Monday 18 May 2020

திருக்குறள் : தமிழ் நிலை விளக்கம்

திருக்குறளில் மிக ஆழமான அர்த்தங்கள் புதைந்து உள்ளன...

அதனை உணர்பவர்கள் ஒரு சிலரே.

என்னுடய ஒரு சிறு முயற்சியாக சில விளக்கங்களை கொண்டு வர ஒரு முயற்சி அவ்வளவே.

திருக்குறள் : தமிழ் நிலை விளக்கம்

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

தேறுதல் - தேர்ச்சி பெறுதல்

தேர்ச்சி - வெற்றி பெறுதல், அடைதல், சேருதல்

தேர்வு - முடிவு,

தேறர்க யாரையும் - யாரையும் தேர்வு செய்ய வேண்டாம்

தேராது தேர்ந்த பின் - யாரையும் தேறாத நிலையில், தேர்வு ஏற்படும், அது எப்படி, யாரையும் தேற வேண்டாம் என்கிறார். அப்படி தேர்ச்சி செய்யாத நிலையில், தேர்ந்த பின்.... என்று பொருள். யாரையும் தேறாது இருக்க வேண்டும், யாரையும் தேறாத நிலையில் நாம் தேர்ந்த பின்.....

தேறுக தேறும் பொருள் - தேறும் பொருளை தேற வேண்டும். அது எவ்வாறு... தேறும் பொருள்... த்+ஏறும் பொருள்... த்..தன்னிலை .....ஏறு - உயர......உக - தன்னிலை உயர்ந்த நிலையில் அங்கே உய்த்து இருக்கும். எது உய்த்து இருக்கும்... தேறும் பொருளே அங்கே உய்த்து நிறைந்து இருக்கும்.

தேறும் பொருள் என்பது நாம், நமது உயிர். உயிர் ஆனது, மற்ற எல்லா வித நிலைகளையும் விட்டு தன்னிலையில் லயித்து உயர வேண்டும். அங்கே நாம் இருக்க மாட்டோம். தேறும் பொருள் ஆகிய அனுபவமே உயிர் நிலையே உயர்ந்து நிற்கும். அதுவே தமிழ் நிலை ஆகும். பொருள் இல்லாத வாழ்க்கையில் பொருளாக வேண்டுமானால், எல்லா பொருள்களையும் தேராமல் இருக்க பழகி கொண்டு அந்த நிலையில் தன்னிலையை அடைந்து, நிலை உயர்ந்து, தேறும் பொருளே நாமாகி இருப்பதுவே தமிழ் நிலை.

தி. இரா. சந்தானம்
கோவை, 19.05.2020

***********************************


குறள் 509:
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.


மு.வரதராசன் விளக்கம்:
யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.


சாலமன் பாப்பையா விளக்கம்:
எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.


சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
ஆராயாமல் யாரையும் தேர்ச்சிப் பெற்றவராக ஏற்கக் கூடாது. தேர்ந்தெடுத்தப் பின்பு தேர்ச்சிப் பெரும் பொருள்களைக் கேட்டு தெளிய வேண்டும்.


English Couplet 509:
Trust no man whom you have not fully tried,
When tested, in his prudence proved confide.


Couplet Explanation:
Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.


Transliteration(Tamil to English):
theRaRka yaaraiyum thaeraadhu thaerndhapin
thaeRuka thaeRum poruL


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:
அகம் சார்ந்த அறமும், புறம் சார்ந்த பொருளும், நிலையான இன்பமும். உயரின் தன்மையும் அச்சமும் என நானகையும் தெரிந்து தேறுவதையே தெளிவு எனலாம். நல்ல சுழலில் பிறந்தாலும் குற்றம் அற்றவனாக வாழ்வதே தெளிவு. அரியன கற்பதைக் காட்டிலும் தன் குற்றத்தை நீக்குவதை தெளிவு. குணம் குற்றம் சீர்தூக்கிப் பார்த்து மிகையானதை எடுத்துக் கொள்ள வேண்டும். தேராதவரின் பின் சென்றால் தாராத துன்பம் விளையும். தேறியவரின் ஐயமும் தேராதவரின் தெளிவும் தீராத துன்பம் தரும்.


No comments:

Post a Comment