Tuesday 30 April 2019

சித்தர் கேள்வி பதில் - பரிகாரம், சாட்சி பூத நாராயணன்

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிஷிகள் அடியவர் கானகத்தின்உள் சென்று சித்தர்களுடன் உரையாடல் செய்த பதிவு*

*அடியவர் கேள்வி*:—
பொதுவாக பரிகாரம் எப்படி தற்போது செய்கின்றார்கள்?

*சித்தன் பதில்*:—-
மனிதன் என்ன செய்கிறான்? பூமி காரகனான செவ்வாயின் அதி தேவதையான சுப்ரமண்யனுக்கு அபிஷேகம் செய் என்றால், முருகருக்கும் வீட்டுக்கும் என்ன சம்பந்தம், என்று யோசித்துவிட்டு, சொன்னார் செய்கிறேன் என்று ஏனோ தானோ என்று செய்கிறான். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், "ஒருவன் மிக கவனமாக ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து, உத்தமமான பொருட்களை வாங்கி சொன்ன பரிகாரத்தை செய்ய வேண்டும்", என்று யோசிப்பதில்லை.  இந்த *பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களுக்கும் பின்னால் எந்த கர்மா தடையாக நின்று, அவன் அடைய வேண்டியதை தடுக்கிறது, என்று எளிதாக காண முடியும்.* தவிர்க்கிற வழியையும், நிமித்த சாஸ்த்திரத்தினால் சரியா கணிக்கவும் முடியும்.

*அடியவர் கேளவி*:—-
உண்மையிலேயே ஆச்சர்யமாக இருக்கிறது! காலமாக இருப்பது சாட்சி பூத நாராயணன் என்றீர்களே! அதை சற்று விளக்க முடியுமா?

*சித்தன் பதில்*:—-
அனைத்து சாஸ்த்திரங்களும், நாராயணனை காக்கும் கடவுள் என்கிறது. காக்கும் சக்தி, அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கும். கவனிப்பது என்பதே சாட்சியாக மாறுகிறது. அதனால்தான் நாராயணன் அந்த வேலையை சிறப்பாக செய்வதினால், அவருக்கு (சாட்சி) பூத நாராயணன் என பெயர் வைத்தனர். பஞ்ச பூதமாக இருந்து அனைத்தையும் கவனித்து, சாட்சியாக இருக்கிறார், என்பதை மனிதருக்கு உணர்த்தவே, கோவில்களில் பூத நாராயணரின் சிற்பத்தில், அவர் கண்ணை முழுவதுமாக திறந்து பார்த்துக் கொண்டிருப்பது போல் வடிவமைத்தனர். அது ஒரு உவமை. உண்மையில், அவர் பார்வையிலிருந்து எதுவுமே தப்பிக்க முடியாது என்பதே உண்மை. அனைத்து தெய்வ திருமேனியிலும், பூணூல் அணிந்திருப்பதுபோல் வடிவமைத்துள்ளனரே!

*அடியவர் கேள்வி*:—-
சித்த மார்க்கம், இதற்கு என்ன விளக்கம் கூறுகிறது?

*சித்தன் பதில்*:—-
உனக்கு என்ன விளக்கம் தேவை? சாஸ்த்திரப்படி அமையும் விளக்கமா? அல்லது அது சுட்டிக் காட்டும் விளக்கமா?

*அடியவர் கேள்வி*:—-
சித்தர்களின் எளிய சுட்டிக்காட்டுதல் என்ன? என்று சற்று அழுத்தமாக கேள்வியை கேட்டேன்.

*சித்தன் பதில்*:—-
பூணூலை பற்றி மட்டும் கூறாமல், வேறு சில விஷயங்களையும் பற்றி கூறினால், அவை அனைத்தின் தாத்பர்யம், உனக்கு ஒரு விரிவான பார்வையை தருவிக்கும். கூறுகிறேன், என்றார்

*அடியவர்*:—-
மிக கவனமாக அவர் கூற வருவதை கவனிக்க தயாரானேன்.

சித்தன் பதில் தொடரும்....

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

அகத்தியர் கேள்வி பதில் - காமத்தை வெல்வதை பற்றி, மற்றும், ராம நாமத்தை பற்றி

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு"*

*கேள்வி : காமத்தை வெல்வது எப்படி ?🙏*

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*அபிராமி அந்தாதி ஓதி வரலாம். நல்ல பலன் உண்டு. சமீப காலத்தில் ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு, ஆண்களுக்கு, காமம் தான் மிகப்பெரும் தடையாக உள்ளது. காமத்தை வெல்ல முடியாமல் பெரிய ஞானிகள் கூட தாேற்றுப் பாேயிருக்கிறார்கள். ஆனால், அபிராமி பட்டர் அதிலே சுலபமாக வென்றுவிட்டார். எப்படி? என்றால், பார்க்கின்ற பெண்களையெல்லாம் "அன்னை"யாகவே பார்த்தான். காமம் அவனை விட்டு ஓடி பாேய்விட்டது.* அபிராமி பட்டறை புரிந்து காெள்ள முடியாத மனிதர்கள் பலர் அக்காலத்தில் இருந்தார்கள்.

அந்த காேவிலிலே  அன்னைக்கு பணிவிடை செய்த எத்தனையாே அர்ச்சகர்களில் ஒருவர் மட்டும் இவரை நன்றாக புரிந்து காெண்டார். *அந்த தருணத்திலே, ஞான நிலையில் இருந்து, பட்டர் பாடிய பாடல்களை(அபிராமி அந்தாதி) அவர், பிரதி எடுத்து வைத்ததனால் தான், இவ்வளவு காலத்திற்குப் பிறகும், உங்களுக்கு கிடைத்திருக்கிறது.*

*கேள்வி : ராம நாமத்தை பற்றி :*🙏

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*சதா உள்ள சுத்தியாேடு ராம நாமத்தை  ஜபித்து வந்தால், மனிதனை இறைவனிடம் சேராமல் தடுப்பதற்கு இந்த உலகிலே எத்தனையாே சாேதனைகள், துன்பங்கள் காத்திருக்கின்றன. ஒன்று மண், ஒன்று பாென், அடுத்தது பெண். இதை மட்டும் காமம் என்று மால் தூதன்(ஆஞ்சிநேயர்) உரைக்கவில்லை.* காமம் என்றால் இச்சை, ஆசை. *எதன் மீதாவது ஒரு மனிதனுக்கு தீவிர ஆசையும், பற்றும் வந்துவிட்டால், அது கிடைக்கும் வரை அவனுக்கு வேறு எதிலும் கவனம் செல்லாது.*

*ஒரு வேளை அது பலருக்கும் பயனுள்ள காரியமாக இருந்தாலும் பாதகமில்லை.* ஒன்றுமில்லாத, சுய நல லாப நாேக்கம் வந்து விட்டால் அதற்காக எல்லா செயலும், ஏன்? *தகாத செயலை செய்யக்கூட அவனை, அந்த இச்சை, அந்த ஆசை, காமம் இழுத்து செல்லும்.*

எனவே அப்பேற்பட்ட, *தனக்கும், தன்னை சேர்ந்தவர்களுக்கும் துன்பத்தை தரக் கூடிய அந்த காமத்தை ராம நாம ஜெபம் ஓட்டும் என்பதே பாெருள்.*

                  🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1



Monday 29 April 2019

அகத்தியர் வாக்கு - திரு விடைமருதூர்

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு"*

*கேள்வி : திருவிடைமருதூர் பற்றி?🙏(கும்பகாேணம் அருகில்)*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*சந்திரனின் சாபத்தை நீக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஸ்தலம். அதை, சந்திரனுக்காக இறைவன் உண்டாக்கினாரப்பா!* இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? யாம் கூறுகின்ற பரிகாரங்களை செய்யும் (எம்மை வணங்குகின்ற) சில பக்தர்கள் எண்ணுகிறார்கள். *நாம் அகஸ்த்யரை வணங்குகிறாேம். அவரிடம் கேட்டால், அவர், இன்னாெரு தெய்வத்தை வணங்க சாெல்கிறார்.* நான் அவ்வாறு செய்ய மாட்டேன்" என்று முரண்டு பிடிக்கின்ற கூட்டம், இன்றும் உண்டு. ஆனால், *அன்று என்ன நடந்தது தெரியுமா? தனக்கு ஏற்பட்ட இ்ன்னல் தீருவதற்கு "என்ன வழி, சுவாமி? என்று சந்திரன் வினவுகிறார். "சந்திரனே! பூமியிலே, காவிரிக்கரையில், இந்த இடத்தில் (திருவிடைமருதூர்) சென்று வணங்கு. தக்க காலத்தில் வந்து, யாம், உன் சாபத்தை நீக்குகிறோம்" என்றார் இறைவன்.*

இங்குதான் கவனிக்க வேண்டும்.

*சாபத்தை நீக்குகிறேன் என்று சாெல்பவர் யார்? சிவன். அங்கேயே நீக்க வேண்டியதுதானே? எதற்காக"இடை மருதூர் சென்று வணங்கு. பிறகு நீக்குகிறேன்" என்று சாெல்ல வேண்டும்? காரணம். அத்தனை காலம், சந்திரன், அந்த இடத்திலே, தவம் செய்ய வேண்டும் என்ற ஒரு கணக்கு இருக்கிறது.*

அதைப்பாேலவே, *"திருக்கழுக்குன்றம்(காஞ்சிபுரம் மாவட்டம்) சென்று தவம் செய்து, சாபத்தை நீக்கிக் காெள்" என்று, நந்திக்கு, இறைவன் சாெல்கிறார்.* நந்தி, தவம் செய்ய சென்ற உடனேயே, *இந்திரனை அழைத்து, "ஊர்வசியை அனுப்பி, நந்தியின் தவத்திற்கு இடையூறு செய்"என்கிறார். இதுதானப்பா இறைவனின் லீலை.*

எனவே, *சிவனே விரும்பி, சந்திரனுக்காக ஏற்படுத்திய ஸ்தலங்களுள், இடை மருதூரும்(திருவிடைமருதூர்)ஒன்று.*

                  🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

நிமித்த சாஸ்திரம் - சித்தர் கேள்வி பதில்

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிஷிகள் அடியவர் கானகத்தின்உள் சென்று சித்தர்களுடன் உரையாடல் செய்த பதிவு*

*அடியவர் கேள்வி*:—
நிமித்தம் என்பதன் பொருள் என்ன?

*சித்தன் பதில்*:—-
நிமித்தம்" என்கிற வார்த்தையின் அர்த்தமே, இந்த நேரம். அது நிகழ்காலம். அங்கிருந்து உடனடியான எதிர்காலத்தை ஒருவர் சரியாக கணிக்கலாம்.

*அடியவர்*:—-
இதற்கென பயிற்சி ஏதும் உண்டா?

*சித்தன் பதில்*:—
அதற்கென நிறைய சாதனை செய்ய வேண்டும். சிலருக்கு அந்த சாதனை, எளிய மூச்சு பயிற்சி எப்பொழுதும் செய்வதனால், எளிதாக கைவல்யமாகும். இங்கு கவனிக்கப் படவேண்டியது ஒன்று தான். அந்த பயிற்சியை சாதனை செய்பவர், தன் சித்தத்தை ஒரு பொழுதும் கலய விடுவதில்லை. தேவை இல்லாத அதிர்வுகளை, தன்னுள் புக விடுவதில்லை. சித்தம் நிலைத்தவருக்கு, எந்த வித பெரிய இரைச்சலான சூழ்நிலையும், இயல்பானதாக மாறிவிடும். எதுவும் அவரை பாதிப்பதில்லை. எனவே, தன் முழு கவனத்தையும் பஞ்ச பூதங்களின் தனிப்பட்ட சைகைகளின் மீதும், அல்லது பஞ்ச பூதகலவைகளின்  சலனங்கள் மீதும் செலுத்தி, அவைகள் உரைக்கும் பதிலை உணர்ந்து, உரைக்க முடியும்.

*அடியவர் கேள்வி*:—-
அடியேனுக்கு சில உதாரணங்கள் கூற வேண்டுகின்றேன் ?

*சித்தன் பதில்*:—-
உதாரணமாக, ஒரு சித்த வித்யார்த்தியை அல்லது சித்த மார்கத்தில் ஓரளவு முன்னேறிவிட்டவரிடம், ஒருவர் தனக்கு ஒரு வீடு அமையுமா? என்று கேட்கிற நேரத்தில், தன் சுற்றுப்புற சூழ்நிலையில் இயற்கை தெளிவுபடுத்துகிற சமிக்சைகளை உற்று பார்த்து, அவருக்கான பதிலை "ஆம் அல்லது இல்லை" என்று கூற முடியும். அது சரியாகவும் இருக்கும். எப்படி? என்று எதிர் கேள்வி கேட்டேன். அந்த கேள்வியை உள்வாங்கி, உணர்ந்து, ஒரு நிமிடம் கண் மூடி திறக்கும் பொழுது, அவர் ஒரு பூ, செடியிலிருந்து விழுவதை கண்டால், " ஆம்" என்பார். அல்லேல், அக்னியை கண்டால் "இல்லை" என்பார். "மண்" விழுந்தால் நஷ்டம் வரும், பசு நடந்தால், "இறை அருளினால்" உடன் அமையும், என்றெல்லாம் அர்த்தம் உண்டு. இப்படி, பஞ்ச பூதங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகிற, சமிக்சைகளை, விரிவாக பார்த்து பழக வேண்டும்.

*அடியவர் கேள்வி*:—-
இப்படி கூறினால் காலத்தை மாற்றுவதாகும் இல்லையா?

*சித்தன் பதில்*:—-
கேள்வி கேட்கும் நேரம் யார் ஆட்சி, வந்தவரின் கர்மா, என்றெல்லாம் உணர வேண்டும். அப்படி *பார்ப்பவர் கூட என்னதான் பெரியவராக இருந்தாலும், மனித ஜென்மம் எடுத்து நிற்பதினால், அருகில் உள்ள கேட்டவரின் எதிர் காலத்தை பார்த்துவிட்டபடியால், சாட்சி பூதமாக இருக்கும் "காலம்" நடக்க வேண்டியதை மாற்ற நினைக்கும்.* அதனால் தான், நிமித்தம், ப்ரச்னம், ஜோதிடம் போன்றவற்றை உபயோகித்து பலன் சொல்பவர்கள், பலன் கூறியவுடன்,  ஒரு சில பரிகாரங்களை தொடர்ந்து செய்யச் சொல்வார்கள். இதன் தாத்பர்யம் என்ன வென்றால், சாட்சி பூதமான நாராயணன் (காலம்), அந்த பலனை மாற்றிவிடக்கூடாது எனவும், மேலும் கேட்டவர் ஒரு நல்ல கர்மாவினால் (பரிகாரம்) ஒரு புண்ணியத்தை சேர்த்துக்கொண்டு, அந்த பலனை அடையட்டுமே என்கிற நல்ல எண்ணத்தாலும் தான்.

