் துவங்குவதால்,


 அது பாதி சமைத்த உணவுபோல் ஆகிடும்.

 அதனால்,

சமைத்த உணவின் நிலைதான் அதற்கும் ஏற்படும்.

இது வெறும் உணவு பற்றியல்ல.

இது உங்களைப் பற்றியும் தான்.

 உங்களின் இயல்பான நிலையை விட்டு நீங்கள் எந்த அளவிற்கு விலகி இருக்கிறீர்களோ,

அந்த அளவிற்கு இதன் தாக்கம் உங்கள் மீது அதிகமாக இருக்கும்.

 உங்கள்
இயல்பான நிலையிலேயே நீங்கள் இருந்தால்,

 இந்தச் சக்தி உங்களின் மீது அதிக தாக்கம் ஏற்படுத்தமுடியாது.

 நிலவின் சுழற்சி மனிதனின் அமைப்பிலே – உடலிலே,

 மனதிலே,

சக்தி நிலையிலே அதிக தாக்கம் செலுத்தக் கூடியது.

இது நம் தாய்மார்களின் மாதாந்திர சுழற்சி நிகழ்வதிலேயே வெளிப்படையாகத் தெரிகிறது.

 நான் குறிப்பிட்டு தாய்மார்கள் என்று சொல்லக் காரணம்,

அவர்கள் நிலவின் சுழற்சியோடு ஒன்றியிருந்ததால் தான் நாம் பிறந்தோம்.

 அவர்களின் உடல், நிலவின் சுழற்சியோடு ஒன்றி இருந்திருக்காவிட்டால்,

 நாம் பிறந்திருக்க வாய்ப்பே இல்லை.

 இப்படிப்பட்ட சம்பந்தம் நிலவும்போது,

 இந்த முழு சுழற்சியும், 2 அல்லது 3 மணிநேரத்தில் நடந்து முடியும் சமயத்தில்,

நம் தாயின் உடல்களில் சிறிதளவு குழப்பம் ஏற்படும்.

இது ஆண்களின் உடலிலும் நடக்கும்,

 ஏனெனில் அவர்களின் உடலிலும் தாயின் பங்களிப்பு உள்ளது.

 உடலில் வெளிப்படையாய் இல்லாவிட்டாலும்,

 வேறு வழிகளில் தாயின் பங்களிப்பு அவர்களுள் இருக்கிறது தானே!

உடல் இப்படிப்பட்ட குழப்பத்தில் உழலும்போது,

 அதில் உணவின்றி காலியாக வைத்திருப்பது (அ)

 அதை
ஓரளவிற்கு விழிப்புணர்வோடு வைத்திருப்பது நல்லது.

 விழிப்புணர்வோடு இருப்பதற்கு ஒரு எளிய வழி,

உணவருந்தாமல் இருப்பது.

 உணவருந்தவில்லை எனில்,

 குறைந்தபட்சம் அந்த ஒன்றைப் பற்றிய கவனமேனும் உங்களுக்கு இருக்கும்.

 வயிறு காலியாக இருந்தால்,

 விழிப்புணர்வோடு இருப்பது எளிதாகவே நடக்கும்.

அப்போது,
 உங்கள்
உடலை,

உங்கள் உடலில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது

என்பதை தெளிவாய

், எளிதாய் கவனிக்க முடியும்.

 கிரகண முக்கியத்துவம்:

 நிலவின் ஒரு சுழற்சி, மனிதனிற்கு எப்படி முக்கியமாகிறது?

 மனிதனின
் பிறப்பிலும் வாழ்விலும் சூரிய மண்டலத்தின் ஒன்பது கிரகங்களும் தாக்கம் உண்டு செய்கின்றன.

 அதில் மிக முக்கியம், சூரியன்,

சந்திரன் மற்றும் இந்த பூமி.

ஒரு மனிதனின் சக்திநிலை 1008 முழுநிலவுகளை சந்தித்ததென்றால்,

 அதாவது ஒரு மனிதர் தோராயமாக 84 ஆண்டுகள் வாழ்கிறார் என்றால்,

 அவரது சக்திநிலை ஓரளவிற்கு முதிர்ச்சி அடைகிறது. அந்நிலையில்,

எவ்வித ஆன்மீக செயல்முறைகளை கடைபிடிக்காவிட்டாலும், அவர் எளிதாக மலர்ந்திட முடியும்.

அவர் முக்தி அடைந்திடுவார் என்று சொல்ல முடியாது,

ஆனால் அவர் மீண்டும் பிறப்பெடுக்காமல் இருப்பதற்கு சாத்தியம் நிறையவே இருக்கிறது.

