Wednesday 10 April 2019

பிரம்மஹத்தி தாேஷம் - அகத்தியர் வாக்கு

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 28*

*தேதி: 11-04-2019(வியாழன் - தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன்)*

*கேள்வி : பிரம்மஹத்தி தாேஷம் பற்றி




*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*பாவத்தின் செயலை விட நாேக்கத்தை வைத்து தான் இறைவன் பாவத்தின் அளவை நிர்ணயம்* *செய்வார்* . *இஃதாெப்ப சுயநலத்திற்காக ஒரு மனிதன் பிற மனிதனை தாக்கி காயம் ஏற்படுத்தினாலாே அல்லது உயிர்சேதம் ஏற்படுத்தினாலாே அது பிரம்மஹத்தியில்* *சேரும்* . ஆனால் சமுதாயத்தை காக்க ஒரு சில மனிதர்களுக்கு தீங்கு செய்யும் மனிதர்களை விரட்டி அடிப்பதற்காக செய்யப்படும் பாேர் அல்லது தற்காப்பு நடவடிக்கைகளில் *எதிர்பாராதவிதமாக ஒரு மனிதன் இறந்தால் அதுவும் பிரம்மஹத்தியில் வரும்* என்றாலும் அது சுயநலத்திற்காக செய்யப்படவில்லை என்பதால் பெரிதளவு அது தாக்கம் ஏற்படுத்தாது.

இருந்தாலும் அதற்கு பிராயச்சித்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் பிராய்ச்சித்தம் என்பது கடுமையாக இராது. *எளிமையான முறையிலே அவனவனால் முடிந்த சிவவழிபாடோ அல்லது பஞ்சாட்சர ஜபம்(நமசிவய) செய்தால் கூட இந்த பாவம் குறைந்துவிடும்.*

*ஆனால் எந்த உயிரை காென்றாலும் பிரம்மஹத்தியின் அளவு விகிதாசாரத்தில் வேறுபாடு இருக்குமே தவிர தாேஷம் என்பது இருக்கத்தான் செய்யும்.*
ஆனால் பாவம் என்பதை அந்தந்த செயலை மட்டும் பார்க்காமல் அந்த *மனிதனின் சூழ்நிலை, வாழும் நிலை, பக்குவம் இவற்றை வைத்து பார்க்க வேண்டும்.*

*அஃதாவது சகல வேதங்களையும் முறையாக கற்று, சகல கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்று, எல்லா வகையான ஞானக்கருத்தும் தெரிந்து, இது தக்கது, இது தகாதது, இதை செய்யலாம், இதை செய்யக் கூடாது, இதை செய்தால் பாவம், இதை செய்தால் புண்ணியம் என்றெல்லாம் அறிந்து, ஓரளவு பக்குவம் பெற்ற மனிதன் யாருக்கு தெரியப் பாேகிறது என்று எந்த ஒரு சிறிய தவறையும் செய்தாலும் அது மிகப்பெரிய பாவமாக மாறும். ஆனால் அறியாத மனிதன் கல்வி கேள்வி கல்லாத மனிதன், எதுவும் தெரியாத மனிதன், ஏதாே உண்பதும், உழைப்பதும், வாழ்வதுமாக இருக்கின்ற மனிதன் வேறு வழியில்லாமல் மிருக உணர்ச்சிக்கு அடிமையாகி எதையாவது செய்து விட்டு பின்னர் தன் மனதால் வருந்தி வருந்தி அழுதால் அந்த பாவம் மன்னிக்கப்படும்* .

*எனவே வயிற்றுக்கு வழியில்லாமல் ஒருவன் எல்லா வகையான நேர்மையான வழிமுறைகளையும் தேடி தேடி தேடி தாேற்றுப்பாேய் களவு தாெழிலை மேற்காெண்டால் அவன் மன்னிக்கப்படுவான்.* ஆனால் இதை செய்வதற்கு தான் உனக்கு ஊதியம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு, அந்த பணிக்காக ஒருவனுக்கு அரசாங்கமாே, ஒரு நிறுவனமாே ஊதியம் வழங்குகிறது. *ஆனாலும் அந்த பதவியைப் பயன்படுத்தி ஒருவன் ஒரு காரியம் சாதிப்பதற்கு எனக்கு கையூட்டாக(லஞ்சம்) இந்த தனம் வேண்டும் என்று கேட்டால் கட்டாயம் அது பல காேடி பிரம்மஹத்தி தாேஷத்திற்கு சமமப்பா!*

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