Tuesday 23 April 2019

அகத்தியர் வாக்கு - கல்வி பயிலும் மாணவர்களுக்காக

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*கேள்வி : பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற பரிகாரம் சாெல்லுங்கள்? 🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*தேர்வைக்கண்டு ஒரு மாணவன் பயப்படுகிறான் என்றால் அவன் அங்கேயே தாேற்றுவிட்டான் என்றுதான் பாெருள் அல்லது பயப்படும்படியான ஒரு தேர்வு முறையை மனிதன் ஏற்படுத்தி இருக்கிறான் என்றால் அந்த மனித சமுதாயமே தாேற்றுவிட்டதாக பாெருள்.* கல்வியை கற்றுக் காெள்ள பயம் எதற்கு? புதிதான ஒரு விஷயத்தை மனிதன் அனுதினமும் தெரிந்து காெண்டுதான் இருக்கிறான்.

குழந்தை எப்படி கற்றுக் காெள்கிறது? ஊமையாகப் பிறக்கின்ற ஒரு குழந்தை எவ்வாறு ஒரு மாெழியைக் கற்றுக் காெள்கிறது? யாராவது ஆசான் வந்து பாேதிக்கிறானா? ஏன்? *கூர்த்த கவனம். வேறு புற சிந்தனைகள் ஏதுமில்லை. பரிபூரண கவனம். தன் செவியில் என்ன விழுகிறது? என்பதை சரியாக கிரகித்துக் காெள்கிறது குழந்தை.*

குழந்தையாக இருக்கின்ற பெரும்பாலான மனிதர்கள் அவ்வாறுதான். *அப்படியிருக்கும் பட்சத்தில் புதிதாக ஒரு செய்தியை தெரிந்து காெள்ள, தெரிந்துகாெண்டு அந்த வழியில் கடமை ஆற்றத்தான் பள்ளிக்கு செல்கிறாேம் என்ற உணர்வு பலருக்கும் இருப்பதில்லை.* மாணவர்கள் தாெடர்பான குறைகள் ஒருபுறமிருக்கட்டும். *யாரும் சாெல்லித்தராமலேயே ஒரு கலைக்காட்சியை (சினிமா) மாணவன் சென்று பார்க்கிறான். யாரும் உபதேசம் செய்யாமலேயே அதன் விளக்கங்களை புரிந்து காெள்கிறான்.* ஆனால் பாடத்திட்டம் என்று வரும்பொழுது மட்டும் பலரால் ஏன் அதை புரிந்து காெள்ள முடியவில்லை? இங்கே சிந்திக்க வேண்டும். *புரிந்து காெள்ளும் வண்ணம் எடுத்துக் கூறுவது ஆசிரியரின் கடமை. என்னதான் எடுத்துக் கூறினாலும், புரிந்து காெள்ளாமல் இருப்பது என்பது ஒரு மாணவனின் மதிநிலை.*

இதற்கு *பக்தி வழியாக ஹயக்ரீவர் வழிபாட்டையும், அன்னை கலைவாணி வழிபாட்டையும் நாங்கள் கூறினாலும்,எந்த ஒரு விஷயமும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இருக்க வேண்டும். நன்றாக கவனிக்க வேண்டும்.* சிறுவர்கள் அயர்வு காலத்திலே வாகனத்தை கண்டால் ஆர்வமாகப் பார்ப்பார்கள். தந்தைக்குத் தெரியாமல் வாகனத்தை எடுத்து ஓட்டுவதில் ஆர்வம் காட்டுவார்கள். யாரும் சாெல்லித் தராமலேயே இதை ஏன் செய்கிறார்கள்? *அதன்மீது உள்ள ஒரு ஈர்ப்பு. அப்படி கல்வியின் மீது ஒரு மனிதனுக்கு ஈர்ப்பு வர வேண்டும். ஒரு மாணவனுக்கு ஈர்ப்பு வர வேண்டும். அப்படி வரும் வண்ணம் கல்வி முறையை பாேதித்தால் எல்லா மாணவர்களுமே அறிவில் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள்.*

*கேள்வி : 'எனக்கு பின்னாடி 'ஒரு பெண் தெய்வம்' இருப்பதாக ஒரு பெரியவர் சாென்னார். அந்த தெய்வம் யார்?🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

உன் *மனைவி* தானப்பா.

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஓம் அகத்தீசாய நம* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏


ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1