சித்தன் பதில் தொடரும்....

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*


👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


Sunday 28 April 2019

அகத்தியர் வாக்கு - தருமம் செய்வதைப்பற்றி

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு":*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*கேள்வி : தர்மம் செய்ய வேண்டும் என்று சாெல்கிறீர்கள்? யாருக்கு தர்மம் செய்ய வேண்டும்? இல்லாதவர்களுக்கா? நம் உடன் பிறந்தவர்களுக்கா? உறவினர்களுக்கா?🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

இறைவனின் கருணையைக் காெண்டு தர்மம் எனப்படும் வார்த்தையை நாங்கள் பயன்படுத்தும்பாெழுது மிக மிக நுணுக்கமாக கவனிக்க வேண்டும். *எடுத்த எடுப்பிலேயே ஒரு மனிதனுக்கு தர்மத்தின் அனைத்து சூட்சுமத்தையும் கூறிவிட இயலாது.* பாெதுவாக கூறுகிறோம். *எனவே செய்ய செய்யத்தான் தர்மத்தின் அனைத்து நுணுக்கங்களும் ஒரு மனிதனுக்கு புரிபடத் துவங்கும்.* இந்த நிலையில் நாங்கள் கூறுவது என்னவென்றால் *யாருக்கு வேண்டுமானாலும் அவர்களின் தேவையறிந்து எந்த நிலையிலும் காலம் பார்க்காமல், திதி பார்க்காமல், நக்ஷத்திரம் பார்க்காமல், இரவு, பகல் பார்க்காமல், கிழமை பார்க்காமல், தாராளமாக தேவைப்படும் மனிதர்களுக்கு தேவைப்படும் உதவியை தேவைப்படும் தருணத்தில் தரலாம். யாருக்கு தந்தாலும் நன்மைதான்.*

*இருந்தாலும் இரத்த சம்பந்தமான உறவுகளுக்கு தருவது கட்டாயக் கடமை. அதை தர்மத்தில் நாங்கள் சேர்க்க மாட்டாேம். இரத்த தாெடர்பு இல்லாதவர்களுக்கும் பிரதிபலன் எதிர்பாராமல் செய்வதைதான் நாங்கள் தர்மத்தில் சேர்க்கிறாேம்.* அதே தருணம் ஒருவனுக்கு ஒரு உதவியை, தர்மத்தை செய்யும்பாெழுது "அவன் அதனை முறைக்கேடாக பயன்படுத்துகிறான். எப்படி இதனை நாங்கள் ஏற்றுக் காெள்வது?" என்றால் ஒருமுறை செய்து பார்த்துவிட்டு 'இது ஏற்புடையது இல்லை' என்று மனதிலே பட்டுவிட்டால் நிறுத்திக் காெள்ளலாம். நாங்கள் அதை குறை கூறவில்லை. ஆனால் *ஒவ்வாெரு மனிதனையும் பார்த்து 'இந்த உதவியை இவன் சரியாக பயன்படுத்துவானா? என்று ஆராய்ந்து காெண்டே பாேனால் கட்டாயம் தர்மம் செய்ய இயலாது.*

*இறைவன் இவ்வாறு பார்த்து செய்தால் இங்கே மனிதனுக்கு பஞ்சபூதங்கள் கிட்டாது என்பதை புரிந்து காெள்ள வேண்டும்.* இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? *அவர்களுக்கு மட்டும் காற்று வீசட்டும்.* இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? *அவர்களுக்கு மட்டும் சூரிய ஔி கிட்டட்டும்.* இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? *அவர்களுக்கு மட்டும் நீர் கிடைக்கட்டும்.* இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? *அவர்களுக்கு மட்டும் நிலவாெளி கிடைக்கட்டும் என்று இறைவன் ஒருபாெழுதும் சிந்திப்பதில்லை. செயல்படுவதில்லை.* அந்த இறைவனின் மிகப்பெரிய பராக்ரம சிந்தனைக்கு ஒவ்வாெரு மனிதனையும் நாங்கள் அழைக்கிறாேம். *அந்த உயர்ந்த உச்ச நிலையிலிருந்து அள்ளி, அள்ளி வழங்குவதே எம் வழியில் வருபவர்களுக்கு அழகாகும்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


