Wednesday 17 April 2019

விஸ்வாமித்திரரும் அஸ்த்திரங்களும்

அஸ்திரங்களில் நிகரற்றவர் யார்

👑 மன்னராய் பிறந்து ரிஷியாகி பின் இராஜ ரிஷி பிரம்ம ரிஷி என சப்தரிஷிகளில் ஒருவரான விஸ்வாமித்ரரே அவர்

🌷 நம் அனைவருக்கும் வசிஷ்டரின் கன்றுக்காக விஸ்வாமித்ரர் சண்டையிட்டது தெரியும்

🌷 ஆனால் யுத்தம் அவ்வளவு எளிதாக முடிந்துவிட வில்லை யுத்தத்தில் கௌசிகர் விடாத அஸ்திரம் இல்லை

🌷ஆனால் அனைத்தையும் வசிஷ்டரின் பிரம்ம தண்டம் அடக்கியது இதன்பிறகே ரிஷியாகிறார்

🌷இதன் பிறகு திரிசங்கு சொர்க்கம், அரிச்சந்திரன் என இருவருக்கும் இடையே நடைபெற்ற பனிப்போரை பலரும் அறிவோம் ஆனால் எதுவும் காரணம் இல்லாமல் நடக்கவில்லை

💐 வசிஷ்டர் மற்றும் விஸ்வாமித்ரரின் பங்கு இராமவதாரத்தில் இன்றியமையாததாகும்

👑 ராமபிரானுக்கு ஞானமளிப்பதில் வசிஷ்டரும்

👑 அஸ்திரமளிப்பதில் விஸ்வாமித்ரரும் தங்களின் பணியை செவ்வனே செய்தனர்

🌺 இராமருக்கு வசிஷ்டர் அளித்த ஞானம் அளவிட முடியாதது ஆகும் அதில் யோக வசிஷ்டம் மிகவும் முக்கியமாகும் இது சரியாக 32,000 ஸ்லோகங்களை கொண்டது (வால்மீகி இராமாயணம் முழுதும் கூட 24000 மட்டுமே)

🌹 தனது 16 வயதிலேயே மனித வாழ்க்கையை கண்டு விரக்தி அடையும் ஸ்ரீ ராமருக்கு வசிஷ்டரின் உபதேசமே யோக வசிஷ்டமாகும்

🌸 இதே போல அஸ்திர பயிற்சியில் விஸ்வாமித்ரரின் பங்கு அற்புதமானது

🌻 அவர் ஏற்கனவே பல அஸ்திரங்களை மன்னராய் இருக்கும் போது அறிந்ததே ஆனால் ரிஷியான பின்பும் இதை விட வில்லை

🌸 பெரும் வேள்வி நடத்துகிறார் விஸ்வாமித்ரர் அதற்கு இராவணனே நேராக வந்து தடுக்க முடியாததால் மாரிசன் மற்றும் சுபாகுவை அனுப்பி வைக்கிறான்

🍀 இவ்விருவர்களும் சாமான்யர்கள் இல்லை ராமபிரானின் தந்தையாகிய தசரதரே

🌺 " நான் மற்றும் என் நண்பர்கள் எங்களின் படையுடன் சேர்ந்து வந்து தடுத்தாலும் கூட அந்த இருவர்களில் ஒருவனை தடுப்பதே இயலாத காரியம் அவ்வாறு இருக்கையில் வெறும் பன்னிரண்டு வயதேயான என் மகன் ராமன் எவ்வாறு தடுப்பான் " என மறுக்கிறார்

🌈 இதை கேட்ட வசிஷ்டர் பொங்கி எழுகிறார்

" தசரதா

இராமன் சிறுவனாய் இருந்தால் என்ன ??

இளைஞனாய் இருந்தால் என்ன ??

தனுர்வித்தை பயின்றால் என்ன??

பயிலாமல் இருந்தால் என்ன

விஸ்வாமித்ரர் உடன் இருக்கையில் நீ ஏன் பயம் கொள்கிறாய் எதிர்த்து வருபவன் மரணமற்றவராக இருந்தாலும் விஸ்வாமித்ரர் உடன் இருக்கையில் நீ அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை

அவரால் ஆகாத காரியம் என்று இல்லை அவரே ராமனை அழைக்கிறார் என்றார் அதில் காரணம் இருக்கிறது

இவர் தவத்திற்கு இருப்பிடம்

இவர் அறிந்த அஸ்திரங்களை இதுவரை எவரும் அறிந்ததுமில்லை

இனி எவரும் அறிய போவதுமில்லை

இவர் அறியாத அஸ்திரமில்லை மேலும் தன் பலத்தினால் புதுபுது அஸ்திரத்தினை உருவாக்கும் திறனும் கொண்டவராவார்

