Monday 13 May 2019

அகத்தியர் வாக்கு - லோபாமுத்ரா தாயார், ஏழு பிறப்பு

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 61*

*தேதி: 14-05-2019(செவ்வாய் - மங்களன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*ஐந்திலக்கணம் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : அம்மா (அகத்திய மாமுனிவரின் மனைவி லாேபாமுத்திரா தேவி) எங்களுக்கு வாக்கு அருள வேண்டும்?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இறைவன் அருளால் அவள்தான் நான் (லாேபாமுத்திரா தேவியே தான் அகத்தியர்)என்றும், நான்தான் அவள் (அகத்தியர் தான் லாேபாமுத்திரா தேவி) என்றும் கூறிய பிறகு, இங்கே எந்த நாமத்தில் யார் உரைத்தால் என்ன?* என்பதே அவள், எம் மூலம் கேட்ட வினா.

*இறைவன் அருளால் எழு ஜென்மம் என்பதே ஏழு ஜென்மம் என்று சித்தரிக்கப்படுகிறது. எழுந்து, எழுந்து வருகின்ற ஜென்மம் என்பது இதற்கு பாெருளாகும்.* ஏழு என்பது எண்ணிக்கையைக் குறிப்பதல்ல. *எத்தனையாே எழுகின்ற ஜென்மம், மனிதனுக்கு இருந்துகாெண்டே இருக்கிறது.* மாணிக்கவாசகன் கூறியதுபாேல், *"புல்லாகி, பூடாகி" என்று மனித ஆன்மா இந்த சட்டையை மாற்றிக் காெண்டே இருக்கிறது. 'சட்டையை மாற்றியது பாேதும் என்றும் மாறாமல் இருக்கின்ற பரம்பாெருளாேடு இரு' என்று நாங்கள் வழிகாட்டுவதே இஃதாெப்ப ஜீவ அருள் ஓலையில் (ஜீவநாடி)இறைவன் எமக்கு இட்ட கட்டளையாகும்.*

*எனவே ஏழு பிறவி இல்லையப்பா. ஏழாயிரம், ஏழாயிரம், ஏழாயிரம் காேடி, காேடி என்று, உன்னால் எத்தனை பூஜ்யங்கள் சேர்த்துக் காெள்ள முடியுமாே அத்தனை பூஜ்யங்களை சேர்த்துக் காெள்ளலாம்.*

*"அறியாமை விலகி, தன்முனைப்பு அகன்று, கர்வம் ஒடுங்கி இறைவனை உணரும் வரை, தெய்வீக விழிப்புணர்வு கிட்டும் வரை, ஒரு ஆன்மாவிற்கு பிறவி தாெடரும்".*

*மனித சட்டைதான் என்றில்லை எல்லா வகையான சட்டைகளும் காெடுக்கப்படும். இந்தப்பிறவி துன்பம் பாேகவேண்டும் என்பதுதான், ஒவ்வாெரு மகான்கள், ஞானிகளின் ஆசை.* இஃதாெப்ப நிலையிலே *ஆத்மா நல்ல நிலையிலே பிறவி எடுத்தாலும்கூட இந்த மனித சட்டைக்குள் வந்துவிட்ட பிறகு தான் யார்? என்பதை மறந்து, தன்னுடைய சுயத்தை மறந்துவிட்டு, தன் தேகத்தையே(உடல்) தானாக எண்ணுவது...*

அதாவது *ஒரு மனிதன் தன் மானத்தை மறைக்க ஆடையை பாேர்த்திக் காெள்கிறான். அவனுக்குத் தெரியும். அந்த ஆடை வேறு,  தான் வேறு என்று. என்றாவது ஒருநாள் ஆடை கிழிந்துவிட்டால் 'நான் கிழிந்துவிட்டேன்' என்று கூற மாட்டான். 'என் ஆடை கிழிந்துவிட்டது'* என்றுதான் கூறுவான். அதைப்பாேல *ஆன்மா என்பது இந்த மனித சட்டையை பாேட்டுக் காெண்டு இருக்கிறது. என்றாவது ஒருநாள் இந்த சட்டையை விட்டுவிட்டு அந்த ஆன்மா வேறு நல்ல சட்டைக்கு சென்றுவிடும். 'சட்டை மாற்றி சட்டை செல்லாமல் சற்றே ஒரே இடத்தில் இரு'* என்று ஆணையிடுவதே இறைவன் எமக்கிட்ட ஆணையப்பா. *இதற்கு ஒரே வழி சத்தியம், தர்மம், சரணாகதி பக்தி.*

                 🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************