 சந்திர கிரகண சமயத்தில் நிலவு வேகமாக இருக்கிறது. அதன் 28 முகங்களையும்
சில மணி நேரங்களிலேயே நாம் பார்க்க முடியும்.

 ஒரு மாத காலத்தில் நடப்பது எல்லாம் சில மணி நேரத்தில் சூட்சுமமாக நடக்கிறது.

 இதனால் நம் வாழ்க்கையும் வேகமாக முன்னோக்கி செல்கிறது. அடிப்படையில் ஆன்மீகம் என்றாலும் அதுதான்.

நம் வாழ்கையை வேகமாக முன்னெடுத்துச் செல்வது.

நீங்கள் நடந்து பயணம் போகும் போது,
வழியில் மாம்பழங்கள் பார்த்தால் பறித்து உண்ணலாம்.

 நெல்லிக்காய் இருந்தால் அவற்றையும் ருசிக்கலாம். பயணத்தை இன்ப சுற்றுலாவாக அனுபவிக்கலாம்.

 ஆனால்
 இதுவே விமானத்தில் பயணம் செய்தால்,

வழியில் நீங்கள் மாம்பழங்கள் பறிக்கப் போவதில்லை.

 பத்தாயிரம் ஏக்கர் மாம்பழத் தோட்டம் இருந்தாலும், அவற்றைப் பார்க்கக் கூட மாட்டீர்கள். காரணம், குறிப்பிட்ட உயரத்தில்,

 மிக வேகமாக பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். வேகமாக முன்னே செல்லும்போது, நாம் ஒன்றும் மாம்பழங்களுக்கு எதிராக இல்லை…

 உயரம்,
வேகம் காரணமாக நம்மால் அவற்றைப் பறிக்க முடிவதில்லை,

 அவ்வளவுதான். அதுபோல் இந்த நேரத்தில்,

நம் வாழ்வும் விரைவாக முன்னோக்கிச் செல்கிறது.

Monday 29 January 2018

சூட்சும சக்திகள்

*சூட்சும சக்திகளும்
நமதுஉடலும சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!*

*1. நமது மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா?      நாம் எதை நினைக்கிறோமோ அங்கு நமது மனம்  செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.*
*நாம் தீயவர்களை நினைக்கும்போது நமது சூட்சும சக்தி அவர்களுடன் இணைந்து நமது வலிமை குறைகிறது. இறைவனை எண்ணும்போது சூட்சும சக்தி வலிமை பெற்று நம்மை காக்கிறது.*

*2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.*

*3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.*

*4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.*

*5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.*

*6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.*

*7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.*

*8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.*

*9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.*

*10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.*

*11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல. அவனின் சூட்சுமசக்தி காந்தசக்தி போல அவனைச் சுற்றி பாதுகாத்து வருகிறது.*

*12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.*

*13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள தொடர்பின் பாதிப்பே ஆகும்.*

*14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.*

*15. நோயாளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.*

*16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.*

*17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.*

*18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.*

*19. ஒரு மனிதனை புண்படச் செய்வது நூதனமான கொலைக்கு சமம்.*

*20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.*

*21. நாம் விஞ்ஞான அறிவை மட்டும் பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.*

*22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.*

*23. வலி என்பது உடலின் மொழி.*
*அதை ஒரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.*

*24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.*

*25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.*

*26. உடலின் உறுப்புக்கள் அனைத்தும் மனதுடன் சேர்ந்து இயங்குவதே ஆரோக்கியம். மனது நோயுற்ற பின்னரே உடல்  நோயுறுகிறது.*

*27. விவசாய நிலத்தில் தாயின் கருவறையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.*

*28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.*

*29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.*

*30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.*

*31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.*

*32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.*

*33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய சக்திகள் நீங்கும்.*

*34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.*

*35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரீரத்தின் கவசம் பலம் பெறுகிறது.*

*36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.*

*37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடக்கவும்.*

*38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.*

*39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.*

*40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரீரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.*

*41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.*

*42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.*

*43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.*

*44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.*

*45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.*

*46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.*

*47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.*

*48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.*

*49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.*

*50. தூக்கம் என்பது,*
     *விழிப்புணர்வு அற்ற* *தியானம்.*
     *தியானம் என்பது,*
     *விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.*

*சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!*

Sunday 28 January 2018

ஹர ஹர சிவ சிவ ஷண்முகநாதா

எழும் போதும் வேலும் மயிலும் என்பேன்

எழுந்தே மகிழ்ந்து. தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன்

தொழுதே உருகி அழும் போதும் வேலும் மயிலும் என்பேன்

அடியேன் உடலம் விழும் போதும் வேலும் மயிலும் என்பேன்

ஹர ஹர சிவ சிவ ஷண்முகநாதா
ஹர ஹர சிவ சிவ என்முக நாதா

ஹர ஹர சிவ சிவ பரம விலஸா
ஹர ஹர சிவ சிவ அபய குஹேஸா

அருண கிரிபரவும் அருணெறி நாதா
தரும வுருவர்புகழ் சததள பாதா

அரிபிர மாதிக டொழுவடி வேலா
திருவடி நாரவ ருளமுறை சீலா

எனினிய குருநித மெனுமதி யீசா
சனனவெய் தறவளி தருபர மேசா

பாசா பாச பாப வினாசா
மாசே றாத மான நடேசா

போஜா வாஜா பூஜகர் நேசா
தேஜா ராஜ தேவஸ மாஜா

திஞ்சுவை யருளொரு திருவா ரமுதே
ஓம்சர வணபவ வுருவே யருவே.

-   ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

🙏  ஓம் குமர குருதாச குருப்யோ நம:  🙏













Saturday 27 January 2018

மீனாக்ஷி திருவிளையாடல்

#மீனாஷியும்_மூக்குத்தியும்

"அம்மாடி!! மீனாக்ஷி!! ராஜ உத்தரவு!! மடப்பள்ளில நிறைய நைவேத்யம் பண்ணனும்!! முடியல்லே!! சித்த தூங்கிக்கறேன்!! மறக்காத நேரத்துக்கு எழுப்பிடுடீ!! மறந்துடாதே".

மீனலோசனையின் மீதுள்ள அதீதமான உரிமையால் ஶ்ரீநிவாஸர் தேவிக்கே உத்தரவிட்டு, மடப்பள்ளியை உள்பக்கமாய் தாழ் போட்டுக்கொண்டு உறங்கிப்போனார்.

தடதடவென சத்தம்!! "யார் மடப்பள்ளி கதவை இப்படி உடைக்கறது!!" கோபத்துடன் எழுந்த ஶ்ரீநிவாஸர் கதவைத் திறந்து பார்த்தால் ராஜ ஸேவகர்கள்!!

"என்னங்கானும்!! நீர் கதவை அடைச்சுண்டு உள்ள என்ன பண்றீர்!! காலத்துக்கு அம்பாளுக்கு நைவேத்யம் ஆக வேண்டாமா!! குருக்கள் காத்துண்ட்ருக்கார்!! நைவேத்யம் எடுத்துண்டு வாங்கோ!!" ராஜ ஸேவகர்களோடு வந்த பட்டரின் குரல்.

"ஐயோ!! மீனாக்ஷி!! கைவிட்டுட்டியேடீ!! எழுப்பி விடுன்னு சொன்னேனே!! ஒரு நைவேத்யமும் தயாராகலையே!! நான் என்ன பண்ணுவேன்!! அம்மா!! ராஜ தண்டனை தான் எனக்கு இன்னிக்கு!!" பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தார் ஶ்ரீநிவாஸர்.

"நகருங்காணும்!!" பட்டரொடு நான்கைந்து பேர் நுழைந்தனர் உள்ளே!!

"ஆஹா!! சக்கரைப் பொங்கல்!! தேங்காய் சாதம்!! புளியஞ்சாதம்!! எலுமிச்சை சாதம்!! போளி!! வடை!! பால் பாயசம்!! ஒன்னு பாக்கியில்லையே ஓய்!! இத்தனையும் தனியாவா பண்ணேள்!! ஒன் சிஷ்யாள்ல்லாம் அண்ணா கதவை சாத்திண்டார்!! எப்படி திறக்கறதுன்னு தெரியல்லேன்னு புலம்பிண்ட்ருந்தாளே!! " சொன்னவரின் கண்கள் சர்க்கரை பொங்கலிலும், போளியிலுமே இருந்தது.

மீனாக்ஷிக்கு நைவேத்யம் ஆனதும் ஸோமசுந்தரன் இதை சாப்டறானோ இல்லையோ, நாம சாப்டுடனும் அவர் மனது துடித்துக் கொண்டிருந்தது.

