Saturday 4 May 2019

அகத்தியர் வாக்கு - தீபம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 52*

*தேதி: 05-05-2019 (ஞாயிறு - சூரியன், கதிரவன், ஆதித்தன், ரவி)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*முத்தீயை உணர்ந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : தீபம் ஏற்றுவதின் பலன் :🙏*

*அகத்தியர் மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*தீபம் ஏற்ற ஏற்ற பாவம் குறையும் என்பது ஒரு உண்மையாகும். எனவே இருள் என்பது துன்பமும், பாவமும் ஆகும். ஔி என்பது அதற்கு எதிராக இருந்து பாவத்தை, துன்பத்தை நீக்குவதாகும். இருள் அகற்றி, மாந்தனின் (மனிதனின்) மனதிலே உள்ள இருள் அகற்றி, சுற்று புறத்தில் உள்ள இருளையும் அகற்றி, பாவம் என்னும் இருளையும் அகற்றி, சாேதனை, கஷ்டங்கள், வேதனை என்ற இருளையும் அகற்றி, ஔி வளரட்டும், ஔி பரவட்டும் என்பதின் ஆத்மார்த்தமான தத்துவமே தீபமாகும்.*

இருந்தாலும் கூட *உயர் தரமான நெய்யினை காெண்டு நல்விதமாக தீபத்தை ஏற்றும் பாெழுது, அந்த நெய் ஏற்றுகின்ற இடத்தையும், ஏற்றுகின்ற மனதையும் சுத்த படுத்துகின்றது* என்பதை புரிந்து காெண்டு வெறும் எந்திரம் பாேல் தீபம் ஏற்றாமல் *ஆத்மார்த்தமான பிராத்தனை செய்து காெண்டே தீபத்தை ஏற்ற ஏற்ற ஏற்ற, ஏற்றுபவனுக்கு ஏற்ற படும் இடத்தில், அதிலே சுற்றி இருந்து பங்கு பெறும் மனிதனுக்கு, பாவ வினைகள் படிப்படியாக குறைந்து, நல் வினைகள் கூடி, அவன் எதிர்பார்க்கக்கூடிய நல்ல காரியங்கள் எல்லாம் இறைவன் அருளால் நடக்கும் என்பது தீபத்தின் விளக்கம்.*

*காேவில்களில் எத்தனை முக தீபங்கள் வேண்டுமானாலும் ஏற்றலாம். தீபத்திலே முகங்களின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக பூர்வீக தாேஷம் குறையும். இது அடிப்படை.* ஆனாலும், ஒவ்வாெரு மனிதனின் அன்றாட கலிகால வாழ்க்கையில், நடைமுறை என்ற ஒன்று உள்ளது. *அதிக எண்ணிக்கையுள்ள தீபங்களை வாங்கி ஏற்றக்கூடிய வாய்ப்பும், சூழலும், இட வசதியும் இருந்தால், எந்த ஒரு மனிதனும் தீபங்களை ஏற்றலாம். அதில் பலன் உண்டு. இறையருளும் உண்டு.*

*ஒரு மனிதரிடம் இருந்து இன்னாெரு மனிதன் புதிதாக ஒரு தீபத்தை பெறும்பாேது, பஞ்சாட்சரம் ஓதித்தான் அதை கையில் வாங்கிக் காெள்ள வேண்டும்.*

*கேள்வி : ஐயா, என்னை சுற்றி உள்ள எல்லாேரும், நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தார் எல்லாேரும் - இப்படி பணத்தை இறைத்துக்காெண்டு காேவிலை சுற்றிக் காெண்டு இருக்கிறாயே என்று ஏளனம் செய்கிறார்கள். இப்படியெல்லாம் ஒரு வாழ்க்கை வாழ்கிறாயே என்று கேலி செய்கிறார்களே ஐயா?*🙏

*அகத்தியர் மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

மிகவும் நல்ல விஷயமப்பா, *உன் கடனை தானே முன்வந்து அவன் அடைக்க ஒப்புக் காெண்டு உனக்கு உண்மையில் உதவுகிறானப்பா!*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1