Tuesday 14 May 2019

சித்தர் வாக்கு - உடலில் உள்ள அக்கினி சக்தி

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிஷிகள் அடியவர் கானகத்தின்உள் சென்று சித்தர்களுடன் உரையாடல் செய்த பதிவு*

*சித்தன் கேள்வி*:—
உடலில் உள்ள அக்னியானது, உயிர்/பிராணன் தங்கியிருக்கிறது என்பதற்கு சான்று. இல்லையா? சரி! இந்த அக்னியானது எங்கு கனன்று நின்று, உள் முழுவதும் பரவுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் வயிற்றில்தான் அக்னி குண்டம் உள்ளது. அங்கு கனன்று எரியும் அக்னியானது, உடலில் ஓடும் ரத்தம் வழியாக அனைத்து பாகங்களையும் சென்று அடைகிறது. ரத்தம் கொண்டு கொடுக்கும் அக்னியானது, ஒவ்வொரு அவயவங்களுக்கும் எரிசக்தியாக அமைகிறது. ரத்தம் ஓடாத இடங்கள் குளிர்ந்து போவது இதனால் தான். அந்த இடங்களுக்கு எரிசக்தி கிடைப்பதில்லை. நிற்க!

உடல் முழுவதும் பரவும் இந்த அக்னியானது கட்டுப்படுத்தப்பட  வேண்டும். உதாரணமாக, ஒரு மெழுகு திரியை தீ மூட்டி நேராக பிடித்தால், அதன் அக்னி பிழம்பு எந்த திசை நோக்கி இருக்கும்?

*அடியவர் பதில்*:—-
மேல் நோக்கி எரியும்.

*சித்தன் கேள்வி*:—-
தலை கீழாக பிடித்தால்?

*அடியவர் பதில்*:—-
அப்பொழுதும் மேல் நோக்கியே எரியும்

*சித்தன் பதில்*:—-
இதிலிருந்து என்ன புரிகிறது என்றால், அக்னியின் குணம், மேல் நோக்கி செல்வதே! அதனால் தான் சூட்ச்சுமமாக, பசியை ஒரு வியாதியாகவும், உண்கிற உணவை கர்ம தகனம், அதுவும் வயிற்றில் நடக்கிறது என்று சித்தர்கள் உரைத்தனர்.

"ஒரு சுற்று வட்டத்தில் எந்த திசை நோக்கி, அந்த மெழுகு திரியை பிடித்தாலும், அக்னி மேல் நோக்கிய பயணிக்கும். அதுபோல் நம் உடலுக்குள்ளும், அக்னியானது மேல் நோக்கியே செல்லும். மனித உடலில் மிக உறுதியான பாகம் மண்டையோடு. அதுவரை பயணித்த அக்னியானது, வழிந்து பிற இடங்களுக்கு செல்லும். இப்படி பயணித்துக் கொண்டிருக்கிற அக்னி, ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தியை கொடுத்துக்கொண்டே இருக்கும். அக்னியின் வேகம் கூடக்கூட ஒவ்வொரு உறுப்பின் தன்மை, உழைக்கும் வேகம் இவை மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.

*சித்தன் கேளவி*:—
அதே போல், நம் உடலில் மிக மிக மென்மையான ஒரு உடல் உறுப்பு என்பது கண்கள்தான். அக்னியின் வேகம் அதிகமாக, கண்கள் சிவக்கும், கண் பார்வை குறையும், மேலும் கவனிக்காமல் இருந்தால், கண்ணுள் இருக்கும் லென்ஸ் (Lens) முதலில் அடி வாங்கும். உடலின் அமைப்பை பொறுத்து, பெற்றுக் கொள்ளப்படும் அக்னியை பொறுத்து, இந்த லென்ஸ் ஆனது உள்வாங்கவோ, வெளியே வளையவோ செய்யும். இந்த குறையை நிவர்த்தி செய்யத்தான், Concave அல்லது Convex கண்ணாடியை போட்டு பார்வையை சரி செய்துகொள்கிறோம். உண்மை தானே?

*அடியவர் பதில்*:—
ஆம்

*சித்தன் கேள்வி*:—-
நிற்க! அக்னியை, திடீரென குளிர்வித்தால், அது நீராக மாறும் என்று உனக்கு தெரியுமா?"

*அடியவர் பதில்*:—
கேள்விப்பட்டிருக்கிறேன்

*சித்தன கேள்வி*:—
தினமும், எந்த தவறு செய்யும் பொழுது, இந்த அக்னி அழுத்தம் பெற்று உடலின் மென்மையான பாகங்களை பாதிப்படைய செய்கிறது, என்று யோசி, பார்க்கலாம்?" என்றார்.

*அடியவர்*:—
சற்று நேரம் யோசித்துப்பார்த்தேன். பிடிபடவில்லை.சற்று நேர அமைதிக்குப்பின் அவரே தொடர்ந்தார்.

*சித்தன் கேள்வி*:—
தினமும் குளிக்கும் பொழுது மனிதர்கள் செய்கிற தவறுதான் காரணம். என்ன செய்கிறார்கள்? தண்ணீர் தரும் குளிர்ச்சியை ஆனந்தமாக உணர, முதலில் தலையில் ஊற்றிக்கொள்கிறார்கள். பின்னர் மற்ற அவயவங்களை நனைத்து குளிக்கிறார்கள். இல்லையா?"

சித்தன் பதில் தொடரும்....

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************