ஶ்ரீநிவாஸருக்கு ஒரே குழப்பம்!! "என்னதிது!! நாம தான் எழுந்துக்கவே இல்லையே!! யார் இதெல்லாம் பண்ணிருப்பா!!" நிகழ்வின் ப்ரமிப்பில் ஶ்ரீநிவாஸர் விலகவில்லை.

"உம் கைக்கு தங்க மோதரம் போடனும் ஒய்!! வாரும்!! மீனாக்ஷிக்கு தீபாராதனை ஆகப்போறது!! பார்ப்போம்!!" எல்லோரும் சிவராஜமாதங்கியின் ஸந்நிதிக்கு விரைந்தனர்.

குருக்கள் அம்பாளுக்கு நைவேத்யம் செய்து பின் தீபாராதனைக்கு திரையை விலக்கினார்.

"ஐயோ!! மாணிக்க மூக்குத்தி காணுமே!! அம்மா!! மீனாக்ஷி!! என்னடி சோதனை இது!!" குருக்களின் கதறல் மீனாக்ஷி கோவிலுக்கு வெளி வரை எதிரொலித்தது.

மீனலோசனையின் அழகையே மெருகூட்டும் மூக்குத்தி தொலைந்த துக்கம் ராஜாவிற்கும், மற்ற அனைவருக்கும்!! ஶ்ரீநிவாஸருக்கோ நடப்பதைக் கண்டு பயம்!! அபசாரம் நிகழ்ந்ததோ என்று!!

அசரீரி கேட்டது:

"அஞ்சற்க!! என் பிள்ளை ஶ்ரீநிவாஸன் சரீர களைப்பால் என்னை எழுப்பிவிடச் சொல்லி உறங்கிப்போனான்!! காலத்தில் எழுப்பிடத் தான் நானே சென்றேன்!! அயர்ந்து அவன் உறங்குவதைக் கண்ட நான் அவனை எழுப்ப மனமில்லாது மடப்பள்ளிக்குள் சென்றேன். துளி வெளிச்சமும் இல்லாத இம்மடப் பள்ளியில் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்து, அதன் ஒளியில் நானே எனது நைவேத்யங்களை சமைத்தேன்!! குழந்தை உறங்குவதைக் கண்ட தாய் அதனை எழுப்புவாளோ!! அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது!! மடப்பள்ளிக்கு சென்று பாருங்கள் !! மூக்குத்தி இருக்கும்!!" சட்டென நின்றது அசரீரீ

நடப்பது கனவா நினைவா என யோசிப்பதற்க்குள் மீனாக்ஷி மூக்குத்தி மடப்பள்ளியிலிருந்து வந்தது.

"அம்மா!! மீனாக்ஷி!!" ஶ்ரீநிவாஸர் கண்களில் ஜலம் பெருக கதறி மீனாம்பாளின் பாதத்தில் விழுந்தார். "அம்மா!! அம்மா!!ன்னு ஸதா கூப்பிட்டதற்கு நீயே எனக்காக நைவேத்யம் சமைச்சிருக்கியே!! தாயே!! நான் என்ன பாக்யம் பண்ணேன்!!" கண்ணீர் கண்களை மறைக்க கதறினார் ஶ்ரீநிவாஸர்.

"தாயே!! மீனாக்ஷி!! தாயே!! மீனாக்ஷி!!" லக்ஷக்கணக்கான ஜனங்கள் நடந்த அதிசயத்தைக் கண்டு திரண்டனர் கோவிலில்!!

ராஜனும் அமைச்சரும் ஶ்ரீநிவாஸரை ஸாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தனர் "ஸ்வாமீ!! நீரே மீனாக்ஷி!! மீனாக்ஷியே நீங்க!!" வேறொன்றும் சொல்லத் தோணவில்லை யார்க்கும்!!

"மீனாக்ஷி!! மீனாக்ஷி!!" திக்கெட்டும் அம்மையின் நாமம் ஒலித்தது.

ராஜராஜேச்வரியான மாதங்கிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

"பாகம் செய்து என் நாவை பாடவும் செய்தாய் தாயே
ஊகமிலார்க்கு இன்னும் உதவினாய் சோகந்நீர்
நாதநலம் நாட்டுகின்ற நான்மறையாம் தண்டை சேர்
பாதநிழல் யான் தங்கப்பண்"

ஶ்ரீநிவாஸரின் நா பாடத்தொடங்கியது!! ஆம் கல்வியறிவு இல்லாத ஶ்ரீநிவாஸர் கவிஶ்ரீநிவாஸர் ஆனார்.