தக்ச பிராஜாதிபதியின் மகளான ஜயை மற்றும் ஸுப்ரபை இருவரும் க்ரிசாஸ்வரை மணந்து கொடுமையிழைத்த அசுரர்களை வதைக்க இருவரும் கடவுள்களை தவிர மற்றோரால் வெல்ல முடியாத 100 அஸ்திரங்களை பெற்றெடுத்தனர் அவை அனைத்தையும் இவர் அறிவார்

மேலும் மும்மூர்த்திகளிடம் இருந்தும் பல அஸ்திரங்களை பெற்றவர் இவருடன் இராமனை அனுப்புவதே உனக்கு தகும் மேலும் அதுவே இராமனுக்கும் நன்மை பயக்கும்
(பால காண்டம் 21வது சர்க்கம்)

⛅ பின் இராமனை அழைத்து செல்லும் விஸ்வாமித்ரர் பலா மற்றும் அதிபலா வித்யைகளை அளிக்கிறார் இந்த வித்தைகளால் பலத்தில் எவரும் இணையாக மாட்டார்கள் மேலும் பசி ,தாகம், நோய்களால் இருவருக்கும் பாதிப்பு ஏற்படாது

🌼 இன்னும் பற்பல விசயங்கள் இவ்விரண்டு வித்தைகளால் சாத்தியம் மேலும் இதை அறிந்தவர் விஸ்வாமித்ரர் மட்டுமே இதை பிரம்ம தேவர் விஸ்வாமித்ரர்க்கு உபதேசித்தார்

🌺 தாடகையை வதைத்த பின்வரும் தேவர்கள் இதுவே சரியான நேரம் தாம் பாதுகாத்த அஸ்திரங்களை ஸ்ரீ ராமருக்கு அளிக்க வேண்டும் என வேண்ட அவ்வாறே அளிக்கிறார்


👑 விஸ்வாமித்ரர் இராமபிரானுக்கு அளித்த அஸ்திரங்கள்

🌻 தண்ட சக்கரம்

🌻 தர்ம சக்கரம்

🌻 கால சக்கரம்

👑 விஷ்ணு சக்கரம்

🌻 இந்திர சக்கரம்

👑வஜ்ராயுதம்

👑 சிவனின் திரிசூலம்

👑 பிரம்மாஸ்திரம்

👑 பிரம்மசிரா

🌻 ஜஷிகாஸ்திரம்

👑 மோதகி கதாயுதம்

👑 சிகாரி கதாயுதம்

👑 தர்ம பாசம்

👑 கால பாசம்

👑 வருண பாசம்

👑 வஜ்ரத்திற்கு இணையான இரு ஆயுதங்கள்

🌻 வருணாஸ்திரம் ஆக்னேயம் மற்றும் வாயவ்யம் மற்றும் சிகாரி

👑 சிவன் மற்றும் நாராயணரின் அஸ்திரங்கள்

👑 சிவனின் சக்தியாஸ்திரம்

👑 விஷ்ணுவின் சக்தியாஸ்திரம்

👑 ஹயக்ரீவர் அஸ்திரம்

🌺 கிரௌஞ்ச அஸ்திரம்

🌻 அசுரர்களின் சக்திமிக்க தண்டமான கங்காலம், கபாலம், கங்கனம்

🌼 வைத்யதாரா அஸ்திரம்

👑 நந்தன கட்கம்

🌻 மோஹன அஸ்திரம்

👑 பிரஸ்வாப்ன அஸ்திரம் (இதை வைத்தே பரசுராமரை பிஷ்மர் வெல்வார்)

🌻 பிரஸாமனா அஸ்திரம்

🌻 வர்சனா அஸ்திரம்

🌻 சோசனா அஸ்திரம்

🌻 சந்தப்பனா அஸ்திரம்

🌻 விலாப்பனா அஸ்திரம்

🌻 மன்மத அஸ்திரம்

🌻 கந்தர்வ அஸ்திரம்

🌻 ராட்சஸர்களின் அஸ்திரமான பைசாச அஸ்திரம்

🌻 தாமச அஸ்திரம்

🌻 சௌமான அஸ்திரம்

🌻 சம்வர்த்த அஸ்திரம்

🌻 மௌசல அஸ்திரம்

🌻 சத்ய அஸ்திரம்

🌻 மாய மாயா அஸ்திரம்

👑 சூரியனின் அஸ்திரமான தேஜபிரப

👑 சந்திரனின் அஸ்திரமான சிஷிரா

👑 துவஸ்தாவின் அஸ்திரமான சுதாமன

👑 பகனின் அஸ்திரமான சிதைசு

👑 மனுவின் மானவாஸ்திரம்

👑 மேலும் க்ரிசாஸரின் மகன்களாய் பிறந்த அஸ்திரங்கள் அனைத்தையும் அளித்தார் இவர்களின் பெயர் முதற்கொண்டு வால்மீகி இராமயணத்தில் உள்ளது

