Thursday 16 August 2018

ஜீவ நாடி என்றால் என்ன

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

ஸ்ரீ அகத்தியர் ஜீவ நாடி -சில குறிப்புகள்

        இந்த குறிப்புகளிள் அடியேனிற்கு புரிந்த அல்லது தெரிந்து கொண்ட ,ஜீவ நாடி சம்பந்தபட்ட அனுபவங்களை எனது குரு ஸ்ரீ அகத்தியரின் அருள் கொண்டு பகிர்ந்து கொள்ளுகிறேன்.
     முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,ஜீவ நாடியில் தோற்றமும் அதன் நோக்கங்களும் தான்.கலியுகத்திலே மனிதன் தான் செய்ய வேண்டிய தான,தர்மங்களை மறந்து தான், தன் குடும்பம் என்ற சுய நல செய்கையிலே தனது வாழ்நாள் பொழுதை வீணடித்து விடுகிறான்.ஆகவே அவன் செய்ய வேண்டிய தான,தர்மங்களை அல்லது அவனை நெறிபடுத்த தோன்றியவையே ஜீவ நாடிகள்.பண்டைய காலத்தில் ரிஷிகளும்,சித்தர்களும் தங்கள் ஆசிரமங்களை ஆங்காங்கே நிறுவி,சத்சங்கங்களையும் தோற்றுவித்து,அந்தந்த யுக தர்மங்களை செய்ய தூண்டி கொண்டேயிருந்தார்கள்,ஆனால் கலியுக தர்மம் என்னவென்றால் எந்த தெய்வ சக்தியும் அல்லாது சித்தர்களே நேரில் தோன்றி தர்மங்களை போதிக்க கூடாது என்பதே ஆகும் .ஆகவே கலியுகத்தில் மக்களை நெறிபடுத்த தோன்றியவையே ஜீவ நாடிகள் ஆகும்.
நாடிகளில் பல வகை உண்டு அவையாதனில்,
1)காண்ட நாடி
இது விரல் ரேகையை கொண்டு,மனிதனின் விதி அல்லது கர்மத்தை பற்றி உரைப்பது.இது வள்ளுவ குலத்தினரால் உரைக்கபடுவது.
2)சம்ஹீதா நாடி
இது வட மாநிலங்களில் அதிகமாக காணப்படுவது.இது ஒருவர் நாடி வாசிப்பவரை அணுகும் நேரம் மற்றும் அவரது பிறப்பு சாதகத்தை கொண்டு அவரவர்களுக்கு உரிய பலன்களை உரைப்பது.
3)ஆசி காண்டம்
இது காண்ட நாடியில் காணப்படுவது.சித்தர்களின் ஆசியை பெற்று தருவது.இதில் ஒரு மனிதன் பெறக்கூடிய குருமார்களின் ஆசியை பெற்று தருவது
4)ஜீவ நாடி
இது நாடிகளிலே உயர்ந்தது. சித்தர்களும் ரிஷிகளும் நாடியில் பிரதட்சனமாகி தங்கள் சீடர்களுக்கு உரிய அறிவுரைகளை தெரிவிப்பது.இது தெய்வ புருஷர்கள் மட்டுமே வாசிக்க கூடியது.
5)போத்தி
இது ஒரிசா மாநிலத்தில் படிக்கபடுவது.
வெள்ளி  அல்லது தாமிர பலகையில் எழுத்துக்கள் தோன்றுவது
பிராமணர்களால்  மட்டும் படிக்க கூடியது.
     ஜீவ நாடிகள் என்பது  அவ்வப்போது தோன்றி கொண்டே இருக்கும்.சித்தர்கள் தாங்கள் விரும்பிய நபர்களை தேர்ந்து எடுத்து அவர்களை நன்றாக பயிற்சி கொடுத்து,அவர்கள் மூலமாக வாக்குகளை உரைக்க செய்வது.பொதுவாக தெய்வ அருள் பெற்ற அருளாளர்கள் மட்டும் வாசிக்க இயலும்.அவர்களுக்கு எழுத்துக்கள் தங்க நிறத்தில் புலப்படும்.இத்தகைய நாடிகள் சமீப காலத்தில்,சென்னையில் மறைந்த திரு.அனுமந்தாசன்,தஞ்சாவூரில் திரு.கணேசன்,மற்றும் ஸ்ரீ காக புஜண்டர் நாடியில் படிக்கும் ஸ்ரீ ரமணி குருஜி ,ஸ்ரீ அகத்திய ஜீவ நாடி ஆகிய இடங்களில் புகழ் பெற்று விளங்குகின்றன .
       நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,எப்போது இந்த ஜீவ நாடிகள் தோன்றுகின்றன.ஒவ்வொரு மகா சிவராத்திரியிலும் இந்த ஜீவ நாடிகள் தோன்றுகின்றன (ஸ்ரீ வெங்கடராம சித்தர்).சில ஜீவ நாடிகள் ரகசியமாக படிக்க படுகின்றன .சில ஜீவ நாடிகள் சித்தர்களின் ஆணைப்படி பொது மக்களுக்கும் படிக்க படுகின்றன.ஆனால் ஜீவ நாடி இயக்குவதில் சில சூட்சுமங்கள் உண்டு.அவையே ஜீவ நாடியை திறக்கும் சாவிகளாகும்.
 இந்த சூட்சுமங்களை புரிந்து கொள்ளாவிட்டால்,ஜீவநாடிகள் இயங்காது.தற்போது திரு.அனுமந்தாசன் வாசித்த நாடியில் நிலைமையும்  அப்படித்தான்.சித்தர்களின் அருள் இன்றி நாடியை படிக்க எந்த நபராலும் இயலாது.மேலும் ஜீவ நாடிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் படிக்கும் நபரிடம் இருந்து வேறொரு நபருக்கு சித்தர்களின் ஆணைப்படி மாறி கொண்டேயிருக்கும் அல்லது சில தருணங்களில் மறைந்துவிடும்.
    ஜீவ நாடி சித்தர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள கூடிய ஒரு மீடியம் ஆகும்.மீடியமாகிய சுவடியை பயன்படுத்தும் மிகுந்த  பக்தி,சிரத்தை தான தருமங்கள் போன்ற வற்றை செய்யும் மனிதர்களாக தான் இருப்பார்கள் .மற்ற சாதாரண மனிதர்களால் படிக்க இயலாது.
   ஒவ்வொரு ஜீவ நாடியும் ஒவ்வொரு வகைப்படும்.சில ஜீவ நாடிகள் தருமத்துடனும் சில மந்திர மார்கங்களும்,சில பிராயசித்த மார்க்கங்களை  உரைகின்றன.சில ஜீவ நாடிகள் ஆலயம் மற்றும் வழிபாடு முறைகளை பற்றி தெரிவிகின்றன~
தெய்வதிருமிஸ்டிக் செல்வம்).சில ஜீவ நாடிகள் மடாலயங்களால் பாதுகாக்க படுகின்றன.
          தற்போது தமிழ் நாட்டில் பல ஜீவ நாடிகள் இருந்தும் பெரும்பாலும் அவை இயங்குவதில்லை.நாடி வாசிப்பவரின் அலட்சிய சுபாவமும் கேட்பவரின் அசிரத்தையாலும் தான்  சித்தர்கள் வாக்கு உரைப்பதில்லை.தொடர்ந்து செய்யும் தான தருமங்களை  பொறுத்துதான் ஜீவ நாடியில் தெள்ளிய முறைகளில் வாக்கு வரும்.
    அகத்தியர் ஞானம்

