Monday 18 May 2020

தினம் ஒரு திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் # 810 : மூன்றாம் தந்திரம் - 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்

காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்

பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்

கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலுமாமே.

விளக்கம் :

சிவனை மனதில் உணர்ந்து வழிபாடு செய்தவர்களின் அறியாமையை சக்தி ஒலி ஒளி வடிவாக வந்து சுட்டெரித்து வெளிப்படுவாள். கேசரி முத்திரையினால் அந்த ஒளி ஒலிகளில் மனத்தைப் பதித்து அதன் மீது தியானம் செய்தால் அந்த யோகியின் உடலே ஓர் கோயிலாகி விடும்.

No comments:

Post a Comment