Friday 8 May 2020

ஆவணியாபுரம் 🦁லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் தரிசனம்

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை  சூழலில் எழில் கொஞ்சும் மிகவும் பழமையான தலம் 🔥ஆவணியாபுரம் 🦁லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் தரிசனம்....

🔥மூலவர் : சீனிவாசப்பெருமாள்
🔥தாயார் : அமிர்தவல்லி
🔥ஊர் : ஆவணியாபுரம்
🔥மாவட்டம் : திருவண்ணாமலை

🦁பக்தன் பிரகலாதனின் அபயக்குரலுக்கு நொடிப்பொழுதில் அவதரித்த இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்ய அவதரித்தார் நரசிம்மர்.

🦁தன் இரண்யகசிபுவை வதம் செய்தபின்னும் உக்கிரம் தணியாத நரசிம்மரை கண்டு அஞ்சிய பிரகலாதன், நரசிம்மரை நோக்கி பாடல் பாடி, லட்சுமி தேவியுடன் சாந்த சொரூபத்தில் காட்சியருள வேண்டி,  தரிசனம் பெற்றார்.

 🦁பிரகலாதனுக்கு கிட்டிய லட்சுமி நரசிம்மர் தரிசனத்தை தங்களுக்கும் கிட்டவேண்டுமென  திருமாலிடம் தேவாதிதேவர்கள்  வேண்டி நின்றனர்.  திருமால், 'அவணி நாராயணபுரம்' என்னும் சிம்மாசல மலையில் வெப்பாலை மரங்களாய் நின்று தவம் செய்யும்படியும், பிருகு மகரிஷியோடு  சேர்த்து தேவாதி தேவர்களுக்கும் தரிசனம் தருவதாகக் கூறியருளினார். 

🦁பிருகு  மகரிஷியோடு தேவாதிதேவர்களின் தவத்துக்கு மனமிரங்கி, சுவாதித் திருநாளன்று, பிருகு முனிவருக்கு ஓராயிரம் சூரியன் சுடரொளியாய் லட்சுமி நரசிம்மர் காட்சி தந்தார். 🔥இதனால் மனம் மகிழ்ந்த பிருகு முனிவர், ‘இத்தலத்தில் நின்ற, கிடந்த கோலத்தையும் காட்டியருள வேண்டும்’   என வேண்டி நின்றார். அதன்பின்னர், அதன் பொருட்டு மலையுச்சியில்

🦁திருப்பதி வெங்கடேசப் பெருமாளாகவும்,
🦁காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளாக, 🦁ஸ்ரீரங்கம் ரங்கநாதராக,
🦁சோளிங்கர் யோகநரசிம்மராக திருக்காட்சி அளித்ததன்மூலம் பஞ்ச திருத்தலம் ஒரு சேர உருவானது.

🦁மேலும், பிருகு முனிவரின் விருப்பத்திற்கிணங்க, லட்சுமி நரசிம்மர் தமது வலக்கரத்தால் ஒரு தீர்த்தத்தினை உருவாக்கினார். 🔥அதன்பெயர் ‘பாகூ நதி’. இது சேயாற்றோடு கலக்குது.

 🦁இத்திருக்கோவில்
🔥தட்சிணா சிம்மாசலம்,
🔥தட்சண சிம்மகிரி,
🔥பஞ்சதிருப்பதி,
🔥ஆவணி நாராயணபுரம் எனவும் அழைக்கப்படுது.

🦁அமைவிடம்
🔥ஆரணில இருந்து 12கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
🔥வந்தவாசில இருந்து 26 கிமீ,
🔥செய்யாறுல இருந்து 25கிமீ,
🔥சேத்பட்ல இருந்து 30கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. 

🦁இம்மலை  வடக்கு தெற்காக சிங்கம் ஒன்று படுத்திருப்பது மாதிரி காட்சியளிக்கும்.  🔥கிழக்கு நோக்கி இருக்கும் இந்த ஆலயம் சுமார் 110 படிகளை கொண்டது.  இது பல்லவர்காலத்தைய கோவிலாகும்.

🦁மலையின் பாதி தூரத்தை கடந்ததும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தினை தரிசிக்கலாம். 

🦁அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார் நரசிம்மர்.

🔥கருவறையின் எதிரினில் இரண்டு கருடாழ்வார்கள் உள்ளனர். இருவரில் ஒருவர் சிம்ம முகத்துடன் இருக்கின்றார். இடப்புறம் லட்சுமி தேவியும் சிம்ம முகத்துடன் காட்சி தருகிறாள். 

🦁அழகான பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கான்னு சொல்வாங்க. ஆனா, அந்த மகாலட்சுமியே இங்க சிங்க முகம் கொண்டு இருக்க என்ன காரணம்ன்னு தெரிஞ்சுப்போம்.

🦁சிறப்பு

🔥பிரம்மா நாராயணனைக் குறித்து யாகம் செய்தபோது, யாகத் தீயிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்டாராம். 🔥அப்போது அவர் முகமற்று இருந்ததைக் கண்ட தாயார் மஹாலஷ்மி, முகமில்லாது பக்தர்களுக்கு எவ்வாறு தரிசனம் அளிப்பது என்று கேட்டு நரசிம்மரின் சிங்க முகத்தை தமக்கு அளிக்குமாறு வேண்ட, அவ்வாறே சிங்க முகம் பெற்றதாகச் சொல்றாங்க.

🔥அதன்படி அறுபது வருடங்களுக்கு ஒரு முறை சர்வதாரி வருடத்தைய  ஆனி மாதம் ஒன்பதாம் நாள் தாயாருக்கு சிங்க முகம் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது.

🦁தெற்கு நோக்கிய பஞ்ச நரசிம்மர்

🔥இக்கோவிலில் மொத்தம் 9 நரசிம்மரை தரிசிக்கலாம், மூலவரான 🔥லட்சுமி நரசிம்மர், 🔥உற்சவர், மற்றொரு 🔥சிறிய உற்சவர், 🔥பஞ்ச நரசிம்மர், மலைமீதிருக்கும் 🔥யோக நரசிம்மர் என மொத்தம் 9 நரசிம்மரை இங்கு தரிசிக்கலாம்.

🦁இது தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படுகின்றனர்.  இங்கு வழிபடுவதன்மூலம் இரண்யவதம் நடந்த அகோபில மடத்தை வழிப்பட்டதன் பலன் கிடைக்கும்.

🦁திருப்பதி அமைப்புப்படியே மலைமேல்  சீனிவாசப்பெருமாள் இருக்க, கீழ்ப்புற கோவிலில்  அமர்ந்த கோலத்தில் அலர்மேலு தாயார் வீற்றிருக்கிறார்.

🦁அங்கிருந்து மலை ஏறினால், ஒரு பெரிய பாறையின்மேல்  பலிபீடம், கொடிமரத்தோடு கூடிய ஆலயத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் சீனிவாசப்பெருமாளை காணலாம்.

🦁திருப்பதி சீனிவாசப்பெருமாளை ஒத்த உருவ அமைப்பு.. ஜருகண்டி, ஜருகண்டின்னு கழுத்தில் கைவைத்து தள்ள ஆள் இல்லை.

 🦁சனிக்கிழமைலதான் ஸ்வாமி ரொம்ப பிசியா இருப்பார். மத்த நாட்களில் தனியாதான் இருப்பார். போய் பேசிக்கிட்டிருக்கலாம்.

🦁ஸ்ரீரங்கத்து ரங்கப்பெருமாள்
சீனிவாசப்பெருமாளை தரிசனம் செஞ்சுட்டு பிரகாரத்தை வலம் வருகையில் பாறையை குடைந்து குடவறை கோவில் இருக்கு.

🦁அதுக்குள் போனால்,

🔥ஸ்ரீரங்கத்து ரங்கனையும்,
🔥காஞ்சிபுரம் 🔥வரதராஜப்பெருமாளையும், 
🔥சோளிங்கப்புரத்து யோக நரசிம்மரையும் தரிசிக்கலாம்.

🔥அமிர்தவல்லி தாயார்

🔥எல்லா கோவில்களிலும் தல தீர்த்தம் கோவில் அருகிலேயே இருக்கும்.ஆனா இத்தலத்து புண்ணிய தீர்த்தமான பாகூ நதி இக்கோவிலிலிருந்து ஒரு கிமீ தூரத்திலிருக்கு.  வயல்வெளிகள் சூழ்ந்த இடமென்பதால் இயற்கை பேரழகு கொட்டிக்கிடக்கும்.    வைகானச ஆகம விதிப்படி அமைந்த வடகலை கோவில் இது.

🦁திருவிழா

🔥சித்திரைப் பவுர்ணமியில் கொடியேற்றத்தோடு  தொடங்கி பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைப்பெறும்.

 🦁சித்திரை சுவாதியில் நரசிம்மர் ஜெயந்தி, ஆவணியில் கிருஷ்ணஜெயந்தி, புரட்டாசி மூன்றாம் சனியன்று பெருமாள் கருடசேவை, ஐப்பசியில் தீபாவளி திருமஞ்சனம், கார்த்திகை தீபம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, தையில் காணும் பொங்கல், மாசி மகம், பங்குனி உத்திரம் என விழாக்களுக்குக் குறையில்லை.

🦁 மாத சுவாதி நரசிம்மருக்கும், திருவோணம் ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கும் உகந்த நாள் என்பதால் அன்றைய தினமும் விசேச அபிசேக ஆராதனை உண்டு.

🦁பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலை கிரிவலம்போல இங்கயும் கிரிவலம் வருவது வழக்கம். இது மலைன்னு சொல்லுறதைவிட குன்றுன்னு சொல்லலாம்.

🦁இந்த குன்றின்மீது, சரியாக சொல்வதென்றால் சீனிவாசப்பெருமாள் கோவில் இருக்கும் பாறையை குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்த்தால் சிங்கமுகம்போல காட்சியளிப்பதால் இந்த மலைக்கு சிம்மாசலம்ன்னு பேரு.

🦁நடை திறப்பு நேரம் :
  🔥தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும்,
🔥மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும்  இக்கோவில் திறந்திருக்கும்.

🦁சனிக்கிழமைகளில் 
🔥காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும்,
🔥மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.

No comments:

Post a Comment