விக்னேஸ்வரர்

மங்களாரம்பம் - பெரிய இடத்துப் பிள்ளை

முருகனும் மூத்தோனும்
தாத்தா, அப்பா, அம்மா, மாமா எல்லாரும் ரொம்பவும் பெரியவர்களாக இருக்கிறார்கள்.அது மட்டுமில்லை. கூடப் பிறந்தவரும் ரொம்ப மஹிமையுள்ளவர். கூடப் பிறந்தவரென்றால் இவருக்கு அண்ணா கிடையாது. இவர்தான் "மூத்த பிள்ளையார் மும்மணிக்கோவை" என்றே இவர்மேல் ஒரு ஸ்தோத்ரம் இருக்கிறது. ப்ரபஞ்சத்துக்கே முதல் குழந்தை அவர்."ஜயேஷ்ட ராஜா" என்பது வேதமே அவருக்குக் கொடுத்திருக்கிற பெயர். கணபதிதான் எல்லாருக்கும் அண்ணா. அவருக்குத் தம்பிதான் உண்டு.
தமையன் பெரிய ஆஸாமியாயிருந்தால் அவன் பெயரை வைத்துக்கொண்டே தம்பி தடபுடல் பண்னுவதுண்டு இப்படியே தம்பிக்காரன் பிரமுகனாயிருந்தாலும், தனக்காக யோக்யதையில்லாத அண்ணன்காரன் அதைக்காட்டி அதிகாரம் பண்ணவதுண்டு. இங்கேயோ ஈச்வர புத்ரர்கள் இரண்டு பேருமே சக்தி, ஸாமர்த்யங்களிலும் அநுக்ரஹத்திலும் ரொம்பவும் உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் பிள்ளையாருக்கு உறவுகளைச் சொல்லிப் பெருமை காட்டும்போது தம்பியையும் சொல்ல வேண்டியிருக்கிறது.
பிள்ளையாருக்கு விசேஷமாகப் பதினாறு பெயர்கள் உண்டு. ஷோடச நாமாக்கள் என்று சொல்வார்கள். (ஷோடசம் என்றால் பதினாறு) அஷ்டோத்தர (சத) ம் சொல்லிப் பூஜை பண்ண முடியாவிட்டாலும் இந்தப் பதினாறு நாமாக்களையாவது சொல்ல வேண்டும்.
ஸுமுகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்மக :!
ஸம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:!!
தூமகேதுர் கணாத்யஷோ பாலசந்த்ரோ கஜாநந:!
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸகந்தபூர்வஜ:!!
கடைசிப் பெயர் 'ஸ்கந்தபூர்வஜர்'-அதாவது 'ஸ்கந்தனுக்கு முன்னாடிப் பிறந்தவர்.' தம்பியை வைத்துத் தமையனாருக்குப் பெருமை கொடுக்கும் பெயர்! இப்படி இவருடைய பல உறவுக்காரர்களைப் பார்த்தாலும் இவர் ரொம்ப பெரிய இடத்துப் பிள்ளை என்று தெரியும். அதனால் அந்தப் பிள்ளையை நாம் மனங் குளிர்ந்திருக்கும் படியாகப் பண்ணவேண்டும். அதற்குக் கோபம் உண்டாகும்படியாக எதுவும் பண்ணாமல் ஜாக்கிரதையாயிருக்கவேண்டும். மூவுலகத்தின் மூத்த குழந்தையுடைய ப்ரீதியை நாம் முக்யமாக ஸம்பாதித்துவிட வேண்டும். நல்ல மனஸ், அருள் உள்ளம், இரக்க குணம் உள்ள அவர் எளிதிலே த்ருப்தி கொண்டுவிடுவார். எப்போதுமே ஆனந்தமாயிருக்கும் அவரை நாமும் கொஞ்சம் குஷிப்படுத்தி விட்டால், அவருடைய மாதா பிதாக்களான பார்வதீ பரமேச்வரர்களின் மனஸையும் குளிரப்பண்ணி அவர்களிடமிருந்து ஸகல நலன்களையும் பெற்றுவிடலாம்.
பிற தெய்வங்களும் போற்றும் பிள்ளையார்
மரியாதைக்குரிய குழந்தை
பெரிய இடத்துப் பிள்ளை என்பதாலேயே, 'நாம் நமக்கென்று ஒரு யோக்யதையும் ஸம்பாதிக்கொள்ள வேண்டியதில்லை. நம்முடைய பெரிய ஸம்பந்தத்தைக் காட்டியே ஊரை ஆட்டி வைத்துக்கொண்டிருக்கலாம்' என்று இருப்பவர்கள் உண்டு. அநேகம் பெரிய மநுஷ்யரகத்துப் பசங்கள் தறுதலைகளாகவோ, அசட்டுப் பிசட்டென்றோ இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் இந்தப் பெரிய இடங்களுக்கெல்லாம் உச்சியிலுள்ள மஹா பெரிய இடத்துப் பிள்ளை, 'உச்சிப்பிள்ளையார்' என்கிறோமே, அவர் எப்படியிருக்கிறார்? தேஹபலமா, புத்திக் கூர்மையா, கார்ய சக்தியா, அன்புள்ளமா எல்லாவற்றிலும் தமக்கு மேல் யாருமில்லை என்று இருக்கிறார். பெரிய இடத்துப் பிள்ளை என்பதால் மாத்திரம் அவருக்குப் பெருமையில்லை. அவருக்காகவே அவருக்குப் பெருமை என்பது "பிள்ளை" க்கு "யார்" போட்டு அவரைப் "பிள்ளையார்" என்று மிகவும் மரியாதையாகச் சொல்வதிலிருந்தே தெரியும்.
பொதுவாகச் தாய், தகப்பன், பாட்டன், பாட்டி, தமையன், தமக்கை ஆகிய பெரியவர்களைத்தான் மரியாதையாகத் தாயார், தகப்பனார், பாட்டனார், பாட்டியார், தமையனார், தமக்கையார் என்றெல்லாம் சொல்வது வழக்கம். பிள்ளைக்கு அப்படி மரியாதை விகுதி சேர்த்துச் சொல்கிற வழக்கம் எங்கேயும் கிடையாது. இதற்கு மாறுதலாக இவர் ஒருவர் விஷயத்தில் மட்டும் "பிள்ளை" என்காமல் "பிள்ளையார்" என்றே சொல்கிறோம்
முழுமுதற் கடவுளாக பிள்ளையார் ப்ரிதியை நாம் பெற்றுவிட்டால் அவரிடம் மிகவும்
அன்புகொண்ட பார்வதி பரமேச்வரர்களின். அநுக்ரஹத்தைப் பெற்று விடலாமென்றேன். நாம் பொதுவாக ஈச்வரனையும் அம்பாளையும் முக்யமாகக் கொண்டு வழிபடுபவர்களாதலால், அவர்களுடைய செல்லப் பிள்ளையை நாம் ஸந்தோஷப்படுத்துவதாலேயே அவர்களிடமிருந்து எல்லா அநுக்ரஹமும் பெற்விடலாமென்பதற்காச் சொன்னேன். இதனால் அநுக்ரஹ சக்தி அவர்களுக்குத்தான் உண்டு, பிள்ளையாருக்குக் கிடையாது என்றதாக ஆகாது. அப்பாவும் அம்மாவுந்தான் அருள் செய்யவேண்டும் என்றில்லாமல் அவரே எதையும் அருள் வல்லவர்தான்.
ஈச்வரனுக்கும் அம்பாளுக்கும் புத்ரர் என்பதற்காக இல்லாமல், அவரே முழுமுதற் கடவுள் என்று உபாஸிக்கிறவர்கள் இம்மை மறுமை நலன்கள் எல்லாவற்றையும் அவரே அநுக்ரஹிப்பாரென்று கொண்டிருக்கிறார்கள். கணபதியே பரதெய்வம் என்று உபாஸிக்கிற இவர்களுக்கு 'காணபத்யர்கள்' என்று பெயர். தங்களுடைய உபாஸனா மூர்த்தியின் உத்கர்ஷம் (உயர்வு) பற்றி அவர்கள் பிற உபாஸகர்களிடம் சொல்லும் ஒன்றை எவரும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். "சிவனையோ, அம்பாளையோ, முருகனையோ, விஷ்ணுவையோ பரதெய்வமாகப் பூஜிக்கிற நீங்களும் உங்கள் ஸ்வாமியைப் பூஜை பண்ண ஆரம்பிக்கும்போது முதலில் 'சுக்கலாம்பரதரம்' குட்டிக் கொணடு, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து
எங்கள் ஸ்வாமியை வேண்டிக் கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது? பிள்ளையாரையே பரமாத்மாவாகப் பூஜை பண்ணும் நாங்கள் உங்கள் ஸ்வாமிகளில் எவரையும் இப்படி வேண்டிக் கொள்வதில்லையே!" என்று அவர்கள் சொல்வார்கள்.
விஷ்வக்ஸேனர், தும்பிக்கையாழ்வார் என்ற பெயர்களில் வைஷ்ணவர்கள் முதல் பூஜை செய்வதும் விக்நேச்வரரின் ஒரு அவஸரத்துக்குத்தான் (கோலத்துக்குத்தான்) என்று சொல்லலாம்.தாமே அக்ர (முதல்) பூஜை பெறுகிற உயர்வோடு விளங்குபவர் பிள்ளையார். "இவரை பற்றிய ச்லோகங்களில் ஈச்வரன், அம்பாள், விஷ்ணு, முருகன் முதலியவர்களைப்பற்றி வருவதால், அந்த ஸ்வாமிகளாலேயே இவருக்குப் பெருமை என்று நினைத்தால் அது ஸரியே இல்லை.அந்த ஸ்வாமிகள் எல்லாருங்கூட ஏதாவது ஒரு ஸந்தர்பத்தில் இவர் தயவை நாடித்தான் கார்ய ஸித்தி அடைந்திருக்கிறார்கள்" என்று கணபதி உபாஸகர்கள் புராணங்களைக் காட்டுவார்கள்.
தெய்வங்களில் உசத்தி தாழ்த்தி இல்லை; இல்லவே இல்லைதான். ஆனாலும் ஒரே பரமாத்மா லீலானந்தத்துக்காகவும், ஜனங்களின் விதவிதமான மனப்போக்குகளில் ஒவ்வொனறுக்கும் பிடித்த மாதிரியும், பல ரூபங்களில் வருகிறபோது, அவரவருக்கும் தங்கள் மூர்த்தியும் பக்தி ஒருமுகப்படுவதற்காக ஒவ்வொரு மூர்த்தியும் மற்றவற்றைச் சில ஸந்தர்பங்களில் ஜயித்ததாகப் புராணங்களில் பார்க்கிறோம். ஒவ்வொரு மூர்த்தியும் இப்படி மற்றவற்றை ஜயித்தது என்பதாலேயே ஒவ்வொன்றும் மற்றவற்றிடம் தோற்றும்தான் இருக்க வேண்டுமென்றாகிறதல்லவா? இப்படி ஒவ்வொரு தெய்வமும் சில ஸந்தர்பத்தில் ஜயித்து, சில ஸந்தர்பத்தில் தோற்றுப் போவதில் ஜயித்தவைகளை மட்டுமே அந்தந்த தெய்வத்தின் பக்தர்களும் எடுத்துக் கொண்டு அதனிடம் தங்கள் பக்தியை
வலுவாக்கிக் கொள்கிறார்கள். இதில் பிள்ளையார் தோற்றுப் போனதாக மட்டும் ஒரு
கதையும் ப்ரஸித்தமாயிருக்கவில்லை. ஆனால் மற்ற ஸ்வாமிகள் இவரைப் பூஜித்ததற்கு நிறையக் கதைகள் இருக்கின்றன.
தந்தை பூஜித்த தனயர்
தகப்பனாரான ஈச்வரனையே எடுத்துக்கொள்ளலாம். அவர் த்ரபுர ஸம்ஹாரத்துக்காகப் புறப்படுகிறபோது பிள்ளையை - அவர் மரியாதை கொடுக்கப்பட்ட வேண்டிய பிள்ளையார் என்பதை மறந்து - ஸ்மரிக்காமலே கிளம்பினார். பிள்ளையார் தமக்கு வேண்டிய due -வைப் பெறாமல் விடமாட்டார்! 'பிள்ளையாருக்கு முதல் பூஜை' என்பது தேவதைகள் எல்லோருமாகத் தீர்மானித்தது.அப்படியிருக்க, ஒரு ரெஸொல்யூஷன் ஏகமனதாகப் பாஸ் ஆகிச் சட்டமாய் விட்டதென்றால் அதைத் தகப்பனாராகத்தான் இருக்கட்டும், அந்தத் தகப்பனார் ஸர்வ ஜ்கத்துக்கும் ஈச்வரராகத்தான் இருக்கட்டும், மீறினால் குற்றம் தானே? தப்புச் செய்தவரைப் பிளளையார் சும்மா விடமாட்டார்.
ஆகையால் த்ரிபுராஸுரர்களை நோக்கி ஈச்வரனின் ரதம் போய்க்கொண்டிருக்கும் வழியில் அதன் அச்சு முறிந்து போகும்படியாகப் பிள்ளையார் பண்ணிவிட்டார். ரதம் நின்றுபோய்விட்டது. உடனே ஈச்வரனுக்குப் புரிந்துவிட்டது. 'ரொம்பவும் பெரியவனாகையால் நமக்குச் சட்டம் இல்லை என்று இருப்பது தப்பு. ரொம்பப் பெரியவனாயிருப்பதாலேயே நாம் தான் லோகத்துக்கெல்லாம் உதாரணமாக நடந்து காட்ட வேண்டும். அதன் படி சட்டத்துக்கு ரொம்பவும் அடங்கிப்போக வேண்டும். சட்டம் என்று வருகிறபோது அப்பா பிள்ளை முதலான உறவுகளுக்கு இடமில்லை, என்று பரமேஸ்வரன் நினைத்தார்.
உடனே, கொஞ்சங்கூட ஸ்தானம் பார்க்காமல் பிள்ளையாருக்குப் பூஜை பண்ணினார். (இன்னொரு ஸந்தர்ப்பத்தில் இளைய பிள்ளையிடமும் கீழ்ப்படிந்து ப்ரணவோபதேசம் வாங்கிக் கொண்டிருக்கிறார்!) பிள்ளையாரும் அப்பா கொஞ்சம் நினைத்தவுடனேயே ஒடிவந்து விக்னத்தை அகற்றிவிட்டார். அதற்கப்புறம் ரதம் ஒடி, முடிவில் த்ரிபுராந்தகர்' என்று பெரிய பெயர் வாங்கும்படியாக ஈச்வரன் அந்த அஸுரர்களை ஜ்யித்தார். செங்கல்பட்டுக்கும் திண்டிவனத்துக்கும் நடுவில் "அச்சரப்பாக்கம்" என்று இருக்கிறதே, அந்த ஊர்தான் ஈச்வரனுடைய ரதத்தின் அச்சு இற்றுப்போன "அச்சிறுப்பாக்கம்"என்று சொல்வார்கள்.
ஸமீபகால ஸம்பவத்தில் புராண நிருபணம்
அப்படிச் சொல்வது நிஜந்தானென்று நிரூப்பிக்கிறதாக ஸமீபத்தில் ஒன்று நடந்தது. ராமேச்வரத்தில் சங்கர மண்டபம் கட்டிக்கொண்டிருந்தோம். அதில் ப்ரதிஷ்டை செய்யவேண்டிய ஆசார்யாள் பிம்பத்தை லாரியில் எடுத்துக் கொண்டு போயிற்று. ஜெய்ப்பூரிலிருந்து ஸலவைக்கல் தருவித்து காஞ்சிபுரத்தில் ஆசார்யாளுக்கும், அவருடைய நாலு சிஷ்யர்களுக்கும் பெரிசு பெரிசாக பிம்பம் பண்ணி அங்கேயிருந்து ராமேச்வரத்துக்கு லாரியில் எடுத்துக் கொண்டு போயிற்று. அப்போது வழியில் ஸரியாக இந்த அச்சிறுப்பாக்கத்திலேயே லாரி Break down ஆகி நின்று விட்டது! அப்புறம் பிள்ளையாரக்கு நூற்றியெட்டுத் தேங்காய் உடைத்து விட்டே, லாரியைப் பழுதுபார்த்துக் கிளப்பிற்று. அதற்குப் பிற்பாடு எந்த
விக்னமுமில்லாமல் கும்பாபிஷேகம், ப்ரதிஷ்டை எல்லாம் ஜாம்ஜாமென்று நடந்தது. இந்த விக்னமும்கூட அநுக்ரஹம் என்று தான் தோன்றிற்று. தாம் கைலாஸ சங்கரனேதான் என்று நமக்கு உறுதிப்படுத்துவதற்காகவே நம்முடைய சங்கரபகவவத் பாதாள் இங்கே தம்முடைய நவீனகால ரத அச்சான லாரி ஆக்ஸிலை முறித்துக்கொண்டிருக்கிறரென்று தோன்றிற்று.
அன்னைக்கு உதவிய ஜங்கரன்
அம்பாளும் விக்நேச்வரரை உத்பவிக்கப்பண்ணி அவர் ஸஹாயத்திலே ஜயம் பெற்றாளென்று லலிதோபாக்யானத்தில் வருகிறது. லலிதாம்பிகை பண்டாஸுரனோடு யுத்தம் செய்த போது சக்திஸேனை என்பதாக முழுக்கவும் தேவஸ்த்ரீகளையே கொண்ட படையோடு போனாள். போய்ப் படைவீடாக ஒரு அக்னிக்கோட்டை கட்டப்பண்ணி அதற்குள் ஸேனா ஸழூஹத்தோடுகூட முகாம் போட்டிருந்தாள். பண்டா ஸுரனுக்கு மந்த்ரபலம் நிறைய உள்ள விசுக்ரன் என்ற ஒரு அஸிஸ்டன்ட் இருந்தான். அவன் என்ன பண்ணினானென்றால் விக்ன யந்த்ரம் என்ற ஒன்றைப் பண்ணி அதை அக்னிக் கோட்டைக்குள்ளேபோய் அம்பாளின் கூடாரத்தில் விழும் படியாக MCP எறிந்தான். அந்த யந்திரத்தின் தன்மை என்னவென்றால், இந்த நாளில் Psychological warfare என்கிறார்களே, அப்படி அது எதிராளியை பௌதிகமாகத் தாக்காமல் அவர்களுடைய மனஸையே சத்ருபக்ஷமாக மாற்றிவிடும், இப்போது propaganda வினால் (பிரசாரத்தினால்) கொஞ்சம் கொஞ்சமாக மனஸை மாற்றுகிற மாதிரியில்லாமல். மந்திரசக்தி வாய்ந்த யந்த்ரமாதலால் அது உடனேயே மன மாறுதலை உண்டாக்கிவிடும்,
விக்ன யந்த்ரம் வந்து விழுந்தவுடன் அதன் மயக்கும் சக்தியால் சக்திஸேனைகளின் புத்தியே மாறிவிட்டது."எதற்காக அஸுரர்களை நாம் கொல்லணும்? இது ஜீவ ஹிம்ஸைதானே? அம்பாளுக்கு அவர்களிடம் விரோதமென்றால் நமக்கென்ன வந்தது? இன்னம் அடி அஸ்திவாரத்துக்கே போனால் எதற்காக இந்த அம்பாளுக்கு அடங்கி நாம் வேலைக்காரப் பிழைப்புப் பிழைக்கணும்? நம்மால்தான் அவளுக்கு பலம் என்பதால்தானே நம்மைச் சேர்த்துத் திரட்டிக் கொண்டு வந்திருக்கிறாள்? இத்தனை நாளாக நாம் என்னவோ புத்தியில்லாமல் அவள்தான் நமக்கெல்லாம் மேலே, அவளுக்கே நம்மை அடக்கி ஆள்கிற பலம் இருக்கிறது என்றெல்லாம் நினைத்துக்கொண்டு ஏவல் செய்து விட்டோம். இப்போது நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் ஆயுதங்களைப் போட்டு விட்டு அப்படியே ஸ்ட்ரைக் பண்ணிவிடவேண்டும் யஜமானி-பணியாளி என்கிற கதை இனிமே பலிக்காது. எல்லாரும் ஸமம்தான்" என்றெல்லாம் அந்த ஸேனைகள் ட்ரேட் யூணியனிஸம், கம்யூனிஸம் எல்லாம் பேச ஆரம்பித்து விட்டன.
"வேர்க்க விருவிருத்துக்கொண்டு, அடியும் குத்தும் பட்டுக் கொண்டு இனிமேலே இவளுக்காக யுத்தம் செய்ய வேண்டியதில்லை. நாம் பாட்டுக்கு நிர்விசாரமாகத் தூங்கலாம். அக்னிக் கோட்டைதான் இருக்கவே இருக்கிறது. அதைத் தாண்டி யாரும் வந்து நம் தூக்கத்தைக் கெடுக்க முடியாது" என்று சொல்லிக்கொண்டு ஸேனா ஸமூஹம் முழுக்கப்படுத்திக்கொண்டு 'கொர் கொர்' என்று குறட்டை விட
ஆரம்பித்துவிட்டன. புத்தியை முதலில் மாறாட்டமாகக் கலக்கிவிட்டு, அப்புறம் அது ஸ்தம்பித்துச் செயலிழந்து தூங்கும்படிச் செய்யும் சக்தி விக்ன யந்த்ரத்துக்கு இருந்தால் இப்படி நடந்தது. ஜ்ரும்பணாஸ்த்ரம் என்று ஒன்று உண்டு. அதை போட்டுவிட்டால் அதற்கு ஆளாகிறவர்கள் கொட்டாவி கொட்டாவியாக விட்டுக்கொண்டு அசந்து விழுந்துவிடுவார்கள். 'ஜ்ரும்பணம்' என்றால் 'கொட்டாவி விடுவது'
நவீன கால ஆயுதங்களைவிட பயங்கரமான விசித்ரமான ஆயுதங்தளை மந்த்ர சக்தியாலேயே ஆதிகாலத்தில் செய்திருக்கிறார்களென்று புராணத்திலுள்ள விவரங்களைப் பார்த்தால் தெரியும். ப்ரஹ்மாஸ்த்ரம், நாரயணாஸ்த்ரம், பாசுபதாஸ்த்ரம் முதலியவற்றின் சக்தியைப் பற்றிப் படிக்கும்போது ஆடம் பாம் (ப்) ,ஹைட்ரஜன் பாம் (ப்) எல்லாம் ஒன்றுமேயில்லை என்று தோன்றும். இப்போது இந்த பாம் (ப்) களின் ரேடியேஷனால் கர்ப்பசேசேத மேற்படுகிறது என்கிறார்களென்றால், அந்தக் காலத்தில் அச்வத்தாமா போட்ட அபாண்டவாஸ்த்ரம் உத்தரையின் கர்பபத்திலிருந்த சிசுவைப் பாதித்திருக்கிறது! கிருஷ்ண பரமாத்மாதான் அதை ரக்ஷித்துக் கொடுத்தார். அம்பாள் தன்னுடைய படைகள் ஸ்ட்ரைக் பண்ணிவிட்டு ஆனாலும் நல்லவேளையாக sabbotage (நாசவேலை) செய்யாமல், அமர்க்களமாய் டெமான்ட்ரேஷன்கூடச் செய்யாமல் அததுகளும் நன்றாகத் தூங்கிக்கொண்டு கிடப்பதைப் பார்த்தாள். ஞானஸ்வரூபிணியாக இருக்கப்பட்ட அவளுக்குத் தெரியாததா? இதெல்லாமும் அவள் லீலைதான்!
விக்நேச்வரரின் ப்ரபாவம் வெளிப்படவேண்டுமென்றுதான் அவளே இப்படி ஒரு விக்னத்தை விசுக்ரன் என்ற வ்யாஜத்தில் உண்டாக்கிக் கொண்டிருந்தாள். சிவ - சக்திகளாக எப்போதும் இருப்பவர்களில் சக்தியே பண்டாஸுரனை வதைப்பதற்காக இப்போது லலிதாம்பிகையாக ஞானாக்னி குண்டத்திலிருந்து தோன்றியிருந்தாள். கல்யாணமாகாதா கன்னியாக இவள் யுத்தத்துக்குப் போகக் கூடாது என்பதனால் இவளை விவாஹம் செய்துகொள்வதற் கூடாது என்பதனால் இவளை விவாஹம் செய்துகொள்வதற்காக சிவனும் காமேச்வரர் என்ற ரூபத்தில் வந்தார். கல்யாணம் ஆயிற்று. காமச்வர - காமேச்வரி என்று அந்த தம்பதியைச் சொல்வது வழக்கம். அந்த காமேச்வரிதான் நம்முடைய காமாக்ஷியாக இருப்பது. அவளுடைய ஸ்தானம்தான் காமகோடி பீடம்.
கல்யாணமானவுடன் பண்டாஸுர வதத்துக்காகப் புறப்பட்ட அம்பாள் ஈச்வரனைக் காமேச்வரனாக வரவழைத்தது மட்டும் போதாது, தன்னுடைய அருமைக் குழந்தை கணபதியையும் இந்த லலிதாம்பிகை ஆவிர்பாவத்தில் வரவழைத்து அவன் பெருமையை ப்ரகடனப்படுத்த வேண்டுமென்று நினைத்தாள். அதற்கு வாய்ப்பாகவே இப்போது சக்தி ஸேனை விக்ன யந்த்ரத்தால் தூங்கிக்கொண்டு கிடந்தது. உடனே காமேச்வரன் மேல் தன் ப்ரேம கடாக்ஷத்தைச் செலுத்தி மந்தஸ்மிதம் (புன்னகை) செய்தாள் அம்பாள். அவர் முகத்திலும்
மந்தஹாஸம் படர்ந்தது. இப்படி ஆதி தம்பதியின் பரஸ்பர அன்பில் உண்டான சிரிப்பின் காந்திஸமூஹம் ஒன்று சேர்ந்ததோ இல்லையோ, அதிலிருந்தே மஹா கணபதி உத்பவித்துவிட்டார்! ஆனந்த ஸ்வருபமாக, எப்போழுதும் ப்ரஸன்ன முகமாக, ஸுமுகராக இருக்கிற அவர் ரொம்பவும் பொருத்தமாக, ஸாக்ஷாத்
அம்பாள் ஈச்வரன் ஆகியவர்களின் முகத்திலிருந்து பெருகுகிர சிரிப்பு ஒன்று சேர்ந்ததிலிருநது உத்பவித்துவிட்டார்.
பிள்ளையாரின் பல ஆவிர்பாவங்களில் இது லலிதோபாக்யானத்தில் வருவது லலிதோபாக்யானம் என்பது பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான ப்ரஹ்மாண்ட புராணத்தில் வருகிறது. ஈச்வரனின் முகத்தைப் பார்த்துச் சிரித்தே அம்பாள் பிள்ளையாரை அவதரிக்கச் செய்ததை லலிதா ஸஹஸ்ர நாமத்தில் "காமேச்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேச்வரா" என்று சொல்லியிருக்கிறதது. எந்த தேவவதையானாலும் தன் சக்தியெல்லாம் எவளருத்தியின் அம்சலேசம்தானே அப்பேர்ப்பட்ட பராசக்தி, தானே விக்ன யந்திரத்தைச் சக்தியற்றதாகச் செய்திருக்கலாமாயினும், விக்ன நிவாரணத்துக்காகவே ஒரு விக்நேச்வரனை ஏற்படுத்தியிருக்கும்போது வர் ஸஹாயத்தினால்தான் இதைச் செய்ததாக இருக்கவேண்டுமென்பதத்காக இப்படி லீலை செய்தாள். அவள் இப்படி ஒரு சட்டத்துக்கு அடங்கியிருந்ததற்கேற்ப, அவளுடைய கடாக்ஷத்திலிருந்து உண்டான விக்நேச்வரரும், 'ஸஹாயத்தைத்தானே ஆனானப்பட்ட பராசக்தியும் நாடவேண்டியிருக்கிறது? என்று கர்வப்படாமல் அவளை நமஸ்காரம் பண்ணினார். பணிவோடு அவளோடு ஆசிர்வாதத்தை வாங்கிக்கொண்டே விக்ன யந்த்ரத்தை அழிப்பதற்காகப் புறப்பட்டார். அக்னிக் கோட்டையின் ஒரு மூலையில் யந்த்ரம் புதைந்து கிடந்தது. பிள்ளையார் அதைக் கண்டுபிடித்து, தந்தத்தால் குத்தித் தவிடு பொடியாக்கினார். உடனே தேவி கணங்கள் தூக்கம் கலைந்து எழுந்தன. அவற்றுக்கு ஏற்பட்டிருந்த மனோ பேதமும் மாறி, அம்பிகையிடம் பழையபடி பக்தி விச்வாஸம் கொண்டன. முன்னைவிட உத்ஸாஹமாக யுத்தம் செய்தன. முடிவில் பண்டாஸுரன் போனான்.

Saturday 27 April 2019

நாடி சொல்லும் கதைகள்

செய்வினையை பற்றி அகத்தியர் பெருமான் கூறும்போது அப்படி ஒன்று இருப்பதாகவே நம்பவேண்டாம் என்று ஆணித்தரமாக சொல்கிறார். நாம் ஒரு காலத்தில் தெரிந்தோ, தெரியாமல் செய்கிற விஷயங்கள் தான் பின்னர் ஒரு காலத்தில் "செய்த வினையாக" ஏதேனும் ஒரு ரூபத்தில் நம்மை வந்து வருத்தும்.  ஒருவர் அறியாமல் வாங்கி வைத்துக்கொண்ட  சில பொருட்கள் கூட குடும்பத்தில் சிதைவை உருவாக்கும். பூசை அறையில் வைக்கப்பட்ட சேதமான லிங்கமும், சாலிக்ராமமும் எப்படி ஒரு குடும்பத்தை பாதித்து உருக்குலைத்தது என்பதை இன்றைய தொகுப்பில் பார்ப்போம்.

அகத்தியர் வந்து நாடியில் உரைப்பதினால், வாழ்க்கையில் எது சரி, எது தவறு என்று தெளிவாக புரிந்துகொள்கிற ஒரு பாடத்தை, தினமும், ஏதேனும் ஒரு நபருக்கு அருளும் பொழுது என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.

அப்படி அன்று நாடி படிக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு ஒரு பெண்மணி வந்திருந்தார்.

"செய்வினையை அகத்தியர் நம்புவதில்லை என்று சொல்கிறீர்கள்.  ஆனால் அது இருக்கத்தான் செய்கிறது.  இதை நான் நிரூபித்துக் காட்டுகிறேன்.  என் கூட என் வீட்டுக்கு வர முடியுமா?" என்று அந்தப் பெண்மணி என்னிடம் கேட்டாள்.

"அகத்தியர் உத்தரவு கொடுத்தால் வருகிறேன்" என்று நான் சொன்னேன்.

"இல்லை.  நீங்கள் கண்டிப்பாக வந்து தான் ஆக வேண்டும்.  நீங்கள் வந்தால் என் முப்பது ஆண்டு கால கஷ்டம் விலகிவிடும் என்று நம்புகிறேன்"  என்று மீண்டும் பிடிவாதம் பிடித்தாள் அந்த பெண்மணி.

"நான் பகவான் இல்லை.  சித்தர் வழிகாட்டி அவ்வளவு தான்.  எனவே என்னை தயவுசெய்து உங்கள் வீட்டிற்கு வரச்சொல்லி வற்புறுத்த வேண்டாம்.  ஆனால், அதே சமயம் உங்களுக்கு அகத்தியர் நாடி மூலம் என்ன வழிகாட்ட முடியுமோ அதை இப்போதே காட்டுகிறேன்" என்றேன்.

அந்த பெண்மணிக்கு நான் சொன்னதில் வருத்தம் ஏற்பட்டிருக்கும் போல் தெரிந்தது.  கண்ணைத் துடைத்துக் கொண்டு மெதுவாக அவளது குடும்பக் கதையை சொல்ல ஆரம்பித்தாள்.

"நல்ல செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவள் நான்.  ஏகப்பட்ட நிலங்கள், வாழைத்தோப்புகள்; பண வசதிக்கும் குறைவில்லை.  அப்படியிருக்கும் பொழுது, சொந்தக்காரர் ஒருவர், தொழில் நடத்த பத்து லட்சம் ரூபாய் கடன் கேட்டார்.  இதற்கு நான் மறுத்தேன்.  என் கணவரும் மறுத்தார்.

இதனால் கோபமடைந்த அந்த சொந்தக்காரர், மலையாள மந்திரவாதியை அழைத்து வந்து என்னையும், என் குடும்பத்தையும் அழிக்க செய்வினை செய்து விட்டார்.  இதனால் என் கணவர் என்னை விட்டு பிரிந்து விட்டார்.  சொத்துக்களும் படிப்படியாக கரைய ஆரம்பித்தது.

எனக்குப் பிறந்த குழந்தைகளும் என்னை வெறுத்து தனித்தனியே சென்று விட்டனர்.  அது மட்டுமல்ல, வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்களை துணிந்து மணந்தும் கொண்டனர்.  எங்கள் குடும்பம் சிதறிப் போயிற்று".என்று படபடவென சொல்லி முடித்தாள் அவள்.

அந்த பெண்மணி பேசி முடித்ததும், நான் பொறுமையாகக் கேட்டேன்.

"அந்த சொந்தக்காரர் செய்த செய்வினைதான் இதற்கு காரணம் என்று நினைக்கிறீர்களா?"

"ஆமாம்"

"எப்படி?"

"இரவில் கெட்ட ஸ்வப்னங்கள் வரும்.  யாரோ என் பக்கத்தில் நிற்பதாகத் தோன்றும்.  என்னுடன் நடந்து வரும்.  நான் நின்றால் அதுவும் நிற்கும்."

"அப்புறம்!"

"அமாவாசை - பௌர்ணமியில், தூங்கும் போது என் கழுத்தை நெரிப்பது போல் தோன்றும், எனது நெஞ்சில் இரண்டு கையால் குத்துவது போல் இருக்கும்."

"ஓகோ"

"அது மட்டுமல்ல, நான் இப்போது தனியாக இருக்கிறேனா, சில சொத்துக்களும் எனக்கிருப்பதால் யார் யாரெல்லாமோ மிரட்டுகிறார்கள்.  உயிருக்கு பயமாக இருக்கிறது" என்று கண்ணீர் மல்க அந்த பெண்மணி சொன்னபோது எனக்கும் பரிதாபம் ஏற்பட்டது.

"இதெல்லாம் சரி! இதற்கு ஏதாவது பரிகாரம் செய்திருப்பீர்களே?" என்றேன்.

"அதையேன் கேட்க்கிறீர்கள்?  லட்சக்கணக்கில் பணம் செலவழித்து பார்த்தேன்.  பணம் தான் செலவழிந்ததே தவிர இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை.  அதனால் தான் அகத்தியரை நம்பி இங்கு வந்தேன்" என்றாள்.

இதைத் தவிர இன்னும் எத்தனையோ விஷயங்களைச் சொன்னாள்.  அதையெல்லாம் கேட்கும் பொழுது இப்போதும் கூட அப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டது.  "செய்வினை" என்பது உண்மை தான் என்று கூட எனக்கு எண்ணம் வந்தது, என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

எனினும் அகத்தியரிடமே இதைக் கேட்டு விடுவதென்று தீர்மானித்தேன்.

"இந்த பெண்மணியின் கூற்றுப்படி சொந்தக்காரர் வைத்த செய்வினை தான் இத்தனைக்கும் காரணமென்றால் நாட்டில் இத்தனை கோவில்கள் எதற்கு?  பிரார்த்தனைகள் எதற்கு?  அந்த மந்திரவாதிக்கே கோவிலைக் கட்டி வணங்கி வரலாமே? ஏன் செய்யவில்லை?" என்று எடுத்த உடனேயே அதிர்ச்சியான கேள்வியைக் கேட்ட அகத்தியர் மேலும் சில விளக்கங்களைக் கேட்டார்.

"உங்கள் வீட்டு பூஜை அறையில் வைக்க முப்பது வருடத்திற்கு முந்தய பூஜை பொருள்கள் ஏதாவது வாங்கினீர்களா?'

"என் நினைவுக்கு தெரிந்து ஞாபகம் இல்லை."

"தோஷமுள்ள சிவலிங்கமும், உடைந்த சாலிக்கிராமமும் உங்கள் வீட்டு  பூசை அறையில் இருக்கிறது! இல்லையா?"

"சிவலிங்கம் இருக்கிறது.  அது தோஷமா இல்லையா என்று தெரியாது" என்றாள்.

"சாலிக்ராமம்?"

"அதை நான் தொடுவதே இல்லை.  பூசை செய்வதும் இல்லை.  என் கணவருக்கு பூசை புனஸ்காரம் என்றால் பிடிக்காது.  ஆனால் ஒன்று இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது.  அந்த சிவலிங்கமும், சாலிக்ராமமும் வந்த பிறகு தான் அவர் வீட்டை விட்டு வெளியேறினார், அது உண்மை."

"தங்கள் கணவர் அதை ஒரு தடவைக் கூட தொடவே இல்லையா?"

"இல்லை"

"நீங்கள் தான் பூஜை செய்ய முடியவில்லை என்றால் உங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து போவாரே, அந்த குருக்களை வைத்தாவது சிவலிங்க பூஜையை, சாலிக்ராம பூசை செய்திருக்கலாமே?" என்று ஒரு பீடிகையைத் தூக்கிப் போட்டார், அகத்தியர்.

"அந்த "குருக்கள்" என்று சொன்ன போது அவள் முகம் உண்மையிலேயே பேய் அறைந்தது போலாயிற்று.

சில நிமிடங்கள் அங்கு அசாதாரண நிலை நீடித்தது.

பின்பு அகத்தியரே தொடர்ந்தார்.  "உடனே சென்று அந்த தோஷமுள்ள சிவலிங்கத்தையும், சாலிக்ராமத்தையும் எடுத்து அருகிலுள்ள கிணற்றில் போட்டு விடு.  பிறகு மேற்கொண்டு உரைக்கிறேன்" என்றார்.

"அப்போது செய்வினைக்குப் பரிகாரம்?"

