Wednesday 30 August 2017

வாசற்படி வழிபாடு

தினமும் வாசற்படியை மஞ்சள் நீரால் அலம்ப வேண்டும். இது மிகவும் அவசியம். இதில் விதி விலக்கு கிடையாது என்பதை நினைவில் கொள்ளவும். ஒரு இல்லத்தில் மங்கள சக்திகளை, லட்சுமி கடாட்ச சக்திகளை அளிக்கும் குபேர லோகத்திலிருந்து வரும் தேவதைகள் இந்த வாசற்படிகளில்தான் உறைகின்றன. மஞ்சள் நீரால் அலம்பி வழிபடுவதால் குபேர சக்திகள் பெருக ஏதுவாகும். பலரும் வாசற் படிகளை காலால் மிதித்தல், வாசற்படியில் நின்று கொண்டு அபான வாயுவை வெளி விடுதல், தும்முதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் வாஸ்து தோஷங்களைக் களைய மஞ்சள் நீராட்டு அவசியம்.

எல்லா நிலைப் படிகளிலும் மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைக்க வேண்டும்.


முன் வாசலில் ஒரு கருப்புக் கயிற்றில் ஊமத்தங்காய், சங்கு இவற்றைக் கட்டித் தொங்க விட வேண்டும். மாதம் ஒரு முறை ஊமத்தங்காயை கடலில் போட்டு விட்டு, சங்கிற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். இத்தகைய வழிபாடுகளால் ஏராளமான வாஸ்து தோஷங்களும், ஏவல், பில்லி சூன்யம் போன்ற தீய சக்திகளும் விலகும்.

No comments:

Post a Comment