Sunday 3 May 2020

ஆகாயத்தில் இறைவன் ஜடாமுடியை விரித்துபோட்டு மிகவும் கூர்ந்து பூமியில் எங்கேயோ பார்ப்பது போன்ற தோற்றம் மேகத்தில் காணப்பட்டது

சிவனருள்!
சித்தன் அருள் தொடரை வாசித்த நிறைய அன்பர்கள் இறை தரிசனத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று ஊக்கமூட்டினர்/ கேட்டுக்கொண்டனர்.  எனது நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்ட ஒரு தொடுப்பை கீழே தருகிறேன்.  சென்று பாருங்கள்.  ஆச்சரியமூட்டும் வீடியோ.  நான்கு நண்பர்கள் ஒரு மஹா சிவராத்திரி அன்று சுவாமி தரிசனத்துக்காக கோயிலுக்கு சென்றனர்.  திடீரென்று மின்னல் வெட்டி இடி முழங்க நிமிர்ந்து பார்த்தவர்கள் அசந்து பொய் விட்டனர்.  ஆகாயத்தில் இறைவன் ஜடாமுடியை விரித்துபோட்டு மிகவும் கூர்ந்து பூமியில் எங்கேயோ பார்ப்பது போன்ற தோற்றம் மேகத்தில் காணப்பட்டது.  கையில் செல் இருந்ததால் அதனை உடனே படம் பிடித்தனர்.  பகிர்ந்து கொண்டனர்.  வீடியோவை பார்த்தால் அதில், இரு விழிகள், இமை, புருவம், மூக்கு, உதடுகள், வாய், மூன்றாவது கண் இவைகள் தெளிவாக தெரிகிறது.  வீடியோ க்வாலிட்டி சற்று குறைவானாலும், இதை போன்ற ஒரு ஒளி நாடாவை நான் பார்த்ததில்லை.  கண்டு ஆனந்தப்படுங்கள்.  ஒரு முக்கியமான விஷயம்! இதில் கிராபிக்ஸ் வேலை எதுவும் செய்யப்படவில்லை.  ஒலி மட்டும் சேர்த்திருக்கிறார்கள்.


1 comment: