Wednesday 1 November 2017

அகத்திய பெருமான் உரைத்த தர்மத்தின் பலன்

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

மீண்டும் மீண்டும் யாம் தர்மத்தை உபதேசிப்பதின் காரணம் என்ன? இந்த கலிகாலத்திலே கடுமையான தவம், கோட்ப்பாடுகள், வனாந்தரத்திலே செய்யும் பூசைகள் இவைகளையெல்லாம் பின்பற்ற இயலாது. எத்தனையோ இடர்பாடுகளில் ஒரு மனிதன் கலிகாலத்தில் வாழ வேண்டியிருக்கிறது. இந்த இடர்களின் வழியே அவன் இறை வழி செல்ல வேண்டும், கர்மாக்களை குறைக்க வேண்டும் என்றால், நியாயமான, நேர்மையான, நீதியான வழியிலே தர்மத்தை துவக்கி விட வேண்டும். கால நேரம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. சரி, தர்மம் செய்கிறேன், அதை வாங்கிக்கொண்டு ஒருவன் அதை நியாயமற்ற முறையிலே செலவு செய்தால் என்னவாகும்? என்றெல்லாம் ஆய்ந்து கொண்டிருக்கக்கூடாது. ஒருவனுக்கு கஷ்டம் என்று அறிந்த உடனேயே தர்மம் செய்து விட வேண்டும். அவன் வாய் விட்டு வினவும் வரை காத்திருக்கக் கூடாது. தர்மத்தை நேரடியாக செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் நேர்மையாக தர்மம் செய்யும் அமைப்புகளிலே தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment