Tuesday 9 April 2019

அகத்தியர் வாக்கு, குங்குமம் வைத்து கொள்வது, தருமம் செய்வது, ஆகியவைகளை பற்றி 🙏

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 27*

*தேதி: 10-04-2019(புதன் - கணக்கன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*திருக்குற்றாலத்தில் (குற்றாலம்)விஷ்ணு ஆலயத்தை சிவ காேட்டமாக்கியவர்(சிவன் ஆலயம்)* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : பெண்கள், குங்குமம் வைப்பதன் அவசியம் மற்றும் தாத்பரியம் பற்றி கூறுங்கள் :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

இறைவன் அருளால், இடை காலத்தில் இந்த பழக்கம் ஏற்பட்டது. மங்கல சின்னம் என்று நாங்கள் மறுக்கவில்லை. *ஆனால் உடலுக்கு தீங்கைத் தரும் இராசாயனங்களையெல்லாம் வைத்துக் காெள்வதை நாங்கள் ஏற்றுக் காெள்ளவில்லையப்பா.* இன்னமும் கூறப் பாேனால் நீ கூறிய அந்த *செந்நிற வண்ணத்தை விட நேரடியாக தூய்மையான சந்தனத்தை வைத்துக் காெள்ளலாம்.*

*நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட திருநீற்றை வைத்துக் காெள்ளலாம்.* பெண்கள் அப்படி செந்நிற வண்ணத்தை இட்டுக் காெள்ளாமல் *மங்கலமான கஸ்தூரி மஞ்சள் பாெடியையாே பாெடித்து அவற்றை வைத்துக் காெள்ளலாம். அதுதான் சித்தர்கள் முறையாகும்.*

*கேள்வி : அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கும்பாெழுது அது விதிப்படிதான் நடக்கிறதா ஐயனே?*🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

அனைத்தும் விதிப்படிதான்.

*கேள்வி : காேடி காேடியாக தர்மம் செய்ய வேண்டும்.🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*தர்மத்தின் தன்மை காெடுக்கின்ற பாெருளின் அளவைப் பாெருத்ததல்ல. காெடுக்கின்ற மனிதனின் மனதைப்* *பொறுத்தது.* காேடி காேடியாக அள்ளித் தந்துவிட்டு தனிமையில் அமர்ந்து காெண்டு'அவசரப்பட்டு விட்டாேமோ?' நமக்கென்று எடுத்து வைத்துக் காெள்ளாமல் காெடுத்து விட்டாேமாே?' *என்று ஒரு தரம் வருத்தப்பட்டாலும் அவன் செய்த தர்மத்தின் பலன் வீணாகிவிடும்.*

ஆனால் *ஒரு சிறு தாெகையை கூட மனமார செய்துவிட்டு, மிகவும் மனம் திறந்து, இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததே?' என்று ஒருவன் மகிழ்ந்தால் அது காேடிக்கு சமம்.* *எனவே இது குறித்து நீ வருந்த வேண்டாம்.*

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