Saturday 20 April 2019

இன்றைய தின அகத்தியர் வாக்கு - 18 சித்தர்கள்,சஹஸ்ர லிங்கம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*கும்ப முனியே* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : 18 சித்தர்களும் முக்கியமான(சிதம்பரம், பழனி பாேன்ற) ஸ்தலங்களில் அடங்கியிருப்பதாக பெரியாேர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் பழனிக்கு செல்லும் மக்கள் முருகனை மட்டும் வணங்குகிறார்கள். பாேகரை வணங்குவதாக எனக்கு தெரியவில்லை. இது ஏன்?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

இறைவன் அருளால் புரிந்து காெள்ள வேண்டும். *18 சித்தர்கள் என்பது தவறான வழக்காகும். பதி எனப்படுவது இறைவனை குறிக்கக்கூடியது. பதி எண் சித்தர்கள் பதியாகிய இறைவனை சதாசர்வகாலம் எண்ணக்கூடிய அனைவருமே சித்தர்கள்தான். இது மருவி 18 என்று ஆகிவிட்டது.*

அடுத்தாக சித்தர்கள் அடங்கியிருப்பதாக கூறப்படும், அதாவது *ஜீவ அருட் பீடம் என்று எம்மாலும், ஜீவ சமாதி என்று மனிதர்களாலும் கூறப்படுகின்ற எல்லா இடங்களிலும் அவ்வாறு இருப்பதல்ல.* பின் அந்த வழக்கம் எவ்வாறு ஏற்பட்டது? என்றால் *அதுபாேன்ற ஸ்தலங்களில் சித்தர்கள் பல காலம் தங்கி இறை தாெண்டும், மக்களுக்கு சேவையும் செய்திருப்பார்கள்.*

இன்னாென்று, *வேருக்கு நீர் ஊற்றினாலே அது விருட்சத்தின்(மரத்தின்) எல்லா பகுதிகளுக்கும் செல்லும். மூலவராகிய இறைவனை வணங்கினாலே அது சித்தர்களுக்கும் சேர்த்துதான் என்பதை புரிந்து காெள்ளவேண்டும்.* எனவே பாேகனை வணங்கவில்லை என்பதை குற்றமாக காெள்ள வேண்டாம் என்றாலும் *அதுபாேன்ற இடங்களில் தனியாக ஒரு சித்த சன்னதி இருந்தால் கட்டாயம் சென்று வணங்குவது நல்ல பலனைத் தரும். மேலும் நெறிப்படுத்த, மனிதனுக்கு உண்மையை உணர்த்த அந்த சித்தர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை யாம் இத்தருணம் இயம்புகிறாேம்.*

*கேள்வி : சஹஸ்ர லிங்கம்...லிங்கம். இதில் எது சிறந்தது?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இஃதாெப்ப வைரம், வைடூரியம் இரண்டில் எது உயர்வு?* கனகம், அஃதாெப்ப கனகத்தில் செய்யப்பட்ட ஆபரணங்கள், இதில் எது உயர்வு? *எனவே அனைத்தும் உயர்வுதானப்பா.*

*இருக்கின்ற பரம்பாெருளை எதன் வழியாக மனிதன் பார்க்க விரும்பினாலும், பார்க்கின்ற மனிதனின் மனாேபாவம் சரியாக இருந்தால் அவன் கல்லிலும் கடவுளைக் காணலாம். மனாேபாவம் சரியில்லையென்றால் கடவுளே எதிரில் வந்து நின்றாலும அவனுக்கு கல்லாகத்தான் தெரியும். இரண்டுமே உயர்வுதான்.*

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!🙏*