Tuesday 29 August 2017

சிவ தீட்சை

சிவ தீட்சை
அகத்தியர் அருளிய முப்பத்தி இரண்டு
சிவ தீட்சைகளில் முதல் எட்டு
தீட்சைகளைப் பற்றி காண்போம்.
தீட்சைகளில் முதன்மையானது இந்த
சிவ தீட்சைகள்தான். இந்த தீட்சைகளை
முறையாக குருவின் மூலமாய்
பெற்று செபிக்க தீட்சைகள்
சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.
"
தீட்சையிலே முதற்தீட்சை
சிவதீட்சைதான்
ஸ்ரீம் அம் ஓம் யென் றுலட்சம்
ஜெபித்துவோதக்
காட்சிபெறத் தேகமெல்லாம் வியர்வை
காணும்
கண்மாய்கை இல்லையடா கண்டுதேறு
ஆச்சுதடா சிவதீட்சை ரெண்டுங்கேளு
ஆம் ஓம் ஹரீம் ரீம் யென்று நீயும்
மூச்சடா உள்ளடங்கும் லட்சமோத
முத்தியுண்டாஞ் சத்தியுண்டாஞ்
சித்தியாமே."
"
ஸ்ரீம் அம் ஓம்" என்று லட்சம் முறை
செபிக்க முதல் தீட்சை சித்தியாகும்.
அப்போது இறைவனின்
திருக்காட்சியைக் காணலாம்
என்கிறார். காட்சியைக் காணும்
போது தேகமெல்லாம் வேர்த்துப்
போகும். ஆனால் இந்தக் காட்சி கண்
மாயை அல்ல, இதைக் கண்டு
தேறுவதே முதல் தீட்சையாகும்
என்கிறார் அகத்தியர்.
"
ஆம் ஓம் ஹரீம் ரீம்" என்ற மந்திரத்தினை
லட்சம் முறை செபிக்க இரண்டாவது
தீட்சை சித்தியாகும். அப்போது
மூச்சு உள்ளடங்குவதுடன் ,
முக்தியும், சக்தியும் சித்தியாகும்
என்கிறார் அகத்தியர்.
"
சித்தியாஞ் சிவதீட்சை மூன்றுகேளு
செப்புவேன் குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்
யென்று லட்சம்
பத்தியாய்ச் செய்துவர மோட்சமாகும்
பாணுவைப்போற் தேகமெல்லாம்
ஒளியுமாகும்
துத்தியஞ்செய் சிவதீட்சை
நாலுகேளு
துடியுடனே ஸ்ரீங் அங் உங் கென்று
முத்திபெற லட்சமுருச்
செபித்தாற்சித்தி
 
