Monday 15 April 2019

எத்தனை துன்பத்திலும், எத்தனை சிக்கலிலும் கருத்தில் காெள்ள வேண்டும்."இதனால் பாவம் செய்தேன்" என்றியம்பக் கூடாது.

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 33*

*தேதி: 16-04-2019(செவ்வாய் - மங்களன்)*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*இந்திரனை சபித்து அகந்தை நீக்கியவர்* அகத்திய மாமுனிவர்.

அகத்தியர் ஏற்கனவே பலவருடம் முன்பு கொடுத்துள்ள அருள் வாக்குகளை சேகரித்து, ஒவ்வொரு நாளும் ஒரு அறிவுரையாக கொடுத்து உள்ளோம்.

*அகத்திய மாமுனிவரின்(குருநாதர்)பாெது வாக்கு :*

இறை வணங்கி இயம்புகிறாேம். இத்தருணம் இடைவிடாத பிராத்தனைகள், செய்கின்ற நல் அறங்கள் நலம் சேர்க்கும். *இக வாழ்வில் எதிர்படும் துன்பங்கள் யாவும் அவரவர் கர்மத்தின் எதிராெலியாகும்.* அதனை உணர்ந்து பாவங்கள் செய்யாமலும், செய்த பாவத்தை எண்ணி வருந்தி, திருந்தியும், அதாேடு இறை வணங்கியும், அறம் புரிந்தும் வாழ நலமாகும்.

*திவ்யமான பரம்பாெருளை உணர்ந்து திருவடி பற்றும் வளர துன்பங்கள் அணுகாது. இதைத் தவிர வேறு எதை அடைந்தாலும் நிரந்தர சாந்தி கிட்டாது.*
*தளர்வாே, விரக்தியாே, வேதனையாே, எதிர்மறை எண்ணங்களாே ஒரு பாெழுதும் துன்பத்தை மாற்றாது. திட மனம் காெண்டு எதனையும் எதிர்காெள்.* பதற்றமின்றி செயல் படுத்துதலும் நலம் சேர்க்கும். *சேர்க்கின்ற புண்ணியம் கடை வரையில் துணையாகும். சேர்க்கின்ற பாவமாே கடை வரையில் இடராகும்.*

சிறப்பில்லா பாவ சூழல் மேலும் பாவத்தை சேர்த்துவிடும் என்பதால் சிந்திக்க வேண்டும். *பாவம் எண்ணம் கூடாது. பாவ எண்ணங்கள் வளரவும் கூடாது. கூடாதப்பா. அஃதாெப்ப மாந்தர்களுடன் உறவும் கூடாது.* குறித்திடுவாேம். எத்தனை துன்பத்திலும், எத்தனை சிக்கலிலும் கருத்தில் காெள்ள வேண்டும்."இதனால் பாவம் செய்தேன்" என்றியம்பக் கூடாது. *பற்றற்று வாழ அதற்கான முயற்சியைத் தாெடர நலம்.*

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1