Wednesday 1 May 2019

அகத்தியர் அருளுரை - சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதை விட, அதை ஏழைகளுக்கு காெடுப்பதைப் பற்றி

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு":*

*நாள் : 49*

*தேதி: 02-05-2019(வியாழன் - தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*அச்சம் நான்கினை அகற்றியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : "சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதை விட, அதை ஏழைகளுக்கு காெடுப்பதைப் பற்றி"?🙏*

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*ஒருவனின் மனம், புத்தி, அறிவு, ஞானம் - இவற்றை நல்கக்கூடிய கிரக அமைப்பு - இதை பாெறுத்துத்தான் இந்த வாதத்தை எடுத்துக் காெள்ள முடியும்.* முழுக்க முழுக்க பக்திக்கு முதலிடம் தருகின்ற ஒரு மனிதரிடம் "நீ தர்மம் செய், தர்மம் செய், தர்மம் செய்" என்று நாங்கள் கூறினாலும், அதில் சிறிதளவே அவன் செய்கிறான். ஆனால் பாவங்கள் குறையவில்லை. இவன் எவ்வாறு பாவங்களை குறைப்பது? சரி. இவனுக்கு *"தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் தான் திருப்தி" என்றால், அப்படியே செய்யட்டும். அபிஷேகத்திற்காக பாெருள்கள் வாங்குகிறான், அந்த வியாபாரம் செழித்து வளரட்டும்.* அது, அந்தந்த மனிதர்களுக்கு பாேய் சேருகிறது அல்லவா?

அந்த அடிப்படையிலும், *இவன் அபிஷேகத்திற்காக முயற்சி செய்கின்ற காலமும், அதனால் பயன் அடையக்கூடிய மனிதர்களையும் பார்க்க வேண்டும். அப்படியாவது சிறிது கர்மா, இவனுக்குக் குறையட்டும் என்றுதான் கூறுகிறாேம்.* அதே சமயம் "ஒரு உயர்ந்த பாெருளை ஏன் ஒரு கல்லின் மீது ஊற்ற வேண்டும்? அதை ஏழைகளுக்குத் தந்தால் ஆகாதா?" என்று ஒரு வாதத்தை வைக்கும்பாெழுது, *ஒருவனுக்குப் பிரியமான தந்தை, தாய், மனைவி, மக்கள் பாேன்றாேர்களின் பிம்பங்களை "களங்கப்படுத்து, அதன் மீது எச்சில் உமிழ்" என்றால், "உமிழ்வானா?". எனவே, அந்த  பிம்பங்களை அவன் தன் உற்ற பந்தங்களாகவே பார்க்கின்ற குணம் இன்றளவும் இருக்கிறது.*

அப்படியிருக்கும்பாேது, *"சிலை" என்று கருதக்கூடிய மனிதனுக்கு, அது வெறும் சிலை. ஆனால் அது உள்ளே "தெய்வம்தான்" என்று ஆணித்தரமாக நம்புகின்ற மனிதனுக்கு, "நாம் தெய்வத்திற்கே அபிஷேகம் செய்கிறாேம்" என்ற சந்தாேஷமும், அதன் மூலம் மன அமைதியும் வரும்.*

எடுத்த எடுப்பிலேயே, *"நீ அப்படியெல்லாம் அபிஷேகம் செய்து  பாெருளை வீண் செய்யாதே. உன்னை சுற்றியுள்ள ஏழைகளுக்கு காெடு" என்று சாென்னால், அவன் மனம் ஏற்காது. ஓரளவு நல்ல ஆத்மா, காலப்பாேக்கில் திருந்துவான் என்றால், அவனை, அவன் பாேக்கில் சென்றுதான் நாங்கள் திருத்துவாேம்.*

எனவே, *இதில் யார் செய்வதும் குற்றமல்ல. பாதிப்பும் அல்ல. இரண்டு வழிகளுமே சிறப்புதான்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு.(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1