Tuesday 28 April 2020

கடவுளை கண்டவர் மற்றவர்களுக்கு காண்பிக்க முடியுமா - ராமகிருஷ்ண பரமஹம்சர்

*ஒரு நாள் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பார்க்க டாக்டர் ஒருவர் வந்தார்...!!*
வந்தவர் கேட்டார்: ....    *“ஐயா நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?”*
*பரமஹம்ஸர் சட்டென்று பதில் சொன்னார்:*
*“ஓ....!*   *பார்த்திருக்கிறேனே...!!*
*காலையில் கூட தாயுடன் பேசினேன்”*
*“நீங்கள் பார்த்தது உண்மை என்றால் எனக்குக் காட்டுங்கள்”*

 என்று டாக்டர் பதிலுக்குக் கேட்டவுடன் ,

    *சுற்றி அமர்ந்திருந்தவர்கள் பரமஹம்ஸர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று,*

 ஆவலோடு காத்திருந்தனர்.

*பரமஹம்சர் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் கேள்வி எழுப்பிய டாக்டரிடம்,*
 
    *“நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்?”*
 என்று கேட்டார்.....!!

அவர் சொன்னார்:

      *“நான் டாக்டர் வேலை செய்கிறேன்”...!!*

*“டாக்டர் தொழில் உங்களுக்கு நன்றாகத் தெரியும் தானே...?”*

*“நன்றாகத் தெரியும்”*

“அப்படியானால்,
    *என்னை ஒரு டாக்டர் ஆக்குங்கள்”*

*“அது எப்படி....?*

*நீங்கள் டாக்டருக்குப் படிக்க வேண்டுமே....?”*

*“டாக்டராவதற்கே ஒரு படிப்பு வேண்டும் என்றால்,*

*கடவுளைப் பார்க்க ஒரு படிப்பு வேண்டாமா....?*

 *நான் அதைப் படித்திருக்கிறேன்.*

*நீங்களும் அதைப் படித்தால் கடவுளைக் காணலாம்”*

*என்று பரமஹம்சர் நெத்தியில் அடிப்பது போல அவருக்குப் பதில் சொன்னார்.*

*டாக்டர் அதிர்ந்துபோய் விட்டார்.*

*மற்றவர்கள் வியந்து மகிழ்ந்தனர்....!!*🙏🌹

No comments:

Post a Comment