Tuesday 31 January 2023

வாழ்க்கை பயனுள்ள அறிவுரைகள்

 *கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்:*


1. *குடும்பத்தில் உள்ள அனைவரின் கைகளில் தவழும் தொடுதிரைக் கைபேசிகள்...*


2. *சமூக மதிப்பிற்காக மேற்கொள்ளப்படும் விடுமுறை சுற்றுலாக்கள்...*


3. *வாகனங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் சமூக மதிப்பின் அடையாளமாக மாறிப்போனது...*


4. *வீட்டில் சமைக்கப்பட்ட உணவைத் தவிர்த்து, வார இறுதி மற்றும் பிற நாட்களிலும் தேவையில்லாமல் வெளியே சாப்பிடுவதை முதன்மையாகவும், உயர்வாகவும், மகிழ்ச்சியாகவும், தங்கள் மேன்மையைப் பறைசாற்றும் வடிகாலாகவும் நினைக்கத் தொடங்கியது...*


5. *சீரழிந்த வாழ்க்கைமுறை - மருத்துவச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது...*


6. *சலூன்கள், பார்லர்கள் மற்றும் ஆடைகளை சமூக மதிப்பிற்கான பெரு நிறுவன தயாரிப்பினைக் (BRAND VALUE) குறியீட்டு உணர்வாக வளர்த்துக் கொண்டது...*


7. *ஒன்றாக நேரத்தைச் செலவழிப்பதை விட, அதிகப் பணத்தைப் பிறந்தநாள் மற்றும் ஆண்டுவிழாவை சிறப்பாக்க செலவழிப்பதன் மூலம்...*


8. *பிரமாண்டத் திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்கள்...*


9. *வணிகமயமாக்கப்பட்ட உணவுகள், மருத்துவமனைகள், பள்ளிகள்,  பயிற்சிகள் மற்றும் கல்வி போன்றவற்றினால்...*


10. *தங்கள் வருமானத்தில் அனுபவிக்க இயலாததைக் குறித்த காலத்தில் - குறைந்த காலத்தில் அடைந்துவிட கடன் மற்றும் கடன் அட்டைகள் இன்றியமையாததாக மாறிவிட்டதால்.....*


11. *வீடு மற்றும் அலுவலகத்தின் உட்புறங்களில் பணம் செலவழித்து உள் மற்றும் வெளி அலங்காரம் செய்து குவியல் குவியலாகக் குப்பைகளைச் சேரச்செய்து அதன் மூலம் பராமரிப்புச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது...*


*நமது தேவைகளையும் வருமானத்தையும் புரிந்து கொள்ளாமல் மற்றவர்களின் வாழ்க்கை முறையை நகலெடுக்கிறோம்.*


*இது குறைக்கப்படாவிட்டால், அது பல ஆண்டுகள் கடந்தும் (பழக்கங்கள் மாறாததால்) நோயாக மாறி அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும்.*


*இது சிந்திக்க விரும்புபவர்களுக்கு மிக நுட்பமான செய்தி.*


*நம்மில் பெரும்பாலானோருக்கு இவை பொருந்தும்.*


எழுதியவர் பெயர் தெரியவில்லை.


*- படித்ததில் பிடித்தது..*


பட்டறிவில் உணர்ந்தது.

Monday 30 January 2023

ஸ்ரீ ஹரதத்தர் பெருமான்

 சிவமே பரம் 

சிவமே பரம் என நின்ற ஸ்ரீ ஹரதத்தர் கைலைக்காக்ஷி பேறு பெற்ற நாள்.சோழ வளநாட்டில் காவிரியாற்றின் வடகரையில் உள்ள திருத்தலம் கஞ்சனூர். இத்தலத்தில் விஷ்ணுவின் இருபத்திஐந்தாம் அவதாரமாக அவதரித்தவர் ஸ்ரீ ஹரதத்தாச்சாரியர்.

அத்தலத்தில் காஸ்யப கோத்திரத்தில் வந்த வாசுதேவர் என்ற வைணவ பிராமணர், மஹாவிஷ்ணு மீது மிகுந்த பக்தி கொண்டவர்.அவர் மகாவிஷ்ணுவே தமக்கு புத்திரனாக பிறக்கவேண்டும் என்று தவம் செய்தார்.பரமேஸ்வரன் ஆக்ஞைப்படி, திருமால் சுதர்ஸன அவதார சொருபமாக வாசுதேவருக்கு புத்திரராக அவதரித்தார்.குழந்தைக்கு பெற்றோர்கள் "சுதர்ஸனன் "என்றுபெயரிட்டார்கள்.சுதர்ஸனன் வைணவகுலத்தில்பிறந்தாலும்இயற்க்கையாகவே சிவபக்தி மிகுந்தவராகவிளங்கினார்.கஞ்சனூரில்உள்ளசிவாலயம்

சென்று நாள்தோறும் விபூதி தரித்து ஸ்ரீ அக்னீ ஸ்வரப் பெருமானைவழிபடும்நியதிகொண்டவராகவிளங்குனார்.சுதர்சனின்இச்செயல்கள்அவர்கள்பெற்றோர்களுக்கு கவலை அளித்தது. ஒரு முறை சுதர்ஸனர் இல்லத்தில் சிவக்கோலத்தில் இருப்பதைக் கண்ட, தந்தை வாசுதேவர் வெகுண்டெழுந்து தன் மனைவியைப் பார்த்து, இவன் குலத்துரோகி, நம் சமயத்திற்க்கு விரோதி. இவனுக்கு உணவு இடாதே என்று வீட்டை விட்டு வெளியே துரத்தினர்.

சுதர்ஸனர் நேராக கஞ்சனூர் சிவாலயம் சென்று, அங்கு

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சந்நிதியில் தியானத்தில் அமர்ந்தார்.

அப்பொழுது ஹே மகாப்பிரபோ, இச்சிறியவன் தங்களை சரணடைந்தேன்.என்னுடைய சரீரத்தை பெற்றெடுத்த தாய் தந்தையரை விட்டுவந்தேன், உலகத்திற்க்கு அம்மையப் பராகிய தாங்களே எம் பிதா மதா. என்று மனம்முருகி வேண்டினார்.

குழந்தையாகிய சுதர்ஸனின் வேண்டுதலுக்கு மனமிறங்கி இறைவன் ரிஷபாரூடராய் காட்சி அளித்து குழந்தையின் கண்களுக்கு தம்மை தரிசிக்கவல்ல சக்தியையும் கொடுத்தார்.அப்பொழுது அக்குழந்தை நமஸ்கரித்து கண்ணீர்மல்க நிற்க,குழந்தாய் உனக்கு சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் அருள் செய்கிறோம்.நீ உலகத்தில் உம் பிறவி நோக்கமாகிய "சைவ ஸ்தாபனம் " செய்து சிவஞானம் போதித்து சில காலம் கீர்த்தியோடு வாழ்ந்து வருவாய்என்று அருள்செய்தார்.மேலும் குழந்தாய் உம் உடல், பொருள், ஆவி மூன்றையும்எமக்குதத்தம்செய்துகொடுப்பாய்என்றுஇறைவன் கேட்க,சுதர்ஸனனான சிவகுழந்தை உடனே தயங்காமல் தனது ஆவியையும், உடலையும், உடமையையும் தத்தம் செய்து கொடுத்தார்."மகனே! நீ ஹரனான எனக்கு உடல் பொருள் ஆவியைத் தத்தம் செய்து கொடுத்ததால் உனக்கு "ஹரதத்தன்" "என்ற தீக்ஷா நாமம் தந்தோம் என்று அருளிச் செய்து, தமது திருக்கரங்களால் வீபூதியிட்டு, பஞ்சாக்ஷர உபதேசம் செய்து ஸ்படிக லிங்கம் அளித்து சிவபூஜா விதிமுறைகளை தாமே உபதேசித்து அருள்செய்தார்.

"ஹரதத்தர் " என்றால் தன்னை ஹரனுக்கு தத்தம் செய்து கொடுத்தவர் என்று பொருள் ஆகும்.

ஸ்ரீ ஹரதத்தர் சிவக்கோலத்தோடு தம் தாயாரை காணச் சென்றார்.அப்பொழுது தந்தை வாசுதேவர் இவரின் சிவக்கோலத்தைக்கண்டு, கோபாவேசமுற்றார்.நீ சிவச்சின்னம் தரித்துக்கொண்டதால், கையில் சிவலிங்கம் ஏந்தியால் வைணவ துரோகியாகிவிட்டாய் என்று ஏசினார்.

அப்பொழுது ஸ்ரீ ஹரதத்தர் தந்தையைப் பார்த்து, விபூதி, சிவலிங்க பூஜை செய்வது வைணவத் துரோகமா?

திருவீழிமிழலையில் மஹாவிஷ்ணுவே விபூதி ருத்திராக்ஷம் அணிந்து, சிவலிங்க பூஜை செய்து, தனது கண்ணைத் தாமரை மலராகக் கருதி அர்ச்சித்து வழிபட்டது உமக்கு தெரியாதோ ?அவ்வாறாகையில் விஷ்ணு வைணவ துரோகியா? என்றார்.இதைக்கேட்ட தந்தை வாசுதேவர் திடுக்கிட்டார்.இப்படி ஹரதத்தருக்கும் வாசுதேவருக்கும் வாக்குவாதம் வளர்ந்தது.அந்நிலையில் தந்தையார் உள்ளிட்ட வைணவர்கள், சிறுவனே வாயால் வெறுமனே "சிவமே பரம் " என்றால் நாங்கள் ஏற்கமாட்டோம். பழுக்க காய்ச்சிய மழு முக்காலியில் அமர்ந்து கையை உயர்த்தி மூன்று முறை சத்தியம் கூறினால் நம்புவோம் என்றார்கள்.ஸ்ரீ ஹரதத்தர் இதற்க்கு உடன்பட்டார்.கஞ்சனூர் வரதராஜப் பெருமாள் சன்னிதி முன்தீவளர்க்கப்பட்டது.தீக்குழிஉண்டாக்கி இரும்புமுக்காலிஇட்டுதீயில்பழுக்ககாய்ச்சினார்கள்.

ஸ்ரீ ஹரதத்தர் சிவசிந்தனை கொண்டவராக பெருமாள் சன்னிதி முன்பு வந்தார்.பெருமாளே, நீர் சக்கரம் பெறுவதற்க்காகக் கண்மலரிட்டுச் சிவனை வழிபட்டதாலும்,

இராமாவதாரத்தில் ராமேஸ்வரத்தில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாலும்,

கிருஷ்ணாவதாரத்தில் உபமன்னிய முனிவரிடம் சிவதீக்ஷை பெற்று சிவபூஜை செய்ததாலும் நீரும் ஒரு சிவபக்தராவீர். ஆகவே உம்மை வணங்குகிறேன்.

