Monday 13 November 2017

அகத்தியருக்கு பிரியமானவர்கள் எப்படி இருக்க வேண்டும்

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு


ஒரு மனிதன் எமக்கு பிரியமானவன், எமது வழியில் வருபவன் என்றால், எமது வார்த்தைகளை உள் நிறுத்தி, செவி கேட்டு, செயல் நடத்திக் காட்ட வேண்டும். ஒரு செல்வந்தன் இருக்கிறான். அவன் தனக்கு பிரியமான ஒரு உதவியாளனை அழைத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது அவனுக்குக் கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் அவன் உதவியாளனுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆயினும், அந்த உதவியாளன் தவறுகள் ஏதேனும் செய்தால், அவனை அழைத்துச் சென்ற செல்வந்தனுக்குத்தானே அந்த கேவலமும், ஏளனமும். அகுதொப்பத்தான் மிகப் பெரிய மஹான்களின் உன்னத கருத்துக்களைக் கூறிக்கொண்டிருக்கும் எமக்கு, "எமது வழியில் வருபவன் என்று கூறிக்கொண்டு, எமது வாக்கின் தன்மையை பிரதிபலிக்காமல் இருந்தால், அது எமக்கு ஏற்புடையதாக இராது. எம்மையும், ஏளனப்படுத்துவதாகும். அப்படிப்பட்டவர்களுக்கு யாங்கள், பெயரளவுக்குத்தான் வாக்குகளை தருவோமே ஒழிய, ஆத்மார்த்தமாக அல்ல. புத்தி சொல்லி திருந்தவில்லை என்றால், "அவன் விதிப்படி வாழட்டும்" என்று விட்டுவிடுவோம். காலம், இடம், சூழல், சுற்றி உள்ள மனிதர்கள், வறுமை, வளமை, இல்லம், தொழில், இதில் எது சிக்கலாக இருந்தாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு, அறம், சத்தியம், இறை பிரார்த்தனையை மறவாதே. இவற்றை பின் தொடர்ந்து கொண்டே வா. யாம் உன் அருகில் இருந்து கொண்டே இருப்போம். ஆசிகள். சுபம்.

அகத்தியர் ஞானம்


இந்த பதிவு உயர்திரு. சுவாமிநாதன் அவர்களின் முகநூல் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது. அய்யா அவர்கள் பாண்டிச்சேரியில்  வில்லியனூர் என்ற இடத்தில் அகத்தியர் ஞானம் என்ற  கூடத்தை அமைத்து சித்தர்கள் வழியில்  கொண்டு வருகிறார்கள்.

முகவரி :
சுவாமிநாதன்,ஸ்ரீ  அகத்தியர் ஞான இல்லம், 27, பெரம்பை ரோடு, வில்லியனூர், பாண்டிச்சேரி - 605110. கைபேசி 09894269986

ஜீவ நாடி வாசிக்க கீழ்கண்ட முகவரி அல்லது தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் : அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583 



No comments:

Post a Comment