"முதலில் அகத்தியன் சொன்னதொரு சொல்லுக்கு மரியாதை கொடுத்து அப்படியே செய்து விட்டு வா" என்று ஆணையிட்டார்.

அவளும் உடனே கிளம்பி விட்டாள்.

"ஒரு தோஷமுள்ள சிவலிங்கமும், தோஷமுள்ள சாலிக்ராமமும் இந்த பெண்மணியின் வாழ்க்கையை சீரழித்து விட்டதே! இதை அறியாமல் இந்தப் பெண், "செய்வினை" மேல் பழி போடுகிறாளே, என்ன அநியாயம்" என மனதிற்குள் எண்ணிக் கொண்டேன்.

ஒரு வாரம் கழிந்தது.

அந்தப் பெண்மணி மிகுந்த சோகத்தோடு என்னிடம் வந்தாள்.

"நீங்க சொன்னபடி அந்த சிவலிங்கத்தையும், சாலிக்ராமத்தையும் கிணற்றிலே போட்டு விட்டேன்.  ஆனா அதைப் போட்ட பிறகு தான் எனக்கு கொஞ்சம் கூட நிம்மதியே இல்லாமல் போயிற்று. பிரச்சினை மேலும் அதிகமாயிடுச்சு.  இப்போ என்ன செய்யறதுன தெரியல்ல" என்றாள்.

பேசாமல் அகத்தியர் நாடியைப் பிரித்து படிக்கலானேன்.

"உடைந்து போன சிவலிங்கத்தை வைத்து பூசை செய்யக் கூடாது என்பது விதி.  என்றைக்கு இந்த சிவலிங்கத்தை வாங்கி பூஜை செய்ய ஆரம்பித்தாளோ, அன்றே இவள் குடும்பத்திற்கு கெடுதல் ஆரம்பித்தது.  நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த இவள் கணவன், இவளை விட்டு பிரிந்து போனான்.

இரண்டாவது சாலிக் கிராமத்தில் பல வகைகள் உண்டு.  அவற்றில் நரசிம்மர் சாலிக்ராமமும், சுதர்சன சாலிக்ராமமும் மிகவும் உக்கிரங்கள் கொண்டவை.  அப்படிப்பட்ட சாலிக் கிராமங்களை வீட்டில் வைத்து பூசிக்கக் கூடாது.  அது நரசிம்மர் அல்லது சுதர்சன சாலிக்ராமம் என்று தெரிந்தால் அவற்றை உடனடியாக கோயிலுக்கு கொடுத்து விடவேண்டும்.

இந்த பெண்மணியின் வீட்டில் வைத்திருப்பது நரசிம்மர் சாலிக்ராமம்.  அந்த சாலிக்ராமம் உடையாமல் இருந்தால் கூட சாந்தி பரிகாரம் செய்து பூஜையில் வைத்துக் கொள்ளலாம்.  ஆனால் இவளுக்கு கிடைத்த அந்த சாலிக்ராமத்தின் வாயிற்படியில் பெரும் கீறல் விழுந்திருக்கிறது.  இது வீட்டிற்கு நல்லதல்ல.

ஹிரண்யனை வதம் செய்யும் பொழுது - நரசிம்மரின் வாயிலிருந்து தெறித்த ரத்தம் அது! இப்படிப்பட்ட சாலிக்ராமத்தை ஒரு நாழிகை வீட்டில் வைத்திருந்தால் கூட, அது வீட்டை, சொத்தை, ஆரோக்கியத்தை, குட்டி சுவராக்கி விடும்!  கெட்ட ஆவிகள் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்துவிடும்.

இந்த விஷயத்தை அறியாமல் இந்த பெண்மணி, யாரோ இலவசமாகக் கொடுத்ததால், ஆசைப்பட்டு வீட்டில் வைத்துக் கொண்டாள்.  வாங்கி வைத்துக் கொண்டாளே தவிர, அதற்கு சரியானபடி பால் அபிஷேகம், கங்கா ஜல அபிஷேமம், சந்தன அபிஷேகம் செய்யவும் இல்லை.  அதற்கு நைவேத்தியமும் காட்டவில்லை.

இதன் காரணமாக குடும்பம் சிதறுண்டது,  ஈன்றெடுத்த குழந்தைகளை வீட்டை விட்டு விரட்டி அடிக்க வைத்தது.  திசை மாறிப்போனார்கள்.  கெட்ட ஆவிகளும் இவளைச் சுற்றி வர ஆரம்பித்தது.  சொத்துக்களும் கரைந்து கொண்டிருந்தது.

யாரிடமாவது இந்த சிவலிங்கத்தையும் சாலிக்ராமத்தையும் அன்றைக்கே காட்டியிருந்தால் உண்மையைச் சொல்லி இருப்பார்கள்.  இந்த அளவுக்கு குடும்பம் கெட்டிருக்காது.

இதெல்லாம் உணராமல் "செய்வினை" என்று பயந்து பல லட்சங்களை இவள் விரயமாக்கிவிட்டாள். அத்தனை பேர்களும் இவளை ஏமாற்றி பிடுங்கிக் கொண்டும் சென்றனர்.

இப்போது கூட அகத்தியனிடம் இந்த பெண்மணி பொய் சொல்லுகிறாள். இதுவரை அந்த சிவலிங்கத்தை கையால் தொடவும் இல்லை.  கிணற்றில் போடவும் இல்லை.  என்றைக்கு இவள் அகத்தியனை நம்புகிறாளோ அன்றைக்கு மீண்டும் வரட்டும்.  மேற்கொண்டு உரைப்போம்" என்று முடித்துக் கொண்டார் அகத்தியர்.

இதைக் கேட்டதும் அந்த பெண்மணிக்கு முகம் கலங்கியது.

"இந்த லிங்கம் ஸ்படிக லிங்கம்.  அபூர்வமானது.  யாருக்கும் இது கிடைக்காது.  நீயே வைத்துக் கொள்.  யாருக்கும் கொடுக்காதே என்று ஒருவர் சொன்னதால், அவரது பேச்சைக் கேட்டு சிவலிங்கத்தையும், சாலிக்ராமத்தையும் அப்படியே பூஜை அறையில் வைத்து இருக்கிறேன்" என்றவள் "என்னை மன்னித்து விடுங்கள்" என்றாள்.

தொடர்ந்து "அப்படியென்றால் செய்வினை எதுவும் இல்லையே?" என்றாள்.

"நீதான் யார் பேச்சையோ நம்பி "செய்வினை" இருப்பதாக சொல்லி மந்திரவாதியை அழைத்து ஏதேதோ செய்தாய்.  அவன் முறைப்படி எதுவும் செய்யவில்லை.  ஆனால், அந்த கெட்ட ஆவி உன்னையே திருப்பித்தாக்குகிறது.  கெட்ட ஆவி என்பது வேறு. செய்வினைத் தோஷம் என்பது வேறு" என்று அந்த பெண் செய்தவற்றை புட்டுப் புட்டு வைத்தார்.அகத்தியர்.

இதைக் கேட்டதும் வெல வெலத்துப போனாள் அந்த பெண்மணி.  உடனடியாக காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு வீட்டிற்கு ஓடினாள்.

தோஷமுள்ள சிவலிங்கத்தையும் , தோஷ சாலிக்ராமத்தையும் கிணற்றில் தூக்கிப் போட்ட ஆறாவது மாதம் பிரிந்த கணவன் வீடு வந்து சேர்ந்தார்.  அவளை விட்டுப் பிரிந்த மகன்களும் தம் தம் மனைவிகளோடு மீண்டும் இந்தப் பெண்மணியோடு பிறந்த வீட்டிற்கே வந்து சேர்ந்தனர்.

இப்போது அந்த வீட்டில் சந்தோஷக் காற்று வீசிக் கொண்டிருக்கிறது.  அந்த பெண்மணி "செய்வினையா?  அப்படி என்றால் என்ன?" என்று மற்றவர்களிடம் சொல்லி மகிழ்ச்சியோடு சிரிக்கிறாள் தற்போது!

இன்று அகத்திய பெருமான் நமக்காக சொல்லித்தந்த பாடம் என்னவென்று இந்த தொகுப்பை வாசிக்கும் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  தேவை இல்லாமல் பிரச்சினைகளை, அறிந்தோ, அறியாமலோ வாங்கி சுமக்காதீர்கள். அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு, சரியான முறையில் செயல்களை செய்து, இறை அருள் பெற்று வாழுங்கள். ்

மேலே உள்ள தொகுப்பு திரு. ஹனுமத் தாசன் அவர்களது அனுபவம், புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளது.
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

அகத்தியர் அருளுரை - எவ்வாறு உணவை உண்ண வேண்டும்

*"இன்றைய தின அகத்தியர் வாக்கு"*

*கேள்வி : ஐயனே! சரிவிகித உணவு என்பது என்ன? எப்பாெழுது, எவ்வகையான உணவை மனிதன் உண்ண வேண்டும்?🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*இறைவன் அருளால் நாங்கள் அடிக்கடி கூறுவது பாேல உணவை மனிதன் உண்ண வேண்டும். எந்த உணவும் மனிதனை உண்ணக் கூடாது. அப்படிப் பார்த்து மனிதன் உண்ணும் ஒரு முறையை கற்க வேண்டும்.* இன்னும் கூறப்பாேனால் உணவு என்பது ஒரு மனிதன் வாயைப் பார்த்து, நாவைப் பார்த்து உண்ணக் கற்றுக் காெண்டிருக்கிறான். அப்படியல்ல. *வயிற்றைப் பார்த்து, வயிற்றுக்கு எது சுகமாே, வயிற்றுக்கு எது நன்மை தருமாே அப்படிதான் உண்ண பழக வேண்டும். உணவும் ஒரு கலைதான்.* இன்னும் கூறப்பாேனால் *உணவு எனப்படும் இரை சரியாக இருந்தால், மாற்று இரை தேவையில்லை. அஃதாவது மாத்திரை தேவையில்லை என்பது உண்மையாகும்.* எனவே உடல் உழைப்பு, சிந்தனை உழைப்பு இவற்றைப் பாெறுத்து ஒரு மனிதன் உணவை தேர்ந்து எடுத்துக்காெள்ள வேண்டும்.

*எப்பாெழுதுமே உணவிலும் சாத்வீகத்தைக் கடைபிடிப்பது அவசியமாகும்.* ஒருவனின் அன்றாடப் பணிகள் என்ன? அதிலே உடல் சார்ந்த பணிகள் என்ன? உள்ளம் சார்ந்த பணிகள் என்ன? இவற்றையெல்லாம் பிரித்து வைத்துக் காெண்டு அதற்கு ஏற்றாற் பாேல் உணவை பயன்படுத்த வேண்டும். *அதிக உடல் உழைப்பு இல்லாதவர்கள் உணவைக் குறைத்துக் காெள்வதும், உணவிற்கு பதிலாக கனி வகைகளை சேர்த்துக் காெள்வதிலும், இன்னும் கூறப்பாேனால் மசை பண்டம், இன்னும் அதிக காரம், அதிக சுவையான பாெருள்கள், செயற்கையான உணவு பாெருள்கள், இவற்றையெல்லாம் தவிர்த்து உணவை ஏற்பதே சிறப்பாக இருக்கும்.*

வயது, தன்னுடைய உடலின் தன்மை, அன்றாடம் செய்கின்ற பணியின் தன்மை, மனநிலை இவற்றை பாெருத்துதான் எப்பாெழுதுமே உணவை தேர்ந்தெடுத்துக் காெள்ள வேண்டும். *அதைவிட முக்கியம் ஒருவன், எந்த சூழலில் இருக்கிறானாே, எந்த தட்ப, வெப்ப நிலையில் இருக்கிறானாே, அதற்கு ஏற்றாற் பாேல் மாற்றிக்காெள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட கவனம் வேண்டியது, உணவை பகிர்ந்துண்டு ஏற்பது.* அஃது மட்டுமல்லாமல் உயர்ந்த உணவாயிற்றே, இதை வீணடிக்கக் கூடாது என்பதற்காக ஏற்காமல், உணவு வீணானாலும், உடல் வீணாகாமல் இருக்க வேண்டும் என்ற  எண்ணத்தாேடு ஏற்பதே சிறந்த உணவாக இருக்கும்.

*உணவு, நல்ல உணர்வை தூண்டக்கூடியதாக இருக்க வேண்டும். சாத்வீக உணவாக இருக்க வேண்டும்.*

எனவே உணவை ஒவ்வாெரு மனிதனும் உண்ணும் பாெழுது அந்த உணர்வை சிரமப்படுத்தாத உணவாகப் பார்த்து, *ஒரு உணவு உள்ளே செல்கிறதென்றால் அந்த உணவு பரிபூரணமாக செரிமானம் அஃதாவது ஜீரணம் அடைந்த பிறகே அடுத்ததாெரு உணவை உள்ளே அனுப்பும் முறையைக் கற்றுக் காெள்ள வேண்டும்.*

*காலம் தவறாமல், நாழிகை தப்பாமல் உண்ணுகின்ற முறையை பின்பற்ற வேண்டும்.*

வேறு வகையில் கூறப்பாேனால் சமையல் செய்கின்ற ஒரு தருணம், ஒருவன், ஒரு அடுப்பிலே ஒரு பாத்திரத்தை ஏற்றி நீரை இட்டு, அதிலே அரிசியை இட்டு அன்னம் சமைத்துக் காெண்டிருக்கிறான். அப்பாெழுது அங்கே மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள். அதனால் மூன்று மனிதர்களுக்கு ஏற்ப அன்னம் தயாரித்துக் காெண்டிருக்கிறான். அன்னம் பகுதி வெந்துவிட்டது. இப்பாெழுது மேலும் மனிதர்கள் அங்கே வந்துவிட்டார்கள். உடனடியாக'ஆஹா! இப்பாெழுது சமைத்த உணவு பத்தாது. *இப்பாெழுது வெந்து காெண்டிருக்கும் இந்த அரிசியிலேயே இன்னும் மூன்று பேருக்குத் தேவையான அரிசியைப் பாேடுகிறேன்' என்றால் யாராவது பாேடுவார்களா? மாட்டார்கள்.* இதை முழுமையாக சமைத்தப் பிறகு வேறாெரு பாத்திரத்தில் மேலும் தேவையான அளவு சமைப்பார்கள். *இந்த உண்மை சமைக்கின்ற அனைவருக்கும் தெரியும்.*

