Tuesday 29 August 2017

சப்த பிரம்ம யோகம்

சப்த #‎பிரம்ம #‎யோகம் !!
---------------------

சிவயோகத்தில் "சப்த பிரம்ம யோகம் " என்ற
தவமுறை உள்ளது , இது சிவனால் சக்திக்கு
நேரிடையாக சொல்லிகொடுத்த தவ
முறையாகும் . இதை எந்த வயதினரும்
செய்யலாம் . திடமான மனம் மட்டும் போதும் .

#‎செய்முறை : நீராடி உடல் சுத்ததோடு தீபம்
ஏற்றி பின் குருவருள் கேட்டு ( யோக குரு
இல்லாதோர் ஈசனை குருவாக ஏற்க்கலாம் )
சிவபக்தியுடன் சுகாசனத்தில் அமர்த்தல்
வேண்டும் . பின்பு " தர்ஜனீ " என்று
சொல்லப்படும் மோதிர விரலால் இரண்டு
காது துவாரங்களையும் அடைத்துக்கொள்ள
வேண்டும் . கண்கள் மூடிய நிலையில்
இருக்கும்போது இம்ம்ம் எனும் சப்தம் கேட்கும்.

இந்த சப்தத்ததையே மனம் கவனித்தல்
வேண்டும் . இதே போல் தினமும் 10
நிடங்களில் ஆரம்பித்து 48 நிமிடங்கள் வரை
நேரம் உயர்த்த வேண்டும் . பின்பு தினமும் 48
நிமிடம் 6 மாதம் சரியாக செய்தாலே யோகம்
கைகூடும் . இந்த 6 மாதமும் சம்சார பந்தம்
விலக கூடாது . இந்த தவம் கைகூடும்போது
ஈசா சக்தியானது அடி வயிற்றில்
ஜடாரக்னீயாய் சூழல ஆரம்பிக்கும்.
அப்போது
இந்த சக்தியோடு குண்டலினியும் சேர்ந்து 9
ஓசை களாக தவம் செய்வோர்க்கு ஈசன் அருள்
புரிவான் .அப்போது அங்கே " சப்த பிரம்ம
ஞானம்" உண்டாகும் . இந்த எளிமையான
முறையை எல்லோரும் செய்யலாம் . இந்த
தவம் செய்யும் போது ஈசன் 9 ஓசை
இந்த
யோகமுறையை சரியாக அப்பியாசம்
செய்பவர்களின் உடலில் ஈசன் 9 வகை
சப்தங்களாக சாதர்களுக்கு தன்னை
உணர்த்துவான் .

1.
கோஷம் : இந்த சப்தநிலை கேட்டு தவம்
செய்பவர்க்கு சர்வ ரோகங்களிலும் இருந்து
விடுதலை பெறுவான். ஆத்ம சுத்தம் வசீகரம்
முதலிய சிததிகளை ஈசன் அருளுவான் .

2.
காம்ஸ்யம் : இந்த சப்தநிலை கேட்டு தவம்
செய்பவர்க்கு பூதங்கள் பேய் பிசாசுகளை யும்
எல்லாவித ஜீவ வசியமும் ஈசன் அருளுவான் .
.

3.
சிருங்கம் : என்கிற கொம்பின் நாதத்தை
அப்பியாசிப்பவன் சத்த்துருக்களை அழிக்கவும்
தனது இஷ்டப்படி எல்லோரயும் நடக்க
வைக்கவும் சித்தியை ஈசன் வழங்குவான் .

4.
கண்டாமணி : இந்த சப்தம் கேட்டு
அப்பியாசிப்பவனுக்கு தேவர்களை தன்னிடம்
வரவழைக்கும் சித்தியை அருளுவான் .

5.
வீணா : இந்த சப்தத்தை கேட்டு அப்பியாசம்
செய்பவர்க்கு ஈசன் தூர திருஷ்டி வல்லமை
தருவான் .

6.
புல்லாங்குழல் : இந்த ஓசையை கேட்டு
தவம் செய்பவர்க்கு சர்வ ஞானியாவான் .

7.
தூந்துபி : இந்த ஓசை கேட்டு தவம்
செய்பவன் ஈசானால் ஜனன மரண பந்தம்
விலக்குவான் .

8.
சங்க நாதம் : இந்த ஓசை கேட்டு தவம்
செய்பவனுக்கு வேற்று உடலில் இயங்கும்
சக்தி அருளுவான் .

9.
மேக நாதம் : இந்த ஓசை கேட்டு தவம்
செய்பவர்க்கு ஆகாயத்தில் சஞ்சரிக்கும் சித்தி
அருளுவான் .

இந்த 9 நிலைகளிலும் மயங்கி விழாமல் பற்று
இல்லாமல் சிவமே வேண்டும் என தவம்
செய்வோர்க்கு சிவசக்தி ரூப தரிசனம் கிட்டும்
.