நான்கு வேதங்களும், புராணங்களுக்கும் சிவமே பரம்பொருள் என்பது உடன்பாடானால் இந்த நெருப்புக்குழி பொய்கை போன்று குளிரட்டும்.இந்த பழுக்ககாய்ச்சிய மழு முக்காலி தாமரை மலர்போல் குளிரட்டும் "-என்று பிரார்த்தனைசெய்து கொண்டு,திக்குழியில் இறங்கி மழுமுக்காலியில் அமர்ந்தார் .இரண்டு கைகளையும் உயர்த்திச்,சிவனே பரம்,சிவமே பரம்பொருள்,என்று கூறிச், சிவபரத்துவ ஸ்லோகங்களையும், இருபத்திரண்டுகாரணங்கள் அடங்கிய பஞ்சரத்ன ஸ்லோகங் களையும் பாடி அருளினார். தேவர்கள் கற்பக மலர் மாரி பொழிந்தார்கள். எங்கும் "ஹர ஹர மஹாதேவா "என்று முழக்கமிட்டார்கள்.இவ்வாறு சிவபரத்துவத்தை நிலைநாட்டிய புண்ணியர் ஸ்ரீஹரதத்தாச்சாரியர்.

சுவாமிகள் செய்த நூல்கள்.:

1)சிவபரத்துவ ஸ்லோகங்கள்.இந்நூல் ஆறு ஸ்லோகங்களால் ஆனது. ஹரதத்தர்மழுமுக்காலில்அமர்ந்துசிவனேபரம்பொரும் என்பதை நிலைநாட்டும் போது முதற்கண் இயற்றியது.

2)சுலோக பஞ்சகம். இந்நூல் ஐந்து ஸ்லோகங்களால் ஆனது .எனவே பஞ்சரத்ன ஸ்லோகம் என்று அழைப்பார்கள். இந்நூலில் சிவமே பரம் என்பதற்க்கு 22காரணங்களை அருளியுள்ளார். ஸ்ரீ ஹரதத்தர் செய்த இந்த வடமொழி நூலை, திருவாவடுதுறை ஆதின ஸ்ரீ மாதவ சிவஞான சுவாமிகள் தமிழில் மொழிபெயர்த்து பாடியுள்ளார்.

3)தச ஸ்லோகி :இந்நூல் சிவபெருமைகளை கூறும் பத்து ஸ்லோகங்களால் ஆனது.

4)ஹரிஹர தாரதம்மியம் :இந்நூல் 108ஸ்லோகங்களால் ஆனது.ஹரிக்கும் ஹரனுக்கும் உள்ள தாரதம்மியத்தை எடுத்து கூறியுள்ளார் இந்நூலில்.

5)சுருதி சூக்த மாலை:ஸ்ரீ ஹரதத்தரால் வடமொழியில் செய்யப்பட்ட இந்நூலுக்கு சதுர்வேத தாற்பரிய சங்கிரகம் என்ற மறுபெயரும் உண்டு.இந்நூலுக்கு ஹரதத்தரின் சீடரான சிவலிங்க பூபதியால் வடமொழியில் விளக்கவுரை செய்யப் பட்டிருக்கின்றது.திருவாவடுதுறை ஆதின மகாவித்வான் சபாபதி நாவலர் இந்நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இவ்வாறு சிவமே பரம் என்று அருளி சைவசமய ஸ்தாபனஞ் செய்தருளிய ஸ்ரீ ஹரதத்தர் தைமாதம் சுக்ல பஞ்சமி அன்று கைலாயம் சென்று இறைவன் திருவடியை அடையும் பேறு பெற்றார்.

சிவமே பரம் என்று உயிர் மூச்சாக வாழ்ந்து அருள்புரிந்தவர் ஸ்ரீ ஹரதத்தர் பெருமான்.

அவர் திருவடிகளை இந்நாளில் நினைந்து வணங்கி புண்ணியம் பெருவோம். சிவ சிவ  

சிவார்ப்பணம்.


காரணமின்றி காரியமில்லை.

 MNo 2227


நாம் குடியிருக்கும் வீட்டில் தெய்வ சக்திகள் நிறைந்திருக்கிறது என்பதை நமது வீட்டிற்கு வரும்  பறவைகள் மற்றும் சில பிராணிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். 


நமது வீட்டில் தெய்வ சக்தி அதிகம் குடி இருந்தால் கெட்டது விலகும், நல்லது விளையும், யாருடைய கண் திருஷ்டியும்,  எதிராளிகள் நமக்கு செய்யும் பில்லி சூனியமும், நம்மை தொடரும் எதிர்மறை எண்ணங்களும் (Negative thought), எதிர்மறை அதிர்வுகள் (Negative Vibrations)  ஆகிய எதிர்மறை ஆற்றல்கள் எதுவும் நம் இல்லத்திற்குள் புகுந்து நம்மை ஒன்றும் செய்யாது. மகிழ்ச்சியினை, நிம்மதியான தூக்கத்தை, அமைதியான மனதினை,  வீட்டிற்குள் நுழையும் போதே நமது இல்லம் தருவதாக நமது மனது உணரும். 


என்ன காரியமாக இருந்தாலும் சட்டென்று முடித்து என் வீட்டில் படுத்துறங்கும் நிம்மதியான தூக்கம் வேறு எங்கும் கிடைக்காது.. நான் கிளம்புகிறேன் என நிறைய பேர் பரபர பயணம் செய்யும் காரணம் புரிந்திருக்குமே..(Home sweet Home. There is no place like Home)


சில செயல்கள் செய்வதன் மூலம் நமது இல்லத்தில் தெய்வ சக்தி கூடும் என சில கூற்றுகள் கூறுகின்றன. 


வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சாதாரணமாக மனிதன் ஏதோ ஒரு மண் மீது ஒரு புதுவீடு கட்டி குடி போகிறார். அவர் வீடு கட்டுவதற்கு முன்பு அந்த மண்ணின் அடியில் என்ன இருந்தது, எது வாழ்ந்தது, எது இறந்தது, மண்ணிற்கு அடியில் மனித உடலோ அல்லது வேறு  என்ன புதைந்து கிடந்தது என்பதை அறிந்துகொள்ளக் கூடிய ஞானம் மனிதனுக்கு கிடையாது. ஆனால், சில பறவைகளுக்கு அதைப்பற்றிய ஞானம் நிறைய உண்டு. குறிப்பாக சிட்டுக்குருவி, புறா, அதற்கடுத்தது அணில் இவைகளுக்கெல்லாம் சூசகமான, சூட்சமமான சக்தியையெல்லாம் உணரக்கூடிய ஆற்றல் அதிகம் உண்டு. இதனால் தான் சிட்டுக்குருவியை வீட்டில் கூடு கட்ட வரும் போது கலைக்க சிறுவர்கள் சென்றால்.. ஏலேய் அடைக்கலாங்குருவி கூடு கட்டட்டும்..விரட்டாதே என பெரியவர்கள் சொல்வார்கள்.. 


வீட்டில் அணில், சிட்டுக்குருவி, புறா, போன்ற பறவைகள் மற்றும் விலங்குகள் இருந்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என சில ஆகம அனுஷ்டானங்களால்  கூறப்படுகிறது. இந்த உயிரினங்களுக்கு தெய்வ சக்தி அதிகமாக குடியிருக்கும் இல்லங்களை அறியும் ஆற்றல் உள்ளது என  சொல்லப்படுகிறது. 


புதிதாக குடிபோகும் வாடகை வீடு அல்லது சொந்த வீட்டிற்கு தெய்வ சக்தியினை கொண்டு வர ஜீவசக்தி கொண்ட ஏதாவது ஒரு உயிரினத்தை கொண்டு செல்ல வேண்டும். மனிதர்களை காட்டிலும் பறவைகளிடம் இந்த தெய்வீகமான ஜீவசக்தியானது அதிகமாக உள்ளது.


உங்கள் வீட்டில் மாடியிலோ அல்லது வேறு இடத்திலோ பறவைகளுக்கு தானியம் போடுங்கள்.  இந்த சந்தர்ப்பத்தில் அவை அங்கேயே கூடு கட்டி வாழ்ந்து குஞ்சு பொரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. புறா, குருவி போன்ற பறவைகள் கூடு கட்டினால் அதனை கலைக்கக்கூடாது. தெய்வ சக்தி கொண்டு வரும் திறன் கொண்டவை இவை என்பதால், இவற்றின் கூட்டை கலைப்பது, வீட்டிற்கு கெட்ட சகுனமாக அமையலாம். இது போன்ற உயிரினங்கள் உங்கள் வீட்டிற்கு வந்தால், அவற்றை விரட்ட வேண்டாம். இவை நமது வீட்டிற்கு வந்து போனாலே நமக்கு நல்லது நடக்கும். 


ஜீவன் என்றால், மனிதன் மட்டுமல்ல, மனிதனை விட  சிட்டுக்குருவி, புறா, அணில், மைனா, கீரி, நாய், சேவல் போன்ற   உயிரினங்களுக்கு ஜீவாதார சக்தி அதிகமாக இருக்கிறது. புறா கூடு கட்ட வழி செய்வது, அணில் கூடு கட்டினால் கலைக்காமல் இருப்பது, சிட்டுக்குருவி வீட்டினில் கூடு கட்டுவது போன்றதெல்லாம் சாதகமான சக்திகளை நாம் குடியிருக்கும் வீட்டில் கொண்டு வருவதற்கான செயல்.  ஜீவாதார ஆத்மாக்கள் இவைகளெல்லாம். இந்த பிராணிகள் தெய்வீக  மற்றும்  சாதகமான சக்தியை நமது வீட்டிற்கு கொண்டு வருபவை. இந்த பிராணிகளை நாம் அலட்சியமாக விரட்டக்கூடாது. இவையெல்லாம் நமது வீட்டிற்கு  வந்து போனாலே நமக்கு நல்லது நடக்கும்.  சாப்பிடும் போது வாயிலில் காத்து நிற்கும் நாய்க்கு தன் கையால் சோறு வைக்கும் முந்தைய தலைமுறை பெரியவர்களிடம் கேட்டு பாருங்கள் விளக்கம் கிடைக்கும்.. 


வீட்டின் கான்கீரிட் மாடி தளத்திலோ அல்லது பழைய மரக்கட்டை பொதிந்த மட்டுப்பாவு வீட்டு கூரைகளிலோ மோட்டுவாழி என்ற பெயரில் கருநீல வண்ண இறகு கொண்ட குழவி மண்ணால் கூடு கட்டுவதை பார்த்திருப்பீர்கள்.. ஒட்டடை அடிக்கிறேன்,  துப்புரவு செய்கிறேன் என தயவு செய்து அந்த கூட்டை அழிக்காதீர்கள். அந்த மோட்டுவாழியாக உங்கள் வீட்டுக்கு வந்திருப்பது  வேறு யாருமல்ல.. வந்தது சாட்சாத் இறைவனின் ஜீவ சக்தி தான்.. அந்த கூடு கட்டியிருக்கும் தருணத்தில் உங்களது குடும்பத்தில் யாரேனும் கருவுற்றிருப்பார்.. அல்லது நீங்கள் நினைத்த காரியம் கை கூடும் என சொல்லும் தெய்வ நிமித்தமாகவே இறைவன் உங்கள் இல்லம் வந்திருப்பார்.. 


காரணமின்றி காரியமில்லை.

நடுத்தர மக்கள் பற்றி சுவையான சில வரிகள்

 நடுத்தர வர்க்கத்தினருக்கே உரித்தான சில விஷயங்கள்........


5 ஸ்டார் ஹோட்டலில் போய் உக்காந்துட்டு தண்ணீரை அண்ணார்ந்து குடிப்பது.


👉மிடில் கிளாஸிடம் இருக்கும் ஒரு பழக்கம் எங்கே போனாலும் மாறாது என்றால்


அது வெளியிடங்களில் தண்ணீரை அண்ணார்ந்து குடிப்பது தான்.