ஜீவ நாடி - முகவுரை

"அகத்தியன் வாக்கை, இந்த பூமியில், ஜீவ அருள் ஓலையில் பெறுவதற்கே, எத்தனையோ உயர்ந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஜீவ அருள் ஓலையில் வாக்கை பெறுவது ஒருவகை புண்ணியம் என்றாலும், அந்த வாக்கை பெற்று, அதை நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் அதனால் கேட்கின்ற மனிதனுக்கு எந்த விதமான நற்பலனும் இல்லை என்பதை, எமை நாடுகின்ற மனிதர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் பார்ப்பதற்கும், பெறுவதற்கும் புண்ணிய பலன் வேண்டுமென்றாலும் கூட, அதனையும் தாண்டி ஒரு சில ஆத்மாக்களுக்கு நேரடியாக அவ்வப்பொழுது காட்சி தந்து வழி காட்டுவது என்பது வேறு நிலை. இது போல ஓலை வழியாக வழிகாட்டுவது என்பது வேறு நிலை." அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகஸ்தியர் ஜீவநாடி
ஓர் விளக்கம்

ஜீவ நாடியின் மூலம் நடந்து வருகின்ற அதிசயங்கள் ஏராளம்…ஏராளம்…
அதேசமயம
அகஸ்தியப்பெருமானின் வாக்கை ஒரு சாதாரண மனிதனின் வாக்காக எடுத்துக் கொள்கின்றவர்களுக்கு சாதாரணாமான பலன்களே நடந்து வருவதையும் அதேபோல் மிக உன்னதமாக மிகுந்த நம்பிக்கையுடன் ஜீவ நாடியை நம்பி அதில் உரைக்கும் செய்திகளை மனம் உருகி பக்தியோடு கடைபிடிப்பவர்களுக்கு 100% மிக மிக துல்லியமாக பலன்கள் நடந்து வருவதோடு மட்டுமல்லாமல்
அகஸ்தியப்பெருமானின் திருவிளையாடல்களையும் தமது வாழ்வில் காண்கின்ற ஒரு அதிசயத்தைப் பெறுகின்றார்கள். பரிகாரங்கள் கூட பெரிய அளவில் வருவதில்லை. ஆலய வழிபாடுகள்தான் அதிகம் வருகின்றன. ஒரு சிலர் காண்ட நாடி போல் இந்த ஜீவ நாடியை நினைத்துக் கொள்கின்றார்கள். காண்ட நாடியில் பெயர் ஊர் எல்லாம் வருகின்றது. ஆனால் ஜீவ நாடியில் முருகன் என்ன உங்களுக்கு உரைக்க வேண்டும் என்று விதித்துள்ளாரோ அதை மட்டுமே உரைப்பார். பணிரெண்டு காண்டங்களின் பலனை உரைக்க அகஸ்தியப்பெருமான் நாடி ஜோதிடரல்ல. கருணையே வடிவமான கடவுளிடம் ஜோதிடம் சொல்லுமாறு கேட்பது மிக மிக தவறு. ஆனால் துன்பமே தங்கள் வாழ்வாகப் பெற்றுள்ள மனிதர்கள் தங்கள் கர்ம வினையில் இருந்து விடுபடும் பொருட்டு கருணையே வடிவம் தாங்கி யார் வந்து அமர்கின்றார்களோ அவர்களின் கர்ம வினையை நீக்கும் பரிகாரங்களையும் சாப தோசங்களின் நிவர்த்திகளையும் உரைத்து நம்மை நல்வழிப்படுத்தும் பொருட்டே
அகஸ்தியப்பெருமான் நமக்காக கீழே இறங்கி வந்து ஜீவ நாடியில் தோன்றி வாக்கு உரைக்கின்றார். தங்கள் பிரச்சினை குறித்த கேள்விகளுக்கு உரிய விடை கொடுக்கின்றார். எனவே ஜோதிடம் கேட்கும் அனுகுமுறையில் ஜீவ நாடியை அனுகக்கூடாது. ஜோதிடம் ஜீவ நாடியில் நிச்சயம் வரும். ஆனால் அதை முடிவு செய்ய வேண்டியது அகஸ்தியப்பெருமானும் நாடி கேட்க வருகின்றவர்களின் கர்ம வினையுமே. ஜீவ நாடி என்பது ஜோதிடத்தின் வகையில் சேராது. இது இறைவனே உரைக்கின்ற அருள்வாக்கு. அருள்வாக்கு என்ற உடனேயே குறி சொல்லுமோ என்றும் எண்ணிவிடக்கூடாது. நமது தகுதியை அறிந்து ஜீவ நாடியில்
அகஸ்தியர்என்ன உரைக்கின்றார் என்பதை மட்டுமே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே நம்பிக்கை இருப்பவர்கள் மட்டுமே ஜீவ நாடி கேட்க முயற்சி செய்யுங்கள். ஒரு துளி மனதில் சஞ்சலம் வந்தாலும் நாடி பலிக்காது. முழு மனதுடனும் முருகன் மீது பக்தியுடனும் முழு நம்பிக்கையுடனும் இருந்து ஜீவ நாடி கேட்கும் பிராப்தமும் இருந்தால் மட்டுமே ஜீவ நாடி உங்களுக்கு 100% பலிக்கும் என்பதை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். ு. எனவே பக்தி சிரத்தையோடு பக்குவத்தோடு வந்து ஜீவ நாடியை நம்பிக்கையுடன் கேளுங்கள்.இல்லாவிடில் நம்பிக்கை இருக்கும் எந்த இடத்திலும் பலன் கேட்டு வாழ்வில் வளம் அடையுங்கள். அங்கும் இங்கும் அலைவதைக் கைவிடுங்கள் தங்களுக்கு விருப்பமான மற்றும் நம்பிக்கையுள்ள் ஜோதிடரையோ மகானையோ ஏற்று அவர்களை நம்பிக்கையுடன் கடைபிடியுங்கள். அப்போதுதான் உங்கள் கர்ம வினை அகலும். அங்கும் இங்கும் அலைவதால் மட்டுமே கர்மவினை குறையாது. அகலமாக உழுவதைவிட ஆழமாக ஊழுவது மேல் எனும் பழமொழியை சிந்தியுங்கள். ஜோதிடர்களை மிகச்சாதாரணமாக அனுகாமல் உங்கள் வாழ்க்கையின் வழிகாட்டி எனும் நன்றி உணர்ச்சியோடு அனுகுங்கள். நிச்சயம் கடவுள் யாராவது ஒருவர் மூலம் நமது எதிர்காலத்தை உரைத்துக் கொண்டே இருப்பார். என்ன எழுதினாலும் உரைத்தாலும் இது கலியுகம். உண்மைகள் ஒதுங்கி இருப்பதுதான் நல்லது. எல்லாம் முருகன் செயல். எதற்காக இதை இவ்வளவு விளக்கமாகச் சொல்லவேண்டியுள்ளது என்பதால் ஜீவ நாடியின் மகிமையை உணராமல் ஜீவ நாடி கேட்கக் கூடாது என்பதற்கே. அகஸ்தியப்பெருமான் அடிக்கடி ஜீவ நாடியில் உரைக்கின்ற விஷயம் பக்தியும் நம்பிக்கையும் இல்லாதவர்களுக்கு இந்த ஜீவ நாடியை உரைக்கவோ தெரிவிக்கவோ கூடாது அப்படி உரைத்தால் அதைக் கேட்பவர்களுக்கு மிகவும் தீது என்கின்றார். அதனால்தான் யாராக இருந்தாலும் மிக எளிதில் எம்மிடம் நாடி கேட்டுவிட முடிவதில்லை.
அகஸ்தியப்பெருமான் ஜீவ நாடி கேட்க உரைக்கின்றாரோ அந்த மாதத்தில் வந்து மீண்டும் கேட்டு அடுத்த வழிபாட்டை செய்யத் துவங்குங்கள் பின்பு உங்கள் வாழ்க்கையே சிறுகச் சிறுக மாறுவதை அனுபவப் பூர்வமாக உணர்வீர்கள்

நம் போன்ற புரியாதோற்கு
அகத்தியர்
இறையருளால் இயம்பிடுவேன் இத்தருணம் இயம்பும்கால் பல்முனிவரோடு பிறர் நலன் தேடும் புண்ணிய ஆத்மாக்களையும் பணிந்து இயம்புவேன். காகபுஜண்டர், கும்பர், வசிட்டர் திருவடிகள் பணிந்து இத்தருணம் கருவுரார் யான் சில்வாக்கு, வாக்கும் பொதுவில் தடமாந்தருக்கும் வலுத்துவேன். என் நாமத்தில் பற்று கொண்ட சேயேனுக்கும் வலுத்துங்கால் தெய்வீகத்தை தெய்வீக நிலையிலிருந்து புரிதல் வேண்டுமப்பா.  வறிவிப்பேன் சேயே உன் ஒத்து தட மாந்தர்களும் எண்ணுகிறார்கள். வாக்கும் சித்தர்கள் யாது உரைக்கிறார்கள்? ஆகமத்தைதானே உரைகிறார்கள்.  வலுத்துவேன் முன்னர் அமரும் மாந்தனின் வதனதிரையை (முகத்திரை) கிழிக்குமாறு பகரவில்லை, பகர்ந்தாலும் அதை கூற அனுமதிப்பதில்லை.  பாலனே இது குறித்து இதழ் ஓதுபவனுக்கும் (நாடி வாசிப்பவருக்கும்), ஏனையோருக்கும் விசனம் உண்டு. பகரும்கால் எமக்கு எளிதப்பா.  எதிர் அமரும் மாந்தனின் வதனதிரையை கிழிப்பது, பகர்ந்தால் சிக்கலும், வேதனையும் எமக்கல்ல இதழ் ஓதுபவனுக்கே வந்து சேரும் என்பதால், என்பதாலும் பல உண்மைகளை கேட்கும் மாந்தராலும் ஏற்க இயலாது என்பதால்,  என்றென்றும் பட்டவர்த்தமான வாக்குகளை யாங்கள் பகருவதில்லை.  பகருவேன் உரைக்க வந்ததை பகரும்கால் பாலனே மெய்யை மெய் என ஏற்பதற்கு மெய்தன்மை கொண்டோர் வேண்டும் பாலகனே.  இஃது தடம் யாது என்று அறியாமலே பலர் வந்து போகிறார்கள்.  பகரும்கால் இதழ் ஓதுபவன் தோற்றமும் விருத்தமாக இல்லாது ஆன்மீகத்திற்கு பொருத்தமாக இல்லாது, இல்லாதும் இருப்பதாலே புஜண்டர், வசிட்டர், கும்பர் வாக்கினை அலட்சியம் செய்கிறார்கள். பகரும்கால் இஃது ஒப்ப இருப்பதால் மெய் தொண்டர்கள் வரக்கூடும் என்பதால் இவனை இஃது ஒப்ப தோற்றத்தில் இருக்க வைத்தோம், வைத்தோமப்பா ஜீவ அருள் நாடியை இவனிடம் சதம் சதம் மூடன் என்பதால். வருகிறாயே சேயே இதன் நுணுக்கத்தை ஆய்ந்துபார்.  வறியும்கால் முன்னரே அறிமுகமான ஆன்ம மாந்தனையோ, அனைவரும் அறிந்த துறவி கரத்திலேயோ வைக்காது இஃது நாடியை இவனிடம் வைத்த காரணம் பல இருந்தாலும்,  வறிவிப்பேன் ஏனையோர் உரைக்கும்கால் எம் கருத்தா, அவர்தம் கருத்தா என சிந்தனை சிதறல் வரக்கூடும்,  கூடுமப்பா இஃது ஒப்ப பல்வேறு ஆன்ம கருத்துகளை அறிந்த மாந்தன் கூறும் சமயம்,  கூறுகிறான் இவன் கருத்தினை சித்தர்கள் கருத்தா? என நினைக்க கூடும்.  கூறுகின்ற வாய்ப்பு உள்ளதால் ஆன்ம ஞானம் இல்லாத மூடனை தேர்ந்து எடுத்து,  திடம் கொண்டு நம்புகின்ற மாந்தர்களுக்கு வாக்கினை பகர்கிறோம். தெளிவுதான் இஃது இதழில் நல்கிறோம் அனைவருக்கும்.  திருப்தியும் இதில் காணாத மாந்தர்கள் அதிசயங்களை எதிர் நோக்குகிறார்கள், திருப்தியில்லை. வாழ்வுநிலை, தசநிலை, தனநிலை என எண்ணி, எண்ணி, எண்ணி தனத்தை தாராத சித்தர்கள் வாக்கை ஏன் ஏற்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.  இஃது ஒப்ப புஜண்டர், வசிட்டர், கும்பர் வந்து உரைப்பது எத்தனையோ பிறவிகளில் செய்த புண்ணியங்கள் ஒன்று சேர்ந்தாலும் நடவாதப்பா, என்றாலும் மாந்தர்கள் மீது கழிவு,  இரக்கம் கொண்டு இறைக்கு சமமான மாந்தர்கள் வாக்கு உரைத்தால் ஏற்காது,  எள்ளி நகையாடினால் எமக்கல்ல நட்டம். அம்மாந்தனுக்கே கட்டம்.  கட்டம் வந்த காரணம் கர்மவினை.  கர்மவினை அகற்ற கூறுகிறோம் பல்வழி.  கூறுகின்ற வழி ஏற்க இயலாது. கட்டம் தீர வேண்டும் என நினைத்தால் எங்ஙனம் சாத்தியம்.  குறிப்பேனே இத்தட மாந்தர்கள் ஆகட்டும்,  வேறு எவர் ஆகட்டும்,  கூறியபடி வாக்கு நடவவில்லை என வருந்தினால் அஃது எமது குற்றமல்ல.  கூறியது கூறியபடி ஏற்று மெய்தன்மையோடு,  திடம் கொண்டு சென்ற ஊழிலில் பாபம் செய்தோம். இனியாவது புண்ணியம் செய்வோம் என எண்ணி எண்ணி சதம் சதம் நீதியோடு வாழும் மாந்தருக்கு ஒரு போதும் பலியாமல் போகது. எத்தனை நெருக்கத்தில் வந்து வாக்கறிந்தாலும், வாக்கறியும் மாந்தர்கள் செய்யும் தவறை யாங்கள் அறிவோம் என்றாலும்,  அவன் மனநலம் கருதி சுட்டி காட்டாமல் விடுகிறோம்.  எஃது ஒப்ப இறையோ அனைவரையும் பொருத்தருளும் போது யாங்களும் பொருத்தருளுவோம், அருள்வோம் என்றாலும் அஃது தவறு என சுட்டி காட்டிய பின்னரும் தொடர்வது சரியல்ல. அறிவிப்பேன் சேயே மெய்யான வாக்கு வேண்டும் என உன் போல் பலர் வேண்டுகிறார்கள். அனைத்தையும் அறிந்த யாங்கள் மௌனமாக நகைத்து கொண்டே அனைத்தையும், அனைவரையும் கவனிக்கிறோம்.  