Saturday 30 May 2020

நமது ஆசிரம விளக்கம்

*இன்று பொகளூர் அகத்தியர் ஜீவ அருள்நாடி சித்தர் பீடத்துக்கு பயணம்*

குருவருள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றெல்லாம் பீடத்துக்கு போகிறோமோ அன்றெல்லாம் மிக நல்ல நாள் புண்ணிய நாள், சிறப்பான நாள், அய்யன் இருக்குமிடம் நாம் தொடர்ந்து செல்ல செல்ல, அய்யன் நாம் இருக்குமிடமான இந்த கூட்டுக்குள் வந்திருந்து வழிகாட்டி வழிநடத்தி, காத்து நின்று, அருள் பொழிந்து, ஆட்கொண்டு,  அமர்ந்து அருள் பாலிப்பார் என்பது திண்ணம்.

அய்யன் அருளால் விரைவில் இங்கோர் ஆலயம் அமைய வேண்டும். அதற்க்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஆலய தொண்டில் ஈடுபட்டு வழிவழியாக நம்  வம்சம் அனைத்தும் அய்யன் அருட்கடாட்ச பார்வையில் தழைத்தோங்க வேண்டும்.

ஆன்மீக இந்த பூமியில் தழைக்க தகுந்த இடம் வேண்டும்.

கோயில் கட்டி சாமியை அங்கே எழுந்தருளப்பண்ணுவதென்பது வேறு, இறைவன் குடி கொண்டுள்ள இடத்தில் கோயிலெழுப்பவதென்பது வேறு.

நாம் செய்வது இரண்டாவது ஆகும்.

சுயம்பு லிங்கத்தின் மெல் கோமாதா பால் பொழிவதும், அங்கே அதை கண்டு இறை ஆலயம் எழுப்புவதும் இரண்டாம் வகை. சரித்திரத்தில் அவ்வகை ஆலயங்கள் பல உள்ளன.

ஆனால் இறைவன் அமர்ந்து வாக்காக வெளிப்பட்டு. சிஷ்ய கோடிகளை உருவாக்கி பரிபாலனம் செய்வது என்பது மிக பெரிய விஷயம்.

நமது பீடம் என்பது சாதாரண பீடம் அல்ல. இந்த கலி காலத்தில் ஒரு சிறு நதியோரம், அகத்தியர் இன்றும் ஆசிரமம் அமைத்து வரும் பக்தர்களுக்கும் சிஷ்யகோடிகளுடனும் உரையாடி பேசி அறிவுரை கூறி சீடர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு நன்னெறிகளை போதித்து சித்தர்களாக உருவாக்கும் உண்மையான சித்தாஸ்ரமம்.

இதெல்லாம் யாருக்கு புரிகிறது.  நீங்கள் செல்லும் இடம் அய்யன் அமர்ந்துள்ள ஆசிரமம். அங்கே பணி செய்பவர்கள் ஆசிரம சீடர்கள். எவ்வளவு புனிதம்...


2 comments:

  1. விரைவில் அய்யன் தரிசனத்திற்கு வருகின்றேன்

    ReplyDelete