தனக்கு தானே தனியா ஒரு வாட்டர் பாட்டிலை வாங்கி கொண்டு தனி ஒருவராக ரயிலில் பிரயாணம் செய்தாலும்


அந்த வாட்டர் பாட்டிலில் வாய் வைத்துக் குடிக்காமல் அண்ணார்ந்து தான் குடிப்பாங்க.


தண்ணீரை பருகும் ஸ்டைலிலே தெரிந்து விடும் அடடா இவர் நம்ம வீட்டு பக்கத்துக்கு வீடு போலயே என்று.


👉வரிசைக்கு முந்தி அடிக்கிறது.


அது ரயில்வே ஸ்டேஷனோ தியேட்டரோ,


சாமி தரிசனமோ எதுவோ.


ஒருவரை உரசாமல் நிற்கவே முடியாது


எங்கே போனாலும்.


பயணத்தில் எல்லாம் என்னமோ பாட்டி மடியில் தூங்குற மாதிரியே தூங்குவாங்க பாருங்க!


/ இதில் பலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம்.


👉உரசிட்டு உட்காருவது,


சாலையை கடக்கையில் கையை பிடித்துக் கொள்வது,


நண்பர்களை அடிச்சி பேசுறது,


யார் வீட்டு குழந்தை என்றே தெரியாமல் தூக்கி மடியில் வைத்துக் கொள்வது


எல்லாமே இவர்கள் தன்னையும் அறியாமல் செய்வார்கள்.


காரணம் எமோஷ்னலா மட்டும் அல்லாது physical ஆகவும் இவர்களது அன்பு வெளிப்படும்.


பணக்காரர்கள் அவ்வளவு எளிதில் மற்றவரை தொட மாட்டார்கள்.


👉குளிர்சாதன பெட்டியில மேரி கோல்டு பிஸ்கட் வாங்கி வைக்கிறது. எனக்கு தெரிஞ்சி நடுத்தர வர்க்கம் மட்டும் இல்லனா அந்த பிஸ்கட் எல்லாம் விற்பனையே ஆகாது.


மண்ணு மாதிரி இருக்கும் ஆனாலும் டீ குடிக்கும் போது வேற வழியே இல்லாமல் சாப்பிடுவோம்.


👉ஸ்டீல் கட்டில் & ஸ்டீல் பீரோ. எப்படா இதை தூக்கிப்போட்டுட்டு மர கட்டிலுக்கு மாறுவோம் என்பது பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தின் ஏக்கம் தான்.


👉டிரெசிங் டேபிளே அந்த கண்ணாடி வச்ச பீரோ தான்


👉பாதி நடுத்தர வர்க்கத்தினரின் மாளிகையில். லோயர் நடுத்தர வர்க்கத்தினர் வீட்டில் மர வேலைப்பாடுகளே இருக்காது.


👉அதுவே அப்பர் மிடில் கிளாஸ் வீடுகளில் செருப்பு ஸ்டாண்ட் கூட மரத்தில் தான் இருக்கும். இது தான் ரெண்டு பேருக்கும் அடிப்படை வித்தியாசம்.


👉பக்தி.


இது தான் நடுத்தர மக்களின் மாபெரும் அடையாளம். கடவுள் என்ற நம்பிக்கை தான்


இவர்களின் உந்து சக்தியே.


நல்லா சிந்தித்து பாருங்கள் உலக அளவில் பக்தியும் கடவுள் பயமும், நம்பிக்கையும் அதிகம் உள்ள மக்கள் இந்தியர்கள் தான்.


இந்தியர்களுக்கு பக்தி அதிகம் தான்.


அந்த பக்திமான்களில் முக்கால்வாசி நடுத்தர வர்க்கம் தான்.


ஒரு நம்பிக்கையை முன்னிட்டு தங்களை ஆறுதல் படுத்திக் கொள்வார்கள்.


சரி கடவுள் பார்த்துப்பாரு விடுடா,


அவன் செஞ்சா அவன் அனுபவிப்பான் என்ற வார்த்தையை


இவர்கள் பாதிக்கப்படும்போது எல்லாம் சொல்லி தங்கள் மனதை தாங்களே தேற்றிக் கொள்வார்கள்.


👉மாசகடைசி எல்லா டப்பாவையும் உருட்டுவது.


டப்பாவை மட்டுமா உருட்டுவாங்க?


ஒரு பேண்ட் பாக்கெட் விடாம எல்லா பாக்கெட்டையும் துளாவுவாங்க


ஆனால் ஒன்னும் கிடைக்காது அது வேற கதை.


👉VKC பிரைட் காலணி.


ஒரு 20 ஆண்களை நிப்பாட்டிவிட்டு என்ன காலணி அணிந்திருக்கிரார்கள் என்று கணக்கிட்டால் இருபதில் 12 பேர் அந்த VKC காலணியை தான் அணிந்திருப்பர்.


அந்த 12 பேரும் நடுத்தரவர்க்கத்தினராக தான் இருப்பார்கள்.


👉ஆவி பிடிப்பது கை மருந்து சாப்பிடுவது. இதை வாசித்து கடந்து செல்வது ரொம்ப எளிதாக இருக்கலாம் ஆனால் நிஜத்தில் ரொம்ப கொடுமை.


காரணம் இது தான்,


மருத்துவ செலவு எல்லாம் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் எல்லா நடுத்தரவர்க்கத்தினருக்கும் இருக்கும்.


அதனாலையே ஒரு தும்மல் எடுத்தாலும் உடனே எதையாவது வசக்கி கசாயம் எடுத்து குடிக்க வச்சிருவாங்க.


தும்மல் வந்தால் ஆவி பிடிக்கனும்,


சளி இருந்தால் ஆவி பிடிக்கனும்,


மழையில் நனைஞ்சிட்டு வந்துட்டோம்னா ஆவி பிடிக்கனும்,


தலைவலி வந்தால் ஆவி பிடிக்கனும் அட இது என்ன விசேசம்


நாங்க எல்லாம் கொரொனாவுக்கே ஆவி பிடிச்ச கூட்டம் தான்.


👉கை மருந்து, கசாயம், ஆவி பிடித்தல் தான் நடுத்தர வர்க்கத்தின் மருந்து மாத்திரை ஊசி எல்லாம். ஆவி பிடித்தல் தான் இவர்களின் அடிப்படை மருந்து.


பணக்காரர்கள் வரும்முன் காப்போம் என்ற மன நிலையிலும்,


ஏழைகள் வந்த பின் காப்போம் என்ற மன நிலையிலும்,


நடுத்தர வர்க்கம் வரும்பொழுது காப்போம் என்ற மன நிலையில் இருப்பது தான் மழையில் நனைந்ததும் ஆவி பிடிப்பதன் உளவியல் எனலாம்.


ஆவி பிடிக்கிறதை தூக்கி ஓரம் வச்சிட்டு வாங்க


👉இவங்க வீட்டு குளிர் சாதன பெட்டியையும் உணவு மேசையையும் பார்ப்போம்.


ஒரு 20 நடுத்தரவர்க்கத்து அம்மாக்களை நிப்பாட்டிவிட்டு, குளிர்சாதன பெட்டியின் அவசியமும் பயனும் என்னனு கேட்டால்,


அந்த இருபது பேரில் 17 பேர் யோசிக்காமல் மாவு வைக்க,


பால் வைக்க என்ற பதிலை தான் முதலில் சொல்லுவார்கள்.


நடுத்தரவீட்டின் குளிர்சாதன பெட்டிகளில்


தோச மாவு, ஒரு பால் பாக்கெட், கறிவேப்பிலை, கொத்துமல்லி தலை, ரெண்டு முட்டை, நாலு எலுமிச்சை பழம், ஒரு பிஸ்கட் பாக்கெட் கண்டிப்பாக இருக்கும்.


பெங்களூர் டேஸ் படத்தில் காண்பிப்பது போல்

குளிர்சாதன பெட்டியை திறந்தால் கூல் டிரிங்ஸ் எல்லாம் உள்ளே இருந்து விழாது.


சாக்லெட்டை எல்லாம் பார் பாராக வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிட்டதாக சரித்திரமே இருக்காது.


👉மகள் கிட்சனுக்குள் சென்றால் ஒரு டப்பா பொறிகடலை அட அது தான் பொட்டுகடலை காலியாக போகுதுனு அம்மாக்களுக்குத் தெரிந்துவிடும்.


தேங்காய் மற்றும் பொறிகடலையை சாப்பிடும் வழக்கம் பெரும்பாலான நடுத்தர வீட்டு குழந்தைகளுக்கு இருக்கும்.


அந்த பொறிகடலைக்கும் நடுத்தரவர்க்கத்தினருக்கும் இருக்கும் உறவு என்பது ஆயிரங்காலத்து பயிர்.


👉எல்லா நடுத்தர வீட்டின் பெட் ரூமிலும் ஒரு நாற்காலி 'யாருக்கோ வந்த விதி'னு இருக்கும்.


அந்த நாற்காலி வெறும் நாற்காலி மட்டும் இல்லை அது ஒரு சுமை தாங்கி.


துவைத்து காயப்போட்டு எடுத்த ஆடைகளை நேரா கொண்டு வந்து அது மேல தான் போடுவாங்க.


ஏழைகள் வீடுகளில் இந்த ஆடைகள் அசையிலும் (கொடி),


பணக்காரர்கள் வீட்டில் ரேக்கிலும் தொங்கும்.


நடுத்தர வீட்டில் மட்டும் அந்த சுமை தாங்கி என்னும் நாற்காலி இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்.


இங்கேயும் இருக்கனும் அங்கேயும் போகனும் என்ற எண்ணம்.


ஒன்னும் புரியலல?


👉வீட்டில் ஒன்னுக்கு ரெண்டு சிலிண்டர் வைத்திருந்தாலும் கூட


ஒரு விறகு அடுப்பு மேடையும் போட்டு வச்சிருப்பாங்க.


ஏழ்மை நிலையிலிருந்து நடுத்தரவர்க்கம் ஆகியும் விட்டுட்டு வந்த அடுப்பையும் விட மனசு இருக்காது


(அதாவது பழைய வாழ்க்கை முறையை விடவும் மனசு இருக்காது)


அதே நேரம் அடுத்த மாசம் நாம மைக்ரோஓவன் வாங்குவோம்னு யோசிப்பாங்க


(அதாவது அடுத்தடுத்த நிலைக்குள் செல்ல வேண்டும் என்ற ஆவலும் இருக்கும்).


ரெண்டு நிலை மனது இவர்களுக்கு எப்பொழுதுமே இருக்கும்.


பழையதை விட்டுட்டு வர மனதே இருக்காது.


நான் வெறும் விறகு அடுப்பை மட்டுமே சொல்லல.


👉மெனு கார்டை மாங்கு மாங்குனு பார்த்துட்டு கடைசியில அதே பிரியாணியை ஆர்டர் பண்ணுறது.


அதில் கொடுமை என்னனா,


குடும்பமா போய் அந்த ரெஸ்ட்டாரண்ட்டில் உட்கார்ந்துட்டு ஆளுக்கொரு மெனு கார்ட் வாங்கி தனி தனியா மெனுவை பார்ப்பார்கள்.