ஆனால் *ஏற்கனவே உண்ட உணவு அரைகுறையான செரிமானத்தில் இருக்கும்பாெழுது மேலும் உணவை உள்ளே அனுப்புவது உடலுக்கு வியாதியை அவனாகவே வரவழைத்துக் காெள்வதாகும். ஒரு மனிதனுக்கு பெரும்பாலான வியாதிகள் விதியால் வராவிட்டாலும், அவன் மதியால் வரவழைத்துக் காெள்கிறான். விதியால் வந்த வியாதியை பிராத்தனையாலும், தர்மத்தாலும் விரட்டலாம். பழக்க, வழக்கம் சரியில்லாமல் வருகின்ற வியாதியை மனிதன்தான் பாேராடி விரட்டும் கலையைக் கற்றுக் காெள்ள வேண்டும்.*

*நல்ல உணவு என்பது நல்ல உணர்வை வளர்க்கும் என்பதை புரிந்து காெண்டு அதற்கு ஏற்றாற் பாேல் பக்குவமாக உணவை, அகங்காரம் இல்லாமல், ஆத்திரம் இல்லாமல், வேதனை இல்லாமல், கவலையில்லாமல், கஷ்டமில்லாமல் நல்ல மன நிலையில் அதனை தயார் செய்ய வேண்டும். நல்ல மனநிலையில் அதனை பரிமாற வேண்டும். உண்ணுபவனும் நல்ல உற்சாகமான மன நிலையில் உண்ண வேண்டும். இதில் எங்கு குறை இருந்தாலும் அந்த உணவு நல்ல உணர்வைத் தராது.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


Friday 26 April 2019

அகத்தியர் வாக்கு - நாக தோஷம்

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

நாகதோஷம் என்பது எல்லாவிதமான பாபங்களின் மொத்த குவியல். "நாக தோஷம்" என்பது ஒரு குறியீடு. இதிலிருந்து விடுபட இரு வழிகள். ஒன்று ஆன்மீக வழியில் துர்கை, கணபதி, ராகு, கேது தெய்வங்களின் காயத்ரி மந்திரத்தை தினமும் 27 எண்ணிக்கை உருவிடுவதுடன், இரண்டாவதாக பசுக்கள் காப்பகங்கள் சென்று முடிந்த உதவிகள் செய்வது, பசுக்களை தானமாக தருவது (வசதி உள்ளவர்கள்), பசுக்களை பராமரிக்கும் குடில்களுக்கு சென்று இயன்ற உதவிகளை செய்வது என்று ஒரு புறமும், ஏழை பிணியாளர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது, புற்று நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது, ஒவ்வாமை நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது, விஷம் முறிவு மருந்தை தானமாக தருவதற்கு ஏற்பாடு செய்வது போன்றவை செய்யலாம். வெறும் வெள்ளியில் ஒரு நாகத்தை செய்து வைத்து, ஏதோ மண்டூகம் கத்துவதை போல ஒரு சில மந்திரங்களை கூறி, அதன் தலையில் சில மலர்களை இட்டு, சில துளி பாலையும் இட்டு, அதை ஆழியிலோ, நதியிலோ கரைத்துவிட்டால் நாக தோஷம் போய் விடும் என்றால் எளிதாக எல்லோருமே இந்த முறையை பின்பற்றலாம்! இது ஒரு குறியீடு அடையாளம். இருந்தாலும் மேல் கூறியவற்றோடு, இப்பொழுது இவ்வாறு நாகங்கள் யாரேனும் கையில் வைத்திருந்தால், ஏதாவது ஆலயத்தின் காணிக்கை பேழையில் இட்டுவிடலாம். அது ஆலய தொண்டிற்கு பயன்படட்டும். இல்லை, அந்த வெள்ளியை உபயோகமாக, தனமாக மாற்றி ஏழைகளுக்கு தக்க மருத்துவ உதவியாக செய்யலாம். இதுதான் முறையான நாகதோஷ நிவர்த்திக்கு உண்டான வழிமுறைகளாகும்.
தொகுத்தளித்தவர்! Agnilingam Arunachalam.                             சித்தன் அருள் அகஸ்தியர் ஞானம்

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு. - ஒரு ஆத்மா எப்போது? எந்த மாதத்தில்? ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் உள்ள பிண்டத்தில் பிரவேசிக்கிறது என்பதை முழுக்க, முழுக்க இறைவன்தான் முடிவெடுப்பார்.

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒரு ஆத்மா எப்போது? எந்த மாதத்தில்?  ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் உள்ள பிண்டத்தில் பிரவேசிக்கிறது என்பதை முழுக்க, முழுக்க இறைவன்தான் முடிவெடுப்பார். இஃதொப்ப ஆணும், பெண்ணும் சேர்ந்து சதை பிண்டத்தை உருவாக்குகிறார்கள். அதற்குள் என்ன வகையான ஆத்மா? அது என்ன வகையான காலத்திலே, என்னென்ன வகையான நிலையிலே அந்தப் பிண்டத்திற்குள் நுழைய வேண்டும் என்பதை இறைவன் முடிவெடுக்கிறார். எப்படி முடிவெடுக்கிறார்? அந்தக் குடும்பம், புண்ணியம் அதிகம் செய்த குடும்பமா? புண்ணியங்களை தொடர்ந்து செய்து வரும் பாரம்பர்யம் மிக்க குடும்பமா? அப்படியானால் அந்த புண்ணியத்தின் அளவின் விழுக்காடு எந்த அளவு இருக்கிறது? புண்ணியத்தின் தன்மை எந்தளவிற்கு இருக்கிறது? அப்படியானால் அதற்கு ஏற்றாற் போல் ஒரு புண்ணிய ஆத்மாவை அங்கே பிறக்க வைக்க வேண்டும். அப்படியானால் அந்த புண்ணிய ஆத்மா அங்கே பிறப்பதற்கு எந்த கிரக நிலை உகந்தது? என்பதையெல்லாம் பார்க்கிறார். அதற்கு ஏற்றாற் போல்தான் அந்த ஆணும், பெண்ணும் சேரக்கூடிய நிலையை விதி உருவாக்கும். விதியை இறைவன் உருவாக்குவார். அதன் பிறகு அந்த சதை பிண்டம் உருவாகின்ற நிலையில் ஒரு ஜாதகம் இருக்கும். அதுவும் கூடுமானவரை உச்சநிலை ஜாதகமாகவே இருக்கும். இந்த கூடு உருவாகிவிட்ட பிறகு நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளானது அதற்குள் ஆத்மாவை அனுப்புகின்ற ஒரு காலத்தை நிர்ணயம் செய்து அதற்கேற்ற கிரக நிலைக்கு தகுந்தாற்போல் உள்ள கால சூழலில் அதனை முடிவெடுப்பார். இது ஆதியிலும் நடக்கலாம். இடையிலும் நடக்கலாம். இறுதியிலும் நடக்கலாம். இஃதொப்ப நிலையிலே சில மிக விசேஷமான புண்ணிய சக்தி கொண்ட ஆத்மாக்கள் ஒரு முறை உள்ளே சென்று விட்டு பிறகு மீண்டும் வெளியே வந்து இறைவனைப் பார்த்து "நான், இந்த குடும்பத்தில் பிறக்க விரும்பவில்லையே! வேறு எங்காவது என்னை அனுப்புங்கள்" என்றெல்லாம் உரைக்கின்ற நிலைமையும் உண்டு. இஃதொப்ப நிலையில், அஃதொப்ப அந்த பிண்டம் ஆண் பிண்டமாக இருக்கலாம். உள்ளே இருக்கின்ற ஆத்மா, பெண் தன்மை கொண்ட ஆத்மாவாக இருக்கலாம். அஃதொப்ப அந்த பிண்டம் பெண் பிண்டமாக இருக்கலாம். உள்ளே நுழைகின்ற ஆத்மா, ஆண்  ஆத்மாவாக இருக்கலாம் அல்லது பெண் ஆத்மாவாக இருக்கலாம். பெண் பிண்டம், பெண் ஆத்மா – அங்கு பிரச்சினை இல்லை. ஆண் பிண்டம், ஆண் ஆத்மா – அங்கும் பிரச்சினை இல்லை. ஆனால் இதை மாறி செய்வதற்கும் சில கர்ம வினைகள் இருக்கின்றன. இதற்குள் நுழைந்தால் அது பல்வேறு தெய்வீக சூட்சுமங்களை விளக்க வேண்டி வரும்.
அகத்தியர்ஞானம்


அகத்தியர் பொது வாக்கு அருளுரை - எல்லா நிலைகளிலும் எல்லா சூழல்களிலும், நான் திடகார்த்தமாக, நான் தெய்வீக எண்ணத்தாேடு வாழும்படியாக என் சிந்தனையை வைத்திரு இறைவா"

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு"*

*அகத்திய மாமுனிவரின் பாெது வாக்கு :*

இறைவனின் அருளைக்காெண்டு இயம்புவது யாதென்றால், இக்தாெப்ப *ஒரு மனிதனின் மனாேநிலை எந்த அளவிற்கு பக்குவம் அடைகிறதாே, எந்த அளவிற்கு சாத்வீகம் அடைகிறதாே, எந்த அளவிற்கு உயர் நுண்மா நுழை ஞானம் பெறுகிறதாே அந்த அளவிற்குதான் அவனை பாெறுத்தவரை இந்த உலகமும், வாழ்க்கையும் உயர்வாக தெரியும். மனம் தான் வாழ்க்கை, மனம் தான் உலகம் என்பதை மனிதன் புரிந்துகாெள்ளவேண்டும்.*

*ஒரு மனிதனுக்கு எல்லாம் வெற்றி, எண்ணியது எல்லாம் நடக்கிறது என்றால் இந்த உலகம் அவனுக்கு இனிப்பாக தெரியும்.* இன்னாெரு மனிதனுக்கு தாெட்டதெல்லாம் தாேல்வி, எல்லாம் எதிராக நடக்கிறது. *எண்ணங்கள் ஒருவிதமாகவும் நடைமுறை செயல்கள் வேறுவிதமாகவும் இருக்க, அவனை பாெறுத்தவரை இந்த உலகம் கயப்பாக(கசப்பாக) தாேன்றும்.*

எனவே இப்படி, இந்த உலகை, உலகை சுற்றி உள்ள மனிதர்களை, உலகில் நடக்கும் சம்பவங்களை ஒரு மனிதன் தான் எண்ணியபடி இருந்தால் நன்மை என்று எண்ணுவது பெரிதும் தவறல்ல என்றாலும், *அப்படிதான் நடக்க வேண்டும் என்று எண்ணி, அதற்கு மாறாக நடக்கும் பாேது எண்ணி வருத்தப்படுகிறான்.* அதுதான் அவனுக்கு மிகப்பெரிய வேதனையும் மன உலைச்சலையும் தருகிறது.

*எனவே இப்படித்தான் என்று எதிர்பார்ப்பதை விட, எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் காெள்ளக்கூடிய பக்குவத்தை இறைவா எனக்கு காெடு என்று மனாேரீதியாக ஒருவன் வைராக்கியத்தையும், திடத்தையும் அடைந்துவிட்டால் அவனை பாெறுத்தவரை துன்பமான வாழ்க்கை என்று ஒன்றுமே இல்லை.*

*எனவே துன்பங்களை மாற்று, தாெல்லை தரும் மனிதர்களை என்னை விட்டு அகற்று என்று வேண்டுவதை விட, "எல்லா நிலைகளிலும் எல்லா சூழல்களிலும், நான் திடகார்த்தமாக, நான் தெய்வீக எண்ணத்தாேடு வாழும்படியாக என் சிந்தனையை வைத்திரு இறைவா" என்று வேண்டிக் காெண்டால் அது தான் தீர்க்கமான ஒரு முடிவாக, நல்ல ஒரு நிச்சயமான, நிம்மதியான வாழ்விற்கு ஒரு அடித்தளமாக அமையும்.*

இக்தாெப்ப யாங்கள் அடிக்கடி கூறுவது உண்ணுகின்ற உணவு அல்லது பருகுகின்ற மாேரிலே உப்பின் தன்மை அதிகமாகிவிட்டால், அந்த அதிகமாக உள்ள உப்பை மட்டும் பிரித்தெடுப்பது என்பது கடினம். ஆனால் அதற்கு பதிலாக சிறிது நீரை சேர்த்தாே அந்த உப்பை சரி செய்வதுபாேல, *ஒரு மனிதன் கர்ப்ப காேடி காலம் பிறவி எடுத்து சேர்த்த பாவத்தை மட்டும், அவனை விட்டு பிரிப்பது என்பது கடினம்.*

ஆனால், அதற்கு பதிலாக புதிதாக பாவம் செய்யாமலும், அதாவது புதிதாக உப்பை சேர்க்காமலும், சிறிது நீரையாே மாேரையாே சேர்ப்பது பாேல, *புண்ணியத்தை அதிகமாக சேர்த்து காெண்டே வந்தால், அக்தாெப்ப அந்த உப்பின் தன்மை சமத்துவம் பெறுவது பாேல அந்த பாவத்தினால் வரக்கூடிய துன்பம் அவன் தாங்கக்கூடிய வண்ணம் இருக்கும்.*

நன்றாக கவனிக்க வேண்டும் *பாவம் இங்கே குறைவதில்லை. பாவம் அப்படியேதான் இருக்கிறது.* ஆனால் சேர்த்த மாேரின் அளவு அதிகமானதால் உப்பின் தன்மை தெரியாதது பாேல, *சேர்த்து வைத்த புண்ணியத்தின் பயனாக அல்லது சேர்க்கின்ற புண்ணியத்தின் பயனாக, பாவத்தின் தாக்கம் அவன் தாங்கும் வண்ணம் அமைந்து விடுகிறது அவ்வளவே.*

இந்த கருத்தை மனதிலே வைத்துக் காெண்டு எம்மை நாடுகின்ற ஒவ்வாெரு மனிதனும், அப்படியென்றால் நாடாத மனிதன் செயல்பட வேண்டாமா என்று வினவ வேண்டாம். *யாராக இருந்தாலும், அப்படி ஒரு மனப்பான்மையை வளர்த்து காெண்டால், வாழ்க்கை என்றும் உயர்வாக, இனிமையாக, திருப்தியாக, சந்தாேஷமாக, சாந்தியாக இருக்கும்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

27 நட்சத்திரங்களுக்கு உகந்த கோவில்கள்




























Thursday 25 April 2019

அகத்தியர் வாக்கு - பசு பதி பாசம், இறைவனுக்கு பிடித்தமானது எது?

