Friday 29 May 2020

ஏன்னுள்ளெழுந்த பாடல்

ஒரு பாடல் மனதில் வந்துதித்து குதித்தெழுந்து எழுத்துருவாய் உருப்பெற்று ஏழுந்து நின்ற இடம் கீழே
👇👇👇👇👇👇👇

கருமுகிழ்தண்ணில் சிறுமுகில் எதுவோ
வானவர் கண்ட மருந்தோ
உலவிடும் காலை உடைக்குமிடமெதுவோ
செவிமடித்திடுமோ செய்வினை தீர
விழிமறுகி பொருளுருகி பரவெளியில் பறந்திடுமோ நிலைத்திடிமோ
அருளுலகில் இவன் நுழைய
பரகதியை இவன் அடைய
கரமதனில் காலுயர்த்தி நின்றாடும் அம்பலத்தே
அகமகிழ்ந்து அருளுலகில் இவனடைந்த நிலையை
எடுத்தியம்ப எவர்வல்லர்
சடுதியினில். வந்துதிக்கும் சங்கரனார் திருவடித்தான்
மயிலேறி அவன் பறக்க தமிழ் சிறக்க அமுத மொழியாய்
வரும் திங்கள் செவ்வாயில் வந்துதிக்கும் வேலவனே
அருள்தனயே தரும் நீரும் திருநீறும் சேர்ந்ததுவே
பொருளுலகில் அகப்பட்டார் கேள்வியென்ன
பலத்திசைகள் பலவகைகள் பலவாறெண்ணி
போகுவோர் தன்னில் உட்புகுத்தி
எரிதனிலே வேகுமது காயம்
இனிமேல்தான் மற்றவையும் ஆரம்பமாச்சே
கயல்விழியும் தனி உடலாய் ஒன்றி நின்று
மானோடு கூடி மக்களுமாகி
சிக்கலுமாகி சிலிர்த்திட்ட வாழ்வு தன்னை
உரைத்திட்ட சம்பவங்கள் தொகுப்புமாகி
கலந்திட்ட கனலோடு இருப்புமாகி
எடு வேலை இவனுலகில் நித்தமுஞ் சொன்னேன்
பகலிரவு நீக்கமுற பால்வெளியில் பறந்திட வேண்டும்
கயிலையில் வாழுமென்னீசன்
திருத்தாள் போற்றி பணிந்திட்டால்
ஜெகமதுவும் சுருங்கியுள்ளே கைக்குள்ளடக்கம்
பாரினிலே ஜீவ ஜோதி ஒன்றே போதும்
பல நிலைகள் கடந்துமே சேர  வைக்கும்
திகம்பர ஜோதியதை கண்டுநீயும்
திக்கெட்டும் முறைகண்டும் வகுத்துப்பாரும்
அருள்நிறையே அருள்நிறையே அருள்நிறையே

இவநுடற்ப்பெயர்
- தி. இரா. சந்தானம்

இவனாத்மனின் இடமடையாளம் அகத்தியம்.

No comments:

Post a Comment