ஆனால் எத்தனை முறை மாங்கு மாங்குனு பார்த்தாலும் கடையில இவங்க ஆர்டர் செய்வது என்னவோ அதே பிரியாணியை தான்.


ஒரு சுவை நாக்கில் ஓட்டிகிட்டா போதும்


அதை தாண்டி வரவே மாட்டாங்க நடுத்தரவர்க்கத்தினர்.


Safe zone லையே தான் இருப்பாங்க.


வேற உணவு புதுசா ட்ரை பண்ணி அது நல்லா இல்லாம போச்சுனா?


பேசாம பிரியாணியே ஆர்டர் பண்ணுவோம்.


இது தான் இவர்கள்.


👉எங்கே போனாலும் விலைப்பட்டியலை பார்ப்பது.


எனக்கு பிடித்ததை வாங்கினேன் என்பதை விட என் பட்ஜெட்டுக்கு இது தான் சரி அதனால் இதை வாங்கினேன் என்பது தான்


இவர்களது பதிலாக இருக்கும்.


👉கோயில் குளத்துக்கு போனால் புளி சோறை கட்டி எடுத்துட்டு போறது,


👉பிள்ளையை விடுதிக்கு அனுப்பினால் ஊறுகாய் மற்றும் இட்லி பொடியை கையோட கையா குடுத்து அனுப்புறது.


இதுக்கு பின்னாடி இருக்கும் உளவியல் என்னனு நான் சொல்லியா தெரியனும்?


பத்தாயிரம் பக்கதில் எழுத வேண்டிய பதில் பத்து பாயிண்ட்டிலா உள்ளடங்கிவிடப் போகிறது?


👉இதனுடன் கார் சீட் கவரை கிழிக்காமலே ரெண்டு வருடத்திற்கு காரை ஓட்டுவதையும் சேர்த்துக் கொள்ளலாம்.


👉அப்புறம் அந்த வாட்டர் பாட்டிலை அண்ணார்ந்து குடிப்பது உங்களிடம் மட்டுமே இருக்கும் ஆரோக்கியமான விசயம் தான்.


இதையெல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.


அவசரத்துக்கு யாராவது தண்ணீர் கேட்டால்குடுக்கலாம்ல? 😀😀😀

சதுரகிரி

 சதுரகிரி மலையின்  சிறப்பம்சம்

இந்த மலையில் மேற்புறத்தில் நான்கு திசைகளிலும் சிறு குன்றுகள் அரணாக அமைந்து உள்ளன ,நாற் சதுர வடிவில்  அமைந்து உள்ளது  அதனால் அதற்க்கு சதுர கிரி என்று பெயர் . இங்கு அமைந்து  உள்ள குன்றுகள் நவமணிகளின் குணத்தை கொண்டு உள்ளது இங்கு உள்ள பகுதி கிரகணங்களின் தாக்கத்தில்  இருந்து விடுபட்டு  தனது சக்தியை  (அம்பாளின் சக்தி) வெளியில் வெளிப்படுத்தும் திறன் கொண்டது , இங்குள்ள சர்ப்பங்கள் நவரத்தின சிகப்பு நிறத்தில் உள்ளன  இங்கு அநேக ஜோதி விருட்ஷ மரங்கள் உள்ளன.இங்கு இரவென்றும் பகலென்றும் இல்லை , இரண்டும் சேர்ந்த நிலையில் வெளிச்சம் உடையது .இங்குள்ள புற்கள் நிறைந்த பகுதி யில் புல்பூண்டுகளாக அநேக ரிஷிமார்களும் விருட்ஷிகங்கள் மரங்களாக தேவர்களும்  சித்த மகரிஷிகளும் உள்ளனர் ,வீட்டில் வளர்க்கும் பட்ஷி , மிருகங்கள்போன்ற  வடிவில்  இங்கே  உலாவி வருகிறார்கள் . இங்கே  சித்தர்கள்  பக்தர்களாகவும்  அடியார்களாகவும் மக்களுடன்  கலந்து  மகாலிங்கத்தை தரிசிக்க  வருபவர்களை  கூட்டிச்  செல்வார்கள்

இன்னும் சிவனும் பார்வதியும்  காட்சி கொடுத்த இடமாகவும்  இது உள்ளது

இமயத்தில் வாழும் ரிஷிகள்   முனிவர்கள்  இங்கே வாழ்கின்றனர் . இதன் பெருமை அளப்பரியது . இந்த மலையை வலம் வந்தாலும் துன்பங்கள்  துயர்கள்  தீரும்

நாகம் காக்கும் ஆலய மூர்த்திகள்

 


Tuesday 24 January 2023

உலகிலேயே சிறந்த ஆலய மணி

 கோவில்_மணிகள்:


கோவில் மணிகள் சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை.


 காட்மியம், 

ஜின்க், 

லெட், 

காப்பர், 

நிக்கல், 

க்ரோமியம் 

மற்றும் மாங்கனீஸ் 

போன்ற பல உலோகங்களை கொண்டு செய்யப்படுபவை தான் மணிகள். 


கோவில் மணியை செய்ய ஒவ்வொரு உலோகத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டும். 


அதன் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானம் என்னவென்று தெரியுமா? 


மணியை ஒலிக்க செய்யும் போது ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனித்துவமான ஒலியாய் எழுப்பும். 


இது உங்கள் இடது மற்றும் வலது மூளையை இணைக்க செய்யும். 


அதனால் மணி அடித்த அடுத்த தருணமே, நீண்ட நேரம் ஒலிக்கும் கூர்மையான சத்தம் எழும். 


இது 7 நொடிகள் வரை நீடிக்கும்.


 மணியில் இருந்து எழும் எதிரொலி உங்கள் உடலில் உள்ள 7 குணமாதல் மையங்களையும் (சக்கரங்கள்) தொடும். 


அதனால் மணி ஒலித்த உடனேயே, உங்கள் மூளை சில வினாடிகளுக்கு வெறுமையாகி விடும். 


அப்போது மெய்மறதி நிலையை அடைவீர்கள். 


இந்த மெய்மறதி நிலையில், உங்கள் மூளை சொல்வதை வரவேற்கும் பண்பை பெறும்.  


உலகிலேயே சிறந்த ஆலய மணி


    ""சிகண்டி பூர்ணம், ""


சிதம்பரம் நடராஜர் சன்னதி

(மணி ஓசையைக் கேட்கவும்)




Monday 23 January 2023

மூச்சுவிடும் காலபைரவர்

 *பூலோகத்தின் வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருக்குறுங்குடி நம்பி கோயிலில் மட்டுமே அமைந்துள்ள மூச்சுவிடும் காலபைரவர்,* 


திருக்குறுங்குடி நம்பி கோயில் பிராகாரத்தைச் சுற்றி வரும்போது பிரமாண்ட உருவினராக நமக்கு தரிசனம் தருபவர் கால பைரவர். 


ஆமாம், சிவ அம்சமான பைரவர்தான். 


பொதுவாகவே சிவன் ஆலயங்களில் பைரவர், அந்தக் கோயிலைக் காக்கும் தெய்வமாகவே வணங்கப்படுவார். 


இரவில், பூஜைகளை முடித்து விட்டு, கோயிலைப் பூட்டி, சாவியை பைரவரிடம் சமர்ப்பித்துவிட்டுச் செல்வதும் மறுநாள் காலையில், அவரிடமிருந்து 

சாவியைப் பெற்றுக் கொண்டு கோயிலைத் திறப்பதும் நடைமுறை. 


அந்தவகையில், இங்குள்ள காலபைரவர், பெருமாளுக்கும் காவலராகப் பணிபுரிகிறார் என்றே சொல்லலாம். 


பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை சிவபெருமான் இந்தத் திருக்குறுங்குடி தலத்தில்தான் போக்கிக்கொண்டார் என்பதால், அவருடைய அம்சமான பைரவர், 

அந்த நற்பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்வாறு இங்கு காவல் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.


திருக்குறுங்குடி நம்பிகளை தரிசனம் செய்வது என்பது வெறும் அர்ச்சாவதார தரிசனமாக இருக்காது.


பெருமாளை அப்படியே உயிரோட்டமாக, உணர்வுபூர்வமாக சந்திப்பதாகவே இருக்கும். 


ஆமாம், பட்டர் தீபாராதனைத் தட்டை மேல் தூக்கி நம்பிகளின் முகத்தருகே கொண்டுபோகும்

போது, அந்தச் 

சிலையின் விழிகள் அசைவது நம்மை அப்படியே சிலிர்க்க வைக்கும். 


என்ன மாயம் இது! 


பகவான் நம்மைப் பார்த்துக் கொண்டேயிருக் கிறான் என்பதற்கான அறிகுறி இதுதானா? 


இடமிருந்து வலமாக 

தீபம் அசையும்போதும் மேலிருந்து கீழ், 

கீழிருந்து மேல் என்று போகும்போதும், அந்த ஒளியில் மின்னும் பெருமாளின் விழிகள் அந்தந்த திசை 

நோக்கித் திரும்புவதை  அனுபவித்து

பார்த்துதான் உணர முடியும். 


அதை நம்ப முடியாமல் கண்களைக் கசக்கிக்கொண்டு மறுபடி நம்பிகளைப் பார்த்தால், தன் தாமரை மலர்க் கண்களால் அவர் சிரிக்கிறார். 


அது தீபாராதனையின் ஒளி மாயமோ, தேர்ந்த சிற்பியால் வடிக்கப்பட்ட அந்தக் கண்களின் பளபளப்பு மாயமோ, எதுவாயினும் சரி, ‘‘என்ன சௌக்கியமா?’’ என்று கேட்கும் அந்தப் பார்வை அதிசயமானதுதான், அபூர்வமானதுதான். 


தரிசனம் முடித்துத் திரும்பும்போது தற்செயலாக மறுபடி அந்தக் கண்களை ஒரு நேர்க்கோட்டு வீச்சில் கவனிக்கும்போது, ‘‘போய்வா, சந்தோஷமாக இருப்பாய்,’’ என்று ஆசிகூறும் ஒளியை சந்திக்க முடிகிறது! 


விழியசைத்து வியப்பளிக்கும் திருக்குறங்குடி பெருமாளைப் 

போலவே, இந்த கால பைரவரும் தன் மூச்சிழையால் பக்தர்களின் மனதில் பரவசத்தைப் பரப்புகிறார். 


ஆமாம், இந்த கால பைரவருக்கு இடது பக்கத்தில் ஒரு 

விளக்குத் தூண். 


இதன் மேல் பகுதியில் ஒரு விளக்கு, கீழ்ப் பகுதியில் இன்னொரு விளக்கு. 


இவை தவிர 

இரண்டு சர 

விளக்குகளும் 

உண்டு. 


இந்த நான்கு விளக்குகளிலும் 

தீபம் ஒளிசிந்தி பைரவரின் முழு ரூபத்தையும் 

தெளிவாகக் காட்டுகின்றன. 


இதில் அதிசயம் என்னவென்றால், 

மேலே உள்ள விளக்கின் ஜ்வாலை, காற்றுபட்டால் அசையும் தீபம் போல அலைவதுதான்.


ஆனால் பிற மூன்று விளக்கு ஜ்வாலைகளும் சீராக எந்தச் சலனமுமில்லாமல் 

எரிந்து கொண்டிருக்கின்றன. 


மேல் விளக்கு ஜ்வாலை மட்டும் அசைவானேன்? 


அது பைரவரின் மூச்சுக் காற்று ஏற்படுத்தும் அசைவு! 


மூச்சு இழுக்கும்போது ஜ்வாலை அவரை நோக்கித் திரும்பியும் விடும்போது எதிர்திசையில் 

விலகியும் அசையும் சலனம்! 


விஞ்ஞானபூர்வமாக சிந்திக்கவும் காரணம் கண்டு பிடிக்கவும் இயலாத தெய்வீகம். 


பிரமிப்பில் விரியும் விழிகள் இமைக்க மறப்பது அனுபவபூர்வமான உண்மை.

 

இவருக்கு வடைமாலையும் பூச்சட்டையும் சாத்துவது பிரதான பரிகார வழிபாடாக மேற்கொள்ளப்படுகிறது. 


வடைமாலை என்றால் ஆஞ்சநேயருக்கு சாத்துவார்களே 

அதுபோல அல்ல; மிகப்பெரிய ஒரு 

அளவில் 

ஒரேவடையாகத் தட்டி அதை நிவேதனம் செய்யும் முறைதான் 

இது.

 

இந்த பைரவர் 75 சதவீதம் கல்லாலும், மேலே 25 சதவீதம் சுதையாலும் ஆன சிற்பமாகத் திகழ்கிறார். 


மூலிகை வண்ணத்தால் இவருக்கு அழகு தீட்டியிருக்கிறார்கள். 


300 வருடங்களாகியும் அந்த வண்ணங்கள் வெளிராமலும் மெருகு குலையாமல் இருப்பதும் அதிசயம்தான். 


இவருக்குத் தயிரன்னம் நிவேதிக்கப்படுகிறது. திருமண வரம் வேண்டியும் மழலைப் பேறு கோரியும் வரும் பக்தர்கள் இவர் அருளாசியால் அந்த பாக்கியங்களைப் பெற்று மகிழ்கிறார்கள். 


கால பைரவரின் 

மூச்சுக் காற்றினால்

மூச்சு இழுக்கும்போது 

மேல் விளக்கு ஜ்வாலை அவரை நோக்கித் திரும்பியும் மூச்சு விடும்போது எதிர்திசையில் 

விலகியும் அசையும் தீபத்தின் அதிசியமான

காணொளிக்காட்சி



Sunday 22 January 2023

பைரவர் சாய் வழிபாடு

 


ஆங்கில கட்டுரை, அமெரிக்க வாழ்க்கையின் மோசமான பலன்கள்

 *Let America teach a lesson to us*

-------------------------

*What happened in the United States, when  cooking at Home stopped ? Famous American Economists of the 1980s warned the American people*:

The Kitchen has already been outsourced to companies, and if the Elderly who used to give Childcare, is also outsourced, then family responsibilities and it's relevance, will be destroyed. ”

*But very few people listened to their advice.*

Cooking at Home, has almost stopped.

*And the habit of ordering Food from outside ( it is now the Norm), has led to the extinction of American families as Experts had warned.*

Cooking with Love, means connecting with the Members of the family with affection.

*Culinary Art is not cooking alone. The Focal point is, family Culture.*

If there is no Kitchen, just a bedroom, it's not a family, it's an Hostel.

*What about American families who closed their Kitchen and thought that the bedroom alone is enough ?*

In 1971, almost 72% of U.S. Households had a Husband and Wife, living with their children.

*By 2020, it has fallen to 22%.*

Families that lived together earlier, are now living in Nursing homes (Old Age Homes).

*In the United States, women now make up 15% of single-member Households.*

Men make up 12% of single-family Homes in America

*19% of Homes in America, are owned either by a Father or a Mother living alone.*

6% of Households in America, are classified as Male-Female shelters. (living together).

*38% of all babies born today in America, are born to unmarried women.*

Half of them are Girls, going to schools in America.

*About 52% of first Marriages in the United States, end in a Divorce because of this mess.*

67% of second marriages, are problematic.

*The Bedroom is not just the Home. If there is no kitchen and only a bedroom exists, then it is not a complete Home.*

The United States is an example of the breakdown of the Institution of Marriage.

*Our Feminists will buy Sweets in shops and celebrate, even though the families in India, are gradually destroyed like the families in America.*

Mental and Physical health deteriorates, when families are destroyed.

Eating outside Food, can make the body Fat and susceptible to infections, besides unnecessary spending

*So Cooking at Home, is not the only reason for well-being of the Family.*

Physical health and Mental health are also essential to the country's Economy.

*That's why Elderly people in our house, used to advise us to Avoid eating outside*

But today we eat with our family in Restaurants ... ",

*Ordering and eating Food cooked by strangers Online through Swiggy & Zomato,*

is becoming fashionable even among the highly educated, Middle-class people.,

*This  Habit will be a long-term disaster ...*

*If those Online Companies that psychologically decide what we should eat ...*

Our Ancestors, before going on any outing, used to cook and carry Home-made Food

*So cook at Home, eat together and live happily. Apart from wholesome Food,  it has love and affection embedded*.

ஆலய பணிகள் 22ஜனவரி2023

 நமது அகஸ்தியர் பீடத்தில் நடந்து வரும் கட்டிட வேலைகள் பற்றிய பதிவு கொடுக்கப்பட்டுள்ளது என்னென்ன கட்டிடங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்ன கையிருப்பு கட்டுமான பொருட்கள் இருக்கின்றன என்பது விவரிக்கப்பட்டுள்ளது உங்கள் பார்வைக்காக மிக்க நன்றி 


மேலும் நமக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் செலவில் வாசியோக குடிலிற்கு மேற்கோரை அமைக்க வேண்டி உள்ளது 

இதற்கு சுமார் ஒரு டன் இரும்பு கம்பி கூலியாக சுமார் 60 ஆயிரம் ரூபாய் மேலும் 40 50 மூட்டை சிமெண்ட் மற்றும் 3000 சிமெண்ட் கற்கள் செங்கற்களை போல உருவம் கொண்ட சிமெண்ட் கற்கள் 3000 கற்கள் தேவைப்படுகிறது மொத்தம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்

நமது அகஸ்தியர் பீடத்தில் குருபூஜை முடிந்து குருபூஜை எந்த வகையில் நடந்தது என்பதை பற்றி பொது நாடி அகஸ்தியரிடம் கேட்கப்பட்டது 


அதில் அகஸ்தியர் குருபூஜை நடந்த போது ஒரு சிறு மழையாக வந்து ஆசீர்வதித்ததாகவும் மேலும் வெள்ளை கருடன் வடிவத்தில் வந்த 33 முறை ஆசிரமத்தை சுற்றி வட்டமிட்டதாகவும் மேலும் ஒளி ரூபமாக காட்சி அளித்ததாகவும் நாடியில் தெரிவித்தார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் 


ஒளி ரூபமாக அளித்த காட்சி எதேட்சையாக நமது நண்பர் ஒருவர் எடுத்த புகைப்படத்தில் பதிவாகி இருந்தது


 அது ஏற்கனவே நமக்கு தெரியும் 


மழை என்பது சிறுசிறு துளிகள் போல தான் விழுந்திருக்கிறது என்று அகஸ்தியர் ஐயா கூறினார் பெரிய மழை என்று வரவில்லை


 அதனால் நாம் அதை கவனிக்கவில்லை


 மேலும் பந்தல் அமைக்கப்பட்டு இருந்ததால் கருடன் வட்டம் அடைத்ததையும் சில பேர் பார்த்திருக்கக்கூடும் பலர் பார்த்திருக்க மாட்டார்கள் 


மேலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னர் நமது மேற்கூரை அமைக்கும் பணி நடைபெறும் போது ஐயா அவர்கள் மீண்டும் வெள்ளை கருடன் படிவத்தில் பறந்து வந்து தொடர்ந்து சுற்றி வட்டமிட்டு கொண்டு படியே இருந்தார் மாலை வரை ஆசிரமத்தை சுற்றி வட்டம் எடுத்து விட்டு பிறகு தான் விடை பெற்றார் 


இதை அனைவரும் பார்த்துள்ளனர் 


மேலும் ஆலய பணி ஆனது 13 திங்களுக்குள் நிறைவு பெறும் ஏன்று அகஸ்தியர் ஐயா வாக்கு அளித்துள்ளார் 


விளக்கு ஒன்றை ஏற்றி இந்த ஆலய பணி நடக்கும் இடத்தில் வைக்க சொல்லி உத்தரவு போட்டுள்ளார்


 மேலும் நமது பீடத்தின் நண்பர்கள் மூலமாக இங்கு விளக்கு ஏற்றி இங்கிருந்து அனையாமல் எடுத்து கொண்டு போய் அந்த இடத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கு உத்தரவு கொடுத்துள்ளார்கள்


 தற்போது மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது 8 எண்ணிக்கையில் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது மேலும் வாசி யோக குடில் மேற்கூரை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது 


மேலும் செப்டிக் டேங்க் பூச்சு வேலை எலக்ட்ரிகல் வேலை பிளம்பிங் வேலை ஆகிய வேலைகள் பாக்கி உள்ளன 


எந்த ஒரு பெரிய நிதி உதவியும் இல்லாத நிலையில் நமது குருஜி ஐயா அவர்கள் தொடர்ந்து நாடி வாசித்து அதிலிருந்து வரும் தட்சினை பணத்தை தனது குடும்ப செலவுக்கு ஒரு சிறிதளவு மட்டுமே வைத்துக் கொண்டு பெரும் பகுதியை பணியாளர்களுக்கு கூலி கொடுப்பதற்காக அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


 முடிந்தவர்கள் அனைவரும் இந்த இறைப்பணியில் பங்கு பெற்று அகத்தியர் அருளுக்கு பாத்திரமாகுமாறு கேட்டுக்கொள்கிறோம்


 ஐயா அவர்கள் பொது நாடியில் உரைத்த போது என் மக்களை யாமை காப்போம் எந்த நிலையிலும் கைவிட மாட்டோம் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்


 மேலும் கிரக நிலை மாற்றங்களும் சிலருக்கு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது அவை எல்லாம் சரியாகும் என்றும் கூறியுள்ளார்


 மிக்க நன்றி 


உங்கள் பேராதரவினால் இந்த பெரும் தொண்டு நடைபெற்று கொண்டு இருக்கிறது 


தற்போது நமது பசுமாடு கன்று எனும் நிலையில் இருக்கிறது 


நம்மிடம் இருந்த காய்ந்த வைக்கோல் கதிர்கள் மழையில் நனைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன 


மேலும் புதிதாக வைக்கோல் வாங்க வேண்டும்

 வைகோல்களில் மழை பனியில் நனையாமல் இருப்பதற்கு தார்பாலின் எனப்படும் சீட் வாங்கப்பட உள்ளது


 இதற்கு சுமார் 2000 ரூபாய் தேவைப்படும்


 முடிந்தவர்கள் உதவி செய்யலாம்


ஆலய பணிக்கு பொருட்களாகவோ அல்லது பணமாகவோ உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றன














Saturday 21 January 2023

எது உண்மை பலம் தேக பலமா? ஆத்ம பலமா? எது பெரிது

 1930 . மதராஸ், திருவல்லிக்கேணி...  இளம் பிரம்மச்சாரிகளின் புகலிடம்... 