அறிவாயே இத்தடத்தில் எவர் நாடி வந்தாலும் அமைதி காத்து வாக்கறிய வேண்டும். அகத்தில் துரிதம், துரிதம் என எண்ணுபவர்கள் அவர்கள் விரும்பியபடி வாக்கினை அறிய இயலாது.  அஃது ஒப்ப இதழ் ஓதுபவனும்,  நீயும் ஏக கருத்தை கவனம் கொள்ள வேண்டும்.  வேண்டுமப்பா பொறுமை,  பொறுமை வேண்டுவோருக்கு விளக்கங்கள் தந்தே ஆக வேண்டும். உளைச்சல் இன்றி. வலுத்துவேன் சூல முனிவரின் விருப்பமும் இறை விருப்பமே வாக்கினை பகர்வதும் பகராமல் போவதும்.  பகரவேண்டும் இன்னாருக்கு,  பகர வேண்டாம் இன்னாருக்கு என எம்மை நிர்பந்திக்க இயலாது.  பலன் அறிய வரும் மாந்தன் பக்குவமின்றிதான் இருப்பான்,  பக்குவமாக பாலகர்கள் எடுத்தியம்பத்தான் வேண்டும். பகருவேன் எதிரே அமரும் மாந்தன் சிறப்பில்லா எம் கொள்கைக்கு எதிரான மாந்தன் என்றாலும்,  இதழ் ஓதுபவனோ,  தட மாந்தர்களோ சினம் கொள்ள கூடாது.  எஃது ஒப்ப சூலமுனிவர்கள் அவர்களை கவனித்து கொள்வார்கள் என்றெண்டும்.  யாங்கள் இயம்புகின்ற கருத்தினை அறகருத்தினை தவிர ஏனைய கருத்தினை தெய்வீக சூட்சமத்தை ரகசியம் காத்திடல் வேண்டும்.  நன்றாக ஏககருத்தை கவனத்தில் கொள், கொள்ளப்பா தனத்தை எவன் விடாது பிடித்துள்ளானோ, குறிப்பேனே பிறரை எவன் அலட்சியமாக எண்ணுகிறானோ, குறிப்பேனே தானமோ, தர்மமோ அணுவளவும் செய்யாது எவன் உள்ளானோ, உள்ளானோடு அவனிடம் தெய்வீகமோ, சித்தர்களோ ஒருபோதும் இருப்பதில்லை. உரைப்பேனே உள்ளதை எல்லாம் எவன் ஈகிறானோ சித்தர்கள் உரைத்ததை சிந்தித்து பாராது சதம் சதம் ஏற்கிறானோ உணர்வாயே அவனே எங்கள் அருள் பெற்றவன், எங்கள் சேயவன்.சேயவனே சேயவனே சேயவனே என விளித்தால் மகிழ்வதும், சிறப்பாக எமது உயர் குணங்களை மட்டும் ஏற்காது இருப்பதும் அழகல்லா. செப்புவேன் எத்தனை ஆசிகள் யாங்கள் வழங்கினாலும் சிந்தையில் தனத்தையே குறிகொண்டு வாழ்பவரை யாங்கள கரை சேர்பதில்லை. சிறப்பான சிந்தை, உயர்ந்த குணம், எவருக்கும் உதவுதல், எதிரிக்கும் உதவுதல் என்ற மனம், மனதோடு நற்குணம் மனமாகி வாழ்வது, மனதால் அணுவளவும் சூது இல்லாமல் இருப்பது மறிவிப்பேன் வாரி வாரி வழங்குவது, இத்தகைய குணங்களே எம்மை அருகே சேர்க்குமப்பா. மனம் ஒன்று நினைக்க, வாக்கு ஒன்று சொல்ல, செயல் ஒன்று செய்ய இத்தடம் வரும் மாந்தர்களை யாங்கள் நன்றாக அறிவோம், அறிவோமப்பா அவர்களை பற்றி இத்தட மாந்தர்கள் விசனம் கொள்ள வேண்டாம், அவர்கள் குறித்து விமர்சனமும் ஏளன உரையும் இங்கு வேண்டாம். அறிவாய் அடுத்த மெய்யை இறை இறை ஞானம் ஞானம் எல்லாம் பகர்ந்து கொண்டு அஃது ஒப்ப ஒருவர் மீது ஒருவர் காழ்புணர்ச்சி கொண்டு, குறையும் கூறிகொண்டு அஃதோடு மமதையும் கொண்டு பவ்யம் போல் வெளிகாட்டி பகட்டை உள்ளே வைத்து வரும் மாந்தர்களும் உண்டு,உண்டப்பா என்றாலும் பக்குவம் ஆகட்டும் என்றே பொருத்துள்ளோம். உதட்டளவில் எமது நாமத்தை உச்சரித்து உள்ளே சித்தனாவது வாக்காவது உரைப்பது மெய் என்றால் அனைவர் நயனத்திலும் அச்சரத்தை காட்ட வேண்டியதுதானே. அஃது ஒப்ப ஒருவன் வருகிறான் எத்தனை சாதுரியம், வஞ்சகம் எம்மிடமே சாமர்த்தியமாக வாக்குரைப்பதாக எண்ணி பாதாளத்தில் வீழ்கிறானப்பா. அப்பனே சரணாகதி அடைந்தால்தான் தேற முடியும். இயம்புவது யாது எனில் சூழ்ச்சியாக வஞ்சமாக சாமர்த்தியமாக எம்மிடம் வாக்கறிய முயன்றால் எம்மிடம் பலன் கிட்டாது, என்றாலும் அனைவரும் எமது பிள்ளைகள் என்றே அரவணைத்து செல்வோம். எம்மை பணிந்தாலும், பணியாவிட்டாலும் இறையை பணிய வேண்டும். எம்மை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் இறையை ஏற்கவேண்டும். ஏற்பதென்றால் வெறும் வழிபாட்டை மட்டுமல்ல.சத்தியத்தை ஏற்கவேண்டும். ஏற்பதென்றால் மந்திர உரு போடுவது மட்டுமல்ல. மனம் குன்றா தானம் அளிப்பதையும் ஏற்கவேண்டும். எம்மிடம் கணிதம் பார்த்தால் இறையிடம் கணிதம் பார்த்தால் யாங்களும் கணிதம் பார்க்க வேண்டிவரும். எத்தனைதான் இயம்பினாலும் கர்மா செவியில் ஏற விடுவதில்லை. யாது செய்ய. எஃது ஒப்ப இவற்றை உரைக்கின்ற காரணம் கேட்கின்ற நீவீர் இஃது குறை இல்லாது வாழ பழகுவீர்.  மாந்தருக்கு தோன்றுவது எமக்கு புனிதமாக தோன்றாது, எமக்கு புனிதமாக தோன்றுவது மாந்தருக்கு புனிதமாக தோன்றாது.