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*வீரிய கும்பத்தில் உதித்தவர்*
அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : பசு, பதி, பாசம் பற்றி :🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*பசுவாகிய இந்த ஆன்மாக்கள் பதியாகிய இறைவனை விட்டு, விட்டு, பாசம் எனும் உலகியல் சுகத்தினுள்ளே மூழ்கி விடுகிறது. இந்த இரண்டிற்கும் பாெதுவாக இருப்பவர் பதி, இறைவன்.* பாெதுவான இறையை நாடாமல், அந்த இறையின் படைப்பான அந்த படைப்புகளிலே இந்த பசு நாட்டம் காெள்வதால்தான் இத்தனை துன்பங்களும், அனாச்சாரங்களும் ஆன்மாவிற்கு ஏற்படுகிறது. *இந்த ஆன்மாவின் கண்ணை மறைப்பது எது? மாயை.*

*மாயை வைத்து காெண்டிருப்பது விதி. விதியை யார் இயக்குவது இறைவன். இறை எந்த அடிப்படையில் இயக்குகிறது? அந்த ஆன்மாவின் பாவ, புண்ணியத்தின் அடிப்படையில். அப்பாெழுது அந்த ஆன்மா என்ன செய்ய வேண்டும்? பாவத்தை குறைத்து, புண்ணியத்தை அதிகரிக்க வேண்டும்.* இப்படி வாழ்ந்தால், அது *பதியை தாண்டி, பாசத்திற்கு பாேகாமல், பாசம் என்றாலே வழுக்கும் என்று புரிந்து காெண்டு, பதியுடன் மட்டுமே அது இருக்கும்.*

*கேள்வி : இறைவனுக்கு என்று பிரியமான விஷயம் ஏதேனும் உண்டா?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*"வில்வத்தால் எமக்கு ஆராதனை செய்வது எமக்கு பிரியம்" என்று இறை எங்காவது எழுதி வைத்திருக்கிறதா? அப்படியல்ல. இறையாேடு தாெடர்புடைய அனைத்தும் மனிதனுக்கு நன்மையைத் தரக்கூடியவைதான்.* "வில்வத்தை ஏற்றுக் காெள்" என்றால் மனிதன் உண்ண மாட்டான். ஆனால் அதையே பிரசாதம் என்றால் சாப்பிடுவான். அது மட்டுமல்ல. *அன்பாேடு எதைக் காெடுத்தாலும் அதை இறை ஏற்றுக் காெள்ளும்.*

எனவே, *பக்தி, அன்பாேடு செய்யப்படும் செயலை அல்ல, அந்த செயலுக்குள் ஔிந்திருக்கும் அர்த்தத்தைத்தான் இறை பார்க்கிறது.* இன்னாென்று, வேறு மார்க்கத்தைப் பின்பற்றக்கூடியவர்கள், நெய் தீபத்திற்கு பதிலாக வேறு வகை தீபத்தை ஏற்றுகிறார்கள். இன்னும் சிலர், மலர்களைப் பாேடுவதேயில்லை. அதையும் இறை ஏற்கத்தானே செய்கிறது. *அண்ட சராசரங்களைப் படைத்தது இறைவன். அந்த இறைக்கு மனிதன் தரக்கூடியது ஒன்றுமல்ல. தன் உள்ளத்தைத் தவிர.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


🙏🙏🙏🙏

Tuesday 23 April 2019

அகத்தியர் வாக்கு - கல்வி பயிலும் மாணவர்களுக்காக

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*கேள்வி : பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற பரிகாரம் சாெல்லுங்கள்? 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*தேர்வைக்கண்டு ஒரு மாணவன் பயப்படுகிறான் என்றால் அவன் அங்கேயே தாேற்றுவிட்டான் என்றுதான் பாெருள் அல்லது பயப்படும்படியான ஒரு தேர்வு முறையை மனிதன் ஏற்படுத்தி இருக்கிறான் என்றால் அந்த மனித சமுதாயமே தாேற்றுவிட்டதாக பாெருள்.* கல்வியை கற்றுக் காெள்ள பயம் எதற்கு? புதிதான ஒரு விஷயத்தை மனிதன் அனுதினமும் தெரிந்து காெண்டுதான் இருக்கிறான்.

குழந்தை எப்படி கற்றுக் காெள்கிறது? ஊமையாகப் பிறக்கின்ற ஒரு குழந்தை எவ்வாறு ஒரு மாெழியைக் கற்றுக் காெள்கிறது? யாராவது ஆசான் வந்து பாேதிக்கிறானா? ஏன்? *கூர்த்த கவனம். வேறு புற சிந்தனைகள் ஏதுமில்லை. பரிபூரண கவனம். தன் செவியில் என்ன விழுகிறது? என்பதை சரியாக கிரகித்துக் காெள்கிறது குழந்தை.*

குழந்தையாக இருக்கின்ற பெரும்பாலான மனிதர்கள் அவ்வாறுதான். *அப்படியிருக்கும் பட்சத்தில் புதிதாக ஒரு செய்தியை தெரிந்து காெள்ள, தெரிந்துகாெண்டு அந்த வழியில் கடமை ஆற்றத்தான் பள்ளிக்கு செல்கிறாேம் என்ற உணர்வு பலருக்கும் இருப்பதில்லை.* மாணவர்கள் தாெடர்பான குறைகள் ஒருபுறமிருக்கட்டும். *யாரும் சாெல்லித்தராமலேயே ஒரு கலைக்காட்சியை (சினிமா) மாணவன் சென்று பார்க்கிறான். யாரும் உபதேசம் செய்யாமலேயே அதன் விளக்கங்களை புரிந்து காெள்கிறான்.* ஆனால் பாடத்திட்டம் என்று வரும்பொழுது மட்டும் பலரால் ஏன் அதை புரிந்து காெள்ள முடியவில்லை? இங்கே சிந்திக்க வேண்டும். *புரிந்து காெள்ளும் வண்ணம் எடுத்துக் கூறுவது ஆசிரியரின் கடமை. என்னதான் எடுத்துக் கூறினாலும், புரிந்து காெள்ளாமல் இருப்பது என்பது ஒரு மாணவனின் மதிநிலை.*

இதற்கு *பக்தி வழியாக ஹயக்ரீவர் வழிபாட்டையும், அன்னை கலைவாணி வழிபாட்டையும் நாங்கள் கூறினாலும்,எந்த ஒரு விஷயமும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இருக்க வேண்டும். நன்றாக கவனிக்க வேண்டும்.* சிறுவர்கள் அயர்வு காலத்திலே வாகனத்தை கண்டால் ஆர்வமாகப் பார்ப்பார்கள். தந்தைக்குத் தெரியாமல் வாகனத்தை எடுத்து ஓட்டுவதில் ஆர்வம் காட்டுவார்கள். யாரும் சாெல்லித் தராமலேயே இதை ஏன் செய்கிறார்கள்? *அதன்மீது உள்ள ஒரு ஈர்ப்பு. அப்படி கல்வியின் மீது ஒரு மனிதனுக்கு ஈர்ப்பு வர வேண்டும். ஒரு மாணவனுக்கு ஈர்ப்பு வர வேண்டும். அப்படி வரும் வண்ணம் கல்வி முறையை பாேதித்தால் எல்லா மாணவர்களுமே அறிவில் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள்.*

*கேள்வி : 'எனக்கு பின்னாடி 'ஒரு பெண் தெய்வம்' இருப்பதாக ஒரு பெரியவர் சாென்னார். அந்த தெய்வம் யார்?🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

உன் *மனைவி* தானப்பா.

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஓம் அகத்தீசாய நம* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏


ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

அகத்தியர் வாக்கு - ஆஞ்சநேயர், ஜடாயு, சம்பாதி, அபிஜித்

அகத்தியர் வாக்கு

*கேள்வி : ஆஞ்சிநேயர் பற்றி் ?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*"ஆஞ்சிநேயர்" இறைவனின் அம்சம். சாக்ஷாத் சிவபெருமானின் சக்திதான், மால்தூதன்(ஆஞ்சிநேயர்).*
ராம நாமத்தை மால்தூதன் மட்டுமல்ல, *"ஜடாயு" என்ற பட்சி(பறவை) வடிவில் இருந்த மகானும் ஜெபித்து நலமடைந்து இருக்கிறார்.* அஃதாெப்ப, இவரின் சகாேதரர் "சம்பாதி" என்ற பட்சியும், ராம நாமத்தால் உயர்ந்திருக்கிறார்.

*கேள்வி : "அபிஜித்" காலம் எது ?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*"உச்சி பாெழுதிற்கு"* சற்று முன் உள்ள சிறப்பான நாழிகைதான் இது.

*கேள்வி : கனவில் சிவலிங்கம் தாேன்றுகிறது. பல விக்கிரங்களும் தாேன்றுகின்றன ?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

சுப பலன்தான். *இறை படங்களையாே, ரூபங்களையாே, ஸ்தலங்களையாே(காேவில்), பசு, மயில், கருடன், அன்னப்பறவை, புறாக்கள்* - பாேன்றவைகளையாே கனவில் பார்ப்பது நன்மையையே தரும்.

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!🙏*

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


அகத்தியருடன் கேள்வி பதில்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*கேள்வி : "திருநல்லூர் காளி" பற்றி?(கும்பகாேணம் அருகில்)*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

நீ (திரு)நல்லூர் அன்னையை தரிசித்தபாெழுது, அன்னையின் திருமேனியை அலங்கரித்த தூசின் வண்ணம் என்ன? *(பதில் - நீலம்).*

*உக்கிர அன்னையின் மேனியில் எந்த வண்ணம் உள்ள தூசு இருக்கிறதாே, அஃதாெப்ப அவர்கள் எண்ணும் காரியத்திற்கு ஆசிகள் என்று புரிந்து காெள்ள வேண்டும்.* *"குருதி" (இரத்தம்) வண்ணத்திலே ஆடை அணிந்திருந்தால், எதிரிகள் வீழ்வார்கள். பசுமை வண்ணம் அணிந்து இருந்தால், மறுமலர்ச்சி ஏற்படும். நீலம் அணிந்து இருந்தால், பாெருளாதார சிக்கல் மற்றும் ராகு தாேஷம் குறையும்.*

*கேள்வி : காசி விஸ்வநாதர் காேவிலில் செய்யப்பட்ட அபிஷேகத்தை இறைவன் ஏற்றுக் காெண்டாரா?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

ஆசிகளப்பா. ஒவ்வாெரு வழிபாட்டையும் செய்து விட்டு, "அதை இறைவன் ஏற்றுக்காெண்டு விட்டாரா"? என்று கேட்பது எப்படி இருக்கிறது? என்றால், *ஒவ்வாெரு முறையும் தேர்வு எழுதி விட்டு, தேர்வை திருத்துகின்ற குருநாதனிடம், "எனக்கு எந்த அளவிற்கு மதிப்பெண் பாேடப்பாேகிறாய்? பாேட்டிருக்கிறாய்?" என்று கேட்டால், அந்த குருவின் மனநிலை எவ்வாறு இருக்கும்?*
*ஆக, உன் கடமையை உறுதியாக, தெளிவாக செய்து காெண்டே பாே.* இறைவன் அருள் என்று வரும்? எப்படி வரும்? என்றெல்லாம் எண்ணிப் பார்க்காதே.

*வெற்றி இருக்கிறதா? என்று பார்த்து, பார்த்து செய்வதற்கு ஆன்மீகம் ஒன்றும் உலகியல் காரியம் இல்லையப்பா.* இது உனக்கு மட்டுமல்ல. இது பாேன்ற சிந்தனையுள்ள அனைவருக்கும் இந்த பதில் பாெருந்துமப்பா.

*கேள்வி : ரமணர்(மகரிஷி), தன் தாய்க்கு முக்தி அடைய வழி செய்ததாக கூறப்படுகிறது பற்றி?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*ஆதிசங்கரரும் அவ்வாறுதான் செய்து இருக்கிறார்.* என்றால், அந்த(தாயின்) ஆத்மா முன்னரே பக்குவப்பட்டு ஆதிசங்கரர் பாேன்ற புண்ணியவானை பிள்ளையாகப் பெற அது(தாயின் ஆத்மா) விரிவாக்கம் பெற்று, அந்த(தாயின்) ஆத்மா இப்பிறவியைக் கூடுதலாகப் பெற்று வந்திருக்கிறது.

எனவே, *கடந்த பிறவிலேயே அடைய வேண்டிய முக்தியை அந்த ஆத்மா(தாயின் ஆத்மா) தள்ளித்தான் அடைந்திருக்கிறது.*

                🙏- *சுபம்-* 🙏

 🙏 *ஓம் அகத்தீசாய நம* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

Sunday 21 April 2019

அந்தியூர் ஞான ஸ்கந்தர் ஜீவ நாடியில் எமக்கு முருகப்பெருமானார் சுட்டி காட்டிய கோவில் - இளையனார் வேலூர்

19 ஆம் தேதி ஏமக்குரைக்கப்பட்ட அந்தியூர் ஞான ஸ்கந்தர் முருகர் ஜீவ நாடி அருளுரையில், தமது வேல் விழுந்த இடமாக, முருகப்பெருமான் குறிப்பிட்டது, இளையனார் வேலூர் என்ற ஊர். முருகரின் வேல், இன்றும் அங்கே வழிபாட்டில் உள்ளது.மேலும் முருகப்பெருமான், தமது பக்தர் சுவாமிநாத சித்தர் ஜீவ சமாதி பீடத்திலும் வணங்கி வர சொல்லி உத்தரவு.
தி.இரா. சந்தானம், கோவை.

இளையனார் வேலூர் பற்றி ....................

