Monday 13 November 2017

சமாதி நிலை, சித்தர் பாடல் விளக்கம்

சமாதி நிலை என்பது என்னவென்று காகபுஜண்டர் கூறுகிறார்.
“சமாதியே சொல்லுகிறேன் வசிஷ்டநாதா
சந்ததிகள் அனைத்திற்கும் தெளிவாக
சமாதியே நீஆனாய் வெகுநாள் யோகி
சாகும்நாள் தெரிந்தவரே சமாதி தன்னில்
சமாதியே மண்மூடல் அரையாங்கில்லை
தான்வைத்து மூடவல்ல ஒளியுமல்ல
சமாதியே பிறர் காணா மறையுமல்ல
தானிந்த உயிர்விடலு மல்லத்தானே.”
அதாவது நம் உடலை விட்டு உயிர் நீங்குதல் சமாதியல்ல. நாம் இறந்த பின் நமது உடலை மண்ணிற்குள் போட்டுப் புதைப்பதும் சமாதியல்ல. நீண்ட நாட்கள் தவமிருந்து பெற்ற ஞானமே சமாதி என்று கூறுகின்றார்.
சமாதி என்றால் என்ன?
சமாதி என்பது என்னவென்று திருமூலர், தமது மற்றொரு பாடலில் கூறுகிறார்.
“கற்பனை யற்று கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பனை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத்தகுந் தண் சமாதியே.”
நாம் மனதைக் கற்பனையில் செல்லவிடாது ஒடுக்கி மூலக்கனல் வழியே சென்றால் அனைத்தையும் சிருஷ்டிக்கும் சிவனது பேரொளியைக் காணலாம் . அந்தப் போரொளி நம்மைப் பொற்பாதங்களையுடையவனிடம் கொண்டு சேர்க்கும். அவனுக்கு இணையாக இருக்கும் பேற்றினைக் கொடுக்கும். இதுவே சமாதி நிலை என்று கூறுகிறார்.

No comments:

Post a Comment