Sunday 5 November 2017

திருஞானசம்பந்த பெருமான் பாடி அருளிய திருக்களம்பூர் புராணம்


"தீபாவளி அமாவாசை அர்த்தஜாம பூஜையை சம்பந்தர்க்காக ஈசன் மறுநாள் காலையில் ஏற்ற அதிசயம்"..."காலம் தவறி நடக்கும் அர்த்தஜாமபூஜை"'..."திருக்கொள்ளம்பூதூர் சௌந்திரநாயகி சமேத வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில்''......திருக்கொள்ளம்புதூர் என்னும்

திருக்களம்பூரில், சிவபெருமான் திருஞானசம்பந்தருக்காக தீபாவளி அமாவாசை அன்று நடுஇரவில் நடக்க வேண்டிய அர்த்தஜாம பூஜையை, மறுநாள் அதிகாலை உஷத் காலத்தில் ஏற்று அருள்புரிந்துள்ளார். இது என்ன விந்தையான கதை! வாருங்கள் தெரிந்து கொள்வோம்.திருக்கொள்ளம்பூதூர் ஊருக்கு மேற்கில் வெட்டாறு ஓடுகிறது.புராணத்தில் இது முள்ளியாறு என்றும் அகத்திய காவேரி என்றும் சொல்லப்படும் ஆற்றிற்கு அக்கரையில் நம்பர் கோவில் என்னும் திருஞானசம்பந்தர் கோயில் உள்ளது.இங்கு தான் தீபாவளி அமாவாசைக்காக திருக்கொள்ளம்பூதூர் ஈசன் சம்பந்தரை வரவேற்க்க நடுநிசியில் இங்கு வருகிறார்.சிவாலயங்கள் பலவுக்கும் சென்று பதிகம்பாடி இறைவனை தரிசித்து வந்த திருஞானசம்பந்தர், திருக்களம்பூர் திருத்தலத்திற்கு வந்தார்.

வழியில் அகத்திய காவிரி (முள்ளியாறு) என்னும் வெட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சம்பந்தரால் ஆற்றைக் கடந்து திருக் களம்பூர் செல்ல முடியவில்லை. ஆற்றில் ஓடமும் செலுத்த முடியாத அளவுக்கு பெருவெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. இதனால் ஓடக்காரர்கள் தங்கள் ஓடங்களை, கரையில் நிறுத்தியிருந்தனர். ஆனால் ஈசனை தரிசிக்காமல் செல்லக்கூடாது என்பதில் திருஞானசம்பந்தர் உறுதியாய் இருந்தார்.ஏனெனில், அதற்கு முன்பாக சம்பந்தர், திருக் கருகாவூரில் உஷத் கால பூஜை, அவளிவநல்லூரில் காலசந்தி, அரித்துவாரமங்கலத்தில் உச்சிகாலம், ஆலங்குடியில் சாயரட்சை பூஜைகளை முடித்துக் கொண்டு, அர்த்தஜாம பூஜையில் கலந்து கொள்ள திருக்களம்பூர் திருத்தலத்திற்கு வந்திருந்தார். ஆனால் இங்கு ஆற்றைக் கடக்க முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டு செய்வதறியாது திகைத்தார். பின்னர் ஆற்றின் கரையில் நிறுத்தியிருந்த ஓடம் ஒன்றில், தன் அடியவர்களுடன் ஏறிய திருஞானசம்பந்தர் பஞ்சாட்சரம் கூறினார்.

பின்னர் ஓடத்தை ஆற்று நீரில் செலுத்த முயன்றார். ஆனால் துடுப்பு இல்லை.
எனவே இறைவனை நினைத்து பதிகம் பாடினார். என்ன விந்தை! துடுப்பு இல்லாமல்ஆற்றில் ஓடம் செல்லத் தொடங்கியது. ஆற்றின் மறுகரையை அடைந்தது. அந்தகரையிலேயே ஈசன், உமையுடன் இடப வாகனத்தில் தோன்றி சம்பந்தருக்கும், அவரதுஅடியவர் களுக்கும் காட்சி கொடுத்தார். அந்த அற்புத காட்சியைக் கண்டசம்பந்தர், மீதி பதிகத்தையும் பாடியபடி திருக்களம்பூர் ஆலயம் நோக்கிச்சென்றார்.இதற்கிடையில் அர்த்தஜாம பூஜையை செய்ய இருந்த அர்ச்சகர்களிடம்,அசரீரியாக ஒலித்த ஈசன், ‘என் பக்தன் சம்பந்தன் வந்து கொண்டிருக்கிறான்.எனவே அர்த்தஜாம பூஜையை சற்று தாமதமாக செய்யுங்கள்’ என்று கூறியதைசிரமேற்கொண்டு, அர்ச்சகர்கள் அனைவரும் திருஞானசம்பந்தரின் வருகைக்காககாத்திருந்தனர். இதற்குள் அர்த்தஜாம பூஜைக்கான நள்ளிரவு நேரம் கடந்துவிட்டது. சம்பந்தர் ஆற்று வெள்ளத்தைக் கடந்து திருக்கோவிலை அடைந்த போதுஅதிகாலை வந்து விட்டது.

தானியங்கு மாற்று உரை இல்லை.

இதையடுத்து அதிகாலையில் நடைபெறும் உஷத் கால பூஜையின்போது, முன்தினம்நள்ளிரவில் நடைபெற வேண்டிய அர்த்த ஜாம பூஜையை அர்ச்சகர்கள் செய்தனர்.அதனை கண்டுகளித்து ஈசனை வழிபட்டார் திருஞானசம்பந்தர். அன்றைய தினம் ஐப்பசி மாத அமாவாசையாகும். அதாவது தீபாவளி அன்று நள்ளிரவில் நடக்க வேண்டிய அர்த்தஜாம பூஜை, தீபாவளிக்கு மறுநாள் அதிகாலையில் நடைபெற்றது.