ஆசிகள்...    சுபம் .
அகத்தியர் ஞானம்

இறைவனின் கருணையைக் காெண்டு இயம்புவது யாதென்றால் யாம் அடிக்கடி எமை(அகத்திய மாமுனிவர்) நாடுகின்ற மாந்தர்களுக்கு கர்மவினைகளின் தாக்கம் குறித்து எடுத்து இயம்பிக்காெண்டே இருக்கிறாேம். இஃதாெப்ப பாவவினைகள் ஒரு மனிதனை சுற்றி, பின்னிப்படர்ந்து காெண்டே இருக்கும் அந்த நிலையிலே ஒன்று நல்லதை செய்ய மனம் விரும்பாது. அடுத்தாக மேலும் தவறு மேல் தவறு செய்து பாவங்களை சேர்த்துக் காெள்ளவே தூண்டும். ஆனால் அந்த பல்வேறு பாவங்களிலும் எஃதாவது ஒரு புண்ணியம்(அவன்) இறைவழியில் வரவேண்டும் என்று இருக்கும் பட்சத்திலே அஃதாெப்ப ஆத்மாக்கள் மட்டுமே பிறக்கும் தருணம் ஓரளவு மனசாட்சிக்கு கட்டுப்பட்டு இறை ஆலயங்களை தரிசித்து, இயன்ற தர்மங்களை செய்து புண்ணியத்தை சேர்த்துக்காெள்ள வேண்டும்.*

*வெறும் தனத்தை சேர்த்துக் காெண்டு அதனால் ஆவது என்ன? என்ற ஒரு முடிவுக்கு வரும். ஆனால் அஃதாெப்ப நிலையில் வந்தாலும் மனம் தடுமாறும். பிறரை ஒப்பிட்டுப் பார்த்து 'அவர்களெல்லாம் இதுபாேல் எதுவும் செய்யாமல் நன்றாக வாழ்கிறார்களே? நேற்றைவிட இன்றைக்கும், இன்றைவிட நாளைக்கும் பாெருளாதாரத்தில் உயர்ந்து காணப்படுகிறார்களே? நாம் அவ்வாறில்லாமல் கடவுள், பிறவி, தர்மம் என்று ஒருவேளை தவறாக புரிந்துகாெண்டு செல்கிறாேமாே' என்றெல்லாம் குழப்பம் வரும்.*

*இதுபாேன்ற தருணங்களில் எம்(அகத்திய மாமுனிவர்) வழியில் வருகின்ற மனிதர்கள் பாெறுமையாேடும், திடசிந்தனையாேடும் இருக்க கற்றுக்காெள்ள வேண்டும். இஃதாெப்ப நிலையிலே ஒரு மனிதனின் வினைப்பயனை ஒட்டியேதான் வாழ்வு முழுவதும் நடக்கும் என்றாலும் யாம்(அகத்திய மாமுனிவர்) அந்த வினையில் வேறு வகையான மாற்றங்கள் செய்கிறாேமாே, இல்லையாே, தாெடர்ந்து இறைவழியில் வருவதற்குண்டான வலுவை தரத்தான் நாங்கள்(சித்தர்கள்) எமை நாடுகின்ற மாந்தர்களுக்கு உதவுகிறாேம். ஆனால் நல்லவனாக இருந்தால் மட்டும் பாேதாது. எமை நாடுகின்ற மனிதர்கள் மனாேரீதியாக வல்லவனாகவும் இருக்க வேண்டும்.*

*அது எங்ஙனம் என்றால் தன்னை சுற்றியுள்ள மனிதர்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். வெறும் தவறுகளையே செய்துகாெண்டு, சுயநலமாய் வாழ்ந்துகாெண்டு தனம்தான் பிரதானம் என்று வாழ்கின்ற மனிதர்களுக்கே அத்தனை தன்னம்பிக்கையும், தைரியமும் இருக்கும்பாெழுது, நிரந்தரமில்லாத ஒரு வாழ்வை நாேக்கி செல்கின்ற அந்த மனிதனே திடமாக இருக்கும்பாெழுது, இறைவனை நாேக்கி செல்கின்ற ஒரு மனிதன் திடமாக இருக்கவேண்டாமா? சிறிய கஷ்டம் வந்துவிட்டாலும்கூட, 'சித்தர்களை நம்பினாேம். சித்தர்கள் இப்படி செய்துவிட்டார்களே' என்று அங்கலாய்ப்பது என்பது எம்(அகத்திய மாமுனிவர்) வழியில் வருகின்ற மனிதர்களுக்கு இயல்பாகிக் காெண்டே இருக்கிறது. அல்லது இவையெல்லாம் நடக்கப்பாேகிறது என்று சித்தர்களுக்குத் தெரியாதா? ஏன் எச்சரிக்கைவில்லை? என்றும் கேட்கிறார்கள்.*

*எதைக் கூற வேண்டும், எதைக் கூறக்கூடாது என்று நாங்கள் மட்டும் முடிவெடுப்பதில்லை."இந்த இந்த ஆத்மாக்களுக்கு இதை, இதை உணர்த்து" என்று இறை கட்டளையிடுகிறது. அந்த கட்டளைக்கு ஏற்பவும், எமை நாடுகின்ற மனிதனின் மனாே திடத்திற்கும், பக்குவத்திற்கும் ஏற்பவும்தான் நாங்கள்(சித்தர்கள்) வாக்கை பகிர்ந்துகாெண்டே இருக்கிறாேம். ஆக கடுமையான ஊழ்வினை தாேஷம் ஒரு மனிதனை பாடாய்படுத்துகிறது. எந்த தாெழில் செய்தாலும் நஷ்டம் வருகிறது. அந்த நிலை இன்னும் அவனுக்கு 20 ஆண்டுகள் இருக்கும் என்று வைத்துக்காெள்வாேம். அந்த நிலை உள்ள ஒரு மனிதன் எமை நாடுகிறான். 'இன்னும் 20 ஆண்டுகள் உனக்கு கஷ்டம்தான் நீடிக்கும் என்று எமது வாக்கால் கூற இயலுமா? அவனுக்கு இருக்கின்ற கர்மவினைகளை எப்படி குறைக்க வேண்டும்? எந்த வினையை எப்படி மாற்ற வேண்டும்' என்றெல்லாம் நாங்கள் அனுமானம் செய்து இறையிடமும் உத்தரவைக் கேட்டு அதற்கு ஏற்றாற்பாேல் நாங்கள் செய்துகாெண்டே இருக்கிறாேம்.

