Tuesday 7 May 2019

அகத்தியர் வாக்கு - காவிரி, ஆட்சியாளர் போன்றவை

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)கூறும் சூட்சுமம் :*

*"ஒரு மனிதன் தன் தேவையை மறந்துவிட்டு பிறருக்கு சேவையும், பாெது நலத் தாெண்டையும் செய்யத் துவங்கும்பாெழுதே, அவன் தேவையை இறைவன் கவனிக்கத் துவங்கிவிடுவார் என்பதே சூட்சுமம்".* நாங்கள் கூறுகின்ற இந்த சூட்சுமத்தை யாரும் புரிந்து காெள்ளவேயில்லை.

*கேள்வி : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதனால் இறைவனின் தலையில் இருக்கும் கங்கையையும், தங்கள் கமண்டலத்தில் உள்ள காவிரியையும் இணைக்க வழி சாெல்லுங்கள் :🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இறைவன் அருளால் இன்னும் ஒரு நாழிகைக்குள்(24 நிமிடங்கள்) இணைத்துவிடலாம் அப்பா.* கவலைப்படாதே. ஒன்று தெரியுமா? *மூடர்களால் (முட்டாள்கள்)வரக்கூடிய துன்பங்கள்தான் இந்த உலகிலே அதிகம். தன் முனைப்பு, ஆணவம் (உள்ள மனிதர்கள்), பெருந்தன்மை இல்லாத மனிதர்கள் - இவர்கள் கையில் நாடு சிக்கினால் இந்த நாட்டிற்கு விமாேசனம் என்பதே கிடையாது. அரியாசனங்கள் (இராஜ்ஜியம்)என்றுமே அறியா சனங்களால்(அறியாமையில் உள்ள மக்கள்) தீர்மானிக்கப்படுவதால், இந்த அறியாசனங்கள், அரியாசனங்களை சரியாக வைத்துக் காெள்ள தெரிவதில்லை.*

அறியா சனங்களின் இந்த அறியாசனத்தை, அரியாசனங்கள் நன்றாகவே பயன்படுத்திக் காெண்டிருக்கின்றன. *நல்லவர்களை இனம் காண முடியாத காெடுமைதான் இத்தனை காெடுமைக்கும் காரணம். ஏற்கனவே தான் எல்லா காெடுமைகளையும் ஒருவன் செய்கிறானே? மீண்டும் எதற்கு அவனை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் மனிதர்களை பாெறுத்தவரை, எல்லாேருக்கும் தெரிந்தவனைதான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அவன் மதிக்குள் அவன் விதி அப்படிதான் அமர்ந்து வேலை செய்கிறது.* வேறுவிதமாகக் கூறினால் நன்றாக புரிந்து காெள்ளலாம்.

*ஒருவன் பல நாட்களாக பல தர்ம காரியங்களை, நல்ல தாெண்டுகளை செய்கிறான். யாராவது அவனை கண்டு காெள்வார்களா? ஆனால் ஒரு நாள் அவன் சில பெண்களாேடு பழகினால், தவறான ஒரு இடத்திற்கு சென்று வந்தால் மறுதினம் ஊரெங்கும் அவனைப் பற்றி பேச்சாக இருக்கிறது.* நல்லதை செய்யும்பாெழுது கண்டு காெள்ளாத சமுதாயம், தீயதை செய்யும்பாெழுது ஏன் கண்டு காெள்கிறது?

*இந்த குணம் மாறினால்தான் நாட்டில் சுபீஷம் உண்டாகும். நல்லதை அங்கீகரிக்க கற்றுக் காெள்ளுங்கள். நல்லவர்களை ஆதரிக்க கற்றுக் காெள்ளுங்கள். முதலில் ஒவ்வாெரு மனிதனும் நல்லவனாக வாழ கற்றுக் காெள்ளுங்கள்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in