காமாக்ஷி பட்டாரிகை மூககவிக்கருளியது போல், அகிலாண்டநாயகி காளமேகத்திற்கு அருளியது போல், மீனாக்ஷம்மை ஶ்ரீநிவாஸர்க்கு அருளி விட்டாள்.

படிப்பறிவில்லா ஶ்ரீநிவாஸர் பராசக்தி கடாக்ஷத்தால் கவிமாரி பொழிந்தார்.

"மீனாக்ஷி!! மீனாக்ஷி!!" நாமம் ஒன்று போதாதோ!! மோக்ஷமே கைமேல்!!

சிந்திப்போம் காமாக்ஷியின் வைபவத்தைத் தொடர்ந்து!!

ஶ்ரீமாத்ரே நம:
வக்த்ரலக்ஷ்மீ பரிவாஹ சலன்மீனாப லோசனாயை நம:
காமாக்ஷ்யை நம:
லலிதாம்பிகாயை நம:

-- ஶ்ரீராமராகவன்

விஸ்வநாதன் பவுன்சாமி

Saturday 20 January 2018

அகத்தியர் பீட திருப்பணி - யாசகம்

கோவை அன்னூர் அருகே அமைந்துள்ள பொகளூரில் அகத்தியர் சித்தர்  பீடம் கடந்த ஒன்றரை வருடங்களாக செயல்பட்டு வருகிறது. அங்கே சிறிய அளவில் அகத்தியர் சிலை பிரதிட்டை செய்யப்பட்டு தினசரி பூசை, வியாழன் அன்று சிறப்பு பூசை, பவுர்ணமி அன்று சிறப்பு யாகம் ஆகியவை அகத்தியரின் உத்தரவின் பெயரில் நடைபெற்று வருகின்றன. பீடம் அமைந்துள்ள இடமும் நாடியில் அகத்தியர் ஜீவ நாடியில் சுட்டிக்காட்டிய இடத்திலேயே அமைந்துள்ளது.

தற்போது, அகத்தியர் அய்யா அவர்கள், நாடியில் வந்து , தாம் அன்னை உலோபபமுத்திரையுடன்
பஞ்சலோக சிலையில் எழுந்தருள சித்தம் தெரிவித்து உள்ளார். அதற்காக சுமார் 2.5 அடி உயரத்தில் அகத்தியர் அய்யா சிலையும், உலோபமுத்திரை தாயார் சிலையும் செய்ய எத்தனித்து உள்ளோம். அய்யாவின் அடியவர்களான பல செல்வந்தர்கள் தாமே முழு செலவையும் ஏற்பதாக கூறி உள்ளனர்.

ஆனால், அகத்தியர் அய்யா நாடியில் வந்து, எல்லோரிடமும் சிறிது யாசகம் பெற்று தான் சிலை செய்ய வேண்டும் என்று வாக்கு உரைத்து உள்ளார். யாசகம் கொடுக்க விரும்புவோர், இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. சிறு தொகையாக இருப்பினும் கொடுக்கலாம். பங்கெடுப்பது தான் முக்கியமே தவிர, தொகை முக்கியமில்லை.

அகத்தியர் அய்யா, உத்தரவுப்படி வீட்டில் உள்ள பழைய செப்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை தானமாக கொடுப்பது மிக சிறப்பு என்று உரைத்து உள்ளார். எனவே விருப்பம் உள்ளவர்கள் பணமாகவோ, பித்தளை அல்லது செப்பு பொருளாகவோ கொடுத்து உதவ சிறந்த வாய்ப்பு.


சீவ நாடி மூலமாக அகத்தியர் அய்யா ஏற்கனவே ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு குறைகளை நிவர்த்தி செய்து அருளுரை கூறி காத்துக்கொண்டு உள்ளார். ஏற்கனவே, பல முறை பூசையின் போது அய்யாவின் சிலை கண் திறந்து பார்க்கும் காட்சி பல முறை கண்டுள்ளோம். மேலும் பஞ்சலோக சிலை வைத்தால், அவருக்கு அந்த சிலையின் மேல் இறங்கி அருள் பாலிப்பது மிக எளிது. மேலும் அன்பர்கள் வீட்டிற்கு எடுத்து செல்ல உற்சவர் சிலை அமையும். இதுவரை அன்னையார் சிலை பீடத்தில் நிறுவப்படவில்லை. இப்போது பஞ்சலோக சிலை செய்த பிறகு, அகத்தியர் உலோபமுத்திரை அன்னை திருமண வைபவம் நடத்தவும் வாய்ப்பு அமையும். பீடத்தின் சக்தி மிகவும் கூடி பெருகும்.
உதவி செய்ய விரும்புவோர், இறை சித்தரை தொடர்பு கொள்ளவும். செலவு சுமார் ஒரு லட்ச ரூபாய் ஆகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583.

