Wednesday 29 May 2019

அகத்தியர் வாக்கு - கேள்வி பதில் - ஏகன், அனேகன் ஆன நிலை

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 76*

*தேதி: 29-05-2019(புதன் - கணக்கன்)*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*சுதேவனுடைய பிணம் தின்னும் சாபத்தை பாேக்கியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : அனைத்து பிரச்சனைகளுக்கும் கர்மாதான் காரணமாகிறது. இது மாயையால் மனிதனை பற்றுகிறது. அவதாரங்களாகவே இருந்தாலும் அவர்களையும் மாயை பற்றுகிறது என்று முன்னர் கூறியிருந்தீர்கள். மாயைதான் உயிர்களை பற்றுகிறது. அப்படி செய்வது இறைவன்தானே? இதற்கு பாெறுப்பு இறைவன்தானே? பிறகு ஏன் மக்களை தாக்க வேண்டும்?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இறைவன் அருளாலே நல்லதாெரு வினாவை இவன் எழுப்பியிருக்கிறான்.* எனவே அனைத்து பாவங்களும் இறைவனுக்கு சேர்ந்துவிடும் என்பதால் சேய்கள் அனைவரும் இனி பாவங்களை துணிந்து செய்யலாம். *இருந்தாலும் சிந்திக்க வேண்டிய வினாவைதான் இவன் எழுப்பியிருக்கிறான்.*

நன்றாக கவனிக்க வேண்டும். *மாயை மனிதர்களை பற்றுகிறது. ஏன்? ஒரு மனிதனிடம் நிலம் இருக்கிறது. அதிலே முறையாக விவசாயம் செய்கிறான். பயிர் விளைகிறது. சிலருக்கு பயிரைவிட களை அதிகம் விளைகிறது. 'இந்த நிலம் இருப்பதால்தானே நான் விவசாயம் செய்தேன். விவசாயம் செய்ததால்தானே களை வந்தது' என்று அவன் அலுத்துக் காெள்ளலாமா?*

நன்றாக கவனிக்க வேண்டும். *மாயை சென்று எல்லாேரையும் பற்றும் வண்ணம் அந்த உயிர்களின் கர்மவினை இருக்கிறது.* உயிர்களை இறைவன் ஏன் படைத்தான்? படைத்ததால்தானே உயிர்கள் எல்லாம் பாவங்கள் செய்தது என்ற அடுத்ததாெரு வினாவை ஏற்கனவே இவன் கேட்டிருக்கிறான். *அதாவது ஏகன்,  ஏகனாக இருந்துவிட்டால் பிறகு பிரச்சனையே இல்லையே?* ஏகன் எதற்கு அநேகனாக மாறினான்? என்று இவன் கேட்கிறான்.

*ஏகன், அநேகனாக மாறுவதற்கு முன்னால் அந்த ஏகனைப் பார்த்து யாராவது ஒருவர் 'நீ இப்படியே இரு. பல் கூறுகளாக பிரியாதே' என்று கூறியிருக்கலாம்.* ஆனால் அங்குதான் அப்படி கூறுவதற்கு யாருமில்லையே? *அப்படி யாராவது கூற வேண்டும் என்பதற்காகவாவது ஏகன், அநேகன் ஆகியிருக்கலாம் அல்லவா?.*

எனவே *'என்னை எதற்காக படைத்தாய்? படைத்ததால்தான் பாவங்கள் செய்தேன்'* என்று கூறுவதைவிட *'நான் பாவங்கள் செய்யாமல் இருக்கும் வண்ணம் என் மன நிலையை அமைத்துக்காெடு'* என்று பிராத்தனை செய்வது சிறப்பு அப்பா.

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************