*அஃதாெப்ப நிலையிலே அஃதாெப்ப மனிதன் வரும்பாெழுதெல்லாம் இதை செய், அதை செய்' என்றும், சில சமயங்களில் '03 மாதங்கள் ஆகட்டும், 06 மாதங்கள் ஆகட்டும். முன்பு உரைத்த வழிபாட்டை செய்' என்றும் கூறி அவனுடைய கர்மவினையை குறைக்க முயற்சி செய்கிறாேம். ஆனால் எமது வாக்கையாே, வாக்கின் நுட்பத்தையாே சரிவர புரிந்துகாெள்ள முடியாத நிலையிலே மனிதன் குழம்புகிறான். இங்கு வந்து விட்டாலாே, சித்தர்களின் வாக்கை கேட்டுவிட்டாலாே மறுதினமே எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று எண்ணுகிறான். தீரலாம். தீருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த அளவிற்கு ஒரு ஆன்மா தன்னை தயார் செய்து தகுதி படைத்திருக்கிறதா? என்று பார்க்கவேண்டும். பாெறுமை இருக்கவேண்டும்.*

*எனக்கு இப்படியெல்லாம் சாேதனை வருகிறது. நான் நம்புகிறேன். என் தாய், தந்தை இதை(ஜீவநாடி) நம்பவில்லை. என் மனைவி நம்ப மறுக்கிறாள். என் குழந்தைகள் நம்பவில்லை. அவர்களையும் உங்கள் வழியில் மாற்றுங்கள்' என்று காேரிக்கை வைப்பதும் நகைப்புக்குரியது (சிரிப்புக்குரியது). யாருக்கு இதில் எப்பாெழுது ஆர்வம் வரவேண்டும்? யாருக்கு இந்த வழி(ஜீவநாடி வழி) ஏற்புடையது என்றெல்லாம் பிறக்கும்பாெழுதே விதி தீர்மானித்துவிடுகிறது. அதைத் தாண்டி எம்(அகத்திய மாமுனிவர்) வழியில் வரக்கூடாத மனிதனை வேறு வழியில்லாமல் இங்கு வருகின்ற மனிதன் அழைத்துவந்தாலும் திசை மாறிதான் செல்வான்.*

*யாரையாவது அழைத்துவந்து 'இவன், எனக்கு வேண்டிய மனிதன். நல்ல அறப்பணிகள் செய்கிறான். இவனுக்கு வாக்கைக் கூறுங்கள் குருதேவா' என்றால், அந்த மனிதனின் அந்த பிறவியை மட்டும், ஒரு சில கால பழக்கம் மட்டுமே இங்கு வருகின்ற மனிதனுக்குத் தெரியும். ஆனால் அவனின் ஆதியாேடு அந்தரங்கம் அனைத்தும் எமக்குத்(அகத்திய மாமுனிவர்) தெரியும். அவனுக்கு வாக்கு உரைப்பதால் எவ்விதமான பலனும் இல்லை என்பது எமக்குத் தெரியும். அது மட்டுமல்லாது பல்வேறு மனிதர்கள் மூடர்களாகவே பிறந்து, மூடர்களாகவே வாழ்ந்து, மூடர்களாகவே இறக்கிறார்கள். அது அவனின் கர்மவினை. அஃதாவது அவர்களை பாெறுத்தவரை புறத்தாேற்றம் என்பது மிக முக்கியம்.*

*ஒரு ஆன்மீக அமைப்புக்கு செல்ல வேண்டும் என்றால் அந்த ஆன்மீக அமைப்பு உலகியல் ரீதியாக பலரும் அறிந்த ஒன்றாக இருக்கவேண்டும். இவன் உலகியல் ரீதியாக யாரையெல்லாம் மதிக்கிறானாே அவர்கள் எல்லாம் அங்கு வந்து பாேக வேண்டும். அந்த புறத்தாேற்றம் ஜாெலிக்க வேண்டும். அங்கு அவன் யாரை சந்திக்கிறானாே, எந்த சந்தியாசியை சந்திக்கிறானாே, அந்த பாேதகன் மிக உயர்ந்த இடத்திலே அமர்ந்துகாெண்டு மிகவும் ஆணவத்தாேடு நடந்து காெண்டாலும் அவனை சுற்றி பல்வேறு மனிதர்களும் இருக்க வேண்டும். அப்பேற்பட்ட மனிதனைதான் ஞானி என்றும், இறையருள் பெற்றவன் என்றும் பல்வேறு மனிதர்கள் நம்புகிறார்கள். தனம் இல்லாமலும், ஒரு கிழிந்த குடிசையில் அமர்ந்துகாெண்டும், ஒரு அழுக்கு துணியை சுற்றிக்காெண்டும் யாராவது ஒருவன் பாேதனை செய்தால், யாராலும் அந்த ஞானியை அடையாளம் காட்ட முடியாது. ஞானிகளும் தன்னை நாடி வருகின்ற மனிதர்கள் ஆயிரக்கணக்கில் வரவேண்டும் என்று எண்ணுவதில்லை. ஒரு சிலர் வந்தாலும், உண்மையைப் புரிந்துகாெண்டவர்கள் வந்தால் பாேதும் என்று என்றுதான் எண்ணுகிறார்கள்.*

*அதுபாேல்தான் இந்த ஜீவ அருள் ஓலையும்(ஜீவநாடி). இது எல்லாேருக்கும் ஏற்றது அல்ல. இதைப் புரிந்துகாெள்வதற்கும் ஒரு மனிதனின் ஜாதகத்தில் சில ஜாதக பலன்கள் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் லக்னத்தை சுபகிரகங்கள் பார்க்கவேண்டும். அதிலும் குரு பார்க்க வேண்டும். (இவ்வாறு) இல்லாத மனிதர்களை எத்தனை முறைதான் அழைத்து வந்தாலும், பாேராடி எடுத்து கூறினாலும், இங்கு அமர்ந்து நல்ல பிள்ளைபாேல் கேட்டுவிட்டு பிறகு வெளியே சென்று 'இவையெல்லாம் ஏற்புடையதல்ல. இதையெல்லாம் நம்பமாட்டேன்' என்று கூறிவிட்டு, எங்கு சென்றால் ஏமாறுவானாே, அங்கு சென்றுதான் ஏமாறுவான். இவையெல்லாம் அவனவன் கர்மவினை என்று எடுத்துக்காெண்டு இங்கு வருகின்றவர்கள் அமைதியை கடைபிடித்து எமது வழியில் வர நல்லாசிகள் கூறுகிறாேம்.*


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

எத்தனையோ எதிர்பார்ப்புடன் அகத்தியரை "நாடியில்" நாடி  அருள்வாக்கு கேட்கிற மனிதர்கள் நம்மிடை உண்டு. அவர் சொல்கிற எத்தனையோ பரிகாரங்களை செய்தும், நாம் எதிர்பார்ப்பது நடக்க தாமதமாகலாம். வருத்தப் படுவது வேண்டாம். அகத்தியப் பெருமானே, ஏன் என்று, அதற்கான காரணங்களை, பல தருணங்களில் விளக்கியுள்ளார்.

