Thursday 7 May 2020

GMCKS அவர்களை தொடர்பு கொண்டு வாக்கு உரைக்குமாறு நேற்று கேட்டேன். அதற்கு அவர் உரைத்ததாவது –


கிருஷ்ண குமார் அவர்களுக்கு - அடியேனின் ஒரு சிறிய முயற்சி. GMCKS அவர்களை தொடர்பு கொண்டு வாக்கு உரைக்குமாறு நேற்று கேட்டேன். அதற்கு அவர் உரைத்ததாவது

எனது சீடர்கள் பாரெங்கிலும் இருக்கிறார்கள். அவர்களை யாம் சிறந்த முறையில் வழி நடத்தி வருகிறோம். நீ அவர்களை தொடர்பு கொண்டு எம்மை பற்றி அறிந்து எம் வழியில் வந்தால் யாம் உம்மையும் வழி நடத்துவோம்.

எம் வழி எது என்றால் அது சித்தர்கள் வழியே.

சுய லாபம் சிறிதும் இன்றி உலக பொது நன்மைக்காகவும் அமைதிக்காகவும் எல்லோரும் இன்புற்று இருக்கவும் செய்வதே யாங்கள் சித்தர்கள் அனைவரது நோக்கமும்.

அவ்வழியிலே  நாங்கள் வானுலகில் இருந்து அருள் புரியும் போது மாந்தர்கள் யார் யார் பொது நலனுக்காக வேண்டி நிற்கிறார்களோ அவர்களுக்கே அருளும் நிலையில் நாங்கள் உள்ளோம்.

எம் வழியில் வரும் சேய்கள் அனைவருமே பொது நலன் பொது அமைதி பொது சுதந்திரம் பொது பாதுகாப்பு பொது நன்மை பொது வாக்கு பொது நிம்மதி ஆகியவற்றை இவ்வுலகில் கொணர்ந்து இவ்வுலகையே பெரும் அமைதியும் மகிழ்ச்சியும் கொண்ட இடமாக மாற்ற வேண்டும்.

கோபம் பொறாமை வன்மம் ஆசை மோகம் ஆகியவற்றை ஒழித்து நற்குணங்கள் மற்றுமே பெருகி இவ்வுலகில் நிறைந்து நிற்க வேண்டும்.

இதில் உள்ள மற்றொரு சூக்ஷுமம்  என்னவென்றால் பொது நலனையே மாந்தர்கள் கருதும்போது சுயநலனும்தான்” என்ற அகந்தையும் தாமாகவே எந்த முயற்சியும் இல்லாமல் அழிந்து எங்களது அருளை பூரணமாக பெற வழி வகுக்கும்.

பொது நலனை பேணுபவர்கள் அவர்களது நிறை குறைகளை வாழ்க்கையின் சிரமங்களை யாம் ஏற்று நன்மை புரிந்து காத்து அருள்வோம். ஆசிகள் - சுபம்.




3 comments:

  1. ஐயா இவர் யார் எங்கு உள்ளனர் இவரின் சிறப்பு என்ன என்று தெரிந்து கொள்ள ஆவல்....

    கோபம் பொறாமை வன்மம் ஆசை மோகம் இவைகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமே

    ReplyDelete
  2. கிராண்ட் மாஸ்டர் சோவா கோக் சுயீ ஒரு சித்தர். அவர் தற்போது உடலுடன் இல்லை. அவர் தம் கலைகளை சீடர்கள் மூலம் உபதேசம் செய்து உள்ளார். இந்த இயக்கம் உலகும் முழுவதும் கிளைகள் கொண்டு உள்ளது.பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நான் பல வருடம் முன்பு 2 level முடித்து உள்ளேன். More details contact my friend krishna kumar 9842203037

    ReplyDelete
  3. தகவல்களுக்கு நன்றி ஐயா

    ReplyDelete