Thursday 28 May 2020

கலிகாலம்

கலிகாலம் :                              பரிட்ஷித் மகாராஜா கலியை பார்த்து சில கேள்விகள் கேட்கிறார்.இது தர்ம சாஸ்திரத்தை நிலை நிறுத்தும் பூமி. உனக்கு இங்கு இடமில்லை.என் நாட்டை விட்டு வெளியே போ?. கலி நிதானமாக பதில் சொல்கிறார்.நான் ஏன் வெளியே போகவேண்டும்.என்னை சிருஷ்டி செய்தவர் பகவான்.கிருத யுகம்,திரேதா யுகம்,துவாபர யுகத்தை யார் சிருஷ்டித்தார்களோ அவரை போய் கேட்டு விட்டு வா.அவரே தான் அடுத்து கலியுகம் ஆரம்பிக்கும் என்கிறார்.அவரை போய் கேட்டு விட்டு வா. பிறகு போகிறேன்.பாம்பு கடிக்கும் போது பாம்பை ஏன் அடிகிறீர்கள்? பாம்பு என்ன தவறு செய்தது.சிருஷ்டி செய்தவர் பகவான்.அதனால் கலி புருஷன் ஆகிய என்னை கேள்வி கேட்காதே.பகவானைக்கேள்.  அப்படி என்றால்? பரிட்ஷித் கேட்கிறார். அப்படி என்றால் அப்படி தான் .                                        அழுத்தம் திருத்தமாக கலி புருஷன் இடம் இருந்து பதில் வந்தது.  உன் நாட்டில் நான் ஒரு ஓரமாக தங்கி கொள்கிறேன்.உன் மக்களை அங்கு வராமல் பார்த்து கொள்ளேன்.அதை விட்டு விட்டு என்னை ஏன் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்கிறாய்.           சரி சரி நான் உன் நாட்டில் கலியுக தர்மத்தை நிலை நாட்ட வந்து நுழைந்து விட்டேன்.எனக்கு எல்லையை ஏற்படுத்தி கொடு.அதை தாண்டி நான் வரமாட்டேன்.வந்தால் கேள்.இது சத்தியம்.பரிட்ஷித் மகாராஜா யோசிக்க ஆரம்பித்தார். இப்போது கலிபுருஷன் விஸ்தாரமாக கேட்கிறார்.எங்கே சூதாட்டம் நடைபெறுகிறதோ,எங்கே மதுபானம் குடிக்கபடுகிறதோ, எங்கே பெண்கள் அவமரியாதை செய்து இம்சிக்க படுகிறார்களோ, பிராணிகள் எங்கே வதைபடுகிறதோ இந்த நாலு வித இடங்களில் கலி தலைவிரித்து ஆடும். மேலும்  தங்கத்தில் ஆசை அதிகம் இருக்கும் இடத்தில்,பொய் பேசும் இடத்தில்,கோபம் இருக்கும் இடத்தில்,ஆணவம் - மதம் -செருக்கு தலைவிரித்து ஆடும் இடத்தில் , பகைமை இருக்கும் இடத்தில்,பேராசை இருக்கும் இடத்தில் நான் ஆட்சி செய்வேன்.நான் ஆட்சி செய்யும் இந்த இடங்களில் உன் மக்களை வராமல் பார்த்துக் கொள்.இந்த இடங்களுக்கு வராமல் இருந்தால் நான் யாரையும் பீடிக்க மாட்டேன் என்று கலிபுருஷன் பரிஷித் மகாராஜாவிடம் வினயமாக கூறினார்.                                            சரி கலியுகத்தில் நாம் துன்பபடாமல் இருக்க - நம்மை காத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்?     மேற்சொன்ன இடங்களுக்கு செல்லாமல் இருக்க வேண்டும்.மேலே சொன்ன பாப காரியங்களை செய்யாமல் இருக்க வேண்டும்.                                  பாகவத அபசாரம் படாமல் இருக்க வேண்டும். அபசாரம் என்றால் என்ன?புரியவில்லையே?           சொல்கிறேன். பக்தி மார்கத்தில் உள்ள வர்களை இழிவாக பேசாமல் இருக்க வேண்டும்.தினமும் நாம சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.முடிந்த பொழுது திவ்ய தேசங்கள் சென்று தரிசிக்க வேண்டும்.வீட்டில் துளசி செடி வைத்து பூஜை செய்ய வேண்டும்.நலிந்த கோயில்களை புதுபிக்க வேண்டும்.நாம சங்கீர்தனம் செய்து மனதால் இறைவனை தினைக்க வேண்டும்.இவைகளை நாம் செய்து வந்தால் நம்மை கலி நெருங்காது.கலியுக தெய்வமான ஶ்ரீநிவானை வணங்கி வாயால் பாடி மனத்தினால் துதிப்போம்.செய்த பாவங்கள் குறையும்.பாக்யம்.


No comments:

Post a Comment