அங்கு ஒரு  ஹோட்டல் (கோபால கிருஷ்ண விலாஸ் ) முதலாளி.... வைதீஸ்வர ஐயரின்  கல்லாவில் எதிரில் ஒரு  . ஒரு " இஞ்ச்"+  உறுதியான கனமான " டேபிள் டாப்" பெல்ஜியம்  கண்ணாடி டேபிள்... இருக்கும் 


அன்று , அதை சுற்றி சில இளைஞர்கள் அமர்ந்து கொண்டு ஏதோ தீவிரமாக விவாதித்தபடி.... தங்கள் காலை சிற்றுண்டியை சாப்பிட்டு க் கொண்டு இருந்தனர்... 


 ஐயர் கவனித்தார்... அவர்கள் விவாதம்.....  "தேக பலத்தால் சாதிக்க முடியாததை ஆத்ம பலத்தாலும் முடியாது... எது உண்மை பலம் தேக  பலமா?   ஆத்ம பலமா? எது பெரிது?"


 பலர் தேக பலத்துக்கு ஆதரவு.. ஆத்ம பலத்தால் முடியாது என கூற


 அந்த சிவந்த.. , மெலிந்த, வட நாட்டு நீண்ட தலை முடி, தாடி யுடன் கூடிய இளைஞர் மட்டும்... "ஆத்ம பலத்தால் எதையும்  சாதிக்க முடியும்..தேக பலம் இரண்டாம் பக்ஷம் தான்" என வாதித்தார். தமிழ், ஆங்கில, சமஸ்கிருத... மணிப்பிராளவத்தில். 


அவரை ஐயருக்கு தெரியும்,, அவர் மஹாராஷ்டிரா வை சேர்ந்தவர், பனாரஸ் ஹிந்து கல்லூரியில் MSc (Zoology) தங்க மெடல் பெற்று  சென்னையில்  மீன் வளத்துறையில்  PhD  பட்டம் பெற   வந்துள்ளார்... ,(பின்னர்  BL  பட்டமும்) °ஐயரின்  வாடிக்கையாளர். 


ஐயருக்கும்  உற்சாகம் வந்து விட்டது,... விவாதத்தில் கலந்து கொண்டு.. ,,


 "வெறும் பேச்சு எதற்க்கு நிரூபிக்கலாமே."  என்றார்....எப்படி? 


அந்த கனமான கண்ணாடி "டேபிள் டாப்பை" ஒரே குத்தில் உடைக்க வேண்டும்,


"உடல் பலம் பேசிய  பார்ட்டிகள்" முயன்றன  ஒரு  கீறல் கூட விழவில்லை.. பின் வாங்கின,


 மராட்டிய இளைஞர் நம்பிக்கையுடன் "உடைப்பேன், ஆளால் புது கண்ணாடி நான் தான் வாங்கித் தருவேன்" என்றார் ..ஐயர் . ஒப்பினார்...... 


,, யாருக்கும் நம்பிக்கை இல்லை..சிரித்தனர்.., இதை இந்த ஒல்லிக் குச்சி  ஆளாவது,  உடைப்பதாவது? அதுவும் ஒரே குத்தில்.


 இளைஞர் எழுந்து நின்று  கையை உயர்த்தி முஷ்டியை மடக்கி , கண்ணை மூடி, தியானத்தில்  இருப்பது போல் ஒரு நிமிடம்...... தன் பலம் எல்லாம் "முஷ்டியில்" தேக்குவது போல்...இருந்தார்..

 பின், அவர் கை டேபிளை நோக்கி மின்னல் வேகத்தில்  பாய்ந்தது, "படீல்" என ஒரு சப்தம். 


கனமான கண்ணாடி  உடைந்தது. எல்லோருக்கும் ஆச்சரியம்... இந்த மெலிந்த உடலில் இத்தனை (ஆத்ம) சக்தியா? 


அவர்.... குருஜி ஸ்ரீ. "மாதவ்ராவ் சதாசிவ்ராவ் கோல்வால்கர்". பிற்க் கால RSS தலைவர். (குருஜீ பட்டம் அவர் கல்லூரியில்  படிக்கும் போதே சக மாணவர்களால் வந்து விட்டது) 


குருஜி, குருஜீ, குருஜீ  என்று அவரை நெஞ்சார அழைத்துக்கொண்டு, லட்சோய, லட்சம் தொண்டர் கள் அவர் இட்ட பணிகளை வேத  வாக்காக கருதி சிரமேற்க்கொண்டு  ஈடேற்றிய காரணம் என்ன? 


ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் எண்ணற்ற அடக்கு முறைகளுக்கு பின்னும் RSS, பீனிக்ஸ் பறவை போல் புது உத்வேகத்துடன் மறு மலர்ச்சி பெற்றது எனில்... அதற்க்கு காரணம் என்ன? 


Secular.. என்று கூறிக்கொண்டவர்களும்.... , ஹிந்து சமய வளர்ச்சியில் ஒளிவு மறைவு இன்றி அதில் ஆழ ஈடுபட்டு இருந்த குருஜி க்கு ஒரு தனிப்பட்ட மரியாதை தந்திருந்தார்களே, அது எப்படி? 


இதற்க்கு எல்லாம் விடை ஒன்று தான், அது அவருடைய, குருஜி யுடை... ஆத்ம சக்தி,... சுத்தி.. ஒப்பற்ற தூய்மை உள்ளம். 


ஒருவர்... சுயநலத்திற்காக ஒரு கொள்கைளை பின் பற்றாமல், தன் சுய நலம் அனைத்தையும் ஒரு கொள்கைக் காக தியாகம் செய்து விட்டால்... அவரை உலகம் வணங்கத் தான் செய்யும்..


தன் கொள்கைகளுக்காக அந்தரங்க சுத்தியுடன் போராடிய மா வீரர் குருஜி....

 

அவருக்கு என்று, வீடோ, வாசலோ, குடும்பமோ கிடையாது... தொண்டர் களையே தன் குடும்பமாக கொண்டு... பல பல ஆண்டுகள் ரயில் பெட்டிகளையே  தன் வீடாகக் ..  தேசம் முழுவதும்., 65 முறை சுற்றித் திரிந்து   தன் கொள்கைளை  பிரச்சாரம் செய்த  தீரர் அவர். 


அவரது ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை அன்பு... பாசத்தில் கட்டுப்பட்ட தொண்டர் கள் அவரிடம் மாறாத பாசம் கொண்டிருந்ததில் வியப்பு உண்டோ?. 


வாழ்க அவர் புகழ், வந்தே மாதரம் 


Ps. With inputs from அன்பு நண்பர்.. என் குருஜி "ஸ்ரீ நிதி பட்"


Venugopal Iyer

Tuesday 17 January 2023

நம்பிக்கை - உண்மை கதை

 நீண்ட காலத்திற்கு பிறகு 

நண்பர் ஒருவரை சந்தித்தேன்.


அவர் Mumbaiல் settle ஆனவர். 

Fast Food கடை மும்பை outerல்.


கோவை அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர்.


வயதாகிவிட்டது. எனவே கிராமத்திற்கு வந்து விட்டேன். கடையையும் கொடுத்து விட்டேன் என்று கூறினார்.


பேசிக் கொண்டிருந்த போது 

அவர் சொன்ன ஒரு விஷயம் 

என்னை ஆச்சரியப்பட வைத்தது.


மும்பை அவர் கடையில் 6 பேர்கள். மூன்று பேர் Sandwich makers. ஒருவர் Bearer.ஒருவர் Table Cleaner. கூட இவர் order எடுக்க, Cash வாங்க கல்லாவில். Simple Hub..


மாலை 5 மணி முதல் 9 மணி வரை 

நல்ல கூட்டம் இருக்கும்.


அந்த சமயத்தில் இவரே Customers இடமிருந்து order வாங்கி உள்ளே சொல்ல வேண்டும்.Cash வாங்க வேண்டும். 

வேகமாக செயல்பட வேண்டும்.


இப்பொழுது போல Computer வசதி 

எல்லாம் அப்போது இல்லை. எல்லாமே Physical Worksதான்.


ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகமாக ஆக இவரால் சமாளிக்க முடியவில்லை.


Order எடுத்து Sandwichmakers வசம் சொல்வதற்கு ஒரு நம்பிக்கையான staff போட்டால் உதவியாக இருக்கும் என்று நினைத்தார்.


Advertisement செய்தார்.Part time 4 hours Job என்பதால் நல்ல response இல்லை.


ஒரு application அவரை கவர்ந்தது.


Biodataவுடன், எனக்கு அந்த வேலையை கொடுங்கள். சிறப்பாக செய்வேன். என்னை நம்புங்கள் என்ற Noteம் இருந்தது.


Canditate ஐ வர சொல்லிவிட்டார். அவனை பார்த்ததும் அவருக்கு ஏமாற்றமாக போய்விட்டது.


பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஒரு கையும் காலும் முமுமையாக உ பயோகப்படுத்த முடியவில்லை. சாய்ந்து சாய்ந்து மெல்ல நடந்து வந்தான் 22 வயது இளைஞன். ஆனால் தீட்சண்யமான கண்களுடன் 

முகம் பளிச்சென்று இருந்தது.


என்ன வேலை என்று விளக்கமாக 

கூறிவிட்டு, உன்னால் முடியுமா சதீஷ்? 

என்று கேட்டிருக்கிறார்.


முடியும். மூன்று நாட்கள் எனக்கு நீங்கள் Training கொடுங்கள். என்னென்ன varieties என்று புரிந்து கொள்ள வேண்டும்" என்றான்.


மற்ற staff க்கு இவன் மேல் நம்பிக்கை இல்லை என்பது அவர்கள் முககுறிப்பிலேயே தெரிந்தது.


ஏனோ எனக்குள் ஒரு நம்பிக்கை.


மூன்று நாட்கள் Training எடுத்து கொண்டு, அன்று காலை முதல் in Charge எடுத்துக் கொண்டான்.


Sandwitch makers அருகிலேயே ஒரு table கேட்டான்.Tableல் orders என்று plastic பலகை

வைத்தான்.


5 மணிக்கு மேல் கூட்டம் வர ஆரம்பித்தது.


இவன் ஆர்டர் எடுக்கும் வேகமும், Sandwitch makers க்கு அனுப்பும் வேகமும் என்னை பிரமிக்க வைத்தது.


சுப்பு அண்ணே, ஒரு sandwitch cheese butter மட்டும்.


முருகண்ணே ஒரு Sandwitch Onion butter Cucumber.


நடராஜன்னே ஒரு Plain sandwitch with Jam.


Sandwitch makers திணறி விட்டார்கள். வேகமான instructiors.எல்லோருமே ஓட வேண்டியதாக இருந்தது.


Customers எல்லோரும் happy.Quickdelivery கொடுப்பதால். அன்றைய வியாபாரம் 25% கூடியது.


Order எடுக்கும் போது நான் பேப்பர் பேனாவுடன் இருப்பேன்.


சதீஷிடம் எதுவுமே இல்லை. All Memories only.very sharp brain. அசர வைத்தான்.


நாள் ஆக ஆக எல்லோருமே 

அவனை விரும்ப ஆரம்பித்து விட்டோம்.


அவன் Hubல் நுழைந்தவுடனேயே, எல்லோருமே சுறுசுறுப்பாகி விடுவார்கள்.


ஓய்வு நேரத்தில், கடையை இன்னும் எப்படி விரிவு படுத்தலாம் என்று என்னுடன் discuss செய்வான்.


பெரும்பாலும் இளைஞர் கூட்டம்தான் வருகிறது. Familyயோடு வருமாறு செய்யலாம் என்று Fresh Juices, ice Creams, Noodles, Fried rice என்று  மெனுவை விரிவுபடுத்தினான். பக்கத்தில் காலியாக இருந்த கடையையும் எங்கள் கடையோடு இணைக்க சொன்னான்.


பணம் வேண்டுமே என்று சொன்னபோது Bank ல் சிறு தொழில்களுக்கு வழங்கும் கடனன குறைந்த வட்டியில் அவன் நண்பன் மூலமாக ஏற்பாடு செய்தான்.


இரண்டு வருடத்தில் சிறு ஹோட்டலாகவே மாற்றி விட்டான். வருமானமும் பல மடங்கு.


என் மகன் போலவே,அவனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பிய போதுதான், அவனுடைய மதிப்பு புரிந்ததது. 


தன்னை போலவே ஊனமுற்ற பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூற, அவன் பெற்றோரும் சம்மதிக்க, ஒரு தரமான அனாதை ஆசிரமத்தில் ஓரளவு படித்த பெண்ணை திருமணம் செய்து வைத்தேன்.


அந்த பெண்ணும் எங்கள் ஹோட்டலில் 

Cash in Charge, purchase எல்லாம் பார்த்து கொண்டாள்.


அப்பா ஆசிரமத்தில் Cash in Charge, purchese எல்லாம் நான்தான். ஆசிரமத்தில் supply செய்பவர்களிடமிருந்தே, whole sale விலையில் எங்கள் ஹோட்டலுக்கும் வாங்கினாள். நல்ல discount கிடைத்தது.


எனக்கு எந்த வேலையுமே 

இல்லாமல் செய்து விட்டார்கள்.


எனக்கும் குழந்தைகள் இல்லை. எனவே சில வருடங்களுக்கு பிறகு  நானும் என் மனைவியும் அந்த ஹோட்டலை அவர்களுக்கே எழுதி வைத்துவிட்டோம்.


என்னிடமும் தேவையான பணம் இருந்தது. கிராமத்தில் வந்து settle ஆகி விட்டோம் என்றார்.


பிரமிப்பாக இருக்கிறது" என்றேன்.


அதை விட ஒரு பிரமிப்பு இருக்கிறது. நாங்கள் இங்கே வந்து ஒரு மாதம் ஆனவுடன், ஒரு நல்ல தொகையை என் பாங்க் கணக்கில் செலுத்தி இருந்தார்கள்.


நான் போனில் கேட்டதற்கு, வரும் லாபத்தில் 50% உங்களுக்கு வரும். மறுக்க கூடாது என்று போனை வைத்து விட்டான்.


இப்படியும் மனிதர்களா?திகைத்துவிட்டேன்.


போட்டோ கிடைக்குமா? என்று கேட்டேன்.


publicity வேண்டாமே. அவர்கள் நிம்மதியாக இருக்கட்டும் என்று மறுத்து விட்டார்.


நாம் எல்லாம் உடல் உறுப்புகள் சரியாக இருந்தாலும், மனதில் ஊனம் அதிகம். 

தான், தனது, Ego, Jealous, சினம் என்று.


அவர்கள் உடல் ஊனமாக இருந்தாலும், மனதில் எந்த ஊனமும் இல்லாத தெய்வ பிறவிகள்.


இந்த பதிவை எழுதும் போது 

எனக்கே மனம் நெகிழ்ந்தது.படித்ததில் வசீகரித்தது.

Thursday 12 January 2023

ஏழு தட்டு தாண்டவ தீபாராதனை

 ஏழு தட்டு தீபாராதனை- தாண்டவ தீபாராதனையின் இறுதியில் சிவாச்சாரியார் அந்த தீபாராதனை தட்டை ஒரு பதினைந்து நிமிடம் நாதஸ்வரத்துக்கு ஏற்றவாறு காட்டவேண்டும் மொத்த தீபாராதனை ஒரு நாற்பத்துஐந்து நிமிடங்கள் நடக்கும் வாழ்ககையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. இந்த ஆரூர்தரா திருவிழா நடராஜரின் பஞ்ச சபையில் ஒன்றான குற்றாலத்தில் பத்து நாள் வைபவத்தில் மொத்தம் இருபது தடவை நடக்கும் வைபவம் காணக் கண்கொள்ளாக்காட்சி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



அம்பாளைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அதியற்புதமான துதிப்பாடல் இது. ஆதிசங்கரரால் அருளப்பட்டதாகக் கூறப்படும். இந்தத் துதியை, தேவ்ய இஷ்டகம் எனப்போற்றுவர்.

 #தேவி_அஷ்டகம்


அம்பாளைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அதியற்புதமான துதிப்பாடல் இது. ஆதிசங்கரரால் அருளப்பட்டதாகக் கூறப்படும். இந்தத்  துதியை, தேவ்ய இஷ்டகம் எனப்போற்றுவர். 

www.dinamalar.com

குடும்பத்தில் சுமங்கலி கோபம், பசுவின் சாபம், சந்திரன், சுக்ரன், ராகு முதலான கிரக தோஷங்கள்,  கெட்ட கனவுகள், மனக் கலக்கம் ஆகியன விலகும். நவராத்திரி புண்ணிய காலத்தில் தினமும் இந்த துதிப்பாடலைப் பாராயணம் செய்து அம்பாளை  வழிபடுவதால் சகல நன்மைகளும் கைகூடும்.


ஸ்ரீகணேஸாய நம:


மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம்

பவார்திபஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்


கருத்து: தேவியே, மஹாதேவனின் மனைவியும் மிகுந்த சக்தி வாய்ந்தவளும் பவானியும் சிவனிடத்தில் அன்பு கொண்டவளும், சம்சார வாழ்வில்  ஏற்படும் மனக் கவலையை போக்குகிறவளும் உலகங்களுக்கு தாயுமான தங்களை வணங்குகிறேன்.


பக்தப்ரியாம் பக்திகம்யாம் பக்தானாம் கீர்திவர்திகாம்

பவப்ரியாம் ஸதீம் தேவீம் வந்தே த்வாம் பக்தவத்ஸலாம்


கருத்து: பக்தர்களிடம் அன்பு கொண்டவளும், பக்தியால் அடைய தகுந்தவளும் பக்தர்களுக்கு கீர்த்தியை வளர்ப்பவளும், 

www.dinamalar.com

பரமசிவனிடம் அன்பு  கொண்டவளும், பதிவிரதையும் பக்தர்களிடம் அன்பு கொண்டவளுமான தங்களை வணங்குகிறேன்.


அன்னபூர்ணம் ஸதாபூர்ணாம் பார்வதீம் பர்வபூஜிதாம்

மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம் வந்தே த்வாம் பரமேஸ்வரீம்


கருத்து: நிரம்பிய அன்னம் உள்ளவளும், எப்போதும் போக போக்யங்களால் நிரம்பியவளும், பர்வதராஜனின் புத்திரியும் பவுர்ணமி முதலிய  பாவதினங்களில் பூஜிக்கப்பட்டவளும் மஹேஸ்வரனின் மனைவியும், ரிஷப வாகனத்தில் அமர்ந்தவளும், பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம்  ஈஸ்வரியுமான தங்களை வணங்குகிறேன்.


காலராத்ரிம் மஹாராத்ரிம் மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம்

ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம் வந்தே த்வாம் ஜனனீமுமாம்


கருத்து: பிரளயகால ராத்திரியாகவும் மிகப் பெரிய ராத்திரியாக இருப்பவளும் (சிவராத்திரி நவ ராத்திரி முதலான புண்ணிய கால ராத்திரியாக இரு ப்பவளும்), மோஹத்தைக் கொடுக்கும் இரவாக இருப்பவளும், ஜனங்களுக்கு ஈஸ்வரியாக இருப்பவளும், பரம சிவனுக்கு சந்தனம், புஷ்பம் ஆகி யவற்றை அளித்து அன்பு காட்டுகிறவளும், பரமசிவனுடைய சக்தியாய் இருப்பவளும், பிரணவத்தின் பொருளுமான தங்களை வணங்குகிறேன்.


ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம் 

ஜகத்ஸம்ஹாரகாரிணீம்

முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம்

வந்தே த்வாம் மோக்ஷதாயினீம்


கருத்து: ஜகத்தை உண்டு பண்ணுகிறவளும், ஜகத்தை ரக்ஷிப்பவளும் உலகத்தை கடைசியில் சம்ஹரிப்பவளும் மஹரிஷிகளால் ஸ்தோத்திரம் செய் யப்பட்டவளும், பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவளும் மோக்ஷத்தைக் கொடுப்பவளுமான தங்களை வணங்குகிறேன்.


தேவது: கஹராமம்பாம் ஸதா தேவஸஹாயகாம்

முனிதேவை: ஸதாஸேவ்யாம் வந்தே த்வாம் தேவபூஜிதாம்


கருத்து: தேவர்களின் துயரங்களைப் போக்குபவளும், எப்போதும் தேவர்களுக்கு உதவி புரிப்பவளும், மஹரிஷிகளாலும், தேவதைகளாலும் 

 ஸவிக்கத் தகுந்தவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளுமான தங்களை வணங்குகிறேன்.


த்ரிநேத்ராம் ஸங்கரீம் கௌரீம் போகமோக்ஷப்ரதாம் ஸிவாம்

மஹாமாயாம் ஜகத்பீஜாம் வந்தே த்வாம் ஜகதீஸ்வரீம்


கருத்து: முக்கண்கள் கொண்டவளும், பக்தர்களுக்கும் மங்களம் அருள்பவளும், 

www.dinamalar.com

தங்க வர்ணமாய் இருப்பவளும் போகங்களையும் மோக்ஷ ங்களையும் கொடுப்பவளும், மங்கள ஸ்வரூபமாய் இருப்பவளும், மஹா மாய ஸ்வரூபிணியாக இருப்பவளும் உலகங்களுக்கெல்லாம்  ஈஸ்வரியுமாக இருக்கும் தங்களை வணங்குகிறேன்.


ஸரணாகதஜீவானாம் ஸர்வது: கவினாஸினீம்

ஸூக ஸம்பத்கராம் நித்யம் வந்தே த்வாம் ப்ரக்ருதிம் பராம்


(இதி தேவி அஷ்டகம் ஸம்பூர்ணம்)


கருத்து: சரணம் அடைந்த ஜனங்களின் துக்கங்கள் யாவையும் போக்குகின்றவளும், சுகங்களையும், அஷ்ட சம்பத்துகளையும் அளிப்பவளும், உலக  இயக்கத்துக்குக் காரணமான சிறந்த பிரகிருதியுமான தங்களை வணங்குகிறேன்.


 Thanks:   www.dinamalar.com.

Wednesday 11 January 2023

அகத்தியர் குருபூஜை பொதிகை மலை

 அகத்தியர் குருபூஜை.

ராஜ அலங்காரத்தில் குருநாதர் அகத்தியர் தரிசனம்.

#ஓம் #அகத்தீசாய #நமஹ

பொதிகை மலை



உணர்வுபூர்வமான அன்பு

 கண்ணீருடன் கதை


*தம்பி* "... *நான் இருக்கும் போது என் மனைவியை அப்படி விட்டு விடுவேனா..?" 


என்று  கம்பீரமாக சொன்ன  முதியவர்  - விளக்கும் எளிய கதை.


" காலையில் எழுந்து எப்பொழுதும் போல அலுவலகம் செல்ல தயாராகி கொண்டு இருந்தான் சேகர், 


அவனுடைய மனைவி கோமதி இன்றும் கணவருக்கு பிடித்த உணவை தயார் செய்ய வேண்டும் என்பதற்காக மிக வேகமாக சமைத்து கொண்டு இருந்தாள்..


 கோமதிக்கு பிரியம் கணவனும், குழந்தை ஸ்ரீகிருஷ்ணனும்தான், ஏனெனில் அவள் விளையாட குழந்தை இல்லை.


அன்றோ....., தினமும் செல்லும் நேரத்தை விட சற்று முன்னதாகவே புறப்பட்டான், இதை பார்த்த மனைவி கோமதி "ஏன் இவ்வளவு சீக்கிரமா போகிறீர்கள்?" என்று வினவினாள்...


அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி கொண்டே கிளம்பினான்... "நேற்றே சொல்லி இருந்தால் இன்னும் விரைவாக சமைத்து இருப்பேனே, கொஞ்சம் பொறுங்கள் சமையல் முடிய போகிறது" என்றாள் மனைவி...


"எல்லாம் உன்னிடம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமா..? 


எனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கிறது, 


ஒரு நாள் சாப்பிடாமல் போனால் ஒன்றும் செத்து விட மாட்டேன், போய் நீ நன்றாக சாப்பிடு..!"

என்று சொல்லி விட்டு விருட்டென்று வாகனத்தை எடுத்து சென்றான்...


மனைவி ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று, சமையலை முடித்து இறக்கி வைத்து விட்டு தானும் சாப்பிடாமல் துணிகளை துவைக்க சென்று விட்டாள்...!


சேகர்" ஒரு தபால் அலுவலகத்தில் வேலை செய்கிறான், அவனுடைய மனைவி வீட்டில் தான் இருக்கிறாள், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்... 


வீட்டில் பெற்றோர்கள் சம்மதம் கிடைக்க வில்லை, அதனால் பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு, தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து வாங்கிக் கொண்டு தனியாக வந்து விட்டான்..!


இருவருக்கும் திருமண ஆகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை, 


இது பெரிய மன உளைச்சல் ஆகவே இருந்தது "சேகருக்கு")


சேகர் எதுவும் பேசாமல் செய்து வைத்த சாப்பாட்டையும் எடுத்துக் கொள்ளாமல் விருட்டென்று கிளம்பி போய் விட்டான்..!


அலுவலகம் சேர்ந்த பிறகு தனது பணியை ஆரம்பித்தான்...


அப்பொழுது ஒரு வயதான முதியவர் தலையில் ஒரு பழ கூடையைச் சுமந்த படி, வியர்வை சொட்ட, சொட்ட வந்தார் (மதிய நேரம் உச்சி வெயில் வேறு), பழ கூடையை இறக்கி வைத்து விட்டு, அலுவலகத்தின் உள்ளே வந்தார்...! 


தனது சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்து மேசையில் வைத்தார் (பணம் அவரது வேர்வையில் நனைந்து இருந்தது)...


இதை கண்ட சேகருக்கு ஒரே ஆச்சரியம்..! இவ்வளவு வயதான காலத்தில் யாருக்காக இப்படி உழைக்கிறார் என்று..?


அதை மனதில் நினைத்துக் கொண்டே "உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் ஐயா?" என்று அவரிடம் வினவினான்...


அந்த முதியவர் கடந்த மாதம் பணம் அனுப்பிய ரசீதை காண்பித்து, "இதே முகவரிக்கு பணம் அனுப்ப வேண்டும்" என்று சொல்லிவிட்டு, அதோடு ஒரு கடிதத்தையும் கொடுத்தார்...


அந்த ரசீதை கண்ட சேகருக்கு ஒரே அதிர்ச்சி...!

(அது ஒரு முதியோர் இல்லத்தின் முகவரி)


"நீங்கள் யாருக்கு பணம் அனுப்புகிறீர்கள்..! எதற்க்காக...! உங்கள் மனைவிக்காகவா...?" என்றான்...


தம்பி"நான் இருக்கும் போது என் மனைவியை அப்படி விட்டு விடுவேனா..?" 


என்று சற்று கம்பீரமாக அந்த முதியவர் சொன்னார்.


"நான் இந்த முதியோர் இல்லத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக பணம் அனுப்புகிறேன், இன்று வரை யாரும் இந்த கேள்வியை கேட்டதில்லை.

முதல் முறையாக நீங்கள் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!" என்று சற்று உற்சாகமாக சொல்ல ஆரம்பித்தார்...


"எனக்கு திருமணம் ஆகி 40 ஆண்டுகள் ஆகின்றன, என் மனைவி என் கூட தான் இருக்கிறாள், எங்களுக்கு குழந்தைகள் இல்லை.

என் மனைவிக்கு வாய் பேச முடியாது!!


அவளுடைய குறையை பார்த்த யாருக்கும் அவளின் அன்பு தெரியவில்லை... அவளுக்கு எல்லோரும் தன்னிடம் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும் ஆனால் யாரும் பேசதான் மாட்டார்கள்..! அவளின் தந்தையின் மரணத்திற்கு பிறகு உறவுகள் எல்லாம் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர்...


திருமண வயது வந்தது, ஆனால் பேசமுடியாத காரணத்தால் அவளை திருமணம் செய்ய யாரும் முன் வரவில்லை...


பிறகு எங்கள் பெற்றோர்கள் பேசி இருவருக்கும் திருமணம் நடந்தது...

பிறகு காலங்கள் கடந்தது. எங்களை பெற்றவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள்..! எங்களுக்கும் வயது ஆகி விட்டது.


அவளுக்கு உலகமே நான் மட்டும் தான், என்னை தவிர வேறு யாரையும் தெரியாது... ஒரு முறை நான் உடல் நலம் பாதிக்கப் பட்டு படுத்த படுக்கையாக இருந்தேன்..

வேலைக்கு செல்லாமல் கையில்  பணம் வேறு இல்லை.


அப்பொழுது மருந்து வாங்க வேண்டும் என்பதற்காக, அவள் அம்மா நினைவாக வைத்து இருந்த ஒரு தங்க குண்டு மணியை எனக்காக கடையில் விற்று விட்டாள்!!


பிறகு அந்த பணத்தை கொண்டு மருத்துவரிடம் சென்று, 'என் கணவனை எப்படியாவது காப்பாற்றுங்கள்' என்று வாய் பேச முடியாத நிலையிலும், செய்கையாகண்பித்து மருத்துவரிடம் கெஞ்சி புழுவாக துடித்து போய் விட்டாள்..!

(என்று சொன்னவர் கண்கள் இரண்டும் சிவந்து போய் விட்டது)


பிறகு நான் குணமாகி என் வேலையை செய்ய ஆரம்பித்தேன்" என்று தன்னை திடப்படுத்திக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார்...


"அப்பொழுது தான் எனக்கு ஒரு சிந்தனை வந்தது... ஒருவேளை, எனக்கு முன்பு அவள் இறந்து விட்டாள் பரவாயில்லை; கடைசி வரை அவளை பார்த்து கொண்ட மன நிறைவு இருக்கும்...


ஆனால், அவளுக்கு முன்பே எனக்கு இறப்பு வந்தால், என் மனைவியின் நிலை என்னாகும் என்று..? அதற்குதான் இந்த பணம்... ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை அனுப்பி விடுவேன்.. அதில் பாதி அந்த முதியோர் இல்லத்தில் கணவன் இல்லாமல் இருக்கும் மற்றவர்களுக்கும், மீதி பாதி தொகையை என் மனைவிக்காக சேர்த்து வைத்து கொண்டு வருகிறேன்..!


அந்த பணத்தோடு ஒரு கடிதம் கொடுத்தேன் அல்லவா..! அதை திறந்து படித்து பாருங்கள் தம்பி..." என்றார்.


சேகர் நெஞ்சில் ஒரு உறுத்தல்... கைகள் நடுங்கிய படி கடிதத்தை பிரித்து பார்த்தான்...!


அவன் கண்கள் இரண்டும் கலங்கிய படி இருந்தது..!

அதில், நானும், என் மனைவியும் நலமாக உள்ளோம்... இந்த மாதம் என்னால் இயன்ற தொகை அனுப்பி உள்ளேன்.


அடுத்த மாதம் இதே போல் கடிதமும், பணமும் வரவில்லை என்றால்.. 


நான் இறந்து போய் இருப்பேன்...


நீங்கள் வந்து என் மனைவியை அழைத்து சென்று பத்திரமாக குழந்தை போல் கடைசி வரை பார்த்துக் கொள்ளுங்கள்...

இதுவே என் கடைசி ஆசை.."


இதை படித்த சேகருக்கு நெஞ்சில் பாரம் கூடியது கை, கால் நடுங்க ஆரம்பித்தது..

கலங்கிய கண்களோடு அந்த முதியவரை பார்த்தான்...


மனைவி மீது இவ்வளவு அன்பு வைத்து இருக்கிறீர்கள்.. உங்களுக்கு ஒரு குழந்தையும், கொஞ்சம் சொத்தும் இருந்து இருந்தால் இன்னும் எவ்வளவு நன்றாக இருந்து இருக்கும்? நீங்கள் உங்கள் மனைவிக்காக இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லையே!!" என்று குரலில் ஒரு நடுக்கத்தோடு சொன்னான்...


இதை கேட்ட முதியவர் சற்று சத்தமாய் சிரித்தார்... 

"ஆ...ஆ...ஆ... என் மனைவி நம்பி வந்தது என்னைத்தான்...! 


சொத்தையோ அல்லது பிள்ளையையோ அல்ல,


அவளுக்காக சுமக்கின்ற இந்த சுமையும் ஒரு சுகமே...!" 


என்று சொல்லிக் கொண்டே உச்சி வெயிலில் உற்சாகமாக பழக்கூடையை தலையில் வைத்த படி ஒரு கையால் பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தார் அந்த முதியவர்...


சேகரின் கண்களில் கலங்கி நின்ற நீர்....! பெருந்துளியாய்...! தரையில் விழுந்தது...! தரையில் விழுந்தது கண்ணீர் துளி மட்டும் அல்ல...! அவனின் சுபாவமும்...!

🙏🙏🌹🌹🙏🙏

வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும்

🙏🙏🌹🌹🙏🙏

முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும் தான்

உலகின் ஆக சிறந்த காதல் ஜோடிகள்...

🙏🙏🌹🌹🙏🙏

எத்தனையோ  ராதைகள் தன் கிருஷ்ணர்களின் கணவர்களின் அன்பிற்கு இன்னும் ஏங்கி கொண்டு உள்ளார்கள்... கொண்டு செல்ல ஒன்றும் இல்லை இவ்வுலகில் கொடுத்து செல்வோம் உண்மையான அன்பை.... 

🙏🙏🌹🌹🙏🙏

நாமே உலகம் என வாழ்பவர்களிடம் ...💞💞❤️

🙏🙏🌹🌹🙏🙏

Tuesday 10 January 2023

குருபூஜை காணொளி படங்கள்


 





குரு பூஜை புகைப்படங்கள், செலவு கணக்கு