Bank Account number
Name : A S SENTHIL KUMAR
Bank  : STATE BANK OF INDIA
Account No. 67300564334
IFSC CODE : SBIN0071063
Branch  : ODANTHURAI, METTUPALAYAM
__________________________________________

Name : AMSAVANI
Bank  : STATE BANK OF INDIA
Account No. 37078745699
IFSC CODE : SBIN0071063
Branch  : ODANTHURAI, METTUPALAYAM
__________________________________________

Friday 19 January 2018

ஸ்ரீ ஆணிமாண்டவ்யர் வரலாறு

போகர் : “குருதேவா! ஸ்ரீ ஆயுர் தேவியின் இரண்டாவது வலகரத்தில் அமரும் பேறு பெற்ற ஸ்ரீ ஆணிமாண்டவ்யர் எவ்வாறு இந்த அனுக்ரகம் பெற்றார்?”

அகஸ்தியர் : “ஸ்ரீ ஆணிமாண்டவ்யரின் சரிதத்தை பிறிதோரிடத்தில் விளக்கியுள்ளோம். அவர்ஸ்ரீ விதாத்ரி தேவிஎன்னும் அம்பிகையைத் துவிதியை திதிதோறும் வழிபட்டு வந்தார். இத்திதியில் ஸ்ரீ விதாத்ரி தேவி நூறு மகாலக்ஷ்மி தேவியரின் அனுக்ரகத்தை ஒன்றாகத் திரட்டியருளும் சக்தியுடையவள்.

ஸ்ரீ ஆணிமாண்டவ்யர் வரலாறு


ஸ்ரீ மாண்டவ்ய மகரிஷி அற்புத தவங்கள் புரிந்து அதன் பயனை மக்களுக்கு அர்ப்பணித்து சேவை செய்த உத்தம மகரிஷியாவார். ஒரு முறை அவர் ஆழ்ந்த தியானத்திலிருந்த பொழுது அந்த வனத்தில் அரசக் காவலர்களால் துரத்தப் பெற்ற கொள்ளையர்கள் இவருடைய ஆஸ்ரமத்தில் நுழைந்து ஒளிந்து கொண்டனர். மகரிஷியின் அருகில் ஆயுதங்கள் கிடப்பதைக் கண்ட சேவகர்கள்இவரே கொள்ளைக் கூட்டத் தலைவர்எனத் தவறாக கருதி அவரைச் சிறையிலிட்டனர்.

தீர விசாரிக்காத அரசரும் அவரைக் கழுவிலேற்ற மூன்று தினங்கள் ஆகியும் யோகத்தில் திளைத்துத் தேஜோ மயமான காந்தியுடன் பிரகாசித்த அவரைக் கண்டு அஞ்சி, “இவர் மகா தபஸ்வியேஎன்று எண்ணித் தம் மக்களுடன் அவரைச் சரணடைந்து மன்னிப்புக் கோரினார்.
இத்தவறுக்கு நீ காரணமில்லைஎன்று அரசனை மன்னித்தார் மகரிஷி. பின்பு, “நான் அறக்கடவுளைக் காண்பேன். ஒன்றுமறியா எனக்கு ஏன் இந்தத் தண்டனை?” என்ற ஆத்ம விசாரத்துடன் ஆழ்ந்த நிஷ்டையில் அமர்ந்தார். அவர் தபோபலத்தைத் தாங்க இயலாத அறக்கடவுள் அவர் முன் பிரசன்னமாகிமுனிபுங்கவரே! தாங்கள் சிறு வயதில் ஒரு தும்பியின் வாலைக் [பட்டாம்பூச்சி] கயிற்றால் கட்டி அதன் அடிப்பகுதியை முள்ளால் வதைத்ததற்கான தண்டனையே இதுஎன்று விளக்கிட்டார்.