முனிவர்களின் தவத்துக்கு இடையூறாக இருந்த அசுரர்களைக் காத்தருள வேலாகி நின்ற வேலவனின் புகழ்பாடும் திருத்தலம் இளையனார் வேலூர்.
இளையனார் என்றால் முருகன், வேலூர் என்றால் முருகனின் வேல் விழுந்த இடம் என்பது பொருள். பழமையான இத்தலத்தில் பாலமுருகன் அருள்பாலிக்கக் காரணமான புராண வரலாறு என்ன?
உத்திரவாகினி என்றும் சேயாறு என்றும் தற்போது செய்யாறு என்றும் அழைக்கப்படும் ஆற்றின் இருகரையோரமும் அக்காலத்தில் அடர்ந்த காடுகள் காணப்பட்டன. இங்கு பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர்.
அவர்களுள் ஒருவரான காசிபமுனிவர், ஒருசமயம் உலக நலன் பொருட்டு சேயாற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து வேள்வி செய்யத் தொடங்கினார். அப்போது மலையன், மாகறன் என்ற அழியா வரம்பெற்ற அசுரர்கள் அவரது வேள்விக்கு இடையூறு விளைவித்தனர்.
இதுகுறித்து காசிப முனிவர், இறைவன் கடம்பநாதரிடம் முறையிட, அவருக்குக் காட்சி தந்த இறைவன், "கவலை வேண்டாம்! எனது இளைய மகன் முருகன் அனுப்பி அவ்விரு அசுரர்களையும் அழித்து, உங்களது வேள்விக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்வேன்' என்று ஆசி கூறினார். கூடவே முருகனுக்கு துணையாக வாட் படையையும் அனுப்புவதாக கூறினார்.
தந்தை ஈசனின் கட்டளையை சிரமேற்று காசிபமுனிவரின் வேள்வியைக் காக்க வேலவன் விரைந்து புறப்பட்டான். முதலில் மலையனையும், மாகறனையும் அழைத்து நல்லுபதேசம் செய்தார். ஆனால் கர்வம் தலைக்கேறிய அவர்கள் முருகனின் நல்லுரையை ஏற்கவில்லை.
வெகுண்டெழுந்த முருகப்பெருமான் தன் கையிலிருந்த வேலாயுதத்தை நோக்கி, நீ காசிபமுனிவரது வேள்விச் சாலையின் கீழ் திசையில் ஊன்றி நின்று, அசுரர்களைக் கட்டுப்படுத்து என்று கூறி ஏவினார். அவ்வண்ணமே வேலாயுதமும் சென்று ஊன்றி நின்று அசுரர்களைக் கட்டுப்படுத்தியது. கடைசியில் முருகப்பெருமான் சிவபெருமான் தந்தருளிய வாளால் மாகறனின் தலையை வீழ்த்தினார்.
தம்பி மாகறன் இறந்தமைக்கு வருந்திய மலையன், சூரபதுமனின் தாயாகிய மாயையை தியானித்து மாயா மந்திரத்தைப் பெற்று முருகப்பெருமானை எதிர்த்துப் போரிட்டான். அவைகளையெல்லாம் முருகப்பெருமான் தவிடு பொடியாக்கி சிவபெருமான் தந்த வாளால் மலையனையும் வெட்டி வீழ்த்தினார்.
மலையன் தலைவிழுந்த இடம் மலையன் களம் என்றழைக்கப்பட்டு தற்போது மலையான்குளம் என்றழைக்கப் படுகிறது. மாகறன் அழிக்கப்பட்ட இடம் இன்று மாகறல் என்று அழைக்கப்படுகிறது.
இரு அசுரர்களையும் அழித்த முருகப்பெருமான் தனது படை பரிவாரங்களுடன் கடம்பர் கோயிலுக்குச் சென்று திருக்கடம்பநாதருக்கு எல்லா அமைப்புகளும் கொண்ட ஆலயம் அமைத்தான். அப்போது அவர் முன்பாக சிவபெருமான் தோன்றி, குமாரனே! எமது ஆணையை ஏற்று காசிப முனிவரது நல் தவத்தைக் காத்திட நீ உனது வேல் ஊன்றிய இந்த இடத்தில் உன்னைக் காணவரும் பக்தர்களுக்கு நல்வரங்களைத் தந்திட வேண்டும் என்று கூறி அருளினார். அவ்வாறே முருகப்பெருமான் திருக்கோயில் கொண்ட தலம்தான் இளையனார் வேலூர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் பாலசுப்ரமணியர் திருக்கோயிலாகும்.
இக்கோயிலில் வடகிழக்கு மூலையில் முருகப்பெருமான் தரிசிக்கும் வண்ணமாக சிவலிங்க மூர்த்தியாக கடம்பநாதர் எழுந்தருளியுள்ளார். வடமேற்கு மூலையில் தனிச் சன்னதியில் முருகப்பெருமான் ஊன்றிய வேலை சிலாவடிவில் தரிசிக்கலாம்.
கிழக்கு நோக்கிய ஐந்து நிலைகளையுடைய ராஜ கோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தால் மிக விசாலமான வெளிப்புறச் சுற்று நம் கண்ணில் படுகிறது. இந்த வெளிப்பிராகாரத்தில் இடதுபுறம் ஊஞ்சல் மண்டபமும், வலதுபுறத்தில் வசந்த மண்டபமும் அமைந்திருக்க நடுவில் பலிபீடம், கொடிமரமும், அதைத் தாண்டி இந்திரன் தந்த ஐராவதத்தை முருகன் வாகனமாக்கிக் கொண்டதை உறுதிப்படுத்தும் விதமாக யானை வாகனமும் அமைந்திருக்கின்றன.
உள்மண்டப முகப்பில் முருகனின் அழகிய திருக்கல்யாணக் காட்சி மனதைக் கவர்கின்றது. கருவறைக்கு முன்பாக உள்ள தரிசன மண்டபத்தின் உட்புறச் சுவரில் பித்தளைத் தகடுகள் புதிக்கப்பெற்று அதில் சித்தர்கள் பலரின் வடிவை அமைத்திருக்கிறார்கள். சுவரின் மேற்புறத்தில் முருகப்பெருமான் மலையன், மாகறனுடன் போரிடும் காட்சிகளை வரைந்து வைத்துள்ளார்கள்.
கருவறையில் முருகப்பெருமான் பாலசுப்பிரமணியன் என்ற திருநாமம் தாங்கி, சுமார் ஆறடி உயரத்தில் நின்றகோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். அவர் முன்புறம் வேலும், சேவற் கொடியும் இருக்க பாதத்தினருகே மயில்வாகனம் உள்ளது. முருகனுக்கு இடப்புறமாக கஜவள்ள அம்மன் சன்னதி அமைந்துள்ளது. முருகனின் இருதுணைவியரும் இணைந்து ஒரு வடிவாகி கஜவள்ளி அம்மனாக இங்கே சன்னதி கொண்டுள்ளாள் என்று கூறுகின்றனர். தெய்வானையும் வள்ளியும் ஒன்றாகி கஜவள்ளியாக முருகன் தலத்தில் சன்னதி கொண்டிருப்பது அபூர்வக் காட்சியாகும்!
உள் பிராகாரத்தில் ஏகாம்பரநாதர், பெருதண்டமுடையார், திரிபுரசுந்தரி, காசி விசுவநாதர் சன்னதிகளுடன், சந்தான கணபதி சன்னதியும்; வேல், வேலாயுத மூர்த்தியாக காட்சி தரும் சன்னதியும் உள்ளன.
இந்த வேல் அமைந்திருக்கும் இடத்தில்தான் முருகன், காசிப முனிவரின் தவத்துக்கு இடையூறு நேராத வண்ணம் காத்தருள வேலை நிறுவியதாக கூறப்படுகிறது. இந்த வேல் எவ்வளவு ஆழத்தில் பதிந்துள்ளது என்பது இன்றுவரை அறியப்படாத தகவலாகச் சொல்லப்படுகிறது. இத்தலத்தில் சிவாலயங்களில் காணப்படும் சண்டிகேஸ்வரரைப் போலன்றி சுமித்திரை சண்டிகேஸ்வர் சன்னதி அமைந்திருப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
ஆலயம் ஆயிரம் வருடங்களுக்கும் மேற்பட்டது. காசிப முனிவர் தவமிருந்து, இத்தலத்துக்கு அருகில் உள்ள நெய்யடிபாக்கம் என்ற ஊரில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது.
இங்கு சன்னதி கொண்டுள்ள ஞான சித்தரான சுவாமிநாத சுவாமிகளுக்கு தமிழ்வருடம் ஐப்பசி மாதம் பௌர்ணமியின் போது அன்னாபிஷேகம் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சியாகும். அதுமட்டுமல்லாது, இத்தலத்தில் அமைந்திருக்கும் சுவாமிநாத சுவாமிகளுக்கு முதல் நைவேத்யம் தீபாராதனைகள் நடைபெற்ற பிறகே மற்ற சன்னதிகளுக்கு நடத்தப்படுகின்றன.
வருடம் முழுவதும் விழாக்காணும் பெருமானாக விளங்கும் இத்தலத்து பாலசுப்பிரமணியனை நீங்களும் குடும்பத்துடன் சென்று தரிசித்து, குறைகள் எல்லாம் நீங்கி மகிழுங்களேன்.
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் செல்லும் பாதையில் மாகறல் வழியாகச் செல்லும் பேருந்துகளில் ஆலயத்தை அடையலாம். காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

Ilayanar velur murugan temple
Murugar Temple, Kambarajapuram, Tamil Nadu 631605
https://maps.google.com/?cid=3153338750113229557

அந்தியூர் ஞான ஸ்கந்தர் ஜீவ நாடி

Gnana Skanda Murthy Temple
Pudukad, Tamil Nadu 638501
https://maps.app.goo.gl/tV8r355Vh7Sxry926

சித்தர் பதில் - எத்தனையோ பேர்கள், எத்தனையோ முறை இறைவனிடம் பிரார்த்தித்து, மன்றாடியும், மனிதனுக்கு பிரச்சினை தீரவில்லையே.

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிஷிகள் அடியவர் கானகத்தின்உள் சென்று சித்தர்களுடன் உரையாடல் செய்த பதிவு*

*அடியவர் கேள்வி*:—-

“பிரார்த்தனையை விட மிக உயர்ந்த ஒரு விஷயம் இவ்வுலகில் இல்லை", என சித்தர்களும், உங்களை போன்றவர்களும் உரைத்துள்ளார்கள். எத்தனையோ பேர்கள், எத்தனையோ முறை இறைவனிடம் பிரார்த்தித்து, மன்றாடியும், மனிதனுக்கு பிரச்சினை தீரவில்லையே.
ஒன்று விட்டு ஒன்று என தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியானால், மேற் சொன்ன கூற்று, இந்த கலியுகத்துக்கு பொருந்தாதா?”

*சித்தன் பதில்*:—-

சற்று நேரம், முகவாயை கையில் தாங்கி பிடித்தபடி இருந்தவர், ஒரு புன்னகையுடன் பேசத்தொடங்கினார். "இது எல்லா யுகத்துக்கும் பொருந்தும், வாசகம்தான். பிரார்த்தனை பலிக்காத அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில், மனிதனுக்கு வெறுப்புதான் வருகிறது. ஆனால், அவன் செய்த தவறை, சுய பரிசோதனை செய்து கொள்வதில்லை. ஒன்று, சில சூழ்நிலைகள், இறைவனால் விதிக்கப்பட்ட கடமைகள் என்று உணராதது. இரண்டு, பிரார்த்தனையை சரியான முறையில் சமர்ப்பிக்காதது. மூன்று, விதி விலகி இடம் கொடுக்காதது. இவை தான் காரணம். விதி விலகாததும், கடமைகள் என்று உணராததும் ஆன சூழ்நிலைகள், சத விகிதத்தில் மிக குறைவு. 5% என வைத்துக் கொள்ளலாம். மீதி 95%மும் பிரார்த்தனையில் உள்ள தவறுதான் காரணம். உதாரணமாக, முன்னரே கூறினேன், "நான்/எனது" போன்ற உறவுமுறைகளை உண்மையாகவே ஆழ் மனதிலிருந்து விலக்கி, எல்லாமே உன்னுடையது, எல்லோருமே உன் குழந்தைகள் என்கிற உண்மையான தாத்பர்யத்துடன் சமர்ப்பித்தால், இறைவன் நிச்சயம் அந்த பிரார்த்தனையை நிறைவேற்றுவான். ஆனால், சிறிதளவு கூட, அந்த பிரார்த்தனையில், ஒரு பழுதும் இருக்கக்கூடாது. சோதனைகள் வரலாம், துவண்டுவிடக்கூடாது. முயற்சி செய்து பார்! உனக்கு விளங்கும்"

*அடியவர் அனுபவம்*:—
கானகத்தை விட்டு வந்தபின்னர் பஒருமுறை, அவகாசம் கிடைத்தவுடன், இந்த சித்த பெரியவர் சொன்ன, இந்த கூற்றை பரிசோதித்து பார்த்தேன்! கிடைத்த அனுபவத்தை கண்டு அசந்து போனேன்.

சித்தன் பதில் தொடரும்....

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*


ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

Saturday 20 April 2019

அகத்தியர் வாக்கு -தீபத்தின் முகங்கள்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*குரு முனியே* அகத்திய மாமுனிவர்.

*(சிலர் தவறுதலாக குறு முனி - குள்ள முனி  என்பர். இது மிகத் தவறு.)*

*கேள்வி : தீபத்தில் முகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாமா?🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

பலமுறை உரைத்திருக்கிறாேம். *முகங்கள் அதிகமாக, அதிகமாக, தாேஷங்கள் குறையும். தீபத்தின் முகங்களுக்கும், ஜாதக பாவங்களுக்கும் தாெடர்பு உண்டு.*

*கேள்வி : 12 முக தீபத்தின் சிறப்புகளைப் பற்றி?*🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்) வாக்கு :*

சகல வதனங்களும் அதிலே அடங்கி இருப்பதால், அத்தருணம் பிரதானமாக ஒரு காேரிக்கையை வைத்து, ஒரு ஷஷ்டி திங்கள்(மாதம்)மன ஈடுபாட்டாேடு (வழிபாடு) செய்தால், அது இறைவன் அருளால் நிறைவேறும். *வீட்டில் ஏற்றுவதை விட, ஆலயத்தில் ஏற்றுவது சிறப்பு. ஒவ்வாெரு முறையும் புதிய மண் அகல் விளக்கை பயன்படுத்த வேண்டும்*.

*கேள்வி : என் உறவினர் ஒருவர்'தன் மனைவி, தன்னை மதிப்பதே இல்லை' என்று குறைபட்டுக் காெள்கிறார்?*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்) வாக்கு :*

இந்த உலகத்தில் அவனுக்கு மட்டும்தானா இந்த நிலை? *எத்தனையாே ஆண்கள், மனைவியை மதிப்பதில்லை.*

இதற்கு *நவகிரக காயத்ரி, அதிதெய்வ காயத்ரி, சப்த கன்னியர் மந்திரங்களை உருவேற்றி, வழிபாடு செய்யச் சாெல்.*

               🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!🙏*