இந்த சப்த பிரம்ம யோகம் செய்யும்போது
உடலில் ஏற்படும் உபாதைகள் அதில்
விடுபடு வடிவங்களாய் உங்களுக்குள்
நிற்பான்.

பொதுவாக எல்லோர்க்கும் உடல் எதிர்ப்பு சக்தி அளவு
நம் உடலில் உயிர் சக்தியின் இருப்பு அளவை
பொறுத்தே அமையும் . அதிலும் எந்தமுறை
யோகம் செய்தாலும் இது முக்கியமான ஒன்று
.

1.
பிரம்ம சரிய அனுஸ்ட்டானத்தால் உயிர்
சக்தியை கூட்டிக் கொள்ளுதல் .

2.
மோதிர விரல்களை அதிகம் அழுத்த கூடாது
,
குறிப்பிட்ட நேரத்திற்க்கு ஒருமுறை
விரல்களை எடுத்து வெளி காற்று காதில்
உட்புக வாய்ப்பு தரவேண்டும் . முழங்கை வழி
இருக்கும் குறிப்பிட்ட நேரம் கடந்து ( 10
நிமிடம் ) கைகளை நீட்டி மடக்க வேண்டும் ,
கண்டிப்பாக சுகாசன முறையே பின்பற்றுதல்
வேண்டும் . கீழே அமர இயலாதோர்
இருக்கையில் அமரலாம் .

3.
காதுகளில் நீர் ஏற விடுதல் , சுத்தமின்மை
ஆகாது .காது உஷ்ணம் நமக்கு தெரிய
வரும்போது விரல்களை அகற்ற வேண்டும் ,
அப்போதே தியானம் களையலாம் , கொஞ்சம்
கொஞ்ச மாக நேரத்தை கூட்டலாம் ,இதனால்
காதில் சீல் கட்டுதல் இருக்காது .

4.
எந்தவகை தியானத்திலும் காற்றை எந்த
இடத்தில் அதிகம் அதிக நேரம் நிறுத்தி
வைக்கிறீர்களோ அந்த இடத்தில் உஷ்ணம் அதிக
மாக்கும் . ஆதலால் அந்த இடம் சிரமத்திற்க்கு
ஆளாகும் . காது தியான உஷ்ணம்
ஏற்றுக்கொள்ளும் வரை கொஞ்சம் கொஞ்ச மாக
நேரம் கூட்டலாம் .

5.
தியானம் கலைந்ததும் வலது பக்க காதை
அடைத்துக்கொண்டு மூச்சை நன்றாக இழுத்து
வெளியிட வேண்டும் . பின்பு இடது காதை
அடைத்து மூச்சை நன்றாக இழுத்து
வெளியிட வேண்டும் . இப்படி 3 - 3 முறை
செய்தால் தியானம் முடிந்ததும் காதில் இருக்க
தன்மை இருக்காது .

6.
காதில் மோதிரவிராலால் அடைத்து
தியானம் செய்யும்போது ஏற்படும் சப்தத்தை
வயிற்று பகுதியில் ( மணிப்பூரகம்-
தொப்பிள் ) சப்தம் ஏற்படுவது போல் மனத்தை
அங்கேயே கவனிக்க வேண்டும் .

7.
கண்டிப்பாக பிரம்ம சரிய விரதம்
கடைபிடித்தால் 90 % உடல் உபாதைகள் வராது
,

8.
வாரத்தில் சனிக்கிழமை மட்டும்
தியானத்தில் காதுகளை அடைக்காமல்
சாதாரண மாக அமர்ந்தால் போதும் ( அப்படி
அமர்த்தாலும் உங்களுக்கு சப்தம் தானாகவே
கேட்கும் ) அதை கவனித்தால் போதும் .

9.
காதுகளில் சப்தங்களை கேட்கும் கருவிக்கு
தட்சினா மூர்த்தியே அதிபதியும்
பாதுகாவலரும் ஆவார் ஆதலால் இந்த யோக
முறைக்கு ஈசனுக்கே குரு வணக்கம் செலுத்த
வேண்டும் .

மற்ற யோக முறை யைக்காட்டிலும் இதில்
விதிமுறைகள் வெகு சுலப மானது . இந்த
யோகமுறை சிவன் பார்வதிக்க பிரத்தியோகமாக
கற்று தந்ததால் இது பெண்களுக்கு மிகவும்
சிறந்த யோக மாகும் பெண்கள் எல்லா
நாட்களிலும் செய்யலாம் . குடும்பத்தில்
கணவன் மனைவி இருவரும் செய்தால்
இல்லத்தில் ஐஸ்வரியம் பெருகும்

No comments:

Post a Comment