Wednesday 30 August 2017

பிறவிப் பிணி அறுக்கும் பேரருள் மந்திரம்

பிறவிப் பிணி அறுக்கும் பேரருள் மந்திரம்
பிணிகளில் கொடியது பிறவிப் பிணியாகும். இப்பிணிக்கு மருந்து சொல்வது யாரால் இயலும்? பிறவிப் பிணியையும் வேரறுக்க வல்ல ஓர் அரிய மருந்தை எளிய பாடல் மூலம் அளித்துள்ளார் ஸ்ரீவெங்கடராம சுவாமிகள். அவர்கள் திருவாய் மலர்ந்து அருளிய இப்பாடலை காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் நம்பிக்கையுடன் ஓதி இயன்ற தானத்தை அளித்து வந்தால் மிக விரைவில் இப்பிறவியிலேயே முக்தி நிலையை அடைந்து விடலாம் என்பது உறுதி.

மலையைப் பார்க்கும்போது மகாதேவா உன்நினைவு
மலர்களைப் பார்க்கும்போது மலருது உன்நினைவு
வில்வ இலையைக் காணும்போது பெருகுது உன்நினைவு
திருநீறு கொள்ளும்போது கூடுது உன்நினைவு

தாயினை நினைக்கும்போது நீ தந்தது நினைவாகுது
வானளாவ வளர்ந்ததை நினைக்கும்போது நீ கொடுத்தது நினைவாகுது
வந்த இடர்களை நினைக்கும்போது நீ தடுத்தது நினைவாகுது
பிறந்ததை நினைக்கும்போது உன்னை நினைப்பதே முடிவாகுது

திறந்த வெளியெல்லாம் பார்க்கும்போது அருணாசலா நீ ஒன்றே என முடிவாகுது.

No comments:

Post a Comment