அகத்தியப் பெருமான் நாடியில் வந்து பலமுறை கூறிய அறிவுரைகளை, என் நண்பர் விவரித்த விஷயங்களை, எளிய முறையில், இங்கு தொகுத்து தந்திருக்கிறேன். அகத்தியப் பெருமான் அருள் தந்தும் ஏன் நடக்கவில்லை என்று நினைத்திருப்பவர்களுக்கும், நம்முள்ளே எழுந்து இன்றுவரை  விடை கிடைக்காமல் இருக்கும் ஒரு சில கேள்விகளுக்கும், இங்கு கண்டிப்பாக பதில் இருக்கும். அதை சரியாக தரம் பிரித்து பார்த்து, உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப, உங்களுக்கு அகத்தியர் கூறுகிற பதிலாக எடுத்துக் கொண்டு, அதன்படி நடந்து, பின்னர் அமைதி உங்களுக்குள் தவழ்ந்தால், இவைகள் உங்களுக்கென அகத்தியர் கூறிய பதில் என்று உணர முடியும்.
அகத்தியர் ஒரு சித்தர். அவரை நாடிக் கேட்கும் பொழுது நல்வழி காட்டுவார். நூற்றுக்கு தொண்ணூறு பேருக்கு நல்ல வழி, நல்ல பயன் கிடைக்கிறது. மற்றவர்கள், பொறுமையாக , மறுபடியும், மறுபடியும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயம் அவர்களுக்கும் அருள் புரிவார். இங்கு நம் கடமை என்பது, பரிகாரங்களை செய்வதோடு மட்டும் அல்லாமல், பொறுமையாக, நிறைய நல்ல விஷயங்களை நம்பிக்கையோடு செய்து கொண்டிருக்க வேண்டும். மனம் தளரக்கூடாது. கண்டிப்பாக நல்லது நடக்கும்.
பொதுவாக அகத்தியர் அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வாக்கு கொடுப்பதில்லை. சோதனைகளை உண்டாக்கி, "உண்மையில் அவன்/அவள் நம்பிக்கையோடு வந்திருக்கிறார்களா? இல்லை சுயநலத்திற்காக வந்து கேட்கிறார்களா என்பதை அறிந்த பின்னர்தான், தனது தவவலிமையை கொண்டு, வியத்தகு காரியங்களை செய்து காட்டுவார். ஆகவே, கேட்பதில், நாம்தான் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். கேட்பது, நிலைத்து நிற்கும் விஷயங்களாக இருந்தால். நிச்சயமாக கிடைக்கும்.
அகத்தியர் வாக்கு சில சமயம் பொய்த்துவிட்டது போல் தோன்றும். ஆனால், சரியான நேரத்தில் அது விஸ்வரூபம் எடுத்து மீண்டும் பிரம்மாண்டமாக வெளியே வரும். இது தான் உண்மை.
"காரணமில்லாமல் பொறுத்திரு என்று அகத்தியன் கூற மாட்டேன். இது அவசரமான உலகம். பணம் கொடுத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று நம்புகிறார்கள். கலியுகம் என்பதால் அப்படி நடக்கவும் செய்கிறது. எப்போதைக்கு எப்போது எவன் ஒருவன் அகத்தியனிடம்  முழு நம்பிக்கையோடு வந்து வாக்கு கேட்கிறானோ அவனை நானே கைபிடித்து தூக்கி அழைத்துச் செல்வேன். நம்பிக்கை இல்லாதவர்களைப் பற்றி பொருட்படுத்தவே மாட்டேன். ஏனெனில், என்னை நம்பி வருபவர்களுக்கு பிற்காலத்தில் எந்தவிதத் துன்பமும் வரக் கூடாது. அவர்களின் எதிர்காலத்தை பிரம்மாவிடம் கேட்டு பிரம்மாவின் அனுமதியோடு அவர்களுக்கு நல்லது செய்வேன். இதற்கு சில காலம் ஆகலாம். பலருக்கு பிரம்மா இரக்கப்படாமல் கூடப் போகலாம். பிரம்மா மறுத்துவிட்டால், அதை நான் அப்படியே என் பக்தர்களுக்கு சட்டென்று நான் சொல்லிவிடமாட்டேன். மீண்டும் பிரம்மாவின் மனதை சாந்தப்படுத்த முயற்ச்சிப்பேன். எனது வேண்டுகோளை பிரம்மா உடனடியாக ஏற்றுவிட்டால் என் பக்தர்களுக்கு உரிய எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைப்பேன். இது நடக்கும், நடக்காது என்று வெட்டு ஒன்று துன்று ரெண்டாக சொல்லும் பழக்கம் அகத்தியனுக்கு இல்லை, அப்படிச் சொல்ல ஆரம்பித்தால் நூற்றுக்கு ஒருவர், இருவரைத் தவிர வேறு யாருக்கும் எந்தக் காரியமும் நடக்காது. "பொறுத்திரு" என்று சொன்னால் அவர்களுக்காக அகத்தியன் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம். பக்தர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறுகிறார். சரியாக புரிந்து கொள்வது நமது கடமை, பொறுமை மேலும் நல்லதை செய்யும்.
அனுபவப்பட்ட பின்தான் பலருக்கும் புரிகின்றது - பிரார்த்தனையும், பெரியோர்களின் வழிகாட்டலும்தான் ஒருவரை சோதனையிலிருந்து காப்பாற்றுகிறது என்று. நாம்தான் அவசரக் குடுக்கையாக நடந்து கொள்கிறோம், என்பதே அகத்தியரின் முடிவு.
அகத்தியர் சொன்னால் எல்லாமே நடக்கும் என்பது பொது விதிதான். ஆனால், சம்பந்தப்பட்டவர்களும்  தங்கள் பொறுப்பை உணர்ந்து அதன்படி நடந்து கொள்ளவேண்டும். ஒருவர், இருவர் என்றால் அகத்தியர் உடன் ஓடி வந்து உதவி செய்வார். ஒரு நாளைக்கு 1000 பேர் வந்து முறையிடுகிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் அருள் பாலிக்க வேண்டும் என்று அகத்தியருக்கும் ஆசைதான். ஆனால் அவருக்கும் எத்தனையோ பிரார்த்தனைகள் இருக்கின்றன. த்யானம் செய்ய வேண்டும். தெய்வம் இடும் கட்டளைகளை/கடமைகளை செய்யவேண்டும். அதற்காக, அவர் பல அவதாரங்கள் எடுத்து எல்லோரையும ் நிறைவு செய்ய முடியாது. எனினும் படிப்படியாக ஒவ்வொருவருக்கும் உதவி செய்வார். அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என அகத்தியப் பெருமானே பல முறை கூறியுள்ளார்.
அகத்தியப் பெருமான் சொன்ன பரிகாரங்களை செய்துவிட்டு, அடுத்த நாளே பலனை எதிர்பார்ப்பது தவறு. சிலருக்கு அவர்கள் செய்த கர்ம புண்ணியத்தால் உடனடியாக பலன் கிடைத்து விடுகிறது. பலருக்கு தாமதம் ஏற்படுகிறது. ஆதலில், பொறுமை, நம்பிக்கை  மிக அவசியம்.