அறியாப் பருவத்தில் செய்த சிறு தவறுக்கு இத்தகைய பெரிய தண்டனையா? குருவருளால் தவ முறைகளை யான் அறிந்ததால் அறக்கடவுளாகிய தங்களிடம் விளக்கம் கேட்டுப் பெற்றேன். ஆனால் வரப் போகும் யுகங்களில் பக்தி குன்றிவிடும். தவ முறைகள் மறைந்து விடும். குறிப்பாகக் கலியுக மக்கள் கோடி கோடியாய் மாபெரும் தவறுகளைச் செய்வர். அவர்களுக்கு எத்தகைய பெரிய தண்டனைகள் அமையுமோ என எனக்கு அச்சமாக உள்ளதுஎன்றார்.
அறக்கடவுள்முனி சிரேஷ்டரே! செய்யும் தவறுகளுக்குத் தண்டனைகள் உண்டு. ஆனால் பிராயச்சித்த் முறைகளைத் தங்களைப் போன்ற மகரிஷிகளால்தானே இறைவனிடம் பெற்றுத் தர முடியும்.” என்றார்.

ஸ்ரீ ஆணி மாண்டவ்யரின் தவம்

உடனே ஸ்ரீ ஆணிமாண்டவ்யர் மீண்டும் வனம் புகுந்து பல கோடி யுகங்கள் தவம் புரிந்தார். மக்கள் தம் அறியாப் பருவத்தில் செய்கின்ற தவறுகளுக்குப் பிராயச்சித்தங்களை அவர் வேண்டிடஸ்ரீ விதாத்ரிஎன்னும் தேவி பிரசன்னமானாள். அது முதல் அவர் ஸ்ரீ விதாத்ரி உபாசனையைத் தீவிரமாக மேற்கொண்டார். அதன் காரணமாக அவர்,குழந்தைகளுக்கான பரிகாரங்கள்

பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், சகல உடல் வியாதிகள், கண்ணேறு வியாதிகள் இவற்றிற்கான காரணமும் பரிஹாரங்களும். சிறுபிள்ளைகளுக்கான வியாதிகள், திருஷ்டிகள், சாபங்கள் குழந்தைகளைப் பேணும் முறைகள், கல்வி, வீரம், இசை, ஞானம் உள்ளிட்ட பல சிறப்புகளைப் பெறுதல் போன்ற விஷயங்களை ஆராய்ந்து குழந்தைகளுக்கும், பாலர்களுக்கும் உரித்தான தெய்வீகமான வாழ்வைப் பெற்றுத் தருவதற்கு ஆற்ற வேண்டிய பரிகாரங்களையும், நிவர்த்திகளையும் அருளியுள்ளார்.

           இவற்றால் பாலாரிஷ்ட தோஷங்கள், திருஷ்டி தோஷங்கள் எளிதில் நிவர்த்தியாகின்றன. சிறுவர்கள் மந்த புத்தியுடன் இருத்தல், பசியின்மை, மப்பு, மாந்தம், ஜலதோஷம், வயிற்றுப் போக்கு போன்ற வியாதிகளுக்கான நிவாரணங்களையும், பரிகார முறைகளையும் விவரித்துள்ளார் ஸ்ரீ ஆணிமாண்டவ்ய ரிஷி.

மொத்தத்தில் குழந்தைகள் பரிபாலனத்திற்கு ஸ்ரீ மாண்டவ்யரின் விளக்கங்கள் முதன்மையானதாகும்.

கைக்குழந்தை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு மாதத்திலும் அந்தந்த மாதத்திற்குரிய தேவதைகள் காக்கின்றனர்.அவர்கள் யாவர்? குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், தீர்க்கும் வழிகள் எனப் பல விஷயங்களை ஸ்ரீ மாண்டவ்ய மகரிஷி அருளியுள்ளார்.

போகர் : “ஸ்ரீ மாண்டவ்யரின் குழந்தை பராமரிப்புப் பற்றிய விதிகளை உரைக்க வேண்டும் ஞானகுருவே!”

அகஸ்தியர் : பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் தான தருமம் செய்ய பழக்க வேண்டும். பெற்றோர் தம் குழந்தைகளுக்காகச் செய்ய வேண்டிய அறங்களை முறையாக வகுத்தவர் ஸ்ரீ மாண்டவ்யர் ரிஷியாவார்.