(பால காண்டம் 27 மற்றும் 28-வது சர்க்கம்)

🌺 இவைகள் அனைத்துமே தெய்வீக அஸ்திரங்கள் ஆகும்

🌺 மேற்கண்டவற்றில் பிரம்மாஸ்திரம் முதலிய பல அஸ்திரங்களை தடுக்க மஹேஸ்வர அஸ்திரம் வேண்டும்

👑 ஆனால் விஷ்ணு சக்கரம் மற்றும் திரிசூலம் முதலிய சிவன் மற்றும் விஷ்ணுவின் சக்திகொண்ட அஸ்திரங்களை தடுப்பது இயலாத காரியம்

👑 ஆனால் இவற்றையெல்லாம் இராமலட்சுமணர்கள் உபயோகிக்கவே இல்லை

🌺 அதிகாயன் பிரம்மகவசத்தை வரமாக பெற்றவன் பிரம்ம கவசத்தினை கிழிக்க பிரம்மாஸ்திரம் ஒன்றே வழி இதனால் லட்சுமணன் பிரம்மாஸ்திரத்தினை அதிகாயனை கொல்ல உபயோகிப்பார்
( யுத்த காண்டம், 71- வது சர்க்கம்)

🌺 இராவணனின் தலையை இராம பிரான் அறுக்க அறுக்க முளைக்கிறது இவ்வாறாக நூற்றியோரு முறை அறுத்தும் இராவணன் மாளவில்லை இதை கண்ட தேரோட்டி மாதலி இராமபிரானிடம் பிரம்மாஸ்திரம் விட வேண்டுகிறார்
(இராம - இராவண இறுதியுத்தத்தில் இராமபிரான் இந்திரனின் தேரில் யுத்தம் செய்தார்)

🌺 அப்போது இராமபிரான் அகஸ்தியரிடம் பெற்ற பிரம்ம அம்புகளை இராவணன் மீது பிரயோகிக்கிறார்
( யுத்த காண்டம் 108-வது சர்க்கம்)

🌼 மற்றபடி வேறு எதையும் இருவரும் உபயோகிக்கவில்லை

❄ இராவணன் மகன் மேகநாதன் யார் கண்ணிற்கும் புலப்படாமல் தன்னை மறைத்துகொண்டு அனைவரையும் பிரம்மாஸ்திரம் கொண்டு தாக்குகிறான் இதை கண்ட லட்சுமணன் பிரம்மாஸ்திரம் கொண்டு அனைத்து இராட்சஸர்களையும் கொன்று வீழ்த்துவேன் என இராமபிரானிடம் கூறுகிறார் ஆனால் இராமபிரான் அதை அனுமதிக்கவில்லை
(யுத்த காண்டம் 80-வது காண்டம்)

👑 இராமபிரான் சரியாக மூவரிடம் அஸ்திரங்களை பெற்றார்
அவர்கள் வசிஷ்டர், விஸ்வாமித்ரர் மற்றும் அகஸ்தியர் ஆவர் இங்கு விஸ்வாமித்ரர் அளித்த அஸ்திரங்களை இராமபிரான் பெரும்பாலும் உபயோகிக்கவே இல்லை

👑 அவையனைத்தும் போரை எளிதாய் முடிக்கும் திறன் கொண்டு இருந்தவை காரணம் இராவணன் ஈசனிடம் பெற்ற சந்திராசன வாளை தவிர வேறு மகாஸ்திரங்கள் இந்த அஸ்திரங்களை தடுப்பதற்கு இல்லை ஆனால் சந்திராசனமும் அதர்மத்திற்கு உபயோகப்படுமானால் என்னிடம் வந்துவிடும் என ஈசனே கூறினார்

👑 இந்த வாளை இராவணன் போரில் உபயோகிக்க வில்லை காரணம் இந்த வாள் ஜடாயுவை கொன்ற போதே ஈசனிடம் சென்று விட்டது ஜடாயு இராவணன் வில்லையும், கவசத்தையும் உடைத்து இராவணனின் இடது கைகள் அனைத்தையும் கிள்ளி எறிகிறார் ஆனால் மீண்டும் கைகள் முளைத்தபின் இராவணன் வாள் கொண்டு வீழ்த்துவான்
( ஆரண்ய காண்டம் 51 -வது சர்க்கம் )

👑 பிரம்மரிஷி விஸ்வாமித்ரர் இறுதியாக தனது அஸ்திரங்கள் அனைத்தையும் தடுத்த பிரம்ம தண்டத்தையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது