Tuesday 19 May 2020

கருட பத்து

கருட பத்து

ஓம் பூரணனே பதிணாறு திங்கள் சேரும் பொருந்தியே யருக்கன்பதி னெட்டுஞ் சேரும்
காரணனே கருமுகில் பொன் மேனி சேரும் கருணை பெரு மஷ்டாட்சரங் கலந்துவாழும்,
வாரணனே லட்சுமியோ டெட்டுஞ் சேரும் மதிமுகம் போல் நின்றிலங்கு மாயாநேயா,
ஆரணனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!                         1

வந்திரமோ அஷ்டசித்து மெட்டுஞ் சேரும் வாழ்கிரக மொன்பது வந்துசேரும்,
கந்திருவர் கணநாத ராசி வர்க்கம் கலைக்கியான நான் வேதங்கலந்து வாழும்
நந்தி முதல் தேவர்களுங் கவன யோகம் நமஸ்கரித்துன் பாதம் நாளும் போற்ற
அந்தரமாய் நிறைந்திருக்குங் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!         2

மூலமுதலோ ரெழுத்து நீர்தானாகும் மூன்றெழுத்து மைந்தெழுத்து மொழியலாமோ,
சீலமுதல் ஓம்-அங்-உங்-மங்-றிங் கென்றே சிவனுடைய திருநாமம் நீர்தானாகும்
காலமுதல் ஓம்-அங்-உங்-மங்-றிங் கென்றே கருணை பெரு மிவ்வெழுத்து நீர்தானாகும்
ஆலவிஷங்கையேந்துங் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!               3

நவ்வென்றும் கிலியென்றும் ஓம்சிவாயமென்றும் நமநம சிவசிவ ராரா வென்றும்
சவ்வென்றும் ஓங்கார ரீங்கார மாகித் தவமுடைய விவ்வெழுத்தும் நீர்தானாகும்
ஓவ்வென்று ஓம் நமோ நாராயணா வென்று உன்பாத முச்சரித்துகந்து போற்ற
அவ்வென்று ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!                     4

உதிக்கின்ற சிவசொரூபமுனக்கே யாகும் ஓம்-அவ்வும்-உவ்வுங்கிலியும் மென்றே
பதிக்கிசைந்த ஐந்தெழுத்தை வெளியில் விட்டே பச்சை முகில் மேனியனே பணிந்தேனுன்னை
விதிக்கிசைந்த மெய்பொருளே அரிகோவிந்தா விளக்கொளிபோல் மெய்த்தவமே
                                                   விரும்பித் தாதா
அதற்கிசைந்த நடம்புரியுங் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!              5

வேதமுதலாயிருந்த சிங்க ரூபம் விளங்குகின்ற விரணியனை வதையே செய்தாய்
பூதமுதலாம் பிறவும் புண்ணிய நேயா புகழ்ந்தவர்க்குத் துணைவருவா யசோதை புத்ரா
நாதமுதல் விந்துவாயுயிருக் கெல்லாம் நயம் பெறவே நிறைந்திருக்கும் வரத பிர்ம
யாதவன் போல் நிறைந்திருக்கும் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!    6

முக்கோணம் நாற்கோண மொழிந்தைங் கோண முச்சுடரே யறுகோண மெண்கோணமாகும்
சட்கோண நாற்பத்து முன்று கோணம் தந்திரமுஞ் சிதம்பரமுஞ் சகல சித்தும்
இக்கோண மிதுமுதலா வதார மட்டும் இறைய வனாய்த் தானிருந்து ரட்டித்தாலும்
அக்கோண மீதிருந்து கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!              7

பச்சைமுகில் மேனியனே யுனக்கே யிந்தப் பார்தனிலே பத்தவ தார முண்டு
மச்சமென்றும் கூர்மமென்றும் வராகமென்றும்  வாமனென்றும் ராமனென்றும்
                                                   பவுத்தனென்றும்
துஷ்டரை யடக்க மோகினி வேடங் கொண்டாய் தோன்றினா யுன்சொரூப மெல்லாம்
                                                   அறிவாருண்டோ
அச்சந்தீர்த்தெனையாளக் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!          8

வேதியனாய் தோன்றி வந்தாய் மாபலிக்கு விண்ணவர்க்காய் நரசிங்க ரூபமானாய்
சாதியிலே யாதவனாய்க் கிருஷ்ணனாகத் தானுதித்து வந்திருந்தாய் தரணி வாழ்க
சோதனைகள் பார்த்திடுவோர் துதிப்போர் தம்மைத் துஷ்டரையும் வதை செய்து
                                                   லோகமாள்வாய்
ஆதிமுதலோரெழுத்தே நீ கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!         9

மாயாவனே ரகுராமா அருகே வாவா வஞ்சனைகள் பறந்தோடநெஞ்சில் வாவா
காயாம் பூ நிறமுடனே கனவில் வாவா கருமுகில் மேனியனே என் கருத்தில் வாவா
நாயகனே யென்னாவி லிருக்க வாவா நாள்தோறு முன்பாதந் துதிக்க வாவா
ஆயர்குலத்துதித்தவனே கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!         10

முப்புரத்தை யெரித்தவனே யிப்போ வாவா முகில் நிறனே ஜகநாதா முன்னே வாவா
எப்பொழுதுந்துதிப்பவர் பங்கில் வாவா ஏழைப்பங்கிலிருப்பவனே யிறங்கி வாவா
ஒப்பிலா மணிவிளக்கே யொளிபோல் வாவா ஓம் நமோ நாராயணாவுகந்து வாவா
அப்பனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!                    11

துளபமணி மார்பழகா சுகத்தைத் தாதா சுருதியே மெய்ப்பொருளே வரத்தைத் தாதா
களபகஸ்தூரியனே கடாட்சந் தாதா, கஞ்சனைமுன் வென்றவனே கருணை தாதா
பழம்பொருளே சிவஜோதி பாக்கியந் தாதா பத்திமுத்தி சித்திசெய்யவுன்பாதந் தாதா
அளவிலா மெய்பொருளே கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!       12

2 comments:


  1. முக்கோண நாள் கோணம் ஐங்கோண - இப்பாடலின் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
    ஓம் நமோ நாராயணா!

    ReplyDelete
  2. அண்ணா,மன்னிக்கவும். எனக்கு தெரியவில்லை அண்ணா. குருஜி இடம் ஜீவ நாடியில் கேட்கலாம்.

    ReplyDelete