ஸ்ரீஆணி மாண்டவ்யர் அருளிய குழந்தைகளின் தோஷப் பரிகாரங்கள், காக்கும் தேவதைகள்
குழந்தையின் வயது
காக்கும் 
பிறர் எண்ணம்
குழந்தைபடும் வேதனை
பெற்றோர்களுக்கு ஏற்படும்
தோஷ நிவர்த்தி முறைகள்
தேவதை
துன்பம்
முதல் மாதம்
திலமாதா
பொறாமை
தூக்கம் வராது அழுதல், கபம்
தம்பதிகளுக்குள்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
வேற்றுமை
நீரைப் பருக வேண்டும்
இரண்டாவது மாதம்
புங்கவி
ஏக்க எண்ணங்கள்
வயிற்றுப் போக்கு
மாமியாருடன் விரோதம்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
குவளை நீர் பருக வேண்டும்
மூன்றாவது மாதம்
வைகரி
கோப எண்ணங்கள்
தலைவலி
தந்தைக்கும் மாமனாருக்கும்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
இடையே வெறுப்பு
அருகம்புல் நீர் பருக வேண்டும்
நான்காவது மாதம்
புவனா
கீழ்த்தர எண்ணங்கள்
உடல் முறுக்கி அழுதல்
தம்பதிகளுக்குள் பொய்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
அருகம்புல் நீர் பருக வேண்டும்
ஐந்தாவது மாதம்
தரணி
பழிவாங்கும்
விக்கல் நோய்
நாத்தனாருடன்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
எண்ணங்கள்
மனபேதம்
துளசி நீர் பருக வேண்டும்
ஆறாவது மாதம்
பாவினி
குரோத எண்ணங்கள்
பயந்து அழுதல்
வேலை செய்யுமிடத்தில்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
வீண் பழி
வில்வ நீர் பருக வேண்டும்
ஏழாவது மாதம்
ஜகதாயி
காம எண்ணங்கள்
மூத்திர கோளாறு
மேலதிகாரியிடம்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
மன வேற்றுமை
வன்னி இலை நீர் பருக வேண்டும்
எட்டாவது மாதம்
ஜலஜாக்ஷி
கையால் செய்த பாவம்
மூச்சுச் திணறும்
கடன் அதிகமாகும்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
அரச இலை் நீர் பருக வேண்டும்
ஒன்பதாவது மாதம்
சுவர்ணாக்ஷி
காலால் செய்த பாவம்
மார்புச் சளி
கீழே விழுந்து அடி
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
அதனால் துன்பம்
சுக்கு நீர் பருக வேண்டும்
பத்தாவது மாதம்
த்ரிமபாலா
உச்சி மோர்தல்
இருமல்
வாக்குத் தவறுதல்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
மல்லிகைப் பூ நீர் பருக வேண்டும்
11வது மாதம்
ஜலபுத்ரீ
கட்டி அணைத்தல்
அதிசுரம்
பொருளை இழப்பர்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
பாரிஜாத நீர் பருக வேண்டும்
12வது மாதம்
விஸ்வதாயி
முத்தம் இடுதல்
அதிமூத்திரம்
நண்பர்களுக்குள்
108 முறை காயத்ரீ மந்திரம் ஜபித்த
மனபேதம்
சாமந்திப் பூ நீர் பருக வேண்டும்
இரண்டு வயது
மாலமாதா
முதுகில் தூக்குதல்
பின்னால் விழுதல்
ஒற்றைத் தலைவலி
குறைந்தது 108 முறையாவது அந்தந்த
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும
பெற்றோர்களும் ஓத வேண்டும்
மூன்று வயது
பிரபுதாரிணி


தங்கம் இழப்பு
குறைந்தது 108 முறையாவது அந்தந்த
கண்டங்கள் ஏற்படும்
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும

பெற்றோர்களும் ஓத வேண்டும்
நான்கு வயது
சதுராணி


சிறு கஷ்டங்கள்
குறைந்தது 108 முறையாவது அந்தந்த
துன்பங்கள்
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும

பெற்றோர்களும் ஓத வேண்டும்
ஐநது வயது
பாலினிமாதா


உறவினர் இழப்பு
குறைந்தது 108 முறையாவது அந்தந்த
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும
பெற்றோர்களும் ஓத வேண்டும்
ஆறு வயது
பினாகினி


பிரிந்து வாழ்வர்
குறைந்தது 108 முறையாவது அந்தந்த
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும
பெற்றோர்களும் ஓத வேண்டும்
ஏழு வயது
சப்தா


எதிரிகள் தாக்குதல்
குறைந்தது 108 முறையாவது அந்தந்த
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும
பெற்றோர்களும் ஓத வேண்டும்
8 வயது முதல்
தேவதாரிணி


கணவன், மனைவி, பெற்றோர்
குறைந்தது 108 முறையாவது அந்தந்த
15 வயது வரை
தனித் தனி வாழ்க்கை
தேவதையின் நாமத்தைக் குழந்தைகளும


பெற்றோர்களும் ஓத வேண்டும்