குறுக்கு வழியில் பணம் சேர்ப்பவர்கள் எல்லோரும் பின்னொரு காலத்தில் அவல நிலைக்குத்தான் ஆளாக வேண்டிவரும். சிலருக்கு வாரிசு இல்லாமலே போய்விடும். பலருக்கு இருந்தும் அனுபவிக்க முடியாத நிலைக்கு நோய்கள் தாக்கும். இவை எல்லாம் உத்தேசித்துத்தான் "பொறுத்திரு சிலகாலம்"  என உரைக்கிறார்.
கர்மவினையை அனுபவிக்காமல் யாரும் தப்பிக்க முடியாது. அது இறைவன் இடுகின்ற கட்டளை.
ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அகத்தியர் ஒரு வழிகாட்டி. சிலவற்றை நேரடியாகவும் பலவற்றை மறைமுகமாகவும் சொல்வார். பயன்படுத்திக் கொண்டு செயல்படுவது அனைவருக்கும் நல்லது. அகத்தியர் சொன்னது நடக்கவில்லை என்றால் "விதி" இன்னும் இரங்கவில்லை என்று அர்த்தம். இதற்காக அகத்தியரை பழி சொல்வதில் அர்த்தமில்லை. இங்கு நம்செயல் சரி இல்லை, குறைந்த பட்சம், அகத்தியர் வாக்கில் நம்பிக்கை இல்லை, பக்தி இல்லை என்று அர்த்தம். முதலில் அவைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
எல்லோரும் அவரை தேடி வந்து, நாடியில்  வாக்கு கேட்பார்கள். ஆனால், முன் ஜென்மத்தில் அகத்தியரை வழிபட்டதால், இந்த ஜென்மத்தில் ஏழ்மையில் பிறந்தும், நாடியை அவர்கள் இருக்கும் இடத்திற்கு தூக்கிக் கொண்டு போய், அவர்களுக்காக அகத்தியர் நாடியில் வந்து அருள்வாக்கு கொடுத்து, அவர்கள் வாழ்க்கை செம்மையான பல நிகழ்ச்சிகள் உண்டு. அப்படிப்பட்ட புண்ணிய நிலைக்காக, இந்த ஜென்மத்திலேனும் நல்லதை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
வீட்டில் நடத்தப்படும் யாகத்தின் புகை, அந்த வீட்டில் உள்ள குடும்பத்தாரை சுற்றி நின்று காப்பாற்றும். அதனால்தான் அகத்தியர் குறைந்தது, வாரத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில், வீட்டில் சாம்பிராணி புகை போடச் சொல்கிறார். அப்படி புகைக்கும் சாம்பிராணியில், சிறிதளவு நெய் சேர்த்துக் கொண்டால், யாகபலன் (பாதுகாப்பு) எளிதில் அனைவருக்கும் கிடைக்கும்.
நான்கு வேதங்களில், அதர்வண வேதமும் ஒன்று. அது மாந்த்ரீகத் தன்மை கொண்டது. இதனை பிரயோகிப்பவர்கள் தங்களை தாங்கள் உடல் சுத்தம் செய்து கொள்வதோடு, மற்றவர்களுக்கு மாந்த்ரீகத்தால் உதவி செய்யும் முன்பு தங்களைத் தாங்களே ஒரு பாதுகாப்பு வளயம் போட்டுக் கொள்ள வேண்டும்.  பெரும்பாலும் அதர்வண வேதத்தை யாரும் தவறாக பயன்படுத்துவதில்லை. ஒரு சிலர் தவறாக உபயோகப்படுத்தி, மற்றவர்களிடமிருந்து பணத்தை பிடுங்குகின்றனர். அதர்வண வேதத்தின் பெருமை இப்படிப்பட்டவர்களால்தான் வீழ்ச்சி அடைகிறது.
நாம் முற்பிறவியில் செய்த வினைதான் செய்வினையாக இந்த பிறவியில் நம்மை ஸ்ரமப்படுத்தும். இதை உண்மையான பிரார்த்தனையால் சரி செய்து கொள்ளலாம். ஆனால், அதை செய்பவர்கள் (மந்திரவாதம்) குடும்பம் சூன்யமாகிவிடும், ஏன் அவர்களுக்கு (செய்பவர்களுக்கு) மரணம் கூட, துர்மரணமாகிவிடும். (தயவு கூர்ந்து யாரும் இதன் பக்கம் சென்று விடாதீர்கள்.)
கணபதி யாகமும், மகாசுதர்சன யாகமும் செய்துவிட்டு ஒரு வீட்டுக்கு குடியிருக்கப் போனால், நாம் அறியாமலேயே அந்த வீட்டில் இருக்கும் துர்சக்திகள், பலமிழந்துவிடும். பாதிப்பில்லாமல் தப்பிக்கலாம். நிம்மதியாக வாழலாம். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை இந்த யாகங்களை செய்வது,  வைத்துக்கொண்ட (தெரிந்தோ/தெரியாமலோ) கழிவுகளை அகற்றும். குற்றால மலையில் உள்ள மலை பாம்புகளின் கொழுப்பு செண்பகதேவி அருவியில் கலந்து வருவதால், அது குஷ்ட நோயை குணப்படுத்தும் சக்தி கொண்டதாக மாறிவிடுகிறது. சதுரகிரியில் சித்தர்கள் இதை குணப்படுத்துகிறார்கள். தீர்த்தாமலையே ஒரு மூலிகை மலை என்பதால் ஆறு இடங்களில் சிறு அருவிபோல் மலைப் பாறையில் இருந்து தண்ணீர் கொட்டும். இது மருத்துவ குணம் கொண்டது. அந்த தீர்த்தமும் குஷ்டம் போன்ற கடுமையான எந்த சரும நோயையும் தீர்க்கும்.
குறுக்கு வழியில், தகாத வழியில் பொருள்/செல்வம் ஈட்டியவர்களுக்கு, அகத்தியர் துணை போவதில்லை. அவரவர் கர்மாவை அவர்களே அனுபவிக்கட்டும் என்று விட்டுவிடுவார். அதே சமயம் அவர்களை உயிர் ஆபத்திலிருந்தும் காப்பாற்றுவார்.  அது கூட, என்றேனும் அவர்கள் திருந்தி வாழட்டுமே என்கிற பரந்த எண்ணத்தில்தான்.
கோவில் சொத்தை கொள்ளை அடித்தால், சம்பந்தப்பட்டவர்களது, குடும்பம், வாரிசு பிற்காலத்தில், பைத்தியமாக வீதியில் ஆலயவேண்டிவரும், அல்லது மிகப் பெரிய விபத்தில் உடல் உறுப்புக்களை இழக்கவேண்டி வரும், அல்லது மரணம்வரை படுத்த படுக்கையில் விழ வேண்டிவரும். அதிலும், நரசிம்ஹர், ஆஞ்சநேயர் கோவில் சொத்துக்களானால், நிச்சயம் இப்படிப்பட்ட தண்டனைகள் உண்டு. இந்த தண்டனை இறைவனால் விதிக்கப் படுகிறது.
பக்தியும், நம்பிக்கையும் இல்லாத இடத்தில் வெற்றி இல்லை.
நோயுள்ளவன்தான் மருந்து சாப்பிடவேண்டும். அது போல அவரவர் கர்மாவுக்கு, அவரவர் தான் பரிகாரம் செய்ய வேண்டும்.

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in