மோட்சமய்யா தேவதைகள்
பணியுந்தானே."
"
குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்" என்ற
மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க
மூன்றாவது தீட்சை சித்தியாகும்.
அப்போது சந்திரனை போல தேகம்
ஒளிவீசும் என்கிறார்.
"
ஸ்ரீங் அங் உங்" என்று லட்சம் முறை
செபிக்க நான்காவது தீட்சை
சித்தியாகும். அப்போது மோட்சமும்,
தேவதைகள் உனக்கு பணியும்
தன்மையும் ஏற்படும் என்கிறார்
அகத்தியர்.
"
பணிந்துதான் சிவதீட்சை
அஞ்சுங்கேளு
பண்பாக யங் வங் றீங் றுந்தான்
துணிந்தோது லட்சமுருச்
செபித்தாற்சித்தி
தொண்டுசெய்வார் தேவதைகள்
சட்டைக்கும்
அணிந்துகொள்வாய் சிவதீட்சை
ஆறுங்கேளு
அன்புடனே சங் ரங் உம் ஆம் என்றுலட்சம்
குனிந்துநிமிர் தேகமதில் வாசம்
வீசும்
குணமாகுந் தெகசித்தி
சுருக்குத்தானே."
"
யங் வங் றீங்" என்று லட்சம்
முறைசெபிக்க ஐந்தாவது தீட்சை
சித்தியாகும். அப்போது தேவதைகள்
ஒரு சட்டையைத் தரும். அதை
அணிந்துகொள் என்கிறார்.
"
சங் ரங் உம் ஆம்" என்று லட்சம் முறை
செபிக்க ஆறாவது தீட்சை
சித்தியாகும். அப்போது தேகத்தில்
வாசம் வீசும். அத்துடன்
தேகசுத்தியும் சித்திக்கும்
என்கிறார் அகத்தியர்.
"
தானேசெய் சிவதழுட்சை ஏழுநீயும்
சந்தோஸ மாய்ஓது இங் ரங் அவ்வு
மென்றுலட்சம்
மானேந்தும் ஈசுவரனும் அருகில்
நிற்பார்
வானவர்கள் மகிழ்வாக
வாவென்பார்கள்
நானென்ற தீட்சையெட்டும்
உற்றுக்கேளு
நன்றாக மங் றீங் ரா ரா வென் றுலட்சம்
ஆனந்த முண்டாகுந் தேவர்வந்து
அன்பாக உனைச்சேர்ந்து
அணைவார்பாரே."
"
இங் ரங் அவ்வு" லட்சம் முறை செபிக்க,
மானை கையில் ஏந்தி இருக்கும்
சிவன் அருகில் இருப்பார். வானவர்கள்
மகிழ்ச்சியுடன் வா வா என்று
அழைப்பார்கள் என்கிறார் அகத்தியர்.
"
மங் றீங் ரா ரா" என்று லட்சம் முறை
செபிக்க ஆனந்தம் உண்டாகும்.அத்துடன்
தேவர்கள் வந்து உன்னுடன்
இணைவார்கள் என்கிறார் அகத்தியர்.
சிவ மந்திரங்கள்
ஓம் ஜகங் என தினமும் 108 முறை
ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.
ஓம் நமசிவாய என்று ஜெபித்தால்
காலனை வெல்லலாம்.
ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால்
பூதக்கூட்டங்கள் வசமாகும். துஷ்ட
தேவதைகள் அழியும். மன்னர்கள் அருள்
கிடைக்கும்.
ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற
மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள்
விலகும். ஆறு சாஸ்திரங்களையும்,
நான்கு வேதங்களையும் அறிய
உதவும்.
சிவாய ஓம் என்று சொன்னால்
திருமாலின் ஆற்றல் கிட்டும். மய நசிவ
சுவாகா என ஓதினால் ஆகாயத்தில்
பறந்து செல்லும் சித்தர்கள்
கீழிறங்கிவந்து சுமனக்குளிகை
தருவார்கள்.
இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான
மந்திரத்தை தனக்கு ஆபத்தான
வேளைகளில் சூரியனுக்கு எதிராக
நின்று கைகளை மேலே உயர்த்தி
ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து
முழுமையாக நீங்குவான்.
சிங் சிங் சிவாய ஓம்
எனஜபித்துவந்தால் முக்காலமும்
அறியும் ஆற்றல் உண்டாகும்.
ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என
சொன்னால் வியாபாரம் நன்றாக
நடக்கும்.
லீங்க்ஷும் சிவாய நம என ஜபித்தால்
பெண்கள் வசியம் உண்டாகும்.
சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால்
அரச போகம் கிட்டும்.மந்திர ஜபம் பற்றி
சித்தர்கள் கூறியிருப்பது:
மசிவயந ஜபித்தாலும், நயவசிம
ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-
அகத்திய மகரிஷி சிவாயநம
ஜபித்தால் மோகனம் உண்டாகும்-
நந்தீசர் மகரிஷி ோதிடம்
சிங் நமசிவய என்று உச்சரிக்க -
பயிர்களால் நன்மை.
துங் நமசிவாய என்று உச்சரிக்க -
வித்துவான் ஆகலாம்.
ஓங் கங்சிவய என்று உச்சரிக்க - சக்தி
அருள் உண்டாம்.
ஓம் சிங்சிவாய நம என்று உச்சரிக்க -
நினைப்பது நடக்கும்.
ஓம் பங்சிவாய நம என்று உச்சரிக்க -
தடைகள் நீக்கும்.
ஓம் யங்சிவாய நம என்று உச்சரிக்க -
துன்பங்கள் விலகும். ஓம்
மாங்நமசிவாய என்று உச்சரிக்க -
செல்வம் செழித்தோங்கும்.
ஓம் மங்சிவாயநம என்று உச்சரிக்க-
கவலைகள் வற்றும் கெங்ஓம் நமசிவாய
என்று உச்சரிக்க - வசிய சக்தி மிகும்
ஓம் மங்யங் சிவாய என்று உச்சரிக்க -
விஷங்கள் இறங்கும். அங் ரங்ஓம்சிவாய
என்று உச்சரிக்க - சாதனை
படைக்கலாம். ஓங் அங் சிங் சிவாயநம
என்று உச்சரிக்க - சப்த கன்னியர்
தரிசனம்.
ஓங் வங்சிங் சிவாயநம என்று உச்சரிக்க
-
முக்குணத்தையும் வெல்லலாம்.
ஹிரீம் நமசிவாய என்று உச்சரிக்க-
அரிய பேறுகள் கிடைக்கும்.
ஐயுஞ் சிவாயநம என்று உச்சரிக்க -
ஆறு சாஸ்திரம் அறியலாம்.
வங்சிங் ஓம்சிவாயா என்று உச்சரிக்க -
தேவர்கள் தரிசனம் காணலாம்.
சங் சிவய நம என்று உச்சரிக்க - விஷ
பாதிப்பு நீக்கும்.
ஓம் துங்சிவாய நம என்று உச்சரிக்க -
முத்தொழிலும் சிறக்கும்.
ஸ்ரீலம்ஹரீம் ஓம் நமசிவாய என்று
உச்சரிக்க- பெரியபூமிகள்
கொடுக்கும்.
சிங் நமசிவய என்று உச்சரிக்க -
பயிர்களால் நன்மை.
வங் சிவய நம என்று உச்சரிக்க - மழை
நனைக்காது.
சிவாய ஓம்ஸ்ரீ என்று உச்சரிக்க - மழை
நிற்கும்.
கலியுங் சிவாய என்று உச்சரிக்க -
வெள்ளம் பெருக்கெடுக்கும்.
ஓம் கங்சிவ்வுங்சிவய என்று உச்சரிக்க
-
பெரியகாரியங்களில் வெற்றி.
சங்யவ் சி மந என்று உச்சரிக்க -
தண்ணீரில் நடக்கலாம்.
மங் நங் சிங் சிவய என்று உச்சரிக்க -
பிசாசு, பேய் சரணம் செய்யும்.
சிவன்மந்திர
உச்சாடணங்கள்
மந்திரங்களை கைளாளும்
முறையாவது, அமைதியான
காற்றோட்டமுள்ள இடம் அல்லது
கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து
மனதை வெறுமையாக்கி, முதலில்
தங்கள் குலதெய்வத்தினை வணங்கி,
பின் பெற்றோரையும்,
குருவினையும் மனதால் துதித்து
மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க
வேண்டும்.முதலில் குறைந்தது 108
அல்லது 1008 முறை விடாது
உச்சரித்தல் அவசியம்.
அதன் பின் நேரம் கிடைக்கும்
போதெல்லாம் மனதினை ஒரு
நிலைப்படுத்தி மந்திரங்களை
உச்சரிக்கலாமென்கிறார்கள்.
 
எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப
மாலைகளை உயயோகிக்கலாம்.
இவ்வாறு தொடர்து உச்சரிக்கும்
போது அந்தமந்திரங்கள் நமக்கு
சித்திக்கின்றன என்கிறார்கள்.
பின் எப்போது
தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில்
தேவையான மந்திரங்களை 9 அல்லது
21
தடவை உச்சரிக்க மந்திரம்
பலிக்குமாம்.
இனி மந்திரங்கள்....
தத்புருஷ மந்திரம் ... கருவூரார்
இதன் மூல மந்திரம் 'நமசிவாய'.
இதை விடாது உச்சரிக்க உச்சாடணம்
ஏற்படும்.
"
நமசிவாயம் லங்க நமசிவாய" என
உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.
"
அலங்கே நமசிவாய நமோ" என
உச்சரிக்க புகழ் உண்டாகுமாம்.
"
அங் சிவாய நம" என உச்சரிக்க
குழந்தைப் பேறு உண்டாகுமாம்.
"
ஊங்கிறியும் நமசிவாய நமா" என
உச்சரிக்க மோட்சம் கிட்டுமாம்.
"
ஓம் நமசிவாய" என உச்சரித்தால்
காலனை வெல்லலாம்.
அகோர மந்திரம்
இதன் மூல மந்திரம் "நமசிவ",
"
சங் கங் சிவாயநமா" என
உச்சரிக்கஜீவனில் சிவத்தைக்
காணலாம்.
"
மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை
வெறுத்து பசியை துறக்கலாம்.
"
வசாலல சால்ல சிவாய நமா" என
உச்சரித்தால் மழையில் நனையாமல்
செல்லலாம்.
"
சரனையச் சிவாய நம" என
உச்சரிக்கவானில் பறக்கலாமாம்.
"
கேங் கேங் ஓம் நமசிவாயம்" என
உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.
"
ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க
மழை உண்டாகும்
வாமதேவ மந்திரம்
"
கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என
உச்சரித்தால் காமதேவன் அருள்
கிட்டுமாம்.
"
வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க
உலகின் எப்பாகத்திற்கும் வழி
தெரியுமாம்.
"
சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு
வேதத்தின் பொருள் அறியலாம்.
"
ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என
உச்சரிக்க நினைத்த இடத்தில்
மனதினை விரைவாக செய்யலாம்.
சத்யோசாத மந்திரங்கள்
"
சிவாய ஓம்" என உச்சரிக்க
திருமாலில் ஆற்றல் கிட்டும்.
"
ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க
குண்டலினியின் சக்தியை
காணலாம்.
"
கிருட்டிணன் ஓம் சிவாய நம" என
உச்சரிக்க இராவணன் மலையைப்
பெயர்த்த பலம் கிட்டும்
ஈசான மந்திரங்கள்
"
சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம
" என உச்சரிக்க சிவதத்துவத்தை
காணலாம்.
"
மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க
நந்தியின் தத்துவத்தை உணரலாம்.
"
வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க
எதிரியின் உடல் தனலாகும்.
"
சிங் சிங் சிவாய " என உச்சரிக்க
முக்காலத்தையும் உணரலாம்.
"
மய நசிவ சுவாக" உச்சரிக்க
ஆகாயத்தில் பறந்து செல்லும்
சித்தர்களின் ஆசி கிட்டும்.
இவை அனைத்தும் வலைத்தளம் /
வலைப்பூ பதிவுகள் படித்து
திரட்டிய தகவல். வலைப்பதிவர்
தகவல்களுக்கு மிக்க நன்றி..
படித்ததில் பிடித்ததை
பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

No comments:

Post a Comment