இதனை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சம்பிரதாயமாக இந்த பூஜை, அவ்வாறே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.திருஞானசம்பந்தர் திருக்களம்பூருக்கு எழுந்தருளிய சம்பவத்தை நினைவுகூரும் வகையில், தனி விழாவாக ‘ஓடத் திருவிழா’ நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தர் உற்சவர் சிலையை படகில் வைத்து, ஓதுவார்கள் தேவாரப் பதிகம் ஓத, வெட்டாற்றின் இக்கரையில் இருந்து அக்கரைக்கு படகில் கொண்டு செல்வார்கள். அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பாக படகு கரை வந்து சேரும். அங்கே ரிஷப வாகனத்தில் கயிலை வாசனான திருக்களம்பூர் ஈசனும், பார்வதிதேவியும் திருஞானசம்பந்தரையும், அவரது அடியவர்களையும் எதிர்கொண்டு அழைப்பார்கள். பிறகு அனைவரும் கோவிலுக்குள் செல்வார்கள். அப்போது தான் அந்த காலை வேளையில் அர்த்தஜாம பூஜை நடைபெறும்.ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இதுபோன்ற காலம் தவறிய பூஜை நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டால், நம் வாழ்வில் நமக்கு தேவைப்படும்

அனைத்து ஐஸ்வரியங்களும் தவறாமல் கிடைக்கும் என்பது பக்தர்களின்
நம்பிக்கையாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓடத் திருவிழாவில் கலந்து கொண்டு, வாழ்க்கை ஓட்டத்துக்கான அனைத்தையும் திருக்களம்பூர் ஈசனிடம் பெற்று உயர்வடைகிறார்கள்.வெட்டாற்றின் கரையில் ‘நம்பர் கோவில்’ என்னும் ‘சம்பந்தர் கோவில்’ அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள கிராத மூர்த்தி பிரசித்தம். தொடர்ந்து ஐந்து பவுர்ணமியில் இந்த ஆலயம் வந்து கிராத மூர்த்தியை நெய் தீபமேற்றி வழிபட்டால் எதிலும் வெற்றி வாகை சூடலாம். ஓடத்தில் வந்திறங்கிய திருஞானசம்பந்தரையும், அவரது அடியார்களையும் ஈசனும், உமையாளும் வரவேற்ற இடம் இந்த நம்பர் கோவில் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.திருகளம்பூர் திருத்தலத்தில் ஐந்து நிலை உள்கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் கொடிமர விநாயகரை வழிபடலாம். கிழக்கு நோக்கிய மூலவர் வில்வ வனநாதரையும், தெற்கு நோக்கிய அம்பாள் ‘அழகுநாச்சி’ என்னும் சவுந்திர நாயகியையும் தரிசனம் செய்யலாம். 

இத்தலவிநாயகருக்கு ‘காரியசித்தி விநாயகர்’ என்று பெயர். இவரது துதிக்கை வலது பக்கமாக சுழித்தபடி உள்ளது. இவரை சங்கடஹர சதுர்த்தி நாட்களில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் காரியங்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும் என்கிறார்கள்.

திருக்களம்பூரில் இறப்பவர்களுக்கு, சிவபெருமானே பஞ்சாட்சர மந்திரத்தை வலது செவியில் ஓதி முக்தி அளிப்பதாக தல புராணம் தெரிவிக்கிறது. எனவே இத்தலத்திற்கு ‘பஞ்சாட்சரபுரம்’ என்ற பெயரும் உண்டு.

அர்ச்சுனன் இத்தல ஈசனை வழிபட்டு பாசுபத அஸ்திரத்தைப் பெற்றுள்ளான்.
பிரம்மா, இத்தல ஈசனை வழிபட்டு தனது சாபத்தைப் போக்கிக் கொண்டுள்ளார்.
தானியங்கு மாற்று உரை இல்லை.        படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்


கும்பகோணம்– திருவாரூர் பாதையில் குடவாசலில் இறங்கி 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் செல்லூர் என்ற ஊர் வரும். அங்கிருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் 1 கிலோமீட்டர் தூரத்தில் திருக் களம்பூர் திருத்தலம் அமைந்துள்ளது.சிவபெருமானின் பஞ்சாரண்யத் தலங்கள் ஐந்து.‘ஆரண்யம்’ என்றால் ‘காடு’ என்று பொருள். ‘பஞ்சாரண்யம்’ என்றால் ஐந்து வகை வனங்கள் என்று பொருள்படும். ஈசன் முல்லை வனத்தில் அருளும் திருக்கருகாவூர், பாதிரி வனத்தில் அருளும் திருஅவளிவநல்லூர், வன்னி வனத்தில் அருளும் திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவார மங்கலம்), பூளை வனத்தில் அருளும் திரு இரும்பூளை (ஆலங்குடி), வில்வ வனத்தில்அருளும் திருக்கொள்ளம்புதூர் (திருக்களம்பூர்) ஆகிய தலங்களே பஞ்சாரண்யத் தலங்களாகும்."'அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்"'...ஆம்!அமைதியான நதியில் அளவில்லாத வெள்ளம் வந்தால் நிலைமை என்னாகும்?!...ஆனால் அளவில்லாத வெள்ளம் வந்தும் துடுப்பு கூட இல்லாமல் பதிகம் பாடியே கரையை கடந்து ஈசனை தரிசித்த சம்பந்தர் புகழ்பாடுவோம்


படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம் மற்றும் வெளிப்புறம்

No comments:

Post a Comment